என் மலர்
நீங்கள் தேடியது "அமைச்சர் முத்துசாமி"
- கேளம்பாக்கம் பஸ் நிலையம் கட்டிடமும் முடிவடையும் தருவாயில் உள்ளது.
- பொங்கல் பண்டிகைக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
வண்டலூர்:
பரனூர் சுங்கச்சாவடி அருகே சுமார் 2 ஏக்கர் 58 சென்ட் பரப்பளவில் ரூ.25 கோடியே 43 லட்சத்து 20 ஆயிரத்து 971 மதிப்பீட்டில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. மொத்தம் 116 அறைகள் வருகின்றன. இதில் எல்.ஐ.ஜி. 26 அறைகளும், எம்.ஐ.ஜி. 90 அறைகளும் கொண்ட 13 தளங்கள் ஒரு பிரிவாகவும், 15 தளங்கள் ஒரு பிரிவாகவும் கட்டப்படுகிறது.
புதிய கட்டிடப் பணிகளை அமைச்சர் முத்துசாமி நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
இந்த கட்டிடத்தில் 80 சதவீத பணிகள் முடிவடைந்து உள்ளது. வருகிற மார்ச் மாத இறுதிக்குள் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது. கட்டிடத்தின் அருகே உள்ள 13.73 ஏக்கர் பரப்பளவில் காலி மனைகளையும் 145 அறைகள் கொண்ட புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படும்.
ஏற்கனவே கட்டப்பட்ட வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி 121 குடியிருப்புகளில் 61 குடியிருப்புகள் மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து மறுசீரமைக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. இதற்கான பணியும் நடந்து வருகிறது.
ரெயில்வே துறையில் வாங்க வேண்டிய அனுமதியும் விரைவில் முறையாக பெற்று வருகிற மார்ச் மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம். இதேபோல் கேளம்பாக்கம் பஸ் நிலையம் கட்டிடமும் முடிவடையும் தருவாயில் உள்ளது. பொங்கல் பண்டிகைக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ., வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) சஞ்சீவனா, ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன், துணைத் தலைவர் ஆராமுதன், தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம், தலைமை பொறியாளர் சீனிவாச ராவ் உடன் இருந்தனர்.
- ஈரோடு மாநகராட்சி எல்லை பகுதி தேவை அடிப்படையில் வரிவுபடுத்தப்படும்.
- புதிதாக ஈரோடு பகுதியில் துணை நகரம் அமைக்கலாமா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.
ஈரோடு:
ஈரோட்டில் பன்னீர்செல்வம் பார்க்க அருகே கனி மார்க்கெட் (ஜவுளி சந்தை) ஒருங்கிணைந்த வணிக வளாகத்தை இன்று அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார்.
பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகும். எனவே எனக்கும் அந்த விருப்பம் உள்ளது.
ஈரோடு மாநகராட்சியில் புறநகர் பஸ்கள் வந்து செல்ல சோலார் பகுதியில் தற்காலிக பஸ் நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து வரும் பஸ்கள் அங்கு நிற்கும். இதேபோன்று சத்தி, கோபி பகுதியில் இருந்து வரும் பஸ்கள் நிற்க கனி ராவுத்தர் குளம் அருகே மற்றொரு பஸ் நிலையம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக இடம் கையகப்படுத்த பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. அரசின் நிதி ஒதுக்கீடு கிடைத்ததும் இடம் வாங்கப்பட்டு அங்கும் பஸ் நிலையம் அமைக்கப்படும். எனவே ஒரே சமயத்தில் 2 தற்காலிக பஸ் நிலையங்கள் செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டு வருகிறது. பின்னர் அவைகள் நிரந்தர பஸ் நிலைய கட்டிட வசதியுடன் அமையும்.
அத்திக்கடவு -அவினாசி திட்ட பணிகளை வரும் ஜனவரி 15-ந்தேதிக்குள் முடிக்க அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
சென்னை கிளாம்பாக்கம் பகுதியில் மிகப்பெரிய புறநகர் பஸ் நிலையம் அமைக்கப்படுகிறது. அப்பணிகளை வரும் ஜனவரி 15-ந் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை பெருநகரம் அச்சரப்பாக்கம் மற்றும் அரக்கோணம் வரையும் விரிவுபடுத்தப்படுகிறது. இதனால் மக்களுக்கு பல அடிப்படை வசதிகள் உருவாகும். வளர்ச்சி மேலும் துரிதப்படும்.
எனவே தற்போது சென்னையில் உள்ள சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் அலுவலகங்கள் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளிலும் புதிதாக உருவாக்கப்படும்.
ஈரோடு மாநகராட்சி எல்லை பகுதி தேவை அடிப்படையில் வரிவுபடுத்தப்படும். புதிதாக ஈரோடு பகுதியில் துணை நகரம் அமைக்கலாமா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். ஆனால் ஏற்கனவே முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரியபகுதியில் பல மனைகள் விற்பனையாகாமல் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- பல ஆண்டுகளாக உள்ள பிரச்சனை குறித்து முடிவு எடுக்கப்படும். துறையின் மூலம் 60 குடியிருப்புகள், சுமார் 10 ஆயிரம் வீடுகள் புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- கட்டிடங்கள் கட்ட 4 ஆயிரம் அடி என்பது 10 ஆயிரம் அடியாக பஞ்சாயத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
கோவை:
கோவை கொடிசியாவில் கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பின் கோவை மாவட்ட மாநாடு நடந்தது.
மாநாட்டிற்கு கூட்டமைப்பின் மாநிலத் துணை பொதுச்செயலாளர் ஸ்ரீதர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். வரவேற்பு குழு செயலாளர் என்ஜினீயர் ராஜதுரை வரவேற்றார். வரவேற்பு குழு பொருளாளர் என்ஜினீயர் கணேசன் முன்னிலை வகித்தார். மாநாட்டை கூட்டமைப்பின் தலைவரும் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் தலைவர் பொன் குமார் துவக்கி வைத்தார்.
மாநாட்டில் சிறப்பு விருந்தினராக வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:-
கட்டுமான தொழில் மேம்பாடு தொடர்பாக அனைத்து கட்டுமான இன்ஜினியரிங், ஆர்க்கி டெக்சர்களை அழைத்து கூட்டம் போட முடிவு செய்து உள்ளோம்.
இதில் பல ஆண்டுகளாக உள்ள பிரச்சனை குறித்து முடிவு எடுக்கப்படும். துறையின் மூலம் 60 குடியிருப்புகள், சுமார் 10 ஆயிரம் வீடுகள் புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஒற்றை சாளர முறைப்படி வரைபட அனுமதி 60 நாட்களில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் தற்போது 70 சதவீதம் ஒழுங்கு செய்யப்பட்டது. பழைய மனைகள் வரன்முறைப்படுத்த 6 மாதம் கால அவகாசம் அளிக்கலாம். நத்தம் பட்டா பொறுத்தவரை அதனை சார்ந்தவர்களுக்கு உரிமை அளிக்க வேண்டும் என அரசு உறுதியாக உள்ளது. ஹாக்கா சட்டத்தில் வன எல்லையில் இருந்து 150மீ என வரையறை வைக்கலாம் என மாவட்ட கலெக்டர்களிடம் அனுப்பி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அவர்களின் பரிந்துரையின்படி நடவடிக்கை எடுக்கப்படும். வரைபடம் கையொப்பமிடும் ஒரு இடத்தில் பொருந்தும் என ஊராட்சி, பேரூராட்சி ஏற்றுக் கொள்ள நடைமுறை கொண்டு வரப்படும். அனுமதியின்றி கட்டிடம் கட்டினால் ஆர்கிடெக், இன்ஜினியரிங் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
கட்டிடங்கள் கட்ட 4 ஆயிரம் அடி என்பது 10 ஆயிரம் அடியாக பஞ்சாயத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மாவட்ட அளவில் 25 ஆயிரம் சதுர அடிவரை அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் 40 ஆயிரம் பில்டிங் உரிமை அளிக்கப்படுகிறது. டவுன் பகுதியில் 2.5 ஏக்கர் என்பது 5 ஏக்கர் எனவும், கிராம பகுதிகளில் 5 ஏக்கர் இருந்து 10 ஏக்கர் அளிக்கப்பட்டு உள்ளது. திமுக ஆட்சி வந்த பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நிலத்தை வரைமுறை படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிளானிங் அப்ரூவல் வாங்கி அடிப்படையில் மட்டுமே கட்டிடங்கள் கட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில், கட்டுமான தொழில் சார்ந்த அமைப்புகளான கிரடாய் பி.ஏ.ஐ இன்ஜினீயர் அசோசியேஷன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். முதல் அமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகளுக்கு அவருக்கு இந்த மாநாட்டில் நன்றி தெரிவிக்கப்பட்டது. இதில் செயலாளர் வி.என்.கண்ணன், யுவராஜ், பொருளாளர் ஜெகதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் அமைச்சரிடம் 28 கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இந்த கோரிக்கைகளில் 80 சதவீதம் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படும் என அமைச்சர் கூறியதாக மாநில தலைவர் பொன்குமார் தெரிவித்தார்.
- அமைச்சர் முத்துசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
- இது வரை ரூ.1624.69 கோடி அளவில் செலவீனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டத்திற்குட்பட்ட எம்மாம்பூண்டியில் அமைந்துள்ள அத்திக்கடவு-அவிநாசிதிட்ட 5-ம் நீரேற்று நிலையத்தினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில், அமைச்சர் முத்துசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:
விவசாய பெருங்குடி மக்கள் பயன்பெறும் வகையில் அத்திக்கடவு- அவிநாசிதிட்டமானது பவானி ஆற்றில் காளிங்க ராயன் அணைக்கட்டின் கீழ்புறத்தில் இருந்து ஆண்டொன்றிக்கு 1.50 டி.எம்.சி உபரிநீரை நீரேற்று முறையில்
நிலத்தடியில் குழாய் பதிப்பின் மூலம் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மொத்தம் 24,468 ஏக்கர் நிலம் பயன்பெறும் வகையில்
32 பொதுப்பணி த்துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் 971 குளம், குட்டைகள் என மொத்தம் 1,045 குளங்க ளுக்கு நீர் நிரப்பும் வகையில் வடிவமைக்கப்ப ட்டுள்ளது.
மேலும் தற்போது 99 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. திட்டப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பவானி ஆற்றின் குறுக்கே திருப்பணை மற்றும் ஆறு நீர் உந்து நிலையங்களுக்கான பவானி, நல்லக் கவுண்டன்பாளையம், திருவாச்சி, போலநாயக்கன் பாளையம், எம்மாம்பூண்டி, அன்னூர் ஆகிய இடங்களில் கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளது.
மேலும் ஆழ்குழாய் பதிக்கும் பணிகள் 267.5 கி.மீ. நீளத்திற்கு முடி வடைந்துள்ளது. (மொத்த நீளம் 267.5 கி.மீ) மற்றும் எம்.டி.பி.இ. குழாய்கள் பதிக்கும் பணிகள் தற்போத துரிதமாக நடைபெற்று வருகிறது.
தற்சமயம் சுமார் 797.11 கி.மீ. அளவு எம்.டி.பி.இ. குழாய் (மொத்த நீளம் 797.8 கி.மீ) பதிக்கும் பணிகள் முடிக்கப்பட்டு ள்ளன.
மின்மாற்றிகள், ஏவுபம்பு கள், மின்மோட்டார்கள், சுவிட்ச்கியர் மற்றும் பேனல் போர்டு ஆகியவை அனைத்து நீர்உந்து நிலைய ங்களிலும் பொருத்தப்பட்டுள்ளது.
மின்கம்பங்கள் அமைக்கும் பணி மற்றும் பூமிக்கடியில் மின்சார தொடரமைப்புகள் பதிக்கும் பணி 100 சதவீதம் முடிவுற்று ள்ளது. மேலும் நிலம் பயன்பாட்டு உரிமை பெறும் பணி 100 சதவீதம் முடிவுற்று ள்ளது.
இது தொடர்பாக நடைபெற்ற நீர்வளத்துறை உயர்மட்டக் கூட்டத்தின் நிகழ்வு குறிப்பு அறிக்கை தலைமைச் செயலாளர் ஒப்புதல் அளிக்கப்பட்டு திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
குளம், குட்டைகளில் ஓ.எம்.எஸ். கருவி பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்சமயம் சுமார் 1044 எண்கள் பொருத்தப்பட்டுள்ளது (மொத்தம் - 1045 எண்கள்). இத்திட்டத்திற்கு இது வரை ரூ.1624.69 கோடி அளவில் செலவீனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 20-ந் தேதி முதல் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டு தற்போது வரை 6 நீரேற்று நிலையங்கள் மற்றும் பிரதானக் குழாய்களில்106.80 கி.மீ நீளத்திற்கு சோதனை ஓட்டம் முடிக்கப்பட்டுள்ளது.
மேலும் நீரேற்று நிலைய ங்களிற்கு இடையிலுள்ள கிளைக்குழாய் மற்றும் 1045 குளம் குட்டைகளில் பொருத்தப்பட்டுள்ள ஓ.எம்.எஸ். கருவிகளில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.
மேலும் அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் சரியான முறையில் செல்கிறதா? என்பது குறித்து ஆய்வுப்பணிகள் அலுவலர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அனைத்து பணிகளும் விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டுவர தொடர்புடைய அலுவலர்கள் தங்களது பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி எம்மாம்பூ ண்டியில் அமைந்துள்ள அத்திக்கடவு - அவிநாசி திட்ட 5-ம் நீரேற்று நிலையத்திலிருந்து சோதனை ஓட்டமாக அருகில் உள்ள குளத்திற்கு நீர் செல்வதையும் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொ ண்டார்.
இந்நிகழ்வின் போது நீர்வளத்துறை செயற்பொறியாளர்கள் மன்மதன் (பெருந்துறை), நரேந்திரன் (அவிநாசி), நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் உள்பட துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- அத்தி க்கடவு-அவினாசி திட்டப்பணி குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
- மே மாத இறுதிக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி த்துறை அலுவ லக கூட்ட ரங்கில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னிலையில்,
அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் அத்தி க்கடவு-அவினாசி திட்டப்பணி முன்னேற்ற நிலை குறித்து அலுவலர்களுடனான ஆய்வுக்கூ ட்டம் நடை பெற்றது.
இக்கூட்டத்தில் அமை ச்சர் முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது:
முதல்-அமைச்சர் ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணி கள் குறித்து தொடர்ச்சியாக கேட்டறிந்து வருகிறார்கள். அந்த வகையிலே அத்திக்க டவு-அவிநாசி திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார்கள்.
அத்திக்கடவு-அவிநாசி திட்டமானது பவானி ஆற்றில் காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்புறத்தி லிருந்து ஆண்டொன்றிக்கு 1.50 டி.எம்.சி உபரிநீரை நீரேற்று முறையில் நிலத்தடி யில் குழாய் பதிப்பின் மூலம் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மொத்தம் 24,468 ஏக்கர் நிலம் பயன்பெறும் வகையில் 32 பொதுப்பணி த்துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் 971 குளம், குட்டைகள் நீர் நிரப்பும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தினை நீரேற்று முறையில் செயல்படுத்திட தமிழக அரசின் மூலம் ரூ.1,652 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் ரூ.1,756.88 கோடிக்கு திருத்திய நிர்வாக ஒப்புதல் வழங்க ப்ப ட்டுள்ளது. தற்போது 99 சதவீத பணிகள் முடிக்கப்ப ட்டுள்ளது.
இந்ததிட்டத்தில் குழாயின் மொத்த நீளம் 1065.30 கி.மீ . பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை மற்றும் ஆறு நீர் உந்து நிலைய ங்களுக்கான பவானி, நல்லக்கவுண்டன் பாளை யம், திருவாச்சி, போ லநாயக்கன் பாளையம், எம்மாம் பூண்டி, அன்னூர் ஆகிய பகுதிகளில் கட்டு மான பணிகள் முடிவடை ந்துள்ளது.
குழாய் பதிக்கும் பணிகள் 267.5 கி.மீ. நீளத்திற்கு முடி வடைந்துள்ளது. தற்போது குழாய்கள் பதிக்கும் பணிகள் துரிதமாக நடை பெற்று வருகிறது.
தற்சமயம் சுமார் 797.17 கி.மீ. அளவு குழாய் பதிக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மின் மாற்றிகள், பம்புகள், மின் மோட்டார்கள், சுவிட்ச்கியர் மற்றும் பேனல் போர்டு ஆகியவை அனைத்து நீர்உந்து நிலையங்களிலும் பொருத்தப்பட்டுள்ளது.
மின் கம்பங்கள் அமை க்கும் பணி மற்றும் பூமிக்கடி யில் மின்சார தொடர மைப்புகள் பதிக்கும் பணி 100 சதவீதம் முடிவுற்றுள்ளது. நிலம் பயன்பாட்டு உரிமை பெறும் பணி 100 சதவீதம் முடிவுற்றுள்ளது.
குளம், குட்டைகளில் கடையின் மேலாண்மை அமைப்பு பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்சமயம் சுமார் 1,044 எண்கள் பொருத்த ப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு இது வரை ரூ .1624.69 கோடி அளவில் செலவீனம் மேற்கொ ள்ளப்பட்டு ள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 20-ந் தேதி முதல் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டு தற்போது வரை 6 நீரேற்று நிலைய ங்கள் மற்றும் பிரதான குழாய்களுக்கு சோதனை ஓட்டம் முடிக்கப்பட்டுள்ளது.
மேலும் நீரேற்று நிலையங்களின் இடையிலுள்ள கிளைக்கு ழாய்கள் மற்றும் 1,045 குளம், குட்டைகளில் பொருத்தப்பட்டுள்ள மேலாண்மை அமைப்பு கருவிகளில் சோதனை ஓட்டம் நடை பெற்று வருகிறது.
அனைத்து சோதனை ஓட்டப்பணிகள் முடிக்கப்ப ட்டு மே மாத இறுதிக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும் பணிகளை விரை வாக முடித்திட அலுவ லர்களுக்கு அறிவுறுத்தப்ப ட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் கூடுதல் கலெக்டர், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) நாரணவ்ரே மனிஷ் ராவ், செயற்பொறியாளர் மன்மதன் (நீர்வளத்துறை அத்திக்கடவு- அவிநாசி திட்டம்),
உதவி கலெக்டர் (பயிற்சி) பொன்மணி , துணை கலெக்டர் (பயிற்சி) காயத்திரி, உதவி செயற் பொறியாளர்கள் சங்கர் ஆனந்த், வெங்கடாஜலம், விஜயகுமார், திட்ட அலுவலர் பாலாஜி உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளுக்கும் பல கோடி மதிப்பில் திட்டங்கள் உள்ளன.
- பழைய குடியிருப்புகளை இடிக்கும் இடத்தில் நவீன குடியிருப்புகள் கட்டப்படும்.
ஈரோடு:
ஈரோடு அருகே உள்ள கதிரம்பட்டி, வாவிகடை, சிலேட்டர்நகர், பெருந்துறையில் 3 இடங்கள் என மொத்தம் 6 இடங்களில் ரூ.15 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை, சாலை விரிவாக்கம் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.
அமைச்சர் சு.முத்துசாமி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி சாலை அமைப்பதற்கான பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு ஒன்றியத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 3 பணிகள், பெருந்துறையில் 3 பணிகள் என மொத்தம் 6 பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.15 கோடியே 75 லட்சம் மதிப்பில் இந்த 6 பணிகளும் நடைபெற உள்ளது. மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த திட்டம் இது. இன்னும் 6 மாதத்தில் முடிவடையும். மக்களுக்காக இதேபோல் இன்னும் ஏராளமான திட்டங்கள் உள்ளன.
இதேப்போல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளுக்கும் பல கோடி மதிப்பில் திட்டங்கள் உள்ளன. வீட்டு வசதி வாரியத்தில் 50 சதவீத காலி பணியிடங்கள் உள்ளன. இதில் வாரிசு அடிப்படையில் சில பணியிடங்களை நிரப்ப வேண்டும். இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பணி தொடங்கியுள்ளது. சர்வீஸ் கமிஷன் மூலம் இவை நிரப்பப்பட வேண்டும். அதற்கு சில கால அவகாசம் தேவைப்படுகிறது.
வீட்டு வசதி வாரியத்தில் தமிழகம் முழுவதும் இடிந்து விழும் நிலையில் இருந்த 138 கட்டிடங்கள் கண்டறியபட்டு அதில் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் 60 கட்டிங்கள் இடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பழைய குடியிருப்புகளை இடிக்கும் இடத்தில் நவீன குடியிருப்புகள் கட்டப்படும். வீட்டு வசதி வாரியத்தின் மூலமாக சுயநிதி திட்டத்தின் கீழ் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட இடங்களில் வீட்டு வசதி வாரியம் சார்பில் குடியிருப்புகள் கட்டும் பணிக்கான சட்டத்திருத்தத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது. இந்த பணிகளும் விரைவில் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாநகர செயலாளர் சுப்பிரமணியம், மாவட்ட துணைச்செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- வாய்க்காலை சீரமைக்க ரூ.733 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டு கடந்த 2020-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது.
- மே 1-ந் தேதி முதல் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடுமுடி:
ஈரோடு மாவட்டம் கீழ்பவானி வாய்க்கால் மூலம் ஈரோடு , திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்ட ங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.
இந்த வாய்க்காலை சீரமைக்க ரூ.733 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டு கடந்த 2020-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது. வாய்க்காலை புனரமைக்க ஒருத்தரப்பு விவசாயிகள் ஆதரவும், மற்றொரு தரப்பு விவசாயிகள் எதிர்ப்பும் தெரிவித்தனர். அமைச்சர் முத்துசாமி இருதரப்பு விவசாயிகளையும் அழைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். எனினும் சுமுகமான முடிவு ஏற்படவில்லை.
இந்நிலையில் கீழ்பவானி முறைநீர் பாசன கூட்டமைப்பு சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு மே 1-ந் தேதி முதல் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கீழ்பவானி வாய்க்கால் காங்கிரீட் திட்டத்தை கைவிட கோரியும், விவசாயம் காக்க வேண்டியும், மண் கால்வாயிகவே இருக்க வேண்டும் என வலியுறுத்தி அரச்சலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக விவசாயிகள் கடை வியாபாரிகளிடம் ஆதரவு கேட்டிருந்தனர்.
அதன்படி இன்று காலையில் இருந்து அரச்சலூர் மற்றும் சுற்று வட்டார பகுதியான பிச்சாண்டாம் பாளையம், கருக்கம் பாளையம், வாய்க்கால் மேடு ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து விவசாயிகள் மற்றும் வணிகர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரச்சலூர் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் அரச்சலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடையடைப்பு போராட்டம் காரணமாக ஆட்கள் நடமாட்டம் இன்றி வீதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
கீழ்பவானி வாய்க்காலில், பழைய கட்டுமானங்களில் உள்ள மராமத்துப் பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
புதிதாக வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க கூடாது. வாய்க்காலின் மண் கரை அப்படியே தொடர வேண்டும், கசிவுநீர் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று அரச்சலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடை அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனு கொடுக்க உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் 800 குளங்களுக்கு தண்ணீர் நிரப்பும் சோதனை முடிவடைந்துள்ளது.
- கீழ்பவானி வாய்க்கால் பராமரிப்பு பணியை அரசியலாக்கக் கூடாது.
ஈரோடு:
ஈரோட்டில், கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
டாஸ்மாக்கில் சில குறைபாடுகள் உள்ளன. அவற்றைக் கண்டறிந்து சரி செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதுகுறித்து ஆய்வுக்கூட்டங்கள் நடத்தி பிரச்சினைகள் தீர்க்கப்படும்.
எங்கோ ஓரிரு இடங்களில் தெரியாமல் நடந்துள்ள சிறிய பிரச்சினைகளை கூட அரசியல் காரணங்களுக்காக பூதாகரமாக்கி கூறி வருகின்றனர்.
அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் 800 குளங்களுக்கு தண்ணீர் நிரப்பும் சோதனை முடிவடைந்துள்ளது. இந்த திட்டத்தில் முழுமையாக நிலத்தைக் கையகப்படுத்தாமல் அ.தி.மு.க. அரசு விட்டுச் சென்றுவிட்டது. அதை தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின்னர் விவசாயிகளிடம் பேசி பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது.
சில இடங்களில் பைப்புகள் மற்றும் தண்ணீர் அளவிடும் கருவி திருட்டுப்போய் உள்ளது. பணிகள் முடிவடைந்ததும், காவலர்கள் நியமிக்கப்பட்டு, அத்தகைய திருட்டுகள் நடைபெறாமல் தடுக்கப்படும். அத்திக்கடவு - அவினாசி திட்டத்தில் அனைத்து பணிகளும் விரைவில் முடிக்கப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார்.
கீழ்பவானி வாய்க்கால் பராமரிப்பு பணியை அரசியலாக்கக் கூடாது. விவசாயிகளிடம் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து, பழைய கட்டுமான பணிகள் புதுப்பிக்கப்படும். கீழ்பவானி வாய்க்காலின் அடித்தளத்தில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட மாட்டாது என நீர்வளத்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
அதன்படி, பழைய கட்டுமானங்கள் மற்றும் பலவீனமான கரைகள் மட்டுமே புதுப்பிக்கப்படுகின்றன. விவசாயிகள் சில இடங்களில் அவர்களுக்குள்ள பிரச்னைகளைக் கூறும்போது அவற்றை நிவர்த்தி செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கள்ளச்சாராயத்தை தடுக்க முதலமைச்சர் ஆலோசனைகள் வழங்கி உள்ளார்.
- டாஸ்மாக் கடைகளில் தவறு ஏதும் நடக்கவில்லை.
ஈரோடு:
ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கள்ளச்சாராயத்தை தடுக்க முதலமைச்சர் ஆலோசனைகள் வழங்கி உள்ளார். அதன்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பில் இருதரப்பு விவசாயிகளும் சமாதானமாக செல்ல வேண்டும் என்பதே அரசின் நோக்கம். எந்த தரப்பிற்கும் நாங்கள் ஆதரவாக இல்லை. இதில் சட்டத்தை மீறி யார் செயல்பட்டாலும் அது தவறு. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகளை மூடுவதற்கு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். டாஸ்மாக் கடைகளில் தவறு ஏதும் நடக்கவில்லை. டாஸ்மாக் மூலம் அரசுக்கு அதிக வருமானம் கிடைப்பதற்காக இலக்கு நிர்ணயிப்பதில்லை. தமிழகத்தில் மது அருந்துவோர் எண்ணிக்கை குறைய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நிர்ணயம் செய்யப்பட்ட எம்.ஆர்.பி. விலைக்கே மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும்.
- அரசுக்கும் நிர்வாகத்திற்கும் அவப்பெயர் ஏற்படும் வகையில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது.
ஈரோடு:
ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள். மேலும் குற்றவியல் நடவடிக்கை உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
நிர்ணயம் செய்யப்பட்ட எம்.ஆர்.பி. விலைக்கே மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும்.
அரசுக்கும் நிர்வாகத்திற்கும் அவப்பெயர் ஏற்படும் வகையில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- டாஸ்மாக் கடைகளில் தரப்படும் மது பாட்டில்கள் சில இடங்களில் பிரச்சினையாக உள்ளது.
- ஈரோடு மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
ஈரோடு:
தமிழக வீட்டு வசதித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
முதலமைச்சர் ஒவ்வொரு மாதமும் பல்வேறு துறைகளில் ஆய்வு செய்து வருகிறார். இதுவரை என்ன பணிகள் செய்யப்பட்டுள்ளது, இனிமேல் என்ன பணிகள் செய்ய வேண்டும் என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதன் அடிப்படையில் நாங்களும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நலத்திட்ட பணிகளை செயல்படுத்தி வருகிறோம்.
மதுக்கடையில் தவறுகள் நடக்கிறது என்று எதிர்க்கட்சிகள் புகார் தெரிவிப்பது சாதாரணமான விசயம் தான். அவர்கள் அப்படி கூறாமல் இருந்தால் தான் அதிசயம். சில இடத்தில் தவறு நடந்துள்ளதை அனைத்து இடங்களிலும் நடந்துள்ளதாக சித்தரிக்கின்றனர்.
இதுகுறித்து புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மது விற்பனை நேரம் குறைப்பது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதில் உள்ள பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுக்கடையில் வியாபாரம் அதிகமானால் பெருமை இல்லை, குறைய வேண்டும் என நினைக்கிறோம்.
மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது அபராதம், பணிமாறுதல் செய்யப்படுகிறது. மேலும் அதிக புகார் வந்தால் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார்கள். முதலில் மதுக்கடை பணியாளர்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டு வருகிறோம். அவர்கள் கூறும் பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிகாரிகளுடனும் டாஸ்மாக் ஊழியர்கள் சங்கங்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினேன். ஊழியர்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும். மது விற்பனை அதிகரிப்பது எங்கள் நோக்கமல்ல. கள்ளச்சாராயத்தை தடுக்க வேண்டும் என்பது நோக்கமாகும். மதுக்கடையில் செயல்படும் பார் சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. வழக்கு முடிந்ததும் பார் டெண்டர் வைக்கப்படும் தற்போது லைசன்ஸ் பெற்ற பார்கள் மட்டுமே நடக்கின்றன.
டாஸ்மாக் கடைகளில் தரப்படும் மது பாட்டில்கள் சில இடங்களில் பிரச்சினையாக உள்ளது. அவைகளைப் பெற்றுக் கொண்டு ரூபாய் பத்து வழங்க தீர்ப்பு உள்ளது. மேலும் ஒரு வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அதன் முடிவின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது 500 மது கடைகளை மூடி உள்ளோம். பொதுமக்களிடமிருந்து வந்த புகாரின் அடிப்படையிலேயே இந்த கடைகள் மூடப்பட்டன. இதுகுறித்து கடந்த ஏப்ரல் மாதமே முடிவெடுக்கப்பட்டது. ஈரோடு மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் உட்பட பலர் உடன் இருந்தனர்.
- டாஸ்மாக் நிறுவனத்தின் செயல்பாடுகள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
- கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
சென்னை:
தமிழகத்தில் அண்மையில் 500 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டன. இதன் காரணமாக அங்கு பணியாற்றிய ஊழியர்கள் வேறு கடைகளுக்கு மாற்றப்பட்டனர்.
இந்த நிலையில் டாஸ்மாக் மதுபான கடைகளில் விற்பனை குறைந்து வருவதாக தகவல்கள் வரத் தொடங்கியது. இதன் காரணமாக டாஸ்மாக் மதுபான விற்பனையை அதிகப்படுத்துவது குறித்து அமைச்சர் முத்துசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிப கழக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் டாஸ்மாக் நிறுவனத்தின் செயல்பாடுகள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது, கம்ப்யூட்டர் மூலம் ரசீது வழங்குவது, கட்டுப்பாட்டு அறை அமைத்து கடைகளின் செயல்பாடுகளை கண்காணிப்பது, கர்நாடகாவை போல தமிழகத்திலும் டெட்ரா பாக்கெட்டில் மதுபானம் விற்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது.