search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடிகைகள்"

    • நடிகை ஸ்ரீலேகா மித்ரா, கேரள திரைப்பட இயக்குனர் ரஞ்சித் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்தார்.
    • நடிகர் சங்க தலைவர் மோகன்லால் உள்பட 17 நிர்வாகிகள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

    பெரும்பாவூர்:

    கேரள மாநிலத்தில் ஹேமா கமிஷனின் அறிக்கையை தொடர்ந்து மேற்கு வங்க நடிகை ஸ்ரீலேகா மித்ரா, கேரள திரைப்பட அகாடமியின் தலைவரும், இயக்குனருமான ரஞ்சித் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்தார்.

    கவர்ச்சி நடிகை மினு, நடிகர்கள் ஜெயசூர்யா, இடவேள பாபு, முகேஷ் எம்.எல்.ஏ., மணியன் பிள்ளை ராஜு ஆகிய 4 பேர் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்து இருந்தார். மலையாள சினிமாவில் பட வாய்ப்புக்காக தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை நடிகைகள் தெரிவித்து வருவது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மலையாள திரைப்பட நடிகர் சங்கமான அம்மா அமைப்பின் நிர்வாகிகள் மீது நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்ததை அடுத்து, தார்மீக பொறுப்பேற்று அதன் தலைவரும், நடிகருமான மோகன்லால் உள்பட 17 நிர்வாகிகள் தங்களது பதவியை நேற்று முன்தினம் கூண்டோடு ராஜினாமா செய்தனர். அதோடு செயற்குழுவும் கலைக்கப்பட்டது.

    இந்த நிலையில் மலையாள நடிகர் சங்க உறுப்பினர்களும், நடிகைகளுமான சரயு, அனன்யா ஆகியோர் நிர்வாகிகள் ராஜினாமா மற்றும் செயற்குழுவை கலைத்த முடிவில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் தான் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து உள்ளதாக தெரிவித்து உள்ளனர். எனவே, நாங்கள் ராஜினாமா செய்யவில்லை என்று கூறினர்.

    இதேபோல் நடிகர்கள் வினு மோகன், டோவினோ தாமஸ், ஜெகதீஷ் ஆகியோர் மலையாள நடிகர் சங்க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்ததில் எங்களுக்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்தனர்.

    இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    • முன்னணி நடிகர்-நடிகைகள் வெப் தொடர்களில் நடித்து வருகிறார்கள்.
    • வெப் தொடருக்கு ரக்தபீஜ் என்று பெயர் வைத்துள்ளனர்.

    முன்னணி நடிகர்-நடிகைகள் வெப் தொடர்களில் நடித்து வருகிறார்கள். சமந்தாவும் பேமிலிமேன் 2, சிட்டாடல்: ஹனி பன்னி ஆகிய இந்தி வெப் தொடர்களில் நடித்துள்ளார்.

    தற்போது இன்னொரு வெப் தொடரில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த தொடரில் ஆதித்ய ராய்கபூர் நாயகனாக நடிக்கிறார். ராஜ், டி.கே ஆகியோர் டைரக்டு செய்கிறார்கள். தொடருக்கு ரக்தபீஜ் என்று பெயர் வைத்துள்ளனர்.

    இந்த தொடருக்காக நடிகர்-நடிகைகள் படப்பிடிப்புக்கு முன்பே கதாபாத்திரங்களை மெருகேற்ற நடிப்பு பயிற்சி எடுக்க உள்ளனர்.

    இயக்குனர்கள் ராஜ், டி.கே ஆகியோர் தற்போது பேமிலி மேன் 3-ம் பாகத்தை எடுத்து வருகிறார்கள். அது முடிந்ததும் ஆகஸ்டு மாதம் சமந்தா, ஆதித்ய ராய் கபூர் நடிக்கும் வெப் தொடருக்கான படப்பிடிப்பு தொடங்கும்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நமது வாழ்வியலின் அங்கமாக பல நூறு ஆண்டுகளாக இருந்து வருகிறது.
    • நடிகர், நடிகைகள் பலர் வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

    யோகா என்பது நமது வாழ்வியலின் அங்கமாக பல நூறு ஆண்டுகளாக இருந்து வருகிறது. மனம் மற்றும் இடத்தை ஒருசேர ஒருங்கிணைக்க அறிவியல் பூர்வமாக இயற்கையின் வழி நின்று உதவும் ஒரே கருவி யோகாதான். எனவே தான் ஒவ்வொரு ஆண்டும், சர்வதேச யோகா தினம் ஜூன் 21 அன்று அனுசரிக்கப்படுகிறது.

    சர்வதேச யோகா தினத்தையொட்டி நடிகர், நடிகைகள் பலர் வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். நடிகைகள் ரகுல் பிரீத்சிங், அபிராமி, சம்யுக்தாஷான் ஆகியோர் யோகா பயிற்சி செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு யோகா தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கிராமத்தில் இரண்டு நாட்களாக விழாக்கோலம் பூண்டு இருந்தது.
    • இன்னிசைக் கச்சேரி மற்றும் நினைவு பரிசு வழங்குதல் நடைபெறும்.

    சோழவந்தான்:

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகேயுள்ள தென்கரை கிராமத்தைச் சேர்ந்த இயல், இசை, நாடக கலைஞர், திரைப்பட நடிகர், பாடகர் என்று பன்முகங் களை கொண்ட டி.ஆர்.மகாலிங்கம் நூற்றாண்டு விழா தென்கரையில் உள்ள டி.ஆர்.எம்.சுகுமார் பவனத் தில் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கிராமத்தில் இரண்டு நாட்களாக விழாக்கோலம் பூண்டு இருந்தது.

    இன்று காலை பிரபல பின்னணி பாடகி பி. சுசிலா குத்துவிளக்கு ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து நாதஸ்வர தவில் வித்வான் வலையப்பட்டி சுப்பிரமணி யன் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

    டி.ஆர்.மகாலிங்கம் மற்றும் கோமதி மகாலிங்கம் தொண்டு அறக்கட்டளை மூலம் நிறுவப்பட்ட டி.ஆர்.மகாலிங்கம் மார்பளவு சிலை திறப்பு விழா நடைபெற்றது. ஐகோர்ட்டு மூத்த வக்கீல் டி.கே.கோபாலன் தலைமை தாங்கினார்.

    நடிகர் சங்க தலைவர் நாசர், திரைப்பட பாடகர் டாக்டர் சீர்காழி சிவசிதம் பரம், தென்னிந்திய நடிகர் சங்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய துணை தலைவர் பூச்சி எஸ்.முருகன், தமிழக அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவன தலைவர் நடிகர் ராஜேஷ், நகைச்சுவை நடிகர் செந்தில், நடிகரும், இயக்குனருமான சந்தானபாரதி, நடிகை சச்சு, நடிகர் அண்ணாதுரை கண்ணதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    டி.ஆர்.மகாலிங்கம் பேரன் டி.ஆர்.எம்.எஸ்.ராஜேஷ் மகாலிங்கம், டி.ஆர்.வித்யா ஆகியோர் வரவேற்றனர். மாலை தென்கரையில் அமைந்துள்ள டி.ஆர்.மகாலிங்கம் நினைவு கலையரங்கில் பிரபல பின்னணி பாடகர் பங்குபெறும் டி.ஆர்.எம்.எஸ். சென்னை கிளாசிக் ஆர்கெஸ்ட்ராவின் இன்னிசைக் கச்சேரி மற்றும் நினைவு பரிசு வழங்குதல் நடைபெறும்.

    இதைத்தொடர்ந்து வெண்ணிறை ஆடை நிர்மலா செந்தமிழ் தேன் மொழியாள் என்ற பாட லுக்கு நடனமாட உள்ளார். இந்த நிகழ்ச்சியில் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா, முன்னாள் எம்.எல்.ஏ. எம்.வி.கருப்பையா, ஊராட்சிமன்ற தலைவர் மஞ்சுளா ஐயப்பன், கூட்டுறவு சங்க இயக்குனர் பங்களா மூர்த்தி, முன்னாள் பேரூராட்சி தலைவர் எம்.கே.முருகேசன், தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், தென்கரை தி.மு.க. கிளை செயலாளர் சோழன் ராஜா மற்றும் திரைப்பட நடிகர், நடிகைகள், இசை கலைஞர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் உயர் அதிகாரிகள், பொதுமக்கள், ரசிகர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

    • மணமக்களுக்கு பசுமை மரக்கன்று கூடை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
    • சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நேற்று காலை திருமணம் நடந்தது.

    சென்னை:

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் வி.டி.எம்.சார்லி - ஏ.அந்தோணியம்மாள் தம்பதியின் இளைய மகன் எம்.அஜய் தங்கசாமிக்கும், எம்.ஜான் கென்னடி - எல்.அனிட்டா அலெக்ஸ் தம்பதியின் மகள் ஜே.பெர்மீசியா டெமிக்கும் சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நேற்று காலை திருமணம் நடந்தது.

    இதில் நடிகர்கள் சிவகுமார், செந்தில், எஸ்.வி.சேகர், அழகு உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை ஆசீர்வதித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    இதையடுத்து திருமண விருந்து நிகழ்ச்சி சாந்தோம் கச்சேரி சாலையில் உள்ள பாஸ்டரல் சென்டர் ஹாலில் நடந்தது. சார்லியின் மூத்த மகன் எம்.ஆதித்யா சார்லி - எஸ்.எழில் அம்ரிதா, பேத்தி ஏ.ரேயா புஷ்பம் சார்லி உள்ளிட்டோர் விருந்தினர்களை வரவேற்றனர்.

    அதனைத்தொடர்ந்து எம்.அஜய் தங்கசாமி - ஜே.பெர்மீசியா டெமி திருமண வரவேற்பு நிகழ்ச்சி, மயிலாப்பூரில் உள்ள ஏ.வி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது.

    இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களுக்கு பசுமை மரக்கன்று கூடை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அவருடன் வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி, 'தினத்தந்தி' குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், நியூஸ்-7 டி.வி. மேலாண்மை இயக்குனர் வி.சுப்பிரமணியன், நடிகர்கள் கமல்ஹாசன், பிரபு, நாசர், விஜயகுமார், சின்னி ஜெயந்த், நடிகைகள் சச்சு, சுகன்யா, விஜி சந்திரசேகர், இயக்குனர்கள் கே.பாக்யராஜ், பி.வாசு கே.எஸ்.ரவிகுமார், சந்தான பாரதி, ஆர்.சுந்தர்ராஜன், விஜய், தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, கே.ராஜன், ஏ.எல்.அழகப்பன், பிரமிடு நடராஜன், இசையமைப்பாளர்கள் இளையராஜா, கங்கை அமரன் உள்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

    • முன்னணி நடிகர், நடிகைகள் ஓ.டி.டி. படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.
    • ஒரு எபிசோட்டில் நடிக்க ரூ.18 கோடி வாங்குவதாக கூறப்படுகிறது.

    ஓ.டி.டி. தளங்கள் சமீப காலத்தில் அசுர வளர்ச்சி பெற்றுள்ளன. தியேட்டர்களுக்கு சென்று படம் பார்ப்பதை விட ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் தொடர்களை பார்க்கவே ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

    ஓ.டி.டி.யில் வெளியிடுவதற்காகவே பிரத்யேகமாக படங்கள், வெப் தொடர்கள் தயாராகின்றன. முன்னணி நடிகர், நடிகைகள் ஓ.டி.டி. படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். இதில் அதிக சம்பளமும் கிடைக்கிறது.

    இந்த நிலையில் ஓ.டி.டி. தொடர்களில் நடிக்க அதிக சம்பளம் பெறும் நடிகர்கள் விவரம் வெளியாகி இருகிறது. இந்த பட்டியலில் இந்தி நடிகர் அஜய்தேவ்கான் முதல் இடத்தில் இருக்கிறார். இவர் ஓ.டி.டி. வெப் தொடரில் ஒரு எபிசோட்டில் நடிக்க ரூ.18 கோடி வாங்குவதாக கூறப்படுகிறது.

     அஜய்தேவ்கான் நடிப்பில் சமீபத்தில் `ருத்ரா' என்ற வெப் தொடர் வெளியானது. இதில் 7 எபிசோடுகள் இருந்தன. ஒரு எபிசோடுக்கு ரூ.18  கோடி வீதம் மொத்தம் ரூ.126 கோடி வாங்கியதாக கூறப்படுகிறது. இவருக்கு அடுத்து இந்தி நடிகர் மனோஜ் பஜ்பாய் ஒரு எபிசோடுக்கு ரூ.10 கோடி பெறுகிறார்.

     நடிகைகள் தமன்னா, சமந்தா, பிரியங்கா சோப்ரா ஆகியோரும் வெப் தொடர்களில் நடிக்க அதிக சம்பளம் பெறுகிறார்கள்.

    • நடிகர்-நடிகைகள் சென்னைக்கு திரும்பி உள்ளனர்.
    • ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    தமிழ் திரையுலகம் சார்பில் திரை உலகில் உள்ள அனைத்து சங்கங்களுடன் இணைந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கலைஞர் 100 என்கிற விழாவை இன்று மாலை நடத்துகிறது.

    கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இன்று மாலை 4 மணி அளவில் இந்த விழா தொடங்குகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் விழாவுக்கு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சாமிநாதன், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். விழாவில் சிரஞ்சீவி, மோகன்லால், மம்முட்டி மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொள்கிறார்கள்.


    கருணாநிதியின் புகழை போற்றும் வகையில் திரை உலகில் அவரது பங்களிப்பு பற்றிய முழுமையான விவரங்கள் அடங்கிய தொகுப்பு விழாவில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அவரது வசனங்கள் அதன் மூலமாக பேசப்பட்ட தமிழ் திரைப்படங்கள் தொடர்பாகவும் கலைஞர் 100 விழாவில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    நடிகர் சத்யராஜ் மற்றும் நடிகைகள் ரம்யா பாண்டி யன், இனியா, யாஷிகா ஆனந்த், தேஜஸ்ஸ்ரீ மற்றும் நடிகர் மாஸ்டர் மகேந்திரன் ஆகியோர் கலை நிகழ்ச்சிகளை வழங்குகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் ராமசாமி என்ற முரளி ராமநாராயணன் மற்றும் நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், கதிரேசன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.


    கலைஞர் 100 விழாவையொட்டி இன்று தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. நடிகர்-நடிகைகள் சென்னைக்கு திரும்பி உள்ளனர். அவர்களும் இன்று மாலை நடை பெறும் விழாவில் கலந்து கொள்கிறார்கள். இதையொட்டி கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானம் களை கட்டி உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

    தமிழ் திரை உலகினர் ஒரே நேரத்தில் ஒட்டு மொத்தமாக திரள்வதால் ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    பிரபல ஆலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது ஏஞ்சலினாவை தொடர்ந்து மேலும் 3 நடிகைகள் கற்பழிப்பு புகார் கூறியுள்ளனர்.
    நியூயார்க்:

    பிரபல ஆலிவுட் சினிமா பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன். இவர் மீது கற்பழிப்பு புகார் கூறப்பட்டது. அதை தொடர்ந்து பிரபல ஆலிவுட் நடிகைகள் ஏஞ்சலினா ஜோஸி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பெண்கள் செக்ஸ் புகார் கூறினர்.

    இதனால் கைது செய்யப்பட்ட அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர்மீது மேலும் 3 நடிகைகள் செக்ஸ் வழக்கு தொடர்ந்துள்ளனர். அவர்களில் ஒருவர் மெலிசா தாம்சன்.

    கடந்த 2011-ம் ஆண்டு சந்திக்க சென்ற போது அவர் தன்னை கற்பழித்ததாக புகாரில் கூறியுள்ளார். அவரைப் போன்று மேலும் கேட்லின் துலானி, லாரிசா கோம்ஸ் ஆகிய 2 நடிகைகளும் அவர் மீது கற்பழிப்பு புகார் கூறியுள்ளனர். விருந்து நிகழ்ச்சிக்கு அழைத்து தங்களுடன் செக்ஸ்சில் ஈடுபட்டதாக கூறியுள்ளனர்.
    கடை திறப்பு, விளம்பரம் என திரைப்படங்களில் நடிப்பது தவிர மற்றவற்றில் கவனம் செலுத்தும் தமிழ் சினிமா நடிகைகள் மக்கள் சார்ந்த போராட்டங்களுக்கு குரல் கொடுப்பது இல்லை

    தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களாக வலம் வரும் பலரும் தமிழ் நாட்டு மக்களுக்காக நடத்தப்படும் போராட்டங்களில் கலந்துகொள்வதில்லை. ஏன் தாங்கள் சார்ந்திருக்கும் திரையுலகத்தினர் பிரச்சினைகளுக்கு கூட குரல் கொடுப்பதில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன. தமிழ்நாட்டில் சாதாரண கடை திறப்பு விழா முதல் பெரிய கடைகளின் விளம்பரங்கள் வரை பிரபலமான நடிகைகள் தான் பயன்படுத்தப்படுகிறார்கள்.

    விளம்பரங்களில் நடிக்க கோடிகளிலும், திறப்பு விழாக்களில் கலந்துகொள்ள லட்சங்களிலும் பணம் வாங்குகிறார்கள் நடிகைகள். எல்லாம் சில மணி நேரத்துக்கான சம்பளம். வணிக நிறுவனங்களும் நடிகை என்றால் தான் கூட்டம் கூடும் என்று வியாபார நோக்கத்தில் நடிகைகளை அணுகுகிறார்கள். நடிகைகளின் மார்க்கெட்டை பொறுத்து இந்த தொகை நிர்ணயிக்கப்படும்.

    இப்படி சில நிமிடங்களுக்கே லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் அளவுக்கு தங்களை வளர்த்துவிட்ட தமிழ் சினிமாவையும், தமிழ்நாட்டு மக்களையும் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை நடிகைகள். கடந்த மாதம் காவிரி மேலாண்மை வாரியத்தை வலியுறுத்தி அறவழி போராட்டம் நடத்தப்பட்டது. அதில் மிக சொற்ப நடிகைகளே கலந்துகொண்டார்கள்.

    தன்ஷிகா,ரித்விகா போன்ற இளம் நடிகைகளும், கஸ்தூரி, ஸ்ரீப்ரியா, ரேகா போன்ற மூத்த நடிகைகளும் தான் கலந்துகொண்டார்கள். இத்தனைக்கும் தமிழில் நடிக்கும் பெரும்பாலான நடிகைகளுக்கு சென்னையில் வீடு இருக்கிறது. ஆனாலும் சில நிமிடங்கள் வந்து கலந்துகொள்ள அவர்களுக்கு வலிக்கிறது. தமிழ் சினிமாவில் பிறமொழி நடிகைகள் ஆதிக்கம் தான் அதிகம். எனவே தான் அவர்களுக்கு நமது உணர்வு புரிவதில்லை. சில முன்னணி நடிகைகளிடம் இதுகுறித்து கேட்க முயற்சித்தோம். பதிலளிக்க விரும்பவில்லை.
    ×