என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சமையல்"
- சிறிது இட்லி மாவு சேர்த்தால் பஜ்ஜி உப்பி வரும், உடலுக்கு கெடுதல் கிடையாது.
- காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சு தோல்களை அலமாரிகளில் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.
* இட்லி கல் மாதிரி இருப்பதாக தெரிந்தால், நான்கு பச்சை அப்பளத்தை தண்ணீரில் நனைத்து பின் மிக்சியில் அரைத்து எடுத்து வேக வைக்கும் இட்லி மாவில் சேர்த்து அவித்தால் இட்லி பூ போல வரும்.
* ஒரு வெண்டைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, நீரில் போட்டு இரவு முழுவதும் வைத்திருக்கவும். மறுநாள் காலை அந்த நீரை சப்பாத்தி செய்யும் மாவில் கலந்தால், சப்பாத்தி மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.
* பஜ்ஜி போடும்போது உப்பி வர சமையல் சோடா சேர்க்க வேண்டாம். சிறிது இட்லி மாவு சேர்த்தால் பஜ்ஜி உப்பி வரும், உடலுக்கு கெடுதல் கிடையாது.
* தேங்காய் துருவி அதை கொதி நீரில் போட்டு வைத்துவிட்டு பிறகு கை பொறுக்கும் சூட்டில் எடுத்து பிசைந்தால் நல்ல கெட்டியான தேங்காய் பால் கிடைக்கும்.
* காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சு தோல்களை அலமாரிகளில் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.
* முருங்கை கீரை சமைக்கும்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்து சமைத்தால் முருங்கை இலைகள் ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்கும்.
* பொரித்த அப்பளத்தை நொறுக்கி இரண்டு டீஸ்பூன் துருவிய தேங்காய், கருவேப்பிலை, புளி, ஒன்று அல்லது இரண்டு பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்சியில் அரையுங்கள். அசத்தலான அப்பள துவையல் ரெடி!
* உங்கள் வீட்டில் ஜவ்வரிசி பயன்பாடு இல்லாமல் இருந்தால் அதை கொண்டு சூப்பராக உடனடி ஸ்நாக்ஸ் செய்யலாம். அதற்கு ஜவ்வரிசியை கடாயில் வறுத்து உப்பு, காரம் தேவையான அளவு சேர்த்துக் கொண்டால் போதும். சுவையான காராப்பூந்தி தயார். மேலும் ருசி கூட்ட கருவேப்பிலை, இடித்த பூண்டுவை எண்ணெய்யில் பொரித்து அதனுடன் சேர்த்தால் அருமையாக இருக்கும்.
- கொழுப்பு பதார்த்தங்களை சாப்பிட்ட பின்பு வெங்காயம் சாப்பிட்டால் கொழுப்பு உடலில் தங்காது.
- பாலை லேசாக சூடு படுத்தி அரை ஸ்பூன் சர்க்கரை கரைத்து உறை ஊற்றினால் தயிர் கெட்டியாக கிடைக்கும்.
கார அடைக்கு பச்சரிசி சேர்ப்பது போல, கோதுமை ரவையை மற்ற பருப்புகளுடன் ஊற வைத்து அரைத்து வார்த்தால், அடை மிருதுவாகவும், ருசியாகவும் இருக்கும்.
கேசரி செய்யும்போது நீரின் அளவைக்குறைத்து பால் கலந்து செய்தால், நல்ல மணத்துடன் இருக்கும். அதில் பேரீச்சை, அன்னாசி பழங்களையும் வெட்டிப்போட்டு பழக்கேசரி செய்தால் சுவையும், சத்தும் கூடும்.
தேநீர் டிகாஷனில் எலுமிச்சை சாறு, பனங்கற்கண்டு, ஏலக்காய் சேர்த்து குடித்தால் மணமாக இருக்கும். வாயுத்தொல்லை நீங்கும்.
நாள்பட்ட உளுந்தில் இட்லி, வடைக்கு அரைக்கும்போது மாவு பொங்கி வராது. பிரிட்ஜில் உளுந்தை வைத்து தேவைப்பட்டபோது பயன்படுத்தினால், உளுந்து நன்றாக பொங்கிவரும்.
புதுப்புளி விறைப்பாக இருக்கும். உருட்டி கல் உப்பு ஜாடியில் போட்டு வைத்தால், மிருதுவாகிவிடும், புளியை கரைப்பது எளிதாக இருக்கும்.
கொழுப்பு பதார்த்தங்களை சாப்பிட்ட பின்பு வெங்காயம் சாப்பிட்டால் கொழுப்பு உடலில் தங்காது.
அகத்திக்கீரைக்கு தண்ணீர் அதிகம் ஊற்றி, பச்சை நிறம் மாற சமைக்க வேண்டும். முருங்கைக்கீரையை நிறம் மாறும் முன்பு எடுத்துவிட வேண்டும்.
சீயக்காய் அரைக்கும்போது மற்ற பொருட்களுடன் வேப்பிலையையும் காயவைத்து அரைத்தால் பேன் வராது.
பாலை லேசாக சூடு படுத்தி அரை ஸ்பூன் சர்க்கரை கரைத்து உறை ஊற்றினால் தயிர் கெட்டியாக கிடைக்கும். ருசியும் மேம்படும்.
- புளிக்குழம்பு, ரசம், போன்றவற்றிற்கு புளியை ஊற வைக்கும்போது உப்பையும் சேர்த்து ஊற வைக்க வேண்டும்.
- சோறு குழையாமல் இருக்க, சோறு வடிக்கும் முன்பு கொஞ்சம் நல்லெண்ணெய் அல்லது சிறிது நெய் கலந்து வடிக்க வேண்டும்.
* தோசை மாவுடன் வறுத்த ரவாவை கலந்து சுட தோசை மொறு மொறுப்பாக இருக்கும்.
* வற்றல் மிளகாய், பொட்டுக்கடலை ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு முன்பு தண்ணீரில் கழுவிக்கொள்வது சுகாதாரமானது.
* தாளிக்கும்போது மிளகாய் வற்றல் கருகாமல் இருக்க அதை தண்ணீரில் கழுவி எடுத்துக்கொண்டு கத்தரியால் நறுக்கிக் கொள்ளலாம்.
* புளிக்குழம்பு, ரசம், போன்றவற்றிற்கு புளியை ஊற வைக்கும்போது உப்பையும் சேர்த்து ஊற வைக்க வேண்டும். அப்போது தான் சுவையும் நன்றாக இருக்கும்.
* காய்கறிகள் வாடிப்போய் இருந்தால் தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து காய்கறிகளை சிறிது நேரம் ஊறவிட்டு எடுத்தால் பசுமையாக இருக்கும்.
* சோறு குழைந்து விடாமல் இருக்க, சோறு வடிக்கும் முன்பு கொஞ்சம் நல்லெண்ணெய் அல்லது சிறிது நெய் கலந்து வடிக்க வேண்டும். எலுமிச்சை சாறு சில துளிகள் விட்டும் வடிக்கலாம். சோறு பொல பொலவென்றிருக்கும்.
* இரவே உருளைக்கிழங்கை நறுக்கி வைக்க வேண்டுமா? எலுமிச்சை சாற்றில் கிழங்கு துண்டுகளைப் போட்டு பிரட்டி எடுத்து வைத்தால் கிழங்கு கருத்துப் போகாமல் இருக்கும்.
* முருங்கைக்கீரை தண்ணீர் சாறு வைக்கும்போது அரிசி களைந்த நீரில் அளவான உப்பிட்டு வெங்காயம் அரிந்து போட்டு தண்ணீர் கொதி வந்ததும் கீரையைப் போடவேண்டும். தாளிக்கும்போது மிளகாய் போட்டு சீரகத்தை நுணுக்கிப் போடவேண்டும். கடுகு போட வேண்டாம். நல்ல சுவை கிடைக்கும்.
* சாம்பார் கொதித்த பின்னரே காய்கறிகளை போடவேண்டும். காய்கள் வெந்ததும் புளி கரைசலில் கலந்து அதன்பிறகு தாளிக்கவேண்டும். தாளித்து கொதித்த பின் அரைத்த தேங்காய் விழுதைக் கலந்து கொதிக்கவிட்டு இறக்கினால் சாம்பார் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.
* பச்சை மஞ்சள் கிடைக்கும்போது இரண்டு கிலோ வாங்கி கொதி தண்ணீரில் நன்றாக அவித்து நன்றாக உலர வைத்து சுத்தம் செய்து, மில்லில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் சுத்தமான மஞ்சள் தூள் கிடைக்கும். சமையலில் இந்த மஞ்சள்தூள் நல்ல நிறமாக கண்ணைப் பறிக்கும்.
* அரிசியையும், பருப்பையும் வாசனை வரும் வரை வறுத்து, பின்னர் களைந்து போட்டு பொங்கல் செய்தால் சீக்கிரம் வெந்து விடுவதுடன் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.
- கீரைகள் வாடாமல் இருக்க வேர் பாகத்தை தண்ணீரில் மூழ்கும்படி வைக்க வேண்டும்.
- மீன் கெட்டுப் போனதா, இல்லையா என்று அறிய மீனை தண்ணீரில் போட்டு தெரிந்து கொள்ளலாம்.
சப்பாத்தி மாவுடன் சிறிது வேக வைத்த உருளைக்கிழங்கையும், சிறிதளவு பாலையும் சேர்த்து பிசைந்து தயார் செய்தால் சப்பாத்தி மென்மையாகவும், ருசியாகவும் இருக்கும்.
ஒரு துணியில் ஒருஸ்பூன் அளவு உப்பு முடிந்து மாவில் போட்டுவைத்திருந்தால் மாவில் வண்டு பிடிக்காமல் இருக்கும்.
கொத்தமல்லி தழை, புதினா வாடி விட்டால் அவற்றை தூக்கி எறிந்துவிடாமல் மிக்ஸியில் அரைத்துப்பொடி செய்து காய்கறி வறுவலில் தூவி இறக்கினால் சுவையாகவும், ருசியாகவும் இருக்கும்.
கீரைகள் வாடாமல் இருக்க வேர் பாகத்தை தண்ணீரில் மூழ்கும்படி வைக்க வேண்டும். இலைப்பாகத்தை ஈரத்துணியில் மூடி வைக்கலாம். அப்படி செய்தால் கீரைக்கட்டு வாடாமல் இருக்கும்.
சுண்டல் கெட்டுப்போகாமல் இருக்க கொப்பரைத்தேங்காயைத் துருவி, வதக்கிப் போடவும்.
சாதம் குழைந்து போய் விட்டால் கொஞ்சம் நல்லெண்ணெய் அல்லது நெய்யை ஊற்றி அடுப்பை சிறு தீயில் சிறிது நேரம் வைத்துவிட்டு வடித்தால் சாதம் குழைவாக இல்லாமல் கொஞ்சம் பதமாக இருக்கும்.
மீன் கெட்டுப் போனதா, இல்லையா என்று அறிய மீனை தண்ணீரில் போட்டு தெரிந்து கொள்ளலாம். மீன் தண்ணீருக்குள் மூழ்கினால் கெடவில்லை என்பதை அறியலாம்.
உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்வதற்கு முன்பு உருளைக்கிழங்கை சீவி தண்ணீரில் ஊறப்போட்டு கழுவ வேண்டும். பின்பு மோரில் சிறிதுநேரம் ஊற விட்டு வடித்து எடுத்து பொரித்தால் சிப்ஸ் வெள்ளையாக இருக்கும்.
தக்காளிப் பழங்களை சிறிது உப்பு கரைத்த நீரில் போட்டு வையுங்கள். பழம் கெடாது, சுவையும் மாறாது.
- வடைக்கு மாவு அரைக்கும்போது சிறிது தயிர் விட்டு அரைத்தால் வடை சுவையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
- பொங்கல் செய்யும்போது தண்ணீர் அதிகமாகி விட்டதா! கவலை வேண்டாம்.
* தேங்காய்க்கு மாற்றாக சர்க்கரை வள்ளிக்கிழங்கை கரகரப்பாக அரைத்து குருமாவில் சேர்த்துச் சமைத்தால் குருமா புதுமையான சுவையுடன் இருக்கும்.
* வடைக்கு மாவு அரைக்கும்போது சிறிது தயிர் விட்டு அரைத்தால் வடை சுவையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
* புளியோதரை தயாரிக்கும்போது அதனுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் வறுத்த கடலை மாவை சேர்த்துப் பாருங்கள். புளியோதரை சூப்பர் டேஸ்ட்டாக இருக்கும்.
* பெருங்காயம் கட்டியாகி விட்டதா? அதில் இரண்டு பச்சை மிளகாயைப் போட்டு வையுங்கள். இளகி விடும்.
* தோசை மாவு சற்று புளித்திருந்தால் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி நறுக்கி கடுகு தாளித்துப் போட்டு சுவையான ஊத்தப்பம் தயார் செய்யலாம்.
* சலித்த சப்பாத்தி மாவை வீணாக்காதீர்கள். அடை மாவில் கலந்து சுவையான அடை செய்யலாம்.
* பொங்கல் செய்யும்போது தண்ணீர் அதிகமாகி விட்டதா! கவலை வேண்டாம். அத்துடன் சிறிதளவு ரவையை வறுத்துக் கலந்து விட்டால் கெட்டியாகி விடும்.
* ரசம் தாளிக்கும்போது தண்ணீரில் பெருங்காயம், கறிவேப்பிலையைப் போடாமல் தாளிக்கும் எண்ணெயில் போட்டால் ரசம் நல்ல மணமாகவும் ருசியாகவும் இருக்கும்.
* வெண்டைக்காய் பொரியல் செய்யும்போது வறுத்த வேர்க்கடலையை பொடித்துப் போட்டு வதக்கினால் பொரியல் மிகவும் ருசியாக இருக்கும்.
* இட்லிக்கு சட்னி செய்யும்போது பொட்டுக்கடலை, தேங்காயுடன் வறுத்த வேர்க்கடலையையும் சேர்த்து அரைத்தால் சட்னி மிகவும் ருசியாக இருக்கும்.
* ரவா கேசரி, அல்வா போன்ற இனிப்பு வகைகள் செய்யும்போது கடைசியில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்தால் இனிப்பு திகட்டாது. சுவையாக இருக்கும்.
- பிரஷர் குக்கரை பயன்படுத்தினால் ரிவாயுவும் அதிகமாக விரயமாகாது.
- எரிவாயுவை சிம்மில் வைத்து பயன்படுத்த வேண்டும்.
இன்று பெரும்பாலானோர் சமையல் எரிவாயுவை பயன்படுத்தித்தான் சமையல் செய்கின்றனர். இந்தநிலையில் சில விஷயங்களைப் பின்பற்றினால், எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்த முடியும்..
* சமையல் வேலையை ஆரம்பிப்பதற்கு முன்பு சமையலுக்குத் தேவையான சமையல் பொருட்களை எரிவாயு அடுப்பின் அருகில் வைத்துக்கொள்ள வேண்டும். அடுப்பை எரியவிட்டு ஒவ்வொரு சமையல் பொருளையும் தேடிக் கொண்டிருந்தால் எரிவாயு வீணாகும் என்பதை நினைவில் வைத்திருங்கள்.
* சமையல் வேலைகளுக்கு பிரஷர் குக்கரை பயன்படுத்தினால் ஒரே சமயத்தில் பருப்பையும், அரிசியையும் வேகவைத்து விடலாம். இதனால் எரிவாயுவும் அதிகமாக விரயமாகாது.
* சமையல் பாத்திரங்களில் தண்ணீர் கொதிக்கத் தொடங்கியவுடன் தீப்பிழம்பை குறைத்து வைத்தால் எரிவாயு குறைவாக காலியாகும்.
* உணவுப்பொருட்கள் வேக வைப்பதற்கு அதிக நேரம் தேவை என்றால், எரிவாயு அடுப்பை சிம்மில் வைத்து பயன்படுத்தினால் எரிவாயு அதிகம் காலியாகாது.
அடுப்பு சரியாக எரியவில்லை என்று எரிவாயு வரும் பர்னரை குத்தி குத்தி பெரிது செய்தால், பிழம்பு சிவப்பாக எரியும், எரிவாயுவும் வீனனாகும்.
- கத்தரிக்காயை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- பின்பு அதனுடன் குழம்பு மிளகாய்த்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாசனை போக ஒரு நிமிடம் நன்கு வதக்கவும்.
தேவையான பொருட்கள்:
தட்டைப்பயிறு - 150 கிராம்
கத்திரிக்காய் - 2
சின்ன வெங்காயம் - 15
பூண்டு - 10 பல்
குழம்பு மிளகாய்த்தூள் - 3 ஸ்பூன்
தனி மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
பெருங்காயத்தூள் - கால் ஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு
நல்லெண்ணெய் - 5 ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
தாளிப்பதற்கு - கடுகு வெந்தயம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைப்பதற்கு தேவையான பொருட்கள்
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 2
தேங்காய் நறுக்கியது - ஒரு கைப்பிடி அளவு
செய்முறை:
* தட்டப்பயிறு எட்டு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
* 15 சின்ன வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
* கத்தரிக்காயை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
* ஊறவைத்த தட்டப்பயிறு அதனுடன் மூன்று டம்ளர் தண்ணீர், கால் ஸ்பூன் உப்பு சேர்த்து குக்கரில் மூன்று விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
* கடாய் அடுப்பில் வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மிளகு, சீரகம், சின்ன வெங்காயம் போட்டு சிறிது நேரம் வதக்கி விட்டு இரண்டு சின்ன தக்காளி சேர்த்து அதையும் சிறிது வதக்கி விட்டு இதனுடன் தேங்காயும் சேர்த்து வதக்கி ஆற வைத்துக் கொள்ளவும்.
* இதனுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
* கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், பெருங்காய்த்தூள் போட்டு தாளித்து அதனுடன் பூண்டு ,சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதனுடன் குழம்பு மிளகாய்த்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாசனை போக ஒரு நிமிடம் நன்கு வதக்கவும்.
* இதனுடன் கத்தரிக்காயையும் சேர்த்து நன்கு வதக்கி விட்டு அதனுடன் புளித்தண்ணீர் தட்டைப்பயிறு வேகவைத்த தண்ணீர் சேர்த்து கத்தரிக்காயை வேக வைக்கவும்.
* அரைத்த மசாலா விழுது சேர்த்து அதையும் சிறிது வதக்கி விட்டு 2 டம்ளர் தண்ணீர் குழம்புக்கு தேவையான உப்பு சேர்த்து ஒரு கொதி கொதிக்கவிட்டு அதனுடன் தட்டைப்பயிறு சேர்த்து அதையும் கொதிக்கவிட்டு இறக்கினால் மிகவும் சுவையான தட்டைப்பயிறு குழம்பு ரெடி.
- அடிபிடிக்காமல் நன்கு கிளவிக் கொண்டே இருக்கவும்
- ஆடி மாதம் என்பதால் இந்த பொங்கலை அம்மனுக்கும் படைக்கலாம்.
தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி - 1 கப்
ரவை - 1 கப்
பால் - 2 கப்
வெல்லம் - 2 கப்
நெய் - தேவையான அளவு
முந்திரி - 10
திராட்சை - 15
செய்முறை:
* ஒரு வாணலியில் ரவையை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
* பின்னர் ஜவ்வரிசியை வறுத்து எடுத்துக் கொள்ளவும்
* மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் சிறிது தண்ணீர் ஊறி அதனுடன் வெல்லத்தை சேர்ந்து பாகு எடுத்துக் கொள்ளவும்.
* ஒரு அடி கனமான பாத்திரத்தில் 2 கப் பால் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
* நன்கு கொத்தித்த பாலில் வறுத்து வைத்துள்ள ரவை, ஜவ்வரிசியை சேர்க்கவும்.
* அடிபிடிக்காமல் நன்கு கிளவிக் கொண்டே இருக்கவும்
* ரவை மற்றும் ஜவ்வரிசி கெட்டியான பதம் வந்தவுடன் எடுத்து வைத்த வெல்லப்பாகை அதில் ஊற்றி நன்கு கிளறவும்.
* பொங்கல் பதத்திற்கு வந்தவுடன் இறக்கி வைத்து விடவும்.
* ஒரு தாளிப்பு கரண்டியில் தேவையான அளவு நெய் ஊற்றி அதில் முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து பொறியவிடவும்.
* பொறிந்த முந்திரி திராட்சையை தயாரித்து வைத்துள்ள பொங்கலில் சேர்த்து நன்கு கிளறி, மீண்டும் சிறிது நெய் சேர்த்து கொள்ளவும்.
* இதோ சுவையான ஜவ்வரிசி பொங்கல் ரெடி.
* ஆடி மாதம் என்பதால் இந்த பொங்கலை அம்மனுக்கும் படைக்கலாம்.
- புளியை 20 நிமிடம் ஊறவைத்து கரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
- நாம் பொடி செய்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து இரண்டு நிமிடம் மீண்டும் வதக்கவும்.
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – ½ கிலோ
கடுகு – ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லி விதை – ஒரு ஸ்பூன்
வெந்தயம் – ½ ஸ்பூன்
பெருங்காயத்தூள் – ½ டீஸ்பூன்
புளி – ஒரு பெரிய நெல்லிக்கா அளவு
நல்லெணெய் – மூன்று டேபிள் ஸ்பூன்
கடுகு உளுந்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்
கருவேப்பிலை – இரண்டு கொத்து
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – இரண்டு சிட்டிகை
மிளகாய் தூள் – 1½ டேபிள்ஸ்பூன்
பொடி செய்த வெல்லம் – 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
• சின்ன வெங்காயத்தை நன்கு பொடிதாக நறுக்கி கொள்ளுங்கள்.
• பிறகு ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதை, ஒரு டீஸ்பூன் வெந்தயம், ½ டீஸ்பூன் பெருங்காயம் ஆகியவற்றை வருது பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
• புளியை 20 நிமிடம் ஊறவைத்து கரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
• பிறகு அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் மூன்று ஸ்பூன் நல்லெண்ணெ சேர்த்து சூடுபடுத்தவும்.
• எண்ணெய் சூடானதும் கடுகு உளுந்தம்பருப்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின் அதனுடன் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
• வெங்காயம் நன்கு வதங்கி வந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து இரண்டு சிட்டிகை மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
• பிறகு 1½ டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
• பின் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி நன்றாக கிளறிவிட்டு மூடி போட்டு 5 நிமிடங்கள் வேகவைக்கவும்.
• தண்ணீர் அனைத்தும் வற்றி எண்ணெய் பிரிந்து வரும் பொழுது நாம் பொடி செய்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து இரண்டு நிமிடம் மீண்டும் வதக்கவும்.
• இரண்டு நிமிடம் கழித்து ஓரு ஸ்பூன் இடித்த வெல்லத்தை சேர்த்து கிளறிவிட்டு இரண்டு நிமிடம் வேகவைத்தால் சுவையான வெங்காயம் தொக்கு தயார்.
குறிப்பு: இந்த வெங்காயம் தொக்கு செய்ய சின்ன வெங்காயம் தான் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் பெரிய வெங்காயத்தையும் பயன்படுத்தலாம். மேலும் புளி ஊறவைக்கும் போது தண்ணீர் கொஞ்சமாக ஊற்றி ஊறவைக்கவும். நிறைய ஊற்றிவிட வேண்டாம்.
- ஒரு கரண்டியினை பயன்படுத்தி கத்தரிக்காவை மசித்து கொள்ளுங்கள்.
- தண்ணீரும் சேர்த்து கையை பயன்படுத்தி நன்றாக கரைத்து விடுங்கள்.
தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய்– 1/4 கிலோ
எண்ணெய்- 2 ஸ்பூன்
கடுகு- 1 ஸ்பூன்
பட்ட மிளகாய்- 2
சீரகம்- 1 ஸ்பூன்
பெருங்காய தூள்- 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை- தேவையான அளவு
புளி கரைசல்- 1/2 கப்
வெங்காயம்- 1
பச்சை மிளகாய்- 2
வெல்லம்- 2 ஸ்பூன்
கொத்தமல்லி இலை- சிறிதளவு
செய்முறை:
* முதலில் கத்தரிக்காயின் மேற்பகுதியில் லேசாக எண்ணெய் தடவி கொள்ளுங்கள். அடுத்து, அடுப்பை ஆன் செய்து குறைவான தீயில் வைத்து கத்தரிக்காவை சுட்டு எடுத்து கொள்ளுங்கள்.
* பிறகு, சுட்ட கத்தரிக்காவின் மேல் சிறிதளவு தண்ணீர் தெளித்து அதன் தோலினையும் காம்பினையும் நீக்கி விட்டு ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளுங்கள்.
* இப்போது, ஒரு கரண்டியினை பயன்படுத்தி கத்தரிக்காவை மசித்து கொள்ளுங்கள்.
* நன்றாக மசித்த பிறகு, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
* பிறகு, இதனுடன் நச்சு எடுத்த வெல்லம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
* இந்நிலையில், கரைத்து வைத்த புளி கரைசலை சேர்த்து அதனுடன் 1 கப் அளவிற்கு தண்ணீரும் சேர்த்து கையை பயன்படுத்தி நன்றாக கரைத்து விடுங்கள்.
* இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும், அதில் கடுகு மற்றும் சீரகம் சேர்த்து பொரிய விடுங்கள். பிறகு இரண்டாக நறுக்கிய பட்ட மிளகாய், பெருங்காய தூள் மற்றும் 2 கொத்து கறிவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
* இப்போது வதக்கிய பொருட்களை எடுத்து தயார் செய்து வைத்துள்ள கத்தரிக்காய் ரசத்தில் சேர்த்தால் சுவையான ஆந்திரா ஸ்டைல் கத்தரிக்காய் ரசம் தயார்.
- மாலையில் நன்கு அரைத்து உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
- அனைத்து சட்னிகளுடனும், சாம்பாருடனும் சேர்த்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு - 1 டம்ளர்
பச்சரிசி - 1 1/4 டம்ளர்
புழுங்கல் அரிசி - 1 1/4 டம்ளர்
உளுந்தம்பருப்பு- 3/4 டம்ளர்
வெந்தயம் - 1 ஸ்பூன்
செய்முறை:
• மேற்கூறப்பட்ட பொருட்களை கழுவி ஊறவைக்கவும்.
• மாலையில் நன்கு அரைத்து உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
• காலையில் இட்லி தட்டில் எண்ணெய் தடவி, இட்லி ஊற்றி வேக வைக்கவும்.
• மிருதுவான, சுவையான இரும்புச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து நிறைந்த கேழ்வரகு இட்லி தயார்.
• இது சிறுகுழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது.
• தேங்காய்ச் சட்னி, தக்காளிச் சட்னி, வேர்க்கடலைச் சட்னி என அனைத்து சட்னிகளுடனும், சாம்பாருடனும் சேர்த்து சாப்பிடலாம்.
- நமக்கு ஆரோக்கியமானதா இல்லையா என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
- மக்கள் மத்தியில் சமையலுக்கு ஆலிவ் ஆயில் பயன்படுத்து மோகம் அதிகரித்துள்ளது.
சமையல் எண்ணெய் விஷயத்தில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள். ஆரோக்கியத்தின் மீது அக்கறை உள்ளவர்கள் அனைவரும் சமையலுக்கு குறைந்த கலோரி எண்ணெயை பயன்படுத்துகின்றனர். அந்தவகையில், மக்கள் மத்தியில் சமையலுக்கு ஆலிவ் ஆயில் பயன்படுத்து மோகம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, ஆலிவ் எண்ணெய் சாலட் டிரஸ்ஸிங்கிற்கு பயன்படுத்தப்பட்டது. ஆலிவ் எண்ணெய் நமக்கு ஆரோக்கியமானதா இல்லையா என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
நிபுணர்களின் கூற்றுப்படி, சமையலுக்கு ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல. ஏனெனில், நாம் ஆலிவ் எண்ணெயை சூடாக்கும் போது, அது ஸ்மோக் பாயின்ட்டை விட சூடாகும். இந்நிலையில், ஆலிவ் எண்ணெயின் கலவைகள் தீப்பொறிகளாக உடைகின்றன. இவை ஃப்ரீ ரேடிக்கல்களாக மாறி நம் உடலுக்கு தீங்கு விளைவிக்க ஆரம்பிக்கின்றன.
இந்த தீவிர கலவைகள் உடலில் உள்ள டிஎன்ஏ, லிப்பிடுகள் மற்றும் புரதங்களுடன் வினைபுரியத் தொடங்குகின்றன. இதனால், பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் இருக்கலாம். இதன் காரணமாக, அழற்சி நோய்கள், இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் புற்றுநோய் கூட ஏற்படும் அபாயம் உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்