என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆலோசனை கூட்டம்"

    • தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஆலோசனைக் கூட்டம்.
    • துணை வேந்தர்கள், பதிவாளர்கள் பங்கேற்று ஆலோசனை நடத்த உள்ளனர்.

    சென்னை தலைமை செயலகத்தில் வரும் 16ம் தேதி பல்கலைக்கழகங்களின் அனைத்து துணை வேந்தர்கள் மற்றும் பதிவாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் வரும் 16ம் தேதி மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக துணை வேந்தர்கள், பதிவாளர்கள் பங்கேற்று ஆலோசனை நடத்த உள்ளனர்.

    தமிழக பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முறையாக முதலமைச்சர் தலைமையில் துணைவேந்தர்கள் ஆலோசனை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
    • நிர்வகிகள் கலந்து கொண்டனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், ஜெகதளா பேரூர் நிர்வாகிகள் மற்றும் ஜெகதளா பேரூராட்சி மன்ற தி.மு.க உறுப்பினர்கள் கூட்டம், குன்னூர் நகர கழக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் நடைபெற்றது.குன்னூர் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார், குன்னூர் நகர செயலாளர் ராமசாமி, ஜெகதளா பேரூர் செயலாளர் சஞ்சீவ்குமார், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ், முன்னாள் பேரூர் செயலாளர் கிருஷ்ணகுமார், ஜெகதளா பேரூராட்சி தலைவர் பங்கஜம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் ஜெகதளா பேரூர் அவைத்தலைவர் லியோன், பேரூர் பொருளாளர் பாபு, மாவட்ட பிரதிநிதிகள் வில்லியம் ஆல்பர்ட், தினகரன், ஒன்றிய பிரதிநிதிகள் கேசவமூர்த்தி, செபாஸ்டின் அமல்ராஜ், மூர்த்தி, சையது பாஷா, நேரு, ஜெகதளா பேரூராட்சி மன்ற தி.மு.க உறுப்பினர்கள் சாலினி, திலீப்குமார், ஆஷா, யசோதா, பிரமிளா, மோசஸ், சுகுணாம்பாள் உள்பட நிர்வகிகள் கலந்து கொண்டனர்.

    • பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாதாந்திர குறுவள மைய அளவிலான கலந்தாலோசனை கூட்டம், ஜெயங்கொண்டம் ஆண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பாட வாரியாக நடைபெற்றது.
    • அடுத்த மாதத்திற்கான பாடத்திட்டம் குறித்த கலந்தாலோசனை பாடவாரியாக நடத்தப்பட்டது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில், 6-ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்கக்கூடிய பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாதாந்திர குறுவள மைய அளவிலான கலந்தாலோசனை கூட்டம், ஜெயங்கொண்டம் ஆண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பாட வாரியாக நடைபெற்றது.

    பயிற்சியினை வட்டார வள மைய மேற்பார்வையாளர்(பொறுப்பு) கண்ணதாசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர் ஜெயா, வட்டார கல்வி அலுவலர் ராசாத்தி ஆகியோர் பயிற்சியை பார்வையிட்டு ஆசிரியர்களுக்கு கருத்துகளை வழங்கினர். 286 பட்டதாரி ஆசிரியர்களும், ஆசிரியர் பயிற்றுனர்களும் கலந்து கொண்டனர்.

    அடுத்த மாதத்திற்கான பாடத்திட்டம் குறித்த கலந்தாலோசனை பாடவாரியாக நடத்தப்பட்டது.

    பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜ்குமார், வட்டார பயிற்சி ஒருங்கிணைப்பாளர் அந்தோணி லூர்து சேவியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

    • பூசாரிகளுக்கும் மாத ஊதியம் வழங்க வேண்டும்.
    • பல பூசாரிகள் பயனடைந்து உள்ளனர்.

    வடவள்ளி,

    தொண்டாமுத்தூர் ஒன்றியத்தில் கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சேலம், திருப்பூர், ஈரோடு, கோவை, உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து கிராம பூசாரிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அனைத்து கிராம கோவில் பூசாரிகளுக்கு மாத ஊதிய தொகை வழங்க வேண்டும். மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பூசாரிகளுக்கும் மாத ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தின் படி பல பூசாரிகள் பயனடைந்து உள்ளனர். இதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொள்ளப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக பேரூர் பட்டீஸ்வரர் கோவில் சிவாச்சாரியார் சிவாஜல சிவசுந்தர குருக்கள் கலந்து கொண்டார். கோவை மாவட்ட கோட்ட அமைப்பாளர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். மாணிக்கவாசகம், மேற்கு மண்டல இணை அமைப்பாளர் அருணாச்சலம், மேற்கு மண்டல அமைப்பாளர் வேலுச்சாமி, தொண்டாமுத்தூர் ஒன்றிய அமைப்பாளர் சாந்தலிங்கம், தொண்டாமுத்தூர் ஒன்றிய இணை அமைப்பாளர் முத்துக்குமார், சைவத் தலைவரும் திருப்பூர் தெற்கு அமைப்பாளர் சிவா ஆனந்தம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள், பூசாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • கட்டிட தொழிலாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது

    கரூர்:

    கரூர் மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. கட்டிட தொழிலாளர்கள் சங்க மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தாந்தோணிமலையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் தண்டபாணி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராஜா, சித்திரைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச்செயலாளர் வடிவேல் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் வருகிற 16 மற்றும் 17-ந்தேதிகளில் ராணிப்பேட்டையில் நடைபெறும் தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. கட்டிட தொழிலாளர்கள் சங்க மாநில மாநாட்டில் திரளாக கலந்து கொள்வது, மாநாட்டிற்கு நிதி அளிப்பது மற்றும் வயது முதிர்ந்த தொழிலாளர்களுக்கு தமிழக அரசு சார்பில் முதியோர் இல்லம், 60 வயதை கடந்த பதிவு செய்யாத கட்டுமான தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் பிழைப்பூதியம் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாவட்ட துணைத்தலைவர் மலையம்மாள் மற்றும் பலர் தமிழ் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, திருத்தங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தல் பற்றிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    அ.ம.மு.க. மாநகர் மாவட்ட அவைத் தலைவர் பாலுசாமி தலைமை தாங்கினார். மாநில துணை பொதுசெயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.சண்முகவேலு, திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் மேயருமான அ.விசாலாட்சி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பேசினார்கள். கூட்டத்தில் புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, திருத்தங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.

    பொதுக்குழு உறுப்பினர் புல்லட் ரவி, தொழிற்சங்க பேரவை செயலாளர் பாலகிருஷ்ணன், மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் இறை வெங்கடேஷ், தொழிற்சங்க பேரவை தலைவர் கலியமூர்த்தி, பகுதி செயலாளர்கள் சுகம் வீர.கந்தசாமி, ராஜாங்கம், ஜெகதீஷ், நூல்கடை சிவக்குமார், நெருப்பெரிச்சல் பகுதி நிர்வாகி கருப்புசாமி, பாண்டியன்நகர் பகுதி இணை செயலாளர் ஷீபா பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாற்று கட்சிகளில் இருந்து 35 பேர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்.

    • தமிழக அரசு முன்னெடுக்கும் திட்டங்கள் குறித்த விளக்க பொதுக்கூட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
    • வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் முன்னிலை வகித்தனர்.

    ஊட்டி,

    டான்டீ தோட்ட தொழிலாளர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், தி.மு.க துணை பொது செயலாளரும், நீலகிரி எம்.பியுமான ஆ.ராசா தலைமையில் நடைபெற்றது. வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் 10-ந் தேதி(இன்று)தேவாலா பஜார் பகுதியில் டான்டீ தோட்ட தொழிலாளர்களை பாதுகாக்க தமிழக அரசு முன்னெடுக்கும் திட்டங்கள் குறித்த விளக்க பொதுக்கூட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயர்குழு உறுப்பினர்கள் முஸ்தபா, திராவிடமணி, காசிலிங்கம், கூடலூர் ஒன்றிய செயலாளர் லியாகத் அலி, பந்தலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தராஜா, பந்தலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சுஜேஷ், நெல்லியாளம் நகர செயலாளர் சேகர், தொழிற்சங்க பிரதிநிதிகள் எல்.பி.எப் தொழிற்சங்கம் சார்பில் மாடாசாமி, அருண்குமார், அண்ணாதுரை, கணபதி, அன்பழகன், சந்திரன், மகேந்திரன், தமிழ்வாணன், ஏ.ஐ.டி.யு.சி. பெரியசாமி, ஐ.என்.டி.யு.சி. யோகநாதன், சி.ஐ.டி.யு சந்திரகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • தொழிலாளர்களின் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் அலு வலகத்தில் நடைபெற்றது.
    • முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர்களின் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் அலு வலகத்தில் நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு தலைமை மாவட்ட பொறுப்பாளர் மகேந்திரன், சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் ஞானசிவம் மற்றும் அகில இந்திய சிமெண்ட் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் துணைத்தலைவருமான சிவக்குமார் கலந்து கொண்டனர்.

    இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்களாக தற்போது நலவாரியத்தில் வழங்கப்பட உள்ள ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயிலிருந்து 3000 ரூபாயாக உயர்த்த வேண்டும். நலவாரியத்தில் உறுப்பினராக உள்ள அனைத்து உறுப்பினர்க ளுக்கும் அனைத்து சலுகைகளும் முறையாக பெற்று தரவும் , கட்டிட தொழிலாளர்களுக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகளும் மீதமுள்ள அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் மத்திய மாநில அரசு தர வேண்டும் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் கண்ணன், ஆறுமுகம், சத்தியவேணி, சுமதி ,துளசி, சங்கீதா ,பாலமுருகன் குமரேசன் சங்க துணை தலைவர் நன்றி கூறினார்.

    • சட்டமன்ற தொகுதிகளுக்குரிய வரைவு வாக்காளர் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
    • சிறப்பு முகாம்களை நாம் தவறாமல் பயன்படுத்தி வாக்காளர் சேர்ப்பு பணிகளில் ஈடுபடவேண்டும் என்றார்.

    தூத்துக்குடி:

    தே.மு.தி.க. தூத்துக்குடி மாவட்ட அலுவலகத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் தயாளலிங்கம் தலைமையில் புதிய வாக்காளர்களை சேர்ப்பது தொடர்பாக நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் தயாளலிங்கம் பேசியதாவது:-

    தூத்துக்குடி மாவட்டத்தில் 1.1.2023-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப்பணியில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்குரிய வரைவு வாக்காளர் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    இதன்படி சட்டமன்ற தொகுதிகளிலுள்ள வாக்குச்சாவடி எண்கள் அடிப்படையில் வழங்கப் பட்டுள்ள புதிய வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வது, இடமாற்றம் செய்வது, இறந்தவர்கள் மற்றும் நிரந்தரமாக வெளியூர்களிலுள்ள வாக்காளர்களை நீக்கம் செய்வது ஆகிய பணிகளை நிர்வாகிகள் தவறாமல் மேற்கொள்ளவேண்டும்.

    நமது கட்சியினர் வருகிற ஜனவரி 1-ந் தேதி அன்று 18 வயது பூர்த்தியாகி உள்ள புதிய வாக்காளர்களை இப்பட்டியலில் அவசியம் சேர்க்கவேண்டும். புதியதாக பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6, ஆதார் விபரம் சேர்ப்பதற்கு 6பி, பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம் 7, எழுத்துப்பிழை, முகவரி மாற்றம் செய்தல் மற்றும் புதிய வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கு படிவம் 8 பூர்த்தி செய்து வரும் டிசம்பர் 8-ந் தேதி வரை வாக்குச்சாவடி மையங்கள் அல்லது வாக்காளர் சேர்ப்பிற்கான தாசில்தார் அலுவலகத்தில் வழங்கலாம்.

    மேலும் ஒவ்வொரு வாக்குச்சாவடி வாரியாக புதிய வாக்காளர் சேர்த்தல், இடம் மாறுதல், நீக்கம் செய்தல் போன்ற பணிகளை செய்வதற்கு தேர்தல் ஆணையம் நவம்பர் 12, 13 மற்றும் 26, 27 ஆகிய 4 நாட்கள் சிறப்பு முகாம்களை நடத்துகிறது.

    இந்த சிறப்பு முகாம்களை நாம் தவறாமல் பயன்படுத்தி வாக்காளர் சேர்ப்பு மற்றும் இதர பணிகளில் மாநகர் மாவட்ட நிர்வாகிகள், அணி அமைப்பாளர்கள், நிர்வாகிகள், வார்டு, வட்ட செயலாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆகியோர் இணைந்து இப்பணியை சிறப்பாக மேற்கொள்ளவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    இதில் மாவட்ட கழக பொருளாளர் விஜயன், பகுதி செயலாளர்கள் சின்னதுரை, நாராயணமூர்த்தி, தங்க முத்து, வல்லரசுதுரை, ராஜா முகமது, மாவட்ட நிர்வாகிகள் சின்னதுரை, செல்வம், சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட பொறுப்பாளர்களையும் அறிவித்தார்.
    • விஜயலட்சுமி, கொண்டம்மாள், ஏ.ஆர். மணிவண்ணன், கார்த்திக், சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    உடுமலை:

    திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ.க. சிறுபான்மையினர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் உடுமலை குட்டைதிடலில் உள்ள நமதுபிளாசா கலையரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறுபான்மை மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். உடுமலை நகர பா.ஜ.க. தலைவர் கண்ணாயிரம் வரவேற்று பேசினார். மாவட்ட பொதுச்செயலாளர் வடுகநாதன் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹீம் கலந்து கொண்டு ஆேலாசனை வழங்கினார். மாவட்ட பொறுப்பாளர்களையும் அறிவித்தார்.

    கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினரும், உடுமலை மண்டல பார்வையாளருமான ஜோதீஸ்வரி கந்தசாமி, மாநில துணை தலைவர் பிஜூ, மாநில செயலாளர் ஜோசன், மாநில செயற்குழு உறுப்பினர் எட்வர்டு, மாவட்ட பார்வையாளர் சிவா, உடுமலை மண்டல் சிறுபான்மை அணி தலைவர் அமீர், நாகமாணிக்கம், தெய்வக்குமார், உமா குப்புசாமி, ஜோதிடர் முருகேசன், பாப்புலர் ரவி, தம்பிதுைர, பழனிசாமி, திருஞானம், செல்வராஜ், செல்வி, பால தண்டபாணி, கண்ணப்பன், விஜயலட்சுமி, கொண்டம்மாள், ஏ.ஆர். மணிவண்ணன், கார்த்திக், சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூைஜக்காக நேற்று மாலை நடைதிறக்கப்பட்டது.
    • பக்தர்களுக்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் குறித்து தேனி, இடுக்கி மாவட்ட போலீசார் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் தேக்கடியில் நடைபெற்றது.

    கூடலூர்:

    கேரளமாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்ககான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் பக்தர்கள் வருகை குறைந்தது.

    இந்த ஆண்டு மீண்டும் பக்தர்கள் வழக்கமாக உற்சாகத்துடன் மாலை அணிந்து தங்கள் விரதத்தை தொடங்கியுள்ளனர். மண்டல மற்றும் மகரவிளக்கு பூைஜக்காக நேற்று மாலை நடைதிறக்கப்பட்டது. இதனிடையே பக்தர்களுக்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இருமாநில போலீசார் ஆலோசனை மேற்கொண்டனர்.

    பல்வேறு மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு வரும் பக்தர்கள் குமுளி, கம்பம் மெட்டு வழியாக வருகின்றனர். எனவே அப்பகுதியில் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் குறித்து தேனி, இடுக்கி மாவட்ட போலீசார் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் தேக்கடியில் நடைபெற்றது.

    சபரிமலைக்கு வரும் பக்தர்கள் சிரமமின்றி பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளவும், போக்குவரத்து இடையூறு இல்லாமல் சென்று திரும்பவும், கம்பத்தில் இருந்து கம்பம்மெட்டு வழி ஒருவழிப்பாதை அமல்படுத்துவது குறித்தும், குமுளியில் சாலைஓரங்களில் வாகனங்களை நிறுத்தி பயணிகளை இறக்கிவிடுவதை தவிர்ப்பதற்கான தீர்வு குறித்தும், அவசர மருத்துவ முகாம்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    தேனி மாவட்ட எஸ்.பி பிரவீன்உமேஷ் டோங்கரே, உத்தமபாளையம் ஏ.எஸ்.பி மதுகுமாரி, கூடலூர் இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டியன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செந்தாமரைக்கண்ணன், கேரளா சார்பாக இடுக்கி மாவட்ட எஸ்.பி சூர்யபோஸ், ஏ.எஸ்.பி கனிஸ்பாபு மற்றும் இருமாநில வருவாய்த்துறையினர், மருத்துவத்துறையினர், குமுளி பஞ்சாயத்து அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் அவர்கள் தெரிவிக்கையில்,

    சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு செய்யப்படவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் தற்போது நடைபெற்றுள்ளது. பக்தர்கள் வைக்கும் கோரிக்கையை ஏற்று அடுத்த கூட்டம் டிசம்பர் 3-ந்தேதி நடைபெறும் என்று தெரிவித்தனர்.

    • கூட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய அவைத் தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார்.
    • நடராஜ், தியாகராஜன், மற்றும் திமுக ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    நாடாளுமன்றத் தேர்தல் வரும் 2024ம் ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில் தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.இந்த நிலையில் தேர்தல் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என கடந்த மாதம் 9 ந்தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில்தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார். இதை தொடர்ந்து டிசம்பர் மாதத்திற்குள் பூத் கமிட்டி அமைக்கும் பணியை முடிக்க வேண்டும் என தி.மு.க. தலைமை சார்பில் மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இதன்படி பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. பூத் கமிட்டி மற்றும் கிளை கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய அவைத் தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தார். இதில் திருப்பூர் வடக்கு மாவட்ட அவைத்தலைவர் நடராஜன், பொருளாளர் சாமிநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் சரவண நம்பி ஆகியோர் கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கி பேசினர். இந்த கூட்டத்தில் பல்லடம் ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, துணை தலைவர் பாலசுப்பிரமணியம், திமுக கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர்கள் சிவக்குமார், முருகன்,கதிஜா பானு, பொருளாளர் கந்தசாமி, மாவட்ட பிரதிநிதிகள் சின்னப்பன், நடராஜ், தியாகராஜன், மற்றும் திமுக ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×