என் மலர்
நீங்கள் தேடியது "ஆபாச படங்கள்"
- பாதிக்கப்பட்டபெண் திருச்சி எஸ்.பி. செல்வ நாகரத்தினத்திடம் புகார் செய்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் திருவேங்கடநகரை சேர்ந்த தனக்கொடி மகன் முத்துக்குமார்(வயது38). பெல் நிறுவனத்தில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார்.
இதே நிறுவனத்தில் பிட்டராக வேலை பார்த்து வரும் ஒருவரும், முத்துக்குமாரும் நண்பர்கள். இதனால் இரு குடும்பத்தினரும் நெருக்கமாக பழகி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் முத்துக்குமார் வீட்டுக்கு, நண்பரின் மனைவி சென்றுள்ளார். அப்போது குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து முத்துக்குமார் கொடுத்தார். சிறிது நேரத்தில் நண்பரின் மனைவி மயங்கியதும் தனது செல்போனில் அவரை ஆபாசமாக படங்கள் மற்றும் வீடியோவும் எடுத்து வைத்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து தனது செல்போனில் ஆபாசமாக எடுத்திருந்த போட்டோ மற்றும் வீடியோவை காட்டி அடிக்கடி பணம் கேட்டு நண்பரின் மனைவியை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்டபெண் திருச்சி எஸ்.பி. செல்வ நாகரத்தினத்திடம் புகார் செய்தார். எஸ்.பி உத்தரவின் பேரில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி விசாரணை நடத்தினார்.
விசாரணையில் இதே போல் ஏற்கனவே ஒருபெண்ணை ஆபாசமாக புகைப்படம் எடுத்து அந்த பெண்ணிடம் பணம் கேட்டு முத்துக்குமார் மிரட்டி வந்ததும், அவரது செல்போனில் பல பெண்களின் ஆபாச புகைப்படங்கள் இருந்ததும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
- குழந்தைகளின் ஆபாச படங்களை இணையதளத்தில் பதிவிட்டோர் கண்டறியப்பட்டனர்.
- கைதானவர்களில் சிலருக்கு குழந்தை கடத்தலிலும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டு உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் சமூக வலைதளங்கள் மூலம் பெண்கள், குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவுகள் கொடுக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது.
இது தொடர்பாக கேரள போலீசில் குழந்தைகள் பாதுகாப்பு சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டது. இவர்கள் சைபர்கிரைம் போலீசாருடன் இணைந்து குழந்தைகளுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுப்போர் மற்றும் அவர்களின் ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் பரப்புவோர் குறித்த தகவலை சேகரித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இது தொடர்பாக மாநிலம் முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து 449 இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் குழந்தைகளின் ஆபாச படங்களை இணையதளத்தில் பதிவிட்டோர் கண்டறியப்பட்டனர்.
அவர்களில் 8 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இவர்களில் ஐ.டி. ஊழியர்களும் அடங்குவர். அவர்கள் அனைவரையும் ரகசிய இடத்திற்கு கொண்டு சென்ற போலீசார் அங்கு அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கைதானவர்களில் சிலருக்கு குழந்தை கடத்தலிலும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே இது தொடர்பாகவும் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அதிர்ச்சி அடைந்த இளம் பெண் இதுகுறித்து தெற்கு மண்டல சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார்.
- உடன் பணியாற்றும் பெண் ஊழியர்கள் யாரையேனும் மிரட்டினாரா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை:
போரூரில் பிரபல ஐ.டி.நிறுவனம் உள்ளது. இங்கு பணியாற்றும் இளம்பெண் ஒருவரது பெயரில் போலியாக தொடங்கப்பட்ட பேஸ்புக் பக்கத்தில் அவர் அனுப்புவது போன்று ஏராளமான ஆபாசமான குறுஞ்செய்திகள் வாலிபர்களுக்கு அனுப்பப்பட்டு இருந்தது.
மேலும் தோழியின் பிறந்த நாள் அன்று அலுவலகத்தில் எடுக்கபட்ட புகைப்படங்களும் ஆபாசமாக மாற்றி பதிவிடப்பட்டு இருந்தன.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளம் பெண் இதுகுறித்து தெற்கு மண்டல சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். தென் சென்னை இணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தி உத்தரவுப்படி தெற்கு மண்டல சைபர்கிரைம் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் இதுபற்றி தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் இளம்பெண் பணி புரியும் அதே நிறுவனத்தில் பணியாற்றி வரும் என்ஜினீயர் தமிழ்மாறன் என்பவர் இளம்பெண்ணின் புகைப் படத்தை ஆபாசமாக பதிவிட்டு பேஸ்புக் மெசஞ்சரில் ஆபாசமாக சாட்டிங் செய்து வந்தது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து தமிழ்மாறனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த செல்போனை போலீசார் பறிமுதல்செய்து ஆய்வு செய்தபோது 100-க்கும் மேற்பட்ட ஐ.டி.பெண் ஊழியர்களின் ஆபாச படங்கள் குவிந்து கிடந்தது. இதேபோல் தமிழ்மாறன் ஏராளமான பெண்களின் புகைப்படத்தை ஆபாசமாக மாற்றி பேஸ்புக்கில் போலியாக கணக்கு தொடங்கி சாட்டிங் செய்து வந்து உள்ளார். இளம்பெண் சாட்டிங் செய்வது போல் வாலிபர்களை தொடர்பு கொண்டு இரவு முழுவதும் செக்ஸ் சாட்டிங் செய்து ரசித்து இருக்கிறார். இவரது இந்த விபரீத ஆசையால் தற்போது போலீசில் சிக்கி கொண்டார்.
தமிழ்மாறன் தன்னுடன் பணியாற்றும் பெண் ஊழியர்களை அவர்களுக்கு தெரியாமல் பல கோணங்களில் செல்போனில் ஆபாசமாக படம் எடுத்து வைத்து இருந்தார். அதனையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
ஆபாச சாட்டிங் செய்து அவரது வலையில் வீழ்ந்தவர்களிடம் பணம் பறித்து உள்ளாரா? உடன் பணியாற்றும் பெண் ஊழியர்கள் யாரையேனும் மிரட்டினாரா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஆபாச படங்கள் பார்த்தாக இளைஞர் மீது பதியப்பட்ட வழக்கு.
- ஆபாச படங்கள் பார்க்கும் பழக்கத்திலிருந்து விடுபட கவுன்சிலிங்.
சென்னையில், ஆபாச படங்கள் பார்த்தாக இளைஞர் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னிலையில் வந்தது.
நீதிமன்றத்தில் ஆஜரான இளைஞர் ஆபாச படங்களை பார்த்ததாக ஒப்புக் கொண்ட நிலையில், குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை பார்க்கவில்லை என விளக்கம் அளித்தார்.
மேலும், ஆபாச படங்கள் பார்க்கும் பழக்கத்திலிருந்து விடுபட கவுன்சிலிங் செல்ல விரும்புவதாகவும் இளைஞர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆபாச படங்கள் பார்த்தாக இளைஞர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.

வழக்கு விசாரணையின்போது, "ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல. மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பது தான் சட்டப்படி குற்றம்" என நீதிமன்றம் அதிரடியாக அறிவித்தது.
மேலும், "90's கிட்ஸ் எப்படி மது, புகைக்கு அடிமையாகி இருந்தார்களோ, அதேபோல் 2K கிட்ஸ் ஆபாச படங்களுக்கு அடிமையாகியுள்ளனர்.
அவர்கள் மீது பழி சொல்வதற்கு பதில், இந்த பழக்கத்தில் இருந்து மீட்பதற்கு அறிவுரைகள் வழங்கும் அளவுக்கு சமூகம் பக்குவடைய வேண்டும். பள்ளிகளில் இருந்து அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
ஆபாச படங்களை பார்ப்பதால் உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் டீன் ஏஜ் வயது குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்" என்றது.
- இளைஞர் ஒருவர், தனது மொபைலில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு
- ஒரு தனி நீதிபதி எவ்வாறு இத்தகைய கருத்தைக் கூற முடியும். இது கொடுமையானது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்
குழந்தைகள் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பதிவிறக்கம் செய்து பார்ப்பது தவறில்லை, எனக் கூறிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னையை அடுத்த அம்பத்தூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது மொபைலில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக அம்பத்தூர் காவல்நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அந்த இளைஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பது என்பது சட்டப்படி குற்றமல்ல. அந்த படங்களை மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பது தான் குற்றம் எனக்கூறி, இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து, குழந்தைகள் உரிமைக்கான அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, ‛‛குழந்தைகள் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பதிவிறக்கம் செய்து பார்ப்பது தவறில்லை, என்றுக் கூறிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிக்கு கண்டனம் தெரிவித்தார்.
மேலும், ஒரு தனி நீதிபதி எவ்வாறு இத்தகைய கருத்தைக் கூற முடியும். இது கொடுமையானது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட மனுதாரருக்கும், பதில் மனுதாரருக்கும் பதில் அளிக்க அவகாசம் வழங்கிய நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணை 4 வார காலத்திற்கு பின்னர் மீண்டும் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்துள்ளது.
- 18 வயது பூர்த்தியடையாத இளம் வயதினருக்கும் எளிதாக மொபைல்போன்களில் ஆபாச படங்கள் கிடைக்கிறது.
- ஸ்பெயினில் வசிக்கும் 15 வயதிற்குட்பட்டோரில் பாதிப் பேர் ஆபாச இணையதளங்களில் படங்கள் பார்க்கின்றனர்.
இப்போது கையில் உள்ள மொபைல்போன்களில் வழியாக ஆபாச இணையதளங்களில் பலரும் ஆபாச படங்களை பார்க்கின்றனர். 18 வயது பூர்த்தியடையாத இளம் வயதினருக்கும் எளிதாக மொபைல்போன்களில் ஆபாச படங்கள் கிடைக்கிறது.
இந்நிலையில், 18 வயதிற்கும் குறைவான இளம்வயதினர் இணையதளங்களில் ஆபாச படங்கள் பார்ப்பதை தடுத்துநிறுத்தும் வகையில் பார்ன் பாஸ்போர்ட் என்ற புதிய அம்சம் ஸ்பெயின் நாட்டில் அறிமுகமாகவுள்ளது.
ஸ்பெயினில் வசிக்கும் 15 வயதிற்குட்பட்டோரில் பாதிப் பேர் ஆபாச இணையதளங்களில் படங்கள் பார்க்கின்றனர் என்று தெரிவித்த ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் பார்ன் பாஸ்போர்ட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பேசினார்.
இதன்படி ஸ்பெயின் நாட்டில் வசிப்பவர்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் இந்த பார்ன் பாஸ்போர்ட்ஆப்பை பதிவிறக்கம் செய்யவேண்டும். அந்த ஆப் அவர்களது வயதை உறுதிப்படுத்தும். அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை கொண்டு அவர்களது வயது சரிபார்க்கப்படும். விரைவில் இந்த ஆப் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனாளர்களின் வயது சரிபார்க்கப்பட்ட பின்பு, அவர்களுக்கு மாதந்தோறும் 30 கிரெடிட்களை வழங்கும். ஒவ்வொரு கிரெடிட்டும் ஆபாச இணையதளங்களை அணுகுவதற்கு QR குறியீட்டை உருவாக்கும்.
- பல குடும்பங்களில் இல்லத்தரசிகள் தாங்கள் படும் நரகத்தை எப்படி பகிர்ந்து கொள்வது என்று தெரியாமல் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
- கவுன்சிலிங் செய்யும் போது கூட குடும்ப பெண்கள் உடனடியாக எதையும் வெளிப்படுத்தமாட்டார்கள்.
ஸ்மார்ட்போன்கள் கையில் இருக்கும் நிலையில், சில ஆண்கள் வயது வித்தியாசம் இல்லாமல் எதேச்சையாக உலா வரும் ஆபாச இணையதளங்களுக்கு அடிமையாகி வருகின்றனர். அங்கு அவர்கள் பார்க்கும் வீடியோக்களால் சபல நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
அட்டூழியங்களை ஏற்படுத்தும் ஆபாசம் இப்போது குடும்ப வாழ்க்கையில் நுழைகிறது. தெலுங்கானா மாநிலத்தில் சில ஆண்கள் தாங்கள் பார்க்கும் கேவலமான காட்சிகளை தங்கள் மனைவியிடம் வலுக்கட்டாயமாக காட்டி.. அப்படி நடந்து கொள்ள வற்புறுத்துகிறார்கள். வீட்டில் சிறு குழந்தைகளும், டீன் ஏஜ் குழந்தைகளும் இருப்பதை மறந்து, தவறாக நடந்து கொள்கின்றனர். இதனால் பெண்களுக்கு நோய் பாதிப்பு மற்றும் தகராறு ஏற்படுகிறது.
மாதந்தோறும் 400-க்கும் மேற்பட்ட குடும்ப வன்முறை வழக்குகள் பதிவாகின்றன. சமீபகாலமாக இதுபோன்ற உணர்வுப்பூர்வமான பிரச்சினைகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
செல்போனில் ஆபாச படங்களை பார்த்துக்கொண்டிருக்கும் சிலர் குதூகலமடைந்து பரிதாபமாக நடந்துகொள்வதாகத் தெரிகிறது. சமீபத்தில் மியாபூரில் ஒரு நபர் தனது மனைவியை ஆபாச வீடியோக்களை பார்க்கவும், அவற்றைப் பின்தொடரவும் கட்டாய்ப்படுத்தினார். அவள் மறுத்ததால் தனது ஆசையை நிறைவேற்ற மருமகளிடம் தவறாக நடந்து கொண்டார். அவள் அலறி துடித்து மறுத்ததால், வெறித்தனமாக மாறி, சிறுமியை தலைமுடியில் தூக்கி எறிந்து கொன்றான். பல விபரீதங்களை' ஏற்படுத்தும் இந்த ஆபாச இணையதளங்களை முடக்குவது சவாலாக உள்ளது. வெளியாட்களுக்கு வெளிப்படுத்த முடியாத இந்த அநாகரிகத்தால், பல குடும்பங்களில் இல்லத்தரசிகள் தாங்கள் படும் நரகத்தை எப்படி பகிர்ந்து கொள்வது என்று தெரியாமல் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
குடும்பத்தாரிடம் சொல்ல முடியாத விஷயமாக இருந்ததால், அவர்கள் வாய் திறக்கவில்லை. அவர்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஐதராபாத்தை சேர்ந்த பெண் ஒருவர் சிறுநீர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சென்றார். மாதந்தோறும் இதே பிரச்சினையுடன் வருவதால் டாக்டருக்கு சந்தேகம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கவுன்சிலிங் செய்தபோது கணவனின் குறும்புத்தனங்களை வெளிப்படுத்தினார். 2 வருடங்களாக தான் அனுபவித்த நரகத்தை விவரித்தார். டாக்டர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் அவர் மீது குடும்ப வன்முறை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நாங்கள் கவுன்சிலிங் செய்யும் போது கூட குடும்ப பெண்கள் உடனடியாக எதையும் வெளிப்படுத்தமாட்டார்கள். அவர்களிடம் தீவிரத்தை விளக்கி, இந்த விஷயத்தை யாரிடமும் சொல்ல மாட்டோம் என்று உறுதி அளித்த பிறகு ஒரு சிலர் மட்டும் வாய் திறக்கிறார்கள். இந்தப் பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிவேகமாக அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. தம்பதியரிடையே ஒரே பிரச்சனை என்றால், இருவருக்குமே ஆலோசனை வழங்குவதன் மூலம் தீர்வு காணலாம் என்றனர்.
- நண்பனின் செல்போனில் இருந்து அவனது காதலியின் ஆபாச புகைப்படங்களை அபினவ் தனது செல்போனுக்கு அனுப்பியுள்ளான்.
- அவனது காதலியை நேரில் சந்தித்து இந்த ஆபாச புகைப்படங்களை காட்டி அபினவ் மிரட்டியுள்ளான்.
உத்தரபிரதேசத்தில் தனது காதலியின் ஆபாச புகைப்படத்தை வைத்து மிரட்டிய தனது நண்பரை 16 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீரட் நகரில் உள்ள ஒரு பள்ளியில் அபினவ் என்ற சிறுவன் 11 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். அண்மையில் தனது நண்பனின் செல்போனில் இருந்து அவனது காதலியின் ஆபாச புகைப்படங்களை அபினவ் தனது செல்போனுக்கு அனுப்பியுள்ளான்
பின்னர், அவனது காதலியை நேரில் சந்தித்து இந்த ஆபாச புகைப்படங்களை காட்டி நான் சொல்வது போல நீ நடந்து கொள்ள வேண்டும் இல்லையென்றால் இந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளான்.
இதனால் பதற்றமடைந்த அந்த பெண், நடந்த சம்பவத்தை காதலனிடம் தெரிவித்தார். இதனை கேட்டு ஆத்திரமடைந்த காதலன், அபினவை காளி நதிக்கரைக்கு கூட்டிச் சென்று சுத்தியலால் தாக்கி கொலை செய்துள்ளார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலை செய்த சிறுவனை கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இளம் பெண்ணின் செல்போன் எண்ணிற்கு ஆபாச வீடியோ மற்றும் படங்கள் அனுப்பி தொல்லை கொடுத்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து பானி தேஜாவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம்,மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து விட்டு 2 குழந்தைகளுடன் ஜூப்ளி ஹல்ஸ் பகுதியில் வசித்து வருகிறார்.
இவர் டி.வி. நாடகங்கில் நடித்து வந்தார். அப்போது பானி தேஜா என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. வாலிபர் இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ள அவரிடம் விருப்பம் தெரிவித்தார். ஆனால் இளம்பெண் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து விட்டு 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறேன்.
திருமணம் செய்து கொள்ள முடியாது என மறுப்பு தெரிவித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பானி தேஜா இளம் பெண்ணின் செல்போன் எண்ணிற்கு ஆபாச வீடியோ மற்றும் படங்கள் அனுப்பி தொல்லை கொடுத்தார்.
இளம்பெண் ஜூப்ளி ஹில்ஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பானி தேஜாவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- ரெயில் நிலையங்களில் ரெயில்டெல் வழங்கும் 30 நிமிட இலவச வைஃபையில் 350 எம்.பி.க்கள் ஆபாச படங்கள் டவுன்லோட் செய்யவே பயன்படுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளன.
- விபிஎன் மற்றும் இன்னும் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்படாத சில இணையதளங்கள் மூலம் மக்கள் ஆபாச படங்களை பார்க்கின்றனர்.
புது டெல்லி:
ரெயில் பயணிகளை டிஜிட்டல் முறையுடன் இணைப்பதற்காக இந்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களில் வைஃபை வசதி அமைக்கப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த 2016ஆம் ஆண்டில் மும்பையில் முதன்முதலாக வைஃபை சேவை தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பல்வேறு ரெயில் நிலையங்களில் வைஃபை அமைக்கப்பட்டு இதுவரையில் சுமார் 6,100 ரெயில் நிலையங்களில் வைஃபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் இந்த வைஃபை சேவை பெரும்பாலும் ஆபாச வீடியோக்களை பார்க்கவும், ஆபாச வீடியோ டவுன்லோடு செய்யவும் பயன்படுத்தப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
தனியார் பத்திரிகை ஒன்று நடத்திய ஆய்வில் செகந்திராபாத் மற்றும் விஜயவாடா ரெயில் நிலையங்களில்தான் அதிகபட்சமாக ஆபாச வீடியோக்கள் டவுன்லோடு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஐதராபாத் மற்றும் திருப்பதி ஆகியவை இடம்பெற்றுள்ளன.
ரெயில் நிலையங்களுக்கு இணைய சேவை வழங்கும் ரெயில்டெல்லின் தகவலின்படி, செகந்திராபாத் மற்றும் விஜயவாடாவில் உள்ள ரெயில் நிலையங்களில் பயன்படுத்தப்படும் வைஃபையில் 35% ஆபாசப் படங்கள் டவுன்லோடு செய்யவே பயன்பட்டு வருவதாகதெரியவந்துள்ளது. அந்த ரெயில் நிலையங்களில் ரெயில்டெல் வழங்கும் 30 நிமிட இலவச வைஃபையில் 350 எம்.பி.க்கள் ஆபாச படங்கள் டவுன்லோட் செய்யவே பயன்படுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளன.
இதுகுறித்து ரெயில் டெல் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "கணிசமான எண்ணிக்கையிலான வைஃபை சேவைகள் ஆபாச வீடியோ டவுன் லோடு செய்யவே பயன்படுத்தப்படுகின்றன. நூற்றுக்கணக்கான ஆபாச இணையதளங்களை அணுக முடியாத நிலையில், விபிஎன் மற்றும் இன்னும் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்படாத சில இணையதளங்கள் மூலம் மக்கள் ஆபாச படங்களை பார்க்கின்றனர்" என்று கூறியுள்ளார்.
இன்றைய நவீன காலங்களில் இணையம் ஒரு இன்றியமையாத ஒன்றாகிவிட்ட நிலையில், அதனால் ஏற்படும் ஆபத்துகளும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. குறிப்பாக இணையம் என்பது குறித்த அடிப்படை புரிதல் இல்லாத இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் இணையத்தின் பாதிப்புகளை மட்டுமே அதிகம் அறுவடை செய்கிறார்கள்.
மறுபுறம், சிறுவர்கள் மீதான இணையவழி பாலியல் குற்றங்கள் மற்றும் சிறுவர்களை கொண்டு எடுக்கப்படும் ஆபாச படங்களும் இணையத்தில் மிகப்பெரிய தொழிலாக மாறியுள்ளது. இதுகுறித்து மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவர்கள் நல ஆர்வலரும், நோபல் பரிசு வென்றவருமான கைலாஷ் சத்யார்த்தி கூறியிருப்பதாவது:-

இதுபோன்ற சமூக விரோத அமைப்புகள் அதிநவீனத் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வரும் நிலையில், போலீசாரிடம் இன்னும் பழைய தொழில்நுட்பங்களே இருக்கின்றன. சர்வதேச அளவில் குழந்தைக் கடத்தல்காரர்கள் குறித்த விவர அறிக்கையை இண்டர்போல் அமைப்பும் உருவாக்க வேண்டும்’.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். #ChildSexualAbuse #KailashSatyarthi
சத்தீஸ்கர் மாநிலத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேடு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் ‘டேப்-லெட்’ வழங்கப்பட்டு இருக்கிறது. அதில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வருகை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படும்.
இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு இதுவரை 51 ஆயிரம் பள்ளிகளுக்கு ‘டேப்-லெட்’டுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ‘டேப்-லெட்’டுகள் இணைய தள வசதியுடன் செயல்படும்.
துர்க், சுர்குஜா, பாஸ்டர் ஆகிய மாவட்டங்களில் வழங்கிய ‘டேப்- லெட்’டுகளை ஓப்பன் செய்தவுடனேயே ஆபாச படங்கள் திரையில் தோன்றி ஓடுகின்றன.
இதுபற்றி தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. எனவே, மறு உத்தரவு வரும் வரை இந்த ‘டேப்-லெட்’டுகளை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு வழங்கிய ‘டேப்- லெட்’டில் எப்படி ஆபாச படங்கள் வந்தது? என்பது தெரியவில்லை.
இது சம்பந்தமாக சத்தீஸ்கர் மாநில தகவல் தொழில்நுட்ப துறை திட்ட மேலாளர் நிலேஷ் சோனி கூறும் போது, குறிப்பிட்ட ‘டேப்-லெட்’டுகளில் யாராவது ஆபாச படம் பார்த்திருக்க வேண்டும். அல்லது டவுன் லோடு செய்திருக்க வேண்டும்.
அதை பார்த்து கொண்டு இருக்கும் போதே சில விளம்பரங்கள் தோன்றும். அதை ‘கிளிக்’ செய்தால் இவ்வாறு ‘டேப்-லெட்’டுகளையே ஆக்கிரமித்து ஆபாச படம் தானாகவே தோன்ற ஆரம்பித்து விடும்.
இப்படித்தான ‘டேப்- லெட்’டில் ஆபாச படம் வந்துள்ளது. இவற்றை நீக்குவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்காக சென்னையில் இருந்து நிபுணர் குழு அழைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் சரி செய்தபிறகு பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் என்று கூறினார்.