என் மலர்
நீங்கள் தேடியது "கறிக்கோழி"
- நாமக்கல் மண்டலத்தில் சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
- தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
சேலம்:
நாமக்கல் மண்டலத்தில் சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
சத்துணவு திட்டத்திற்கு தவிர மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலம் தினசரி விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.
கடந்த 1-ந் தேதி ஒரு முட்டையின் விலை ரூ.4.10 ஆக இருந்தது. 3-ந் தேதி 10 பைசா உயர்த்தப்பட்டு ரூ.4.20 ஆனது. நேற்று மாலை நடைபெற்ற என்.இ.சி.சி கூட்டத்தில் முட்டை விலை மீண்டும் 10 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.30 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த விலை இன்று காலை முதல் அமுலுக்கு வந்தது.
நாமக்கல் மண்டலத்தில் நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், பல்லடம், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயிக்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்று கறிக்கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பல்லடத்தில் நடந்தது. இதில் கறிக்கோழி உற்பத்தி மற்றும் தேவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் கறிக்கோழி விலையை கிலோவுக்கு ரூ.15 குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரூ.105 ஆக இருந்த கறிக்கோழி விலை ரூ.90 ஆக குறைந்தது. முட்டைக்கோழி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிலோ ரூ.78 ஆக நீடிக்கிறது.
- நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி.) முட்டை விலையை அறிவித்து வருகிறது.
- கறி கோழி விலையை கிலோவுக்கு 2 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி.) முட்டை விலையை அறிவித்து வருகிறது. கடந்த 6-ந் தேதி ஒரு முட்டை விலை ரூ.4.35 ஆக இருந்த நிலையில் இன்று நடைபெற்ற என்.இ.சி.சி. கூட்டத்தில் 10 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் ரூ.4.45 ஆக நிர்ணயிக்கப்பட்டது.இதேபோல் நாமக்கல் மண்டலத்தில் 25 லட்சத்திற்கும் மேலான கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.அதன்படி பல்லடத்தில் இன்று நடந்த கூட்டத்தில் கறி கோழி விலையை கிலோவுக்கு 2 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரூ.103 ஆக இருந்த ஒரு கிலோ ரூ.105 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.83 ஆக உள்ளது.
- தமிழகத்தில் எசுமார் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன.
- கடந்த 7-ந் தேதி ஒரு கிலோ கறிக்கோழி கொள்முதல் விலை ரூ.99 (உயிருடன்) ஆக இருந்தது.
கோவை,
உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். கோயம்புத்தூர் பொள்ளாச்சி கறிக்கோழி கொள்முதல் விலை தொடர்ந்து உயர்ந்து, கிலோ ரூ.112-க்கு விற்பனை செய்யப்படுவதால், உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
தமிழகத்தில் பல்லடம், சுல்தான்பேட்டை, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, ஈரோடு, நாமக்கல் உள்பட பல்வேறு இடங்களில் சுமார் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளில் தினமும் சராசரியாக 2 கிலோ எடை உள்ள 15 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கேரளா கர்நாடகா, புதுச்சேரி போன்ற மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு(பி.சி.சி.) சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது.தற்போது ஒரு கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்ய உற்பத்தியாளர்களுக்கு சராசரியாக ரூ.95 வரை செலவாகிறது.
இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி ஒரு கிலோ கறிக்கோழி கொள்முதல் விலை ரூ.99 (உயிருடன்) ஆக இருந்தது. 8-ந் தேதி ரூ.101, 10-ந் தேதி ரூ105, 11-ந்தேதி ரூ.107, நேற்று முன்தினம் ரூ.112 என கொள்முதல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
ஒரு வாரத்தில் நுகர்வு அதிகரித்து கறிக்கோழி கொள்முதல் விலை கிலோவிற்கு ரூ.13 வரை உயர்ந்து உள்ளதால், தற்போது கிலோவிற்கு ரூ.18 வரை கறிக்கோழி உற்பத்தியாளர்களுக்கு லாபம் கிடைக்கிறது. இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ கறிக்கோழி இறைச்சி ரூ.200 முதல் ரூ.220 வரை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது ஆடி மாதம் முடிவடைய உள்ளதால் நுகர்வு இன்னும் அதிகரித்து, விலை மேலும் உயரும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
- 25 லட்சத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
- இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
சேலம்:
நாமக்கல் மண்டலத்திற்கு உட்பட்ட நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், பல்லடம், கரூர் உள்பட பல பகுதிகளில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் புரட்டாசி மாதம் பிறந்துள்ளதால் ஏராளமானோர் விரதம் இருந்து வருகிறார்கள். இதனால் கறிக்கோழி தேவை குறைந்து வருவதால் அதன் விலை படிப்படியாக சரிந்து வருகிறது.
10 நாட்களுக்கு முன்பு கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை 114 ரூபாயாக இருந்த நிலையில் படிப்படியாக சரிந்து 5 நாட்களுக்கு முன்பு 106 ரூபாயாக குறைந்தது.
இந்த நிலையில் பல்லடத்தில் இன்று நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் கறிக்கோழி விலையை மேலும் கிலோவுக்கு 9 ரூபாய் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 106 ரூபாயாக இருந்த கறிக்கோழி விலை 97 ரூபாயாக குறைந்தது.
இனிவரும் நாட்களில் கறிக்கோழி விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக கோழி பண்ணை சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
- நாமக்கல், சேலம், திருப்பூர், ஈரோடு, பல்லடம் உட்பட பல பகுதிகளில் 25 லட்சத்திற்கும் அதிகமான கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
- புரட்டாசி மாதம் என்பதால் கறிக்கோழி விலை படிப்படியாக சரிந்து கடந்த வாரம் 97 ரூபாய்க்கு விற்பனையானது.
சேலம்:
நாமக்கல் மண்டலத்துக்கு உட்பட்ட நாமக்கல், சேலம், திருப்பூர், ஈரோடு, பல்லடம் உட்பட பல பகுதிகளில் 25 லட்சத்திற்கும் அதிகமான கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் புரட்டாசி மாதம் என்பதால் கறிக்கோழி விலை படிப்படியாக சரிந்து கடந்த வாரம் 97 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால் விலை மேலும் சரியும் என அசைவ பிரியர்கள் காத்திருந்தனர். ஆனால் அதற்கு மாறாக கறிக்கோழி விலை உயரத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக கறிக்கோழி விலை படிப்படியாக உயர்ந்து நேற்று 106 ரூபாய்க்கு விற்பனையானது.
இதைத் தொடர்ந்து இன்று கறிக்கோழி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் பல்லடத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் கறிக்கோழி உற்பத்தி, தேவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் கறிக்கோழி கிலோவுக்கு மேலும் 2 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நாமக்கல் மண்டலத்தில் 106 ரூபாயாக இருந்த கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை மேலும் 2 ரூபாய் அதிகரித்து 108 ரூபாயாக உயர்ந்தது. கறிக்கோழி விலை மீண்டும் உயர தொடங்கியுள்ளதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன.
- பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினர் தினசரி நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
கறிக்கோழி நுகர்வை பொருத்து இதன் விற்பனை விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினர் தினசரி நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர். இந்த நிலையில் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக கறிக்கோழிகளை அனுப்ப முடியாத நிலை உள்ளதாலும், சபரிமலை சீசன் காரணமாக கறிக்கோழி நுகர்வு குறைவினாலும் கறிக்கோழி கொள்முதல் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் கறிக்கோழி கொள்முதல் விலை 100 ரூபாயாக இருந்த நிலையில் நேற்று 72 ரூபாயாக விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கறிக்கோழி உற்பத்தி செய்ய ஒரு கிலோவிற்கு ரூ.80 முதல், ரூ.90 வரை செலவாகும் நிலையில், இந்த விலை வீழ்ச்சியால் பண்ணையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
- கறிக்கோழிகள் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டதால் விலை உயர்ந்துள்ளது.
சேலம்:
நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, திருப்பூர் கோவை உள்பட நாமக்கல் மண்டலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட கறிக்கோழிப்பண்ணைகள் உள்ளன. இந்த கோழிப்பண்ணைகள் மூலம் தினசரி 30 லட்சத்திற்கும் அதிகமாக கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்தநிலையில் கறிக்கோழி விலை படிப்படியாக உயர்ந்து பண்ணை கொள்முதல் விலை ஒரு கிலோ 147 ரூபாயாக தற்போது உயர்ந்துள்ளது . இதனால் சேலம், நாமக்கல் மாவட்ட கறிக்கோழி விற்பனை சில்லரை கடைகளில் ஒரு கிலோ கறிக்கோழி 260 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தேவையை விட குறைந்த அளவே பொதுமக்கள் இறைச்சி வாங்கி செல்கிறார்கள்.
இந்த விலை உயர்வு குறித்து கறிக்கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறுகையில், தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் கடந்த மாதம் வீசிய வெப்ப அலையால் அதிக அளவில் கறிக்கோழிகள் இறந்தன. இதனால் கறிக்கோழிகள் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டதால் விலை உயர்ந்துள்ளது. விரைவில் உற்பத்தி அதிகரித்து விலை குறையும் என்றனர்.
இதனிடையே 520 காசுகளாக இருந்த முட்டை விலை நேற்று நாமக்கல்லில் நடந்த கூட்டத்தில் 5 காசுகள் உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ.5.25 ஆக நிர்ணயிக்கப்பட்டது. சில்லரை கடைகளில் 650 காசுகளுக்கு விற்கப்படுகிறது. முட்டைக்கோழி விலை ஒரு கிலோ ரூ. 98 ஆக தென்னிந்திய கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் (சிகா) நிர்ணயித்துள்ளது.
- பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன.
- பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினர் தினசரி நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
கறிக்கோழி நுகர்வை பொறுத்து அதன் விற்பனை விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினர் தினசரி நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர்.
இந்நிலையில் வட மாநிலங்களில் சராவன் விரதம் தொடங்கி உள்ளது. அதுமட்டுமல்ல பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக கறிக்கோழிகளை அனுப்ப முடியாத நிலை உள்ளதால் நுகர்வு குறைந்து கறிக்கோழி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 26-ந் தேதி கறிக்கோழி ஒரு கிலோ கொள்முதல் விலை 104 ரூபாயாக இருந்தநிலையில் இன்று 74 ரூபாயாக விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கறிக்கோழி உற்பத்திசெய்ய ஒரு கிலோவிற்கு ரூ.80 முதல் ரூ. 90 வரை செலவாகும் நிலையில் விலை வீழ்ச்சியால் பண்ணையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- புரட்டாசி மாதம் பிறந்துள்ளதால் பெரும்பாலான மக்கள் அசைவத்தை தவிர்த்துள்ளனர்.
- ஆடு, கறிக்கோழி இறைச்சி கடைகளில் விற்பனை பெருமளவில் சரிந்துள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் 1100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் 6 கோடிக்கும் மேல் முட்டையிடும் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
இதன்மூலம் நாள் ஒன்றுக்கு 4 கோடியே 50 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைக்கான விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்கிறது. பொதுவாக தட்பவெட்ப நிலை, பண்டிகை காலங்களின் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இதே போல தமிழகத்தில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை, பல்லடம் ஆகிய மாவட்டங்களில் 25 ஆயிரம் கறிக்கோழிப் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பண்ணைகள் மூலம் தினமும் சராசரியாக தலா 2 கிலோ எடை கொண்ட 15 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
குறிப்பாக பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மா நிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
கறிக்கோழி நுகர்வை பொறுத்து இதன் கொள்முதல் விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினர் (பிசிசி) தினசரி நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர்.
இந்த நிலையில் புரட்டாசி மாதம் பிறந்துள்ளதால் பெரும்பாலான மக்கள் அசைவத்தை தவிர்த்துள்ளனர். இதனால் ஆடு, கறிக்கோழி இறைச்சி கடைகளில் விற்பனை பெருமளவில் சரிந்துள்ளது.
மேலும் விலையும் படிப்பாடியாக சரிந்து வந்தது. இதனால் கறிக்கோழி விலை மேலும் சரியும் என்று பொது மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு மாறாக விலை உயர்ந்து வருகிறது .
புரட்டாசி மாதம் என்பதால் கறிக்கோழி உற்பத்தியை பண்ணையாளர்கள் குறைத்தனர். இதனால் கறிக்கோழி தட்டுப்பாடு ஏற்பட்டது . இதையடுத்து கறிக்கோழி விலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் கறிக்கோழி பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி பண்ணை கொள்முதல் மொத்த விலை கடந்த வாரம் (உயிருடன்) ஒரு கிலோ ரூ.86 ஆக இருந்த நிலையில் தற்போது 6 ரூபாய் உயர்ந்து ரூ.92 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சில்லரை விற்பனை கடைகளில் கறிக்கோழி ஒரு கிலோ கடந்த வாரம் 180 ரூபாய்க்கு விற்ற நிலையில் தற்போது 200 ரூபாயாக உயர்ந்துள்ளது. உற்பத்தி குறைந்ததால் விலை உயர்ந்ததாக கறிக்கோழி வியாபாரிகள் தெரிவித்தனர்.
நாமக்கல் மண்டலத்தில் கடந்த வாரம் 4.30 காசுக்கு விற்பனையான முட்டை விலை தற்போது மேலும் 20 காசுகள் குறைந்து 4.10 காசுக்கு விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.
- கறிக்கோழி விலை குறைந்துள்ள நிலையில் அதிக அளவில் தேக்கம் அடைய தொடங்கி உள்ளது.
- இனி வரும் நாட்களில் கறிக்கோழி விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதால் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் 1100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் 6 கோடிக்கும் மேல் முட்டையிடும் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
இதன்மூலம் நாள் ஒன்றுக்கு 4 கோடியே 50 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைக்கான விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்கிறது. பொதுவாக தட்பவெட்ப நிலை, பண்டிகை காலங்களின் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இதே போல தமிழகத்தில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை, பல்லடம் ஆகிய மாவட்டங்களில் 25 ஆயிரம் கறிக்கோழிப் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பண்ணைகள் மூலம் தினமும் சராசரியாக தலா 2 கிலோ எடை கொண்ட 15 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
குறிப்பாக பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மா நிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
கறிக்கோழி நுகர்வை பொருத்து இதன் கொள்முதல் விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினர் (பிசிசி) தினசரி நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர்.
இந்த நிலையில் புரட்டாசி மாதம் பிறந்துள்ளதால் பெரும்பாலான மக்கள் அசைவத்தை தவிர்த்துள்ளனர். இதனால் ஆடு, கறிக்கோழி இறைச்சி கடைகளில் விற்பனை பாதியாக சரிந்துள்ளது. இதனால் கறிக்கோழி விலை சரிய தொடங்கி உள்ளது. இனி வரும் நாட்களில் விலை மேலும் சரிய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
நாமக்கல் மண்டலத்தில் உயிருடன் ஒரு கிலோ கறிக்கோழி கடந்த வாரம் பண்ணைகொள்முதல் விலை 130 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது ஒரு கிலோவுக்கு 26 ரூபாய் குறைந்து 104 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு 4.50-க்கு விற்ற ஒரு முட்டைவிலை படிப்படியாக குறைந்து தற்போது 4.30 ஆக குறைந்துள்ளது. முட்டைகள் வடமாநிலங்களுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுவதால் அதன் விலை பெருமளவில் குறையவில்லை என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.
கறிக்கோழி விலை குறைந்துள்ள நிலையில் அதிக அளவில் தேக்கம் அடைய தொடங்கி உள்ளது. இதனால் இனி வரும் நாட்களில் கறிக்கோழி விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதால் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
- தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
- கன மழையின் காரணமாக கறிக்கோழிகளை அனுப்ப முடியாத நிலை உள்ளது.
பல்லடம் :
பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா,ஆந்திரா,கர்நாடகா, உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது, கறிக்கோழி நுகர்வை பொறுத்து இதன் விற்பனை விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினர் தினசரி நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர்.
இந்த நிலையில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக கறிக்கோழிகளை அனுப்ப முடியாத நிலை உள்ளதால் நுகர்வு குறைந்து கறிக்கோழிகள் தேக்கமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கறிக்கோழி நுகர்வு குறைவானதால் அதன் விலையும் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த 9-ந் தேதி கறிக்கோழி 1கிலோ கொள்முதல் விலை100 ரூபாயாக இருந்த நிலையில் நேற்று 66 ரூபாயாக விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கறிக்கோழி உற்பத்திசெய்ய ஒரு கிலோவிற்கு ரூ.80 முதல் ரூ. 90 வரை செலவாகும் நிலையில், இந்த கடும் விலை வீழ்ச்சியால் பண்ணையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோடை வெப்பம் காரணமாக கறிக்கோழி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. சென்னையில் நேற்று கறிக்கோழி விலை 1 கிலோ ரூ.240-க்கு விற்கப்பட்டது. கடந்த மாதம் கறிக்கோழி கிலோ ரூ.160-க்கு விற்கப்பட்டது.
கடந்தவாரம் ரூ.160 முதல் ரூ.190 வரை விற்கப்பட்டது. நேற்று திடீரென்று ரூ.240 ஆக உயர்ந்தது. அதாவது ஒரே வாரத்தில் கிலோவுக்கு ரூ.50 உயர்ந்துள்ளது. இதனால் நேற்று கறிக்கோழி வாங்கிய வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கறிக்கோழி விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. தற்போது 60 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளதால் மீன்வரத்து குறைந்துவிட்டது. இதனால் பெரும்பாலானவர்கள் கறிக்கோழி வாங்க தொடங்கிவிட்டனர். எனவே கறிக்கோழி விலை உயர்ந்து விட்டதாக கடைக்காரர் ஒருவர் தெரிவித்தார்.
தற்போது கோடைவெயில் அதிகமாக கொளுத்தி வருகிறது. இதனால் கோழிப் பண்ணைகளில் கோழி உற்பத்தி குறைந்துவிட்டது. வெப்பம் தாங்க முடியாமல் பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள் இறப்பும் அதிகரித்து வருகிறது. எனவே கோழிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனாலேயே கறிக்கோழி விலை அதிகரித்து விட்டதாக நாமக்கல்லை சேர்ந்த கோழிப்பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் கோடை அல்லாத காலங்களில் பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள் விரைவில் எடைகூடும். வெயில் காலங்களில் கோழிகள் எடை அதிகரிப்பது தாமதமாகும். இதனால் ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக கோழிப்பண்ணைகளில் கடந்த 2 வாரத்தில் கிலோவுக்கு விலை ரூ.16 முதல் ரூ.19 வரை அதிகரித்திருப்பதாக கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்தனர். தமிழகம் மற்றும் கேரளாவுக்கு விற்பனைக்காக செல்லும் கறிக்கோழிகளுக்கு பிராய்லர் ஒருங்கிணைப்பு கமிட்டி தான் விலையை நிர்ணயிக்கிறது. கோழிகள் உற்பத்தி மற்றும் தட்டுப்பாடு ஆகியவற்றுக்கு ஏற்ப விலை நிர்ணயிக்கப்படுகிறது. கோடைகாலம் முடிந்தபிறகு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் கறிக்கோழி விலை ரூ.50 வரை குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னையை பொறுத்த வரை தற்போது கறிக்கோழி கிலோ ரூ.240-க்கு விற்கப்படுகிறது. எலும்பு இல்லாத கறிக்கோழி கிலோ ரூ.340 முதல் ரூ.360 வரை விற்கப்படுகிறது. கோழிப்பண்ணைகளில் மே-1-ந்தேதி கறிக்கோழி கிலோ ரூ.90-க்கு விற்கப்பட்டது. நேற்று ரூ.109-க்கு விற்கப்பட்டது.
மீன்பிடி தடைகாலம் காரணமாக காசிமேட்டில் சங்கரா மற்றும் கொடுவா மீன் 1 கிலோ ரூ.400 ஆக உயர்ந்துள்ளது. வஞ்சிரமீன் ரூ.750 ஆக உயர்ந்துள்ளது.#tamilnews