என் மலர்
நீங்கள் தேடியது "விதைகள்"
- விவசாயிகள் கார்த்திகை மாத இறுதி பட்ட பருவத்தில் நிலக்கடலை சாகுபடி மேற்கொள்ள தயாராகி வருகிறார்கள்.
- விவசாயிகளின் வாழ்வாதாரமாக பவானிசாகர் அணை இருந்து வருகிறது.
வெள்ளகோவில்:
முத்தூர், நத்தக்காடையூர் பகுதி விவசாயிகள் நிலக்கடலை சாகுபடியில் தரமான விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெற முன்வர வேண்டும் என்று விதை ஆய்வு துணை இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழக விதை சான்று மற்றும் அங்கக சான்றுத்துறை இயக்குனர் கோ.வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
முத்தூர், சின்னமுத்தூர், ஊடையம், வேலம்பாளையம், பூமாண்டன் வலசு, ராசாத்தாவலசு, வள்ளியரச்சல் மற்றும் நத்தக்காடையூர், முள்ளிப்புரம், பழையகோட்டை, குட்டப்பாளையம், மருதுறை ஆகிய வருவாய் சுற்றுவட்டார கிராம கீழ்பவானி பாசன பகுதிகளில் ஆண்டு முழுவதும் விவசாயம் சார்ந்த தொழில்கள் செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக பவானிசாகர் அணை இருந்து வருகிறது.
விவசாயிகள் கார்த்திகை மாத இறுதி பட்ட பருவத்தில் நிலக்கடலை சாகுபடி மேற்கொள்ள தயாராகி வருகிறார்கள். நிலக்கடலை சாகுபடி செய்யும் காலங்களில் விளைச்சல் அதிகரித்து அதிக வருமானம் பெறுவதற்கு நிலக்கடலை விதை பருப்புகள் பங்கு முக்கியமானது. எனவே விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி தொடங்கும் காலத்தில் நல்ல தரமான நிலக்கடலை விதை கிடைத்திடும் வகையில் விதை சான்று மற்றும் அங்கக சான்றுத்துறை அனைத்து விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நிலக்கடலை சாகுபடியில் நல்ல ரக நிலக்கடலை விதை பருப்புகளை விதை உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்களிடம் மட்டுமே ரசீது பெற்று வாங்கி பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நிலக்கடலை விதை பருப்புகள் தரமற்றதாகவும், முளைப்புத் திறன் குறைபாடு கொண்டதாகவும் இருக்கும் பட்சத்தில் உடனடியாக ஈரோடு மாவட்ட விதை சான்று மற்றும் அங்கக சான்று இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறும் மற்றும் புகார் மனு அனுப்பி தீர்வு கண்டு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு கபிலர்மலை தோட்டக்கலை துறை மூலம் விதைகள் மானியம் மூலம் வழங்கப்படுகிறது.
- தக்காளி, வெங்காயம்,சுரை,கத்திரி, மிளகாய்,பாகல்,பீர்க்கன்,கொத்தவரை,வெண்டை ஆகிய விதைகள் வழங்கல்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு கபிலர்மலை தோட்டக்கலை துறை மூலம் தக்காளி, வெங்காயம்,சுரை,கத்திரி, மிளகாய்,பாகல்,பீர்க்கன்,கொத்தவரை,வெண்டை ஆகிய விதைகள் மானியம் மூலம் வழங்கப்படுகிறது. எனவே விதைகள் தேவைப்படும் விவசாயிகள் ஆதார் ஜெராக்ஸ் ,ரேசன் ஜெராக்ஸ்,சிட்டா நகல்,அடங்கல்நகல், வங்கிகணக்குபுத்தகம்நகல்,போட்டோ2, ஆகியவற்றை கொண்டு வந்து கபிலர்மலை தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் கொடுத்து விதைகளை பெற்றுக் கொள்ளுமாறு தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளார்.
- விதை விற்பனை உரிமம் பெறாத தானிய மண்டிகளில் விதைகளை வாங்க வேண்டாம்.
- உரிமம் பெறாமல் விதைகள் மற்றும் காய்கறி நாற்றுகள் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும்.
காங்கயம்:
காங்கயம் பகுதிகளில் உரிமம் பெறாமல் பயிறு வகைகள், சோளம் விதைகள், காய்கறி விதைகளை விற்றால் விற்பனை செய்தவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விதை ஆய்வு துணை இயக்குநா் பெ.சுமதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
திருப்பூா் மாவட்டம், வெள்ளகோவில் மற்றும் காங்கயம் வட்டாரங்களில் விதை விற்பனை உரிமம் பெற்ற 34 அரசு மற்றும் தனியாா் விதை விற்பனை நிலையங்கள் உள்ளன. உரிமம் பெற்ற விற்பனை நிலையங்கள் மூலம் நெல், சோளம், மக்காச்சோளம், பயிறு வகைகள், நிலக்கடலை, எள், சூரிய காந்தி மற்றும் காய்கறி விதைகள் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
விவசாயிகள் உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் விதைகளை வாங்கும்போது தவறாமல் அதற்கான விற்பனைப் பட்டியலை கேட்டு வாங்க வேண்டும். அதில் விதை குவியல் எண், காலாவதி நாள், விற்பனை செய்த நாள், வாங்குபவா் மற்றும் விற்பனை செய்பவரின் கையொப்பம் போன்ற விவரங்கள் உள்ளதா என சரி பாா்த்து வாங்க வேண்டும்.
விதை விற்பனை உரிமம் பெறாத தானிய மண்டிகளில் விதைகளை வாங்க வேண்டாம். திறந்த நிலையில் சாக்குகளில் வைத்து விற்பனை செய்யும் விதைகளை வாங்கக்கூடாது. உரிமம் பெறாமல் விதைகள் மற்றும் காய்கறி நாற்றுகள் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு உரிமம் இல்லாமல் விதைகள் மற்றும் நாற்றுகள் விற்றால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது விதைகள் சட்டம் 1966இன் படி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளாா்.
- பரமத்தி வட்டார வேளாண்மை விரிவாக்கம் மைய அலுவலகத்தில் வைகாசி பட்டத்திற்கு ஏற்ற நிலக்கடலை, உளுந்து, சோளம் விதைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
- விதைகள் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு பரமத்தி வட்டார வேளாண்மை விரிவாக்கம் மைய அலுவலகத்தில் வைகாசி பட்டத்திற்கு ஏற்ற நிலக்கடலை, உளுந்து, சோளம் விதைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பரமத்தி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடப்பு பருவத்திற்கு விதைப்பு செய்ய ஏற்ற நிலக்கடலை ரகங்கள் டி.எம்.வி 14, கதிரிலப்பாக்ஸி 1812, பிஎஸ்ஆர் 2, உளுந்து விதைகள் வம்பன்-8, வம்பன்-9, வம்பன்-10, சோளவிதைகள்- கோ-32, கே-12 ஆகிய சான்று பெற்ற விதைகள் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
விதைகள் தேவைப்படும் விவசாயிகள் பரமத்தி வேளாண் விரிவாக்கம் மையத்தில் வாங்கி பயன்பெறலாம் என பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- தலைஞாயிறு பகுதியில் கூடுதலாக 5 ஆயிரம் எக்டரில் குறுவை சாகுபடி செய்யப்படும்.
- குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகள் வயல்களை கோடை உழவு செய்து தயாராகலாம்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு வேளாண்மை அலுவலகத்தில் 44 டன் ஆடுதுறை 53 நெல் விதை இருப்பு உள்ளது என்றும், விவசாயிகள் 50 சதவீத மானியத்தில் வாங்கி பயன்படுத்தலாம் என வேளாண்மை துறை அலுவலர் கருப்பையா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தலைஞாயிறு பகுதியில் 4 ஆயிரம் எக்டரில் குறுவை சாகுபடி நடைபெறும்.
ஆனால், இந்த ஆண்டு சரியான நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளதால் தலைஞாயிறு பகுதியில் கூடுதலாக 5 ஆயிரம் எக்டரில் குறுவை சாகுபடி செய்யப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.
குறுவை சாகுபடிக்காக தலைஞாயிறு, நீர்முளை, கொத்தங்குடி, பனங்காடி ஆகிய 4 வேளாண்மை விரிவாக்க மையங்களில் ஆடுதுறை 53 நெல் விதை 44 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
மேலும், சாகுபடிக்கு தேவையான சிங் சல்பேட், ஜிப்சம் உள்ளிட்ட நுண்ணூட்ட சத்து உரங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
தற்போது விதை மற்றும் உரங்கள் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும் என்றும், குறுவை சாகுபடிக்கு தற்போது கோடை உழவு செய்ய ஏற்ற நேரமாகும்.
எனவே, குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகள் வயல்களை கோடை உழவு செய்து குறுவை சாகுபடிக்கு தயாராகலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தற்போது கோடை மழை பெய்துள்ளதால், உழவர்கள் விதைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- வட்டார வேளாண்மை -உழவர் நலத்துறையின் சார்பில், விவசாயிகளுக்கு சோளம், சாமை, மற்றும் பயறு விதைகள், மானிய விலையில் வழங்கப்படுகிறது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட வேளாண் அதிகாரி வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தற்போது கோடை மழை பெய்துள்ளதால், உழவர்கள் விதைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் வட்டார வேளாண்மை -உழவர் நலத்துறையின் சார்பில், விவசாயிகளுக்கு சோளம், சாமை, மற்றும் பயறு விதைகள், மானிய விலையில் வழங்கப்படு கிறது. விவசாயிகளுக்கு விதைப்புக்கு தேவையான சோளம், சாமை மற்றும் நிலக்கடலை, பயறு வகை பயிர்களான உளுந்து, பாசிப்பயறு விதைகள் நாமக்கல் வட்டார ஒருங்கி ணைந்த வேளாண்மை விரி வாக்க மையத்தில் கையிருப்பு உள்ளன.
இந்த விதைகள் தேவைப்படும் விவசாயிகள், தங்களின் நில உடமை சான்று, சிட்டா மற்றும் ஆதார் அட்டை நகல் கொண்டு வந்து, வேளாண் விரிவாக்க அலுவலகத்தை நேரில் அணுகி தங்கள் சாகு படிக்கு தேவையான விதையை, மானிய விலை யில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு அந்தந்த பகுதி உதவி வேளாண்மை அலுவ லர்களை தொடர்புகொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் விதைகள் வாங்க அறிவுறுத்தப்பட்டது
- மனிதனுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்களை வழங்குவதில் காய்கறிகளின் பங்கு மகத்தானது
அரியலூர்,
உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களிலேயே விவசாயிகள் விதைகளை வாங்க வேண்டும் என்று திருச்சி விதை ஆய்வு துணை இயக்குநர் கோவிந்தராசு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மனிதனுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்களை வழங்குவதில் காய்கறிகளின் பங்கு மகத்தானது. விவசாயிகள் தங்கள் குடும்பத்துக்குத் தேவையான ஊட்டச்சத்து மிக்க தரமான காய்கறிகளை வீட்டுத் தோட்டம் மூலம் பெறலாம். வீட்டுத் தோட்டம் அமைப்பதால் கீழ்க்கண்டபயன்கள் நமக்கு கிடைக்கின்றது.
நச்சு மருந்துகள் இல்லாத காய்கறிகளை உற்யத்தி செய்யலாம். குடும்பத்துக்கு காய்கறி வாங்குவதற்கான செலவைக் குறைக்கலாம். வீட்டுத் தோட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் காய்கறி கடையில் வாங்குவதைக் காட்டிலும் சுவையாக இருக்கும். சமையலறையில் வீணாகும் நீர் மற்றும் பொருள்களைப் பயன்படுத்தலாம். உடலுக்கும், மனதுக்கும், மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் கிடைக்கும். ஓய்வு நேரத்தை உபயோககரமாக செலவிடலாம்.
எனவே விவசாயிகள் தங்கள் வீட்டுத் தோட்டத்துக்குத் தேவையான காய்கறி விதைகளை வாங்கும் போது மாநில அரசால் விதை விற்பனை செய்ய உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் வாங்க வேண்டும். மாறாக சாலை ஓரத்தில் உள்ள கடைகளிலோ, மளிகை கடைகளிலோ, சந்தைகளிலோ விற்கப்படும் காய்கறி விதைகளை வாங்கக் கூடாது. விதைகள் வாங்கும் போது பில் கேட்டுப் பெறுவது மிகவும் அவசியம். விவசாயிகள் விற்பனை பட்டியல் பெறா விட்டால் எந்த வித இழப்பீடும் பெற இயலாது என தெரிவித்துள்ளார்.
- விவசாயிகளுக்கு காய்கறி பயிர்கள் சாகுப டியை ஊக்குவிக்க 75 சதவீத மானியத்தில் விதைகள் அல்லது நாற்றுகள் மற்றும் இயற்கை உரங்கள் வழங்கப்பட உள்ளது.
- 5 வகையான செடிகள் அடங்கிய பழச்செடி தொகுப்பு விவசாயிகள் மற்றும் விவசாயி அல்லாத பயனாளிகள் 75 சதவீத மானியத்தில் ரூ.50 செலுத்தி பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி வட்டாரத்தில் 2023-24-ம் ஆண்டு கலை ஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள கூடச்சேரி, பிராந்தகம், வீரணம்பாளையம் மற்றும் சுங்ககாரன்பட்டி ஆகிய கிராம பஞ்சாயத்துகளில் உள்ள விவசாயிகளுக்கு காய்கறி பயிர்கள் சாகுப டியை ஊக்குவிக்க 75 சதவீத மானியத்தில் விதைகள் அல்லது நாற்றுகள் மற்றும் இயற்கை உரங்கள் வழங்கப்பட உள்ளது.
மேலும் மா, பலா, கொய்யா, எலுமிச்சை, நெல்லி, சீத்தா போன்ற 5 வகையான செடிகள் அடங்கிய பழச்செடி தொகுப்பு விவசாயிகள் மற்றும் விவசாயி அல்லாத பயனாளிகள் 75 சதவீத மானியத்தில் ரூ.50 செலுத்தி பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.
பல்லாண்டு பழப்பயிர் சாகுபடி செய்ய பழச்செ டிகள் மற்றும் இயற்கை உரங்கள் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவ சாயிகள் தங்களது கணினி சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், ரேசன்கார்டு நகல் மற்றும் பாஸ்ப்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் பரமத்தி வட்டார தோட்டக்கலை துறை அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.
மேலும் சொட்டுநீர் பாசனம் அமைக்க விருப்ப முள்ள அனைத்து கிரா மங்களை சேர்ந்த விவசாயி களும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என்று பரமத்தி தோட்டக்கலை உதவி இயக்குநர் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
- விவசாயியின் பெயர் மற்றும் முகவரியுடன் விதை வாங்குபவரின் கையொப்பம் பெறப்பட்டிருக்க வேண்டும்.
- ஆவணங்கள் இல்லாமல் விதை விற்பனை செய்வது விதி மீறல் ஆகும்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டாரத்தில் உள்ள தனியார் நெல் விதை உற்பத்தி மற்றும் விதை விற்பனை நிலையங்களில் துணை இயக்குனர் சுமதி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
விதை நெல் விற்பனையாளர்களின் விற்பனை உரிமம், விதை இருப்பு மற்றும் விலை விபரப்பலகை, விதை இருப்பு பதிவேடு, விதை கொள்முதல் பட்டியல், விற்பனை பட்டியல், உண்மை நிலை விதைகளுக்கான பதிவேடுகள், முளைப்புதிறன் பரிசோதனை முடிவு அறிக்கை போன்றவை ஆய்வு செய்யப்பட்டது. பிறகு நெல் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ள குடோன் ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வின் போது சான்று செய்த விதைகளையே விற்பனை செய்ய வேண்டும் , உண்மை நிலை விதைகளை விற்பனை செய்யும்போது, விதையின் ஆதாரம், கொள்முதல் பட்டியல், வயல் மட்ட பதிவேடு, முளைப்புத்திறன் அறிக்கை போன்ற பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படவேண்டும். விற்பனை பட்டியலில் ரகம், குவியல் எண், காலாவதி நாள் உட்பட அனைத்து தகவல்களும் இருக்க வேண்டும். வாங்குபவரின் கையொப்பம் பெறப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
விற்பனை செய்யும் போது விற்பனை ரசீது கொடுக்கப்பட வேண்டும். அதில் விதையின் பெயர், ரகம், குவியல் எண், காலாவதி நாள் ஆகியவற்றுடன் விவசாயியின் பெயர் மற்றும் முகவரியுடன் விதை வாங்குபவரின் கையொப்பம் பெறப்பட்டிருக்க வேண்டும்.
மேற்கூறிய விதை விற்பனை தொடர்பான ஆவணங்கள் இல்லாமல் விதை விற்பனை செய்வது விதைச் சட்டம் 1966 விதை விதிகள் 1968 மற்றும் விதைகட்டுப்பாட்டு ஆணை 1983 ஆகியவற்றின் மீது விதி மீறல் ஆகும். இது போன்ற விதை விற்பனை விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் விதை விற்பனையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் மீது "கடும் நடவடிக்கை" எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது விதை இருப்பிற்கும், புத்தக இருப்பிற்கும் வேறுபாடுகள், நெல் விதை விற்பனை நிலையங்களில் இருப்பு விதைகளின் விபரங்கள் மற்றும் விற்பனை பட்டியல் முறையாக பாராமரிக்கப்படாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரூ.15 லட்சம் மதிப்பிலான 51 ஆயிரம் கிலோ நெல் விதைகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.
- பெரம்பலூர் மாவட்டத்தில் மானியத்தில் பனை விதைகள் மற்றும் கன்றுகள் விநியோகம் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்
- மாவட்ட கலெக்டர் கற்பகம் தகவல்
பெரம்பலூர்,
தமிழகத்தில் மாநில மரமான பனைமரம் தமிழர்களின் வாழ்வோடும், வரலாறோடும் இணைந்த மரமாக இருக்கிறது. பனைமரம் நிலத்தடி நீரை அதிகரித்தல், மண் அரிப்பை தடுத்தல் என மண்ணிற்கு உகந்த மரமாக திகழ்வதுடன் அடிமுதல் நுனிவரை பயனளித்து பலருக்கும் வாழ்வா தாரமாக விளங்கு கிறது. பெரம்பலூர் மாவட்ட த்தில் பனை சாகு படியை ஊக்குவி ப்பதற்கா கவும், பனை சாகுபடி செய்துவரும் விவசா யிகளின் வாழ்வா தாரத்தை மேம்படுத்து வதற்காகவும் நடப்பு நிதியாண்டில் பெர ம்பலூர் மாவட்ட தோட்ட க்கலை துறைக்கு இலக்காக 30,000 பனை விதைகள் மற்றும் 125 பனை கன்றுகள் மானி யத்தில் விநியோகம் செய்ய ரூ.1,02,500- நிதி ஒதுக்கீடு பெறப்ப ட்டுள்ளது.
இத்திட்ட த்தின்கீழ் ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 50 பனை விதைகள் மற்றும் 10 பனை கன்றுகள் 100 சதவீத மானியத்தில் வழங்க ப்பட உள்ளன. பொது இடங்களில் தொண்டு நிறுவனங்கள் ,ஊராட்சி மன்றங்கள் மூலம் நடுவதற்கு அதிகபட்சமாக 100 விதைகள், 30 கன்றுகள் 100% மானியத்தில் வழங்க ப்படும். இத்திட்டத்தில் பய னடைய விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்ட க்கலை உதவி இயக்குநர் அலுவ லகத்தை அணுகியோ அல்லது https://www.tnhorticulture.tn.gov.in/tnhortnet/registration என்ற இணை யதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் க.கற்பகம் தெரிவித்துள்ளார்.
- நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள் விநியோகம் செய்யப்படுகிறது.
- பரமத்தி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் பெற்று பயனடையுமாறு பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி கேட்டு கொண்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள் விநியோகம் செய்யப்படுகிறது. பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு பரமத்தி வட்டார வேளாண்மை துறை மூலம் ஆடிப்பட்டத்தில் விதைப்பு செய்ய 50 சதவீதம் மானிய விலையில் சோளம் -கோ-32, நிலக்கடலை -கதிரிலெப்பாக்ஸி-1812, பிஎஸ்ஆர்-2, உளுந்து வம்பன்-8, வம்பன்-9, வம்பன்-10 ஆகிய சான்று விதைகள் மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டம் மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு திட்டங்களில் வழங்கப்பட்டு வருகிறது. விதைகள் தேவைப்படும் விவசாயிகள் தங்கள் நிலத்தின் சிட்டா மற்றும் ஆதார் அட்டை விவரங்களுடன் பரமத்தி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் பெற்று பயனடையுமாறு பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி கேட்டு கொண்டுள்ளார்.
- வேளாண் இடு பொருட்களை விற்பனை செய்யும்ஆன்லைன் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
- உழவர்களின் வருமானமும் உயர வழிவகை செய்யும்.
ஈரோடு:
வேளாண்மையில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக இருந்து வருகிறது. ஆனால் தற்பொழுது வேளாண்மை பல சவால்களை சந்தித்து வருகிறது.
குறிப்பாக உழவர்களுக்கு தகுந்த நேரத்தில் பண்ணைக்கு வேண்டிய வேளாண் இடு பொருட்களை உழவர்க ளின் வீடுகளுக்கே விநியோகம் செய்வது மிக பெரிய சவாலாக உள்ளது. உழ வர்கள் சிலநேரம் தரமான இடுபொருட்களை பெற அதிக நேரம் மற்றும் செலவு செய்யவேண்டி உள்ளது.
இதனை சரி செய்ய தமிழ்நாடு அரசின் ஒரு தொடர் முயற்சியாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை க்கழகம் உற்பத்தி செய்யும் விதைகள் மற்றும் இடுபொருட்கள் உழ வர்களின் வீடுகளுக்கே நேரடியாக ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் வகையில் வேளாண்பல் கலைக்கழகம் TNAU AgriCart என்ற வேளாண் இடு பொருட்களை விற்பனை செய்யும்ஆன்லைன் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் உழவர்கள் ஆன்லைன் மூலமாகவே பணம் செலுத்தும் வசதியும் இதில் உள்ளது.வேளாண் பருவங்கள் தொடங்கும் முன் வேண்டிய பயிர் ரகங்களின் விதைகள் மற்றும் வேளாண்இடு பொருட்கள் குறிப்பாக உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணிகள், பயிர் பூஸ்டர்கள் போன்றவைகள்ஆன்லைன் மூலம் வாங்கி பருவத்தே பயிர் செய்து உழவர்கள் பயனடையலாம்.
அமேசான் மற்றும் பிளி ப்கார்ட் ஆன்லைன் இணைய தளத்தில் பொது மக்கள் எவ்வாறு அனைத்து பொரு ட்களையும் ஆன்லைன் மூலம் வாங்கு கிறார்களோ அதேபோல் இந்த தளத்தில் உழவர்கள் ஆன்லைன் மூலம் இடுபொருட்கள் மற்றும் விதைகளை வாங்க முடியும்.
வேளாண்மைப் பல்கலைக் கழகம் தற்பொழுது வேளா ண்மைத் துறையுடன் இணைந்து உழவர்களி டையே நல்ல தொடர்பை ஏற்படுத்தி வருகிறது.
இதனால் உழவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை உடனடியாக வயலில் கடைபிடிக்க வழிவகை செய்து வேளாண் உற்பத்தி யை பெருக்கி உழவர்களின் வருமானமும் உயர வழிவகை செய்யும்.
இந்த இணையதளத்தை அனைத்து உழவர்களும் பயன்படுத்தி தமிழ்நாட்டின் வேளாண் பொருளாதாரத்தை மேலும் உயர்த்திட வேண்டும்
இந்த தகவலை வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்தார்.