என் மலர்
நீங்கள் தேடியது "வன்கொடுமை"
- பாஜக ஆட்சியின் கீழ் உத்தர பிரதேசம் பயம், அநீதி, அட்டூழியங்கள் நிறைந்ததாகியுள்ளது.
- உங்களுடைய சட்டம்-ஒழுங்கு எங்கே?, உங்களுடைய போலியான பெட்டி பசாயோ (Beti Bachao) தற்போது எங்கே?.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஒரு கிராமத்தில் 22 வயதான இளம்பெண் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஜனவரி 30-ந்தேதி காணாமல் போன நிலையில், அடுத்த நாள் காலையில் கிராமத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள கால்வாயில் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்த பெண்ணின் கண்கள் நோண்டி எடுக்கப்பட்டுள்ளதாகவும், உடலில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததாகவும், எலும்புகள் முறிந்து இருந்ததாகவும் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
தலித் பெண் ஒருவர் வன்கொடுமை செய்யப்படடு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதற்கு மிகப்பெரிய அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன. மேற்கு வங்காள மாநில ஆளுங்கட்சியான மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-
பாஜக ஆட்சியின் கீழ் உத்தர பிரதேசம் பயம், அநீதி, அட்டூழியங்கள் நிறைந்ததாகியுள்ளது. 22 வயது இளம் பெண் ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளார் என குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் பாஜக இதுவரை மவுனமாக உள்ளது. யாரும் கைது செய்யப்படவில்லை.
முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உங்களுடைய சட்டம்-ஒழுங்கு எங்கே?, உங்களுடைய போலியான பெட்டி பசாயோ (Beti Bachao) தற்போது எங்கே?. தலித் பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். நீங்கள் வேறுவிதமாக பார்க்கிறீர்கள். பாஜக-வின் இரட்டை என்ஜின் அரசு மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. யோகி ஆதித்யநாத்தின் பாதுகாப்பு வாக்குறுதி வெற்று வார்த்தைகளாகவே உள்ளன.
இவ்வாறு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
- மாற்றுத்திறனாளி பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் சிறை விதிக்கப்பட்டுள்ளது
- கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சம்பவம்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே வாய்பேச முடியாத பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆண்டிமடம் அடுத்த சூரக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் வீராசாமி மகன் செந்தில்(வயது 43). இவர், அதே பகுதியைச் சேர்ந்த வாய்பேச முடியாத 32 வயது பெண்ணை கடந்த 2016 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதேபோல் தொடர்ந்து அவர், மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதால், பெண் கர்ப்பமடைந்தார். இது குறித்து அப்பெண்ணின் உறவினர், ெஜயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், செந்திலை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றவாளி செந்திலுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபாரதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்குரைஞர் ம.ராஜா ஆஜரானார்.
- குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை சட்டம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
- குழந்தைகளுக்கு ஏற்படும் வன்கொடுமைகள், குழந்தை திருமணம் உள்ளிட்டவைகளை தடுப்பது எப்படி?
மதுக்கூர்:
மதுக்கூர் சிவக்கொல்லையில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை சட்டம் குறித்த பல்வேறு விழிப்புணர்வு பற்றிய கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மதுக்கூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் அமுதா துரை.செந்தில் தலைமை வகித்தார்.
மதுக்கூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர்/ வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) ராஜூ, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) செல்வேந்திரன் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் வன்கொடுமைகள், கொத்தடிமை தொழிலாளர், குழந்தை திருமணம் உள்ளிட்டவைகளை தடுப்பது எப்படி? என்று அலுவலர்கள் விளக்கமளித்தனர்.
மேலும் குழந்தைகளுக்கு ஏற்படும் தீமையை தடுப்பது எப்படி என்பது பற்றிய விழிப்புணர்வும் நடைபெற்றது. முடிவில் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சின்னப்பா நன்றி கூறினார்.
இதில் அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதி, சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ரோஜாவனம் செவிலியர் கல்லூரி மாணவியர் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்
- முதியோர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்ட சமூக நலத்துறை மற்றும் ரோஜாவனம் முதியோர் இல்லம் சார்பில் உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினம் இல்ல இயக்குனர் அருள் ஜோதி தலைமையில், மேலாளர் கோபி முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முதியோர்களுக்கு இனிப்பு, கதர் ஆடை வழங்கி பேசினார். முதியோர் பராமரிப்பில் சிறப்பாக சேவை செய்யும் சேவையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
நாகர்கோவில், கன்னியாகுமரி, ராமநாதபுரம், மதுரை, திருச்சி, குற்றாலம், சென்னை மற்றும் புதுடில்லி உள்ளிட்ட பகுதிகளில் ரோஜாவனம் முதியோர் இல்லம் செயல்பட்டு வருவதாகவும் இங்கு வந்து முதியோர்கள் பயன் பெறலாம் என ரோஜாவனம் இயக்குனர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் ரோஜாவனம் செவிலியர் கல்லூரி முதல்வர் புனிதா டேனியல், மருத்துவர் ஸ்டீவ் வாழ்த்துரை வழங்கினர். ரோஜாவனம் செவிலியர் கல்லூரி மாணவியர் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். முதியோர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
முன்னதாக செவிலியர் கல்லூரி ஆசிரியர் பரமேஸ்வரி வரவேற்று பேசினார். நிறைவாக முதியோர் இல்ல ஆலோசகர் சுசீலா நன்றி கூறினார்.மேலாளர் சாமுவேல் ராஜன், செவிலியர் கல்லூரி பேராசிரியர்கள் சிபியா, செல்லம்மாள், பிரியா, மற்றும் மலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- குறிப்பிட்ட ஜாதி பற்றி எழுதிய அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க சிபிஎம்எல் மக்கள் விடுதலைக் கட்சி வலியுறுத்தி உள்ளது.
- அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் சிபிஎம்எல் மக்கள் விடுதலைக் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் அருணாச்சலம் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பதவி ஏற்று 8 ஆண்டுகள் நிறைவு பெற்றதை வாழ்த்தி பா.ஜ.க.வின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை வாழ்த்தி கவிதை எழுதியுள்ளார். அதில் எந்த தவறும் இல்லை.
ஆனால் தமிழகத்தின் ஒரு ஜாதியை ஒப்பிட்டு எழுதி உள்ளார்.
இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.