search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223415"

    • நாவலூரில் உள்ள சுங்கச்சாவடி மட்டும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
    • பழைய மாமல்லபுரம் குடியிருப்போர் நல சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    திருப்போரூர்:

    பழைய மாமல்லபுரம் சாலை நாவலூரில் சுங்கச்சாவடி உள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு மெட்ரோ ரெயில் பணிக்காக அரசு சார்பில் சென்னையில் உள்ள 5 சுங்கச்சாவடிகளை மூடுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதில் நான்கு சுங்கச்சாவடிகள் மூடப்பட்டன. நாவலூரில் உள்ள சுங்கச்சாவடி மட்டும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

    இதனால் அப்பகுதியில் குடியிருப்போர் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதற்கு பழைய மாமல்லபுரம் குடியிருப்போர் நல சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். நாவலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்று அவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதமும் அனுப்பி உள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ஓ.எம்.ஆர். சாலையில் சுமார் 3 லட்சம் குடியிருப்புகள் உள்ளன. இவர்கள் அனைவரும் நாவலூரில் உள்ள சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

    தற்போது பழைய மாமல்லபுரம் சாலையில் துரைப்பாக்கம், காரப்பாக்கம் சோழிங்கநல்லூர், நாவலூர் பகுதிகளில் மெட்ரோ ரெயில் பணிக்காக சாலையின் நடுவில் ராட்சத தூண்கள் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

    ஆனால் நாவலூரில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது என்றனர்.

    • சென்னை சென்ட்ரலில் இருந்து, நாமக்கல் வழியாக வாரத்திற்கு 3 முறை மதுரை வரை, எக்ஸ்பிரஸ் ரெயில் இயங்குகிறது.
    • இந்த ரெயில், சேலம், கரூர், திண்டுக்கல் ஆகிய ரெயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்கிறது.

    நாமக்கல்:

    சென்னை சென்ட்ரலில் இருந்து, நாமக்கல் வழியாக வாரத்திற்கு 3 முறை மதுரை வரை, எக்ஸ்பிரஸ் ரெயில் இயங்குகிறது. இந்த ரெயில், சேலம், கரூர், திண்டுக்கல் ஆகிய ரெயில் நிலையங்க ளில் மட்டும் நின்று செல்கி றது. நாமக்கல்லில் நிற்ப தில்லை. கடந்த 5 ஆண்டு களாக, இதே நிலைதான் நீடித்து வருகிறது.

    இந்த நிலையில், வரும் 15-ந் தேதி முதல், சென்னை சென்ட்ரல்–, மதுரை எக்ஸ்பிரஸ் ரெயிலை, தேனி மாவட்டம் போடி வரையில் நீட்டிக்க, தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.

    மாவட்டத்தின் தலைநக ரான நாமக்கல்லில், சென்னை–-போடி ரெயில் நின்று செல்வதற்கான நடவ டிக்கைகளை மத்திய இணை மந்திரி முருகன் மற்றும் எம்.பி.க்கள் ராஜேஷ்குமார், சின்ராஜ் ஆகியோர் மேற்கொள்ள வேண்டும் என ரெயில் பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ள னர். சென்னை– - போடி ரெயில், வாரம் தோறும் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமை இரவு 10:30 மணிக்கு, சென்னையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 9:35 மணிக்கு போடி சென்றடைகிறது. நாமக்கல்லை, காலை 4 மணிக்கு கடந்து செல்கிறது.

    மறு மார்க்கமாக ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியா ழக்கிழமைகளில், இரவு 8:30 மணிக்கு போடியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7:55 மணிக்கு சென்னை சென்றடைகிறது. நாமக் கல்லை நள்ளிரவு, 1:30 மணியளவில் கடந்து செல்கிறது.

    இந்தியா முழுவதும் இருந்து, தொழில், கல்வி, வேலை வாய்ப்பு உள்பட பல்வேறு விஷயங்களுக் கான, ஏராளமானோர் நாமக்கல்லுக்கு வந்து செல்கின்றனர். ஆனால் போதிய ரெயில் வசதி இல்லாததால், அவர்கள் கடும் அவதிக்குள்ளா கின்றனர்.

    சென்னை சென்ட்ரல் - –போடி எக்ஸ்பிரஸ் ரெயில், நாமக்கல்லில் நின்று சென்றால், பயணிகள் அனைவருக்கும் பயனுள்ள தாக அமையும். அதனால், சென்னை சென்ட்ரல் - –போடி விரைவு ரெயில் நாமக்கல்லில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • சாய்ந்து விழும் அபாய நிலையில் மின் கம்பம் காணப்படுகிறது.
    • அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதற்கு முன் மின் கம்பத்தை சரிசெய்ய வேண்டும்.

    காங்கயம் :

    காங்கயம் ஒன்றியம் ஆலாம்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட சென்னிமலைக்கவுண்டன்வலசு பகுதியில் குடியிருப்பை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள மின் கம்பம், சாய்ந்து விழும் அபாய நிலையில் காணப்படுகிறது.

    பலமான காற்று வீசும் போது மின் கம்பம் சாய்ந்து வீட்டின் மீது விழும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனா். எனவே, அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதற்கு முன் சாய்ந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பத்தை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். 

    • மின்கட்டணத்தை மீண்டும் உயர்த்தும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
    • இதை உடனடியாக கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

    மதுரை

    முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் உள்ள 2 கோடியே 37 லட்சம் மின் நுகர்வோர்கள் பாதிக்கப்படக்கூடிய வகையில் தி.மு.க. அரசு கடந்த செப்டம்பரில் மின் கட்டணத்தை உயர்த்தியது.

    தமிழகத்தில் 50 லட்சம் சிறு, குறு நிறுவனங்கள் உள்ளது. இதில் ஏறத்தாழ ஒரு கோடி பேர் வேலை செய்கின்றனர். கொரோனா காலத்தில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வர முடியாமல் இருக்கும் நிலையில், அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் அவர்களுக்கு சுமையை ஏற்படுத்தும் வகையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.

    மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி, தி.மு.க. அரசுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர் போராட்டங்களை நடத்தினார். இந்த நிலையில் தற்போது வெந்த புண்ணில் வேல் பாய்சுவது போல் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியுள்ள அனுமதியின்பேரில் அடுத்த மாதம் முதல் மின்கட்ட ணத்தை 4.70 சதவீதம் உயர்த்த மின்வாரியம் முடிவு செய்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.மின் கட்டணத்தை உயர்த்தி 9 மாதங்களே ஆன நிலையில் மீண்டும் கட்டணத்தை உயர்த்த தி.மு.க. அரசு முடிவு செய்துள்ளது. எதிர் கட்சியாக இருந்தபோது உயர்த்தாத மின் கட்ட ணத்திற்கு எதிராக மு.க.ஸ்டாலின் போராட்டம் நடத்தினார். ஆனால் இன்று அவரது ஆட்சியில் மின் கட்டணத்தை உயர்த்துகிறார். இது நியாயமா? என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் கேள்வியாக உள்ளது.

    எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்த போது மத்திய அரசு அழுத்தம் கொடுத்தும் நிதிசுமை இருந்த போதும் மின் கட்டணத்தை உயர்த்த வில்லை. அதனால் இந்த மின் கட்டணத்தை உயர்வு என்பது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது இதை உடனடியாக கைவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஹஜ் பயணிகளுக்கு ரெயில்களில் சிறப்பு பெட்டிகளை ஒதுக்க வேண்டும்.
    • நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை விடுத்தார்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி தெற்கு ரெயில்வே பொதுமேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக யாத்திரீகர்கள் சென்னைக்கு பயணம் மேற்கொள்ளும் நிலை உள்ளது. எனவே பல்வேறு மாவட்டங்களில் இருந்து ரெயில்கள் மூலம் வரும் ஹஜ் பயணிகளுக்கு சிறப்பு ரெயில் பெட்டிகளை ஒதுக்க வேண்டும். மிக குறைவான நாட்களில் ஹஜ் விமான தேதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளதால் முன்கூட்டியே முன்பதிவு செய்ய முடியாத நிலைக்கு ஹஜ் பயணிகள் உள்ளனர். எனவே இதனை கருத்தில் கொண்டு ஹஜ் பயணிகள் சிரமமின்றி சென்னை வருவதற்கு ஏதுவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை வரும் ரெயில்களில் சிறப்பு பெட்டிகளை ஒதுக்கி தர வேண்டும்

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 360 மனுக்கள் பெறப்பட்டது.
    • மேற்கொள்ளப்பட்டு வரும் விபரத்தை மனுதாரருக்கு தெரிவிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமையேற்று பேசியதாவது:-

    மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 360 மனுக்கள் பெறப்பட்டது.

    இந்த மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதனைத் தொடர்ந்து அவர், முதலமைச்சர் பொது நிவாரண நிதியுதவியாக ரூ.1 லட்சத்திற்கான காசோலையினை மேலவெளி கிராமம் பரிசுத்தம் நகரினை சேர்ந்த இளங்கோவன் என்பவர் மின்சாரம் தாக்கி இறந்ததால் அவரது மனைவி லலிதாவிடம் வழங்கினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், தனித்துணை கலெக்டர் தவவளவன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் குளோரி குணசீலி, மாவட்ட திட்ட அலுவலர் விஜய் ஆனந்த் (முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்) மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் பயன்படுத்தி வரும் பாதையில் 15 அடி ஆழமான வாய்க்கால் உள்ளது
    • ஆபத்தான பள்ளத்தில் இறங்கி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிபாடி அம்பேத்கர் நகர் பகுதியில் வசித்து வரும் கிறிஸ்தவ மதத்தவ ர்களுக்கான சடலத்தை புதைக்கும் சுடுகாடு கே.கே. நகர் மேற்கு பகுதியில் உள்ளது. இந்த சுடுகாட்டுக்கு செல்ல கடந்த 50 ஆண்டுகளு க்கும் மேலாக இவர்கள் பயன்படுத்தி வரும் பாதையில் 15 அடி ஆழமான வாய்க்கால் உள்ளது ஒவ்வொரு முறையும் சடலத்தை சுமந்து செல்லும் பொழுது 15 அடி வாய்க்காலில் தண்ணீரில் மிதந்து சென்று எடுத்துச் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    சுடுகாட்டிற்கு செல்வதற்கு பாலம் கட்டித் தர கடந்த 50 ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் மாவ ட்ட நிர்வாகம் இது வரை பாலம் கட்டித் தரவில்லை எனவும் இதனால் ஒவ்வொரு முறையும் உடலை 15 அடி ஆழமான ஆபத்தான பள்ளத்தில் இறங்கி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். தற்ேபாது அப்பகுதியில் இறந்த கூலித் தொழிலாளி மரியதாஸ் உடலை 15 அடி ஆழமான வாய்க்கால் பள்ளத்தில் இறங்கி எடுத்துச் சென்ற காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை அடுத்து உடனடியாக மாவட்ட நிர்வாகம் பாலம் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • 2 கிலோமீட்டர் சாலையை மலைப்பாதையில் அமைக்க அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
    • இந்த இணைப்பு சாலை அமைக்கப்படும் பட்சத்தில் தருமபுரியில் இருந்து பொம்மிடி மற்றும் சேலம் மாவட்டத்திற்கு செல்வது எளிதாக இருக்கும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், மிட்டாரெட்டி அள்ளியை அடுத்த கோமேரிக் கொட்டாய் கிராம மக்கள் பொம்மிடி பகுதியில் இருந்து விவசாய வேலைகள், பள்ளி, கல்லூரிகள் என சென்று வருகின்றனர். பொம்மிடி மற்றும் கோமேரிக்கொட்டாய் இடையே வனப்பகுதியில் மலை சாலையை கடந்து இப்பகுதி மக்கள் பயணித்து வருகின்றனர்.

    இந்த மலைப் பகுதியில் முறையான சாலை வசதி இல்லாததால், இந்த பகுதி மக்கள் சுமார் 50 கிலோ மீட்டர் சுற்றி வருகின்ற நிலை இருந்து வருகிறது. இதனால் இந்த 4 கிலோமீட்டர் உள்ள மலை சாலையை இணைக்க வேண்டும் என கிராம மக்கள் பல ஆண்டுகளாக நீண்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பவர் கிரீட் உயர்மின் கோபுரம் அமைப்பதற்காக இந்த வனப் பகுதியில் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் சாலை பணிகள் முடிவடைந்த உடன் இந்த சாலை முழுவதுமாக அடைக்கப்பட்டது.

    இந்த சாலை இருந்தவரை பொதுமக்கள் அதை பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது பயன்படுத்த முடியாத சூழலில் இருந்து வருகின்றனர். தொடர்ந்து மலை கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, இன்று மலைப் பகுதியில் தருமபுரி-பொம்மிடி மற்றும் தருமபுரி-சேலம் மாவட்டத்தை இணைக்கும் மலை பாதை அமைய உள்ள இடத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேரில் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது "தற்போதைய சூழலில் பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவிற்கு தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் சூழலில், இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மலை பாதையில் 2 கிலோமீட்டர் சாலை அமைத்து தருமபுரி மற்றும் பொம்மிடி பகுதிகளை இணைக்க முடியவில்லை என்றால் வியப்பாக உள்ளது.

    இங்குள்ள விவசாய கூலி தொழிலாளிகள் பயன்பெறும் வகையில் இந்த 2 கிலோமீட்டர் சாலையை மலைப்பாதையில் அமைக்க அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் இந்த இணைப்பு சாலை அமைக்கப்படும் பட்சத்தில் தருமபுரியில் இருந்து பொம்மிடி மற்றும் சேலம் மாவட்டத்திற்கு செல்வது எளிதாக இருக்கும். பல கிலோமீட்டர் தூரம் சுற்றி வருவது இதனால் குறையும்.

    சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழக அரசு இந்த சாலை பணிகளை உடனடியாக அமைக்க தனி கவனம் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதே பாதையில் பவர் கிரேட் மின் பாதை அமைக்க அனுமதி அளித்து, அதற்கான கோபுரங்களும் நிறுவப்பட்டு, தற்போது செயல்பாட்டிலும் வந்துள்ளது.

    ஆனால் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் இது வழித்தடத்தில் சாலை அமைக்க அனுமதி அளிக்காமல் இருப்பது வருத்தத்துக்குரியது" என தெரிவித்தார்.

    • பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என மனு அளித்தார்.
    • கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட அளவிலான அனைத்து த்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தலைமையில் நடைபெற்றது.

    அதில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் கலந்து கொண்டு பேசியதாவது, நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு புதிய பொறுப்பு அமைச்சர், புதிய மாவட்ட ஆட்சியர், புதிய காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்ட பிறகு நடக்கும் இந்த முதல் ஆய்வுக் கூட்டத்தில் நாகை சட்டமன்ற தொகுதியின் திட்டங்கள் மற்றும் கோரிக்கைகளை கவனப்படுத்துகிறேன்.

    நாகை புதிய புறநகர் பேருந்து நிலையம், நாகை அக்கரைப்பேட்டை ரயில்வே மேம்பாலம், நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனை புதிய கட்டடம், சாமந்தான் பேட்டை மீன்பிடி துறைமுகம், பட்டினச்சேரி கடல் அரிப்பு தடுப்புச் சுவர், நாகையில் பணிபுரியும் மகளிர்க்கு அரசு தங்கும் விடுதி, நாகூர் நெய்தல் பூங்கா, நாகை புதிய கடற்கரையை நீலக்கொடி திட்டத்தின் கீழ் மேம்படுத்துவது, நாகூர் துணை மின் நிலையம், நம்பியார் நகர் புயல் பாதுகாப்பு மையம், நாகை வருவாய் அலுவலகம் பாரம்பரிய கட்டடம் புனரமைப்பு ஆகிய திட்டப்பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    அவற்றை விரைந்து செயல்படுத்த வேண்டும்.அதுபோல் நாகை தொகுதி சார்ந்த கோரிக்கைகள் நிறைய உள்ளன.

    குறிப்பாக, திருமருகல் தனி தாலுகா, நாகையில் அரசு சட்டக் கல்லூரி, காடம்பாடி நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்துதல், நாகை நகராட்சியை தரம் உயர்த்துதல்,

    நாகூர் சில்லடி கடற்க ரையை மேம்படுத்துவது, நாகூர் பேருந்து நிலையம் சீரமைப்பது, நாகை நீதிமன்ற வளாகத்தில் உள்ள சூடாமணி விகாரம் கட்டடத்தில் அருங்காட்சியம் அமைப்பது, பாரதி மார்கெட் புதிய கட்டடம், நாகை அரசு மருத்துவமனையை மேம்படுத்துவது, ஏனங்குடி விளையாட்டு மைதானம் மேம்படுத்துவது, திட்டச்சேரி பேரூராட்சிக்கு சிறப்பு திட்டங்கள், திருச்செங்காட்டங்குடி உத்திராபதீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் தங்கும் விடுதி, நாகையில் பீச் வாலிபால் அகாடமி, அழிஞ்சமங்கலம் ஆதி திராவிடர் நல உயர் நிலைப் பள்ளியை தரம் உயர்த்துதல், நாகூர் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு, நாகூர் சில்லடி மற்றும் நாகை புதிய கடற்கரையில் புறக்காவல் நிலையம், நாகை நகராட்சி பாரம்பரிய கட்டடம் புனரமைப்பு, நாகையில் மறைமலை அடிகள் நினைவு கலையரங்கம், நாகை செல்லூர் அரசு கலை அறிவியல் கல்லூரி உட்கட்டமைப்பு மேம்பாடு, நாகூர் திட்டச்சேரி திருமருகல் நூலகங்களுக்கு புதிய கட்டடம் ஆகிய கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு ஷா நவாஸ் எம்.எல்.ஏ பேசினார். கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்தார்.

    • கழிவு நீர் ரோட்டில் தேங்கி, துர்நாற்றம் வீசுவதால் கொசு உற்பத்தியாகிறது.
    • பலருக்கு மலேரியா போன்ற மற்றும் தொற்று நோய் ஏற்பட்டு அவதிக்குள்ளாகிறார்கள்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள வண்டிபாளையம் கிராமத்தில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட குடும்ப ங்கள் உள்ளன. இவர்கள் அனைவரும் விவசாயிகள். வண்டிபாளையம் கிராமத்தில் விநாயகர் கோவில் தெருவில் வசிப்ப வர்கள் தினந்தோறும் விளைநிலத்திற்கு செல்வது வழக்கம் அந்த பகுதி விநாயகர் கோவில் தெருவில் கழிவுநீர் வாய்க்கால் இல்லை. எனவே கழிவு நீர் ரோட்டில் தேங்கி, துர்நாற்றம் வீசுவதால் கொசு உற்பத்தியாகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

    இதனால் அந்த கிராமத்தில் வசிக்கும் பலருக்கு மலேரியா போன்ற மற்றும் தொற்று நோய் ஏற்பட்டு அவதிக்குள்ளாகிறார்கள். எனவே மரக்காணம் மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு உடனடியாக அந்த பகுதியை சீரமைக்க கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • செக்கானூரணி பகுதியில் மின் மயானம் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    • வேறு இடத்திற்கு மாற்ற தேவையான நடவடிக்கைகளையும் விரைந்து முடிக்க கோரி உதயகுமார் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆ. கொக்குளம், தேங்கல்பட்டி, செக்கானூரணி கிராம பகுதிகளுக்கு பாத்தியமான மயானம் செக்கானூரணியில் நீண்ட காலமாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த மயானத்தை மின் மயானமாக மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இதற்கு அப்பகுதி பொதுமக்கள் திடீரென எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமாரும் செக்கானூரணியில் மின் மயானம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதுரை மாவட்ட கலெக்டர் மற்றும் திட்ட இயக்குனர் ஆகியோருக்கு அவர் அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆ. கொக்குளம் கிராமத்தைச் சேர்ந்த தேங்கல்பட்டி கிராமம், செக்கானூரணி கிராம மக்களுக்கு பாத்தியமான மயானம் செக்கானூரணியில் நீண்ட காலமாக பயன்பாட்டில் உள்ளது. இந்த மயானத்தில் அனைத்து தரப்பு மக்களும் தங்களின் பாரம்பரிய முறையில் சாஸ்திரங்கள், சம்பிர தாயங்கள், முறைப்படி காரியங்கள் செய்து வருகிறார்கள்.

    தற்போது அந்த பகுதியில் பாரம்பரிய மயானத்தை மாற்றி மின்மயானம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் பாரம்பாரிய மான மயானத்தை மாற்றினால் தங்களின் பாரம்பரிய சாஸ்திர சம்பிரதாய முறை பாதிக்கப்படும் என்று வேதனை தெரிவிக்கிறார்கள்.

    எனவே மின் மயானம் அமைக்கும் நடவடிக்கையை கைவிட்டு செக்கானூரணியில் பாரம்பரிய மயானம் தொடர்ந்து நடைபெற நட வடிக்கை எடுக்க வேண்டும். மேலும் செக்கானூரணியில் அமைக்க திட்டமிட்டிருந்த மின் மயானத்தை வேறு இடத்திற்கு மாற்ற தேவையான நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பொது சுகாதாரத்திற்கு ஆபத்து ஏற்படும் அளவிற்கு செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் மாநில அளவில் முதலிடம் பெறும் பள்ளியாக செயல்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சியில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மேயர் சரவணன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். துணை மேயர் ராஜு முன்னிலை வகித்தார்.

    பா.ஜனதா மனு

    பா.ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி அளித்த மனுவில், பாளை மண்ட லத்துக்குட்பட்ட 33-வது வார்டில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி அருகே சுகாதாரத் துறையை சேர்ந்த ஊழியர்கள் பாளை மாண்டல பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை, கட்டிடக்கழிவுகளை குவித்து வைத்துள்ளனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பொது சுகாதாரத்திற்கு ஆபத்து ஏற்படும் அளவிற்கு செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    பாளை மகாராஜா நகர் பொதுமக்கள் அளித்த மனுவில், நெல்லை மாநகராட்சி விரிவாக்கப் பகுதிகளில் வறட்சியின் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே வணிக ரீதியான மற்றும் பொதுமக்கள் குடிபுகாத அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு புதிதாக குடிநீர் இணைப்பு வழங்குவதை கோடை காலம் முடியும் வரை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    கல்லணை பள்ளி

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை தாலுகா குழு செயலாளர் துரை நாராயணன் அளித்த மனுவில், கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் மாநில அளவில் முதலிடம் பெறும் பள்ளியாக செயல்பட்டு வருகிறது. இங்கு 6 முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 4,300 மாணவிகள் பயின்று வருகின்றனர். பழைய கல்லணை கட்டிடத்திலும் ஏராளமான மாணவிகள் பயின்று வருகின்றனர். மாநகர மக்களின் பெண் குழந்தைகள் படிப்பதற்கு இங்கு கட்டிடங்கள் போதுமானதாக இல்லை. கடந்த 2 ஆண்டுகளாக காலை, மாலை என சுழற்சி முறையில் மாணவிகள் பயின்று வருகின்றனர்.இந்த பழைய கல்லணை பள்ளியில் பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு சுமார் 4 வருடங்களாக புதிய கட்டிடம் கட்டப்படாமல் உள்ளது. பழைய கல்லணை பள்ளியில் 56 ஆசிரியர்களுக்கு 2 கழிப்பிடம் தான் உள்ளது. எனவே கூடுதல் கழிப்பிடம் கட்டித் தர வேண்டும். தினசரி பயன்படுத்தும் பகுதியான குடிநீர் குழாய், கைகள் கழுவும் பகுதிகளையும் சீரமைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    பழைய பேட்டை வாணியர் தெற்கு தெருவை சேர்ந்த சுப்ரமணியன் என்பவர் அளித்த மனுவில், சந்திப்பு ரெயில் நிலையம் செல்லும் சாலையில் ஓரத்தில் இட்லி வியாபாரம் செய்து வந்தேன். போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி அதனை அதிகாரிகள் அகற்றி விட்டனர். எனவே எனக்கு இட்லி கடை நடத்துவதற்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    ×