search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆழியாறு"

    • கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.
    • சோலையாறு அணையின் மொத்த உயரம் 165 அடி ஆகும்.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள ஆழியாறு அணை வாயிலாக கோவை மாவட்டத்தில் புதிய ஆயக்கட்டு மற்றும் பழைய ஆயக்கட்டுகளில் 50,350 ஏக்கர் நிலங்களும், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.

    ஆழியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மேல்ஆழியாறு, நவமலை, காடம்பாறை மற்றும் சர்க்கார்பதி பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அணைக்கு நீர்வரத்துள்ள பிரதான நவமலை ஆறு, கவியருவி மற்றும் வனப்பகுதியில் உள்ள சிற்றாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 120 அடி உயரம் கொண்ட ஆழியாறு அணையில் கடந்த 15-ந் தேதி அணையின் நீர்மட்டம் 88.60 அடியாக இருந்தது. மூன்று நாட்களில் 12.50 அடி அதிகரித்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 101.10 அடியாக உயர்ந்தது.

    நேற்று தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே சென்றது. இதனால் இன்று காலை 7 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 106 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 3,709 கன அடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 84 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் இன்னும் ஓரிரு நாட்களில் அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதேபோல சோலையார் அணையும் நிரம்பி உள்ளது. பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் உள்ள 10 தொகுப்பு அணைகளில் முக்கிய அணையாக கருதப்படுவது சோலையார் அணையாகும். சாலக்குடி ஆற்றின் கிளை ஆறான சோலையார் ஆற்றின் குறுக்கே 3290 அடி உயரப் பகுதியில் கட்டப்பட்டுள்ள சோலையார் அணை, 5392 மில்லியன் கன அடி தண்ணீரை தேக்கும் கொள்ளளவு கொண்டது. சோலையார் அணை தான் தமிழ்நாட்டில் உள்ள அணைகளில் மிக உயரமான அணையாகும்.

    சோலையாறு அணையின் மொத்த உயரம் 165 அடி ஆகும். தற்போது அணையின் நீர்மட்டம் 161 அடியாக உள்ளது. மேலும் நீர்மட்டம் அதிகரிக்கும்பட்சத்தில் அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்படும்.

    • அணையை சுற்றி பார்க்க குடை பிடித்து செல்ல வேண்டி உள்ளது
    • கூட்டம் இல்லாததால் படகு சவாரியும் ரத்து

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு பகுதியில் பெரிய அணைக்கட்டு உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் எழில்மிகு பூங்கா மற்றும் படகு சவாரி ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளன.

    எனவே கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் ஆழியாறு அணைக் கட்டுக்கு வந்திருந்து, அங்கு உள்ள பூங்காவில் பொழுதுபோக்குவதுடன், அணைக்கட்டு பகுதியில் படகு சவாரி சென்றும் மகிழ்ந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக விடுமுறை காலங்களில் ஆழியாறு அணையில் சுற்றுலா பபணிகள் கூட்டம் அலை மோதும்.

    பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 வாரங்களாக மழை பெய்யவில்லை. இதனால் அங்கு உள்ள பல்வேறு பகுதியில் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. எனவே ஆழியாறு அணையை சுற்றி பார்க்க வரும் பயணிகள் குடை பிடித்துக்கொண்டு தான் செல்ல வேண்டி உள்ளது.

    ஆழியாறு பகுதியில் வெயில் கொளுத்துவதால் அங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து உள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் அணைக் கட்டுக்கு தினமும் வந்து செல்வோரின் எண்ணிக்கை சுமார் 2 ஆயிரம் என்ற நிலையில் இருந்தது.

    ஆனால் தற்போது நாள்தோறும் 300-க்கும் குறைவான எண்ணிக்கையில் தான் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். எனவே ஆழியாறு அணைக் கட்டு பகுதியில் உள்ள பூங்கா வெறிச்சோடி காணப்படுகிறது.

    மேலும் சுற்றுலா பயணி களின் வரத்து குறைவு காரணமாக அணைக்கட்டு பகுதியில் படகு சவாரியும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் அங்கு வரும் பொதுமக்கள் சற்று ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

    இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ஆழியாறு அணைக்கட்டு பகுதியில் வெயிலின் தாக்கம் அதிக மாக உள்ளது.

    எனவே சுற்றுலா பபணிகளின் வருகை குறைந்து உள்ளது. பொள்ளாச்சி பகுதியில் மழை பெய்து மீண்டும் குளுமை திரும்பினால் ஆழியாறு அணைக்கு வரும் சுற்றுலா பபணிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்து உள்ளனர்.

    ×