என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழக்குபதிவு"

    • 5 செட் இடம் வாங்கி அதில் பிரத்தியங்கராதேவி கோவில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.
    • படுகாயம் அடைந்த திருநங்கை வாசுகி புவனகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் புவன கிரி அருகே பு.மணவெளி கிராமத்தை சேர்ந்தவர் வாசுகி, திருநங்கையான இவர் அந்த பகுதியில் 5 செட் இடம் வாங்கி அதில் பிரத்தியங்கராதேவி கோவில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்கு பூஜை நடத்தி னார். இதனை அறிந்த அந்த கிராமத்தை சேர்ந்த கருணாகரன், சிவகுரு நாதன், கங்கா, சீராலன், முரளி, குமார் உள்ளிட்ட 7 பேர் அங்கு வந்தனர். அப்போது அவர்கள் திரு நங்கையிடம் இந்த பகுதி யில் கோவில் கட்டக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்த னர். இதனால் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் திருநங்கை வாசுகி தாக்கப்பட்டார். படுகாயம் அடைந்த திருநங்கை வாசுகி புவனகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனை அறிந்த ஏராளமான திருநங்கைகள் திரண்டனர். அவர்கள் புவனகிரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். திருநங்கை வாசுகியை தாக்கியவர்கள் மீது நட  வடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவேசம் அடைந்த னர். இது தொடர்பாக போலீ சார் திருநங்கைகளிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இதுதொடர்பாக கருணா கரன், சிவகுருநாதன், கங்கா உள்பட 7 பேர் மீது போலீ சார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை எற்படுத்தியது.

    • இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
    • புகாரின் போரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவியையும், கடத்தலில் ஈடுபட்ட ஆகாஷ் செல்வனையும் தேடி வருகின்றனர்.

    குழித்துறை, அக்.27-

    தக்கலை பனவிளை புல்லாணி விளையை சேர்ந்த வர் ஆகாஷ் செல்வன் (வயது 21). பெயிண்டர். இவர் வழக்கு ஒன்றில் கைதாகி கடந்த ஜூலை மாதம் ஜாமீனில் வெளியே வந்தார்.

    வழக்கு

    இந்நிலையில் இவர் குலசேகரத்தை அடுத்த நாககோடு அருகே குலசேகரம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் போரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவியையும், கடத்தலில் ஈடுபட்ட ஆகாஷ் செல்வனையும் தேடி வருகின்றனர்.

    • போராட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர் .
    • போராட்டத்தில் ஈடுபட்ட சந்திரசேகர் உட்பட 11 பேர் மீது நேசமணி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

    நாகர்கோவில், அக்.27-

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் பேரூராட்சி பணியாளர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர் .போராட்டத்தில் ஈடுபட்ட சந்திரசேகர் உட்பட 11 பேர் மீது நேசமணி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

    • 23-ந்தேதி பிரியதர்ஷினி வீட்டு வாசல் முன்பு பட்டாசு வெடித்து வந்ததாக கூறப்படுகிறது.
    • அருகில் இருந்தவர்கள் அவர்களுக்கு இடையே சமாதானம் செய்து வைத்துள்ளனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் ரமேஷ்குமார் வசித்து வருகிறார். இந்நிலையில் மெல்டில்டா பிரியதர்ஷினி தம்பதியினர் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று கடந்த 23-ந்தேதி பிரியதர்ஷினி வீட்டு வாசல் முன்பு பட்டாசு வெடித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அதே பகுதியில் வசிக்கும் ராதாகிருஷ்ணன், முத்துசாமி, அம்பிகா தேவி, ஜெயலட்சுமி, லோகேஸ்வரன் ஆகியோர் சேர்ந்து பிரியதர்ஷினியை பார்த்து இங்கு பட்டாசு வெடிக்க கூடாது என்று கூறி பிரியதர்ஷினியை தகாத வார்த்தையால் திட்டியதாக தெரிகிற

    து. பின்னர் அருகில் இருந்தவர்கள் அவர்களுக்கு இடையே சமாதானம் செய்து வைத்துள்ளனர். இதனையடுத்து மீண்டும் லோகேஸ்வரன் என்பவர் பிரியதர்ஷினி வீட்டின் மீது பாட்டில் வீசி பிரியதர்ஷினி மீது தாக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியதர்ஷினி சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் சின்னசேலம் போலீசார் 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 26 ஆம் தேதி வீட்டைபூட்டிக்கொண்டு தனது தாய் வீடான கருவாட்சிக்கு சென்றனர்.
    • ரூ68,000 ரொக்க பணம் யாரோ திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.

      விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே உள்ள அன்னியூர் என்ற ஊர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. அவரது மனைவி கவிதா. இவர்கள் கடந்த 26 ஆம் தேதி வீட்டை பூட்டிக் கொண்டு தனது தாய் வீடான கருவாட்சிக்கு சென்றனர். மறுநாள் காலை வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததாம் .உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 2 கிராம் தங்க நகை மற்றும் ரூ62,000 ரொக்கம் ஆகியவைகள் திருடு போய் இருந்தது. இதேபோல் அதே ஊர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன்.

    அவரது மனைவி ஜோதி லட்சுமி. இவர்களும் கடந்த 26-ந் தேதி வீட்டை பூட்டிக்கொண்டு தனது தம்பியை பார்க்க திருச்சிக்கு சென்று விட்டனர் . மறுநாள் காலை அவருக்கு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக வந்த தகவலின் பேரில் வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே பீரோவை உடைத்து அதிலிருந்து 5 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ68,000 ரொக்க பணம் ஆகியவற்றை யாரோ திருடி சென்றிருப்பது தெரிய வந்தது. இந்த 2 சம்பவங்கள் குறித்தும் அவர்கள் தனித்தனியே கஞ்சனூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குகள் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறா ர்கள்.

    • போதையில் இருந்த ராமலிங்கம் நிலை தடுமாறி வீட்டு வாசலில் கீழே விழுந்தார்.
    • ராமலிங்கம் மனைவி முத்தாண்டி குப்பம் போலீசில் புகார் தெரி வித்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே கீழ கொல்லை பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 62) விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளார். மேலும் ராமலிங்கத்திற்கு நீண்ட நாட்களாக குடிப்பழக்கம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் குடித்து விட்டு தன் வீட்டிற்கு வந்தார். அப்போது போதையில் இருந்த ராமலிங்கம் நிலை தடுமாறி வீட்டு வாசலில் கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த அடி ஏற்பட்டது. இதைப் பார்த்த வீட்டிலிருந்தவர்கள் ராம லிங்கத்தை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சை க்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமலிங்கம் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து ராமலிங்கம் மனைவி முத்தாண்டிகுப்பம் போலீசில் புகார் தெரி வித்தார். புகாரின் பேரில் முத்தாண்டிகுப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சுந்தரமூர்த்திக்கு தனது 16 வயது மகளை மீனா திருமணம் செய்துவைத்துள்ளார்.
    • குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு பண்ருட்டி மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் சுபாஷ். இவரது மனைவி மீனா. இவர்களுக்கு 16 வயதில் மகள் உள்ளார். பண்ருட்டி அருகே கவரப்பட்டு ஹவுசிங் போர்டு சுந்தரமூர்த்தி. இவருக்கும்,மீனாவுக்கும் வியாபாரம் தொடர்பாக பழக்கம் ஏற்பட்டது. எனவே சுந்தரமூர்த்திக்கு தனது 16 வயது மகளை மீனா திருமணம் செய்துவைத்துள்ளார். இது பற்றி சமூக நலத்துறை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து சமூக நலத்துறை சார்பில் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு பண்ருட்டி மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. ஊர்நல அலுவலர் ராணி கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி மகளிர் போலீசார் மாமியார் மீனா, மருமகன் சுந்தரமூர்த்திஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி சுபஸ்ரீ மகளிர் காப்பகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.  

    • அலெக்ஸ் தலைமையில் சின்னசேலம் பகுதியில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
    • கடையில் இருந்த 7 ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் போலீஸ் நிலையத்திற்கு அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் ரகசியமாக விற்று வருவதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் தலைமையில் சின்னசேலம் பகுதியில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்பொழுது அமைய கரம் அருகே உள்ள தென் பொன் பரப்பி பகுதியில் உள்ள மளிகை கடையில் போலீ சார் சோதனை மேற் கொண்டனர். அப்போது ஹான்ஸ் பாக்கெட்டு கள் இருப்பது தெரிய வந்தது.

    பின்னர் கடையில் இருந்த 7 ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். அதே போல் வாசுதேவனூர் கிரா மத்தில் உள்ள ஈஸ்வரன் மளிகை கடையில் சோதனை செய்தபோது 7ஹான்ஸ் பாக்கெட் இருப்பது தெரிய வந்தது. பின்னர் கோவிந்த ராஜ், ஈஸ்வரன் ஆகி யோர் மீது சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தோழிகள் இருவரும் மனக்குப்பத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்றாக படித்து வருகின்றனர்.
    • உனது மகளால் தான் எனது மகள் காணாமல் போய்விட்டார் என்றுகூறி அவரை தாக்கியுள்ளனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள பூசாரி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மகள் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சிவபாலன் மகளும் தோழிகள். இருவரும் மனக்குப்பத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்றாக படித்து வருகின்றனர். இந்நிலையில் சிவபாலன் மகள் அடிக்கடி வீட்டில் இருப்பவர் திடீரென்று காணாமல் போய் விட்டு திரும்ப வீட்டுக்கு வந்து விடுவார். கடந்த 26-ந் தேதி வீட்டில் இருந்த சிவபாலன் மகள் திடீரென காணாமல் போய்விட்டார். அவர் வீட்டில் இருந்த பெற்றோர் எல்லா இடத்திலும் தேடிப் பார்த்தனர் ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    ஆத்திரமடைந்த சிவபாலன் , அவரது மனைவி ராதா,உறவினர்கள் ரங்கசாமி, கலியம்மாள் ஆகிய 4 பேரும் சேர்ந்து சிவலிங்கம் வீட்டிற்கு சென்று சிவலிங்கம் மனைவி மகாலட்சுமியிடம் உனது மகளால் தான் எனது மகள் காணாமல் போய்விட்டார் என்றுகூறி அவரை தாக்கியுள்ளனர். படுகாயம் அடைந்த மகாலட்சுமி திருக்கோ விலூர் அரசு ஆஸ்ப த்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். மேலும் மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் பழனி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • 28-ந் தேதி காடாம்புலியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது.
    • மகளிர் காப்பகத்திற்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர் :

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மேல்மாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜ்மோகன் (வயது25), இவருக்கும் புதுப்பாளையத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த 28-ந் தேதி காடாம்புலியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது. பெற்றோர்கள் பாலு கருணாநிதி, ராஜ்மோகன் ஆகியோர் மீது குழந்தை திருமணம் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு சமூக நல அலுவலர் தனபாக்கியம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனை தொடர்ந்து மகளிர் போலீசார் 3பேர் மீது வழக்கு பதிந்து சிறுமியை கடலூரில் உள்ள மகளிர் காப்பகத்திற்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ேமாட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் காமாட்சி கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்தனர்.
    • மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பம் ஜி.பி. நகரை சேர்ந்தவர் ரேணுகோபால். அவரது மனைவி காமாட்சி. இவர்கள் சம்பத்தன்று சென்னை சென்று வீட்டுக்கு வந்தனர். அப்போது ேமாட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் காமாட்சி கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்தனர். அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சல் போட்டார். ஆனால் மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குபதிந்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். 

    • கலைநல்லூர் சாலையில் சென்ற போது குமார் மோட்டார் சைக்கிளை தாறுமாறாக ஓட்டியதாக கூறப்படுகிறது.
    • தியாகதுருகம் போலீசார் குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே கலையநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாசாமி (வயது 80) கூலித் தொழிலாளி, இவர் நேற்று முன்தினம் தியாகதுருகம் வாரச்சந்தைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்குச் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த பீளமேடு பகுதியைச் சேர்ந்த குமார் (வயது40) என்பவர் அவரது மோட்டார் சைக்கிளில் பின்னால் ஏற்றிக்கொண்டு சென்றார். அப்போது கலைநல்லூர் சாலையில் சென்ற போது குமார் மோட்டார் சைக்கிளை தாறுமாறாக ஓட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் அய்யாசாமி மற்றும் குமார் ஆகியோர் சாலையில் கீழே விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த அய்யாசாமி சம்பவ இடத்தில் இறந்து போனார். குமார் லேசான காயம் அடைந்தார். அக்கம், பக்கத்தினர் இவர்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×