search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 226594"

    • எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறையில், தேர்தலில் பயன்படுத்தப்பட்ட இ.வி.எம் எந்திரங்கள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
    • இந்த எந்திரங்கள் பெங்களூருவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு உரிய பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.

    நாமக்கல்:

    இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவு மற்றும் வழி காட்டுதலின்படி, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவ லகத்தில் உள்ள எலக்ட்ரா னிக் வாக்குப்பதிவு எந்தி ரங்கள் பாதுகாப்பு வைப்பறை மற்றும் நாமக்கல் ஆர்.டி.ஓ அலுவல கத்தில் உள்ள எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறையில், தேர்தலில் பயன்படுத்தப் பட்ட இ.வி.எம் எந்திரங்கள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

    இங்கு, 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இருந்த எம்-2 வகை வாக்குபதிவு எந்திரங்கள் 1366, கட்டுப்பாட்டு கருவிகள் 621 மற்றும் எம்-3 வகையிலான பழுதடைந்த கட்டுப்பாட்டுக் கருவிகள் 8 மற்றும் வாக்கா ளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை கருவி கள் 3 என மொத்தம் 1,998 வாக்குபதிவு எந்திரங்கள் நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா தலைமை யில் திறக்கப்பட்டு, அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னி லையில் சரிபார்க்கப்பட்டது.

    பின்னர் இந்த எந்தி ரங்கள் பெங்களூருவில் உள்ள பாரத் எலக்ட்ரா னிக்ஸ் நிறுவனத்திற்கு உரிய பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில், நாமக்கல் ஆர்.டி.ஓ (பொறுப்பு) சுகந்தி, தேர்தல் பிரிவு தாசில்தார் திருமுருகன் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்கம் சார்பில் வர்த்தக கண்காட்சி நடைபெற்றது.
    • கலெக்டர் ரவிச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டக்குழு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்கம் சார்பில் மெகா எந்திரங்கள் மற்றும் வர்த்தக கண்காட்சி இலஞ்சி அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

    கலெக்டர்

    இதில் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் பழனிநாடார், சதன்திருமலை குமார் மற்றும் சோகோ நிறுவனத்தின் சி.இ.ஓ. மற்றும் பவுண்டரான ஸ்ரீதர் வேம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.

    முன்னதாக தென்காசி மாவட்டக்குழு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் சங்கத் தலைவர் அன்பழகன் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்று பேசினார்.

    கலந்து கொண்டவர்கள்

    கண்காட்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், துணைத்தலைவர் உதயகிருஷ்ணன், மாவட்ட ஒன்றிய தலைவர் ஷேக் அப்துல்லா, நகராட்சி சேர்மன் சாதிர், துணை சேர்மன் கே.என்.எல். சுப்பையா, இலஞ்சி பேரூராட்சி தலைவர் சின்னதாய் மற்றும் மாவட்ட தொழில் மையம் பொதுமேலாளர் மாரியம்மாள், ஏ.டி., எம்.எஸ்.எம்.இ. தலைவர் சீமியோன் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இசக்கிமுத்து, பி.எம். சிட்கோ நிறுவனத்தின் தலைவர் சத்யராஜ், ஆரம் டிக் நிறுவனத்தின் தலைவர் முருகேசன், ஏ.டி. திறன் மேம்பாட்டு மையம் தலைவர் ஜார்ஜ் பிராங்கிளின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் தென்காசி மாவட்ட அனைத்து ஊராட்சிமன்ற தலைமை கூட்டமைப்பு தலைவர் டி.கே. பாண்டியன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஜே.பி. பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியரும், தொழில் முனைவோர் ஒருங்கிணைப்பாளருமான அய்யப்பன், செந்தில் கணேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

    • தேர்தலின் போது பயன்படுத்தப்படும் பொருட்கள் இருப்பு வைக்கும் கட்டிடத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வைக்கப்பட்டது.
    • இது எதிர்வரும் 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ளன.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி உட்பட 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த 6 சட்டசபை தொகுதிகளிலும் 1,880 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    6 தொகுதிகளில் உள்ளடக்கி கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி உள்ளது. இந்த நிலையில், வருகிற 2024-ம் அண்டு நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்துவதற்காக நேற்று பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரிக்கு 900 வி.வி.பேட் (வாக்களித்ததை காட்டும் எந்திரம்) போலீசார் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது.

    இந்த எந்திரங்கள் மாவட்ட தேர்தல் அலுவலர் தீபக் ஜேக்கப் முன்னிலையில், கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் தேர்தலின் போது பயன்படுத்தப்படும் பொருட்கள் இருப்பு வைக்கும் கட்டிடத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வைக்கப்பட்டது.

    இது குறித்து அலுவலர்கள் கூறியதாவது:-

    மின்னணு எந்திரங்கள் இருப்பு வைக்கும் கட்டிடத்தில், ஏற்கனவே 2,118 கண்ட்ரோல் யூனிட், 3,606 பேல்ட் யூனிட், 1,706 வி.வி.பேட் எந்திரங்கள் உள்ளன. தற்போது, பெங்களூரு பெல் நிறுவனத்தில் இருந்து, 900 வி.வி.பேட் எந்திரங்கள் வரப்பெற்றுள்ளது. இது எதிர்வரும் 2024&ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    அப்போது தேர்தல் பிரிவு தாசில்தார் ஜெய்சங்கர், தி.மு.க. ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி,தேசியவாத காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சந்திரமோகன், காங்கிரஸ் நகர தலைவர் லலித் ஆண்டனி மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.

    • கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்களை சுழற்சி முறையில் கணினி மூலம் ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது.
    • 1408 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் இடைத்தேர்தலை யொட்டி கிழக்கு தொகுதி க்குட்பட்ட 238 வாக்கு சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட உள்ள கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்களை சுழற்சி முறையில் கணினி மூலம் ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது.

    இதை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டரு மான கிருஷ்ணனுண்ணி அனைத்து அங்கீகரி க்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

    அப்போது மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பேசியதாவது:

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 238 வாக்குச்சாவடி கள் உள்ளன. வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்துவதற்காக 1408 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    மேலும் வாக்குச் சாவடி களில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்து அங்கீகரிக்க ப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இணைய தளத்தின் மூலம் வாக்குச் சாவடிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவிற்காக 467 கட்டுப்பாட்டு எந்திரங்களில் 286 கட்டுப்பாட்டு எந்தி ரங்களும்,

    474 வாக்குப்பதிவு எந்திரங்களில் 286 வாக்குப்பதிவு எந்திர ங்களும், 467 வாக்காளர்கள் தங்கள் அளித்தவாக்கினை சரிபார்க்கும் 310 எந்திரங்கள் என மொத்தம் 882 வாக்குப்பதிவு எந்திரங்களும் 30 சதவீதம் கூடுதல் ஒதுக்கீடாக வும் கணினி சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டு மாநக ராட்சியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் 77 பேர் கொண்ட இறு திவேட்பாளர் பட்டியல் வெளியிட ப்பட்டதால் கூடுதலாக வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒவ்வொரு வாக்கு ச்சாவடியிலும் தேவைப்படுகின்றன.

    எனவே கூடுதலாக 1100 வாக்குபதிவு எந்திர ங்கள் ஒதுக்கப்பட்டு கூடுதல் எந்திரங்களை முதல்நிலை சரிபார்க்கும் பணி அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

    தொடர்ந்து கூடுதல் வாக்குபதிவு எந்திரங்கள் கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டம் தமிழகத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • இத்திட்டத்தின்கீழ் தனிப்பட்ட விவசாயிகள் வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெற்றிட ஏதுவாக முதற்கட்டமாக ரூ.1.61 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சேலம்:

    விவசாயத்தில் வேலையாட்களுக்கான பற்றாக்குறையினை நிவர்த்தி செய்து, குறித்த காலத்தே பண்ணைப்பயிர் சாகுபடி செய்திட ஏதுவாகவும், விவசாயிகளின் நிகர இலாபத்தினை உயர்த்திடவும் வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டம் தமிழகத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் இந்த ஆண்டில் சேலம் மாவட்டத்தில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் மானிய விலையில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி உழுவை எந்திரம் ரோட்டாவேட்டர், பவர்டில்லர், களைஎடுக்கும் கருவி, பல்வகை கதிர் பயிர் அடிக்கும் எந்திரம், நெல் அறுவடை எந்திரம் மற்றும் இதர எந்திரங்கள் வழங்கப்பட உள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் அனைத்து விவசாயிகள் விண்ணப்பம் மற்றும் வருவாய் ஆவணங்களை எங்களது சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம், மேட்டூர், ஆத்தூர் மற்றும் சங்ககிரி உபகோட்டங்களில் சமர்ப்பித்து மூதுரிமை அடிப்படையில் பெற்றுக்–கொள்ள கேட்டுக்–கொள்ளப்ப–டுகிறது. இத்திட்டத்தின்கீழ் தனிப்பட்ட விவசாயிகள் வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெற்றிட ஏதுவாக முதற்கட்டமாக ரூ.1.61 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி–ணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் செயல்படுத்தப்படும் கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு வேளாண் பணிகளுக்கான எந்திரங்கள் வாங்க முன்னுரிமை வழங்கப்படும். இதில் சிறு, குறு மகளிர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு 50 சதவிகித மானியமும் மற்றும் இதர விவசாயிகளுக்கு 40 சதவிகித மானியமும் அல்லது அரசு நிர்ணயிக்கும் தொகை உள்ளிட்டவற்றில் எது குறைவோ அதனை பின்னேற்பு மானியமாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்ப–டும். மேலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின சிறு / குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவிகித மானியமும் கணக்கிட்டு தனியே வழங்கப்படும்.

    சேலம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் _லம் பயன்பெற விருப்பமுள்ள விவசாயிகள் தேவையான அனைத்து ஆவணங்கள் மற்றும் விண்ணப்பத்துடன் வேளாண் அலுவலகங்களை தொடர்புகொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்து உள்ளார்.

    • கடலூர் மாநகராட்சியில் பராமரிப்பு பணிகளுக்காக ரூ.1.35 கோடியில் எந்திரங்கள் அமைச்சர் எம்‌.ஆர். கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
    • 15 -வது நிதி குழு மானியம் திட்ட நிதி பொக்லைன் எந்திரம், தெரு மின்விளக்கு பொருத்தும் எந்திரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் ரூ. 1 கோடி 35 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்டன.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் தெருவிளக்கு பராமரிப்பு பணிகளுக்கு 15 -வது நிதி குழு மானியம் திட்ட நிதி பொக்லைன் எந்திரம், தெரு மின்விளக்கு பொருத்தும் எந்திரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் ரூ. 1 கோடி 35 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்டன. இதன் தொடக்க விழா கடலூர் மாநகராட்சி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, ஆணையாளர் நாவேந்திரன், செயற்பொறியாளர் புண்ணியமூர்த்தி, நகர் நல அலுவலர் டாக்டர் அரவிந்த் ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகபட்சமாக இம்மாதம் கடந்த 18ந்தேதி 80 ரூபாயை எட்டிப்பிடித்தது.
    • ஆடைகளின் மதிப்பு கூட்டுதல் செய்வதற்கான செலவினம் அதிகரிக்கிறது.

    திருப்பூர்:

    சர்வதேச வர்த்தகம் அமெரிக்க டாலரிலேயே அதிக அளவில் நடக்கிறது. அதனால் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலர் மதிப்பில் மாற்றங்கள் நமது நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.நடப்பு ஆண்டு ஜனவரி இறுதி வரை 74.65 ரூபாயாக இருந்த ஒரு டாலரின் மதிப்பு படிப்படியாக உயர்ந்து மார்ச், ஏப்ரல் மாதங்களில் 76 ரூபாயை கடந்தது.

    அதிகபட்சமாக இம்மாதம் கடந்த 18ந்தேதி 80 ரூபாயை எட்டிப்பிடித்தது. தற்போது 79.88 ரூபாயாக காணப்படுகிறது.டாலர் மதிப்பு உயர்வு, திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையினருக்கு சாதகம், பாதகம் இரண்டையும் கொடுக்கிறது. சாதகங்களைவிட பாதகமே அதிகம் என்பதால் டாலர் மதிப்பு உயர்வு தொழில் துறையினரை கவலை அடைய செய்கிறது.

    இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:-

    டாலர் மதிப்பு உயர்வால் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி துறைக்கு சாதகமான சூழல் உருவாகியிருப்பது உண்மைதான். அதேநேரம். இந்த நிலை நீடிக்காது. ஏற்கனவே ஆர்டருக்கான ஆடை தயாரிப்பு, பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு சற்று கூடுதல் லாபத்தை பெற்றுத்தரும். ஆனால் புதிய ஆர்டர் வழங்கும்போது, டாலர் மதிப்பு உயர்வுக்கு ஏற்ப ஏற்றுமதி ஆடை விலையை வெளிநாட்டு வர்த்தகர்கள் குறைத்து விடுவர். இதனை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். லேபிள், பட்டன், ஜிப் போன்ற ஏற்றுமதி ஆடைகளின் இணைக்கும் அக்சசரீஸ்களை அமெரிக்கா, சீனா போன்ற வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவால் பின்னலாடை நிறுவனங்கள் அக்சசரீஸ் இறக்குமதிக்கு அதிக தொகை செலவிட வேண்டியுள்ளது. டாலர் மதிப்பு உயர்வு, பின்னலாடை ஏற்றுமதி துறைக்கு குறுகிய கால நன்மையே அளிக்கும். தலைவலிதான் அதிகம்.

    டெக்பா சங்க தலைவர் ஸ்ரீகாந்த் கூறியதாவது:-

    திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் துணி, பிரின்டிங் இங்க், அக்சசரீஸ், நிட்டிங், டையிங், பிரின்டிங், எம்ப்ராய்டரி என ஆடை உற்பத்தி சார்ந்த மெஷினரிகளை உலகளாவிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கின்றன. ஐரோப்பா தவிர மற்ற நாடுகளுடனான வர்த்தகம் டாலரிலேயே நடக்கிறது. இப்போது டாலர் மதிப்பு உயர்வு திருப்பூரில் ஆடை உற்பத்தி சார்ந்த ஜாப்ஒர்க் நிறுவனங்களை மிகவும் பாதிக்க செய்கிறது.இறக்குமதி மூலப்பொருட்களின் விலை உயர்வால் பிரின்டிங் போன்ற ஆடைகளின் மதிப்பு கூட்டுதல் செய்வதற்கான செலவினம் அதிகரிக்கிறது.வெளிநாடுகளிலிருந்து அதிநவீன எந்திரங்களை இறக்குமதி செய்வதும் சிக்கலாகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

    • இணையதளம் மூலம் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீட்டில் கலெக்டர் பங்கேற்றார்.
    • அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் மேகநாதரெட்டி ஒதுக்கீடு செய்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்டரங்கில் வத்திராயிருப்பு (வார்டு எண். 2) மற்றும் வ.புதுப்பட்டி (வார்டு எண். 7) பேரூராட்சிகளில் காலியாக உள்ள வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு சாதாரண தற்செயல் தேர்தல்கள் நடைபெற உள்ளன.

    இதையடுத்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய கால அட்டவணையின்படி, தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வழங்குவதற்காக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதளம் மூலம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் மேகநாதரெட்டி ஒதுக்கீடு செய்தார்.

    ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் விருதுநகர் நகராட்சி அலுவலகத்திற்கு பின்புறம் நாராயணமடம் தெருவில் உள்ள சமுதாயக் கூடத்தில் இருந்து வத்திராயிருப்பு மற்றும் வ.புதுப்பட்டி பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டன.

    அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய கால அட்டவணையின்படி, வருகிற 5-ந் தேதி வாக்குச்சாவடிகளுக்கு ஒதுக்கீடு செய்வதற்கான 3-ம் கட்ட பணிகள் வேட்பாளர்கள் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர்களால் மேற்கொள்ளப்படும்.

    மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்தார்.

    • அனைத்துப்பகுதிகளிலும் தொழிலாளர் பற்றாக்குறை முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது.
    • விவசாயிகள் ஒரு மணி நேரத்துக்கு 250 ரூபாய் வாடகைக்கு எந்திரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    குடிமங்கலம்:

    உடுமலை, குடிமங்கலம் மடத்துக்குளம் வட்டாரங்களில் நீண்ட கால பயிராக தென்னை, மாமரங்கள் பராமரிக்கப்படுகிறது.மேலும் கரும்பு, வாழை, சின்னவெங்காயம் மற்றும் ஒவ்வொரு சீசனிலும், பல ஆயிரம் ஏக்கரில் காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது. பி.ஏ.பி., மற்றும் அமராவதி பாசனத்துக்கு நெல், மக்காச்சோளம், சோளம் மற்றும் தானியங்கள் சாகுபடியாகிறது.

    விவசாய சாகுபடியில் தற்போது அனைத்துப்பகுதிகளிலும் தொழிலாளர் பற்றாக்குறை முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது.நடவு முதல் அறுவடை வரைகுறித்த நேரத்துக்குஆட்கள் கிடைக்காதது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போது, தென்னந்தோப்பு பராமரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு, பிற மாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வருவதும் அதிகரித்துள்ளது.

    இருப்பினும் சிறு, குறு விவசாயிகள், காய்கறி சாகுபடியாளர்களுக்குசீசன் சமயங்களில்தொழிலாளர் கிடைக்காமல் பாதிக்கின்றனர். எனவே படிப்படியாக, சாகுபடி பணிகளுக்கு கருவிகளையும், எந்திரங்களையும் பயன்படுத்த துவங்கியுள்ளனர்.

    காய்கறி சாகுபடியில் மேட்டுப்பாத்தி அமைத்து, இடைவெளியில் களையெடுக்க கோனோவீடர்கருவியை பயன்படுத்துகின்றனர். அதே போல் தென்னை, மாமரங்களுக்கு இடையே, களைச்செடி, பார்த்தீனிய செடிகளை அகற்ற கட்டர் எந்திரத்தைபயன்படுத்துகின்றனர்.இவ்வகை எந்திரத்தை சொந்தமாகவும் வாங்கி பயன்படுத்துகின்றனர். சில பகுதிகளில் விவசாயிகள் ஒரு மணி நேரத்துக்கு 250 ரூபாய் வாடகைக்கு எந்திரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    விவசாயிகள் கூறுகையில், தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க புதிய வகை கருவிகள் உதவுகிறது. களையெடுத்தல் பணிக்கு பரவலாக எந்திரங்களை பயன்படுத்துகிறோம். அதே போல் விதை, நாற்று நடவு பணிக்கு கருவிகளை அறிமுகப்படுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இத்தகைய கருவி, எந்திரங்களை விவசாய ஆர்வலர் குழுக்களுக்கு, கிராமம்தோறும் வழங்கினால்அனைத்து விவசாயிகளும் பயன்பெறுவார்கள் என்றனர்.

    • பலவஞ்சிபாளையம் ரிங் ரோட்டில், அப்பேரல் கிளஸ்டர் பொது பயன்பாட்டு மையத்தை உருவாக்கியுள்ளது.
    • துணியில் டிசைன்களை மிக துல்லியமாக எந்திரம் பொறிக்கும்.

    திருப்பூர் : 

    பொது பயன்பாட்டு சேவை மையங்களை அமைத்து, பின்னலாடை உற்பத்தி துறையில் உள்ள தொழில் நுட்ப இடைவெளிகளை பூர்த்தி செய்யும் முயற்சியில் திருப்பூர் தொழில் துறையினர் முனைப்பு காட்டி வருகின்றனர்.

    தென்னிந்திய இறக்குமதி எந்திர பின்னலாடை உற்பத்தியாளர் சங்கம்(சிம்கா) பல்லடம் அருகே நாரணாபுரத்தில் நிட்டிங் பொது சேவை மையத்தை உருவாக்கியுள்ளது. அதிநவீன எந்திரங்களுடன் இம்மையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

    இதேபோல் திருப்பூர் தொழில் பாதுகாப்புக்குழு, பின்னலாடை உற்பத்தி துறையினர் 50 பேரை இணைத்து தாராபுரம் ரோடு பலவஞ்சிபாளையம் ரிங் ரோட்டில், அப்பேரல் கிளஸ்டர் பொது பயன்பாட்டு மையத்தை உருவாக்கியுள்ளது.

    ரூ.16.25 கோடி மதிப்பிலான இந்த திட்டத்துக்கு, மத்திய அரசு ரூ. 8.56 கோடி, மாநில அரசு ரூ. 3 கோடி மானியம் வழங்குகின்றன. தொழில் துறை குழுவினர் ரூ. 4.69 கோடி முதலீடு செய்கின்றனர்.பொது பயன்பாட்டு மையம் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் முதல் கட்ட மெஷினரிகள் வந்திறங்கின.

    மைய தலைவர் ராமசாமி, நிர்வாக இயக்குனர் மோகனசுந்தரம், தொழில் பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் அண்ணாதுரை, விஜயகுமார் உள்ளிட்டோர் சிறப்பு பூஜையில் பங்கேற்றனர்.சீனாவில் இருந்து ஆட்டோமேட்டிக் டிரையருடன் கூடிய ஆட்டோமேட்டிக் கிளாஸ் பிரின்டிங் எந்திரம், 2 காஸ் கியூரிங் எந்திரம் 2 என இரண்டு வகையான நான்கு எந்திரங்கள் வந்துள்ளன.கிளாஸ் பிரின்டிங் எந்திரத்தில் 76க்கு 36 இன்ச் என்கிற பெரிய பரப்பளவில் துணியில் பிரின்டிங் செய்ய முடியும்.

    பிறப்பிக்கும் கட்டளையை ஏற்று தானாக இயங்கி, துணியில் டிசைன்களை மிக துல்லியமாக இந்த எந்திரம் பொறிக்கும். பிரின்டிங் செய்யப்பட்ட துணியே உடன் இணைக்கப்பட்டுள்ள டிரையருக்கு அனுப்பி உலர்த்தியும் கொடுத்துவிடும். அதிவேக உற்பத்தி திறன் மிக்கது. புதுமையான பிரின்டிங் சேம்பிள் தயாரிப்புக்கு இந்த எந்திரம் கைகொடுக்கும். எந்திரங்களை நிறுவும் பணிகள் நடந்துவருகின்றன. ரவுண்ட் பிரின்டிங் எந்திரம், எம்ப்ராய்டரி எந்திரங்களும் அடுத்தடுத்து வர உள்ளன. முதல்கட்ட எந்திரங்கள் வந்துவிட்டதால் விரைவில் இப்பொது பயன்பாட்டு மையமும் இயக்கத்தை துவக்க உள்ளது.

    • மதிப்புக்கூட்டும் எந்திரங்களை மானிய விலையில் பெறலாம் என வேளாண் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்
    • ஈரோடு மாவட்டத்தில் 13 மதிப்பு கூட்டும் எந்திரங்கள் வழங்க ரூ.9.47 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் செயல்படுத்தப்படுகிறது.

    ஈரோடு:

    வேளாண் பொறியியல் துறை மூலம் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் அறுவடைக்கு பின் சார் தொழில் நுட்பம், மதிப்பு கூட்டும் எந்திரங்கள் மானியத்தில் வழங்குதல் திட்டம் செயல்படுகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் 13 மதிப்பு கூட்டும் எந்திரங்கள் வழங்க ரூ.9.47 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் செயல்படுத்தப்படுகிறது. தங்கள் பகுதியில் விளையும் விளை பொருட்களை, தங்கள் பகுதிகளிலேயே மதிப்பு கூட்டி அதிக விலைக்கு விற்று லாபம் பெற மதிப்பு கூட்டும் எந்திரங்கள் உதவும்.

    வேளாண் விளை பொருட்களை மதிப்பு கூட்டும் எந்திரங்களான மாவரைக்கும் எந்திரம், தேங்காய் மட்டை உரிக்கும் எந்திரம், நிலக்கடலை செடியில் இருந்து காய் பிரித்தெடுக்கும் எந்திரம், நிலக்கடலை தோல் உரித்து தரம் பிரிக்கும் எந்திரம், எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு எந்திரம், வாழை நார் பிரித்தெடுக்கும் கருவி, கால்நடை தீவனம் அரைக்கும் எந்திரம் போன்றவை அனைத்து விவசாயிகளுக்கும் 40 சதவீத மானியத்திலும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் சிறு, குறு விவசாயிகளுக்கு, 60 சதவீத மானியமும் வழங்கப்படும்.

    விருப்பம் உள்ள விவசாயிகள், mis.aed.tn.gov.in என்ற இணைய தளத்தில் விபரம் அறியலாம். மேலும் ஈரோடு உதவி செயற்பொறியாளரை 0424 2904843, கோபி உதவி செயற்பொறியாளரை 04285 290069 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம்.

    ×