search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 227686"

    • தெய்வக்கனி மாடுகளை ஓட்டிக் கொண்டு தோட்டத்திற்கு சென்றுள்ளார்.
    • சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் தெய்வக்கனியை சேர்த்தனர்.

    நெல்லை:

    பாளை தியாகராஜ நகரை அடுத்த ராஜகோபாலபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் தங்கராஜ். விவசாயி. இவருக்கு தெய்வக்கனி (வயது 50) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமான தோட்டம் அதே பகுதியில் உள்ளது.

    நேற்று தெய்வக்கனி வீட்டில் வளர்த்து வரும் மாடுகளை ஓட்டிக் கொண்டு தோட்டத்திற்கு சென்றுள் ளார். அங்கு அவரை பாம்பு கடித்துள்ளது. இதனால் மயங்கி விழுந்த தெய்வக் கனியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டின் மாடி பகுதிகளை குறைந்த செலவில் தோட்டமாக மாற்றலாம்.
    • பாரம்பரிய நாட்டு காய்கறிகள், பழங்கள், கீரைகள், கிழங்குகளை உற்பத்தி செய்யலாம்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் உள்ள மாடி வீடுகளில் இயற்கை முறையில் காய்கறி தோட்டம் அமைப்பது குறித்த ஆலோ சனை கூட்டம் நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் தலைமையில், ஆணையர் பிரதான் பாபு, பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் முன்னிலை யில் நடைபெற்றது.

    இயற்கை காய்கறி தோட்ட வல்லுனர் திருச்சி விதை யோகநாதன், தோட்டக லைத்துறை உதவி இயக்குனர் இளவரசன் ஆகியோர் மாடித்தோட்டம் அமைப்பது குறித்து எடுத்துரைத்தனர்.

    நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் பேசுகையில்:-

    தற்போது காலநிலை மாற்றத்தால் வெப்பம் அதிகரித்து வருகிறது.

    இதனால் வீட்டின் மேல்பகு தியை குளிரவைக்க பல்வேற வழிகள் இருந்தாலும், பசுமைகுடில் அமைப்பது சிறந்தது. வீட்டின் மாடி பகுதிகளை குறைந்த செலவில் தோட்டமாக மாற்றி இயற்கை உரங்களை பயன்படுத்தி பாரம்பரிய நாட்டு காய்கறிகள், பழங்கள், கீரைகள், கிழங்குகளை உற்பத்தி செய்யலாம்.

    இதனால் மன அமைதி, நஞ்சில்லாத உணவு, நோயற்ற வாழ்வு, பொருளாதார சேமிப்பு போன்ற நன்மைகள் கிடைக்கிறது.

    இதற்காக நகராட்சி நிர்வாகத்துடன் பாலம் சேவை நிறுவனம், பசுமை சிகரம் அமைப்பு ஆகியவை இணைந்து உரிய தொழில்நுட்பங்கள் குறித்து ஆர்வமுள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

    மேலும், காய்கறி, விதைகள் வழங்கப்படும். ஓராண்டு க்குள் அனைத்து மாடி வீடுகளிலும் மாடித்தோட்டம் அமைப்பதே இலக்கு என்றார்.

    நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர் எழிலரசன் கலந்து கொண்டார்.

    • முருங்கை சாகுபடி மூலம் கிடைக்கக்கூடிய வருமானம் குறித்து பேசினார்.
    • துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் கொத்தங்குடியில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஐசிஐசிஐ பவுண்டேஷன் நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிதித்திட்டத்தின்கீழ் முருங்கை தோட்டம் அமைக்கும் பணி நடைபெற்றது.

    இதில், ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் உயர்ரக விளைச்சல் திறன் கொண்ட ஆண்டுதோறும் காய்ப்புத்திறன் கொண்ட 200 முருங்கை கன்றுகள் நடப்பட்டன.

    இந்நிகழ்ச்சிக்கு, ஊராட்சிமன்ற தலைவர் அமராவதிராமலிங்கம் தலைமை தாங்கினார்.

    முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் ராஜ்குமார், மாவட்ட வள பயிற்றுநர் நிறுவன மேம்பாட்டு பாலமுருகன், முன்னோடி விவசாயி பாலசுப்ரமணியன், குத்தாலம் ஒன்றிய மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில், ஐசிஐசிஐ பவுண்டேஷன் வளர்ச்சி அலுவலர் உஷா திட்ட விளக்கவுரையாற்றி முருங்கை தோட்டம் அமைப்பதன் குறிக்கோள்கள் குறித்தும், முருங்கை சாகுபடியின் மூலம் கிடைக்க க்கூடிய வருமானம் குறித்தும், இத்தோட்டத்தினை மகளிர் குழுவினர் எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதனை குறித்து விளக்கி பேசினார்.

    இதில், ஒருங்கி ணைந்த மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் கிருத்திகா, மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் மனுநீதிசோழன், கிராம நிர்வாக அலுவலர் சாமிநாதன் மற்றும் ஐசிஐசிஐ பவுண்டே ஷன் சிவான ந்தம் உள்ளிட்ட நிறுவன களப்பணியாளர்கள், கொத்தங்குடி ஊராட்சி தூய்மை பணியாளர்கள், பணிதல பொறுப்பாளர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • சுப்பிரமணியன் வண்ணான்குளத்தில் தோட்டம் வைத்துள்ளார்.
    • ஆத்திரம் அடைந்த முருகன் அரிவாளால் சுப்பிரமணியனை வெட்டினார்.

    சாம்பவர்வடகரை:

    சாம்பவர்வடகரையை சேர்ந்த சுப்பிரமணியன்(வயது 32) என்பவர் அங்குள்ள வண்ணான்குளத்தில் தோட்டம் வைத்துள்ளார்.

    அதில் பயிரிட்டுள்ள வாழைமரங்களில் இருந்து சில நாட்களாக வாழை இலைகளை அதே ஊரில் வசிக்கும் முருகன்(36), அவரது தாயார் சீனியம்மாள் ஆகியோர் திருடிச்சென்றுள்ளனர்.

    இதனை சுப்பிரமணியன் தட்டிக்கேட்கவே, ஆத்திரம் அடைந்த முருகன் அரிவாளால் அவரை வெட்டினார்.

    இதில் காயம் அடைந்த சுப்பிரமணியன் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது புகாரின்பேரில் சாம்பவர்வடகரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தார்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார தோட்டக்கலைத் துறையின் மூலம் விவசாயிகளுக்கு மூலிகை தோட்டம் அமைக்க ரூ.750 மான்ய விலையில் இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளது.
    • தேவைப்படும் விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை நகல் -1,பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-2 ஆகிய ஆவ–ணங்களை கபிலர் மலையில் உள்ள தோட்டக்கலை துறை அலுவலகத்தில் கொடுத்து பெற்று கொள்ளலாம்.

    பரமத்தி வேலூர்:

    கபிலர் மலையில் உள்ள தோட்டக்கலை துறை அலுவலகம் வெளி–யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார தோட்டக்கலைத் துறையின் மூலம் விவசாயிகளுக்கு மூலிகை தோட்டம் அமைக்க ரூ.750 மான்ய விலையில் இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளது.

    இடுபொருட்கள் விபரம் தலா ஒரு நபருக்கு 10 வகையான மூலிகைச் செடிகள் ,செடி வளர்ப்பு பைகள்-10,

    தென்னை நார்க்கட்டி-10கிலோ ,மண்புழு உரம் -4 கிலோ வழங்கப்படுகிறது.

    தேவைப்படும் விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை நகல் -1,பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-2 ஆகிய ஆவ–ணங்களை கபிலர் மலையில் உள்ள தோட்டக்கலை துறை அலுவலகத்தில் கொடுத்து பெற்று கொள்ளலாம். இவ்வாறு அதில் தோட்டக்–கலைத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • கண்ணனின் தோட்டத்தில் சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்றனர்.
    • சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்த கனகராஜ், ராமகிருஷ்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    தென்காசி:

    தென்காசி அருகே உள்ள ஆயிரப்பேரியை சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் பேரில் குற்றாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் தலைமையிலான போலீசார் அங்கு சென்றனர்.

    அப்போது அங்கு சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்த ஆயிரப்பேரியை சேர்ந்த கனகராஜ் (வயது 31) மற்றும் பாட்டப்பத்து கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன்(46) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த 6 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய தோட்ட உரிமையாளரான கண்ணனை வலை வீசி தேடி வருகின்றனர்.

    • நாம் தமிழர் தொழிற்சங்கம் கோரிக்கை
    • ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட நாம் தமிழர் ஒருங்கிணைந்த தொழிற்சங்க தலைவர் ஆல்பன், குமரி கிழக்கு மாவட்ட பொருளாளர் அனிட்டர் ஆல்வின், நிர்வாகிகள் மரிய ஜேம்ஸ், அனீஸ் ஆகியோர் இன்று நாகர்கோவில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    குமரி மாவட்ட அரசு ரப்பர் கழகத்தில் 1,500 நிரந்தர பணியாளர்களும், 900 தற்காலிக பணியாள ர்களும் வேலை பார்த்து வருகிறார்கள். இதில் பெண்களும் அடங்குவர். இந்த தொழிலாளர்கள் ரப்பர் தோட்ட பகுதியில் அரசு அனுமதித்த குடியிருப்பில் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள்.

    ஆனால் ரப்பர் தோட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படா மல் உள்ளது. இது தொடர்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. எனினும் இதுவரை ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. இதனால் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    எனவே தொழிலா ளர்களின் வாழ்வாதா ரத்தை கருத்தில் கொண்டு ஊதிய உயர்வு ரூ. 40-ஐ உடனடியாக வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ரப்பர் மரம் வெட்ட கொடுக்கப்பட்ட ஒப்பந்த த்தில் ஊழல் நடந்து உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சாதாரனமாக காய்கள் ஒரு கிலோ கொண்டதாக இருக்கும்
    • அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இதனை வியப்புடன் பார்த்து செல்கிறார்கள்.

    கன்னியாக்உமரி:

    திருவட்டார் அருகே மாத்தூர் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ராதாகிருஷ்ணன் (வயது 48). இவர் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு விவசாய தொழில் செய்து வருகிறார். அருமனை பகுதியில் அன்னாசி பயிர் இடப்பட்டு விவசாயம் செய்துவந்தார்.

    இவரது தோட்டத்தில் 5½ கிலோ எடையில் அன்னாசி காய்த்தது. சாதாரனமாக காய்கள் ஒரு கிலோ கொண்டதாக இருக்கும். இந்த மாதிரி அன்னாசி காய்ப்பது மிக அபூர்வம். அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இதனை வியப்புடன் பார்த்து செல்கிறார்கள்.

    • நேற்று இரவு கத்திரிப்பட்டி கிராமத்தில் உள்ள வாழை தோட்டத்திற்குள் புகுந்தது.
    • அங்கு விவசாயிகள் பயிரிட்டு இருந்த 200-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை நாசம் செய்தன.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே உள்ள கத்திரிப்பட்டி கிராமம், வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து வந்த 2 யானைகள், நேற்று இரவு கத்திரிப்பட்டி கிராமத்தில் உள்ள வாழை தோட்டத்திற்குள் புகுந்தது. அங்கு விவசாயிகள் பயிரிட்டு இருந்த 200-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை நாசம் செய்தன.

    தகவல் அறிந்து, மேட்டூர் எம்.எல்.ஏ. சதாசிவம் மற்றும் வனத்துறையினர் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை நேரில் சென்று பார்வையிட்டனர். இதுகுறித்து எம்.எல்.ஏ. சதாசிவம் கூறும்போது, பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசு மற்றும் வனத்துறை அமைச்சரிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும் என்றார். அப்போது, கொளத்தூர் ஒன்றியக் குழு துணை தலைவர் மாரப்பன் மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • போலீசார் விசாரணை செய்தனர்
    • வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    களியக்காவிளையை அடுத்த பிளாங்காலை பகுதியை சேர்ந்தவர் அனில்குமார். டெம்போ ஓட்டுநர் இவரது மனைவி சுனிதா. இவர்களுக்கு சிவலட்சுமி என்ற ஒரு மகள் உள்ளார். அனில்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.இதனால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனை அவரது மனைவி கண்டித்துள்ளார்.

    இதனால் மன வருத்தத்தில் அனில்குமார் இருந்துள்ளார்.இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி அனில் குமார் வீட்டை விட்டு சென்றுள்ளார் பின்னர் வீடு திரும்பவில்லை தனது கணவர் வேலைக்கு சென்று இருப்பதாக சுனிதா நினைத்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று அந்த பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் வாலிபர் ஒருவர் அழகிய நிலையில் சடலமாக கிடப்பதாக தகவல் பரவியது. அங்கு சென்று சுனிதா பார்த்தபோது பிணமாக கிடந்தது தனது கணவர் அனில்குமார் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து பளுகல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அனில்குமார் உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராமரும், பாலாஜியும் வழக்கம்போல் ஆடு, மாடு, கோழிகளுக்கு தீவனம் வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர்.
    • நேற்று ராமர் தோட்டத்திற்கு சென்ற போது தோட்டத்தில் இருந்த 55 ஆடுகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் கீழ புது தெருவை சேர்ந்த பாலாஜி(வயது 27). இவருக்கு சொந்தமாக திருச்செந்தூர் அருகே உள்ள ராமசாமிபுரத்தில் ஒரு ஏக்கரில் தோட்டம் ஒன்று உள்ளது. அதில் ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை வளர்த்து விற்பனை செய்து வருகிறார். இந்த கால்நடைகளை ராமர் என்பவர் பராமரித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு ராமரும், பாலாஜியும் வழக்கம்போல் ஆடு, மாடு, கோழிகளுக்கு தீவனம் வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று ராமர் தோட்டத்திற்கு சென்ற போது தோட்டத்தில் இருந்த 55 ஆடுகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து ராமர், பாலாஜிக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் அவர் இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் திருச் செந்தூர் தாலுகா போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாடித்தோட்டத்தை பராமரிப்பதில் புத்துணர்வு கிடைக்கிறது.
    • வீட்டிற்கு தேவையான காய்கறிகள், கீரைகள், பூக்கள், பழங்களை இயற்கை விவசாய முறையில் விளைவித்துக்கொள்கின்றனர்.

    உடுமலை,

    உடுமலை நகரில் சிலர் தங்களது குடியிருப்பு ஒட்டிய நிலப்பகுதிகளில் தோட்டம் அமைத்து பராமரித்து வருகின்றனர். அங்கு மூலிகைச்செடிகள், குரோட்டன்ஸ் வகைகள், துளசி உள்ளிட்ட மருத்துவ குணம் கொண்ட தாவரங்களை வளர்க்கின்றனர்.

    அதேநேரம் இடவசதி இல்லாத சிலர் மாடித்தோட்டம் அமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.அவ்வகையில், ஐஸ்வர்யா நகரில் சிலர் வீட்டின் மொட்டை மாடியில் காய்கறி மற்றும் மூலிகைத்தோட்டம் அமைத்துள்ளனர். வீட்டிற்கு தேவையான காய்கறிகள், கீரைகள், பூக்கள், பழங்களை இயற்கை விவசாய முறையில் விளைவித்துக்கொள்கின்றனர்.

    இது குறித்து குடியிருப்பு மக்கள் கூறியதாவது:-

    மாடித்தோட்டத்தை பராமரிப்பதில் புத்துணர்வு கிடைக்கிறது. வீட்டில் உள்ள குழந்தைகளையும், தோட்டத்தை பராமரிக்கச்செய்வதன் வாயிலாகஅவர்களும் உற்சாகம் அடைகின்றனர். தவிர மருத்துவ குணம் கொண்ட மூலிகைச்செடிகள் வளர்ப்பில் அதன் முழு விபரத்தையும் அறிந்து கொள்ள முடிகிறது. செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது, உரமிடுவது போன்ற பணிகள் நேரத்தை பயனுள்ளதாக மாற்றி விடுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×