search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223651"

    • பாரம்பரிய முறையில் சுமார் 1,200 நாட்டு படகுகளில் 10 கடற்கரை மீனவ கிராமங்களை சார்ந்த சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர்.
    • கடல் பகுதி மற்றும் அதன் தென் தமிழக கடலோர பகுதியில் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என எச்சரித்துள்ளது.

    நெல்லை:

    காற்றின் வேகம் அதிகமாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய வானிலை எச்சரிக்கையின்படி நெல்லை மாவட்ட மீனவர்கள் வருகிற 9-ம் தேதி வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள சுமார் 1,200 நாட்டுப் படகுகள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.

    நெல்லை மாவட்டத்தில் பாரம்பரிய முறையில் சுமார் 1,200 நாட்டு படகுகளில் 10 கடற்கரை மீனவ கிராமங்களை சார்ந்த சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வானிலை எச்சரிக்கையின் படி மன்னார் வளைகுடா, கன்னியாகுமரி கடல் பகுதி மற்றும் அதன் தென் தமிழக கடலோர பகுதியில் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என எச்சரித்துள்ளது.

    இதனை அடுத்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நெல்லை மாவட்ட மீனவர்கள் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது. இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 கடலோர மீனவ கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.

    • பவுர்ணமியையொட்டி நேற்று முதல் கன்னியாகுமரியில் கடல் சீற்றமாகவும், கொந்தளிப்பாகவும் காணப்படுகிறது.
    • படகுத்துறை நுழைவு வாயிலில் 2 மணி நேரம் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகு அடிக்கடி கடல் உள்வாங்குவது, நீர்மட்டம் தாழ்வது, நீர்மட்டம் உயர்வது, சீற்றம், கொந்தளிப்பு, ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசுவது, அலையே இல்லாமல் கடல் அமைதியாக குளம்போல் காட்சியளிப்பது, கடல் நிறம் மாறுவது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

    குறிப்பாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் பவுர்ணமியையொட்டி நேற்று முதல் கன்னியாகுமரியில் கடல் சீற்றமாகவும், கொந்தளிப்பாகவும் காணப்படுகிறது. இன்று காலை கடல் நீர்மட்டம் "திடீர்" என்று தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது.

    இதனால் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள வங்ககடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது.

    இதனால் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகுகள் படகு துறையில் மணலில் தரை தட்டி நின்றது. அதேவேளையில் இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடனும் சீற்றமாகமாகவும் காணப்பட்டது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கப்படவில்லை. இதனால் இன்று காலை விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்ப்பதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை நுழைவு வாயிலில் 2 மணி நேரம் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இதற்கிடையில் காலை 10 மணிக்கு கடல் சகஜநிலைக்கு திரும்பியது. இதைத்தொடர்ந்து 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. அதன் பிறகு 2 மணி நேரம் காத்திருந்த சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வந்தனர். முக்கடல் சங்கமத்தில் சுற்றுலா பயணிகள் கடல் சீற்றம் காரணமாக கடலில் குளிக்க சுற்றுலா போலீசார் தடை விதித்தனர்.

    மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி ஆக்ரோஷமாக வீசின. 

    • பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தொடர் கோடை விடுமுறை என்பதால் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு கடந்த சில நாட்களாக பக்தர்களின் வருகை பல மடங்காக அதிகரித்துள்ளது.
    • கோவிலில் உள்ள புனித தீர்த்தங்களில் நீராடி ஒவ்வொரு சன்னதியாக சென்று வழிபட்டனர்.

    ராமேசுவரம்:

    தமிழகத்தில் பல மாநில பக்தர்கள் தரிசனம் செய்யும் புனித திருத்தலமாக போற்றப்படுவது ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில். காசிக்கு நிகராக இந்த கோவில் விளங்குவதாலும், ராமர் வழிபட்ட கோவில் என்பதாலும் இந்த கோவிலுக்கு தினமும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடவும், சாமி தரிசனம் செய்யவும், தங்களது முன்னோர்களுக்கு பித்ரு வழிபாடு செய்யவும் வருகை தருகின்றனர்.

    தற்போது பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தொடர் கோடை விடுமுறை என்பதால் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு கடந்த சில நாட்களாக பக்தர்களின் வருகை பல மடங்காக அதிகரித்துள்ளது.

    இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் நேற்று இரவு முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்திற்கு வர தொடங்கி விட்டனர். இன்று காலை ராமநாதசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட கியூ வரிசையில் காத்திருந்தனர். கோவிலில் உள்ள புனித தீர்த்தங்களில் நீராடி ஒவ்வொரு சன்னதியாக சென்று வழிபட்டனர்.

    அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் பக்தர்கள் புனித நீராடினர்.இந்த நிலையில் காலையில் திடீரென அக்னி தீர்த்த கடற்பகுதியில் சுமார் 50 அடி தூரம் உள்வாங்கியது. இதனால் பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இருந்தபோதிலும் ஏராளமான பக்தர்கள் தொடர்ந்து புனித நீராடினார்கள். வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் கடல் உள்வாங்கியதாக கூறப்படுகிறது.

    • கடலில் குளிக்கும்போது அலையில் சிக்கி பலியாகும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கின்றன.
    • இதை தடுக்கும் வகையில் எச்சரிக்கை பலகை அமைக்கப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகூர் சில்லடி கடற்கரைக்கு வரும் வெளியூர் பயணிகள், கடலில் குளிக்கும்போது அலையில் சிக்கி பலியாகும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கின்றன.

    இதை தடுக்கும் வகையில், கடலில் குளிப்பவர்களுக்கான எச்சரிக்கை பலகை நாகூர் முஸ்லிம் ஜமாத் சார்பில் சில்லடி கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ளது.

    அதை நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் திறந்து வைத்தார்.

    இந்நிகழ்வில், நகர்மன்ற தலைவர் இரா.மாரிமுத்து, துணைத் தலைவர் எம்.ஆர்.செந்தில் குமார், நாகூர் முஸ்லிம் ஜமாத் தலைவர் ஏ.எஸ்.ஏ.காதர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி செயற் பொறியாளர், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேகம் நடத்தி வழிபட்ட பக்தர்கள்
    • சுமார் 50 அடி தூரம் கடல் “திடீர்” என்று உள் வாங்கி காணப்பட்டது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரியில் அம்மாவாசை மற்றும் பௌர்ணமி போன்ற தினங்களில் கடலில் அடிக்கடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

    கடல் நீர்மட்டம் தாழ்வது, கடல் உள்வாங்குவது, கடல் நீர்மட்டம் உயர்வது, கடல் சீற்றம், கடல் கொந்தளிப்பு, கடல் நிறம் மாறுவது, அலையே இல்லாமல் குளம்போல் காட்சியளிப்பது போன்ற இயற்கை மாற்றங்கள் திகழ்ந்து வருகின்றன. அந்த அடிப்படையில் நாளை சர்வ மகாளய அமாவாசை என்பதால் கன்னியாகுமரி கடலில் நேற்று மாலையில் இருந்து கடலில் "திடீர்"என்று மாற்றம் ஏற்பட்டது.

    அப்போது கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் சுமார் 50 அடி தூரம் கடல் "திடீர்" என்று உள் வாங்கி காணப்பட்டது.

    இதனால் அந்த பகுதியில் கடலுக்குள் மூழ்கியிருந்த பாறைகள் மற்றும் மணல் திட்டுகள் வெளியே தெரிந்தன. இதில் பாறையில் இருந்த சுமார் 2 அடி உயரம் உள்ள சிவலிங்க சிலையும் வெளியே தெரிந்தது. இந்த செய்தி அந்த பகுதியில் காட்டு தீ போல் பரவியது.

    இதைத்தொடர்ந்து அந்த சிவலிங்க சிலையை பார்க்க கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். கடலுக்குள் மூழ்கி இருந்த சிவலிங்க சிலைவெளியே தெரிந்ததை பார்த்து பக்தர்கள் பரவசம் அடைந்தனர். இதைப்பார்த்த பக்தர்கள் நேற்று பிரதோஷம் என்பதால் அந்த சிவலிங்க சிலைக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தினார்கள். அந்த சிவலிங்க சிலைக்கு நல்லெண்ணெய், அரிசி மாவு பொடி, மஞ்சள் பொடி, களபம், பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி, புனித நீர் மற்றும் கடல் தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம் நடத்தினார்கள்.

    அதன் பிறகு அந்த சிவலிங்க சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் நடத்தி அலங்கார தீபாரதனை காட்டினார்கள். அப்போது கடற்கரையில் திரண்டிருந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் அந்த சிவலிங்க சிலையை வணங்கிவழிபட்டனர். சிலர் கடலில்இருந்தஅந்த சிவலிங்க சிலையை தங்களது செல்போன்களில் படம் பிடித்து சென்றனர்

    சின்னமுட்டம் துறைமுகத்துக்கு கரை திரும்பும் மீனவர்கள்

    கன்னியாகுமரி:

    ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆழ் கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். இந்த காலங்களில் விசைப்படகுகள் ஆழ் கடலில் சென்று மீன் பிடித்தால் மீன் இனம் அடியோடு அழிந்து விடும் என்று கருதி ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 15-ந்தேதி வரை 61 நாட்கள் கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரையிலான தமிழகத்தின் கிழக்குக் கடற்கரை பகுதியில் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டு வருகிறது.

    அதேபோல இந்த ஆண்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியான கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரை விசைப்படகுகள் மீன் பிடிக்க நாளை முதல் தடை அமுலுக்கு வருகிறது. இதைத்தொடர்ந்து நாளை முதல் கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் துறைமுகத்தின் கரையோரம் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்படுகிறது.

    இதனால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் 2 மாதகாலம் களை இழந்து வெறிச்சோடி காணப்படும். எப்போதும் பரபரப்பாக காணப்படும் மீன் சந்தைகளும் வெறிச்சோடி கிடக்கும். இந்த மீன்பிடி தடை காலங்களில் விசைப்படகு மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையேற்றி பழுது பார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபடுவார்கள். வள்ளம் மற்றும் கட்டு மரங்களில் மட்டும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வார்கள். இதனால் சீலா, வஞ்சிரம் நெய்மீன், பாறை, விளமீன், கைக்கழுவை, நெடுவா போன்ற உயர்ரக மீன்கள் அதிக அளவில் கிடைக்க வாய்ப்பு இல்லை.

    இந்த 2 மாத காலமும் உயர் ரக மீன்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும். இதனால் இந்த உயர்ரக மீன்களின் விலை கடுமையாக உயர வாய்ப்பு உள்ளது. இந்த மீன்பிடி தடை காலத்தினால் கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை வாய்ப்பை இழந்து தவிக்கும் அபாயநிலை ஏற்படும்.

    இந்த மீன்பிடி தடை காலத்தினால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும். அதுமட்டுமின்றி அந்நிய செலாவணி வருவாய் இழப்பும் ஏற்படும். நாளை தடை காலம் தொடர்வதால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் விசைப்படகுகளுடன் நேற்று முதல் அவசர அவசரமாக சின்னமுட்டம் துறைமுகத்துக்கு கரைக்கு திரும்பிய வண்ணமாக உள்ளனர்.

    • கடற்கரையை ஒட்டிய அலை அடிக்கும் பகுதிகள் செம்மண் நிறமாகவும் காட்சி தருகிறது
    • தொழிற்சாலை கழிவுகள் கடலில் கலப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரை பகுதியில் மணவாளக்குறிச்சி, சின்ன விளை, பெரியவிளை மண்டைக்காடு, புதூர், கொட்டில் பாடு வரையிலான கடல் பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக நிறம் மாறி காணப்படுகிறது.

    கடற்கரையை ஒட்டிய அலை அடிக்கும் பகுதிகள் செம்மண் நிறமாகவும் காட்சி தருகிறது. பெரும் மழை பெய்து ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி சேறு சகதிகளுடன் கடலில் கலந்தால் எப்படி இருக்குமோ அதைவிட மேலாக நிறம் மாறி கடலின் தன்மை மாறி காணப்படுகிறது.

    மேலும் இந்த தண்ணீர் மணலுடன் கலந்த பின்னர் அந்த பகுதியில் நிறமாற்றம் குறைகிறது. பின்னர் மீண்டும் அந்த பகுதியில் நிறமாற்றம் தொடர்ந்து ஏற்படுகிறது. இது கடற்கரையோர மக்களையும், மண்டைக்காடு புதூர் கடற்கரைக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளையும் கவலை கொள்ள செய்துள்ளது. தொழிற்சாலை கழிவுகள் கடலில் கலப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது குறித்து புதூரை சேர்ந்த மீனவர்கள் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் இப்போது பெருமழை இல்லை. ஆறுகளில் வெள்ளம் இல்லை. வேறு எங்கிருந்தும் கழிவு நீர் கடலில் கலக்கவில்லை. தொழிற்சாலை கழிவுகள் வெளியேற்றி அது கடலில் கலப்பதால் தான் இந்த மாற்றம் வருகிறது. அப்படி என்றால் கடல் மாசுபட்டு விட்டால் ஒட்டுமொத்த நிலப்பகுதியில் சுற்றுச்சூழ லும் கெட்டுவிடும். எனவே ஆபத்தான கழிவுகள் கடலில் கலப்பதை தடுக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மீனவர்கள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    • 2 படகுகள் மட்டும் இயக்கப்படுவதால் காலதாமதம்
    • வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக் கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகா லையில் சூரியன் உதயமாகும் காட்சியை காணஏராளமான சுற்றுலா பயணிகள் குவி ந்து இருந்தனர்.

    கன்னியாகுமரி கடலில் இன்று அதிகா லையில் சூரியன் உதயமான காட்சி தெளிவாகத் தெரிந்தது. சூரியன் உதயமான இந்த அற்புத காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதன்பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தேஏராள மான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணி யில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட கியூவில் காத்து இருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்துதொடங்கிய பிறகு அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வை யிட்டு வந்தனர். சுற்றுலாபயணி கள் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து படகில் சென்று விவேகா னந்தர் மண்டபத்தை பார்வையிட்டனர்.

    அதேபோல திருவள்ளு வர் சிலையையும் சுற்றுலா பயணிகள் 2 மணி நேரம் காத்திருந்து படகில்சென்று பார்வையிட்டுவந்தனர். பொதிகை படகுகரையேற்ற ப்பட்டு சீரமைக்கும்பணி நடந்து வருவதால் வேகா னந்தா, குகன் ஆகிய 2 படகுகள் மட்டுமே இயக்கப்படுவதால் தான் இந்த காலதாமத த்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், கலங்கரை விளக்கம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங் காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள்கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டியது. கடும் போக்கு வரத்து நெரிசலும் ஏற்பட் டது. சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது

    • சின்னமுட்டம் துறைமுகத்தில் கரையேற்றி பழுது பார்க்கும் பணி தீவிரம்
    • படகு பராமரிக்கும் பணி முடிவடைவதற்கு ஒரு மாத காலம் ஆகலாம் என்று தெரிகிறது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது.

    இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் திருவள்ளுவர் சிலையில் ரசாயனக் கலவை பூசும் பணி நிறைவடைந்ததையொட்டி 7 மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் படகு போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    இதில் பொதிகை படகு கடலில் ஓடுவதற்கான காலக்கெடு முடிந்து விட்டதால் அதனை கரையேற்றி ரூ.30 லட்சம் செலவில் சீரமைக்க பூம்புகார் கப்பல் போக்குரத்துக்கழகம் முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து பொதிகை படகு கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறையில் இருந்து கடல் வழியாக சின்னமுட்டம் துறைமுகத்தில் உள்ள படகு கட்டும் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அங்கு பொதிகை படகு கரையேற்றப்பட்டு சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த படகு பராமரிக்கும் பணி முடிவடைவதற்கு இன்னும் ஒரு மாத காலம் ஆகலாம் என்று தெரிகிறது.

    இந்த படகு பராமரிப்பு பணி முடிவடைந்தபிறகு பொதிகை படகு புதுப்பொலிவுடன் கடலில் இறக்கப்பட்டு வெள்ளோட்டம் விடப்படும். அதன் பிறகு கோடைவிடுமுறை சீசனையொட்டி ஏப்ரல் அல்லது மே மாதம் முதல் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்ல பயன்படுத்தப்படும்.

    • திடீரென மயக்கம் ஏற்பட்டு கடலுக்குள் தவறி விழுந்துள்ளார்.
    • அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே உள்ள அந்தோணியார்புரம் கொள்ளுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ் (வயது 33) மீனவர்.

    இவர் நேற்று கடலுக்குச் சென்று மீன் பிடித்து விட்டு கரை திரும்பி கொண்டிருந்தார்.

    அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு தவறி கடலுக்குள் விழுந்துள்ளார்.

    உடன் வந்த மீனவர்கள் அவரை மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவேஉயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து சேதுபாவா சத்திரம் கடலோர காவல் குழும போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    இறந்து போன அந்தோணிராஜ்-க்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இச்சம்பவம் அக்கிராமத்தில் மீனவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • ஒருங்கிணைப்பு கூட்டத்தில் மீனவர்கள் வலியுறுத்தல்
    • ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்கும் 35 மீட்டர் அளவு கொண்ட படகுகளை பதிவு செய்ய மீன்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்

    கன்னியாகுமரி:

    தமிழ்நாடு அரசு மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் இந்திய கடலோர காவற்படை சார்பில் மீனவர் ஒருங்கிணைப்பு கூட்டம் குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் நடந்தது. விஜய் வசந்த் எம்.பி. தலைமை தாங்கினார். தூத்துக்குடி நிலைய இந்திய கடலோர காவல்படை தளபதி வினோத் குமார் முன்னிலை வகித்தார்.துணை தளபதி சாஜூ செரியன், குளச்சல் மீன் துறை உதவி இயக்குனர் நடராஜன் ஆகியோர் பேரிடர் காலத்தில் மீனவர்கள் தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டிய உபகரணங்களை செயல்முறை மூலம் விளக்கி பேசினர்.

    தொழிலுக்கு செல்லும் போது கட்டாயம் பாதுகாப்பு உபகரணங்களை மீனவர்கள் எடுத்து செல்ல வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.

    அப்போது குளச்சல் விசைப்படகு சங்க தலைவர் வர்க்கீஸ், செயலாளர் பிராங்கிளின், நகர்மன்ற கவுன்சிலர் ஜாண்சன், குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் எனல்ராஜ், முன்னாள் தலைவர் ஆனந்த், மாநில காங்.செயற்ழு உறுப்பினர் யூசுப்கான், நகர்மன்ற முன்னாள் கவுன்சிலர் சிபு ஆகியோர் கடலில் மாயமாகும் மீனவர்களை துரிதமாக மீட்க குமரி மாவட்டத்தில் ஹெலிகாப்டர் வசதி ஏற்படுத்த வேண்டும்.

    குளச்சல், முட்டம், கன்னியாகுமரி ஆகிய பகுதியில் சுமார் 1000 விசைப்படகுகள் மீன் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படவில்லை.ஆழ்கட லில் தங்கி மீன் பிடிக்கும் படகுகள் 35 மீட்டர் அளவு கொண்டவை.இந்த வகை படகுகளை பதிவு செய்யவும் மீன்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினர்.

    இதற்கு பதிலளித்து விஜய்வசந்த் எம்.பி. பேசியதாவது:-

    குமரி மாவட்ட கடலில் மாயமாகும் மீனவர்களை கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.கன்னியாகுமரியில் விரைவு படகுகள் மற்றும் ஹெலிகாப்டர் வசதியுடன் கடலோர காவல் படை நிலையம் அமைக்க வேண்டும் என கடலோர காவல் படையின் கூடுதல் இயக்குனரை சந்தித்து மனு அளித்துள்ளேன்.இவை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிய ஆய்வு நடத்த வேண்டும் என பரிந்துரை செய்துள்ளேன் என்றார்.

    கூட்டத்தில் குளச்சல் மீனவர் கூட்டுறவு சங்க துணைத்தலைவர் ஆன்றனி, மாவட்ட காங்.துணைத்தலைவர்கள் முனாப், தர்மராஜ், அகில இந்திய இளைஞர் காங்.ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ், மீனவர் காங்.நிர்வாகிகள் ஜோசப்மணி, ஸ்டார்வின், லாலின், இளைஞர் காங்.நிர்வாகிகள் டைசன் ஜேக்கப், திங்கள்நகர் பேருராட்சி தலைவர் சுமன் உள்பட மீனவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • லட்சதீவு பகுதியை சேர்ந்த அப்துல் காசிம் என்பவருக்கு சொந்தமான படகில் கொச்சி துறைமுகத்தில் இருந்து லட்சதீவு பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர்.
    • படகில் இருந்த 2000 லிட்டர கொள்ளளவு கொண்ட தண்ணீர் டேங்க் திடீரென சரிந்து என்ஜின் இருக்கும் பகுதியில் விழுந்ததில் படகு நிலைதடுமாறி கடல் தண்ணீர் படகினில் புகுந்தது.

    கன்னியாகுமரி:

    கொல்லங்கோடு அருகே ததேயபுரம் பகுதியை சேர்ந்த அனீஷ் மற்றும் நீரோடி பகுதியை சேர்ந்த நபர் மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த 5, பேர் என மொத்தம் 7 பேர் லட்சதீவு பகுதியை சேர்ந்த அப்துல் காசிம் என்பவருக்கு சொந்தமான படகில் கொச்சி துறைமுகத்தில் இருந்து லட்சதீவு பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    படகு 30 நாட்டிங்கல் தொலைவில் சென்றபோது படகில் இருந்த 2000 லிட்டர கொள்ளளவு கொண்ட தண்ணீர் டேங்க் திடீரென சரிந்து என்ஜின் இருக்கும் பகுதியில் விழுந்தது. இதில் படகு நிலைதடுமாறி கடல் தண்ணீர் படகினில் புகுந்தது. இதனால் படகில் இருந்த மீனவர்கள் உதவி கேட்டு சத்தம் போட்டனர். இதை பக்கத்தில் மீன் பிடித்து கொண்டிருந்த மற்ற மீனவர்கள் கண்டனர் .உடனடியாக அவர்கள் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த 7 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அனீஸ் மற்றும் உடன் சென்ற நபர் நேற்று சொந்த ஊர் வந்தடைந்தனர்.

    ×