என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலியல் குற்றங்கள்"

    • காவல்துறையினர் பயன்ப டுத்தும் ஆயுதங்கள் மற்றும் கோப்புகள் காவல்துறை இயங்கும் விதம் குறித்து அறிந்துகொள்ள வழிவகை செய்யப்படும்.
    • வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை முடித்து 60 நாட்களுக்குள் இறுதியறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் இமைகள் திட்டம் குறித்த விழப்புணர்வு தொட க்கவிழா நிகழ்ச்சி நடைபெ ற்றது. நிகழ்ச்சிக்கு போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமை தாங்கி பேசிய தாவது:-

    பெண் குழந்தைகளை கண் இமைபோல் பாதுகாக்க இமைகள் எனும் மகத்தான திட்டம் தொடங்கப்ப ட்டுள்ளது. இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளிகளில் இருந்தும் தலா 50 குழந்தைகளை தேர்ந்தெடுத்து அவர்களை மாவட்ட காவல் அலுவலக த்திற்கு அழைத்து வந்து காவல்துறையினர் பயன்ப டுத்தும் ஆயுதங்கள் மற்றும் கோப்புகள் காவல்துறை இயங்கும் விதம் குறித்து அறிந்துகொள்ள வழிவகை செய்யப்படும். பெண் குழந்தைகள் ஒவ்வொருவ ரிடமும் பெண் காவல்துறை யினர் நட்பாக பழகி அவர்களுக்கு பொதுவெ ளியிலோ அல்லது பள்ளி களிலோ ஏதேனும் பாலியல் தொந்தரவு உள்ளதா என்று அறிந்து கொள்ள அறிவுறு த்தபட்டுள்ளது. ஏதேனும் பிரச்சனைகள் அவர்களுக்கு இருந்தால் அதை பெண் காவல்துறையினர் அறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் பொதுமக்க ளிடையே காவல்துறையினர் கலந்துரையாடல், தெரு நாடகங்கள், துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தி பெண் குழந்தைகளை காவல்துறை என்றும் கண் இமைபோல் காக்க வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கினார். காவல்துறையினரிடம் பெண் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பது, அதைச் சார்ந்த சட்டங்கள் பற்றியும், வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை முடித்து 60 நாட்களுக்குள் இறுதியறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட நபருக்கு இழப்பீடு தொகை மற்றும் மறுவாழ்வு ஏற்பாடுகள் செய்வதுடன் குற்றம் நடைபெறாமல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொ ள்ளுவது குறித்தும் ஆலோ சனை வழங்கினார். இதில் கூடுதல் போலீஸ் சூப்பிர ண்டுகள் ஜவஹர்லால், மணிகண்டன், சங்கர் மற்றும் அனைத்து உட்கோ ட்ட துணை போலீஸ் சூப்பிர ண்டு அனைத்து பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர்கள் கலந்து கொண்டனர்.

    • ராகுல் சர்மா எனும் பண்டிட் இச்சிறுமியை காப்பாற்றி உதவி செய்தார்
    • வெற்று கோஷங்களில் அலறல்களை அடக்கி விடுகின்றனர் என்றார் ராகுல்

    மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் ஒரு 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாள். தாக்குதலுக்கு உள்ளான அச்சிறுமி, உடல் முழுவதும் காயங்களுடன், ரத்த போக்குடனும், அறைகுறை ஆடைகளுடனும் பரிதாபமாக உதவி கேட்டு பல வீட்டு கதவுகளை தட்டியும், அவளுக்கு உதவி மறுக்கப்பட்டது.

    அந்நகரத்தில் பட்நகர் சாலையில் ஒரு ஆசிரமத்தை சேர்ந்த ராகுல் சர்மா எனும் பண்டிட் இவளை கண்டு, உடனடியாக இவளுக்கு ஆடைகள் கொடுத்து உதவி, காவல்துறையினரை வரவழைத்து, மருத்துவமனையில் சேர்த்தார். காவல்துறையினர் குற்றவாளிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், அச்சிறுமி சாலைகளில் உதவி கேட்டு வருவதும், அது மறுக்கப்படுவதும் கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகி அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

    இந்த அதிர்ச்சி தரும் சம்பவம் குறித்து இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவரது கருத்துக்களை தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

    மத்திய பிரதேசத்தில் 12 வயது சிறுமிக்கு எதிரான கொடூரமான குற்றம், அன்னை இந்தியாவின் இதயத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். நாட்டிலேயே மத்திய பிரதேசத்தில்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்களும், சிறு பெண்களுக்கு எதிரான கற்பழிப்புகளும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுகின்றன. இந்த குற்றங்களில் நேரடியாக ஈடுபட்டவர்கள் மட்டுமே குற்றவாளிகள் அல்ல; மாநில பா.ஜ.க. அரசாங்கமும் குற்றவாளிதான். நாட்டின் மகள்களை பாதுகாக்க இயலாத அரசாங்கம் நடைபெறுகிறது. மாநிலத்தில் நீதி இல்லை, சட்டம் ஒழுங்கு இல்லை, உரிமைகள் இல்லை. இன்று மத்திய பிரதேசத்தின் மகள்களின் நிலை குறித்து முழு நாடும் வெட்கப்படுகிறது. ஆனால், மாநில தலைவருக்கும் நாட்டின் பிரதமருக்கும் இவை அவமானமாகவே தெரியவில்லை. அவர்கள் தேர்தல் உரைகள், வெற்று வாக்குறுதிகள் மற்றும் தவறான கோஷங்களுக்கிடையே நாட்டின் மகள்களின் அலறல்களை பா.ஜ.க.வினர் அடக்கிவிடுவார்கள்.

    இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

    • தமிழகத்தில் மகளிருக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.
    • பெண்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் ஓவ்வொரு 2 மணி நேரத்திற்கும் ஒரு பெண் குழந்தை மீது பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்படுவதாக தெரிகிறது. தமிழகத்தில் மகளிருக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.

    பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட அனைத்துக் குற்றங்களையும் தடுப்பதற்கான சிறப்புத் திட்டங்களை வகுத்து அவற்றை செயல்படுத்த வேண்டும். பெண்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நடத்தைகளில் பல வகை உள்ளன.
    • பெண் மீது வன்செயல்களை செய்ய நினைக்கிறார்கள்.

    பெண்ணை அடிக்கடி பின்தொடர்வது, கண்காணிப்பது, தொந்தரவு பண்ணுவது, தன் காதலை ஏற்றுக்கொள்ளச் சொல்லி நச்சரிப்பது, கடிதங்கள், மின்னஞ்சல்கள் அனுப்புவது... இதுபோன்ற செயலினால் பெண்ணுக்கு அச்சத்தை ஏற்படுத்துவது போன்றவற்றை `ஸ்டாக்கிங்' என்கிறார்கள். இம்மாதிரியான நடத்தைகளில் பல வகை உள்ளன. பெண்களால் நிராகரிக்கப்பட்டதால், அடிக்கடி பின்தொடர்வதும் தொந்தரவு செய்வதும் உண்டு. அச்சுறுத்துவதாகவும் பயமுறுத்துவதாகவும்கூட மாறலாம்.

    இம்மாதிரியான ஒரு ஆண், குறிப்பிட்ட ஒரு பெண் தன்னைப் புறக்கணிப்பதாகக் கருதி மனஉளைச்சலுக்கு ஆளாகிறார். தான் அவமதிக்கப்பட்டதாக மனம் புழுங்குகிறார். அதைப் பற்றியே திரும்பத்திரும்பச் சிந்திக்கிறார். அந்த எண்ணத்தை மனதில் இருந்து களைய முடிவதில்லை. சில வேளைகளில் பழிவாங்கவும் துடிக்கிறார். தனக்குக் கிடைக்காத ஒரு பெண், வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று பொறுமுகிறார். இது சில நேரம் வன்முறையிலும் கொலையிலும் முடிகிறது.

    இன்னொருபுறம், பெண்களை பின்தொடர்ந்து தன் காதலை ஏற்றுக்கொள்ளும்படி மன்றாடுகிறார்கள். பெண்ணின் உணர்வுகளைப் பற்றி எண்ணிப் பார்ப்பதில்லை. கோரிக்கை மறுக்கப்படும்போது, அந்த பெண் மீது வன்செயல்களை செய்ய நினைக்கிறார்கள்.

    பின்தொடரும் நடத்தையை, ஒரு குற்றமாக மட்டும் கருதுவதும் தவறு. இதை ஒரு தனிமனிதனின் மனப்பிறழ்வாகவோ அல்லது வக்கிரமான மனநிலையின் வெளிப்பாடாகவோ அணுகுவதும் தவறு.

    மாறாக, நம் சமூகத்தில் ஆழமாக ஊடுருவியுள்ள பண்பாட்டு வெளிப்பாடாகவே பார்க்க வேண்டும். ஒரு குற்றத்தின் வேர் எது, கிளை எது? என்று இனம் காண்பது இதில் மிக அவசியம். பாலியல் குற்றங்களுக்கு பெண்களின் நடை, உடை, பாவனையைக் குறை கூறுவது சிலரிடையே வாடிக்கையாக உள்ளது. பாலியல் பற்றி ஆரோக்கியமான விவாதமும் அறிவார்ந்த உரையாடலும் இன்று நம்மிடையே இல்லை. பெற்றோரும் இது பற்றி தம் பிள்ளைகளுடன் பேச தயக்கம் காட்டுகிறார்கள். இம்மாதிரியான பண்பாட்டு சூழலில் பாலியல் கல்வி இன்றியமையாத ஒன்றாகிறது.

    • நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், கமிஷனர் வே.அமுதவல்லி உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
    • குழந்தை தொடர்பான விவரங்கள் யாருக்கும் தெரியாத வகையில் இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கவும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்கவும் முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்சோ சட்டத்தை அமல்படுத்துதல் தொடர்பாக நடந்த ஆய்வுக் கூட்டத்தில் போக்சோவுக்கு என தனி இணையதளம் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருந்தார்.

    இந்தநிலையில் https://www.pocsoportal.tn.gov.in என்ற போக்சோ இணையதளம், தனி நபர் பராமரிப்பு திட்ட செயலி, குழந்தை பராமரிப்பு இல்லங்களை ஆய்வு செய்வதற்கான செயலி, கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான கைபேசி செயலி போன்ற புதிய செயலிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், கமிஷனர் வே.அமுதவல்லி உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    இதில் போக்சோ இணையதள முகப்பு மூலம், பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தொடர்பான வழக்குகளை போலீஸ் துறை, போக்சோ கோர்ட்டு, மகளிர் கோர்ட்டு மற்றும் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை ஆகிய துறைகள், விவரங்களை உடனுக்குடன் பதிவு செய்யவும், பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வழக்குகள் காவல்துறையால் பதிவு செய்யப்படுவது முதல் கோர்ட்டு இறுதி தீர்ப்பு வரையும், ஒவ்வொரு நடவடிக்கையையும் அத்துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கண்காணித்து வழக்கை விரைவுபடுத்த முடியும்.

    மேலும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இழப்பீட்டு தொகையை தாமதமின்றி இணையதளம் மூலமாக நேரடியாக அவர்களின் வங்கி கணக்கிற்கு செலுத்தவும், துறை சார்ந்த உயர் அலுவலர்களால் வழக்கு துரிதமாக தீர்வு செய்வதை கண்காணிப்பதற்கும் இந்த இணையதளம் பயனுள்ளதாக அமையும். குழந்தை தொடர்பான விவரங்கள் யாருக்கும் தெரியாத வகையில் இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • எந்த கருத்தும் சொல்லாமல் மவுனம் காத்து வருகின்றனர்.
    • குற்றச்சாட்டுகளை மக்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ள தொடங்கி உள்ளனர்.

    கேரள திரைப்படத்துறையில் பாலியல் குற்றங்கள் நடப்பதாக ஹேமா அறிக்கை சமர்ப்பித்த நிலையில் இந்த பிரச்சனை மலையாள திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மலையாள திரை உலகில் சமீப காலமாக எரிமலை போல வெடித்திருக்கும் பாலியல் குற்ற சம்பவத்திற்கு மூத்த நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் எந்த கருத்தும் சொல்லாமல் மவுனம் காத்து வருகின்றனர்.

    இதுபற்றி டபிள்யூ சி.சி.அமைப்பின் நிறுவன உறுப்பினரும் நடிகையுமான ரேவதி கூறுகையில், இந்த குற்றச்சாட்டுகளை மக்கள் இப்போது தீவிரமாக எடுத்துக் கொள்ள தொடங்கி உள்ளனர்.

    திரை உலகை சேர்ந்த சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் இந்த பிரச்சனைக்கு கருத்து எதுவும் சொல்லாமல் இருப்பதற்கு காரணம், அவர்கள் எங்களைப் போலவே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    நாங்கள் பேசுகிறோம். அவர்கள் அமைதியாக இருக்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    https://iflicks.in/

    • பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதற்கான காரணங்கள்.
    • பாலியல் குற்றங்களுக்கு உடனே தண்டனை என்பது கிடைப்பதில்லை.

    பாலியல் வன்புணர்வு செய்யும் மனநிலை எங்கிருந்து வருகிறது?

    இது இன்றைக்கு நேற்று அல்ல பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆனால் தற்போதுள்ள கால கட்டங்களில் குற்றங்கள் கடுமையாக்கப்படாமல் இருப்பதினால் தான் இந்த மாதிரியான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதற்கான காரணங்களாக இருக்கின்றன.

    இதற்கு முக்கிய காரணம் மனிதர்கள் குடும்பத்துடன் நேரம் செலவிடாமல் இருப்பது தான். நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்துவது, லேப்டாப்பில் அதிகநேரம் வேலை செய்வது, மன அழுத்தம், மற்றவர்களை பற்றி புரிந்துகொள்ளும் மனநிலை இல்லாமல் போவது போன்ற காரணங்களால் தான் இந்த மாதிரியான எண்ணங்கள் அதிகம் ஏற்படுவதற்கு காரணங்களாக அமைகின்றன.

    இந்த மாதிரியான பாலியல் குற்றங்களுக்கு உடனே தண்டனை என்பது கிடைப்பதில்லை. போக்சோ சட்டப்படி 6 மாதத்தில் இருந்து ஒரு வருடத்திற்குள் தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்பது சட்டம். ஆனால் எத்தனை பேருக்கு இந்த தண்டனைகள் கிடைக்கின்றன என்றால் இல்லை.

    பெற்றோர்கள் தான் குழந்தைகளை கவனமுடன் வளர்க்க வேண்டும். குழந்தையை பெற்றுவிட்டோம் என்று விட்டுவிடாமல் குழந்தை எப்படி வளர்கிறது. அவனது நண்பர்கள் யார்? அவர்கள் யாரிடம் அதிகம் பேசுகிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். அவர்களுக்கு தேவையானதை பெற்றோர்கள் தான் கவனித்து பார்க்க வேண்டும்.

    இன்றைய காலத்தில் உள்ள குழந்தைகள் படிப்பை விட சமூக வலைதளங்களில் தான் அதிகநேரம் மூழ்கிக்கிடக்கின்றனர். அந்த குழந்தைகள் எதை இணையதளங்களில் பார்க்கின்றார்களோ அது சம்பந்தமானவைகளே கூகுலும் அவர்களுக்கு விவரிக்கிறது. எனவே குழந்தைகள் மனதில் இன்னும் அதிமான தாக்கத்தை இணையதளங்களே உருவாக்கி கொடுக்கின்றன.

    மன அழுத்தத்தில் உள்ள குழந்தைகளுக்கும், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளையும் ஒரு மனநல மருத்துவரிடன் கவுன்சிலிங்கிற்கு அழைத்து செல்வது பெற்றோர்களிடம் கடமை.

    குழந்தைகள் சாதாரணமாக இல்லாமல் இருந்தால் அதை பெற்றோர்கள் எளிதில் கண்டுகொள்ள முடியும். உதாரணமாக இரவில் விழித்துக்கொண்டு இருப்பது. படிப்பை தவிர்ப்பது, படிப்பில் கவனமின்மை, மற்றவர்களை கண்டு பயப்படுவது போன்ற பல காரணங்களால் குழந்தைகளிடம் ஏதோ மாற்றங்கள் உள்ளது என்பது எளிதில் கண்டுகொள்ள முடியும்.

    எனவே பெற்றோர்கள் பருவ வயதை அடைந்த குழந்தைகளிடம் தினமும் பேச வேண்டும். அவர்களுக்கு என்ன தேவை, எது விருப்பம் என்று கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். மேலும் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். என்ன நடந்தாலும் பெற்றோர்கள் உறுதுணையாக இருக்கிறோம் என்பதை குழந்தைகளுக்கு அன்புடன் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

    பிளாக்மெயில் சம்பவங்கள் பற்றி குழந்தைகளிடம் விவரிப்பதும் மிகவும் அவசியம். தவறாக நடக்கும் சில பிளாக்மெயில் செய்து பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதை பார்க்கிறோம். எனவே எந்த சூழ்நிலையிலும் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு பக்கபலமாக இருக்கிறோம் என்பதை குழந்தைகளிடம் அவ்வப்போது வெளிப்படுத்துவது நல்லது.

    முக்கியமாக 6 வயதில் இருந்து குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் என்பதை விவரிக்க வேண்டும். மேலும் உறவுகளுக்குள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், மற்றும் உறவுக்காரர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதையும், யாராக இருந்தாலும் குழந்தைகள் பயமில்லாமல் பெற்றோர்களிடம் தெரிவிப்பது போன்ற செயல்பாடுகளையும் குழந்தைகளுக்கு விவரிக்க மறக்க கூடாது.

    பெற்றோர்கள் இதுபோன்ற பாலியல் கல்வி முறைகளை சொல்லிக் கொடுத்தால் மட்டும் போதாது. அவர்களுக்கு பெண் குழந்தைகளை எவ்வாறு நடத்த வேண்டும். அவர்களுக்கு எப்படி மரியாதை கொடுக்க வேண்டும். பொது இடங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை பெற்றோர்களும் தெரிந்துகொள்ள வேண்டும். குழந்தைகள் முன்பு பெற்றோர்களும் ஒருவருக்கொருவர் மரியாதையுடனும், ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். இதனை வைத்து தான் ஒரு குழந்தை நல்ல குழந்தையாக வளர முடியும்.

    • 71 கல்லூரிகளில் 2 வருடங்களுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.
    • போலீஸ் புரோ திட்டமும் கோவையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    அண்மையில் கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி பள்ளி மாணவிகளுக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் அடங்குவதற்கு கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு கலைக்கல்லூரியில் படித்து வரும் மாணவிகளுக்கு கல்லூரியில் வேலை பார்த்த தற்காலிக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சேர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த சம்பவமும் அரங்கேறியது.

    இப்படி தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததை தொடர்ந்து, கல்வி நிறுவனங்களில் பெண்கள், மாணவிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதை தடுப்பது தொடர்பாகவும், பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவது தொடர்பாக தலைமை செயலாளர் முருகானந்தம் மாவட்ட கலெக்டர்கள், கல்லூரி முதல்வர்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

    இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. கலெக்டர்கள், போலீசார், கல்லூரி முதல்வர்கள் பல்வேறு ஆலோசனைகளை தெரிவித்தனர். அதில் முக்கியமாக கோவை மாநகர போலீசார் தாங்கள் செயல்படுத்தி வரும் போலீஸ் அக்கா திட்டம் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.

    இந்த திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், அது மாணவிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருப்பதாகவும் மாநகர போலீஸ் சார்பில் அந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    கோவையில் இந்த திட்டம் சிறப்பாக செயல்படுவதால், இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்த நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் அறிவுறுத்தப்பட்டது.

    கோவையில் கல்லூரி மாணவிகளிடம் வரவேற்பை பெற்ற போலீஸ் அக்கா திட்டம் பற்றிய விவரம் வருமாறு:-

    கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள் உளவியல், பாலியல் ரீதியாக என பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றனர். ஆனால் தாங்கள் சந்திக்கும் பிரச்சினைகளை அவர்களால் பெற்றோரிடமோ, கல்லூரி நிர்வாகம் என யாரிடமும் சொல்ல முடிவதில்லை. தயக்கத்தால் அதனை சொல்லாமல் தங்கள் மனதுக்குள்ளேயே போட்டு மூடி மறைத்து கொள்கின்றனர்.

    இதனால் சில நேரங்களில் சிலர் தவறான முடிவுகளை எடுப்பதையும் நாம் பார்த்திருக்கிறோம். அப்படி மாணவிகள் எந்த தவறான முடிவையும் எடுக்காமல் இருக்கவும், அவர்கள் தங்கள் பிரச்சினைகளை மனம் விட்டு தெரிவிப்பதற்காகவும் தொடங்கப்பட்டது தான் போலீஸ் அக்கா திட்டம்.

    இந்த திட்டமானது தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக கோவையில் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை கோவை மாநகர போலீஸ் கமிஷனராக இருக்கும் பாலகிருஷ்ணன் கொண்டு வந்து அறிமுகப்படுத்தினார்.

    இந்த திட்டத்தில் போலீஸ்காரர் முதல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வரையிலான பெண் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு கல்லூரியிலும் ஒரு போலீஸ் அக்கா பணியில் இருப்பார்.

    அவருக்கு என்று தனி அறை ஒதுக்கப்பட்டு இருக்கும். அத்துடன் கல்லூரியில் பணியில் இருக்கும் அந்த போலீஸ் அக்காவின் செல்போன் எண் கல்லூரி வளாகத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டிருக்கும்.

    மேலும் ஒவ்வொரு ஆண்டும் கல்லூரி தொடங்கும் போது, அந்த கல்லூரியில் உள்ள போலீஸ் அக்காவை கல்லூரி நிர்வாகத்தினர் மாணவிகளுக்கு அறிமுகப்படுத்தி வைப்பார்கள். மேலும் போலீஸ் அக்காவின் செல்போன் எண்ணும் மாணவிகள் அனைவருக்கும் கொடுக்கப்படும்.

    அந்த எண்ணை தொடர்பு மாணவிகள் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம் என்றும், அவர்களது விவரம் ரகசியம் காக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படும்.

    கோவை மாநகரில் உள்ள 71 கல்லூரிகளில் இந்த திட்டம் 2 வருடங்களுக்கும் மேலாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    கல்லூரிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் உள்ளடக்க புகார் கமிட்டி தான் இந்த திட்டத்தை தொடங்க உந்துதலாக இருந்ததாகவும், அவர்களுடன் இணைந்து போலீஸ் அக்கா பணியாற்றி வருகின்றனர் எனவும் கோவை மாநகர போலீசார் தெரிவித்தனர்.

    இந்த திட்டத்தில் பணியாற்றி வரும் போலீஸ் அக்காவான பெண் போலீஸ் ஒரு சகோதரியை போல, மாணவிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அவர்களிடம் கனிவுடன் பேசுவார்கள்.

    இதன் மூலம் மாணவிகளுக்கும் போலீஸ் அக்கா மீது மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டு, ஆசிரியர்களிடம் தெரிவிக்க முடியாமல் இருக்கும் விஷயங்கள், குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் மற்றும் கல்லூரிகளில் யாராவது பிரச்சினை செய்திருந்தால் அதனை மனம் விட்டு பெண் போலீசாரிடம் தெரிவிக்கின்றனர்.

    பிரச்சினைகளை கேட்டதும் அந்த பெண் போலீஸ் அதனை சாதுர்யமாக கையாண்டு, மாணவியை அந்த பிரச்சினையில் இருந்து வெளியில் வர வைக்கின்றனர். இதன் மூலம் மாணவிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் ஆரம்பத்திலேயே கிள்ளி எறியப்படுகின்றன.

    கோவை மாநகரில் போலீஸ் அக்கா திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 473 புகார்கள் வந்துள்ளன. இந்த புகார்கள் அனைத்திற்கும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தகுந்த முறையில் தீர்வு கண்டுள்ளனர்.

    இதுகுறித்து சென்னையை சேர்ந்த கல்லூரி பேராசிரியை ஒருவர் கூறும் போது, போலீஸ் அக்கா திட்டம் மாணவிகளுக்கு பாதுகாப்பான உணர்வையும், அவர்கள் பிரச்சினைககளில் இருந்து வெளிவருவதற்கான தீர்வை ஏற்படுத்தும் அமைப்பாகவும் உள்ளது என தெரிவித்தார்.

    தற்போது இந்த திட்டத்தை தான் தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் செயல்படுத்த மாவட்ட கலெக்டர்கள், கல்லூரி முதல்வர்கள் மற்றும் போலீசாருக்கு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த திட்டம் தொடர்பாக அனைத்து மாவட்ட போலீசாருக்கும் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    விரைவில் தமிழகம் முழுவதும் போலீஸ் அக்கா திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது. இந்த திட்டம் வருவதன் மூலம் மாணவிகள் தாங்கள் சொல்ல முடியாத பிரச்சினைகளை கூட போலீஸ் அக்காவிடம் தெரிவித்து தீர்வு காணமுடியும்.

    இதேபோல் கல்லூரி மாணவர்கள் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் போலீஸ் புரோ திட்டமும் கோவை மாநகரில் சிறப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • காவலர்கள் பற்றாக்குறையை போக்க வேண்டும் என்றார்.
    • தவறான புகாரின் அடிப்படையிலும் தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்றார்.

    சென்னை:

    பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை மற்றும் தண்டனையை அதிகரிக்கும் 2 சட்ட மசோதாக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் நேற்று தாக்கல் செய்திருந்தார்.

    இந்த சட்ட மசோதாக்கள் மீது சட்டசபையில் இன்று எம்.எல்.ஏ.க்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்

    அதன் விவரம் வருமாறு:-

    தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறுகையில்,

    இந்த சட்டம் தமிழகத்திற்கு மிக முக்கியமான சட்டம். சிறுமிகளை, பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவோர் முதல் பின் தொடர்வோருக்கு உயிர் பயத்தை ஏற்படுத்தியிருக்கும் அருமையான சட்டம். ஆனால் இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டிய காவல்துறையில் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன. காவலர்கள் பற்றாக்குறையை போக்க வேண்டும் என்றார்.

    தளி ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்) கூறுகையில்,

    மரண தண்டனை குறித்து உலகம் முழுவதும் பல்வேறு கருத்துகள் பரவிவரும் நிலையில் அது குறித்து மட்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறினார்.

    ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி) கூறுகையில்,

    இந்த தண்டனைகள் விரைவாக கிடைப்பதற்கு ஏதேனும் வழியிருக்கிறதா? கடுமையான தண்டனைகள் இருந்தாலும் விரைவாக கிடைக்காத காரணத்தினால் குற்றங்கள் பெருகுகின்றனர். சட்டத்திருத்தத்திற்கு வரவேற்பு தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) கூறுகையில்,

    பெண்களுக்கு, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைக்கப்படும் நோக்கத்தில் தண்டனையை அதிகரித்து முதலமைச்சர் கொண்டு வந்த மசோதாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரிக்கிறது. அதே நேரத்தில் புகார் கொடுத்தால் தாமதிக்காமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் தலையீடு இருக்கக் கூடாது. விழிப்புணர்வு பிரச்சாரம், பாடத்திட்டத்தில் பாலியல் சமத்துவ பாடத்திட்டங்களை கொண்டு வர வேண்டும். சாதிமறுப்பு செய்யும் பெண்கள் கொலை செய்யப்பட்டு வரும் நிலையில் அவற்றையும் இந்த சட்டத்தில் கொண்டு வர வேண்டும். மரண தண்டனை குறித்து பரிசீலிக்க வேண்டும்.

    இவ்வாறு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

    இதன் பின்னர் பேசிய சட்டதுறை அமைச்சர் ரகுபதி கூறுகையில்,

    பெண்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் எண்ணுபவர் தான் நம் முதலமைச்சர். குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் கனவிலே கூட எண்ணிப் பார்க்காத அளவிற்கு சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.

    செல்வபெருந்தகை (காங்கிரஸ்) பேசுகையில்,

    இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். விழிப்புணர்வு மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

    ஜி.கே.மணி (பாமக) கூறுகையில்,

    இந்த சட்டம் தேவையான சட்டம். மரண தண்டனையை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். தவறான புகாரின் அடிப்படையிலும் தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்றார்.

    இவ்வாறு உறுப்பினர்கள் பேசினார்கள்.

    இதன்பிறகு முதலமைச்சர் கொண்டு வந்த சட்டமுன்வடிவு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    • குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான நடவடிக்கை குறித்து தலைமை செயலாளர் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
    • ஆலோசனையில் டிஜிபி சங்கர் ஜிவால், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஏடிஜிபி, பல்வேறு துறை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் குழந்தைகள், இளம்பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் பள்ளி, கல்லூரிகளில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் இது தொடர்பாக தலைமை செயலாளர் முருகானந்தம் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

    குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான நடவடிக்கை குறித்து தலைமை செயலாளர் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

    ஆலோசனையில் டிஜிபி சங்கர் ஜிவால், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஏடிஜிபி, பல்வேறு துறை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    • பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பவே பெற்றோர்கள் பயந்து தயங்குகின்றனர்.
    • அதிகரித்துவரும் பாலியல் குற்றங்களை ஒடுக்க வேண்டிய உங்கள் இரும்புக்கரம் எங்கே முதல்வரே?

    பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் பெருகி வருவது ஏன் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    அரசுப்பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் பெருகிவருவது ஏன் மு.க.ஸ்டாலின் அவர்களே..!

    புதுக்கோட்டை மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் அப்பள்ளிகளின் ஆசிரியர்களே அங்குள்ள மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளியாகியுள்ள செய்திகள், தமிழகத்தின் கல்வித்துறை தரம்தாழ்ந்து பாதாளத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதைத் தான் நமக்கு உணர்த்துகிறது.

    "பிச்சைப் புகினும் கற்கை நன்றே" என்று கல்வியின் அவசியத்தை உலகிற்கு எடுத்துக் கூறிய நமது தமிழகத்தில், நாளுக்கு நாள் அதிகரித்துவரும் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் பாலியல் அத்துமீறல்களால், பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பவே பெற்றோர்கள் பயந்து தயங்குகின்றனர் என்பது வேதனைக்குரியது.

    பள்ளி முதல் கல்லூரி வரை தொடரும் இந்த பாலியல் வன்கொடுமைகளால் பெண் பிள்ளைகளின் கல்வி பெருமளவில் பாதிக்கப்படும் என்பதை நீங்கள் இன்னும் உணரவில்லையா? அதிகரித்துவரும் பாலியல் குற்றங்களை ஒடுக்க வேண்டிய உங்கள் இரும்புக்கரம் எங்கே முதல்வரே?

    எனவே, "எந்தக் கொம்பனும் குறை சொல்லமுடியாத ஆட்சி" என்று இனியும் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாமல், அரசுக் கல்வி நிலையங்களில் தலைவிரித்தாடும் பாலியல் குற்றங்களை ஒடுக்க கடுமையான நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கல்வி நிறுவனங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை.
    • போக்சோ வழக்குகளில் தண்டனை பெற்ற ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களின் தகுதிச் சான்று ரத்து செய்யப்படும்.

    கல்வி நிறுவனங்களில் பாலியல் குற்றங்களை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

    இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடைபெறாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இதில் இப்பொருள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தனியார், அரசு பள்ளிகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கல்வி நிறுவனங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

    போக்சோ வழக்குகளில் தண்டனை பெற்ற ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களின் பள்ளி மற்றும் உயர்கல்வி சான்றிதழ்கள் தகுந்த விதிமுறைகளை பின்பற்றி ரத்து செய்யப்படும்.

    கல்வி நிறுவனங்களில் புதியதாக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களை (தற்காலிக மற்றும் நிரந்தர) பணி நியமனம் செய்யும் முன் காவல்துறை சரிபார்ப்பு சான்று (Police verification certificate) பெறுவது கட்டாயமாக்கப்படும்.

    பணியாளர்கள் அனைவரும் "குழந்தை பாதுகாப்பு உறுதி மொழி " ஆவணத்தில் (Child Safeguarding Declaration Document) கையெழுத்திடுவது கட்டாயமாக்கப்படும்.

    அனைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கும் பாலியல் குற்றங்களில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வது குறித்து "சுய பாதுகாப்பு கல்வி" (Personal Safety Education) அளிக்கப்பட வேண்டும்.

    குழந்தைகளின் தன்னம்பிக்கையை வளர்க்கவும், அவர்கள் உள்ள சூழலில், எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை அறியவும், பிரச்னை ஏற்படும் சூழலில், எவ்வாறு, யாரிடம் உதவியை நாடுவது போன்றவற்றிக்கு இக்கல்வியானது உதவுகிறது.

    இதனை திறம்பட நடைமுறைப்படுத்த முதலில் நிபுணர்களால் (NGO's and Subject matter experts) கையேடு தயாரிக்கப்பட்டு, அவர்களால் முதன்மை பயிற்சியாளர்கள் (Master Trainers) தயார் செய்யப்படுவார்கள். பின்னர், முதன்மை பயிற்சியாளர்கள் மூலம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

    ஆசிரியர்கள் இதனை குழந்தைகளுக்கு முழுமையாக கற்பிக்க வேண்டும். இப்பயிற்சி மூன்று மாதத்திற்கு ஒரு முறை கட்டாயமாக்கபட வேண்டும்.

    அனைத்து ஆசிரியர் பட்டய/ பட்டப்படிப்பு பாடத்திட்டங்களில் குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை தடுப்பது குறித்த பாடத்திட்டம் (Education on Child Protection against Sexual Abuse) சேர்க்கப்படும். மேலும், அனைத்து ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் வழங்கப்படும்.

    அனைத்து கல்வி நிறுவனங்களிலும் போக்சோ வழக்குகள் தொடர்பான அனைத்து விவரங்கள் பற்றி தொகுக்கவும் மற்றும் கண்காணிக்கவும், சம்பந்தப்பட்ட துறை அலுவலராக தொடர்பு அலுவலர் (Nodal officer) நியமிக்கப்படுவார்கள்.

    மாணவிகள் பயணம் செய்யும் பள்ளி வாகனங்களில் பெண் உதவியாளர்கள் பணியமர்த்தப்படவேண்டும்.

    இருபாலர்கள் மற்றும் பெண்கள் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களில் பெண் உயர்கல்வி ஆசிரியைகள் நியமனம் செய்யப்படவேண்டும்.

    விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், கல்விச் சுற்றுலா போன்ற நிகழ்ச்சிகளுக்கு பெண் ஆசிரியர்களே மாணவிகளை அழைத்துச் செல்ல வேண்டும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வெளியே முகாம்களில் தங்க நேரும் பட்சத்தில் மாணவிகளுடன் பெண் ஆசிரியர்கள் மட்டுமே தங்குவது உறுதி செய்யப்படவேண்டும்.

    மாணவிகள் விடுதிகளுக்குள் வெளிநபர்கள் அனுமதிக்கப்படக்கூடாது. விடுதி பராமரிப்பு பணி பெண் விடுதி காப்பாளர்கள் மேற்பார்வையில் மட்டுமே மேற்கொள்ளப்படவேண்டும்.

    அனைத்து கல்வி நிறுவனங்களிலும், 1098 & 14417 ஆகிய உதவி எண்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகள் கூடுதலாக அமைக்கப்படவேண்டும்.

    பாலியல் குற்றங்கள் பற்றி தெரிய வந்தால் அப்பள்ளியின் ஆசிரியர்கள்/ தலைமை ஆசிரியர்கள் உடனடியாக காவல் துறைக்கு புகார் அளித்து அதன் விவரத்தினை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும்.

    புகார் அளிக்கும் மாணவன்/மாணவியின் பெயர் விவரம் எக்காரணம் கொண்டும் வெளிவரக்கூடாது. இதற்கு அந்த கல்வி நிலைய தலைமை ஆசிரியர் பொறுப்பாவார்.

    "மாணவர் மனசு புகார் பெட்டி" அனைத்து பள்ளிகளிலும் இருப்பது உறுதி செய்யப்படவேண்டும்.

    அனைத்து திங்கட்கிழமைகளிலும், காலையில் நடக்கும் கூட்டங்களில் (School Assembly) தலைமை ஆசிரியர்களும், அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொண்டு குழந்தைகள் பாதுகாப்பு, "மாணவர் மனசு புகார் பெட்டி" மற்றும் குழந்தை பாலியல் வன்கொடுமை பற்றி புகார் அளிக்கும் முறை, குழந்தைகள் பாதுகாப்பில் பள்ளி நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மாணவ/ மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்படவேண்டும். தனிப்பட்ட புகார்கள் குறித்து அங்கு குறிப்பிடவே கூடாது.

    அனைத்து பள்ளிகளிலும் முக்கியமான இடங்களில் CCTV கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பது உறுதிப்படுத்தப்படவேண்டும்.

    மேற்கண்ட அனைத்து பரிந்துரைகளையும் தனியார் மற்றும் அரசுக் கல்வி நிறுவனங்கள் /உயர் கல்வி நிறுவனங்கள் கண்டிப்பாக பின்பற்றுவதை உறுதி செய்யுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×