search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈவ்டீசிங்"

    • யாத்திரையில் பங்கேற்ற அமைச்சரின் மகள் மற்றும் தோழிகளிடம் சிலர் அத்துமீறி உள்ளனர்.
    • எனது மகளுக்கே பாதுகாப்பு இல்லாவிட்டால் மற்றவர்களின் நிலை என்னவாகும் ? என்று கேள்வி எழுப்பினார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் தனது மகளை இளைஞர்கள் சிலர் ஈவ்டீசிங் செய்ததாக மத்திய அமைச்சர் ரக்ஷா கட்சே காவல் நிலையத்தில் நேற்று புகார் தெரிவித்தார்.

    மகா சிவராத்திரியின்போது நடந்த சாந்த் முக்தாய் யாத்திரையில் பங்கேற்ற அமைச்சரின் மகள் மற்றும் தோழிகளிடம் சிலர் அத்துமீறி, அவர்களை தரத்தி வீடியோ எடுத்துள்ளனர்.

    இதுதொடர்பாக மத்திய அமைச்சர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர்,"எனது மகளுக்கே பாதுகாப்பு இல்லாவிட்டால் மற்றவர்களின் நிலை என்னவாகும் ? என்று கேள்வி எழுப்பினார்.

    மேலும், மகாராஷ்டிராவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. பல ணெ்பகள் முன்வர தயங்குகிறார்கள், ஆனால் நாம் அமைதியாக இருக்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

    இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை தேடி வந்தனர்

    இந்நிலையில், மத்திய அமைச்சர் ரக்ஷா கட்சேவின் மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த 3 சிறுவர்கள் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    • எனது மகளுக்கே பாதுகாப்பு இல்லாவிட்டால் மற்றவர்களின் நிலை என்னவாகும் ?
    • பல ணெ்பகள் முன்வர தயங்குகிறார்கள், ஆனால் நாம் அமைதியாக இருக்கக்கூடாது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் தனது மகளை இளைஞர்கள் சிலர் ஈவ்டீசிங் செய்ததாக மத்திய அமைச்சர் ரக்ஷா கட்சே காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

    தனது மகள் அவரது நண்பர்கள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது இளைஞர்கள் சிலரால் ஈவ்டீசிங் செய்யப்பட்டதாக மத்திய அமைச்சர் புகார் அளித்துள்ளார்.

    இதுகுறித்து கூறிய மத்திய அமைச்சர்,"எனது மகளுக்கே பாதுகாப்பு இல்லாவிட்டால் மற்றவர்களின் நிலை என்னவாகும் ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    மேலும், மகாராஷ்டிராவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. பல ணெ்பகள் முன்வர தயங்குகிறார்கள், ஆனால் நாம் அமைதியாக இருக்கக்கூடாது என்று அவர் குறிப்பிட்டார்.

    உத்தரபிரதேசத்தில் பாரதிய ஜனதா கூட்டணியில் உள்ள மத்திய பெண் மந்திரியின் காரை வழிமறித்து ‘ஈவ்டீசிங்’ செய்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அனுபிரியா பட்டேல் மத்திய மந்திரியாக இருந்து வருகிறார். இவர், உத்தரபிரதேச மாநிலத்தின் பாரதிய ஜனதா கூட்டணி கட்சியாக உள்ள அப்னாதளம் கட்சியை சேர்ந்தவர்.

    அவர் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த தொகுதியில் சுற்றுப்பயணம் செய்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் இரவு காரில் வாரணாசிக்கு திரும்பி கொண்டிருந்தார்.

    அப்போது அவரது காரை பின்தொடர்ந்து 3 வாலிபர்கள் மற்றொரு காரில் வந்தனர். அந்த காரில் நம்பர் பிளேட் இல்லை. காரில் வந்தவர்கள் மத்திய மந்திரியின் காரை முந்தி சென்று வழிமறித்தனர். அப்போது மந்திரியின் பாதுகாப்புக்கு சென்ற போலீசார் அவர்களை எச்சரித்தனர்.

    அதை கண்டு கொள்ளாத அந்த வாலிபர்கள் மத்திய மந்திரியை கேலி- கிண்டல் செய்து அவமதித்தனர். தகாத வார்த்தைகளை பயன்படுத்தியும் பேசினார்கள்.

    தொடர்ந்து பாதுகாவலர்கள் எச்சரித்ததால் அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டனர். சிறிது நேரத்துக்கு பின் மீண்டும் வந்த அவர்கள் மந்திரி அனுபிரியாவை கிண்டல் செய்தார்கள்.

    நிலைமை மோசமானதை அறிந்ததும் வாரணாசி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதனால் அந்த வாலிபர்களை பிடிப்பதற்காக போலீசார் தயாரானார்கள். சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி போலீசார் தயாராக இருந்தனர்.

    அப்போது அந்த வாலிபர்களின் கார் வந்தது. அந்த காரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்கள் யார்? என்ற விவரங்களை போலீசார் இதுவரை வெளியிடவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
    ×