என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தூக்குப்போட்டு"
- டேனிஷ்பேட்டை ராஜமன்னார் காலனியை சேர்ந்தவர் லோகநாதன் ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்தில் தனியார் நிறுவன காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் புதுடெல்லியை சேர்ந்த சுதா என்பவருக்கும் இடையே கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது.
- நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் லோகநாதன் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் டேனிஷ்பேட்டை ராஜமன்னார் காலனியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 36). இவர் ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்தில் தனியார் நிறுவன காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் புதுடெல்லியை சேர்ந்த சுதா என்பவருக்கும் இடையே கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது.
இவர்களுக்கு சுதர்சன் (13), தியா (9) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். சுதர்சன் மற்றும் தியா ஆகிய 2 பேரும், புதுடெல்லியில் உள்ள சுதாவின் பெற்றோருடன் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் லோகநாதன் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்த அவருடைய மனைவி மற்றும் பெற்றோர் லோகநாதன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து நேற்று தீவட்டிப்பட்டி போலீசில் அவர்கள் கொடுத்த புகாரின் பேரில், லோகநாதன் உடலை கைப்பற்றி போலீசார் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள பொம்மியம்பட்டி ஆண்டிக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ் பாண்டியன் மத்திய ரிசர்வ் படையில் போலீஸ்காரராக மணிப்பூரில் பணியாற்றி வந்தார்.
- கடந்த மாதம் 6-ந் தேதி 40 நாட்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள பொம்மியம்பட்டி ஆண்டிக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ் பாண்டியன் (வயது 32). இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், மிலன் (7), நிதன் (5) என்ற மகன்களும் உள்ளனர். அலெக்ஸ் பாண்டியன் மத்திய ரிசர்வ் படையில் போலீஸ்காரராக மணிப்பூரில் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 6-ந் தேதி 40 நாட்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். இன்றுடன்(வெள்ளிக்கிழமை) விடுமுறை முடிய உள்ள நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அலெக்ஸ் பாண்டியன் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய மனைவி மற்றும் உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கையில் அவர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளது ெதரியவந்தது. இருப்பினும் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் விசாரித்து வருகிறார்.
- சேலம் லைன்மேடு மெகபூப் நகர் பகுதியில் டீ மாஸ்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- கடனை கட்ட முடியததால் மனமுடைந்த காதர்கான் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
சேலம்:
சேலம் லைன்மேடு மெகபூப் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பஷீர்கான். இவரது மகன் காதர்கான் (வயது 23). இவர் லைன்மேடு பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். வேலை முடிந்து டீக்கடை மாடியில் இருக்கும் அறையில் தங்குவது வழக்கம்.
நேற்று வழக்கம் போல் வேலை முடிந்து அறைக்கு சென்று தங்கி உள்ளார். இன்று காலை வெகு நேரம் ஆகியும் கடைக்கு வராததால் சந்தேகம் அடைந்த கடையின் உரிமையாளர் அறைக்கு சென்று பார்த்த போது அங்கு காதர்கான் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது பற்றி அவர், உடனடியாக அன்ன தானப்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் காதர்கானுக்கு கடன் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள், பணத்தை அடிக்கடி கேட்டு, தொல்லை கொடுத்தனர். கடனை கட்ட முடியததால் மனமுடைந்த காதர்கான் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
- பரமத்தி வேலூர் தாலுகா கரிச்சிபாளையம் அருகே நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது, மகேஸ்வரி சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கரிச்சிபாளையம் அருகே வைராபாளையம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 58). கூலித் தொழிலாளி. இவரது மகள் மகேஸ்வரி(34). மாற்றுத்திறனாளி.
இவருக்கும் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சௌந்தர்ராஜ் (36) என்பவருக்கும் கடந்த 5 மாதத்திற்கு முன் திருமணம் நடைபெற்றது. சௌந்தர்ராஜ் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆபீஸ் அசிஸ்டெண்டாக வேலை பார்த்து வருகிறார். 4 மாத கர்பிணியாக இருந்த மகேஸ்வரி, கடந்த 8-ந் தேதி பெற்றோர் வீட்டிற்கு வந்து தங்கி இருந்தார்.
அப்போது, தான் மாற்றுத்திறனாளியாக இருப்பதால் குழந்தை நல்லபடியாக பிறக்குமா? என்ற பயத்தில் இருந்த அவர், தான் பலவீனமாக இருப்பதால் பிரசவ வலியை தன்னால் தாங்க முடியுமா என்றும் தனது அம்மாவிடம் அடிக்கடி கூறி அழுது வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது, மகேஸ்வரி சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அவரது தாய் சாவித்திரி கதறி துடித்தார். பின்னர் இதுகுறித்து நல்லூர் போலீசருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மகேஸ்வரி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்ற னர்.
இந்நிலையில் மகேஸ்வரிக்கு திருமணம் ஆகி 5 மாதங்களே ஆவதால், தற்கொலை தொடர்பாக திருச்செங்கோடு சப் கலெக்டர் கவுசல்யா விசா ரணை நடத்தி வருகிறார்.
- வீட்டில் தனியாக இருந்த வெங்கடாசலம் தற்கொலை செய்து கொள்வதற்காக தூக்குப்போட்டு கொண்டார்.
- இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு சூரம்பட்டிவலசு சாஸ்திரி சாலையை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 43). பெயிண்டர். இவர் கடந்த 5 ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் சிகிச்சை பெற்று மருந்து, மாத்திரை சாப்பிட்டு வந்தார்.
இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்து அவர் காணப்பட்டார். சம்பவத்தன்று வெங்கடாசலத்தின் மனைவி வேலைக்கு சென்றிருந்தார். அப்போது வீட்டில் தனியாக இருந்த வெங்கடாசலம் தற்கொலை செய்து கொள்வதற்காக தூக்குப்போட்டு கொண்டார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திாிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வெங்கடாசலம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- குமாரபாளையம் அருகே ஓலப்பாளையம் பகுதியில் மது குடிப்பதற்கு பணம் ெகாடுக்காததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்,
- கொக்கியில் சேலையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் அருகே ஓலப்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் கோபி ( வயது 29). இவர் கடந்த ஏப்ரல் மாதம் குமாரபாளையம் ஆனங்கூர் பிரிவு சாலையில் நடந்த கொலை வழக்கில் கைதாகி வெளியே வந்துள்ளார்.
பெயிண்டராக பணியாற்றிய இவர் வேலைக்கு செல்லாமல், மது குடிப்பதற்கு வீட்டில் மனைவி மாலினியிடம் பணம் கேட்டு வற்புறுத்தி வந்துள்ளார். மிகவும் கஷ்டப்பட்டு 2 வயது குழந்தையை காப்பாற்றி வரும் அவர், பணம் இல்லை என்று கூறியுள்ளார்.
இதனால் கோபி தனது அக்காள் மேகலா, அம்மா சந்திராவிடம் பணம் கேட்டுள்ளார். அவர்களும் பணம் இல்லை என கூறி யுள்ளனர். இதனால் விரக்தி அடைந்த கோபி கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிற்பகலில் வீட்டின் படுக்கை அறைக்குள் சென்று கதவை தாழிட்டுகொண்டார். வீட்டில் இருந்தவர்கள் வழக்கம்போல் அவர் பணம் கேட்டு மிரட்டுகிறார் என்று எண்ணி, வெளியில் சென்றனர். ஆனால் கோபி படுக்கை அறையில் உள்ள
கொக்கியில் சேலையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்த குடும்பத்தினர், வீட்டின் அறை கதவு வெகுநேரம் ஆகியும் திறக்கப்படாததால், சந்தேகம் அடைந்தனர். கதவை உடைத்து பார்த்தபோது அங்கு கோபி பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தனியார் ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து காட்டிய போது, அவர் இறந்து விட்டதாக டாக்டர் கூறினார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
- மணிகண்டன் கோணவாய்க்கால் பகுதியில் வாடகை வீட்டில் தனியாக வசித்து கொண்டு மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்தார்.
- இந்த நிலையில் மணிகண்டன் தங்கி இருக்கும் வீட்டில் திடீரென தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானி பசுவேஸ்வரர் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (35). இவரது மனைவி நாகராணி (37). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மணிகண்டன மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். நாகராணி தார்பாய் தைக்கும் வேலை பார்த்து வருகிறார்.
கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 வருடங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்ற னர். நாகராணி குழந்தை களுடன் பவானியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
மணிகண்டன் லட்சுமி நகர் அருகில் உள்ள கோண வாய்க்கால் பகுதியில் வாடகை வீட்டில் தனியாக வசித்து கொண்டு மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்தார்.
இந்த நிலையில் மணிகண்டன் தங்கி இருக்கும் வீட்டில் திடீரென தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.
அக்கம்பக்கத்தினர் உடனே மணிகண்டனை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து நாகராணி அளித்த புகாரின்பேரில் சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சேலம் அம்மாப்பேட்டை குஞ்சாங்காட்டை சேர்ந்தவர் சரவணன். இவர், உடற்பயிற்சி கூடத்திற்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார்.
- இவர் குடும்ப பிரச்சினையால் அவர் தூக்குப்போட்டு தற்கொலைசெய்திருப்பது தெரியவந்துள்ளது.
சேலம்:
சேலம் அம்மாப்பேட்டை குஞ்சாங்காட்டை சேர்ந்தவர் சரவணன். இவர், உடற்பயிற்சி கூடத்திற்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவருக்கு சக்திவேல் (வயது 18) என்ற மகனும், 2 மகள்களும் இருந்தனர். சக்திவேலுக்கு 5 வயதாக இருக்கும்போது அவனது தாய் இறந்துவிட்டார். அதன்பிறகு சிறுவனின் தந்தை சரவணன் வேறு ஒரு பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து சக்திவேல் தனது தந்தையுடன் கடையில் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை பள்ளிக்கு சென்றுவிட்டு சக்திவேலின் தங்கை வீட்டுக்கு வந்து கதவை தட்டினார். ஆனால் நீண்ட நேரமாக கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் வீட்டிற்கு விரைந்து வந்த சரவணன், கதவை திறந்து பார்த்தபோது, உள்ளே மகன் சக்திவேல் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பரபரப்பு தகவல்
இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சக்திவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சினையால் அவர் தூக்குப்போட்டு தற்கொலைசெய்திருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கணவன்-மனைவி இடையே அடிக்கடி ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 வருடங்களாக தம்பதிகள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
- இதனால் மனமுடைந்த யுவராஜ் வீட்டில் மின் விசிறி கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள சரளைமேடு பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 29). எலக்ட்ரீசியன்.
இவருக்கும், பிரியா என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 வருடங்களாக தம்பதிகள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனால் மனமுடைந்த யுவராஜ் மது குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று யுவராஜ் வெகுநேரமாகியும் வீட்டைவிட்டு வெளியே வராததால் அவரது தாய் பேபி வீட்டிற்கு சென்று பார்த்தபோது யுவராஜ் வீட்டில் மின் விசிறி கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இது குறித்து ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.
- வேலை தேடியும் சரியான வேலை கிடைக்காத நிலையில் இருந்துள்ளார்.
- இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த ராமன் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேலம்:
சேலம் இரும்பாலை பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் அருகே வசித்து வருபவர் ராமன் (வயது 30). இவர் பல்வேறு இடங்களில் வேலை தேடியும் சரியான வேலை கிடைக்காத நிலையில் இருந்துள்ளார். மேலும் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த ராமன் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது சகோதரி கலைச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் இரும்பாலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராமன் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அறையில் பானுமதி தூக்குபோட்டு தொங்கி கெண்டிருந்தார்.
- சித்தோடு போலீசாரிடம் கொடுத்த புகார் அடிப்படையில் பானுமதி எதற்காக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சித்தோடு:
ஈரோடு, கொங்கம்பாளையம் கணபதி நகரை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி பானுமதி (31). இவர்களுககு ஒருமகனும், ஒரு மகளும் உள்ளனர்.
கடந்த 16-ந் தேதி பானுமதி தனது தாய் பிரேமாவுக்கு போன் செய்து மகன் ரோகித்தை கூட்டி வரும் பொது சேமியா வாங்கி வர சொல்லி உள்ளதாக தெரிகிறது. பானுமதி மகன் ரோகித்துடன் அவரது தாய் சேமியா வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது வீட்டில் பானுமதி மகள் டி.வி.பார்த்துக் கொண்டிருந்த நிலையில் அம்மா எங்கே என் கேட்ட போது அம்மா வீட்டின் அறையை சாத்திக்கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அறையை தட்டிப் பார்த்த போது அறை தாழிட்டிருந்த நிலையில் ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர்.
அப்போது அறையில் பானுமதி தூக்குபோட்டு தொங்கி கெண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பானுமதியின் தாய் பிரேமா கூச்சலிட்டார்.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பானுமதியை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே பானுமதி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக தாய் பிரேமா சித்தோடு போலீசாரிடம் கொடுத்த புகார் அடிப்படையில் பானுமதி எதற்காக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கணவன, மனைவி இருவருக்கும் இடையே கருத்து முரண்பாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
- கணவர் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் வி.பி.எம்.எஸ். நகர் பகுதியில் வசித்து வருபவர் குமார பாலசுதர்சன் ( வயது 45) . இவரது மனைவி சாமுண்டீஸ்வரி (34) . குமார பாலசுதர்சன் வெள்ளகோவில் அருகே உள்ள தனியார் நூல் மில்லில் மேனேஜராக பணியாற்றி வருகிறார்.
நேற்று வழக்கு போல் குமார பாலசுதர்சன் வேலைக்கு சென்று விட்டார்,இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து முரண்பாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நேற்று சாமுண்டீஸ்வரி வீட்டில் தனியாக இருந்தபோதுவிட்டத்தில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பி வந்த கணவர் சாமுண்டீஸ்வரி பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே இது குறித்து வெள்ளகோவில் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடமலை கைப்பற்றிய போலீசார் பரிசோதனைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்