search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்வித்துறை"

    • 1 முதல் 3-ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு சமீபத்தில் பயிற்சி வழங்கப்பட்டது.
    • ஆசிரியர் பயிற்றுனர்கள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பொறுப்பாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் மதுரையில் நடத்தப்படுகிறது.

    சென்னை:

    அரசு பள்ளி மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில் கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆசிரியர்களுக்கு பாடம் சார்ந்த சில பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு சமீபத்தில் பயிற்சி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 4, 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பித்தல் பணியை மேற்கொள்ளும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பாடம் சார்ந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    அதன்படி, முதல் கட்டமாக நாளை (வெள்ளிக்கிழமை) முதன்மை கருத்தாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பொறுப்பாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் மதுரையில் நடத்தப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக இவர்கள் மூலம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.

    • 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத இருக்கும் மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது.
    • 3 பொதுத்தேர்வுகளிலும் தமிழ் வழியில் 12 லட்சத்து 91 ஆயிரத்து 605 மாணவ-மாணவிகள் எழுத இருக்கிறார்கள்.

    சென்னை:

    2022-23-ம் கல்வியாண்டுக்கான 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை கடந்த ஆண்டு (2022) நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற மார்ச் மாதம் 13-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 3-ந்தேதி வரையிலும், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் 14-ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 5-ந்தேதி வரையிலும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6-ந்தேதி தொடங்கி 20-ந்தேதி வரையிலும் நடைபெற உள்ளது.

    இதில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத இருக்கும் மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. இந்தநிலையில் பொதுத்தேர்வை எழுத இருக்கும் மாணவ-மாணவிகளின் விவரங்கள் நேற்று வெளியாகி உள்ளன.

    அதன்படி, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சத்து 38 ஆயிரத்து 67 மாணவ-மாணவிகளும், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை 7 லட்சத்து 87 ஆயிரத்து 783 மாணவ-மாணவிகளும், 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை 8 லட்சத்து 51 ஆயிரத்து 482 மாணவ-மாணவிகளும் என மொத்தம் 25 லட்சத்து 77 ஆயிரத்து 332 பேர் எழுத இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த 3 பொதுத்தேர்வுகளிலும் தமிழ் வழியில் 12 லட்சத்து 91 ஆயிரத்து 605 மாணவ-மாணவிகள் எழுத இருக்கிறார்கள். அவர்களுக்கு தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்பு நடத்த அனுமதி
    • மாவட்ட கலெக்டர் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டத்தில் முடிவு

    சென்னை:

    தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்த நிலையில், இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் அனைத்தும் முழுமையாக திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தக்கூடாது என அண்மையில் தமிழக அரசு கூறியிருந்தது. மாணவர்கள் பல்வேறு மன அழுத்தங்களில் இருப்பதால், விடுமுறை நாட்களில் எந்த காரணம் கொண்டும் வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விரிவாக தெரிவித்திருந்தார்.

    ஆனால் அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு மாறாக, தனியார் பள்ளிகளின் கோரிக்கையை ஏற்று தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பொதுத்தேர்வு எழுதும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்புகளை நடத்திக்கொள்ளலாம் என்றும், விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு நடத்தலாம் என்றும் திருவள்ளூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அனுமதி வழங்கியிருக்கிறார்.

    மாவட்ட கலெக்டர் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகளின் கூட்டத்தில் எடுக்கப்படட முடிவுகளின் அடிப்படையில் இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதாகவும் அவர் கூறி உள்ளார். இதுபோன்ற அறிவிப்பு மற்ற மாவட்டங்களிலும் வெளியாகியிருக்கலாம் என கூறப்படுகிறது. எனவே, இனி விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு நடத்துவதற்கான பணிகளில் தனியார் பள்ளிகள் தீவிரம் காட்டும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆசிரிகளுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும், பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை
    • ஆசிரியர்களுக்கு உரிமை கொடுக்காவிட்டால் மாணவர்கள் மோசமான நிலைக்கு போவார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் 77 வகையாக நெறிமுறைகளை கல்வித்துறை பிறப்பித்துள்ள நிலையில், இதுதொடர்பாக தொடக்கப்பள்ளி ஆசரியர்கள் சங்க செய்தித் தொடர்பு செயலாளர் சேகர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    ஆசிரியர்களுக்கு இப்போது பணிச்சுமை அதிகமாக உள்ளது. அதனை குறைக்க வேண்டும். ஆசிரிகளுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும். பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. பெஞ்சை உடைப்பது, டேபிளை உடைப்பது என மாணவர்களின் பழக்கவழக்கம் மோசமாக சென்றுகொண்டிருக்கிறது. இதை தடுத்து நிறுத்தவேண்டும் என்றால் மாணவர்களை கண்டிப்பதற்கு ஆசிரியர்களுக்கு உரிமை கொடுக்க வேண்டும். இல்லையென்றால் மாணவர்கள் இதைவிட மோசமான நிலைக்கு போவார்கள். ஆசிரியர்களுக்கு சுதந்திரம் கொடுத்தால், எல்லா ஆசிரியர்களும் பயமில்லாமல் வேலை செய்வார்கள். மாணவர்களும் ஆசிரியர்களுக்கு பயப்படுவார்கள், சரியாக படிப்பார்கள்.

    இன்றைய நிலைமை எப்படி இருக்கிறதென்றால், ஆசிரியர்கள்தான் மாணவர்களை பார்த்து பயப்படுகிறார்கள். எந்த மாணவன் என்ன செய்வானோ, எந்த மாணவன் அடிப்பானோ, எந்த மாணவன் எதாவது பிரச்சனை ஏற்படுத்துவானோ? என்ற பயத்துடனேயே ஆசிரியர்கள் வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    மாணவர்களை ஆசிரியர்கள் தங்கள் சொந்த வேலைகளில் ஈடுபடுத்தக்கூடாது என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது. ஆசிரியர்கள் இப்போது பெரும்பாலும் சொந்த வேலைகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தனியார் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்படும் என தனியார் பள்ளி கூட்டமைப்பு அறிவித்து இருந்தது.
    • நீலகிரி மாவட்டத்தில் 10 தனியார் பள்ளிகள் செயல்படவில்லை.

    கோவை:

    கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி உயிரிழப்பு தொடர்பாக நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டு பள்ளி சூறையாடப்பட்டது.

    இதை கண்டித்து தனியார் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்படும் என தனியார் பள்ளி கூட்டமைப்பு அறிவித்து இருந்தது. ஆனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கக் கூடாது, உத்தரவை மீறி விடுமுறை அளிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது.

    இந்த உத்தரவை மீறி தமிழகத்தில் பல தனியார் பள்ளிகள் நேற்று விடுமுறை அறிவித்து மூடப்பட்டிருந்தது. இதுதொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அதிகாரிகள் கொண்ட குழுவினர் மூடப்பட்டிருந்த தனியார் பள்ளிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    அதன்படி கோவை மாவட்டத்தில் சி.பி.எஸ்.இ., மெட்ரிக், பிரைமரி என மொத்தம் 31 தனியார் பள்ளிகள் நேற்று விடுமுறை அறிவித்து இருந்தது தெரியவந்தது. இதேபோல நீலகிரி மாவட்டத்தில் 10 தனியார் பள்ளிகள் செயல்படவில்லை.

    கோவை, நீலகிரி மாவட்டத்தில் விடுமுறை அறிவித்து இருந்த 41 பள்ளிகளுக்கும் அரசு உத்தரவை மீறி பள்ளிகளை மூடியது ஏன் என்பது பற்றி விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட உள்ளது.

    இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் கூறுகையில் மாவட்டம் முழுவதும் நேற்று 31 தனியார் பள்ளிகள் செயல்படவில்லை என தெரியவந்துள்ளது. அந்த பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்படும் என்றார். இதேபோல நீலகிரி மாவட்டத்தில் விடுமுறை அறிவித்த 10 பள்ளிகளுக்கு நோட்டீசு அனுப்பப்படும் என முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே தமிழ்நாடு நர்சரி மெட்ரிக் பள்ளி சங்க நிர்வாகிகள் நீலகிரி மாவட்ட கலெக்டரை சந்தித்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் தமிழகத்தில் இயங்கும் நர்சரி மெடரிக் பள்ளிகளுக்கு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும். சின்னசேலம் பகுதியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பள்ளிக்கு நீதி கிடைக்க வேண்டும் என கூறி இருந்தனர்.

    • 11 மாவட்டங்களில் 100 சதவீதம் தனியார் பள்ளிகள் இயங்கியுள்ளன.
    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட 92 சதவீதம் பள்ளிகள் இயங்கியுள்ளன.
    • நாமக்கல் மாவட்டத்தில் 32 சதவீதம் பள்ளிகள் மட்டுமே இயங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

    சென்னை :

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி மரணம் விவகாரத்தில், நேற்று முன்தினம் போராட்டக்காரர்கள் அந்த பள்ளியை சூறையாடினர். இதற்கு கண்டனம் தெரிவித்து தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும் அதுவரை பள்ளிகள் இயங்காது என்றும் நேற்று அறிவித்தது.

    இதற்கு கல்வித்துறை, சட்ட விதிகளை மீறி பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்தது. அந்த எச்சரிக்கையையும் மீறி தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டது. இதன்படி தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்த இந்த வேலைநிறுத்தத்தில், கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி தாக்குதலை கண்டித்து நேற்று மாநிலம் முழுவதும் 987 தனியார் பள்ளிகள் இயங்கவில்லை.

    இந்நிலையில் அரசின் அனுமதியின்றி தன்னிச்சையாக விடுமுறை அளித்தது ஏன்? என்று 987 தனியார் பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    முன்னதாக தமிழகம் முழுவதும் உள்ள 11 ஆயிரத்து 335 தனியார் பள்ளிகளில் 10 ஆயிரத்து 348 பள்ளிகள் நேற்று வழக்கம்போல் திறக்கப்பட்டு வகுப்புகள் செயல்பட்டுள்ளன. அதாவது 91 சதவீதம் தனியார் பள்ளிகள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்காமல் வழக்கம்போல் இயங்கி இருப்பது கல்வித்துறையின் புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.

    இதில் 11 மாவட்டங்களில் 100 சதவீதம் தனியார் பள்ளிகள் இயங்கியுள்ளன. பள்ளி சூறையாடப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட 92 சதவீதம் பள்ளிகள் இயங்கி இருப்பதாக கல்வித்துறையின் புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 32 சதவீதம் பள்ளிகள் மட்டுமே இயங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

    • மாணவர்களின் கற்றல் திறனுக்கு ஏற்றாற்போல் தமிழ் , ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆகியப் படங்களை கதை, பாடல், படித்தல் , எழுத்தல் ஆகியவை மூலமாக கற்பிப்பது தொடர்பான பயிற்சிகள் நடைபெறுகிறது.
    • 2022-23ஆம் ஆண்டில் இருந்து ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் , வலங்கைமான் ஒன்றியத்தில் பணியாற்றும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் பணியாற்றும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு 5 நாள் பயிற்சி வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி நடந்து வருகிறது.

    முதல் நாள் பயிற்சியை வட்டாரக் கல்வி அலுவலர் ஜெயலெட்சுமி , வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இப்பயிற்சியில் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை அரும்பு , மொட்டு , மலர் என மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அம்மாணவர்களின் கற்றல் திறனுக்கு ஏற்றாற்போல் தமிழ் , ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆகியப் படங்களை கதை, பாடல், படித்தல் , எழுத்தல் ஆகியவை மூலமாக கற்பிப்பது தொடர்பான பயிற்சிகள் நடைபெறுகிறது.

    இப்பயிற்சியை திருவாரூர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேல் பார்வையிட்டார்.

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் 1, 2, 3 வகுப்புகளுக்கு 2022-23ஆம் ஆண்டில் இருந்து 'எண்ணும் எழுத்தும்' திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

    இத்திட்டத்தின் மூலம் 2025 ஆம் ஆண்டிற்க்குள் அனைத்து தொடக்கப் பள்ளி மாணவர்களும் படித்தல் , எழுதுதுதலில், கணக்கீடு செய்தல் ஆகிவற்றில் குறிப்பிட்ட திறனை அடைய கல்வித்துறை திட்டமிடப்பட்டுள்ளது.

    1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீடியோ, ஆடியோ வசதியுடன் புதிய பாடத்திட்டம் இந்த கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது.
    சென்னை:

    1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் வருகிற கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்படுகிறது. மாணவர்கள் வீடியோ மற்றும் ஆடியோ வசதியுடன் பாடப்புத்தகங்களை விரும்பி படிக்கும் வகையில் இந்த பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்ட செயலாளர் த.உதயச்சந்திரன் கூறினார்.

    பல வருடங்களுக்கு பிறகு தமிழகத்தில் புதிய பாடத்திட்டம் 1, 6, 9, 11 ஆகிய 4 வகுப்புகளுக்கு 2018-2019-ம் கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதுகுறித்து சென்னையில் பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்ட செயலாளர் த.உதயச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பள்ளிக்கூட அளவில் புதிய பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக இந்தியாவில் சிறப்பான பாடப்புத்தகங்களை கொண்டுள்ள முக்கிய மாநிலங்கள் மற்றும் சிங்கப்பூர் உள்பட பல வெளிநாடுகளில் பாடப்புத்தகங்கள் எவ்வாறு உள்ளன என்று முதலில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் உள்ள நல்ல கருத்துகள் மட்டும் எடுக்கப்பட்டு புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    ஒவ்வொரு பாடப்புத்தகத்திலும், ஒவ்வொரு பாடத்திலும் அதை விரிவாக மாணவர்கள் படிக்க விரும்பினால் அதற்க ான புத்தகங்களின் தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

    பாடப்புத்தகங்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் படிக்கலாம். அதன் காரணமாக ஒவ்வொரு புத்தகத்திலும், ஒவ்வொரு பாடத்திலும் வார்த்தைகள் அகராதி போல இடம் பெற்றுள்ளன. அதாவது தமிழ்மொழியில் இருந்து ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தில் இருந்து தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்ட அர்த்தங்கள் இடம் பெற்றுள்ளன. அவை பாடத்தின் பின்புறத்திலும் மட்டுமல்ல, புத்தகத்தின் பின்பக்கத்திலும் இடம் பெற்று இருக்கிறது.

    11-வது வகுப்பு, 12-வது வகுப்பு மாணவ-மாணவிகள் ‘நீட்’ உள்ளிட்ட போட்டித் தேர்வை எதிர்கொள்ள பாடப்புத்தகங்களில் கடந்த சில ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் பதில்களுடன் இடம் பெற்றுள்ளன.

    பாடங்கள் அனைத்தும் மாணவர்கள் விரும்பி படிக்கும் வகையில் பல வண்ணங்களில் அமைக்கப்பட்டு இருக்கிறது.

    11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் அடுத்து என்ன படித்தால் நல்லது என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு அந்த படிப்புகளின் முழு விவரமும் கொடுக்கப்பட்டுள்ளன.

    மருத்துவம், என்ஜினீயரிங் மற்றும் நிறைய படிப்புகள் உள்ளன. என்ன படிப்பை எங்கே படிக்கலாம் என்ற விவரமும் தொகுத்து தரப்பட்டு இருக்கிறது. அதன்மூலம் மாணவ- மாணவிகள் மேல்படிப்பை மேற்கொள்வது பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள முடியும்.

    பாடங்களில் விரைவு கோடு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதை இணையதளம் கொண்ட செல்போனில் படம் எடுத்து அதை செயல்படுத்தினால் அதற்குரிய வீடியோ மற்றும் ஆடியோவை காணலாம். அவை அனைத்தும் பாடத்துடன் இணைந்ததுதான். அந்த விரைவு கோட்டை பள்ளிகளில் கம்ப்யூட்டர் மூலம் பயன்படுத்தி மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

    அதாவது வீடியோ மற்றும் ஆடியோ வசதியுடன் புதிய பாடத்திட்டம் அமைந்திருக்கிறது. பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடலை வீடியோ மற்றும் ஆடியோ வாயிலாக வழங்கினால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பார்த்து படிப்பார்கள்.

    தொழிற்கல்வி மாணவ- மாணவிகளுக்கு பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு 20 வருடங்கள் ஆகி விட்டது. எனவே அந்த பாடத்திட்டம் முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது. அதிகம் கம்ப்யூட்டர் படிக்கும்படி பாடத்திட்டம் உள்ளது.

    அடிப்படை எந்திரவியல், அடிப்படை பொறியியல், அடிப்படை மின் பொறியியல், அடிப்படை மின்அணு பொறியியல், அடிப்படை கட்டிட பொறியியல், ஊர்தி பொறியியல், நெசவியல், செவிலியம், வேளாண் அறிவியல் உள்ளிட்ட தொழில்கல்வி படிப்புகளில் நிறைய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

    இந்த பாடத்திட்டம் மாணவர்களின் அறிவு சிந்தனையை தூண்டி வேலை வாய்ப்பை முன்நிறுத்தியும் போட்டித்தேர்வை எதிர்கொள்ளும் வகையிலும் அமைக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    முதலில் மாநில அளவில் ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி அளிக்கப்படும். அதன்பிறகு மாவட்டத்தின் முன்னணி ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்படும். அவர்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிப்பார்கள்.

    ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் பணி பாதிக்காத வகையில் 2 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொரு பருவத்திற்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்படும். பயிற்சி அளிக்க அட்டவணை வெளியிடப்படும்.

    இவ்வாறு இவ்வாறு தெரிவித்தார்.
    ×