என் மலர்
நீங்கள் தேடியது "slug 223325"
- இந்தப் புடவைகளில் இருக்கும் டிசைன்களும் வகைகளும் ஏராளம் என்று சொல்லலாம்.
- மகாராஷ்டிர மணப்பெண்களின் பாரம்பரிய புடவை என்று இந்த நவாரி புடவைகளைக் கூறலாம்.
தமிழ்நாட்டில் இருக்கும் ஒன்பது கெஜப் புடவைகளை ஒத்து இருக்கும் புடவைகளை மகாராஷ்டிர மாநிலத்தில் நவாரி புடவைகள் என்று அழைக்கிறார்கள். இந்த ஒன்பது கெஜ புடவைகளை ஒவ்வொரு மராட்டியப் பெண்களும் விழாக்காலங்களில் தவறாமல் அணிந்து விழாக்களை கொண்டாடுகிறார்கள். அதிலும் குறிப்பாக விநாயகர் சதுர்த்தி, மராட்டிய புதுவருடப்பிறப்பு போன்ற விழாக்களில் மராட்டியப் பெண்கள் இந்த நவாரி புடவைகளை அணிந்து தங்க நகைகளால் தங்களை அலங்காரம் செய்து கொண்டு அவர்களது பாரம்பரிய நடனத்தை ஆடுவதைப் பார்க்க முடியும்.
நவாரி புடவைகளின் தோற்றம்
ஒன்பது கெஜப் புடவைகளான இந்த நவாரி புடவைகள் ஒரு வரலாற்றுச் சூழலைக் கொண்டவையாகும். மராட்டி ஆட்சிக்காலத்தின் போது, சக ஆண் வீரர்களுக்கு உதவி செய்வதற்காக பெண்களை பணியமர்த்தியதாகக் கூறப்படுகிறது.அவர்களுக்கு உதவும் பொழுது வசதியாக இருப்பதற்காக ஆண் கால்சட்டையை ஒத்த நவாரிபுடவைகளை மகாராஷ்டிரப் பெண்கள் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அப்பொழுதிலிருந்தே இந்தப் புடவைகள் மகாராஷ்டிரப் பெண்களின் பாரம்பரிய உடையாக மாறிவிட்டது. இந்தப் புடவைகளை அணியும்போது மராட்டியப் பெண்கள் ஆண்களுக்கு சமமான அந்தஸ்தைப் பெறுவதாக நினைக்கிறார்கள்.
கலாச்சார முக்கியத்துவம்
மகாராஷ்டிர மணப்பெண்கள் தங்கள் திருமண விழாக்களில் தவறாமல் அணியும் ஒரு பாரம்பரிய புடவை என்று இந்த நவாரி புடவைகளைக் கூறலாம்.பொதுவாக ஒரு பாரம்பரிய பாணியை கொண்டிருக்கும் இந்தப் புடவைகளை மணப்பெண்கள் அணியும் பொழுது மிகவும் அழகாகவும், மென்மையாகவும் காட்சியளிக்கிறார்கள். குறிப்பாக மகாராஷ்டிராவின் பல மாநிலங்களிலும் விநாயகர் சதுர்த்தி மற்றும் "குடி பாட்வா" போன்ற முக்கிய பண்டிகை நாட்களில் நவாரி புடவைகளை அணியாத பெண்களை நாம் காண்பது அரிது.
நவாரி புடவையை உடுத்தும் முறை
நாம் சாதாரணமாக புடவைகளை அணிந்து கொள்வதற்கு உள்பாவாடையை பயன்படுத்துவோம்.. ஆனால், இந்த நவாரி புடவைகளை அணிந்து கொள்வதற்கு உள்பாவாடையோ அல்லது ஷிம்மியோ அவசியமில்லை.இந்தப் புடவைகள் பெரும்பாலும் பருத்தியில் தயாரிக்கப்படுவதால் இந்தப் புடவைகளை முதல் முறையாக அணிந்தாலும் அவற்றை அணிந்து கொண்டு செல்வது சிரமமாக இருக்காது.
# ஒரு ஜோடி இறுக்கமான ஸ்லாக்குகளை அணிந்து,மடிப்புகளைப் பாதுகாக்க, தொப்புளுக்குக் கீழே ஒரு மைய முடிச்சைக் கட்டி, உங்கள் இடதுபுறத்தில் ஒரு மீட்டர் நீளத்திற்கு புடவையை விட்டுவிட வேண்டும்.
* இடது தோளில் உள்ள சேலையின் பல்லுவை எடுத்து, அதை போர்த்தி, உங்கள் தோள்பட்டையின் வலது முனைக்கு கொண்டு வரவேண்டும்.
* இப்போது, சேலையின் மீதமுள்ள பகுதியுடன், 4-5 அங்குல மடிப்புகளை உருவாக்கத் தொடங்கவும்.
* மடிப்புகளை மீண்டும் மடித்து, அவற்றை நேர்த்தியாக இழுத்து, நடுப்பகுதியை உள்ளிழுக்கவும்.
* மீதமுள்ள மடித்த புடவையைக் கொண்டு வந்து, அதை உங்கள் இடுப்பின் வலது பக்கம் சுற்றிக்கொண்டு உங்கள் முன் பக்கம் கொண்டு வர வேண்டும்.கால்களுக்கு அருகில் இருக்கும் புடவையின் பகுதியை ஒரு அடுக்கில் மடித்து, முன்பக்கத்தில் இருந்து ஒரு டோத்தி பேண்ட் போல் தோன்றும் வகையில் உங்கள் இடுப்பில் செருக வேண்டும்.
பல்வேறு வடிவமைப்புகள்
இந்தப் புடவைகளில் இருக்கும் டிசைன்களும் வகைகளும் ஏராளம் என்று சொல்லலாம்.ஆரம்ப காலங்களில் பருத்தியில் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்த இவ்வகை புடவைகள் இப்பொழுது பட்டு மற்றும் சாட்டின் உட்பட மற்ற துணி வகைகளிலும் தயாரிக்கப்படுகின்றன.இந்தப் பாரம்பரிய புடவைகளில் கவர்ச்சிகரமான மலர்கள், உருவங்கள் மற்றும் வடிவங்களை பிரிண்ட் செய்து மிகவும் அழகாக வடிவமைக்கிறார்கள்.அரைக்கை பிளவுஸ் உடன் இந்த புடவைகளை அணிவதைக் காட்டிலும், முக்கால் கை மற்றும் ஸ்லீவ்லெஸ் போன்ற பிளவுஸ் டிசைன்களுடனும் இந்தப் புடவைகளை அணியும்போது அவை மிகவும் பிரமாதமான தோற்றத்தை உருவாக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
பட்டு நவாரி புடவைகளின் பிரபலத்திற்கு அதன் அடர்த்தியான வடிவ பார்டர்களும் ஒரு காரணமாகும்.இந்த பார்டர்கள் பெரும்பாலும் வெள்ளி அல்லது தங்க நூலினால் எம்பிராய்டரி செய்யப்படுகின்றது.அப்படியே தைய்க்கப்பட்டு ஆயத்தமாக வரும் நவாரி புடவைகளை வாங்கி அணிந்து கொள்வதை இப்பொழுது பெண்கள் பெரிதும் விரும்புகிறார்கள்.இந்த புடவைகளை அணிந்து கொள்வதும் எளிது.
சுவையான தகவல்கள்
* மராட்டியப் பெண்களின் மிகவும் பிரபலமான ஆடைகளில் ஒன்றாக நவாரி புடவை கருதப்படுகிறது.
* பண்டிகைகளின் போது பெண்கள் இந்தப் புடவைகளை அணிந்து வருவதைப் பார்க்கும் பொழுது அது மாநிலத்தின் பழமையான பாரம்பரியத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறது.
* சிவப்பு, நீலம் , பச்சை, மஞ்சள், ஆரஞ்சு போன்ற அடர்த்தியான வண்ணங்களில் பார்டர்கள் வைத்து வரும் இந்தப் புடவைகள் மிகவும் கவர்ச்சிகரமான தோற்றத்தைத் தருவதாக இருக்கும் . இந்தப் புடவைகளை உடுத்தும் பொழுது மூக்கு புள்ளக்கு,ஒட்டியாணம்,காதணிகள், கருகமணி மாலை, சோக்கர்,நெற்றிச்சுட்டி, ஹாரம் மற்றும் கைகளில் கண்ணாடி வளையல் களுடன் கூடிய பிற வளையல்கள் போன்ற நகைகளை தவறாமல் அணிகிறார்கள்.
* மராட்டிய மணப்பெண்கள் தங்களது திருமணத்திற்கு பைத்தானி பட்டினால் தயாரிக்கப்பட்ட நவாரி புடவைகளை தேர்ந்தெடுக்கிறார்கள்.மிகவும் மென்மையாக தங்க நிறத்தில் கிடைக்கும் இந்தப் புடவைகள் மராட்டிய மணமகளின் சரியான தேர்வாக இருக்கும்.
- குழந்தை தவழ ஆரம்பித்த பிறகு, அதிக அளவில் ஆடைகள் தேவைப்படும்.
- ஒரு சில துணிகள் மற்றும் நிறங்கள் மட்டுமே குளிர்காலத்திற்கு ஏற்றது.
குழந்தைகளுக்கான ஆடைகளை தேர்ந்தெடுக்கும்போது, சவுகர்யம் மற்றும் சுலபமாக பராமரிப்பதை அடிப்படையாகக் கொள்ள வேண்டும். குழந்தைகளின் ஆடைகள் மென்மையானதாகவும், இழுதன்மையுடன் வளைக்கக் கூடியதாகவும், எரிச்சல் ஏற்படுத்தாதவாறும் இருக்க வேண்டும். ஈரப்பதம் இருந்தால் ஆவியாகி காற்றோட்டம் ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். போதுமான காற்றோட்டம் இன்மை, ஈரத்தால் தோலில் அரிப்பு ஏற்படுத்தும் விளைவுகளை உண்டாக்கும். ஆடைகள் எளிமையானதாகவும், சிறப்பானதாகவும் செய்யப்பட்டு இருக்க வேண்டும். அழகிற்காக கத்தரித்து ஆடை அலங்கரிக்கப்பட்டிருந்தால் சலவை செய்யும்போது மிகுந்த கவனம் தேவைப்படும். மேலும், இது போன்று கத்தரித்து அலங்கரிக்கப்படுவது குழந்தைக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.
பின்னப்பட்ட துணியால் ஆன ஆடைகள் உடல் அசைவுகளுக்கு ஏற்றவாறு இழுதன்மை பெற்று நீளும் திறன் பெற்றும் இருக்கும். எனவே குழந்தைக்கு பின்னப்பட்ட துணியாலான ஆடையை அணிவிப்பது மிகவும் எளிது. முன்பக்கம் அல்லது பின்பக்கத்தில் ஆடையின் திறப்பு மேல் இருந்து கீழ்வரை அமைத்து இருப்பது ஆடை அணிவித்தலை எளிமையாக்கும். முடிச்சு போட்டு கட்டுபவை அல்லது தட்டையான பொருத்துவான்கள் மிகவும் பொருத்தமாக இருக்கும். கழுத்துப் பகுதிக்கு இழுத்து கட்டக்கூடியவைகளை அநேகமாக பரிந்துரைப்பதில்லை. ஏனெனில், கட்டக்கூடிய நாடாவால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டு விடும். முடிச்சு போட்டு கட்டக்கூடியன அல்லது பொத்தான்கள் பயன்படுத்தப்பட்டிருந்தால், அவை பாதுகாப்பான முறையில் தைக்கப்பட்டுள்ளனவா என்பதை அடிக்கடி கவனிக்க வேண்டும்.
குழந்தை தவழ ஆரம்பித்த பிறகு, அதிக அளவில் ஆடைகள் தேவைப்படும். முக்கியமாக குழந்தையின் பாதுகாப்பை மனதில் கொள்ள வேண்டும். சட்டையில் அழுக்குபடாதிருக்க சட்டையின் மேல் முழுவதுமாக அணியப்படும் ஆடையே இருபாலின குழந்தைகளுக்கும் எளிமையான ஆடையாகும். முக்கியமாக கால்கள் பிரியும் இடத்தில் கொக்கிகள் பொருத்தியிருந்தால் குழந்தைகளுக்கு டையாப்பர் மாற்றுவதற்கு உதவியாக இருக்கும். முழுவதுமாக மூடப்பட்ட ஆடையானது குழந்தைகளின் கால் முட்டிகளை மூடும் கவசமாக தரையில் இருந்து உராய்வதை பாதுகாக்கும். கால்சட்டையின் கால்பகுதி குழந்தையின் முட்டிகளுக்கு அதிக பலமளிக்க கூடியதாக இருப்பதால் நீடித்து உழைக்குமாறு இருப்பது அவசியம்.
ஆரோக்கியம், தோரணை மற்றும் சுயமரியாதை ஆகியனவற்றிற்கு தகுந்த ஆடைகள் தேவைப்படுகிறது. சம்பாதிப்பதை எல்லாம் செலவு செய்பவரை விட வரவு செலவு திட்டமிட்டு வாழ்க்கை நடத்துபவர் பொதுவாக மிகுந்த மகிழ்வோடு, திருப்திகரமாகவும் வாழ்வார். நமது ஆசை மற்றும் தேவைகள், எல்லைகள் அற்றவை என்பது உண்மை. ஒப்பிடுகையில் நமது தேவைகள் மிகவும் குறைவே. குடும்ப வாழ்வில் தேவைகளை ஒழுங்காக்குவது இன்றியமையாதது மற்றும் முக்கியமானது. ஒருவரது ஆளுமை வளர்ச்சிக்கு, அனைத்து தேவைகளையும் நிறைவாக்குவது என்பது விரும்பத்தக்கதல்ல. விருப்பங்கள் மற்றும் தேவைகள் ஆகியவற்றிக்கு இடையே வித்தியாசம் உள்ளது. ஒரு நல்ல ஆடை வாங்குவதற்கான திட்டத்தில் விருப்பம் மற்றும் தேவை அடங்கியிருக்கும்.
ஆடைக்கான துணியை தேர்ந்தெடுக்கும் போது குழந்தையின் வயதை மனதில் கொள்ள வேண்டும் சிறு குழந்தைகளுக்கு, மென்மையான வெளிர் நிறத்தில் அழகான, கச்சிதமான அச்சுக்கள் உள்ள துணியை தேர்ந்தெடுக்கலாம். பின் குழந்தைப் பருவ நிலையை அடையும் போது, ஆண் குழந்தைகள் நீலம், சாம்பல் நிறத்துடன் கூடிய நீலம் மற்றும் பிரவுன் போன்ற ஆண்மை தன்மை வாய்ந்த நிறங்களை விரும்புவர். பிங்க், பச்சை மற்றும் சிவப்பு போன்ற பெண்மைத்தன்மை வாய்ந்த நிறங்களை உடைய உடைகளை பெண் குழந்தைகள் விரும்பி அணிவர். சில மென்மையான துணிகளை வளரிளம் பெண்களுக்கு தேர்வு செய்யலாம்.
வளரிளம் ஆண்களுக்கு சற்று கடினமான துணிகள் உகந்தவை. உடையின் ஸ்டைலும் குழந்தைகளின் வயதிற்கு ஏற்ப மாறுகின்றன. கிலைன் உடைகள் சிறு குழந்தைகளுக்கு பொருத்தமானவை. அதிக அளவு சுருக்கங்களுடன் கூடிய பிராக்குகள் போன்ற உடைகள் பெண் குழந்தைகளுக்கு உகந்தவை. இது போன்றே சிறிய வயதினருக்கு பலவகை காலர்கள் பொருத்தமாக இருக்கும், உதாரணத்திற்கு, குழந்தைக்கான காலர் வளரிளம் பருவத்தினருக்கு பொருத்தமானதாக இருக்காது. ஒரு சில துணிகள் மற்றும் நிறங்கள் மட்டுமே குளிர்காலத்திற்கு ஏற்றது.
உதாரணத்திற்கு சின்தெடிக்குகள், பட்டு மற்றும் கம்பளி ஆகியன குளிர் காலத்திற்கு ஏற்றவை, ஏனெனில், அவை வெப்பத்தை கடத்தாதவை. பருத்தி மற்றும் சின்தெடிக் இணைத்து தயாரிக்கப்பட்ட பருத்தி ஆகியன வெயில் காலத்திற்கு ஏற்றவை. ஏனெனில், அவை உறிஞ்சும் தன்மையுடன், வெப்பம் கடத்தும் தன்மையும், கொண்டவை. குளிர் மற்றும் வெம்மையான நிறங்கள் உள்ளன. குளிர் நிறங்கள் என்பவை குளுமையுடன் தொடர்புடையன. உதாரணத்திற்கு நீலம், பச்சை, வெள்ளை முதலானவை வெம்மையான நிறங்கள் வெப்பத்தை கடத்தாது. மேலும் வெம்மை நிறங்கள் வெப்பத்துடன் தொடர்புடையது. உதாரணத்திற்கு சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள். ஆகவே, வெம்மை நிறங்கள் குளிர்காலத்திற்கும், குளுமையான நிறங்கள் வெயில் காலத்திற்கும் ஏற்றவை.
- புடவை தவிர்த்து மேலும் இந்திய பெண்களுக்கு பல ஆடைகள் உள்ளன.
- லெகங்கா சோலியின் இன்னொரு வடிவம் தான் லஞ்சா.
இந்திய பெண்கள் ஆடைகள் என்றாலே நினைவுக்கு வருவது புடவை மட்டும் தான். ஆனால் புடவையும் தவிர்த்து மேலும் இந்திய பெண்களுக்கு பல ஆடைகள் உள்ளன. அவற்றில் சில வகைகளையும் தற்காலத்திற்கு ஏற்றார் போல் அவை அடைந்த மாற்றத்தையும் காண்போம்.
புடவை- இந்திய பாரம்பரிய உடை என்றால் நினைவுக்கு வருவது புடவை. ஆனால் அந்த புடவை வகையில் 80 வகைகள் உள்ளது என்பது தெரியுமா? பெங்காளி, ஓடி, குடகு, மலையாளி, என 80 வகையாக புடவை கட்டும் விதங்கள் உள்ளன. புடவை என்பது ஒரு ரவிக்கை மற்றும் உள்ளாடையை கொண்டது. ரவிக்கை மற்றும் உள்ளாடை மீது புடவையை சுற்றி கட்டுவது பாரம்பரிய முறையாகும். தற்காலங்களில் புடவை தைக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு வசதி என்னவென்றால் நீங்கள் அதை கவுன் போலவே மாட்டிக் கொள்ளலாம். தற்காலத்திற்கு ஏற்றார் போல் புடவை பல மாற்றங்களை அடைந்துள்ளது. புடவையில் பிரில் வைப்பது ரவிக்கைகளில் பப்ஸ் வைப்பது, ஒன்-ஷோல்டர், ஆப் - ஷோல்டர் போன்ற பல வகையான மாற்றங்களை அவை அடைந்துள்ளன. இன்றளவும் இந்திய பெண்களால் பெரிதும் விரும்பப்படும் ஆடையாகும்.
காக்ரா சோலி- காக்ரா சோலியை லெகங்கா ஜோலி என்றும் அழைக்கப்படும். இது ஒரு துப்பட்டா ஒரு ரவிக்கை மற்றும் இடுப்பில் இருந்து முழங்கால் வரை நீண்ட ஆடை உள்ளடக்கியது. இது முகலாயர் காலத்தில் அறிமுகமானது. புடவைக்கு அடுத்து பெண்களால் பெரிதும் விரும்பப்படும் ஆடையாகும். இதன் வடிவமைப்பில் தற்போதைய காலத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் வந்துள்ளன. துப்பட்டாவிற்கு பதிலாக பௌ வைப்பது, பொத்தான் வைத்த ஷர்ட்களோடு அணிவது, நீண்ட மற்றும் குறுகிய சோலியோடு அணிவது மேலும் இடுப்பில் அணியப்படும் ஆடையின் அளவுகளில் பல வேறுபாடுகள் உள்ளன. இது எல்லாவிதமான விழாக்களிலும் அணியக்கூடியது.
லஞ்சா - லெகங்கா சோலியின் இன்னொரு வடிவம் தான் லஞ்சா. வேறுபாடு என்னவென்றால் ரவிக்கையின் அமைப்பும், இடுப்பில் அணியும் ஆடையின் அமைப்பும். இடுப்பில் இருந்து அணியும் ஆடையின் நீளம் காக்ரா சோலியை விட அதிகமாக இருக்கும். அதே போல் ரவிக்கை நீளம் இடுப்பை தாண்டி நீளும். இது மிகவும் பாரம்பரியமான ஒரு ஆடை வகையாகும். திருமணங்கள் விழா காலங்கள் போன்றவற்றில் முகலாய அரச வம்சத்தில் இன்றளவும் அணியப்படும் பாரம்பரிய உடையாகும். தற்காலத்திற்கு ஏற்றார் போல் லஞ்சாவில் ரவிக்கைக்கு பதிலாக ஜாக்கெட்டும் இடுப்பில் இருந்து அணியப்படும் ஆடையில் நிறைய பிரில்கள் வைத்து நவீனமாக்கப்பட்டுள்ளது. இதை பெண்கள் பெரும்பாலும் விரும்புகின்றனர். திருமணங்களில் மணப்பெண் ஆடையாகவும் இது உள்ளது.
தோத்தி குரதா- தோத்தி என்பது இந்திய ஆண்களின் பாரம்பரிய உடையாகும். ஒரு நீளமான துணி இடுப்பில் சுற்றிக் கொள்வது தோத்தி எனப்படும். பெரும்பாலும் இந்திய ஆண்கள் பகலிலும் இரவிலும் இதை பயன்படுத்துவார்கள். ஆனால் தற்போது பெண்களும் நிறைய பயன்படுத்துகிறார்கள். பருத்தி மற்றும் மஸ்லின் துணிகளை கொண்டு ஆண்கள் பயன்படுத்துகிறார்கள். ஆனால் பெண்கள் சில்க் மற்றும் சாட்டின் துணிகளை கொண்டு தோத்தி குருதா தைத்து கொள்கிறார்கள். இது ரெடிமேடாகவும் கிடைக்கும். அப்படியே வாங்கி அணிந்து கொள்ளும் வகையிலும் விற்கப்படுகிறது. தற்காலத்துக்கு ஏற்றார் போல் இது மாற்றம் அடைந்திருக்கிறது. புடவை கட்டுவது போல இதை வடிவமைத்திருக்கின்றார்கள். இடுப்பில் பெல்ட்டும் அணிந்து கொள்ளலாம்.
சல்வார் சூட்- புடவை அல்லது காக்ரா ஜோலிக்கு அடுத்ததாக விரும்பப்படும் இந்திய பாரம்பரிய உடைகளில் ஒன்று சல்வார் கமீஸ். இது மிகவும் வசதியான ஒரு ஆடை. இது சல்வார் கமீஸ் மற்றும் துப்பட்டாவும் ஒருங்கிணைப்பாகும். சல்வார் என்பது ஒரு தளர்வான பைஜாமா ஆகும். இடுப்பு பகுதியில் மட்டும் அது இறுக்கமாக இருக்கும் மற்றும் கணுக்கால் பகுதியில் இறுக்கமாக இருக்கும். இடையில் காற்றில் பறப்பது போல் தளர்வாக இருக்கும். கம்மீஸ் என்பது மேலாடை ஆகும். இது சல்வாருக்கு மேல் அணியப்படுவது. முழங்கால் அளவு நீண்டிருக்கும். காலத்துக்கு ஏற்றார் போல் இதில் பல மாற்றங்கள் அடைந்து கொண்டே இருக்கின்றன. தற்காலத்தில் மிகவும் குறுகிய அளவு கொண்டு அரை ட்ரவுசர் போலவும் இருக்கின்றன. சில சமயங்களில் மேலே போடப்படும் துப்பட்டா பல வகைகளில் வடிவமைக்கப் படுகின்றன. இடுப்பில் அணியப்படும் சல்வார் பல ப்ளீட்ஸ் கொண்டதாகவும் வடிவமைப்பில் சில மாற்றங்களோடும் வந்து கொண்டிருக்கின்றன.
அனார்கலி சூட்- அனார்கலி சூட் என்பது நீண்ட குர்தாமற்றும் இறுக்கமான சுடிதார் பேண்டிகளின் தொகுப்பாகும். குர்தா இடுப்பு வரை இறுக்கமாக இருந்து பின்பு முட்டிக்கு கீழ் வரை தளர்வாக இருக்கும். இது ஒரு அரசு பாரம்பரிய உடையாகும். வசதியான உடையும் ஆகும். தற்போது அனார்கலி சூட்சில் பல நவீனமான அலங்கார வகைகள் வந்துள்ளன. ஜாக்கட் ஸ்டைல், கேப் ஸ்டைல், ஃப்ளோர் லென்த் கவுன் போன்றவை ஆகும். சமீப காலங்களில் இது பெரிதும் விரும்பப் படும் ஆடையாக உள்ளது.
குர்தா மற்றும் சுடிதார்- இது குர்தி மற்றும் சுடிதார் ஒருங்கிணைக்கப்பட்டதாகும். சுடிதார் கால்களின் அளவைவிட மிக நீண்டு இருக்கும். இதனால் கணுக்கால் பகுதியில் சுருட்டி வைப்பார்கள். இது வளையல் போல் தோற்றம் அளிப்பதால், இதற்கு சுரிதார் என்று பெயர் வந்தது. சூரி என்றால் வளையல் என்று பொருள். இதுவும் முகலாயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. பாகிஸ்தான் பஞ்சாபி பெண்களால் பெரிதும் விரும்பி அணியப்படும் வகையாகும். ஆனால் தற்போது இந்தியாவிலும் பெண்கள் அணிந்து கொள்கின்றார்கள். தற்காலத்தில் குர்தி தரையை தொடும் அளவு நீண்டதாக மேற்கத்திய நாடுகளைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. குர்தியின் நீளமும் குறைக்கப்பட்டு கணுக்கால அளவு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பல வகைகளில் விருப்பத்திற்கு ஏற்றார் போல் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
பெண்களின் ஷர்வாணி- ஷர்வாணி என்பது ஆண்களுக்கான உடையாகும். இது முகலாயர் காலத்தில் அணியப்பட்டு வந்த உடையாகும். அரசாங்க மற்றும் உயர்ந்த மனிதர்கள் அணியக்கூடிய ஆடையாகும். ஆனால் தற்போது ஷர்வாணி உடையாகிப்போனது. இது காட்டன், காட்டன் சில்க், ஷிபான், பட்டு போன்ற பல வகை துணி வகைகளால் செய்யப்படுவது. இதன் மேலாடை எம்ராய்டரி மற்றும் கலைநயத்தால் வடிவமைக்கப்பட்டு இருக்கும். இது பெண்களுக்கு புது வகையான ஆடை வகையாகும். திருமணம் பண்டிகைகள் மற்றும் பல விழாக்களில் இதை அணிந்து கொள்ளலாம். தற்காலத்தில் ஷர்வாணி மேலாடையில் காலர் வைத்தும் காலர் இல்லாமலும் கட் வைத்தும் பல வடிவங்களில் நவீனமாக வடிவமைக்கப்படுகிறது.
இண்டோ- வெஸ்டர்ன் சுட்ஸ்- குர்த்தியோடு இணைக்கப்பட்ட தளர்வான டவுசர்களின் தொகுப்பாகும். பல்லாசு சூட் தற்காலத்தில் இது மிகவும் விரும்பப்பட்டு அணியப்படும் ஆடை வகையாகும். இதில் பல வகைகளும் உண்டு. நீண்ட, குறுகிய, ஏ-லைன் போன்ற பல வடிவமைப்புகள் இதில் வருகின்றது. மேற்கத்திய ஆடை வகைகளின் தாக்கம் இதில் இருக்கும். பொதுவாக இது துப்பட்டா இல்லாமல் அணியப்படும். பூட்-பாண்ட், கிராப்டு-பாண்ட், சிகரட்-பாண்ட் போன்றவற்றோடு குர்தி பொருந்தி வரும். பொதுவாக இந்த வகையில் துப்பட்டா அணியப்படுவதில்லை. பல வகையான பாண்டு வகைகளோட இது பொருந்தி வருகிறது.
இந்திய கவுன்- இந்திய கவுன்கள் பெரும்பாலும் துப்பட்டா சேர்ந்தே வருகின்றது. இது ஒரு மேல் நாட்டு கலாச்சார வகை ஆடையாகும். இதில் பலவகைகள் உண்டு. ஒன்-சோல்டர், பெல்-ஸ்லீவ்டு கவுன்ஸ், சாரி-ஸ்டைல் கவுன் போன்று பல வகைகள் இருக்கின்றன. இதன் மேலாடையில் இந்திய கலாச்சாரப்படி பல அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. எம்பிராய்டிங், மணி வைத்து தைப்பது போன்று பல வகைகளில் அலங்காரம் செய்யப்படுகின்றன. தற்போது இது புடவையைப் போன்ற வடிவமைப்பில் கிடைக்கின்றது. பெரும்பாலான பெண்கள் இதை விரும்பி அடைகின்றனர்.
சறாரா மற்றும் கறாரா சூட்- சறாரா மற்றும் கறாரா சூட் குர்தி, துப்பட்டா மற்றும் சறாரா/ கறாரா இவற்றின் தொகுப்பாகும். குர்தி நீண்டும் இருக்கும் குறைவாகவும் இருக்கும் நடுத்தர அளவிலும் இருக்கும். இது முட்டிவரை இறுக்கமாக இருந்து அதன் பின் தளர்வாக இருக்கும். இவை தங்க நிற இழை மற்றும் பைப்பிங் போன்றவற்றால் அலங்காரப்படுத்தப்படும். இது முகலாய காலத்தில் அறிமுகப்படுத்தப் பட்டதாகும். இன்றளவும் லக்னோவில் பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் இதை அணிந்து கொள்கிறார்கள். பாகிஸ்தானில் மணப்பெண்கள் இதை திருமண ஆடையாகவே அணிந்து கொள்கின்றார்கள். தற்காலத்தில் உயர்ந்த இடுப்பு சறாரா மற்றும் கறாரா சூட்டும் கிடைக்கின்றன.
மேலே சொன்ன வகைளில் உங்களின் விருப்பமான ஆடையைகளை வாங்கி மகிழுங்கள்.
- இந்தப் புடவைகள் ஒரு கதையை கூறுவது போலவும் நமக்கு தோன்றுகின்றது.
- சாட்டின் சில்க் புடவைகள் எப்படிப்பட்ட உடல்வாகு இருக்கும் பெண்களும் அணியலாம்.
அனைத்து பருவங்களிலும் அணியக் கூடிய வகையில் வந்திருக்கும் ஜூட் லினன் சில்க் புடவைகள் மிகவும் நேர்த்தியான தோற்றத்தைத் தருபவையாக இருக்கின்றன. அதிலும் குறிப்பாக மிருதுவான பிளெயின் வண்ணங்களில் வரும் புடவைகளுக்கு தலைப்பில் வரும் குஞ்சம்(டேஸில்ஸ்) கூடுதல் அழகைத் தருவதாக இருக்கின்றது.மிகவும் மிருதுவான பீச், சந்தனம், பிஸ்தா, ஆரஞ்சு,கிரே, பிங்க் வண்ண புடவைகளுக்கு போச்சம்பள்ளி மற்றும் இக்கத் டிசைன்களை டிஜிட்டல் பிரிண்டிங் செய்து பிளவுஸ் பீஸாகத் தருகிறார்கள்.
இந்த பிளவுஸ் பீஸ்கள் அந்தப் புடவைக்கு காண்ட்ராஸ்ட் வண்ணத்தில் இருப்பது போல் கொடுக்கப்பட்டிருப்பது கூடுதல் அழகாக இருக்கின்றது. இதுபோன்ற லினன் ஜூட் புடவைகள் பெயர் மற்றும் வண்ணத்திற்கு ஏற்றது போலவே மிகவும் மிருதுவாக, மென்மையாக இருக்கின்றன. இந்தப் பிளெயின் புடவைகளில் கோல்டன் ஜரி கட்டங்கள் வருவதுபோல வடிவமைக்கப்பட்டு வருவது கூடுதல் அழகாக இருக்கின்றது. புடவை தலைப்பில் வரும் குஞ்சங்களும், கோல்டன் மற்றும் புடவை நிறத்தில் வருவதுபோல செய்திருப்பது மிகவும் அருமையாக இருக்கின்றது.
பிச்வாய் சில்க் புடவைகள்
மிக மிருதுவான துணியில் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தை மிகவும் அழகாக ஒரு ஓவியம் போல பிரிண்ட் செய்து புடவையில் தருவது பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கின்றது.உடலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அந்த கதாபாத்திர பிரிண்ட்டுகள் இருக்க தலைப்பு மற்றும் பார்டரில் அந்த கதாபாத்திரங்கள் அடர்ந்த காடுகள் மற்றும் சோலைகளில் இருப்பது போன்று வடிவமைப்பது இருப்பதை வர்ணிக்க ஒரு நாள் போதாது என்று சொல்லலாம். காடு, மலை, குளம், பறவைகள், விலங்குகள் என இயற்கையையும் அத்துடன் மனிதர்கள் இருப்பதையும் தத்ரூபமாக ஒரு ஓவியம் போல இந்தப் புடவைகள் நம் கண்முன் கொண்டுவருகின்றன.
இந்தப் புடவைகளுக்கு தரப்படும் வண்ணமும் அதன் மென்மையும் நம்மை வாங்கத் தூண்டுகின்றன என்று சொல்லலாம். இந்தப் புடவைகள் ஒரு கதையை கூறுவது போலவும் நமக்கு தோன்றுகின்றது. உடல் முழுவதும் சிவோரி பிரண்ட்கள் ஒரு தனிப்பட்ட வண்ணத்திலோ அல்லது பல வண்ணங்கள் கலந்தோ இருப்பது போன்று வடிவமைத்து தலைப்பில் தஞ்சாவூர் ஓவியம் போன்று ஓவிய கதாபாத்திரங்களை நம் கண் முன்னே கொண்டுவருவது இந்தப் புடவைகளின் தனிச்சிறப்பாகும்.
பிளெயின் வண்ண உடல் பகுதியில் மயில், மான், அன்னப்பறவை, யானை, மரம் போன்ற பிரிண்ட்களை சிறிய அளவில் தந்து சிறிய தாமரைப் பூவை பார்டராக வைத்து தலைப்பில் தாமரைப்பூ மற்றும் மயில் வடிவத்தை பெரிய அளவில் பிரிண்ட் செய்து வரும் புடவைகளின் அழகைக் காண கண் கோடி வேண்டும்.கலம்காரி டிஜிட்டல் பிரிண்ட் உடல் முழுவதும் இருக்க பார்டரில் பெரிய டிசைன்களை வடிவமைத்து இருப்பது வித்தியாசமாக இருக்கின்றது. இந்தப் புடவைகளுக்கு தலைப்பு மிகவும் சிறியதாக இருப்பது சற்றே வித்தியாசமாக இருக்கின்றது.
சாஃப்ட் காதி சில்க் புடவைகள்
பிளெயின் வண்ணப் புடவைக்கு தலைப்பு மற்றும் பார்டர் பூ டிசைன் வருவதுபோல் வடிவமைத்து தலைப்பில் டேஸில்ஸ் எனப்படும் குஞ்சம் தொங்குவதுபோல் வடிவமைத்திருப்பது இந்தப் புடவைக்கு கூடுதல் அழகைத் தருகிறது. மஞ்சள், பச்சை, சிவப்பு, ஆரஞ்சு, நீலம் போன்ற வண்ணங்களை உடலுக்குத் தந்து பார்டர் மற்றும் தலைப்பில் பெரிய பூ டிசைன் இருப்பது போன்று தயாரிக்கப்படும் இந்த சாஃப்ட் காதி சில்க் புடவைகள் அலுவலகங்களுக்கு அணிந்து செல்வதற்கு மிகவும் வசதியாக இருக்கும். இந்த சாஃப்ட் காதி சில்க் புடவைகளிலேயே இக்கத் டிசைன்களை மிகவும் அழகாகத் தந்திருக்கிறார்கள். பார்டரும், பிளவுஸும் ஒரே டிசைனில் இருப்பது அருமையாக இருக்கின்றது. அணிந்தால் உடலுடன் ஒட்டி வரும் இந்தப் புடவைகளை விரும்பாத பெண்களே இருக்க மாட்டார்கள். உடல் முழுவதும் பிரிண்ட்கள் இருக்க பார்டர் மற்றும் பிளவுஸ் பிளெயினாக இருப்பது போன்று வரும் புடவைகள் சற்று வித்தியாசமாக இருக்கின்றன.பல வண்ணங்கள் மற்றும் டிசைன்களில் வரும் இந்த சாஃப்ட் காதி சில்க் புடவைகள் வெளியில் உடுத்திச் செல்வதற்கு ஏற்றவையாக உள்ளன.
சாட்டின் சில்க் புடவைகள்
தொட்டாலே வழுவழுப்பாகவும், மெத்தென்றும் இருக்கும் இந்த சாட்டின் சில்க் புடவைகள் எப்படிப்பட்ட உடல்வாகு இருக்கும் பெண்களும் அணியும் பொழுது அவர்களை சற்று குறைந்த உடல்வாகு இருப்பதுபோல் காட்டக்கூடிய புடவை என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த புடவைகளில் ஏராளமான டிசைன்கள் மற்றும் வண்ணங்கள் வருவதால் எதை எடுப்பது எதை விடுவது என்று யோசிக்கத் தோன்றுகிறது. அதிலும் இந்த புடவைகளில் வரும் டிஜிட்டல் பிரிண்ட்டுகள் இந்தப் புடவையின் அழகை மேலும் கூட்டிக் காட்டுகின்றன.சாட்டின் சில்க் புடவைகளுக்கு அதிகப் பராமரிப்பு தேவையில்லை. இந்தப் புடவைகளின் தலைப்பில் மட்டும் டிசைன்கள் வந்து உடல் முழுவதும் பிளெயினாக காண்ட்ராஸ்ட் வண்ணத்தில் வருவது, தலைப்பில் வரும் பெரிய டிசைன் பார்டரிலும் அதே பெரிய அளவில் வருவது, தலைப்பில் வரும் டிசைன் இரண்டு பக்க பார்டரி லும் வந்து உடல் பகுதி பிளெயினாக காண்ட்ராஸ்ட் வண்ணத்தில் வருவது என ஒவ்வொரு புடவையும் மிகவும் வித்தியாசமாகவும் அழகாகவும் விற்பனைக்கு வந்துள்ளன.
- ரஷ்யா - உக்ரைன் நாடுகள் போர் ஆகியவற்றால், சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது.
- அமெரிக்க அரசு, தங்கள் நாட்டு மக்களுக்கு வழங்கிய சலுகைகளை நிறுத்தியுள்ளது.
திருப்பூர் :
ஆயத்த ஆடை கொள்முதலை சர்வதேச சில்லரை வர்த்தக நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன. இதனால் திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு பின்னலாடை தயாரிப்பு ஆர்டர் வருவது பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர் குமார் துரைசாமி கூறியதாவது :- கொரோனா தொற்று பரவல், ரஷ்யா - உக்ரைன் நாடுகள் போர் ஆகியவற்றால், சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அரசு, தங்கள் நாட்டு மக்களுக்கு வழங்கிய சலுகைகளை நிறுத்தியுள்ளது.
வேலைவாய்ப்பு குறைவு, வேலை நேரம் குறைவால், தனிநபர், குடும்ப வருவாயில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயத்த ஆடை ரகங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்குவதை வெளிநாட்டு மக்கள் குறைத்துள்ளனர்.சர்வதேச அளவில் கிளைகளை கொண்டுள்ள சில்லரை வர்த்தக நிறுவனங்கள், 6முதல் 9 மாதங்களுக்கு முன்பே தங்கள் வர்த்தக மையங்களில் விற்பனை செய்யவேண்டிய ஆடை ரகங்கள் குறித்து திட்டமிடுகின்றனர்.
வர்த்தக பாதிப்பால் வால்மார்ட் போன்ற பிரபல நிறுவனங்களின் குடோன்களில் ஆடை இருப்பு அதிகரித்துள்ளது. விற்பனை சரிவு, நிதி நெருக்கடி, இருப்பு வைப்பதற்கு போதிய இடமின்மை உள்ளிட்ட காரணங்களால் சில்லரை வர்த்தக நிறுவனங்கள், ஆடை கொள்முதலை நிறுத்தியுள்ளன.ஏற்கனவே வழங்கிய ஆர்டருக்கான ஆயத்த ஆடைகளையும் தாமதமாக அனுப்ப கோருகின்றனர். சில வர்த்தகர்கள் ஆர்டர்களை ரத்து செய்கின்றனர்.
இதனால் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஆர்டர் வருகை மிகவும் குறைந்து உள்ளது. திருப்பூர் மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள் ஆர்டர் இழப்பை எதிர் கொண்டு வருகின்றன.அடுத்த சில மாதங்களில் இழந்த பொருளாதாரத்தை மக்கள் மீட்டெடுத்து விடுவர்.அதன்பின் சர்வதேச ஆடை வர்த்தகம் இயல்புநிலைக்கு திரும்பும்.இவ்வாறு அவர் கூறினார்.
- ஓவிய கதாபாத்திரங்களை நம் கண் முன்னே கொண்டுவருவது இந்தப் புடவைகளின் தனிச்சிறப்பாகும்.
- தத்ரூபமாக ஒரு ஓவியம் போல இந்தப் புடவைகள் நம் கண்முன் கொண்டுவருகின்றன.
மிக மிருதுவான துணியில் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தை மிகவும் அழகாக ஒரு ஓவியம் போல பிரிண்ட் செய்து புடவையில் தருவது பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கின்றது. உடலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அந்த கதாபாத்திர பிரிண்ட்டுகள் இருக்க தலைப்பு மற்றும் பார்டரில் அந்த கதாபாத்திரங்கள் அடர்ந்த காடுகள் மற்றும் சோலைகளில் இருப்பது போன்று வடிவமைப்பது இருப்பதை வர்ணிக்க ஒரு நாள் போதாது என்று சொல்லலாம்.
காடு, மலை, குளம், பறவைகள், விலங்குகள் என இயற்கையையும் அத்துடன் மனிதர்கள் இருப்பதையும் தத்ரூபமாக ஒரு ஓவியம் போல இந்தப் புடவைகள் நம் கண்முன் கொண்டுவருகின்றன. இந்தப் புடவைகளுக்கு தரப்படும் வண்ணமும் அதன் மென்மையும் நம்மை வாங்கத் தூண்டுகின்றன என்று சொல்லலாம். இந்தப் புடவைகள் ஒரு கதையை கூறுவது போலவும் நமக்கு தோன்றுகின்றது.
உடல் முழுவதும் சிவோரி பிரண்ட்கள் ஒரு தனிப்பட்ட வண்ணத்திலோ அல்லது பல வண்ணங்கள் கலந்தோ இருப்பது போன்று வடிவமைத்து தலைப்பில் தஞ்சாவூர் ஓவியம் போன்று ஓவிய கதாபாத்திரங்களை நம் கண் முன்னே கொண்டுவருவது இந்தப் புடவைகளின் தனிச்சிறப்பாகும்.
பிளெயின் வண்ண உடல் பகுதியில் மயில், மான், அன்னப்பறவை, யானை, மரம் போன்ற பிரிண்ட்களை சிறிய அளவில் தந்து சிறிய தாமரைப் பூவை பார்டராக வைத்து தலைப்பில் தாமரைப்பூ மற்றும் மயில் வடிவத்தை பெரிய அளவில் பிரிண்ட் செய்து வரும் புடவைகளின் அழகைக் காண கண் கோடி வேண்டும். கலம்காரி டிஜிட்டல் பிரிண்ட் உடல் முழுவதும் இருக்க பார்டரில் பெரிய டிசைன்களை வடிவமைத்து இருப்பது வித்தியாசமாக இருக்கின்றது. இந்தப் புடவைகளுக்கு தலைப்பு மிகவும் சிறியதாக இருப்பது சற்றே வித்தியாசமாக இருக்கின்றது.
- இவ்வகைச் சேலைகளினால் சுற்றுச் சூழலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படுவதில்லை.
- இந்த புடவைகள் நீண்ட ஆயுளைக் கொண்டவையாக அறியப்படுகிறது.
பருத்தி, பட்டு, ரேயான், பாலியஸ்டர் எனப் பல்வேறு துணி ரகங்களில் நெய்யப்படும் சேலைகளைப் பற்றி நாம் நிறையவே கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இயற்கையான தாவரங்களின் நார்களைக் கொண்டும் புடவைகள் தயாராகி வருகின்றன. அதுவும் கற்றாழை, சணல், வாழை, புளிச்சை கீரை நார், மூங்கில் நார்கள் என அனைத்து நார் வகை உணவுப் பொருட்களைக் கொண்டு புடவைகள் தயாரிக்கப்படுகின்றன.
நூலினால் தயாராகும் சேலைகளுக்கு இருக்கும் அத்தனை அழகும், வனப்பும் நார்களைக் கொண்டு நெசவு செய்யப்படும் சேலைகளிலும் இருக்கின்றன.
சணல் புடவைகள்
காய்கறிச் செடிகளின் தோல்களிலிருந்து தயாரிக்கப்படும் தங்கநிற நார்களால் மிகவும் நேர்த்தியாகத் தயாரிக்கப்படுபவையே சணல் புடவைகள். முற்றிலும் மக்கக்கூடிய மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய சணலினால் உருவாக்கப்படும் இந்த ஆர்கானிக் புடவைகளில் செய்யப்படும் எம்பிராய்டரி வேலைப்பாடுகள் இதன் அழகை மேலும் கூட்டுகின்றன. விழாக்களுக்கு இந்த புடவைக்கு ஏற்ற நகை அலங்காரத்துடன் அணியும் பொழுது அனைவரின் கவனமும் உங்களைச் சுற்றியே இருக்கும். மலர்கள் மற்றும் செக்ட் பிரிண்ட்டுகளுடன் வரும் இந்தப் புடவைகளின் அழகை வெல்ல வேறு புடவைகள் இல்லை என்று சொல்லலாம்.
மூங்கில் பட்டுப் புடவைகள்
மூங்கிலின் உட்புறமிருக்கும் பகுதியிலிருந்து எடுக்கப்படும் நார்களைக் கொண்டு இந்தப் புடவைகள் நெசவு செய்யப்படுகின்றன. பாராட்டத்தக்க உறிஞ்சுதல் திறனுடன், வெப்பத்தை மூழ்கடித்து, கோடை காலத்தில் அணியும் பொழுது குளிர்ச்சி தரக்கூடிய மூங்கில் இழைகளால் ஆன புடவைகள், பாக்டீரியாவை எதிர்த்துப் போராடுவதற்கான ஆற்றலையும் கொண்டவையாக இருப்பதால் இவை புதிய யுகத்தின் பாராட்டுகளை பெற்று வருகிறது.
இந்த மூங்கில் நார்களும் பட்டு நூல்களைப் போலவே மென்மையாக இருப்பதால் அவை இரண்டையும் இணைத்து மூங்கில் பட்டுப் புடவைகளை உருவாக்குகிறார்கள். பல்வேறு வடிவமைப்புகள் மற்றும் கைகளினால் அச்சிடப்பட்டு வருகிறது இந்த மூங்கில் புடவைகள். பாரம்பரிய அச்சிடு மற்றும் சிறந்த ஜரி அலங்காரங்களுடன் வரும் மூங்கில் புடவைகள் எந்தவொரு சந்தர்ப்பத்திற்கும் அணியக் கூடிய சிறந்த தேர்வாகும். கனமான பார்டர்கள் மற்றும் விரிவான புட்டாக்களுடன் வரும் மூங்கில் பட்டுப்புடவையை நீங்கள் அணியும் பொழுது அவை உங்கள் பெண்மைக்கு ஒரு தனித்துவமான பிரமாண்டத்தைக் கொடுக்கும்.
கற்றாழை நார் புடவைகள்
மருந்து மற்றும் அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் மட்டுமே பயன்பட்டு வந்த கற்றாழையானது இப்பொழுது வண்ணப் புடவைத் தயாரிப்பிலும் களமிறங்கியுள்ளன. நூல்களின் விலையேற்றத்தால் அவற்றிற்கு மாற்றாக வந்த கற்றாழை நார்ச் சேலைகளுக்கு இப்பொழுது மக்களிடையே ஏக வரவேற்பு இருப்பதினால் அதன் தேவை மிக அதிக அளவில் இருக்கின்றது. பச்சையாக இருக்கும் நார்களை மொத்த விலைக் கடைகளிலிருந்து வாங்கி வந்து அவற்றை எளிமையான பிளீச்சிங் மூலம் சுத்தம் செய்து அதிலிருக்கும் கொழுப்புகளை அகற்றி பிறகு மென்மையான முறையில் ஒற்றை ஒற்றை நார்களாக பிரித்தெடுத்து பின்பு அந்த நார்களைக் கொண்டு புடவைகள் தயாரிக்கப்படுகின்றன.
கற்றாழை நார்களைக் கொண்டு தயாரிக்கப்படும் எழிலான புடவைகளின் விலையானது பாரம்பரியமாகத் தயாரிக்கப்படும் புடவைகளின் விலையை விடக் குறைவாகவே உள்ளது. மேலும் இதுபோன்று இயற்கையாகக் கிடைக்கும் தாவரங்களின் நார்களினால் உருவாக்கப்படும் இவ்வகைச் சேலைகளினால் சுற்றுச் சூழலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படுவதில்லை. இவை ஆர்கானிக் புடவைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் புடவைகள் என்று பெயர் பெற்ற சணல், வாழைநார், மூங்கில், காட்டுபட்டு மற்றும் கற்றாழை நார் கொண்டு நெசவாளர்களின் புத்திசாலித்தனமான கைவினைத் திறனைப் பயன்படுத்தி வடிவமைக்கப்படும் இவ்வகை சேலைகள் செயற்கை இழைகளால் தயாரிக்கப்படும் புடவைகளைக் காட்டிலும் நீண்ட ஆயுளைக் கொண்டவையாக அறியப்படுகிறது.
- ஏ.இ.பி.சி., ஏற்றுமதியாளர் வர்த்தகர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
- 2 ஆண்டுகளாக கொரியாவின் ஆடை இறக்குமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
திருப்பூர் :
தென்கொரியாவின் மொத்த ஆயத்த ஆடை இறக்குமதியில் இந்தியாவின் பங்களிப்பு 0.67 சதவீத அளவிலேயே உள்ளது. அந்நாட்டுக்கான ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்வதற்காக ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,), ஏற்றுமதியாளர் வர்த்தகர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.தென்கொரிய தலைநகர் சியோலில் வருகிற செப்டம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.
கொரோனா பரவல் இருந்தபோதும்கூட கடந்த 2 ஆண்டுகளாக கொரியாவின் ஆடை இறக்குமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.வர்த்தக வாய்ப்புகள் மிகுந்த தென்கொரிய சந்தையை கைப்பற்ற ஏதுவாக திருப்பூர் உள்பட நாடு முழுவதும் உள்ள ஆடை ஏற்றுமதியாளர்கள் வர்த்தகர் சந்திப்பில் பங்கேற்க ஏ.இ.பி.சி., அழைப்புவிடுத்துள்ளது. பங்கேற்க விரும்பும் நிறுவனத்தினர் வரும் 30ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உடல்நல பாதிப்புக்குள்ளானவர்களின் ஆடைகளை சுடு நீரில் அலசலாம்.
- காட்டன் துணிகளை வேண்டுமானால் சுடுநீரில் அலசலாம்.
அழுக்கு துணிகளை நீரில் மூழ்க வைத்து அதில் சோப்பு தூள் கலந்து ஊற வைத்து பின்பு சோப்பு போட்டு துவைத்து நீரில் அலசுவோம். இந்த செயல் முறையை வாஷிங் மெஷின் எளிமைப்படுத்திவிட்டது. ஆனாலும் துணிகளை கைகளால் சோப்பு போட்டு உலர வைப்பதற்குத்தான் பலரும் விரும்புகிறார்கள்.
துணியில் ஏதேனும் கறைகள் படிந்திருந்தால் சிலர் சுடு நீர் பயன்படுத்தி சோப்பு போட்டு அலசுவதுண்டு. அப்படி அடிக்கடி சுடு நீர் கொண்டு துணிகளை அலசுவது துணியின் தரத்தை பாழ்படுத்தி விடும். அப்படி சுடுநீர் பயன்படுத்தி துவைக்கும்போது கறை நீங்கி பளிச்சென்று காட்சி அளிக்கும். அதே வேளையில் ஆடை சுருங்கிவிடக்கூடும். சுடுநீர் பயன் படுத்துவதால் இந்த பிரச்சினை ஏற்படும். மேலும் சுடு நீர் ஆடையின் நிறத்திலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. சுடுநீரில் இருக்கும் வெப்பம் காரணமாக சாயம் மங்கி ஆடை நிறம் மாற்றமடையக்கூடும். சுடு நீரில் அலசும்போது ஆடை சுருங்கும் பிரச்சினை காரணமாக அதில் உள்ள நூல் இழைகள் வலுவிழந்துபோய்விடும்.
ரெடிமேடு ஆடைகளை வாங்குவதாக இருந்தால் அதில் எப்படி துவைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். காட்டன் துணிகளை வேண்டுமானால் சுடுநீரில் அலசலாம். மற்ற துணிகளாக இருந்தால் சுடுநீர் உபயோகிக்கலாமா? என்பதை சரிபார்த்துக்கொள்வது நல்லது. ஒருவேளை சுடு நீர் பயன்படுத்துவதாக இருந்தால் ஆடையின் ஒரு பகுதியை அதில் 5 நிமிடங்கள் முக்கி பரிசோதிக்கலாம். அப்போது ஆடையில் சுருக்கமோ, நிறம் மாறுதலோ தென்பட்டால் சுடுநீர் பயன்படுத்துவதை அறவே தவிர்த்துவிட வேண்டும். சுடு நீரில் துவைக்கும் தன்மை கொண்ட துணியாக இருந்தாலும் 10 நிமிடங்களுக்கு மேல் சுடு நீரில் ஊறவைக்கக்கூடாது.
ஏனெனில் எந்த துணியாக இருந்தாலும் சுடுநீரில் அதிக நேரம் ஊறவைத்தால் சுருங்கிவிட தொடங்கிவிடும். சுடு நீருக்கு பதில் வெதுவெதுப்பான நீரை உபயோகிக்கலாம். அது துணியின் ஆயுளை பாதுகாக்கும். ஆடைகளில் படியும் கறைகளை போக்குவதற்கு சுடு நீருக்கு மாற்றாக வினிகர் போன்ற பொருட்களை பயன்படுத்தலாம்.
உடல்நல பாதிப்புக்குள்ளானவர்களின் ஆடைகளை துவைப்பதற்கு சுடு நீர் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் அவர்கள் உடுத்தியிருந்த ஆடைகளில் படிந்திருக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ் கிருமிகளை கொல்வதற்கு சுடு நீர் உதவும். பெட்ஷீட், தலையணை உறை போன்றவற்றை சுடு நீர் பயன்படுத்தி சுத்தம் செய்வதும் நல்லது.
- கனம் குறைந்த சந்தேரி சில்க் புடவைகள் இன்றைய இளம்பெண்களின் விருப்பமான தேர்வாக இருக்கிறது.
- ஸ்டிரெயிட் குர்தா(Straight Kurta)க்களை அனைத்து உடல்வாகுடைய பெண்களும் அணியலாம்.
நம் நாட்டுப் பெண்கள் அணியக்கூடிய பாரம்பரிய உடைகள் என்று எடுத்துக்கொண்டால் அவற்றில் முக்கிய இடத்தைப் பிடிப்பது புடவைகளாகத்தான் இருக்கும்.
பெண்களுக்கான சமீபத்திய மற்றும் அழகான இந்திய ஆடை வடிவமைப்புகள் புடவைகள், குர்தா செட், லெஹங்கா சோளி, சல்வார் கமீஸ், சுரிதார் உடைகள் இந்திய ஸ்டைல் கவுன்கள், பாரம்பரிய உடகள், பாவாடைகள், குர்தா பைஜாமா, பலாஸ்ஸோ உடைகள், பாட்டியாலா சூட், ஹரேம் சூட், ஷராரா சூட், டோத்தி சூட்
சமகாலத்திய புடவைகள்
* காஞ்சீவரப் பட்டுப்புடவைகள்: கோவில்களின் நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தை பிறப்பிடமாகக் கொண்டவை இந்த காஞ்சீவரப் பட்டுப்புடவைகள். காஞ்சீவரப் பட்டுப் புடவைகளிலும் இன்றைய ட்ரெண்டிற்கு ஏற்றார்போல் பலவிதமான டிசைன்களும், பாணிகளும் வந்துவிட்டன.கதை பேசும் புடவைகள் என்று சொல்லும் அளவுக்கு ஏதாவது ஒரு கருவை புடவையில் கொண்டுவந்து நெய்கிறார்கள்.காஞ்சிவரம் புடவைகள் என்றாலே மிகவும் கனமாக இருக்கும் என்று சொல்வதற்கு மாறாக இப்பொழுது லைட் வெயிட் புடவைகளும் வந்துவிட்டன.
* பனாரஸ் பட்டு புடவைகள்: புனித நகரமான வாரணாசியை பிறப்பிடமாகக் கொண்டவை பனாரஸ் பட்டு புடவைகள். இந்தப் புடவைகள் ஆடம்பரமான மற்றும் சிக்கலான வடிவமைப்புக்கு பெயர் பெற்றவையாகும்.. பாரம்பரிய பனாரஸ் புடவைகள் மிகவும் கனமானவை மற்றும் விலை உயர்ந்தவை. இப்பொழுது வரும் பனாரஸ் சேலைகள் கண்கவர் டிசைன்களில் கனம் குறைந்தவையாக வருகின்றன.
* சந்தேரி சில்க் புடவைகள்: கனம் குறைந்த சந்தேரி சில்க் புடவைகள் இன்றைய இளம்பெண்களின் விருப்பமான தேர்வாக இருக்கிறது.அலுவலகம் மற்றும் வீட்டில் அன்றாடம் உடுத்தக்கூடிய வசதியான புடவைகளாக இவை இருக்கின்றன.
* சீக்வின் ஷிஃபான் புடவைகள்: மிகவும் கனம் குறைந்த அதே நேரத்தில் ஆடம்பர தோற்றத்தை தரக்கூடிய இந்த புடவைகளின் ரகத்திலேயே பெரும்பாலான பார்ட்டி புடவைகள் வருகின்றன.இந்த புடவைகளில் பலவிதமான எம்பிராய்டரி மற்றும் சம்கி வேலைப்பாடுகளுடன் வரும் புடவைகள் இன்றைய இளம் பெண்களால் பெரிதும் விரும்பி அணியப்படுகின்றன.இந்த புடவைகளிலேயே நீளமான கவுன்களை தைத்து அணிந்து கொள்வதும் இப்பொழுது ட்ரெண்டாகி வருகிறது.
குர்த்தாக்கள்
* நவீன ஹை-லோ அனார்கலி குர்தா: முகலாய தோற்றம் கொண்ட அனார்கலி குர்த்தாக்கள் மார்பு பகுதியில் இறுக்கிப் பிடித்து இடுப்பிலிருந்து பரந்த ஃப்ளேர்களை கொண்டவையாக இருக்கும்.பாரம்பரிய அனார்கலி குர்திகள் எம்பிராய்டரி மற்றும் மிகவும் கனமான அலங்காரங்களை கொண்டவையாகும்..இப்பொழுது வரும் ஹை- லோ குர்திகள் மிகவும் ட்ரெண்டிங் ஆடையாக இருக்கின்றன. காட்டன், ஷிஃபான்,பட்டு, ஜார்ஜெட் என அனைத்து விதமான துணிகளிலும் கல்லூரி, அலுவலகம் மற்றும் சிறு விழாக்களுக்கு அணிந்து செல்வது போல் வடிவமைக்கப்பட்டு வந்துள்ளன.
* A-லைன் குர்தா: A-லைன் வடிவத்துடன் பரந்த அடிப்பாகத்தை கொண்ட இவ்வகைக் குர்த்தாக்கள் அனார்கலி ஆடைகளுக்கு மாற்று என்று சொல்லலாம்.இந்த பிரபலமான நவீன பாணி ஆடைகள் தினசரி முதல் எப்போதாவது அணிவது வரை பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்றவாறு ஏராளமான மாடல்களில் வருகின்றன.இவை கணுக்கால் வரை இருக்கும் லெகிங்களுடன் அணிய ஏற்றவை..
* பிரிண்டட் ஸ்டிரெயிட் குர்தா: பல ஆண்டுகளாக பெண்கள் அன்றாடம் அணியும் ஆடைகளில் இவை முதலிடம் பிடித்தவை என்றால் அது மிகையாகாது. லெக்கின்ஸ், பலாஸ்ஸோ, ஜீன்ஸ் என பலவிதமான கால்சட்டைகளுடன் அணிவதற்குப் பொருத்தமானவை இவை.கலம்காரி, இக்கத்,ஃபிளோரல்,ஜியாமெட்ரிகல் மற்றும் டிஜிட்டல் பிரிண்ட்களுடன் வரும் இந்த ஸ்டிரெயிட் குர்தாக்களை அனைத்து உடல் வாகுடைய பெண்களும் அணியலாம்.
* லேயர்ட் குர்தா: ஒரே குர்த்தாவில் பல லேயர்கள் வருவது போல வடிவமைக்கப்பட்டு வருவது இப்பொழுது மிகவும் பிரபலமான பாணியாக உள்ளது. பெரும்பாலும் உட்புறம் வரும் லேயர்பிளெயின் கலரிலும் வெளிப்புறம் வரும் லேயர்கள் பிரிண்ட்களுடன் வருவது போலவும் வடிவமைக்கிறார்கள்.சில குர்தாக்களில் சுங்கங்கள் தொங்குவது போன்று தைய்த்திருப்பது கூடுதல் அழகைத் தருகின்றது.கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு அணிந்து செல்வதற்கு ஏற்றவையாக இவை இருக்கின்றன.
* சிக்கன்காரி குர்தா: லக்னோவின் வர்த்தக முத்திரைக்கு பெயர் பெற்றவை என்றால் அவை சிக்கன்காரி குர்தாக்களாகத்தான் இருக்க முடியும். பருத்தி, பட்டு மற்றும் ஷிஃபான் துணிகளில் வரும் இந்த ஆடைகளில் நுட்பமான நூல் வேலைபாடுகளைச் செய்கிறார்கள்.இவை பெரும்பாலும் வெள்ளை, வெளிர் நீலம், வெளிர் பச்சை, இளஞ்சிவப்பு, இளம் மஞ்சள் மற்றும் பழுப்பு நிறங்களிலேயே வருகின்றன.கழுத்து, கைகள் மற்றும் ஹெம்லைன் ஆகியவற்றில் நுணுக்கமான வேலைப்பாடுகள் செய்யப்பட்டு வரும் இந்த சிக்கன்காரி ஆடைகளுக்கு எப்பொழுதுமே பெண்களிடம் மவுசு அதிகம் என்று சொல்லலாம்.அலுவலகம் மற்றும் தினசரி பயன்பாட்டிற்கு இவை ஏற்றவையாக இருக்கின்றன. பாட்டியாலா, லெகிங் மற்றும் நேரான பேண்ட்களுடன் அணிய ஏற்றவை.
லெஹங்கா சோளி
ரஃபிள்டு துப்பட்டாவுடன் வரும் மென்மையான நெட்டட் லெஹங்கா, எம்ப்ராய்டரி செய்யப்பட்ட லெஹங்கா கமீஸ்,ஃபாயில் பிரிண்ட்டுடன் கூடிய துடிப்பான வண்ணங்களில் வரும் லெஹங்கா, ஹெவி பிரைடல் எம்ப்ராய்டரி லெஹங்கா,ஸ்டைலான லெஹங்கா சோளி என லெஹங்காக்களில் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றார்போல் மிகவும் டிரெண்டாகவும், அசத்தலாகவும் வந்திருக்கின்றன.
- பெண்கள் அணியும் துப்பட்டா, அவர்களுக்கு கூடுதல் அழகை தரக்கூடியது.
- துப்பட்டாவை பலவிதமான முறைகளில் அணிய முடியும். அதற்கான குறிப்புகள் இங்கே.
உங்களுக்குப் பிடித்த நீளமான துப்பட்டாவை எடுத்து, இரண்டாக மடித்துக்கொள்ள வேண்டும். பின் கழுத்து வழியாக துப்பட்டா முன்னால் வரும்படி அணிந்தால், ஒரு பக்கத்தில் துப்பட்டாவின் இரண்டு முனைகளும், மறுபக்கத்தில் துப்பட்டாவை மடக்கிய வளையம் போன்ற அமைப்பும் கிடைக்கும். ஆடைக்கு ஏற்றவாறு பெண்கள் அணியும் துப்பட்டா, அவர்களுக்கு கூடுதல் அழகையும், பாதுகாப்பையும் தரக்கூடியது. இதை ஒரே மாதிரியாக அணியாமல், பலவிதமான முறைகளில் அணிய முடியும். அதற்கான குறிப்புகள் இங்கே.
பின்னல் அமைப்பு ஸ்டைல்: உங்களுக்குப் பிடித்த நீளமான துப்பட்டாவை எடுத்து, இரண்டாக மடித்துக்கொள்ள வேண்டும். பின் கழுத்து வழியாக துப்பட்டா முன்னால் வரும்படி அணிந்தால், ஒரு பக்கத்தில் துப்பட்டாவின் இரண்டு முனைகளும், மறுபக்கத்தில் துப்பட்டாவை மடக்கிய வளையம் போன்ற அமைப்பும் கிடைக்கும். அந்த இடைவெளி வழியாக துப்பட்டாவின் இரண்டு முனைகளையும் இழுக்க வேண்டும். பின்பு அவற்றை இன்னொரு முறை சுழற்றி அவற்றில் துப்பட்டாவின் இரண்டு முனைகளையும் இழுக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து கொண்டே வந்தால் 'பின்னல்' போன்ற அமைப்பில் துப்பட்டாவை அணியலாம்.
டபுள் பந்தனா ஸ்டைல்: இந்த ஸ்டைலில் சதுர அல்லது செவ்வக வடிவில் நான்கு முனைகளுடன் இருக்கும் துப்பட்டாவை, எதிரெதிர் முனையுடன் சேர்த்து மடித்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது துப்பட்டா முக்கோண வடிவத்திற்கு வரும். பிறகு துப்பட்டா மடிக்கப்பட்ட இடத்தில் உள்ள நேரெதிர் முனைகளை முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும். வளையம் போன்ற அமைப்பை கழுத்தில் அணிந்து கொண்டு அதனை சுழற்றி திருப்பி தலையில் அணிந்து கொள்ள வேண்டும். பின்பக்கமாக சென்ற துப்பட்டாவை, முன்புறமாக மாற்றிக் கொண்டால் 'டபுள் பந்தனா' டிசைன் தயார்.
பிரெஞ்சு வளைவு ஸ்டைல்: பெண்களை மிகவும் கவர்ந்த ஸ்டைலான இதை செய்வதற்கு, துப்பட்டாவை இரண்டாக மடித்து கழுத்தில் அணிய வேண்டும். பிறகு, ஒரு பக்கத்தில் வரும் வளையத்தில், அதாவது ஓட்டையில் மறுபக்கத்தில் உள்ள துப்பட்டாவின் இரண்டு முனைகளில் ஒரு முனையை இழுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதே வளையத்தில் மற்றொரு முனையையும் உள்ளிழுத்தால், அழகான 'பிரெஞ்சு வளைவு' தயாராகிவிடும்.
பின்புற முடிச்சு 'கோட்' ஸ்டைல்: நீளமான துப்பட்டாவை, முதுகுக்கு பின்புறமாக தோள்பட்டையில் கைகளைக் கட்டுவது போல நன்றாக முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும். பிறகு முடிச்சு போட்ட இடத்தை மறைய வைக்கும் படி துப்பட்டாவை தோள் வரை இழுத்துக்கொள்ள வேண்டும். இந்த முறையில் துப்பட்டா முன்புறமாக பார்க்கையில், கோட் அணிந்ததுபோல அழகான காட்சியை ஏற்படுத்தும்.
பெல்ட் கேப் ஸ்டைல்: பெரிதாக இருக்கும் துப்பட்டாவை முக்கோண வடிவில் மடித்து கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும். இரு பக்கத்திலும் உள்ள துப்பட்டாவை ஒன்றின் மேல் ஒன்று வைத்து துப்பட்டாவின் நிறத்திற்கேற்ற பெல்டை இடுப்பு பகுதியில் அணிந்து கொள்ள வேண்டும். இந்த ஸ்டைல், பல பெண்களால் விரும்பி அணியப்படுகிறது.
- சிக்கன்காரி புடவைகள் மற்றும் குர்த்திகள் இந்தியாவில் உள்ள அழகிய ஆடைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
- ஜாலி வேலைப்பாடு என்பது சிக்கன்காரியில் பயன்படுத்தப்படும் ஒரு நுட்பம்.
ஜாலி வேலைப்பாடு என்பது துணிகளில் துளைகளை உருவாக்கி,அந்தத் துளைகளைச் சுற்றி செய்யப்படும் நூல் வேலைக்கு ஒப்பான ஒரு நுட்பமான வேலைப்பாடாகும். துணிகளில் வெறும் துளைகளை மட்டும் உண்டாக்கி செய்யப்படும் வேலைப் பாட்டிலிருந்து இது சற்று வேறுபட்டது என்று சொல்லலாம்.துணியின் தொடர்ச்சியை சேதப்படுத்தாமல் ஒரு ஊசியால் வார்ப் மற்றும் நெசவு நூல்களை வெளியில் இழுத்து துளைகளை உருவாக்குவதை உள்ளடக்கியதே இந்த வேலைப்பாட்டின் சிறப்பாகும்.இதன் மூலம் எம்பிராய்டரி வேலைப்பாட்டிலிருந்து இது சற்று வேறுபட்டது என்பது புரிந்திருக்கும். உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிக்கன்காரி வேலைகளில் இந்த சிறப்பு வாய்ந்த நுட்பத்தைப் பயன்படுத்தி துணிகளில் மிகச்சிறந்த வேலைப்பாடுகள் செய்யப்படுகின்றன. துணிகளில் ஜாலி என்பது ஒரு குறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட தட்டி(டிரெலிஸ்) என்றும் அழைக்கப்படுகிறது.
தையல் மற்றும் எம்பிராய்டரி என்பது காலங்காலமாக முதலில் தேவையாகவும் பின்னர் ஒரு விலை போகும் பொருளாகவும் இருந்திருக்கின்றது.துணிகளை கற்கள் மற்றும் நூல்களால் அழகுபடுத்துவது, ஜமிக்கி வேலைப்பாடுகள் என பல்வேறு அலங்காரங்கள் இருந்தாலும் இந்த ஜாலி வேலைப்பாடு என்பது சற்று வித்தியாசமான அதிநவீன வேலைப் பாடாக இருந்ததால் மக்களிடையே பிரபலமானது.
முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரின் மனைவியான நூர்ஜஹான், துருக்கிய கட்டிடக்கலையில் சிறப்பு ஆர்வம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.பரந்த திறந்த வடிவமைப்புகளும், ஜாலியின் காட்சி விளைவுகளும், அதாவது கான்கிரீட்டில் உள்ள லேட்டிஸ் திரைகளும் அவரைக் கவர்ந்தன. ஜாலி அல்லது லேட்டிஸ் திரைகளை கான்கிரீட்டில் பிரதி செய்ய வேண்டும் என்ற ஆசைதான் சிக்கன்காரியில் இந்த நுட்பத்தை உருவாக்க தூண்டியது.முகலாய கட்டிடக்கலையில், அரண்மனைகள் மற்றும் கோட்டைகள் போன்றவற்றில் இந்த லேட்டீஸ் திரைகள் போன்ற அமைப்புகள் முகலாயர்களுக்கு ஒரு அடையாளமாக மாறியது
வேலைப்பாடு
சுமார் 40 தையல்கள் உள்ள இந்த சிக்கன் காரி வேலைப்பாட்டில் ஒருவகையான தையலில் நிபுணத்துவம் பெற்ற கைவினைஞர்கள் தங்கள் ஆடைகளில் மட்டுமே வேலைப்பாடுகளை செய்துகொள்வது இதன் சிறப்பம்சமாகும்.. இந்த ஆடைகளில் விடுபட்ட இடங்களை நிரப்பும் கைவினைஞர்களால் துணிகளில் ஜாலிகளை உருவாக்க முடியாது.. ஜாலிகளை உருவாக்குவதற்கென்றே நிபுணத்துவம் பெற்ற கைவினைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களால் மட்டுமே இதுபோன்ற ஜாலிகளை உருவாக்க முடியும்.
'அசெம்பிளி லைன்' எனப்படும் எம்பிராய்டரி வேலைப் பாட்டின் ஆரம்ப வடிவங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. வார்ப் மூலம் துணியின் மீது ஜாலியை உருவாக்கும் வேலை செய்யப்படுகிறது..ஒரு ஊசியால் நெசவு நூல்களைப் பிரித்து இறுக்குவதன் மூலம் துணியில் வலை போன்ற தோற்றமானது உருவாகின்றது.இது துணியின் வலிமையை சமரசம் செய்யாமல் வழக்கமான சுற்றளவுடன் துளைகளை உருவாக்குகிறது. துளைகளுடன் உருவாக்கப்பட்ட துணியை நிரப்ப கைவினைஞர்கள் அந்த வலையைச் சுற்றி வேலைபாடுகளைச் செய்கிறார்கள்.
பாணி மற்றும் வகை
நெட்டட் துணிகளை தயாரிக்கும் வேலையைப் போன்றதே இந்த ஜாலியை உருவாக்கும் விளைவு என்று சொல்லலாம். இது ஆடையை மிகவும் நேர்த்தியாகவும் எடை குறைந்ததாகவும் மாற்ற உதவுகிறது. ஜாலி வேலைப்பாடு என்பது சிக்கன்காரியில் பயன்படுத்தப்படும் ஒரு நுட்பமாக இருந்தாலும், இதுபோன்ற பல நுட்பத்துடன் கூடிய வேலைப்பாடுகளை அது தன்னகத்தே கொண்டுள்ளது.
ஹத்கதி மற்றும் பேங்க் ஜெயில் என்று அழைக்கப்படும் இரண்டு நேரான ஜாலி தையல்கள் இந்த வேலைப்பாட்டில் பயன்படுத்தப் படுகின்றன.புள்புள் சாஷ்ம், மக்ரா, மந்த்ராஸி, பூல் ஜாலி, சிதாவுல் ஜாலி மற்றும் தாஜ்மஹால் ஆகியவை பொதுவாகக் காணப்படும் பிற ஜாலி தையல்கள் ஆகும்.சிக்கன்காரி ஆடைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் மோட்ஃப்கள் பூக்கள், கொடிகள், இலைகள் மற்றும் புட்டிஸ். இதற்குள் ஜாலிகள் உருவாக்கப்படுகின்றன.
இன்றைய சூழ்நிலை
உலகெங்கிலும் உள்ள இந்தியர்களால் மிகவும் பிரபலமாக அறியப்பட்ட எம்பிராய்டரி வடிவங்களில் ஒன்று என்று சிக்கன்காரி ஆடைகளைச் சொல்லலாம்..உலக அளவில் போற்றப்படும் சில சிறந்த இந்திய வடிவமைப்பாளர்களால் வடிவமைக்கப்பட்டஇந்த ஜாலி வேலைப்பாட்டுடன் கூடிய சிக்கன்காரி உடைகளை அணிந்து ஆடவரும், பெண்களும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பு போட்டிகளில் பங்கு பெறுகிறார்கள். இருப்பினும் சிக்கன் காரி கலையை கற்றுக்கொள்ளும் கலைஞர்களின் எண்ணிக்கை இந்தியாவில் குறைந்து வருகிறது.
ஜாலிஸை உருவாக்கும் நுட்பம் உலகம் முழுவதும் பலரால் கவனிக்கப்படுகிறது. பாரம்பரிய கலை வடிவங்களைப் பாதுகாப்பதில் நம்பிக்கை கொண்ட பல வடிவமைப்பாளர்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் இந்த வகை எம்பிராய்டரியை மேம்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிய தீவிரமாக முயற்சி செய்கின்றனர்.தேவை அதிகரிப்பு மற்றும் உற்பத்தி குறைவு போன்ற காரணங்களால்,சிக்கன்காரி ஆடைகளின் விலை உயர்ந்து கொண்டு வருகிறது.
பராமரிப்பு
ஜாலி உருவாக்கப்படும் விதத்தால் துணியானது எந்தவித சமரசமும் இல்லாமல் முன்பு எப்படி வலிமையாக இருந்ததோ அதேபோன்ற வலிமையுடன் ஜாலி உருவாக்கப்பட்ட பின்பும் இருக்கின்றது.இதனால் இந்த ஆடையை பராமரிப்பது என்பது எளிதாகிறது.வழக்கமான சலவை மற்றும் இஸ்திரி நுட்பங்கள் ஜாலி வேலைப்பாடுகளுடன் கூடிய ஆடைகளுக்கு ஏற்றவையாக இருக்கின்றது.மற்ற சாதாரண துணிகளுக்கு செய்யும் பராமரிப்பு போன்ற பராமரிப்பை இந்த துணிகளுக்கும் வழங்கலாம்.
ஜாலியில் உள்ள துளைகள் கைவினைஞர்கள் விரும்பும் நீளம் மற்றும் அகலத்தில் இருப்பது போன்று உருவாக்கப்படுகின்றது. அது பொதுவாக அவர்களுடைய படைப்புப் பார்வையைப் பொறுத்தது.
ஜாலியை முடிக்க, அது உருவாக்கப்பட்ட பகுதியைச் சுற்றி ஒரு அவுட்டர் லைனிங் இருக்க வேண்டும்.ஒரு ஜாலி எப்போதுமே ஏதாவது ஒரு மையக் கருத்தை கொண்டிருப்பதுபோல் செய்யப்படுகிறது.
சிக்கன்காரி புடவைகள் மற்றும் குர்த்திகள் இந்தியாவில் உள்ள அழகிய ஆடைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
முதலில், சிக்கன்காரி வெள்ளை நிற துணிகள் அல்லது பேஸ்டல் வண்ணங்களில் மட்டுமே செய்யப்பட்டாலும், தற்பொழுது துடிப்பான வண்ணங்களில் செய்யப்படும் சிக்கன்காரி ஆடைகளை இன்றைய தலைமுறையினர் மிகவும் விரும்பி அணிகின்றனர்.