என் மலர்
நீங்கள் தேடியது "சுற்றுலாப் பயணிகள்"
- சிக்கிமின் தலைநகரான காங்டாக்கிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சுங்டாங்.
- அனைத்து அனுமதிகளையும் அதிகாரிகள் ரத்து செய்தனர்.
வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் நேற்று பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் சிக்கியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. நிலச்சரிவைத் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் அவர்களை மீட்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சிக்கிமின் தலைநகரான காங்டாக்கிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுங்டாங்கில் சுமார் 200 சுற்றுலா வாகனங்கள் சிக்கித் தவிப்பதாகவும், பயணிகள் அங்குள்ள ஒரு குருத்வாராவில் தங்கியிருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
லாச்சென்-சுங்தாங் சாலையில் முன்ஷிடாங்கிலும், லாச்சுங்-சுங்தாங் சாலையில் லெமா பாப் பகுதியிலும் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது.
மறு அறிவிப்பு வரும் வரை வடக்கு சிக்கிமிற்கு சுற்றுலாப் பயணிகளை அனுப்ப வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் அனைத்து சுற்றுலா நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று (ஏப்ரல் 25), சுற்றுலாப் பயணிகள் இந்தப் பகுதியைப் பார்வையிட வழங்கப்பட்ட அனைத்து அனுமதிகளையும் அதிகாரிகள் ரத்து செய்தனர். லாச்சுங் மற்றும் லாச்சென் நகரங்களுக்கான போக்குவரத்து அமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- சொந்த ஊர்களுக்கு செல்ல வாகனம் ஏற்பாடு.
- 3 வேளையும் உணவு கொடுத்து தமிழக அரசு உதவி செய்தது.
சென்னை:
காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அங்குள்ள தமிழர்களை மீட்டு பாதுகாப்பாக கொண்டுவர தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
ரெயில், விமானம் மூலம் சுற்றுலா சென்ற பயணிகளை கணக்கெடுத்து அவர்களை மீட்டு டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
பயண நாள் தள்ளி இருந்தாலும் அதனை முன் தேதிக்கு மாற்றி விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்தது.
அதன்படி நேற்று 2 கட்டமாக டெல்லியில் இருந்து தமிழக சுற்றுலாப் பயணிகள் அழைத்துவரப்பட்டனர். விமான நிலையத்தில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மதுரை, கும்பகோணம், ஈரோடு, திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த அவர்கள் பாதுகாப்பாக செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்தது.
இந்த நிலையில் ரெயில் மூலம் 48 பேர் டெல்லியில் இருந்து சென்னை வருவதற்கு அரசு ஏற்பாடு செய்யப்பட்டு நேற்று முன்தினம் அவர்கள் பயணத்தை தொடங்கினர்.
டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் உணவு, தங்கும் வசதி அளிக்கப்பட்டு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தனர். அந்த ரெயில் இன்று காலை 6.30 மணிக்கும் சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்து சேர்ந்தது.
காஷ்மீர் சென்றவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பாக சென்னை வந்ததையொட்டி அவர்களை அழைத்து செல்ல உறவினர்கள் குடும்பமாக வந்திருந்தனர். வியாசர்பாடி, மாதவரம், சிட்லபாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகு தியை சேர்ந்த அவர்களை உறவினர்கள் பார்த்ததும் கட்டிப்பிடித்து மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் பிற பகுதிகளுக்கு செல்ல அரசு சார்பில் வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு அவர்களுக்கு, உணவு, குடிநீர், பிஸ்கட் போன்றவை வழங்கி அனுப்பி வைக்கப் பட்டனர்.
காஷ்மீர் சென்று திரும்பிய சென்னையை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விஜயகுமார், பாஸ்கர், முனியாண்டி, பிரபாவதி, தேன்மொழி ஆகியோர் கூறியதாவது:-
பஹல்காம் சுற்றுலா பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு முதல்நாள் அங்கு சென்று திரும்பினோம். ஒருநாள் முன்னதாக சென்றதால் இந்த சம்பவத்தில் இருந்து தப்பித்து உள்ளோம்.
சம்பவம் நடந்த உடனே எங்களை பாதுகாப்பாக அழைத்து வந்தனர். டெல்லிக்கு அழைத்துவரப் பட்டு தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைத்து 3 வேளையும் உணவு கொடுத்து தமிழக அரசு உதவி செய்தது.
சென்னை திரும்பும் வரை எங்களுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிகாரி களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மற்ற மாநிலங்களைவிட தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதைத்தொடர்ந்து விமானம் மூலம் மேலும் 28 பேர் இன்று இரவு சென்னை திரும்புகின்றனர். காஷ்மீர மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற தமிழர்களில் இது வரை 119 பேர் பத்திரமாக திரும்பியுள்ளனர்.
- மாநிலத்துக்குள் புதிதாக 4,107 பேர் வருகை புரிந்தனர்.
- விமான கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்று மத்திய அரசு ஏற்கனவே எச்சரித்திருந்தது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகளால் சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் கோடை கால வாசஸ்தலமான ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா சென்றவர்கள் தங்கள் திட்டங்களை ரத்து செய்து சொந்த ஊர்களுக்கு கூட்டம் கூட்டமாக திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் பயங்கரவாத தாக்குதல் நடந்த காஷ்மீரில் இருந்து நேற்று ஒரேநாளில் 10,090 சுற்றுலா பயணிகள் வெளியேறினர். ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து 10,090 பேர் வெளியேறியுள்ளனர். மாநிலத்துக்குள் புதிதாக 4,107 பேர் வருகை புரிந்தனர். ஸ்ரீநகரில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு 110 விமானங்கள் இயக்கப்பட்டதாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து சொந்த மாநிலத்துக்கு திரும்பிச்செல்ல முண்டியடிக்கும் சுற்றுலா பயணிகளை அழைத்துவர கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன. விமான கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்று மத்திய அரசு ஏற்கனவே எச்சரித்திருந்தது.
- பயங்கரவாதிகள் அவரது மனைவி ஹிமான்ஷியின் கண் முன்னே அவரைச் சுட்டனர்.
- இந்திய விமானப்படை கார்போரல் டேஜ் ஹைல்யாங்கின் உடல் கவுஹாத்தி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அவரவர் சொந்த ஊர்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. குடும்பத்தினர், தாங்க முடியாத துயரத்துடன் கண்களில் கண்ணீருடன் அவர்களின் உடல்களைப் பெற்றனர்.
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக்கில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்படுத்திய இரத்தக்களரியில் 26 பேர் உயிரிழந்தனர். 2019 புல்வாமா சம்பவத்திற்குப் பிறகு பள்ளத்தாக்கில் நடந்த மிகக் கொடூரமான சம்பவம் இதுவாகும்.
பலியானவர்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும், ஒரு நேபாள நாட்டவரும் அடங்குவர்.
அவர்களின் உடல்கள் முதலில் சவப்பெட்டிகளில் ஸ்ரீநகருக்குக் கொண்டு வரப்பட்டன, அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் விமானம் மூலம் அவர்களின் சொந்த ஊர்களுக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது.
கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் உடல் புதன்கிழமை பிற்பகல் காஷ்மீரில் இருந்து டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ஹரியானாவின் கர்னாலில் உள்ள அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.
பின்னர் அவரது இறுதிச் சடங்குகள் முழு இராணுவ மரியாதையுடன் நடைபெற்றன. 26 வயதான அந்த அதிகாரி ஒரு வாரத்திற்கு முன்புதான் திருமணம் செய்து கொண்டார். தேனிலவில் இருந்தபோது, பயங்கரவாதிகள் அவரது மனைவி ஹிமான்ஷியின் கண் முன்னே அவரைச் சுட்டனர்.
கர்னாலில் நடந்த அவரது இறுதிச் சடங்கில் அரியானா முதல்வர் நயாப் சிங் சைனி உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய விமானப்படை கார்போரல் டேஜ் ஹைல்யாங்கின் உடல் கவுஹாத்தி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அசாம் அமைச்சர் ஜெயந்த மல்லா பருவா மற்றும் குவஹாத்தி நகர காவல் ஆணையர் பார்த்தா சாரதி மஹந்தா ஆகியோர் அந்த வீரருக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
துபாயில் பட்டயக் கணக்காளராகப் பணிபுரிந்த நீரஜ் உத்வானியின் உடல், அவரது சொந்த ஊரான ராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்குக் கொண்டுவரப்பட்டது. திருமண விழாவிற்காக அவர் தனது மனைவி ஆயுஷியுடன் பஹல்காம் சென்றிருந்தார்.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த 31 வயது தொழிலதிபர் சுபம் திவேதியின் உடல் புதன்கிழமை இரவு லக்னோவை அடைந்தது. 2 மாதங்களுக்கு முன்புதான் அவர் திருமணம் செய்து கொண்டார். பஹல்காமில் அவரது மனைவியின் கண்முன்னே கொல்லப்பட்டார்.
மத்தியப் பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த எல்ஐசி மேலாளரான சுஷில் நதானியேலின் உடல் புதன்கிழமை இரவு காஷ்மீரில் இருந்து நகரத்திற்குக் கொண்டுவரப்பட்டது. மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் விமான நிலையத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
மகாராஷ்டிராவின் தானேயில் உள்ள டோம்பிவ்லியில் மூன்று உறவினர்களான சஞ்சய் லெலே (50), ஹேமந்த் ஜோஷி (45) மற்றும் அதுல் மோனே (43) ஆகியோரின் இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸும் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார்.
புனேவைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகளின் உடல்களும் வியாழக்கிழமை அதிகாலை விமானம் மூலம் நகரத்திற்குக் கொண்டு வரப்பட்டன.
மஞ்சுநாத் ராவ் மற்றும் பரத் பூஷண் ஆகியோரின் உடல்கள் வியாழக்கிழமை அதிகாலை கர்நாடகாவின் பெங்களூருக்கு கொண்டு வரப்பட்டன. மத்திய அமைச்சர் வி. சோமண்ணா, பெங்களூரு தெற்கு எம்பி தேஜஸ்வி சூர்யா அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர் எஸ். மதுசூதனின் உடல் வியாழக்கிழமை அதிகாலையில் சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டன.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் காங்கிரஸ் தலைவர் கே. செல்வப்பெருந்தகை, அதிமுகவின் கே.பி. கந்தன் ஆகியோர் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
- லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றுள்ளது. இ
- காஷ்மீரிலிருந்த சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வெளியேறியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து திடீரென தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உள்பட 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றுள்ளது. இதையடுத்து, பயங்கரவாதிகளைப் பிடிக்க ராணுவத்தினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவர்கள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெஹல்காம் தாக்குதல் எதிரொலியாக காஷ்மீரில் இதுவரை 1500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரை காவல் துறையினரின் தரவுகளில் இடம்பெற்றவர்கள், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் இதில் அடங்குவர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே ஜம்மு காஷ்மீரின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுக் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து காஷ்மீரிலிருந்த சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வெளியேறியுள்ளனர். அவர்களுக்கு இடையூறு இல்லாமல் அதே நேரத்தில் தீவிர சோதனைக்குப் பிறகு வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.
- சற்றும் தாமதிக்காமல் பயங்கரவாதியிடம் இருந்து துப்பாக்கியை பறிக்க முயன்றுள்ளார்.
- 'பிஸ்மில்லா பிஸ்மில்லா' என சத்தமாக கூறியபடி வந்த மூன்று உள்ளூர் இளைஞர்கள்தான் எங்களை காப்பாற்றினர்.
ஜம்மு காஷ்மீரின் சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து திடீரென தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உள்பட 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றுள்ளது. இதையடுத்து, பயங்கரவாதிகளைப் பிடிக்க ராணுவத்தினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே, பஹல்காமில் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலின்போது, தன் கண்முன்னே அப்பாவி மக்கள் சுடப்படுவதை கண்ட அப்பகுதியின் குதிரை சவாரி தொழிலாளி சையது அடில் ஹுசைன் ஷா என்பவர் சற்றும் தாமதிக்காமல் பயங்கரவாதியிடம் இருந்து துப்பாக்கியை பறிக்க முயன்றுள்ளார்.
இதனை பார்த்து சுதாரித்துக் கொண்ட பயங்கரவாதிகள் சையது அடிலை துப்பாக்கி சூட்டுக்கு இரையாக்கினர். சுற்றுலா பயணிகளை தவிர்த்து கொல்லப்பட்ட ஒரே உள்ளூர் நபர் இவர்தான்.
அவரது மறைவுக்கு அப்பகுதி மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். சையதின் துணிச்சலை அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா பாராட்டியுள்ளார். சையது உடைய இறுதிச் சடங்கில் பங்கேற்று அஞ்சலி செலுத்திய வார், அவரது குடும்பத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக தெரிவித்துள்ளார்.
பிஸ்மில்லா பிஸ்மில்லா
இந்த தாக்குதலில் கண்முன் கணவரை இழந்த பல்லவி என்ற கர்நாடக பெண்மணி கூறுகையில், "என் கணவரை கொன்றவர்களிடமிருந்து நாங்கள் தப்பியபோது, 'பிஸ்மில்லா பிஸ்மில்லா' என சத்தமாக கூறியபடி வந்த மூன்று உள்ளூர் இளைஞர்கள்தான் எங்களை காப்பாற்றினர்.
என் சகோதரர்கள் என்றே அவர்களை சொல்வேன். அவர்கள்தான் என்னையும் என் மகனையும் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.
ஒருவர் என் மகனை அரவணைத்து ஆறுதல் சொல்ல, மற்றவர்கள் என்னை தேற்றினர். அவர்களுக்கும் எங்கள் ஓட்டுநர் அப்ரீஸூக்கும் நன்றி" என்று கூறியுள்ளார்.
- ஆண்களை மட்டுமே குறிவைத்து பயங்கரவாதிகள் கொன்றுள்ளனர். பெண்கள், மற்றும் குழந்தைகள் காயங்களுடன் விடப்பட்டனர்.
- உங்கள் பாதுகாப்பிற்காக நாங்கள் இங்கே இருக்கிறோம்.
ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உட்பட 26 சுற்றுலாப்பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த கொடிய தாக்குதலுக்குப் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது.
தாக்குதலில் ஆண்களை மட்டுமே குறிவைத்து பயங்கரவாதிகள் கொன்றுள்ளனர். பெண்கள், மற்றும் குழந்தைகள் காயங்களுடன் விடப்பட்டனர். தங்கள் கண்முன்னே குடும்பத்தினர் கொல்லப்பட்டது அவர்களுக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சம்பவத்தின் பின் தகவலறிந்து பாதுகாப்புப் படையினர் அங்கு விரைந்தனர். அப்போது பயந்துபோன சுற்றுலாப் பயணிகளை வீரர்கள் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல முயன்றபோது, உயிர் பிழைத்த பெண்கள் மற்றும் குழந்தைகள் சிலர், வீரர்களை பயங்கரவாதிகள் என்று தவறாக நினைத்து அலறி அடித்து பின்வாங்கும் காணொளி வெளியாகி உள்ளது.
அதிர்ச்சி மற்றும் பயத்தில் அழுது அலறிய அவர்களிடம், "நாங்கள் இந்திய ராணுவம், உங்கள் பாதுகாப்பிற்காக நாங்கள் இங்கே இருக்கிறோம்" என்று கூறி சமாதானப்படுத்துவதும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.
- அப்பாவி பொதுமக்களுக்கு எதிரான இந்த காட்டுமிராண்டித்தனமான மற்றும் அர்த்தமற்ற மிருகத்தனமான செயல்களுக்கு நமது சமூகத்தில் எந்த இடமும் இல்லை.
- பயங்கரவாதம் எங்கள் உறுதியை ஒருபோதும் உடைக்காது.
காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உட்பட 26 சுற்றுலாப்பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த கொடிய தாக்குதலுக்குப் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது.
இந்நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு உமர் அப்துல்லா தலைமையிலான ஜம்மு காஷ்மீர் அரசு இழப்பீடு அறிவிப்பித்துள்ளது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. கூடுதலாக, பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பாக முதல்வர் உமர் அப்துல்லா கூறுகையில், "நேற்று பஹல்காமில் நடந்த இழிவான பயங்கரவாதத் தாக்குதலால் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளேன்.
அப்பாவி பொதுமக்களுக்கு எதிரான இந்த காட்டுமிராண்டித்தனமான மற்றும் அர்த்தமற்ற மிருகத்தனமான செயல்களுக்கு நமது சமூகத்தில் எந்த இடமும் இல்லை.
அதை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். இழந்த விலைமதிப்பற்ற உயிர்களுக்கு நாங்கள் இரங்கல் தெரிவிக்கிறோம். பயங்கரவாதம் எங்கள் உறுதியை ஒருபோதும் உடைக்காது. இந்த காட்டுமிராண்டித்தனத்தின் பின்னணியில் உள்ளவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படும் வரை நாங்கள் ஓயமாட்டோம்" என்று தெரிவித்தார்.
- தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உட்பட 26 சுற்றுலாப்பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
- லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது.
காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உட்பட 26 சுற்றுலாப்பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த கொடிய தாக்குதலுக்குப் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றுள்ளது.
தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு பயங்கரவாதிகளின் புகைப்படத்தை பாதுகாப்புப் படையினர் இன்று வெளியிட்டனர்.
இவர்கள் ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் (TRF) அமைப்பை சேர்நதவர்கள் என்று தெரியவந்துள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பயங்கரவாதிகளின் ஓவியங்களையும் பாதுகாப்பு படையினர் வெளியிட்டனர்.

அதிகாலையில், பயங்கரவாதிகளில் ஒருவரின் முதல் படமும் ஆன்லைனில் வெளியானது. அந்தப் படத்தில் பயங்கரவாதி ஏகே-47 துப்பாக்கியை வைத்திருப்பதைக் காட்டுகிறது.

- மனைவி பல்லவி, மகன் கண்முன்னே மஞ்சுநாத் உயிரிழந்தார்.
- பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்ட 26 பேரும் ஆண்களே ஆவர்.
காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உட்பட 26 சுற்றுலாப்பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த கொடிய தாக்குதலுக்கு பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது.
பெஹல்காமில் நேற்று நடைபெற்ற தாக்குதலில் மனைவி, மகன் கண்முன்னே கர்நாடகாவின் சிவ்மொஹாவை சேர்ந்த மஞ்சுநாத் என்பவரையும் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்துள்ளனர். மனைவி பல்லவி, மகன் கண்முன்னே மஞ்சுநாத் உயிரிழந்தார்.
இதுகுறித்து பல்லவி கூறுகையில், நான், என் கணவர் மற்றும் மகன் மூவரும் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்தோம். நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் பெஹல்காமில் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது என் கண்முன்னே அவரை கொன்றனர். கெட்ட கனவுபோல் இருக்கிறது.
நான்கு பேர் எங்கள் மீது தாக்குதல் நடத்தினர். என் கணவரை கொன்றதை போல் என்னையும் கொன்றுவிடுங்கள் என்று அவர்களிடம் கூறினேன். அப்போது, உன்னை கொல்ல மாட்டேன், நடந்ததை உங்கள் பிரதமர் மோடியிடன் போய் சொல் என்று ஒரு பயங்கரவாதி கூறினார்" என்றார்.
பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்ட 26 பேரும் ஆண்களே ஆவர். பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை. சில பெண்களுக்கு லேசான காயங்கள் மட்டும் ஏற்பட்டுள்ளது.
- திற்பரப்பு அருவி பகுதியில் நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்தது.
- குழித்துறை ஆற்றில் தரை பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் சுட்டெரிக்கு வெயில் அடித்து வந்த நிலையில் மதியத்திற்கு பிறகு சீதோசன நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. அதன்பிறகு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
இரணியல், குருந்தன் கோடு, கோழிப்போர்விளை, மாம்பழத்துறையாறு, கன்னிமார், ஆரல்வாய் மொழி, பூதப்பாண்டி, குளச்சல் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
திற்பரப்பு அருவி பகுதியில் நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்தது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக மழை நீடித்ததால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
திற்பரப்பில் அதிகபட்சமாக 68.8 மில்லி மீட்டர் மழை பதிவானது. இன்று காலையில் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராள மான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.
மேற்கு மாவட்ட பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக குழித்துறை ஆற்றிலும் தரை பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.
தற்பொழுது மழை குறைந்ததையடுத்து சப்பத்து பாலத்தை மூழ்கடித்து சென்ற வெள்ளம் படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. நாகர்கோவிலில் நேற்று இரவு சாரல் மழை பெய்தநிலையில் இன்று காலை வழக்கம்போல் வெயில் அடித்தது. மாவட்டம் முழுவதும் நேற்று பெய்த மழையினால் 2 வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளது.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 30.18 அடியாக இருந்தது. அணைக்கு 233 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 26.05 அடியாக உள்ளது. அணைக்கு 72 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 22 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை 48.2, பெருஞ்சாணி 41.4, சிற்றாறு 1-29.8, சிற்றாறு 2-18.6, நாகர்கோவில் 4.2, கன்னிமார் 20.6, பூதப்பாண்டி 12.4, முக்கடல் 20, பாலமோர் 6.2, தக்கலை 20, குளச்சல் 8, இரணியல் 6.2, அடையாமடை 27, குருந்தன்கோடு 4.4, கோழிப்போர்விளை 4.8, மாம்பழத்துறையாறு 20.2, ஆணைக்கிடங்கு 18.6, களியல் 15.4, குழித்துறை 5.2, புத்தன் அணை 41, சுருளோடு 62.6, திற்பரப்பு 68.4, முள்ளங்கினாவிளை 5.4.
- 88 நன்னீர் முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
- முதலைப்பண்ணை புதுபொலிவு பெற்றவுடன் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
உடுமலை :
உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அமராவதி வனச்சரக பகுதியில் வனத்துறை சார்பில் பராமரிக்கப்படும் முதலைப் பண்ணை உள்ளது.இந்தப் பண்ணையில் 22 ஆண் முதலைகள் உட்பட 88 நன்னீர் முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.இங்கு சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.அப்போது விலங்குகளின் மார்பளவு சிலைகள், ஊஞ்சல், சருக்கு விளையாட்டு, சுவற்றில் முதலைகளின் ஓவியம், புல்தரை, வனவிலங்குகளின் சிலைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டது. இதனால் முதலைப்பண்ணை புதுபொலிவு பெற்றவுடன் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் கோடை விடுமுறையை முன்னிட்டு நேற்று அமராவதிஅணை பகுதியில் சுற்றுலாபயணிகள் திரண்டனர். பின்னர் அணைப்பகுதி, ஒன்பது கண் மதகுகள் முன்பு கூட்டம் கூட்டமாக புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். அதைத் தொடர்ந்து முதலைப்பண்ணைக்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் முதலைகளை பார்த்து ரசித்தனர். புதிதாக பிறந்துள்ள முதலை குட்டிகள் அங்கும் இங்கும் ஓடிப் பிடித்து விளையாடியது. இது சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி அளித்தது. இதையடுத்து அங்குள்ள வனவிலங்குகளின் சிலைக்கு முன்பு புகைப்படம் எடுத்ததுடன் ஊஞ்சல்,சறுக்கு விளையாட்டு உள்ளிட்டவற்றில் விளையாடி மகிழ்ந்தனர். இதனால் அணைப்பகுதி, ராக் கார்டன், முதலைப்பண்ணை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. ஆனால் பூங்கா போதிய பராமரிப்பு இல்லாததால் இயற்கை சூழலை முழுமையாக அனுபவிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக சுற்றுலா பயணிகள் வருத்தம் தெரிவித்தனர்.
இதே போன்று திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.இதனால் அனைவரும் வரிசையில் நின்று குளித்து மகிழ்ந்தனர். அதைத்தொடர்ந்து அடிவாரப் பகுதிக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் மும்மூர்த்திகளை தரிசனம் விட்டு திரும்பி சென்றனர். இதனால் திருமூர்த்தி அணை அங்கிருந்து அருவி கோவில் பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.