என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நிகழ்ச்சிகள்"
- சதய விழா தஞ்சை பெரிய கோவிலில் இன்று தொடங்கி நாளை வரை சதய விழா தொடங்கியது.
- பல்வேறு கலைநடனங்கள், கலை நாட்டியங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
தஞ்சாவூர்:
உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் பிறந்தநாள் விழா ஆண்டு தோறும் ஐப்பசி மாதத்தில் சதய நட்சத்திரம் அன்று கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவலால் 1 நாள் மட்டுமே சதய விழா கொண்டாடப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் வெகுவாக குறைந்ததால் வழக்கம்போல் 2 நாள் விழாவாக நடைபெறுகிறது.
அதன்படி இந்த ஆண்டு சதய விழா தஞ்சை பெரிய கோவிலில் இன்று தொடங்கியது. நாளை வரை சதய விழா நடைபெற உள்ளது.
விழாவின் முதல் நாளான இன்று காலை 9 மணிக்கு இறை வணக்கத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. முன்னதாக பெரியநாயகி அம்மனுக்கு சந்தனம் காப்பு அலங்காரமும், பெருவுடையாருக்கு சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது.
காலை 9.15 மணிக்கு டி.கே.எஸ். பத்மநாபன் குழுவினரின் மங்கள இசை நடைபெற்றது . தொடர்ந்து களிமேடு அப்பர் பேரவையின் திருமுறை அரங்கம் நடைபெற்றது .
இதையடுத்து மேடை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சிக்கு சதய விழா குழு தலைவர் து.செல்வம் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பேசினார். போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா, அரண்மனை பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, சதய விழா குழு துணை தலைவர் மேத்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பலர் கலந்துகொண்டு பேசினர்.
இதையடுத்து கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் தொடக்க உரையாற்றினார். தமிழ் பல்கலைக்கழக பேராசிரியர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கி பேசினார். திருக்கோவில் தேவார இன்னிசை முழக்கம் என்ற தலைப்பில் திருவையாறு அரசர் கல்லூரி முதல்வர் சண்முக செல்வகணபதி பேசினார். இதேபோல் ராஜராஜன் பெற்ற வெற்றிகள் என்ற தலைப்பில் தமிழ் வேள் உமாமகேசுவரனார் கல்லூரி பேராசிரியர் இளமுருகன், மாமன்னரின் சமயபொறை என்ற தலைப்பில் அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் சிவபெருமான், செம்பியன் மாதேவி குந்தவை நாச்சியார் வளர்ப்பில் அருண்மொழித்தேவன் என்ற தலைப்பில் ந.மு.வே. நாட்டார் கல்லூரி குழு உறுப்பினர் விடுதலை வேந்தன், தஞ்சை ராஜராஜேஸ்வரமும் திருவிசை பாவும் என்ற தலைப்பில் சென்னை புலவர் பிரபாகரமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இன்று மாலையில் திருமுறை பண்ணிசை, திருமுறையின் திரு நடனம், பரதநாட்டியம், நாதசங்கமம், வயலின் இசை நிகழ்ச்சி , கவியரங்கம், நகைச்சுவை சிந்தனை பாட்டு பட்டிமன்றம் ஆகியவை நடைபெறுகிறது.
இன்று நடந்த முதல் நாள் விழாவில் சதய விழா குழு உறுப்பினர் இறைவன், கோவில் உதவி ஆணையர் கவிதா, மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் , தாசில்தார் சக்திவேல் மற்றும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர்.
தொடர்ந்து நாளை இரண்டாம் நாள் விழா நடைபெற உள்ளது. நாளை காலை கோவில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையடுத்து மாமன்னர் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இதேபோல் பல்வேறு கட்சியினர், இயக்கத்தினர் மாலை அணிவிக்கின்றனர். பின்னர் திருமுறை திருவீதி உலா, பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம் நடைபெறும்.
இதையடுத்து பள்ளி மாணவ- மாணவிகளுக்காக நடத்தப்பட்ட தனித்திறன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. இரவு 7 மணிக்கு மேடை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.
- இன்று விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
- மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
மதுரை
நடிகர் விஜய் 48-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை வடக்கு மாவட்ட தலைவர் விஜய் அன்பன் கல்லானை தலைமையில் இன்று மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அதன்படி இன்று காலை மீனாட்சி அம்மன் கோவில், புனித அன்னை தேவாலயம், கோரிப்பாளையம் தர்காவில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
தொடர்ந்து திருநகரில் உள்ள கருணை இல்லத்தில் தகவல் தொழில் நுட்ப அணி தலைவர் ராம்பாலாஜி ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது. தெற்கு வாசல் முதியோர் இல்லத்தில் மாநகர இளைஞரணி நிர்வாகி நட்ராஜ் ஏற்பாட்டில் மதிய உணவு வழங்கப்பட்டது. வடக்கு மாவட்ட நிர்வாகி முத்துக்குமார் ஏற்பாட்டில் கிருஷ்ணாபுரத்தில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
நாகனாகுளத்தில் ஹரி, பாண்டி பிரேம் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு சிக்கன் பிரியாணி, மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகம் வழங்கப்பட்டது. அரும்பனூரில் மூர்த்தி ஏற்பாட்டில் நோட்டுப்புத்தகம், அன்ன தானம் வழங்கப்பட்டது.
மதுரை கிழக்கு ஒன்றிய தலைவர் ராமகிருஷ்ணன் ஏற்பாட்டில் ஆண்டார்கொட்டாரத்தில் 300 பேருக்கு சிக்கன் பிரியாணி, மாணவர்கள் 100 பேருக்கு நோட்டுப்புத்தகம் வழங்கப்பட்டது.
மேற்கண்ட நிகழ்ச்சிகளில் வடக்கு மாவட்டத்தலைவர் விஜய் அன்பன் கல்லாணை தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
மாலையில் மத்திய 3-ம் பகுதி ஏற்பாட்டில் கேக் வெட்டி நோட்டுப்புத்தகம், அன்னதானம் வழங்கப்படுகிறது.
தெற்கு மாவட்ட மாணவரணி தலைவர் ஆனந்த் ஏற்பாட்டில் பொன்மேனி முதியோர் இல்லத்தில் மதிய உணவு, நாகமலை புதுக்கோட்டை நித்திஷ், கண்ணன், செந்தில் ஏற்பாட்டில் அன்னை ஆசிரம முதியோர்களுக்கு இரவு உணவு, மதிச்சியம் ரகு ஏற்பாட்டில் செனாய் நகர் குழந்தைகள் காப்பகத்தில் இரவு உணவு, நோட்டுப்புத்தகம் வழங்கப்படுகிறது.
- தியாகதுருகம் அருகே முத்துமாரி அம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது.
- கடந்த 3 -ந் தேதி தொடங்கி தினமும் பாரதம் மற்றும் சாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே கண்டாச்சிமங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த 3 -ந் தேதி தொடங்கி தினமும் பாரதம் மற்றும் சாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.
நேற்று காலை காளி கோட்டை இடித்தல், பொங்கல் வைத்தல், அக்னி மிதித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து மாலை விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி முத்துமாரி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. உற்சவர் அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர வைக்கப்பட்டார்.
தொடர்ந்து கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.தேர் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து பின்னர் நிலையை அடைந்தது.
இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் புவனேஸ்வரி, பெருமாள் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் மலையரசன் எத்திராஜ் ஒன்றிய துணை செயலாளர் அண்ணாதுரை மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். இன்று மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்