என் மலர்
நீங்கள் தேடியது "கோவில் கும்பாபிஷேகம்"
- அமரகுந்தியில் கடந்த 800 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பகுதியை ஆட்சி புரிந்து வந்த கேட்டிமன்னன் இங்கு பல கோவில்களை கட்டி கோட்டைகள் அமைத்து ஆட்சி செய்து வந்துள்ளார்.
- இத்தகைய சிறப்புடைய கோவில் தற்போது இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகிலுள்ள அமராவதி பட்டணம் என்று அழைக்க கூடிய அமரகுந்தியில் கடந்த 800 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பகுதியை ஆட்சி புரிந்து வந்த கேட்டிமன்னன் இங்கு பல கோவில்களை கட்டி கோட்டைகள் அமைத்து ஆட்சி செய்து வந்துள்ளார்.கெட்டி மன்னன் காலையில் சொக்கநாதரையும், மதியம் கைலாசநாதரையும், மாலையில் வைகுந்த பெருமாளையும், அர்த்தஜாம பூஜையில் திருச்செங்கொடு அர்த்தனாரி ஈசனையும் வழிபட்டு வந்ததாக வரலாறு உண்டு,
இத்தகைய சிறப்புடைய கோவில் தற்போது இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கோவில் திருப்பணி செய்யப்பட்டு கும்பாபிசேகம் நடை பெற்றது. இதையொட்டி கடந்த 11-ந்தேதி புனித தீர்த்தகுட ஊர்வலம் நடந்தது, அதனை தொடர்ந்து நேற்று காலை 9 மணியளவில் மகா கும்பாபிஷேகம் நடத்த பட்டு கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி பக்தர்களுக்கு தீர்த்தம் தெளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பல ஆயிரம் பக்தர்கள் கும்பாபி ஷேகத்தில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறநிலைய துறை அதிகாரிகள் தக்கார் மற்றும் செயல் அலுவலர் விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள், அமரகுந்தியை சேர்ந்த சிவனடியார் திருகூட்டம் ஆகியோர் செய்தனர்.அதனை தொடர்ந்து காலை முதல் மாலை வரை பக்தர்களுக்கு அன்ன தானம் நடைபெற்றது.
- 850 ஆண்டு பழமை வாய்ந்தது
- 10 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் தாலுகா மடவாளம் கிராமத்தில் அமைந்துள்ள 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த அங்கநாதீஸ்வர் கோவில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சி கடந்த 9-ந்தேதி மங்கல இசையுடன் தொடங்கியது.
தொடர்ந்து விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி பிரவேச பலி நடைபெற்றது.
கணபதி பூஜை, தனபூஜை நவகிரக பூஜை, லட்சுமி பூஜை, நடைபெற்றது. தொடர்ந்து பூர்ணஹூதி நடைபெற்றது தொடர்ந்து முதல் கால பூஜை, யாகவேள்வி, தொடர்ந்து இரண்டாம் கால பூஜை, மூன்றாம் நான்காம், கால பூஜை, தொடர்ந்து தீபாரதனை நடைபெற்றது.
முக்கிய நிகழ்வாகயாக சாலையில் குடங்களில் புனித நீர் பூஜை செய்யப்பட்டு நல்லதம்பி எம்.எல்.ஏ. தலைமையில் 61 அடி உயரம் உள்ள ராஜகோபரத்தின் மீதும் அங்கன் அங்கநாதீஸ்வர் மூலஸ்தானத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் சிவாய நமக சிவாய நமக ஹர ஹர சிவாய நமக என கோஷமிட்டனர்.
கும்பாபிஷேக நிகழ்ச்சியில் க.தேவராஜ் எம்.எல்.ஏ, திருவண்ணாமலை அருனை மருத்துவக் கல்லூரி இயக்குனர் டாக்டர் கம்பன், மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, கோட்டாட்சியர் லட்சுமி, ஒன்றிய குழு தலைவர் விஜியா அருணாச்சலம், கூட்டுறவு சங்க தலைவர்கள் தேவராஜன், சின்னப்பையன், ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் ஒன்றிய குழு உறுப்பினர் இளவரசி ரகு உட்பட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அங்கநாதீஸ்வரர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் வஜ்ரவேல் இந்து சமய அறநிலைத்துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
- வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
- அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
அரூர்,
அரூர் பொதுப்பணிதுறை குடியிருப்பில் பகுதி உள்ள வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
முதல்நாள் விநாயகர் பூஜை, தொடங்ப்பட்டது. விக்னேஷ்ரா பூஜை, மகாலட்சுமி ஹோமம், சுதர்ஷன ஹோமம் மஹா பூர்னாஹதி, வாஸ்து சாந்தி, பிரதான கும்ப் ஸ்தாபனங்கள், மஹா சாந்தி ஹோமம், அஷிமோசனம், அதிவாஸத்ரய ஹோமங்கள், நித்ய ஹோமம், பூர்ணாஹிதி தொடர்ந்து ஸ்ரீவீரஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகமும் நடைபெற்றது.
இதில் பேரூராட்சி தலைவர் இந்திராணி, துணை தலைவர் சூர்யா தனபால், நகர செயலாளர் முல்லை ரவி ஆகியோர் கலந்து கொண்டு, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை துரை, தீத்து, சேட்டு, சுப்பிரமணி, கோபி, ஜெயக்குமார், முருகேசன் மற்றும் உறுப்பினர்கள் ஊர் பொது மக்கள் செய்திருந்தனர்.
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
- கலச திருமஞ்சனம், பூர்ணாஹூதி உள்ளிட்டவையும் நடந்தது
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த மூடூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீஅலர்மேல்மங்கா சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
யாகசாலை அமைக்கப்பட்டு கடந்த திங்கள்கிழமை பகவத் அனுக்ஞை, யஜமான சங்கல்பம், புண்யாஹ வாசனம் உள்ளிட்டவையும், செவ்வாய்க்கிழமை சதுஸ்தான அர்ச்சனை ஹோமம், கலச திருமஞ்சனம், பூர்ணாஹூதி உள்ளிட்டவையும் நடந்தது.
நேற்று காலை கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் கோவில் நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் பங்கேற்றனர்.
- நவகிரக, மகாலட்சுமி ஹோமங்கள் நடந்தது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த கொட்டை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து சிவனடியார்கள் கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமங்கள் நடைபெற்றது.
பின்னர் கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிவனடியார்கள் கைலாய மேளங்கள் முழங்க கலசங்களை தலையில் சுமந்தவாறு கோவிலை சுற்றி வலம் வந்து கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதை தொடர்ந்து புனித நீரை பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. பின்னர் அகத்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்ற நிலையில் மங்கள மேள வாத்தியங்கள் முழங்க தீபாராதனை நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ அகத்தீஸ்வரரை தரிசனம் செய்து சென்றனர்.
- கிளாமடம் கல்யாண சுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சிக்கு உட்பட்ட கிளாமடம் கிராமத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கல்யாண சுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக 3 நாட்கள் நான்கு கால கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் தொடங்கப்பட்டு பரிகார தெய்வங்களுக்கு மகா பூர்ணாகுதி ஆராதனை நடைபெற்றது அதனை தொடர்ந்து கார்த்திகேயன் சிவாச்சாரியார் தலைமையில் யாக வேள்வி நடத்தப்பட்டு கோவில் கும்பத்தில் புனித அபிஷேக நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேகத்தில் நெற்குப்பை பேரூராட்சி சேர்மன் அ.புசலான், வார்டு உறுப்பினர்கள் கண்ணன், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பாதர் வெள்ளை, இளங்கோ, ஆறுமுகம், முருகேசன், கணேசன், ராமன், ஆகியோர் செய்து இருந்தனர். மேலும் விழா குழு ஒருங்கிணைப்பு பணிகளை மங்கைபாகன், சின்னையா, மாரியப்பன் வெள்ளைச்சாமி, சுரேஷ், கணேசன், வசந்த பாரதி, அருள்மதி, பூங்குன்றன், கிராமத்து இளைஞர்கள், ஊர் பொதுமக்கள், ஆகியோர் செய்திருந்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது
- பல்வேறு பூஜைகள் நடந்து வருகிறது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை பச்சையம்மன் மன்னார்சாமி திருக்கோயில் புனராவர்த்தன ஜீர்ணோத்தாண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா வரும் 27 தேதி வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் நடைபெற உள்ளன.
இதனை முன்னிட்டு கடந்த 23ஆம் தேதி திங்கட்கிழமை முதல் விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமம் கோ பூஜை தொடர்ந்து மங்கல இசை கிராம சாந்தி பிரசவ பலி சாந்தி ஓமம் பூர்ணாவதி பல்வேறு நிகழ்ச்சிகளும் முதல் கால யாக பூஜையும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றனர். நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை பச்சையம்மன் மன்னார்சாமி கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- திருப்பத்தூரில் வருகிற 2-ந் தேதி நடக்கிறது
- அமைச்சர்கள், கலெக்டர் பங்கேற்கின்றனர்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் டவுன் நகரத்து வைசியர்கள் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட சுயம்பு மாய வினாயகர் சுவாமி கோயில் இராஜகோபரம், விமானம், ஜூர்ணோத்தாரண அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் வருகிற 2-ம் தேதி மங்கல இசை உடன் தொடங்கி விநாயகர் பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி பூஜை, கோ பூஜை, பூர்ணங்குதியுடன் நடைபெறுகிறது.
தொடர்ந்து முதல் கால பூஜை, இரண்டாம் கால பூஜை, ராஜ கோபுரங்களுக்கு தானியம் கலசம் வைத்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து இன்னிசை கலைஞர் குமாரின் பக்தியும் சக்தியும் என்ற பக்தி பாடல்கள் இன்னிசை கச்சேரிநடைபெறுகிறது.
தொடர்ந்து ராஜா கோபுரத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது நிகழ்ச்சியில் பொதுப் பணி மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் எ வ. வேலு, கைத்தறி மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர். காந்தி கலெக்டர் அமர்குஷ்வாஹா, போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நகரத்து வைசியர்கள் சங்கம் தலைவர் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
- புனித நீர் தெளிக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது
- ஏரளாமான பக்தர்கள் தரிசனம்
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு, அருகே உள்ள தச்சம்பட்டு, கிராமத்தில் ஜடா முனீஸ்வரன், முத்தாயி, அம்மன் கோவில் புதிதாக கட்டப்பட்டு பஞ்சவர்ணம் பூசி கும்பாபிஷேக விழா நடந்தது.
கோவிலின் முன்பு யாகசாலை அமைத்து. 108 கலசம் வைத்து பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கலசத்தை வைத்து 3 காலயாக பூஜைகள் செய்தனர். பின்னர் மேளதாளம் முழங்க புனித நீர் கலசத்தை கோவிலை சுற்றி வந்து ஜடாமுனீஸ்வரன், முத்தாயி, அம்மன் சிலைகள் மீது ஊற்றினார்கள்.
பின்னர் அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீரை தெளித்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், விழா குழுவினர், செய்து இருந்தனர். இதில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- ஜீர்னோத்தராண அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது
- மருந்து சாற்றி திருமேனிகளை அமர்த்துதல் உள்ளிட்டவை நடைபெற்றது.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் பி.எஸ். அக்ரஹாரம் கிராமத்தில் அமைந்துள்ள மரகதாம்பிகை சமேத மார்க்க சகாய ஈஸ்வரர் திருக்கோவில் பெருஞ்சாந்தி திருக்குட நன்னீராட்டு பெருவிழா எனும் ஜீர்னோத்தராண அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் இன்று க நடைபெற்றது.
முன்னதாக தை மாதம் நான்காம் நாள் யாகசாலை முகூர்த்த கால் நடுதல் வீட்டில் முளைபாலிகை இடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தை மாதம் 11-ம் நாள் மூத்த விநாயகர் பூஜை, திரு அருள் ஆணை பெறுதல், நிலத்தேவர் வழிபாடு, விநாயகர் கேள்வி, திருமகள் வழிபாடு உள்ளிட்டவை நடைபெற்றன. நேற்று விநாயகர் வழிபாடு மூன்றாம் கால வேள்வி, நிறைவேள்வி வழிபாடு, திருமுறை நாத சாலை இசையால் இறைவனை மகிழ்வித்தல் மருந்து சாற்றி திருமேனிகளை அமர்த்துதல் உள்ளிட்டவை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இன்று காலை விநாயகர் வழிபாடு, நாடி சந்தனம், திருவருள் சக்தியை வேள்வியில் இருந்து இறை திருமேனிக்கு அளித்தல், நிறைவேள்வி நடைபெற்று மரகதாம்பிகை சமேத மார்க்க சகாய ஈஸ்வரர் மற்றும் நால்வர் பெருமக்கள் நவகிரகம் மற்றும் விமான கோபுர பரிவார தெய்வங்களுக்கு யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீரானது தெளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் காத்திருந்த பக்தர்கள் மீதும் தெளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் கோவில் விழா குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகள் மற்றும் கும்பாபிஷேக நிகழ்வுகள், அன்னதானம் உள்ளிட்ட ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர் செய்திருந்தனர்.
- 48 நாள் மண்டல பூஜைகள் நடக்கிறது
- ஏராளமான பக்தர் சாமி தரிசனம் செய்தனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை பச்சையம்மன் மன்னார் சாமி கோவில் மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை பச்சையம்மன் மன்னார்சாமி கோவில் புனராவர்த்தன ஜீர்ணோத்தாண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா நேற்று காலையில் நடைபெற்றது.
விழாவையொட்டி கடந்த 23-ந் தேதி திங்கட்கிழமை முதல் விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமம் கோ பூஜை தொடர்ந்து மங்கல இசை கிராம சாந்தி பிரசவ பலி சாந்தி பல்வேறு நிகழ்ச்சிகளும் முதல் கால யாக பூஜையும் தொடர்ந்து நடைபெற்றது.
முடிவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றன. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை பச்சையம்மன் மன்னார்சாமி கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். தொடர்ந்து 48 நாள் மண்டல பூஜைகள் நடக்கிறது.
- 3 காலயாக பூஜை நடந்தது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு, அடுத்த ஜெகநாதபுரம், கிராமத்தில் மாரியம்மன் கோவில் புதியதாக புதுப்பிக்கப்பட்டு பஞ்ச வர்ணம் பூசி இதன் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
கோவிலின் முன்பு யாகசாலை பந்தல் அமைத்து. 108 கலசம் வைத்து, பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் கலசங்களை வைத்து, ஆனந்தன், சிவாச்சாரியார் தலைமையில் 3 காலயாக பூஜை செய்தனர்.
பின்னர் புனித நீர் கலசத்தை மேளதாளம் முழங்க கோவிலை சுற்றி வந்து கோவில் விமான கோபுரத்தின் மீது உள்ள கலசத்தின் புனித நீரை ஊற்றினார்கள்.
பின்னர் அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீரை தெளித்தனர். விழாவில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க இளைஞர் அணி தலைவர் செந்தில்குமார், கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு. சாமி தரிசனம் செய்து, பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினார். இன்று இரவு தெய்வீக நாடகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், ஊர் பொதுமக்கள், செய்து இருந்தனர்.