என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணம் மோசடி"

    • ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நடராஜன், விஜயலட்சுமி இருவரும் தமிழ்நாட்டில் கலெக்டராக பணிபுரிந்தவர்கள்.
    • எனது பணம் முழுவதும் அவர்கள் மோசடி செய்து விட்டனர்.

    மதுரை:

    திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவர் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதனை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் திருமலை பகவான் என்ற பெயரில் பஸ் சர்வீஸ் நடத்தி வருகிறேன். ஒட்டன் சத்திரத்தில் இருந்து வேடசந்தூருக்கு பேருந்து வழித்தட அனுமதி வாங்கி தருவதாக கூறி மதுரையை சேர்ந்த மணி என்பவர் என்னை அணுகினார். அவர் மும்பையைச் சேர்ந்த குருபாய் என்பவரை மகாராஷ்டிரா முதல் மந்திரியின் உறவினர் என்றும், அதே போல் தனியார் கண் மருத்துவமனையின் உரிமையாளர் என்று டாக்டர் ராஜ்குமார் என்பவரையும் அறிமுகம் செய்து வைத்தார்.

    ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நடராஜன், விஜயலட்சுமி இருவரும் தமிழ்நாட்டில் கலெக்டராக பணிபுரிந்தவர்கள். தற்போது அரசு உயர் பதவியில் இருக்கிறார்கள். அவர்களிடம் சொன்னால் உங்களுக்கு பேருந்து வழித்தட அனுமதி கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறி என்னிடம் ரூ.20 லட்சம் வரை வங்கிப் பரிவர்த்தனை மூலமாக பல்வேறு தவணை களில் பணம் பெற்றனர். பல மாதங்கள் ஆகியும் எனக்கு பேருந்து வழித்தட அனுமதி கிடைக்கவில்லை. திரும்பவும் நான் கேட்டதற்கு சரிவர அவர்கள் பதிலளிக்கவில்லை. வீணாக அலைக்கழிப்பு செய்தனர்.

    இதன் காரணமாக எனது குடும்பத்தினரால் நான் தனிமையாக ஒதுக்கப்பட்டேன். தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ளேன். ஆரப்பாளையத்தில் உள்ள அலுவலகத்திற்கு சென்று நான் செலுத்திய பணத்தையாவது திரும்ப கொடுங்கள் என்று கேட்டேன். அப்போது எல்லா பணத்தையும் கலெக்டர் நடராஜன் மற்றும் விஜயலட்சுமி ஆகியோரிடம் கொடுத்து விட்டோம். அதை எல்லாம் திரும்ப கேட்டு பெற முடியாது. ஆகையால் ஊர் போய் சேருங்கள். அதையும் மீறி அடிக்கடி இங்கே வந்தால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினர்.

    மேலும் அவர்கள் என்னை மிரட்டும்போது பட்டுமணி என்ற ஒருவர் தன்னை சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் என்றும் அவருடன் இரண்டு போலீஸ்காரர்களும் இருந்தனர். அவர்களும் சேர்ந்து என்னை இனிமேல் வந்தால் கஞ்சா கேசில் உள்ளே தள்ளி விடுவோம். சிறைக்கு சென்றால் நீ என்றுமே வெளியே வர முடியாது என்றும் மிரட்டினர். இவ்வாறு நான் இந்த கும்பலிடம் ஏமாந்தது அறிந்த எனது மனைவியும் என்னுடன் பேசுவதற்கு மறுத்து வருகிறார்.

    இதனால் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஆகவே எனக்கு உயிருக்கு பயமாக உள்ளது. எனது பணம் முழுவதும் அவர்கள் மோசடி செய்து விட்டனர். எனவே எனது பணத்தை பெற்று தருமாறும், போலியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பெயரை சொல்லி மோசடி செய்த இந்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மனுவை பரிசீலித்த கமிஷனர் லோகநாதன் உரிய விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    • 140-க்கும் மேற்பட்ட பெற்றோர்களிடம் சுமார் ரூ.4 கோடிக்கு மேல் வசூல் செய்து மோசடி செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    • கீழ்ப்பாக்கம் உள்பட பல இடங்களில் செயல்பட்டு வந்த மையங்கள் மூடப்பட்டு உள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

    சென்னை:

    பிரபல தனியார் மையம் ஒன்று நீட் மற்றும் ஐ.ஐ.டி. தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த மையம் சார்பில் பெற்றோர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பண வசூலும் செய்யப்பட்டு இருக்கிறது.

    இந்த நிலையில் திடீரென மையத்தை மூடியதால் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். தமிழ்நாடு மற்றும் கேரளாவில் செயல்பட்டு வரும் தனியார் பயிற்சி மையத்தின் தலைவர் அங்கூர் ஜெயின் மற்றும் இயக்குனர்கள் மீதும் கீழ்பாக்கம் தனியார் மையக் கிளை மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    140-க்கும் மேற்பட்ட பெற்றோர்களிடம் சுமார் ரூ.4 கோடிக்கு மேல் வசூல் செய்து மோசடி செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தனியார் பள்ளிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ஒருங்கிணைந்த பயிற்சி என்ற அடிப்படையில் பெற்றோர்களிடம் பண வசூலில் ஈடுபட்டு மோசடி அரங்கேறி இருக்கிறது.

    கீழ்ப்பாக்கம் உள்பட பல இடங்களில் செயல்பட்டு வந்த மையங்கள் மூடப்பட்டு உள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்து உள்ளனர். டெல்லியில் தனியார் பயிற்சி மைய தலைமையகத்தின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதால் ஆசிரியர்களுக்கு பணம் கொடுக்க முடியாத சூழ்நிலையில் திடீரென மையங்கள் மூடப்பட்டது தெரிய வந்து உள்ளது.

    தமிழகத்தில் சென்னை மற்றும் கோவையில் 6 மையங்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • விசாரணையில் ரூ. 3 கோடி மேற்கு வங்காளத்தில் உள்ள முர்ஷிதாபாத் கிளையில் உள்ள மொபிகுல் ஆலம் முலா என்பவரது வங்கி கணக்கு மாற்றப்பட்டது கண்டறியப்பட்டது.
    • சைபர் கிரைம் போலீசார் மேற்கு வங்கம் சென்று மொபிகுல் ஆலம் முலாவை கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் தனியார் தொழிற்சாலை உள்ளது.

    அங்கு சுவிகியா என்பவர் அதிகாரியாக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவரது செல்போனுக்கு அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து வாட்ஸ் அப் மூலம் குறுஞ்செய்தி வந்தது. அதில் அவர் வேலை பார்க்கும் தொழிற்சாலை உரிமையாளரின் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    அதில் அரசு அதிகாரிகளிடம் ஒரு புதிய திட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்தி இருக்கிறேன். நமது அலுவலக வங்கி கணக்கில் உள்ள தொகையை மற்றொரு வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்குமாறு கூறினார். இதனை உண்மை என்று நம்பிய சுவிகியா ரூ.5 கோடியே 10 லட்சத்தை அந்த வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார்.

    பின்னர் சிறிது நேரம் கழித்து அவர் இது தொடர்பாக தனது உரிமையாளரிடம் பேசினார். அப்போது மர்ம ஆசாமிகள் உரிமையாளர் பெயரில் மோசடி செய்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    விசாரணையில் ரூ.5 கோடியே 10 லட்சம் தொகையில், ரூ. 3 கோடி மேற்கு வங்காளத்தில் உள்ள முர்ஷிதாபாத் கிளையில் உள்ள மொபிகுல் ஆலம் முலா என்பவரது வங்கி கணக்கு மாற்றப்பட்டது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் மேற்கு வங்கம் சென்று மொபிகுல் ஆலம் முலாவை கைது செய்தனர்.

    பின்னர் அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ. 2 கோடி பணத்தை போலீசார் மீட்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில், இந்த மோசடியில் மேலும் 5 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் இவர்கள் வெளிநாட்டை சேர்ந்த கும்பலுடன் தொடர்பு வைத்துக் கொண்டு இதுபோன்று பலரிடம் கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    கைது செய்யப்பட்ட மொபிகுல் ஆலம் முலாவை புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

    • டாக்டர் ஆன்லைன் மூலம் வர்த்தகம் செய்வது தொடர்பாக விவரங்களை கூகுள் மூலம் தேடியுள்ளார்.
    • மர்ம நபர் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறினார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பிள்ளையார் குப்பத்தை சேர்ந்தவர் பண்டாரு மகந்த். தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர் ஆன்லைன் மூலம் வர்த்தகம் செய்வது தொடர்பாக விவரங்களை கூகுள் மூலம் தேடியுள்ளார்.

    இந்தநிலையில் அவரை மர்ம நபர் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டார். அப்போது அவர் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறினார்.

    இதை உண்மை என்று நம்பிய அவர் ரூ.32 லட்சத்து 92 ஆயிரத்தை முதலீடு செய் தார். இதன்மூலம் கிடைத்த லாபம் மற்றும் முதலீடு செய்த பணத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயன்றார்.

    ஆனால் அது முடியவில்லை. அதன்பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.

    மேலும் அவரை மீண்டும் தொடர்பு கொண்ட மர்மநபர் டெல்லி போலீஸ் அதிகாரி பேசுவதாக கூறியுள்ளார்.

    சிறுமிகள் தொடர்பான ஆபாச வீடியோக்கள் பார்த்ததாகவும், இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல் இருக்க பணம் தருமாறு மிரட்டியுள்ளார்.

    அதை நம்பி அவரும் ரூ.15 லட்சத்து 90 ஆயிரத்தை ஆன்லைன் மூலம் செலுத்தியுள்ளார். அதன்பின்னரே அவர் ஒட்டுமொத்தமாக ரூ.48 லட்சத்தை மோசடி கும்பலிடம் இழந்தது தெரிய வந்தது.

    இதுதொடர்பாக அவர் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கள்ளழகர் கோவில் நிலத்தை காட்டி ரூ.70 லட்சம் மோசடி செய்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • மதுரை வண்டியூரில் 12 ஏக்கர் 70 செண்டு நிலம் ரூ.34 கோடியே 92 லட்சத்து 50 ஆயிரத்துக்கு விற்பனைக்கு உள்ளது என்று கூறியுள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள சூளக்கரை வீரப்பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ரங்கநாயகி. இவரது சகோதரர் சூரியநாராயணன். சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். அவர் அனுப்பும் சம்பள பணத்தை சேர்த்து வைத்து அந்த பகுதியில் நிலம் வாங்க ரங்க நாயகி முடிவு செய்தார்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு 2020-ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் சிவகிரி பட்டியை சேர்ந்த பத்மநாதபன் என்பவர் ரங்கநாகிக்கு அறிமுகமானார். அப்போது தான் ஓய்வு பெற்ற நீதிபதி என்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாக கூறியுள்ளார்.

    மதுரை வண்டியூரில் 12 ஏக்கர் 70 செண்டு நிலம் ரூ.34 கோடியே 92 லட்சத்து 50 ஆயிரத்துக்கு விற்பனைக்கு உள்ளது என்று கூறியுள்ளார். இதனை நம்பி ரங்கநாயகி ரூ.70லட்சம் வரை பத்மநாபனிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்று கொண்ட அவர் நிலத்தை பதிவு செய்து தரவில்லை. இதுகுறித்து விசாரித்த போது பத்மநாபன் குறிப்பிட்ட நிலம் மதுரை கள்ளழகர் கோவிலுக்கு சொந்தமானது என தெரிய வந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ரங்கநாயகி பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுத்ததோடு கொலை மிரட்டலும் விடுத்தாக கூறப்படுகிறது.

    இந்த மோசடிக்கு பத்மநாபனுடன் அவரது மகன் சதீஷ் மற்றும் சுமதி, அங்குராஜ், சந்திரன், குழந்தை செல்வம் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.

    இதுகுறித்து ரங்கநாயகி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வங்கி அலுவலர்களை தலா ரூ.2 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு நியமித்ததும் தெரியவந்தது.
    • பொதுமக்களிடம் இருந்து வைப்புத்தொகை, சேமிப்பு தொகை ஆகியவற்றை பெற்றும், அதிக வட்டி தருவதாக கூறி நிரந்தர வைப்புத்தொகைகளை பெற்றும் மோசடி செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.

    சென்னை:

    சென்னை அம்பத்தூர் லேடான் தெருவில் ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் கூட்டுறவு வங்கி என்ற பெயரில் கடந்த ஓராண்டாக வங்கி ஒன்று இயங்கி வந்தது. இந்த வங்கியின் கிளைகள் மதுரை, விருதாச்சலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருவண்ணாமலை, சேலம் உள்பட 8 இடங்களில் இயங்கியது.

    இந்த வங்கியின் தலைவராக சந்திரபோஸ் என்பவர் செயல்பட்டார். அவர் ரிசர்வ் வங்கி அங்கீகாரம் கொடுத்தது போன்று போலி சான்றிதழ் தயாரித்து இந்த வங்கியை தொடங்கியுள்ளார். இதுகுறித்து, ரிசர்வ் வங்கியின் உதவி பொது மேலாளர் சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில், கடந்த 5-ந் தேதி அந்த வங்கியின் தலைவர் சந்திரபோசை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து போலியான பதிவு சான்றிதழ், வங்கி ஆவணங்கள், படிவங்கள், முத்திரைகள் மற்றும் பென்ஸ் சொகுசு கார் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. வங்கி கணக்கில் இருந்த ரூ.56 லட்சத்து 65 ஆயிரத்து 336 முடக்கப்பட்டது.

    வங்கி அலுவலர்களை தலா ரூ.2 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு நியமித்ததும் தெரியவந்தது. மேலும், போலியாக வங்கி கணக்கு புத்தகம், காசோலை, முத்திரைகள் மற்றும் படிவங்கள் பயன்படுத்தியதும், போலியான டெபிட் கார்டுகள் தயாரித்ததும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    அதேபோல், பொதுமக்களிடம் இருந்து வைப்புத்தொகை, சேமிப்பு தொகை ஆகியவற்றை பெற்றும், அதிக வட்டி தருவதாக கூறி நிரந்தர வைப்புத்தொகைகளை பெற்றும் மோசடி செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் திறமையாக துப்புதுலக்கிய சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் நாகஜோதி மற்றும் அவரது குழுவினரை சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

    பின்னர், அவர் நிருபர்களிடம் கூறும்போது, "போலியாக தொடங்கப்பட்டுள்ள இந்த வங்கியில் 3 ஆயிரம் பேர் கணக்கு தொடங்கியுள்ளனர். சென்னையில் மட்டும் 1,700 பேர் கணக்கு வைத்துள்ளனர். ரிசர்வ் வங்கி அதிகாரியின் புகாரின் பேரில் நடத்திய விசாரணையில் தான் இந்த மோசடி தெரியவந்தது. வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களிடம் இருந்து இதுவரை எந்த புகாரும் வரவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அதில் முக்கிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.

    • நிஷாந்தி மெசேஜ் வந்த நம்பரில் தொடர்பு கொண்டபோது தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறினார்கள்.
    • நிஷாந்தி செல்போன் நம்பரில் தொடர்பு கொண்டபோது அவர்கள் போனை எடுத்து பேசவில்லை.

    புதுச்சேரி:

    புதுவையில் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ரூ.1 லட்சத்துக்கும் குறைவான தொகை மோசடி புகார்களை சட்டம்-ஒழுங்கு போலீசாரே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி மோசடி புகார்களை அந்தந்த போலீஸ் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுவரை 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இந்தநிலையில் வங்கியில் கடன் பெற்று தருவதாக மேலும் 2 பெண்களிடம் மர்ம நபர்கள் பணத்தை மோசடி செய்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    கிருமாம்பாக்கம் அருகே மூர்த்திக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகள் ஞானசவுந்தரி (வயது30). இவருக்கு கடந்த ஜனவரி மாதம் செல்போனில் மெசேஜ் வந்தது. அதில் தனியார் வங்கியில் இருந்து பெர்சனல் லோன் தருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

    அதன்பிறகு குறிப்பிடப்பட்ட செல்போன் நம்பரில் ஞானசவுந்தரி தொடர்பு கொண்டபோது அதில் பேசிய தீபா என்ற பெண் வங்கியில் கடன் வாங்குவதற்கு முன்பு ரூ.5 ஆயிரத்து 750 செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

    அதன்படி ஞானசவுந்தரி அந்த பணத்தை கூகுல் பே மூலம் அனுப்பி வைத்தார். தொடர்ந்து அவர்கள் மீண்டும் மீண்டும் பணம் செலுத்தும்படி கூறியதின் பேரில் ஞானசவுந்தரி ரூ.16 ஆயிரத்து 500, ரூ.15 ஆயிரம், ரூ.20 ஆயிரம், 10 ஆயிரம் என மொத்தம் ரூ. 77 ஆயிரத்து 750 அனுப்பி வைத்தார்.

    ஆனால் அவர்கள் தொடர்ந்து பணம் செலுத்தும்படி தொந்தரவு செய்து வந்தனர்.

    இதனால் ஞானசவுந்தரி தனக்கு லோன் வேண்டாம் செலுத்திய பணத்தை திரும்ப கொடுக்கும்படி கூறியபோது அவர்கள் பணத்தை தர மறுத்து விட்டனர். இதனால் பணம் மோசடி செய்யபட்டதை அறிந்த ஞானசவுந்தரி கிருமாம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மற்றொரு சம்பவம்...

    பாகூர் காலனி தேசமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி நிஷாந்தி. இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த ஆகஸ்டு மாதம் செல்போனில் பிரதமரின் திட்டத்தில் ஒரு சதவீத வட்டியில் 20 சதவீத மானியத்தில் பணம் கடன் வழங்குவதாக மெசேஜ் வந்தது.

    இதையடுத்து நிஷாந்தி மெசேஜ் வந்த நம்பரில் தொடர்பு கொண்டபோது தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறினார்கள். நிதி நிறுவனத்தில் கடன் பெற வேண்டுமானால் முதலில் ரூ.5 ஆயிரத்து 850-ஐ செலுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.

    அன்படி நிஷாந்தி தனது வங்கி கணக்கில் இருந்து குகூல் பே மூலம் செலுத்தினார். மீண்டும் மறுமாதம் ரூ.28 ஆயிரத்து 288 செலுத்துமாறு கூறியதால் அந்த பணத்தையும் நிஷாந்தி அனுப்பி வைத்தார்.

    அதன்பிறகு நிஷாந்தியிடம் தொடர்புகொண்ட அவர்கள் தாங்கள் செலுத்திய பணம் மீண்டும் திருப்பி கொடுக்கப்படும் என்று உறுதி கூறியதின் அடிப்படையில் பல கட்டமாக ரூ.1 லட்சத்து 45 ஆயிரத்து 300-ஐ நிஷாந்தி அனுப்பி வைத்தார்.

    அதன் பிறகு நிஷாந்தி அந்த செல்போன் நம்பரில் தொடர்பு கொண்டபோது அவர்கள் போனை எடுத்து பேசவில்லை. இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த நிஷாந்தி இதுகுறித்து பாகூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கப்பலில் வேலை வாங்கித் தருவதாக கூறி போலி ஆவணங்களை அனுப்பி வாலிபரிடம் ரூ.5.60 லட்சம் மோசடி நடந்துள்ளது.
    • இந்த சம்பவம் குறித்து ராமநாதபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 21). இவர் டிப்ளமோ மெரைன் என்ஜினீயரிங் படித்து விட்டு வேலை தேடி வந்தார்.

    ராமநாதபுரத்தைச் சேர்ந்த இவரது நண்பர் வாஞ்சிநாதன் கப்பலில் வேலைக்கு ஆட்கள் எடுப்பதாக பேஸ்புக்கில் தகவல் வந்துள்ளதாக தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து இளங்கோவன், பேஸ்புக்கில் தெரிவித்த மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். அதில் பேசியவர் தனது பெயர் தீபக் மிஸ்ரா என்றும் கப்பலில் என்ஜினீயரிங் வேலைக்கு ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தார். மேலும் அது தொடர்பான ஆவணங்களை அனுப்பும்படி கூறியுள்ளார்.

    கடந்த 7-ந் தேதி இளங்கோவனை வேலைக்கு அனுப்புவதாக தெரிவித்து, தூத்துக்குடி வரும்படியும், அதற்கு முன்பு ரூ.2 லட்சத்தை அனுப்பும் படி கூறியதின் பேரில், ஜி-பே மூலம் இளங்கோவன் பணம் அனுப்பி வைத்தார்.

    இது போன்று வாஞ்சி நாதனின் நண்பர்களான பெரம்பலூரைச் சேர்ந்த வெங்கடேஷ், சிதம்பரத்தை சேர்ந்த கிஷோர் ஆகியோரும் தலா ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை பேஸ்புக்கில் கொடுக்கப்பட்ட வங்கி கணக்குக்கு அனுப்பி வைத்தனர்.கடந்த 8-ந் தேதி காலை தூத்துக்குடி துறைமுகத்திற்கு 3 பேரும் சென்றனர். அங்கிருந்து குறிப்பிட்ட மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்டு கேட்ட போது, மீண்டும் மீண்டும் பணம் கேட்டதால், மூவரும் சந்தேகம் அடைந்தனர். மேலும் மோசடி நபர் அனுப்பிய ஆவணங்களை தூத்துக்குடி துறைமுக அதிகாரியிடம் காட்டியுள்ளனர். ஆவணங்களை பார்த்த அதிகாரிகள் அனைத்தும் போலியானவை என்று தெரிவித்தனர்.

    அதிர்ச்சியடைந்த இளங்கோவன் இது குறித்து ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மாம்பலம் பகுதியை சேர்ந்த பட்டதாரி இளம்பெண் பிரபல தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
    • இளம்பெண் மூலம் சிறுக சிறுக இதுவரை ரூ.60 லட்சம் பணத்தை சுருட்டிய சார்லஸ் இளம்பெண்னை திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்தி ஏமாற்றி வந்தார்.

    போரூர்:

    சென்னை மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்த பட்டதாரி இளம்பெண் பிரபல தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கு எம்.ஜி.ஆர் நகர் அடுத்த ஜாபர்கான் பேட்டை பகுதியை சேர்ந்த டாக்டர் மனோஜ் சார்லஸ் என்பவருடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் நெருங்கி பழகி காதலித்து வந்தனர்.

    இந்த நிலையில் "உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்" என்று ஆசைவார்த்தை கூறிய சார்லஸ் இளம்பெண்ணிடம் அடிக்கடி பணத்தை வாங்கி வந்துள்ளார்.

    இளம்பெண் மூலம் சிறுக சிறுக இதுவரை ரூ.60 லட்சம் பணத்தை சுருட்டிய சார்லஸ் இளம்பெண்னை திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்தி ஏமாற்றி வந்தார். இதுபற்றி கேட்டபோது கொலை செய்து விடுவேன் என்று கூறி இளம்பெண்ணுக்கு சார்லஸ் மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் திருமணம் செய்து கொள்வதாக மோசடியில் ஈடுபட்ட டாக்டர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அசோக் நகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

    கடன் பிரச்சினையில் தவித்து வந்த சார்லஸ் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இளம்பெண்ணிடம் பணத்தை சுருட்டி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் மனோஜ் சார்லசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • ரூ.2 லட்சம் சீட்டு பணம் மோசடியில் ஈடுபட்ட பஸ் கண்டக்டர், மனைவியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    • இதுகுறித்து தெப்பக்குளம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மதுரை

    மதுரை புதுராமநாதபுரம் ரோடு, கம்பர் தெருவை சேர்ந்தவர் பாண்டீஸ்வரி (வயது 35). இவர் தெப்பக்குளம் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    பைக்காரா, முத்துராமலிங்கபுரம், புது மேட்டு தெருவில் இளங்கோவன் (45) என்பவர் வசித்து வந்தார். இவர் பொன்மேனி பணிமனையில் அரசு பஸ் கண்டக்டராக உள்ளார். இவரும், மனைவி கவிதாவும் மாத சீட்டு வசூலித்து வந்தனர். நான் அவர்களிடம் ரூ.2 லட்சம் சீட்டு போட்டிருந்தேன். மாத சீட்டு முதிர்வடைந்தது. இளங்கோவன் தரப்பினர் எனக்கு ரூ.1.44 லட்சம் மட்டும் கொடுத்தனர். மீதமுள்ள தொகையை கேட்டேன். அவர்கள் தர மறுத்து விட்டனர். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

    • 10 கிராம் எடையுள்ள போலி தங்க வளையல்களை அடமானம் வைத்து ரூ. 31 ஆயிரம் பெற்று சென்றுள்ளார்
    • வினோத் அந்த பெண்ணை பிடித்து காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஓமாம்புலியூர் கிராமத்தில் அடகு கடை கடந்த 7 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.இதனை வினோத் நடத்திவருகிறார். கடந்த 10-ந் தேதி இந்த கடைக்கு வந்த பெண் ஒருவர் தனது குழந்தைகள் வளையல்கள் என பொய் சொல்லி 10 கிராம் எடையுள்ள போலி தங்க வளையல்களை அடமானம் வைத்து ரூ. 31 ஆயிரம் பெற்று சென்றுள்ளார் பின்னர் வினோத் அதனை மாற்றி அருகில் உள்ள வங்கியில் அடகு வைக்க முயன்றபோது அது போலி நகை என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில் அதே பெண்மணி மீண்டும் வேறுஒரு போலி நகையை வைக்க மீண்டும் அதே அடகு கடைக்கு வந்தார். அப்போது அந்த நகையை சோதித்த பார்த்த போது அது போலி நகை என தெரியவந்தது. உடனே உரிமையாளர் வினோத் அந்த பெண்ணை பிடித்து காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணையில் இந்த பெண்ணுடன் மேலும் 2பேர் வந்து உள்ளனர். பிடிபட்ட பெண்ணின் பெயர் சத்யா(வயது38)சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்ததுபின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். இந்த பெண்ணுடன் வந்த 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • ராமநாதபுரம் அருகே கப்பலில் வேலை வாங்கி தருவதாக ரூ.60 ஆயிரம் மோசடி நடந்துள்ளது.
    • இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே உள்ள டி.இரணியன் வலசை கிராமத்தைச் சேர்ந்த பவித்ரன் (வயது 22) இவர் டிப்ளமோ மரைன் என்ஜினீயரிங் படித்து முடித்துவிட்டு வேலை தேடி வந்தார்.

    முகநூல் பக்கத்தில் கோவா துறைமுகத்தில் கப்பலில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்வ தாகவும், அதில் சேர விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிடப்பட்டுள்ள வாட்ஸ்ஆப் எண்ணிற்கு தங்களது சுய விவரத்தை அனுப்பி வைக்கும்படி தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை நம்பிய பவித்ரன் ஆவணங்களை அனுப்பி வைத்துள்ளார்.

    பிறகு தனது மின்னஞ்சல் முகவரியில் சென்ற பார்த்தபோது குறிப்பிட்ட நிறுவனத்தில் வேலைக்கு தேர்வு செய்துள்ளதாக தகவல் வந்தது. இந்த தகவலை நம்பி அவர்கள் தெரிவித்த வங்கி கணக்கிற்கு, பேடிஎம் மூலம் 2 தவணைகளில் ரூ.65 ஆயிரம் அனுப்பி வைத்தார்.

    அதன் பிறகு பவித்ரனை கோவாவிற்கு வரும்படி அழைத்தனர். அங்கு சென்று மொபைல் எண்ணில் தொடர்பு கொண்ட போது, மேலும் சில காரணங்களை தெரிவித்து கூடுதலாக பணம் செலுத்தினால்தான் வேலை வழங்க முடியும் என்று கூறினர்.

    சந்தேமடைந்த பவித்ரன் அவர்களது பாஸ்போர்ட், ஆதாரை ஆய்வு செய்த போது அனைத்தும் போலியானது என்பதை கண்டறிந்தார். இதுகுறித்து ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×