என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சலுகைகள்"

    • சியோமி நிறுவனத்தின் புது ரெட்மி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன.
    • ரெட்மி நோட் 12 சீரிசில் - நோட் 12 5ஜி, நோட் 12 ப்ரோ 5ஜி மற்றும் நோட் 12 ப்ரோ பிளஸ் 5ஜி என மூன்று மாடல்கள் கிடைக்கின்றன.

    சியோமியின் துணை பிராண்டு ரெட்மி இந்திய சந்தையில் தனது ரெட்மி நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை கடந்த வாரம் (ஜனவரி 5) அறிமுகம் செய்தது. இந்த நிலையில், புதிய ரெட்மி நோட் 12 சீரிஸ் மாடல்களுக்கான விற்பனை இன்று (ஜனவரி 11) துவங்கியது. இந்திய சந்தையில் ரோட்மி நோட் 12 சீரிசில் ரெட்மி நோட் 12 5ஜி, ரெட்மி நோட் 12 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் என மூன்று மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

    இதில் ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை அமேசான் தளத்தில் நடைபெறுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மிஸ்கிட் பிளாக், மேட் பிளாக் மற்றும் ஃபிராஸ்டெட் கிரீன் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

    ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் மாடல் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    ரெட்மி நோட் 12 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் மாடல்கள் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த ஸ்மார்ட்போன்கள் அப்சிடியன் பிளாக், ஆர்க்டிக் வைட் மற்றும் ஐஸ்பெர்க் புளூ என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இவை தவிர மூன்று ஸ்மார்ட்போன்களும் Mi வலைதளம், Mi ஸ்டூடியோ மற்றும் Mi பார்ட்னர் ஸ்டோர்களிலும் விற்பனை செய்யப்படுகிறது.

    புது ரெட்மி நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வாங்குவோர் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போதும், எக்சேன்ஜ் சலுகையின் கீழ் சிறப்பு தள்ளுபடி பெற முடியும். ரெட்மி நோட் 12 வாங்குவோருக்கு ரூ. 1500, நோட் 12 ப்ரோ மற்றும் நோட் 12 ப்ரோ பிளஸ் மாடல்களுக்கு ரூ. 3 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் பழைய சியோமி/Mi அல்லது ரெட்மி ஸ்மார்ட்போன் வாங்கும் போது ரூ. 1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    விலை விவரங்கள்:

    ரெட்மி நோட் 12 5ஜி 4 ஜிபி ரேம், 128 ஜிபி ரூ. 17 ஆயிரத்து 999

    ரெட்மி நோட் 12 5ஜி 6 ஜிபி ரேம், 128 ஜிபி ரூ. 19 ஆயிரத்து 999

    வங்கி தள்ளுபடி மற்றும் எக்சேன்ஜ் சலுகைகளை பெறும் பட்சத்தில் இந்த ஸ்மார்ட்போனினை முறையே ரூ. 15 ஆயிரத்து 499 மற்றும் ரூ. 17 ஆயிரத்து 499 விலையில் வாங்கிட முடியும்.

    ரெட்மி நோட் 12 ப்ரோ 6 ஜிபி, 128 ஜிபி ரூ. 24 ஆயிரத்து 999

    ரெட்மி நோட் 12 ப்ரோ 8 ஜிபி, 128 ஜிபி ரூ. 26 ஆயிரத்து 999

    ரெட்மி நோட் 12 ப்ரோ 8 ஜிபி, 256 ஜிபி ரூ. 27 ஆயிரத்து 999

    ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் 8 ஜிபி, 256 ஜிபி ரூ. 29 ஆயிரத்து 999

    ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் 12 ஜிபி, 256 ஜிபி ரூ. 32 ஆயிரத்து 999

    அறிமுக சலுகையாக ஐசிஐசிஐ வங்கி கார்டு மற்றும் மாத தவணை முறைக்கு ரூ. 3 ஆயிரம் உடனடி தள்ளுபடி மற்றும் ரூ. 3 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. ஏற்கனவே பயன்படுத்தி வரும் பழைய சியோமி, Mi அல்லது ரெட்மி ஸ்மார்ட்போன்களை எக்சேன்ஜ் செய்யும் போது கூடுதலாக ரூ. 1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    தொல். திருமாவளவன் பேச்சானது அம்பேத்கா் இயற்றிய இந்திய அரசியல் சாசன சட்டத்துக்கு புறம்பானது.

    திருப்பூர்:

    மதம் மாறியவா்களுக்கு இட ஒதுக்கீட்டு சலுகைகள் வழங்கக் கூடாது என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    கிறிஸ்தவா்களாக மதம் மாறியவா்களுக்கு இட ஒதுக்கீடு சலுகைகள் வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் மக்களவையில் பேசியிருப்பதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. அவரது பேச்சானது அம்பேத்கா் இயற்றிய இந்திய அரசியல் சாசன சட்டத்துக்கு புறம்பானது.

    இட ஒதுக்கீடு சலுகைகள் என்பது சமூகநீதிக்கானது என்றும், மற்ற மதங்களுக்கு இது பொருந்தாது என்றும் அரசியல் சாசன சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆகவே, அவரது கோரிக்கை இந்து சமூகத்தை சீரழிக்கும் என்பதால் மதம் மாறியவா்களுக்கு இட ஒதுக்கீட்டு சலுகைகள் வழங்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வி ரூ. 549 சலுகை பயனர்களுக்கு 1 ஜிபி டேட்டா, 180 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.
    • வி ரூ. 368 மற்றும் ரூ. 369 விலை சலுகைகளில் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

    வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில், பிரீபெயிட் சலுகை பலன்களில் அதிகளவு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. இதுதவிர புதிய பிரீபெயிட் சலுகைகளையும் அறிவித்து வருகிறது. இந்த வரிசையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் வி ரூ. 549 சலுகை மொத்தத்தில் 180 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது.

    அதிக பலன்களுக்கு மாற்றாக நீண்ட நாட்கள் வேலிடிட்டி வழங்கும் வகையில், இந்த சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் தான் வி நிறுவனம் ரூ. 368 மற்றும் ரூ. 369 விலையில் சலுகைகளை அறிவித்தது. இதைத் தொடர்ந்து தற்போது நீண்ட கால வேலிடிட்டி வழங்கும் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

     

    வி ரூ. 549 சலுகை பயனர்களுக்கு 1 ஜிபி டேட்டா, 180 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. 1 ஜிபி தவிர்த்து கூடுதல் டேட்டா வேண்டுமெனில் பயனர்கள் மற்ற டேட்டா வவுச்சர்களை வாங்கிக் கொள்ள வேண்டும். இந்த சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் பலன்கள் வழங்கப்படவில்லை என்பதால், அழைப்புகளுக்கான கட்டணம் நொடிக்கு 2.5 பைசா என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இவைதவிர இந்த சலுகையில் எஸ்எம்எஸ் பலன்கள் எதுவும் வழங்கப்படவில்லை. வி சிம் கார்டை இரண்டாவது இணைப்பாக பயன்படுத்துவோருக்கு இந்த சலுகை பயனுள்ளதாக இருக்கும். முந்தைய ரூ. 368 மற்றும் ரூ. 369 விலை சலுகைகளில் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இவை தவிர ஒடிடி பலன்களும் வழங்கப்படுகிறது.

    • அபிராமம் சுற்றியுள்ள பகுதியில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி இல்லை.
    • சலுகைகள் கிடைக்காமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள 125-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் கூலி வேலை செய்து பிழைத்து வரு கின்றனர். இவர்களின் குழந்தைகள் உயர்கல்வி படிக்க முடியாத நிலை உள்ளது. இதற்கு காரணம் அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உயர்நிலை, மேல்நிலை படிக்க அரசுப்பள்ளி கிடையாது.

    அபிராமத்தில் 1905-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. அதுவும் முறையாக செயல்படுவதில்லை. மேலும் 2 தனியார் பள்ளி மட்டுமே உள்ளது. இதனால் அரசின் சலுகைகள் இன்று வரை மாணவர்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது.

    இதுகுறித்து சமூக ஆர்வலர் அருணாசலம் கூறியதாவது:-

    அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் கூலி வேலை செய்து பிழைத்து வருகின்றனர்.

    இவர்களது பிள்ளைகள் உயர்கல்வி படிப்பதற்க்கு குறிப்பாக உயர்நிலை, மேல்நிலைபள்ளியில் படிக்க அரசு பள்ளி கிடையாது. 8-வது வரை மட்டுமே படிக்க அரசு பள்ளி உள்ளது. தமிழக அரசின் சலுகைகளான மருத்துவம், பொறியல் படிப்பவர்களுக்கு 7.5 சதவீத மாணவ- மாணவிகள் படிக்க அரசே முழு செலவையும் ஏற்கும் என்ற திட்டம், கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் ஆகியவை அபிராமம் அதனை சுற்றியுள்ள மாணவர்களுக்கு கிடைக்க வாய்பில்லை.

    இந்த சலுகைகளை பெற 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்தவர்களுக்குதான் கிடைக்கும் என்ற நிலை நிலை உள்ளது. எனவே இனிவரும் காலங்களிலாவது அபிராமம் பகுதி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரசின் சலுகைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மூலகாரணமாக அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் அரசு உயர்நிலை, மேல்நிலைபள்ளி தொடங்க கலெக்டரும், பள்ளி கல்வி துறையினரும் நடவடிக்கை எடுக்க ேவண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என விழிப்புணர்வு.
    • அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து விழிப்புணர்வு.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த மருதங்காவெளி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கூடுதலாக மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

    பிரச்சாரத்தை பேரூராட்சி கவுன்சிலர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.

    பள்ளி அருகிலிருந்து புறப்பட்ட பிரசார பயணம் சுற்றுப்பகுதியில் உள்ள வீடு, வீடாக சென்று அப்பகுதி மக்களிடம் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்றும், மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்தும் நேரடியாகவும், துண்டு பிரசுரம் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    • அரசு பள்ளியில் மாணவர்கள் சேருவதால் ஏற்படும் நன்மைகள்.
    • மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே இனாம் கிளியூர் ஊராட்சியில் ஒவ்வொரு வீடு வீடாக சென்று வலங்கைமான் ஒன்றிய அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் அரசு பள்ளியில் மாணவர்கள் சேருவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், அரசின் திட்டங்கள் குறித்தும், மாணவர்களுக்கு வழங்கப்ப டும் சலுகைகள் குறித்தும் பொதுமக்களிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தினார்.

    இதில் வலங்கைமான் வட்டார கல்வி அலுவலர் சுகந்தி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், ஆசிரியர் பயிற்றுனர் புனிதா, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பெரியசாமி, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயசித்ரா, ஆசிரியை பூங்கொடி, இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், வானவில் மன்றத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • சிறப்பு சலுகை பலன்கள் அனைத்தும் ஸ்டோர் கிரெடிட் ஆக சேர்க்கப்பட்டு விடும்.
    • இந்த சலுகைகள் அனைத்தும் ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே வழங்கப்படும்.

    டுகாட்டி இந்தியா நிறுவனம் தனது தேர்வு செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு குறுகிய காலத்திற்கு சிறப்பு சலுகைகள் அறிவித்து இருக்கிறது. இந்திய சந்தையில் 10-வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில், இந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    அதன்படி டுகாட்டி ஃபிளாக்ஷிப் அட்வென்ச்சர் டூரர் மாடலான, மல்டிஸ்டிராடா வி4 மற்றும் பனிகேல் வி4 சார்ந்த ரோட்ஸ்டர் மாடல், ஸ்டிரீட்ஃபைட்டர் வி4 மாடல்களுக்கு ரூ. 4 லட்சம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இதுதவிர மான்ஸ்டர், ஸ்டிரீட்ஃபைட்டர் வி2 மற்றும் மல்டிஸ்டிராடா வி2 போன்ற மாடல்களுக்கு ரூ. 2 லட்சம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.

     

    இத்தாலி நாட்டை சேர்ந்த இருசக்கர வாகன உற்பத்தியாளர் டுகாட்டி, இந்த பலன்கள் அனைத்தும் ஸ்டோர் கிரெடிட் ஆக சேர்க்கப்பட்டு விடும் என்று தெரிவித்துள்ளது. அந்த வகையில், பயனர்கள் இந்த தொகையை கொண்டு டுகாட்டி ஆடை, பயனர் வாங்கும் மோட்டார்சைக்கிளுக்கான அக்சஸரீக்களை வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இந்த சலுகைகள் அனைத்தும் ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே வழங்கப்படும் என்று டுகாட்டி இந்தியா அறிவித்து இருக்கிறது. சமீபத்தில் தான் டுகாட்டி இந்தியா நிறுவனம் தனது மான்ஸ்டர் எஸ்பி மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 15 லட்சத்து 95 ஆயிரம் என்று துவங்குகிறது. இது அதன் ஸ்டாண்டர்டு வேரியண்டை விட ரூ. 3 லட்சம் வரை அதிகம் ஆகும்.

    • ஆப்பிள் நிறுவன வலைதளத்தில் இதன் விலை ரூ. 69 ஆயிரத்து 900 என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
    • ஐபோன் 13 மாடலுக்கு எக்சேன்ஜ் சலுகைகள் மற்றும் வங்கி சார்ந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 மாடலுக்கு ப்ளிப்கார்ட் வலைதளத்தில் அதிரடி விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி பயனர்கள் புதிய ஐபோன் 13 மாடலை ரூ. 58 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும். இத்துடன் எக்சேன்ஜ் சலுகைகள் மற்றும் வங்கி சார்ந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    தற்போது ப்ளிப்கார்ட் வலைதளத்தில் ஐபோன் 13 மாடலின் 128 ஜிபி விலை ரூ. 58 ஆயிரத்து 999 என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் நிறுவன வலைதளத்தில் இதன் விலை ரூ. 69 ஆயிரத்து 900 என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. அதன்படி ப்ளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 13 மாடலின் விலை ரூ. 10 ஆயிரத்து 901 குறைந்துள்ளது.

    இத்துடன் எஸ்.பி.ஐ. வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது பத்து சதவீதம் (அதிகபட்சம் ரூ. 750) வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் எக்சேன்ஜ் சலுகையின் கீழ் ரூ. 35 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் பயனர்கள் ஐபோன் 13 மாடலை மிக குறைந்த விலையில் வாங்கிட முடியும். இதில் எக்சேன்ஜ் தொகை, பயனர்கள் கொடுக்கும் ஸ்மார்ட்போனின் நிலையை பொருத்து வேறுப்படும்.

    ப்ளிப்கார்ட் தளத்தில் அறிவிக்கப்பட்டு இருக்கும் விலை குறைப்பு குறுகிய கால சலுகையா அல்லது நீண்ட காலத்திற்கு வழங்கப்படுமா என்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை. எனினும், இது ஐபோன் வாங்க சரியான காலம் ஆகும்.

    அம்சங்களை பொருத்தவரை ஐபோன் 13 மாடலில் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே, ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப்செட், 12MP+12MP பிரைமரி கேமரா, 12MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 128 ஜிபி, 256 ஜிபி மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 5ஜி கனெக்டிவிட்டி, வைபை 6, ப்ளூடூத் 5 போன்ற வசதிகள் உள்ளன.

    • சியோமி பேட் 5 மாடல் இரண்டு வித ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    • விலை குறைப்பு மட்டுமின்றி வங்கி சார்ந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் தனது பேட் 6 ஆன்ட்ராய்டு டேப்லெட் மாடலை நாளை (ஜூன் 13) அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய டேப்லெட் அதன் முந்தைய வெர்ஷனை விட மேம்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், சியோமி பேட் 5 மாடலின் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் சியோமி பேட் 5 மாடல் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி என இரண்டு விதமான ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 26 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 28 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதில் சியோமி பேட் 5 மாடலின் 128 ஜிபி வேரியண்டிற்கு ரூ. 1000, 256 ஜிபி வேரியண்டிற்கு ரூ. 500 விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் புதிய சியோமி பேட் 5 மாடலை முறையே ரூ. 25 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 28 ஆயிரத்து 499 விலையில் வாங்கிட முடியும். சியோமி பேட் 5 மாடல் காஸ்மிக் கிரே நிறத்தில் கிடைக்கிறது. விலை குறைப்பு மட்டுமின்றி இந்த மாடலை வாங்குவோர் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு கொண்டு பணம் செலுத்தும் போது ரூ. 2 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    சியோமி பேட் 5 அம்சங்கள்:

    புதிய சியோமி பேட் 5 மாடலில் 11 இன்ச் 2.5K /WQXA LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், டால்பி விஷன், HDR10, குவால்காம் ஸ்னாப்டிராகன் 860 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் குவாட் ஸ்பீக்கர் செட்டப், டால்பி அட்மோஸ், 6.85mm மெல்லிய பாடி, சியோமி ஸ்மார்ட் பென் சப்போர்ட் கொண்டிருக்கிறது.

    சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் பென் கொண்டு குறிப்பு எடுப்பது, எழுதுவது, ஸ்கிரீன்ஷாட் எடுப்பது, பென் மற்றும் இரேசர் இடையே ஸ்விட்ச் செய்வது என ஏராளமான ஆப்ஷன்களை இயக்க முடியும். சியோமி பேட் 5 மாடலில் 8720mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    • சலுகையின் கீழ் மேக் அல்லது ஐபேட் சாதனங்களை மாணவர்கள் சிறப்பு விலையில் வாங்கிடலாம்.
    • மேக்புக், ஐபேட் மற்றும் மேக் மினி போன்ற சாதனங்களுக்கு இந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    ஆப்பிள் நிறுவனம் இந்திய மாணவர்கள், ஆசிரியர்களுக்கு விசேஷ சலுகை மற்றும் தள்ளுபடிகளை அறிவித்து இருக்கிறது. இவை பேக் டு யுனிவர்சிட்டி (Back to University) திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களை சேர்ந்தவர்கள் ஆப்பிள் சாதனங்களான ஐபேட் மற்றும் மேக் சாதனங்களை தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் வாங்கிட முடியும்.

    நேற்று (ஜூன் 22) துவங்கிய சிறப்பு சலுகைகள் வழங்கும் பேக் டு யுனிவர்சிட்டி திட்டம் அக்டோபர் 02-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் கீழ் மேக் அல்லது ஐபேட் சாதனங்களை பல்கலைக்கழக மாணவர்களுக்கான சிறப்பு விலையில் வாங்கிட முடியும். தேர்வு செய்யப்பட்ட மேக் சாதனங்களை வாங்கும் போது ஏர்பாட்ஸ், ஐபேட் வாங்கும் போது ஆப்பிள் பென்சில் உள்ளிட்டவைகளை பெற முடியும்.

    ஆப்பிள் கேர் பிளஸ் சேவையின் கீழ் 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. கல்வி சலுகையின் கீழ் உள்ள சாதனங்கள் அனைத்திற்கும் விசேஷ விலையில் வாங்கிடலாம். ஆப்பிள் மியூசிக் மற்றும் ஆப்பிள் டிவி பிளஸ் சேவையை முதல் மூன்று மாதங்களுக்கு இலவசமாகவும், அதன் பிறகு மாதம் ரூ. 59 விலையிலும் வாங்கிடலாம்.

    மேக்புக் ஏர், மேக்புக் ப்ரோ, ஐமேக் 24 இன்ச், மேக் மினி, ஐபேட் ப்ரோ 11 இன்ச், ஐபேட் ஏர் 5th Gen உள்ளிட்ட சாதனங்களை இந்த சலுகையில் வாங்கிட முடியும். மேக்புக் வாங்குவோருக்கு ரூ. 14 ஆயிரம் மதிப்புள்ள ஏர்பாட்ஸ் Gen 2 மாடல் வழங்கப்படுகிறது.

    ஐபேட் ஏர் / ஐபேட் ப்ரோ மாடல் வாங்கும்போது ஆப்பிள் பென்சில் 2nd Gen இலவசமாக வழங்கப்படுகிறது. ஆப்பிள் அறிவித்து இருக்கும் புதிய சலுகைகள் ஆப்பிள் பிகேசி, சகெட் மற்றும் ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் வழங்கப்படுகிறது.

    • டொயோட்டா ஹிலக்ஸ் துவக்க விலை ரூ. 30 லட்சத்து 40 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டது.
    • ஹிலக்ஸ் டாப் எண்ட் விலை ரூ. 1 லட்சத்து 35 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது.

    டொயோட்டா நிறுவன விற்பனையாளர்கள் ஹிலக்ஸ் பிக்கப் டிரக்-க்கு அதிரடி சலுகைகளை வழங்கி வருகின்றனர். பிரீமியம் பிரிவில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கும் டொயோட்டா ஹிலக்ஸ் மாடலின் விலை ரூ. 30 லட்சத்து 40 ஆயிரம் என்று துவங்குகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் டொயோட்டா ஹிலக்ஸ் விற்பனைக்கு வந்தது.

    ஹிலக்ஸ் மாடல் இதுவரை சுமார் 1300 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. அறிமுகத்தின் போது டொயோட்டா ஹிலக்ஸ் மாடல் விலை ரூ. 33 லட்சத்து 90 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. பிறகு சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்ட டொயோட்டா ஹிலக்ஸ் துவக்க விலை ரூ. 30 லட்சத்து 40 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டது.

    என்ட்ரி லெவல் மாடல்களின் விலை குறைக்கப்பட்ட நிலையில், டாப் எண்ட் மாடல்களின் விலை உயர்த்தப்பட்டது. அதன்படி ஹிலக்ஸ் டாப் எண்ட் மேனுவல் வேரியண்ட் விலை ரூ. 1 லட்சத்து 35 ஆயிரமும், ஆட்டோமேடிக் வேரியண்ட் விலை ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது.

    தற்போதைய தகவல்களின் படி டொயோட்டா ஹிலக்ஸ் மாடலுக்கு குறைந்தபட்சம் ரூ. 6 லட்சம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. சில விற்பனையாளர்கள் அதிகபட்சம் ரூ. 8 லட்சம் வரையிலான தள்ளுபடி வழங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. இவை ஹிலக்ஸ் மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடுகிறது.

    டொயோட்டா ஹிலக்ஸ் மாடலில் 2.8 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 204 ஹெச்பி பவர், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. பாதுகாப்பிற்கு ஹிலக்ஸ் மாடலில் ஏழு ஏர்பேக் வழங்கப்பட்டு உள்ளது.

    • ஜியோ 4ஜி ஃபீச்சர் போனுடன் ஜியோ பாரத் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
    • இந்த மொபைலில் ஜியோ சினிமா ஆப் கொண்டு நிகழ்ச்சிகள், திரைப்படங்களை பார்க்கலாம்.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ பாரத் போன் பிளாட்ஃபார்மை அறிமுகம் செய்தது. இந்த பிரான்டிங்கில் ரிலையன்ஸ் ஜியோ குறைந்த விலையில் 4ஜி ஃபீச்சர் போன் மாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுக்க 250 மில்லியன் ஃபீச்சர் போன் பயனர்களை சென்றடைய ஜியோ இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

    ஜியோ பாரத் போன் ஸ்மார்ட் ஃபீச்சர் போன் ஆகும். இதில் இண்டர்நெட் பயன்படுத்துவதோடு, யுபிஐ பேமன்ட் மற்றும் ஜியோ பொழுதுபோக்கு செயலிகளை பயன்படுத்துவதற்கான வசதி வழங்கப்படுகிறது. ஜியோ 4ஜி ஃபீச்சர் போனுடன் ஜியோ பாரத் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இவற்றில் அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் மொபைல் டேட்டா உள்ளிட்டவைகளை குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன.

     

    விலை விவரங்கள்:

    இந்திய சந்தையில் புதிய ஜியோ பாரத் போனின் விலை ரூ. 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 4ஜி ஸ்மார்ட்போன் ஃபீச்சர் போன் மாடல் ரெட் மற்றும் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. ரிலையன்ஸ் ரிடெயில் தவிர இதர பிரான்டுகளும் ஜியோ பாரத் பிளாட்ஃபார்மில் இணைந்து ஜியோ பாரத் போன்களை அறிமுகம் செய்ய இருக்கின்றன. ஜியோ பாரத் போன்களின் முதல் பத்து லட்சம் யூனிட்களுக்கான பீட்டா டெஸ்டிங் ஜூலை 7-ம் தேதி துவங்க இருக்கிறது.

    ரிசார்ஜ் சலுகை விவரங்கள்:

    ரிலையன்ஸ் ஜியோ பாரத் சலுகைகளின் விலை ரூ. 123 முதல் துவங்குகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இதில் பயனர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 0.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

    ஜியோ பாரத் வருடாந்திர சலுகையின் விலை ரூ. 1234 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த சலுகையிலும் பயனர்களுக்கு தினமும் 0.5 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது.

    ஜியோ பாரத் போன் அம்சங்கள்:

    ஜியோ பாரத் போனின் அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. தோற்றத்தில் இந்த போன் வழக்கமான ஃபீச்சர் போன்றே காட்சியளிக்கிறது. இதில் சிறிய ஸ்கிரீன், கீபோர்டு மற்றும் ஏராளமான ஸ்மார்ட் அம்சங்கள் உள்ளன.

    இந்த மொபைல் கொண்டு யுபிஐ பேமன்ட் செய்ய முடியும். இதற்கு ஜியோ பே செயலியை பயன்படுத்த வேண்டும். இத்துடன் ஜியோ சினிமா ஆப் கொண்டு தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை கண்டுகளிக்க முடியும்.

    ஜியோ பாரத் போனுடன் ஜியோ சாவன் ஆப் சந்தா வழங்கப்படுகிறது. இதில் சுமார் எட்டு கோடிக்கும் அதிக பாடல்கள் வழங்கப்படுகின்றன. இவைதவிர எப்எம் ரேடியோ, டார்ச்லைட் போன்ற அம்சங்களும் உள்ளன.

    ×