என் மலர்
நீங்கள் தேடியது "ரெயில் சேவை"
- ரெயில்களை கண்ணாடி மூலம் கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- உலகின் மிகப்பெரிய சாதனையாக மாறும்.
துபாய்:
இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்லும் மக்கள் பெரும்பாலும் விமான போக்குவரத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு விமானத்தில் செல்ல குறைந்தது 4 மணி நேரம் ஆகும். இரு நாடுகளுக்கும் போக்குவரத்து சேவை இன்னும் அதிகமாகவே தேவைப்படுகிறது.
இந்தநிலையில் தற்போது ஐக்கிய அரபு அமீரகம்-இந்தியா இடையே கடலுக்கு அடியில் ரெயில் சேவை தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரக தேசிய ஆலோசனை குழு புதிய திட்டம் ஒன்றை பரீசிலனையில் வைத்துள்ளது. அதன்படி துபாய் மற்றும் மும்பை இடையே கடலுக்கு அடியில் செல்லும் ரெயில் பாதையை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ரெயில் பாதை உருவாக்கப்பட்டால் அதில் ஓடும் ரெயில் மணிக்கு 600 முதல் 1000 கி.மீ. வேகம் வரை இயங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாயில் இருந்து 2 ஆயிரம் கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள மும்பைக்கு, விமானங்களும், கப்பல்களும் இயக்கப்பட்டு வரும் நிலையில், புதிதாக அதில் கடலுக்கு அடியில் ரெயில் போக்குவரத்தும் இணையவுள்ளது.
இந்த ரெயில் சேவை தொடங்கப்பட்டால் துபாயில் இருந்து இந்தியாவின் மும்பைக்கு 2 மணி நேரத்தில் சென்றடைய முடியும்.
இந்த பாதை கடலுக்கு அடியில் அமைக்க வேண்டியது இருப்பதால் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டிய தேவை இருக்கும். இதில் நிறைய சவால்களும் உள்ளன.
ரெயில் வேகமாக பயணிக்கும் போது ரெயில் பாதையில் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்க வேண்டும். இந்த பாதையில் ரெயில் பயணிக்கும் போது கடலின் அடியில் உள்ள ரம்மியமான காட்சிகளை பயணிகள் பார்க்கும் வகையில் ரெயில்களை கண்ணாடி மூலம் கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த ரெயில்கள் பயணிகள் போக்குவரத்திற்கு மட்டுமின்றி இரு நாடுகளுக்கும் இடையேயான சரக்கு போக்குவரத்துக்கும் பயன்படும்.
துபாய் மற்றும் இந்தியா இடையே விரைவாக சரக்கு போக்குவரத்தை கையாள முடியும். இது கச்சா எண்ணை உள்ளிட்ட முக்கியமான மூலப்பொருட்களை துபாயில் இருந்து இந்தியாவிற்குள் இறக்குமதி செய்ய புதிய மற்றும் குறைந்த செலவிலான வழியை ஏற்படுத்தும்.
இந்த திட்டத்திற்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு தேவைப்படும். இதை திட்ட ரீதியாக தயார் செய்துவிட்டார்கள்.
இதற்கான ஒப்புதலும் நிதியும் ஒதுக்கப்பட்டு இந்தியா-துபாய் இடையே கடலுக்கு அடியில் போக்குவரத்து பாதை அமைக்கப்பட்டால் நிச்சயம் இது உலகின் மிகப்பெரிய சாதனையாக மாறும்.
பின்னர் பல முக்கிய நகரங்களை இதேபோன்று இணைப்பதற்கான முயற்சிகளும் நடைபெறும். இந்த திட்டம் 2030-ம் ஆண்டுக்குள் பயன்பாட்டிற்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- லட்சக்கணக்கானோர் தங்கள் அன்றாட பணிகளுக்காக ரெயில்களில் பயணம் செய்து வருகின்றனர்.
- திருநெல்வேலில் இரண்டாம் ரெயில் வழித்தடத்தில் முழுமையான பாதை புதுப்பித்தல் பணிகள் நடைபெறுகிறது.
நெல்லை:
தென் மாவட்ட மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான போக்குவரத்தாக ரெயில் போக்குவரத்து உள்ளது. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கானோர் தங்களின் அன்றாட பணிகளுக்காக இந்த ரெயில்களில் பயணம் செய்து வருகின்றனர்.
உத்தியோகம், மருத்துவ சிகிச்சை, குடும்ப நிகழ்ச்சி உள்பட பல்வேறு காரணங்களுக்காக மக்கள் ரெயில்களில் பயணித்து வருகின்றனர்.
இந்நிலையில், திருநெல்வேலில் இரண்டாம் ரெயில் வழித்தடத்தில் முழுமையான பாதை புதுப்பித்தல் பணிகள் காரணமாக பின்வரும் ரெயில்கள் மார்ச் 20 முதல் ஏப்ரல் 13 வரை என மொத்தம் 25 நாட்கள் ரத்து செய்யப்படுகின்றன.
இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே மதுரை கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் இடையே மாலை 4.30 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரெயில் மற்றும் திருச்செந்தூர்– திருநெல்வேலி இடையே காலை 10.10 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயிலும் மார்ச் 20 முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை ரத்துசெய்யப்படுகிறது என தெரிவித்துள்ளது.
- குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நவம்பர் 2-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 18 நாட்கள் திருவனந்தபுரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
- மறுமார்க்கத்தில் குருவாயூரில் இருந்து எழும்பூர் வரை இயக்கப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் நவம்பர் 2-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை திருவனந்தபுரத்தில் இருந்து இயக்கப்படும்.
சென்னை:
கொல்லம்-கோட்டயம்-ஈட்டுமண்ணூர், எர்ணாகுளம்-திருச்சூர் மார்க்கத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதன் காரணமாக ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதோடு மாற்று வழியிலும், தாமதமாகவும் இயக்கப்பட உள்ளன.
சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நவம்பர் 2-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 18 நாட்கள் திருவனந்தபுரம் வரை மட்டுமே இயக்கப்படும். திருவனந்தபுரம்-குருவாயூர் இடையே சேவை ரத்து செய்யப்படுகிறது.
மறுமார்க்கத்தில் குருவாயூரில் இருந்து எழும்பூர் வரை இயக்கப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் நவம்பர் 2-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை திருவனந்தபுரத்தில் இருந்து இயக்கப்படும். குருவாயூர்-திருவனந்தபுரம் இடையே சேவை ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
- சென்டிரல் - ஆவடி இடையே இரவு 11.55 மணிக்கு புறப்படும் பயணிகள் சிறப்பு ரெயில் இன்று மற்றும் நாளை இயக்கப்படுகிறது.
- பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது.
சென்னை :
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது.
* பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இ டிப்போ - ஆவடி இடையே இரவு 11.55 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
* வேளச்சேரி - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இ டிப்போ இடையே இரவு 10.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் இன்று முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
* சென்னை கடற்கரை - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இ டிப்போ இடையே இரவு 11.15 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
* சென்டிரல் - திருவள்ளூர் இடையே இரவு 11.15 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் இன்று மற்றும் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
* சென்டிரல் - ஆவடி இடையே இரவு 11.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் இன்று மற்றும் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
* வேளச்சேரி - ஆவடி இடையே இரவு 10.30 மணிக்கு புறப்படும் பயணிகள் சிறப்பு ரெயில் இன்று (சனிக்கிழமை) இயக்கப்படுகிறது.
* சென்னை கடற்கரை - ஆவடி இடையே இரவு 11.40 மணிக்கு புறப்படும் பயணிகள் சிறப்பு ரெயில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இயக்கப்படுகிறது.
* சென்டிரல் - திருவள்ளூர் இடையே இரவு 11.50 மணிக்கு புறப்படும் பயணிகள் சிறப்பு ரெயில் இன்று மற்றும் நாளை இயக்கப்படுகிறது.
* சென்டிரல் - ஆவடி இடையே இரவு 11.55 மணிக்கு புறப்படும் பயணிகள் சிறப்பு ரெயில் இன்று மற்றும் நாளை இயக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- புறநகர் மின்சார ரெயில் சேவை ஏப்.1-ந் தேதி முதல் ஏப்.25-ந் தேதி வரை மாற்றம் செய்யப்பட உள்ளது.
- சூலூர்பேட்டை- மூர்மார்க்கெட் செல்லும் இரவு 8.45 மணி ரெயில் கொருக்குப்பேட்டை - மூர்மார்க் கெட் இடையே ரத்து செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னை சென்ட்ரல்-பேசின் பாலம் நிலையங்கள் இடையே பாலம் கட்டுமானப் பணி நடக்க உள்ளதால், புறநகர் மின்சார ரெயில் சேவை ஏப்.1-ந் தேதி முதல் ஏப்.25-ந் தேதி வரை மாற்றம் செய்யப்பட உள்ளது.
மேற்கண்ட நாட்களில் மூர் மார்க்கெட்- பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லும் இரவு 10.35 மணி ரெயில், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - ஆவடி செல்லும் இரவு 11.55 மணி ரெயில் ஆகிய 2 மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.
கும்மிடிப்பூண்டி- மூர்மார்க்கெட் செல்லும் அதிகாலை 4.50 மணி ரெயில், சூலூர்பேட்டை- மூர்மார்க்கெட் செல்லும் அதிகாலை 5 மணி ரெயில் ஆகியவை பேசின் பாலம்-மூர்மார்க்கெட் இடையே ரத்து செய்யப்படுகிறது.
மூர்மார்க்கெட்-கும்மி டிப்பூண்டி செல்லும் அதிகாலை 6.25 மணி ரெயில், மூர்மார்க்கெட் - சூலூர்பேட்டை செல்லும் காலை 7.30 மணி ரெயில் ஆகியவை, மூர்மார்க் கெட்-பேசின் பாலம் இடையே ரத்து செய்யப்படுகிறது.
சூலூர்பேட்டை- மூர்மார்க்கெட் செல்லும் இரவு 8.45 மணி ரெயில் கொருக்குப்பேட்டை - மூர்மார்க் கெட் இடையே ரத்து செய்யப்படுகிறது. பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - மூர்மார்க்கெட் செல்லும் இரவு 10.45 மணி ரெயில் ஆவடி - மூர்மார்க்கெட் இடையே ரத்து செய்யப்படுகிறது. மூர்மார்க்கெட்-ஆவடி செல்லும் இரவு 11.30 மணி ரெயில், மூர்மார்க் கெட்-வியாசர்பாடி இடையே ரத்து செய்யப்படுகிறது.
திருத்தணி-மூர்மார்க் கெட் செல்லும் இரவு 8.45 மணி ரெயில், அரக்கோணம் - மூர்மார்க்கெட் செல்லும் இரவு 9.45 மணி ரெயில், சூலூர்பேட்டை-மூர்மார்க் கெட் செல்லும் இரவு 9.40 மணி ரெயில் ஆகியவை சென்னை கடற்கரை வழியாக திருப்பி விடப்படும். இந்த ரெயில்கள் பேசின் பாலம், சென்னை சென்ட்ரல் செல்லாது.
இதுதவிர, மூர்மார்க்கெட் வளாகத்தில் இருந்து அரக்கோணம், கும்மிடிப்பூ ண்டிக்கு புறப்பட வேண்டிய 2 மின்சார ரெயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதுபோல, மூர் மார்க்கெட்டில் இருந்து புறப்பட வேண்டிய சில ரெயில்கள், சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து புறப்படும்.
- பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- ரெயில் சேவையில் இன்று 25-ந்தேதி வரை கீழ்கண்டவாறு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
சென்னை :
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை சென்டிரலில் இருந்து பட்டாபிராம், பட்டாபிராம் மிலிட்டரி, ஆவடி, கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை பகுதிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் சேவையில் இன்று(சனிக்கிழமை) முதல் வருகிற 25-ந்தேதி வரை கீழ்கண்டவாறு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
*மூர் மார்க்கெட் - பட்டாபிராம் மிலிட்டரி இடையே இரவு 10.35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில், பட்டாபிராம் மிலிட்டரி - ஆவடி இடையே இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
*பட்டாபிராம் மிலிட்டரி - சென்னை சென்டிரல் இடையே இரவு 10.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் ஆவடி-சென்டிரல் இடையேயும், சென்டிரல் - ஆவடி இடையே இரவு 11.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் சென்டிரல்-வியாசர்பாடி இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* கும்மிடிப்பூண்டி - சென்டிரல் இடையே காலை 4.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் பேசின் பிரிட்ஜ் -சென்டிரல் இடையேயும், சென்டிரல் - கும்மிடிப்பூண்டி இடையே காலை 6.25 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் சென்டிரல்-பேசின் பிரிட்ஜ் இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* சூலூர்பேட்டை - சென்டிரல் இடையே காலை 5 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் பேசின் பிரிட்ஜ் -சென்டிரல் இடையேயும், சென்டிரல்- சூலூர்பேட்டை இடையே காலை 7.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் சென்டிரல்- பேசின் பிரிட்ஜ் இடையேயும், சூலூர்பேட்டை - சென்டிரல் இடையே இரவு 9.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் கொருக்குபேட்டை-சென்டிரல் இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* சென்னை சென்டிரல் - திருவள்ளூர் இடையே இரவு 11.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில், சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11 மணிக்கு இயக்கப்படும்.
* சென்டிரல் - ஆவடி இடையே இரவு 11.45 மணி இயக்கப்படும் மின்சார ரெயில் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.40 மணிக்கு இயக்கப்படும்.
* சென்டிரல் - ஆவடி இடையே நள்ளிரவு 12.15 மணி இயக்கப்படும் மின்சார ரெயில் சென்னை கடற்கரையில் இருந்து நள்ளிரவு 12.20 மணிக்கு இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ெரயில் சேவையைத் தொடங்க மத்திய அரசு ரூ. 90 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
- தனுஷ்கோடி ரெயில் திட்டம் நிறைவேறினால் யாத்ரீகா்களின் வருகை பலமடங்கு அதிகரிக்கும்.
திருப்பூர் :
ராமேசுவரம்-தனுஷ்கோடி ெரயில் இணைப்புத் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியி ட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- காசியைப் போன்று மிகவும் பிரசித்தி பெற்றது ராமேசுவரத்தில் உள்ள தனுஷ்கோடியாகும். கடந்த 1960 ஆம் ஆண்டில் வந்த சுனாமிப் பேரலையால் தனுஷ்கோடி அழிந்தது. இதன் பிறகு அந்தத் தீவைப் புனரமைக்க மத்திய, மாநில அரசுகள் எந்தவிதமான முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
இதனிடையே, தனு ஷ்கோடி புனரமைக்கப்பட்டு ராமேசுவரத்தில் இருந்து ரெயில் சேவையைத் தொடங்க மத்திய அரசு ரூ. 90 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தனுஷ்கோடி ரெயில் திட்டம் நிறைவேறினால் யாத்ரீகா்களின் வருகை பலமடங்கு அதிகரிக்கும். ஆகவே, ராமேசுவரம்-தனுஷ்கோடி இடையே ரெயில் சேவை தொடங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது ரெயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.96.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
- 4-வது வழித்தட பணிகளுக்காக சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 3 ரெயில் பாதைகள் உள்ளன. இதில் 2 பாதைகளில் புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. ஒரு பாதையில் விரைவு ரெயில்கள் மற்றும் சரக்கு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
வடமாநிலங்களுக்கு செல்லும் ரெயில்கள் பெரும்பாலும் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. இதனால் அங்கு எப்போதும் கூட்டம் நிரம்பி வழிகிறது. எனவே அங்கு கூட்டத்தை குறைக்க தாம்பரத்தில் இருந்து எழும்பூர் ரெயில் நிலையம் வழியாக வடமாநிலங்களுக்கு ரெயில்களை இயக்க புதிய பாதை தேவைப்படுகிறது.
எனவே சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே 4.3 கீ.மீ தொலைவுக்கு 4-வது புதிய ரெயில்பாதை அமைக்க ரெயில்வே வாரியத்துக்கு, தெற்கு ரெயில்வே பரிந்துரை செய்தது. இதற்கு ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. ஆனால் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது ரெயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.96.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து இந்த திட்டத்தை வேகமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 4-வது வழித்தட பணிகளுக்காக சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை - சேப்பாக்கம் இடையே பறக்கும் ரெயில் சேவை வருகிற ஜூலை 1-ந்தேதி முதல் 2024-ம் ஆண்டு ஜனவரி 31-ந்தேதி வரை 7 மாதங்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. சேப்பாக்கத்தில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரெயில்கள் இயக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- பயணிகளுக்கு பாதிப்பு இல்லாமல் 4-வது ரெயில்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- சென்னை கோட்ட உயர் அதிகாரிகளின் கருத்துக்களை பெற்று பறக்கும் ரெயில் சேவையை பாதிக்காத வகையில் 4-வது ரெயில் பாதை அமைக்கப்படும்.
சென்னை:
சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை கடற்கரையில் இருந்து எழும்பூருக்கு 4-வது ரெயில்பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.
4-வது ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுவதையொட்டி சென்னை கடற்கரை - சேப்பாக்கம் இடையே பறக்கும் ரெயில் சேவை 7 மாதங்கள் நிறுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இதற்கு பயணிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
பயணிகளின் எதிர்ப்பை தொடர்ந்து சென்னை கடற்கரை - சேப்பாக்கம் இடையே பறக்கும் ரெயில் சேவையை நிறுத்தும் திட்டம் கைவிடப்படுகிறது. பயணிகளுக்கு பாதிப்பு இல்லாமல் 4-வது ரெயில்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சென்னை கடற்கரையில் இருந்து எழும்பூருக்கு 4-வது ரெயில் பாதை அமைக்கப்படுவதையொட்டி சென்னை கடற்கரை- சேப்பாக்கம் இடையே பறக்கும் ரெயில் சேவையை 7 மாதங்கள் நிறுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு பயணிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
எனவே இதுபற்றி முடிவு எடுக்க அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி சென்னை கடற்கரை - சேப்பாக்கம் இடையே பறக்கும் ரெயில் சேவையை நிறுத்தி வைக்கும் திட்டத்தை கைவிட தெற்கு ரெயில்வே முடிவு செய்து உள்ளது. இதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இதற்கான முறையான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியிடப்படும்.
சென்னை பெருநகர போக்குவரத்து கழகம் மற்றும் போக்குவரத்து செயலாளருடன் கலந்தாலோசித்து புதிய திட்டத்தை இறுதி செய்து வருகிறோம். இந்த வார இறுதிக்குள் புதிய திட்டம் தயாராகிவிடும்.
சென்னை கோட்ட உயர் அதிகாரிகளின் கருத்துக்களை பெற்று பறக்கும் ரெயில் சேவையை பாதிக்காத வகையில் 4-வது ரெயில் பாதை அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
- அனைத்துக்கட்ட பரிசோதனைகளும் நிறைவடைந்த நிலையில் இன்றுமுதல் போடிக்கு ரெயில் சேவை தொடங்குகிறது.
- சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை ரெயில் எண் (20602) இன்று இரவு 8.30 மணிக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைக்கிறார்.
போடி:
மதுரை-போடி வழித்தடத்தை அகல ரெயில்பாதையாக மாற்றுவதற்காக 2010-ம் ஆண்டு டிசம்பருடன் மீட்டர்கேஜ் ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. பணிகள் முடிந்த நிலையில் கடந்த ஆண்டு மே 27-ந்தேதி முதல் மதுரையில் இருந்து தேனி வரை தினசரி ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்றுமுதல் போடி வரை இந்த ரெயில் நீட்டிக்கப்பட உள்ளது. இதற்காக ஓ.எம்.எஸ் எனப்படும் சிறப்பு ஆய்வு ரெயில் மூலம் நேற்று சோதனை நடைபெற்றது. தண்டவாளங்களின் அதிர்வு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அனைத்துக்கட்ட பரிசோதனைகளும் நிறைவடைந்த நிலையில் இன்றுமுதல் போடிக்கு ரெயில் சேவை தொடங்குகிறது. மதுரையில் இருந்து தினசரி ரெயில்(06701) காலை 8.20-க்கு புறப்பட்டு 10.30 மணிக்குப்போடியை வந்தடைகிறது. மீண்டும் 5.50-க்கு புறப்படும் இந்த ரெயில் (06702) இரவு 7.50 மணிக்கு மதுரையைச் சென்றடைகிறது.
இதேபோல் சென்னை சென்ட்ரலில் இருந்து திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் போடிக்கு ரெயில் (20601) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இரவு 7.15 மணிக்குப்புறப்பட்டு மறுநாள் காலை 9.35 மணிக்கு போடியை வந்தடைகிறது.
மறுமார்க்கமாக போடியில் இருந்து செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை சென்ட்ரலுக்கு ரெயில் (20602) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இரவு 8.30 மணிக்குப்புறப்பட்டு மறுநாள் காலை 7.55 மணிக்கு சென்னையை சென்றடைகிறது. இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் தெரிவிக்கையில், இந்த ரெயிலில் 2 முன்பதிவில்லா பெட்டிகள், படுக்கை வசதி, முன்பதிவு பெட்டிகள் 4, 3 அடுக்கு குளிர்சாதன பெட்டிகள் 2, முதல்வகுப்பு குளிர்சாதன பெட்டி 1 என 14 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை ரெயில் எண் (20602) இன்று இரவு 8.30 மணிக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ரவீந்திரநாத் எம்.பி உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். முதல் ஸ்லீப்பர் கோச்சுக்கு ரூ.390, 3-ம் வகுப்பு ஏ.சி பெட்டிக்கு ரூ.1025, 2-ம் வகுப்பு ஏசிக்கு ரூ.1445, முதல் வகுப்பு ஏசி பெட்டிக்கு ரூ.2415 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்திற்கு கடந்த பல ஆண்டுகளாக ரெயில் போக்குவரத்து தொடங்கப்படாத நிலையில் தற்போது போடியில் இருந்து சென்னை வரை ரெயில்சேவை தொடங்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன்மூலம் சென்னைக்கு கல்வி கற்க செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் விளைபொருட்களை கொண்டுசெல்லும் வியாபாரிகள் பெரிதும் பயனடைவார்கள் என தெரிவித்துள்ளனர்.
- 29-ந் தேதி இந்த ரெயில் கோவையில் இருந்து காட்பாடி வரை மட்டும் இயக்கப்படும்.
- இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர்:
கோவை-திருப்பதி ரெயில் சேவை பொறியியல் பணி காரணமாக நாளை 29-ந் தேதி மாற்றப்பட்டுள்ளது. இந்த ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்படுகிறது. நாளை 29-ந் தேதி இந்த ரெயில் கோவையில் இருந்து காட்பாடி வரை மட்டும் இயக்கப்படும்.
காட்பாடியில் இருந்து திருப்பதி வரை இயக்கப்படாது. இதுபோல் திருப்பதி-கோவை ரெயில் நாளை 29-ந் தேதி காட்பாடியில் இருந்து கோவை வரை மட்டுமே இயக்கப்படும். திருப்பதி-காட்பாடி வரை இயக்கப்படாது.இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- இதனால் ரெயில் எண்.06412 (ஈரோடு-ஜோலார்பேட்டை ரெயில்) ஈரோட்டில் இருந்து காலை 6.25 மணிக்கு புறப்பட்டு 12.10 மணிக்கு ஜோலார்பேட்டை சென்ற டையும்.
- இதே போல் ரெயில் எண். 06411 (ஜோலார் பேட்டை- ஈரோடு ரெயில்) ஜோலார்பேட்டையில் இருந்து மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு, 7.45 மணிக்கு ஈரோட்டை வந்தடைந்தது.
ஈரோடு:
தெற்கு ரெயில்வே சேலம் கோட்டம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிரு ப்பதாவது:-
திருப்பத்தூர்- ஜோலார்பேட்டை இடையே உள்ள ரெயில் தண்டவாளம் பராமரிப்பு பணி நாளை (திங்கட்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் ரெயில் எண்.06412 (ஈரோடு-ஜோலார்பேட்டை ரெயில்) ஈரோட்டில் இருந்து காலை 6.25 மணிக்கு புறப்பட்டு 12.10 மணிக்கு ஜோலார்பேட்டை சென்ற டையும். ரெயில் நாளை முழு வதும் ரத்து செய்ய ப்படுகிறது.
இதே போல் ரெயில் எண். 06411 (ஜோலார் பேட்டை- ஈரோடு ரெயில்) ஜோலார்பேட்டையில் இருந்து மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு, 7.45 மணிக்கு ஈரோட்டை வந்தடைந்தது. இந்த ரெயிலும் நாளை முழுவதுமாக ரத்து செய்ய ப்படுகிறது.
இவ்வாறு அதில் கூற ப்பட்டுள்ளது.