search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேண்டும்"

    • பயணிகள் வலியுறுத்தல்
    • புதிய நிறுத்தங்களுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை.

    நாகர்கோவில், நவ.18-

    நெல்லையில் இருந்து திருச்சிக்கு இன்டர்சிட்டி ரெயில் கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் 15-ந்தேதி முதல் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயிலை குமரி மாவட்ட பயணிகள் பயன்படும் படியாக நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப் பட்டது. கடும் போராட்டத்தின் பலனாக 5 ஆண்டு கள் கழித்து 2017-ம் ஆண்டு ஜூலை 15-ந்தேதி முதல் நாகர்கோவில் டவுண் வழியாக திருவனந்தபுரம் வரை நீட்டிக்கப்பட்டது. இவ்வாறு நீட்டிப்பு செய்யும் போது நாகர்கோவில் டவுண் மற்றும் குழித்துறை ரெயில் நிலையங்களில் முதல் நிரந்தர நிறுத்தம் அனுமதிக்கப் பட்டது. இரணியல் ரெயில் நிலையத்தில் நிறுத்தம் குறைந்த பட்சம் தற்காலிக நிறுத்தம் கூட கொடுக்கப்படவில்லை. இரணியல் ரெயில் நிலை யத்திலிருந்து 18 கி.மீ. தொலைவில் நாகர்கோவில் ரெயில் நிலையமும், மறு மார்க்கம் 15 கி.மீ. தொலைவில் குழித்துறை ரெயில் நிலையமும் அமைந்துள்ளது.

    இந்த காலகட்டங்களில் குமரி மாவட்டத்திலிருந்து மத்திய அமைச்சர் இருந்தும் இந்த நிறுத்தம் ரெயில்வே அதிகாரிகளால் அனு மதிக்கப்படவில்லை. திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரெயில் அறிவித்து இயக்கும் போது இந்த ரெயில் இயங்கும் 456 கி.மீ. தூரத்தில் திருச்சி முதல் மதுரை வரை உள்ள 156 கி.மீ. மட்டுமே எந்த வித கிராசிங் இல்லாமல் இயங்கும் இருவழிப்பாதை யாக இருந்து வந்தது. மீதமுள்ள மதுரை முதல் திருவனந்தபுரம் வரை உள்ள 300 கி.மீ. தூரம் ஒரு வழிபாதையாக இருந்த காரணத்தால் கிரா சிங்குக்காக வேண்டி அதிக அளவில் இந்த ரெயில் பல்வேறு ரெயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டு வந்தது. இதனால் புதிய நிறுத்தங்களுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. இவ்வாறு நிறுத்தம் அனுமதி கொடுத்தால் இந்த ரெயில் சூப்பர் பாஸ்ட் என்ற அந்தஸ்தை இழந்து விடும் என்ற காரணத்துக்காக ரெயில்வே துறை மறுத்து வந்தது.

    தற்போது நிலமை மாற்றம் பெற்று மதுரை முதல் நாகர்கோவில் வரை இருவழிபாதை பணிகள் 98 சதவீத பணிகள் முடிந்து விட்டது. மீதமுள்ள பகுதி கள் இந்த 2 மாதத்திற்குள் முடிவு பெற்றுவிடும். மீத முள்ள பணிகளும் முடிவு பெற்றுவிட்டால் திருச்சியில் இருந்து புறப்படும் இந்த ரெயில் நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையம் வரும் வரை மறுமார்க்கமாக வரும் எந்த ஒரு ரெயிலுக்கும் கிராசிங் வேண்டி நிறுத்தி வைக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால் இந்த ரெயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டு பயண நேரம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த ரெயிலுக்கு இரணியல் ரெயில் நிலையத்தில் நிறுத்தம் அனுமதிக்க வேண்டும் என்று கல்குளம் தாலுகாவை சேர்ந்த பயணி கள் கோரிக்கை விடுக்கின்ற னர். கன்னியாகுமரி மாவட்டம் அதிக மக்கள் தொகை அடர்த்தி நிறைந்த மாவட்டம் ஆகையால் அடுத்த ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தொலைவை பார்க்க கூடாது. இரணியல் ரெயில் நிலையத்தில் நிறுத்தம் அனுமதிக்கப்பட்டிருந்தால் 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட மாவட்டத்தில் 3 பிரிவாக பயணிகள் பயணம் செய்ய எளிதாக இருக்கும். ரெயில்வேத் துறைக்கு அதிக வருவாய் கிடைக்கும் என்று பயணி கள் சங்கத்தினர் கூறுகின்றனர்.

    • கலந்தாய்வு கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவுறுத்தல்
    • 108 பணிகளுக்கு அனுமதி பெற்று 106 பணிகள் முடிவுற்றுள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவல கத்தில் நடந்தது. கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்று பேசியபோது கூறியதாவது:- பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு, நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் அனைத்து நகராட்சிகள், நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள குளங்களை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வளர்ச்சி பணிகளின் செயலாக்கத்தின்போது ஏற்படும் தடைகளுக்கு உடனடி தீர்வுகாண வேண்டும். பணிகளில் ஏதாவது தடைகள் மற்றும் இடர்பாடுகள் ஏற்பட்டால் அது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும். நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 2022-2023 ஆண்டில் 122 கிலோ மீட்டர் சாலைப்பணிகளுக்கு ஒப்புதல் கோரப்பட்டது. அதில் 108 பணிகளுக்கு அனுமதி பெற்று 106 பணிகள் முடிவுற்றுள்ளது. 2023-2024 நிதியாண்டில் 180 பணிகளுக்கு திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு 93 பணிகள் முடிவுற்றுள்ளது. மீதமுள்ள 93 சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் வருவாய் அலுவலர் பாலசுப்பிர மணியம், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த மோகன், பத்மநாப புரம் சப்-கலெக்டர் கவுசிக், உதவி இயக்குனர் (பேரூ ராட்சிகள்) விஜயலெட்சுமி, மாநகராட்சி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியம், முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி, மாவட்ட வழங்கல் அதிகாரி விமலா பாய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி அறிவுரை
    • பள்ளி தலைமை ஆசிரியர் நாகம்மாள் வரவேற்றார்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட தீயணைப்புத்துறை சார்பில் பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது தொடர்பாக பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. நாகர்கோவில் தீயணைப்பு துறை சார்பில் வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. பள்ளியில் விபத்தில்லாத தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    மாவட்ட உதவி தீயணைப்பு துறை அதிகாரி துரை தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் நாகம்மாள் வரவேற்றார். தாளாளர் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். பசுமை பட்டாசுகள் வெடித்தும், தீயணைப்பு வீரர்கள் பட்டாசு வடிவில் வேடமணிந்தும் மாணவ-மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி சத்யகுமார் கலந்து கொண்டு கூறியதாவது:-

    பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடும் வகையில் இப்படிப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. புத்தாடைகள் அணிந்து பட்டாசுகளை வெடிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். அரசு உத்தரவுப்படி காலை ஒரு மணி நேரமும், இரவு ஒரு மணி நேரமும் பட்டாசு வெடிக்க வேண்டும். பெரியவர்கள் மேற்பார்வையில் சிறுவர்கள் பட்டாசு வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது அருகில் ஒரு வாளி தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டிற்கு வெளியில் திறந்த வெளியில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். வீட்டின் மாடியில் பட்டாசு வெடிக்காதீர். பட்டாசு வெடிக்கும் போது தளர்வான ஆடைகளை அணியகூடாது. குடிசைகள் நிறைந்த பகுதியில் பட்டாசு வெடிக்க கூடாது. மருத்துவமனை திரையரங்கு பொதுமக்கள் கூடும் இடங்களில் பட்டாசு வெடிக்க கூடாது. பட்டாசு வெடிக்காத பட்டாசுகளை மீண்டும் வெடிக்க கூடாது. மொத்தத்தில் பட்டாசுகளை கவனமாக வெடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.பள்ளி உதவி தலைமை ஆசிரியர் முத்துக்குமார் நன்றி கூறினார்.

    • குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தீர்மானம்
    • ஒன்றிய இளைஞ ரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சசிசுபாசிங் நன்றி கூறினார்.

    இரணியல்:

    குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் திங்கள்நகரில் நடந்தது. குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்திற்கு ஒன்றிய அவைத்தலைவர் ஆன்றோசர்ச்சில் தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் விஜயன், முருகன், ரமணிரோஸ், ஏசு ரெத்தினராஜ், ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசினார்.

    குமரி மாவட்டத்தில் நடைபெற்ற இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம் மற்றும் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு குருந்தன்கோடு மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட நலிந்த கழக மூத்த முன்னோடிகள் 24 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் பொற்கிழி வழங்கிய கழக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாற்றுதல் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மனோ தங்கராஜ், குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் மகேஷ் மற்றும் அதிக அளவில் கலந்து சிறப்பித்த இளைஞர்களுக்கும், ஒன்றியத்திற்குட்பட்ட கழக நிர்வாகிகளுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    வருகிற 4, 5 மற்றும் 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்களில் குருந்தன்கோடு மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட 104 வாக்கு சாவடி மையங்களிலும் கழகத்தால் நியமிக்க பட்டிருக்கும் வாக்குச்சாவடி பாக முகவர்கள் பி.எல்.ஏ.-2, வாக்குச்சாவடிபாக முகவர்கள் குழு உறுப்பினர்கள் பி.எல்.சி., ஒன்றிய நிர்வாகிகள், பேரூர் செயலாளர்கள், ஊராட்சி பொறு ப்பாளர்கள், மாவட்ட ஒன்றிய பிரதிநிதிகள், கிளை செயலாளர்கள் முழு அளவில் பணியாற்றி அந்தந்த பகுதிகளில் உள்ள இளைஞர்கள், இளம்பெண்க ளை வாக்காளர்க ளாக சேர்க்கும் பணிகளில் முழு மூச்சாக ஈடுபடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பேரூர் செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய இளைஞ ரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சசிசுபாசிங் நன்றி கூறினார்.

    • குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தீர்மானம்
    • அருள்பிரபின் நன்றி கூறினார்.

    இரணியல்:

    குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திங்கள்நகரில் நடந்தது. குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சசிசுபாசிங் தலைமை தாங்கினார். குமரி கிழக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் பிரிட்டோசேம் முன்னிலை வகித்தார். இளைஞரணி நிர்வாகி ஸ்ரீராஜா வரவேற்றார்.

    குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசினார். குமரி மாவட்டம் வருகை தரும் தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு வழங்குவது. அழகியமண்டபத்தில் வைத்து நாளை (28-ந்தேதி) நடைபெறும் மாவட்ட இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி சார்பில் வெள்ளை சீருடையில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய துணை செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள், நெய்யூர் பேரூராட்சி தலைவி பிரதீபா, குளச்சல் சபீன், இளைஞர் அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். அருள்பிரபின் நன்றி கூறினார்.

    • பொதுமக்கள் கோரிக்கை
    • மழை காலங்களில் குண்டு குழிகளில் மழைநீர் தேங்கி நின்றது.

    கருங்கல்:

    கருங்கல் பேரூ ராட்சிக்குட்பட்டது தெரு வுக்கடை. இங்குள்ள பொட்டக்குழி சாலையில் தெருவுக்கடையில் இருந்து சாலை மிகவும் மோசமாக உள்ளது. சி.எஸ்.ஐ. சர்ச் வரை சாலை குண்டும் குழிகளும் நிறைந்து உள்ளது. இதனால் அந்த வழியே செல்பவர்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.இதுமட்டுமல்லாது மழை காலங்களில் குண்டு குழிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் பொது மக்கள் நடந்து செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். பல வருடங்களாகவே இச் சாலையில் மக்கள் நடக்க முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள்.

    இதனை சீரமைக்க வலி யுறுத்தி பேரூராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் எந்த நட வடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஆகவே போர்க்கால அடிப்படையில் நட வடிக்கை எடுத்து இந்த சாலையை சீர்செய்திட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • நிலம் வாங்குவோர் விற்போர் நலச்சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு
    • குமரி மாவட்டத்தில் 3 சென்ட், 5 சென்ட் இடங்களை பத்திரப்பதிவு செய்ய முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    நிலம் வாங்குவோர் விற்போர் நலச்சங்க குமரி மாவட்ட தலைவர் பி.டி.செல்வகுமார் தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்று அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- குமரி மாவட்டத்தில் 3 சென்ட், 5 சென்ட் இடங்களை பத்திரப்பதிவு செய்ய முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். பதிவு செய்யும் வகையில் சில தளர்வுகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். இதனால் குமரி மாவட்டத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள் சொந்த வீடுகள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக திருமணம், படிப்பு, தொழில், மருத்துவ தேவைகள் ஆகியவைகளுக்கு கூட நிலங்களை விற்க முடி யாத நிலை உள்ளது. 2016-க்கு பிறகு வாங்கிய நிலங்களை பிரிப்பதற்கோ, விற்பதற்கோ, வீடு கட்டுவதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது. 22-ஏ என்கிற பெயரில் ஏழை, எளிய மக்கள் வாங்கிய இடங்களுக்கு அங்கீகாரம் கொடுக்காமல் மறு பத்திரப்பதிவு செய்ய முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்கள். இதனை தளர்வு படுத்தி ஏழை, எளிய மக்களின் நலனை கருதி பத்திரப்பதிவை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விவசாய சங்கம் கோரிக்கை
    • தமிழக முதல்வர் மற்றும் விவசாயத்துறை அமைச்சர் ஆகியோருக்கும் கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

    கருங்கல்:

    மிடாலம் ஊராட்சி பகுதியில் உள்ளது பாறை குளம். மிடாலம் பி கிராமத்தில் புல. எண். 219/3- உள்ள இக்குளம் 2.45 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இக்குளத்தில் சிற்றாறு பட்டணங்கால் தண்ணீரை தேக்கி வைத்து அப்பகுதி விவசாயிகள் விவசாயத்திற்கு பயன் படுத்தி வருகின்றனர். இக்குளத்து நீரை நம்பியே அப்பகுதியில் பல ஏக்கர் நிலங்களில் வாழை, தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது.மட்டுமல்லாமல் மிடாலம் ஊராட்சி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வருவதும் இப்பாறைகுளமே.

    இந்நிலையில், சில தனிநபர்களின் நிலத்துக்கு சாலை கொண்டு செல்வ தற்காக இந்த குளத்தின் நடுப்பகுதியில் பக்கச்சுவர் எழுப்பி இந்த குளத்துக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர். நீர் நிலைகளுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் பாதுகாக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை அப்பட்டமாக மீறியும், பொதுப்பணித்துறை அனுமதி பெறாமலும் குளத்தின் நடுவே தடுப்பு சுவர் எழுப்பி உள்ள செயல் அப்பகுதி விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படும் என தெரிந்தும் இப்பணியை துவங்கிய கடமை தவறிய அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிள்ளியூர் வட்டார விவசாய ஆலோ சனை குழு தலைவர் கோபால் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு பொதுமக்கள், விவசாயிகள் சார்பாக கோரிக்கை விடுத்து உள்ளார். மேலும் இது சம்பந்தமாக தமிழக முதல்வர் மற்றும் விவசாயத்துறை அமைச்சர் ஆகியோருக்கும் கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

    • கலெக்டரிடம் செ.தாமோதரன் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு
    • கீரணத்தம் பகுதியில் வீடு கட்டி தரவும் கலெக்டரிடம் வலியுறுத்தல்

    கோவை,

    கோவை கிணத்துக்கடவு எம்.எல்.ஏ தாமோதரன் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    காயிதேமில்லத் காலனியில் வசிக்கும் அனைவருக்கும் பட்டா வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் இவை அரசு பதிவேட்டில் பதிவாகவில்லை. எனவே அந்த பட்டாக்களை உடனடியாக பதிவேட்டில் இடம்பெற செய்யவேண்டும்.

    ஆத்துப்பாலத்திற்கு கீழ் செல்லும் சாலையில் மழைநீர் வடிகால் வாய்க் கால் அமைக்கப்படுகிறது. அவை ஒரு சில இடங்களில் தாழ்வாகவும், உயரமாகவும் உள்ளது. இதனால் காயிதே மில்லத் காலனியில் உள்ள சுமார் 500 குடும்பங்கள் வெளியில் செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அதனை சரி செய்ய வேண்டும்.

    மேலும் காயிதேமில்லத் காலனிக்குள் செல்வதற்கான சரிவுதளத்தை சரியாக அமைக்க வேண்டும். மேம்பாலத்தில் இருந்து காயிதேமில்லத் காலனிக்கு இறங்குதளம் நேரடியாக வருவதால், அங்கு வசிக்கு மக்கள் அடுத்த சாலைக்கு செல்ல, சுமார் 2 கி.மீ. தூரம் சுற்றிவர வேண்டி உள்ளது.

    இதனால் அவசர காலத்தில் கோவைக்கு செல்ல மிகவும் சிரமம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே இறங்கும் தளத்தில் கீழ்ப்பாதை அமைத்து, அந்த வழியாக ஆம்புலன்ஸ், பள்ளிகுழந் தைகள் அடுத்த சாலைக்கு செல்வதற்கு பாதை அமைத்து கொடுக்க வேண்டும்.

    கோவை மாநகராட்சி 99-வது வார்டு, சித்தன்னபு ரம் பகுதியில் உள்ள வெள்ளலூர் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டபோது அந்தப் பகுதியில் இருந்த வீடுகள் இடிக்கப்ப ட்டன. எனவே அவர்கள் வீடுஇன்றி சிரமப்படுகிறார்கள். இதுகுறித்து ஏற்கெனவே கோரிக்கை மனு தரப்பட்டு உள்ளது. அப்போது கீரணத்தம் பகுதியில் வீடு கட்டி தருவதாக கலெக்டர் கூறியிருந்தார்.

    ஆனால் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அவர்களுக்கு உடனடியாக மாற்றுவீடு ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

    மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் கிராந்திகுமார், உடனடியாக நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.

    அப்போது எச்.எஸ்.ஹீலர், கோவை ஜலீம், எம்.எச்.அப்பாஸ், அக்பர்கான், இப்ராஹிம், குட்டி, கோட்டைசேட், முஹம்மது, காளிமுத்து ஆகியோர் உடன் இருந்தனர்.

    • வெளியுறவுத்துறை மந்திரியிடம் விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை
    • அதிர்ஷ்டவசமாக மீனவர்கள் அனைவரும் உயிர்தப்பி கப்பல் மூலம் மாலத்தீவுக்கு சென்றனர்.

    நாகர்கோவில்:

    விஜய்வசந்த் எம்.பி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- குமரி மாவட்டம் இரவிபுத்தன்துறையை சேர்ந்த 7 மீனவர்கள் உள்பட 12 மீனவர்கள் கடந்த 11-ந்தேதியன்று மாலத்தீவு அருகே ஆழ்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது, அந்நாட்டின் இழுவை கப்பல் மீன வர்களின் படகு மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில் படகு மற்றும் அதில் இருந்த விலை உயர்ந்த பொருட்கள் கடலில் முழ்கின. அதிர்ஷ்டவசமாக மீனவர்கள் அனைவரும் உயிர்தப்பி கப்பல் மூலம் மாலத்தீவுக்கு சென்றனர்.

    அந்நாட்டு அரசு அவர்களை கைது செய்தது. பின்னர் அவர்களை விடுவிக்க இந்திய தூதரகத்தை நான் தொடர்பு கொண்டு நடவடிக்கை மேற்கொண்டேன். மீனவர்கள் தாயகம் திரும்பி வரவும் நடவடிக்கை எடுத்தேன். பின்னர் ஊர் திரும்பிய மீனவர்களை சந்தித்து அவர்கள் கோரிகை் கையை கேட்டறிந்தேன். அப்போது சேதம் அடைந்த படகு உள்பட ரூ.1½ கோடி மதிப்பில் நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதனை கப்பல் நிறுவனத்திடம் இருந்து பெற்று தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதைத்தொடர்ந்து நான் நேற்று டெல்லி சென்று வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்தேன். அப்போது மாலத்தீவு கப்பல் மோதி படகு விபத்துக் குள்ளான மீனவர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என மனு அளித்தேன்.

    இதுதொடர்பாக மாலத்தீவு அரசை தொடர்பு கொண்டு நிறுவனத்திடம் இருந்து நஷ்டஈடு பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மந்திரி உறுதியளித்துள்ளார். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    • முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்துதுறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
    • குளக்கரைகளை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், எதிர்வரும் வடகிழக்கு பருவ மழை காலத்தை எதிர் கொள்ள தயார்நிலை யில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி, பேசியதாவது:- குமரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளங்களில் தேவையான தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்கவும், பெருவெள்ள காலங்களில் பாதிப்பு ஏற்படக்கூடிய கால்வாய் மற்றும் குளக்கரைகளை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. கடலோரப்பகுதிகளில் மற்றும் வெள்ள அபாய பகுதிகளில் பாதிக்கப்படும் நபர்களை மீட்க தேவையான மீட்பு உபகரணங்களை தயார்நிலையில் வைக்க மீன்வளத்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு தெரிவிக்கப்பட்டது.

    தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை கண்டறிந்து உடன் நட வடிக்கை எடுக்கவும், மேலும் டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளவும் பொது சுகாதாரத்துறையினருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்களின் உயிருக்கும், உடமைக்கும் ஆபத்தான நெடுஞ்சாலைகள், பள்ளிகள் மற்றும் பிற பகுதிகளில் நிற்கும் மரங்களை சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் அகற்றப்பட்டதை உறுதி செய்ய அனைத்து தாசில் தார்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் பருவமழை காலங்களில் சீரமைப்பு பணிகளுக்கு தேவையான மணல் மூட்டைகள், மரம் அறுக்கும் எந்திரங்கள், ஜே.சி.பி., மின்மோட்டார் போன்றவற்றை போதுமான அளவில் தயார்நிலையில் வைக்கவும், தற்காலிக தங்கும் முகாம்களை உடனடியாக பார்வையிட்டு அவற்றில் போதிய அடிப்படை வசதிகள் உள்ளனவா? என்பதை உறுதி செய்யவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தர விடப்பட்டது. பழுதான நிலையில் உள்ள அபாயகர மான கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்த சம்மந்தப் பட்ட அலுவலருக்கு அறிவு றுத்தப்பட்டது. 15 தினங்களுக்கு ஒருமுறை ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி ஆகிய வற்றில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகளை குளோரினேசன் செய்ய அதிகாரிகளுக்கு அறி வுறுத்தட்டது.

    மரங்கள் மற்றும் மரக்கிளைகள் மின்கம்பிகள் மீது தொட்ட நிலையில் காணப்பட்டால் மின்சார வாரியம் மூலம் மரம் மற்றும் மரக்கிளைகளை வெட்டி அகற்றவும், மின்பழுது தொடர்பான புகார்களை தெரிவிக்க 24 மணி நேரமும் இயங்கும் 9498794987 என்ற தொலைபேசி எண் செயல்பட்டு வருவதை பொதுமக்களுக்கு தெரிவிக்க மின்சாரவாரிய அலுவ லருக்கு அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் வீடு மற்றும் அலுவலகங்களின் மேல் பகுதியில் குப்பைகள் மற்றும் மரத்தின் இலைகள் காணப் பட்டால் அவற்றை அப்புறப் படுத்தி தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு மழைக் காலங்களில் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து பருக வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பிளாஸ்டிக் பாட்டில், டயர்கள், தேங்காய் சிரட்டைகள் இவற்றில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி ஏற்பட்டு டெங்கு போன்ற காய்ச்சல்கள் பரவ வாய்ப்புள்ளதால் அவற்றை அப்புறப்படுத்தி எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காய்ச்சல், சளி இது போன்ற அறிகுறிகள் தென் பட்டால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சென்று பரிசோதனை மேற் கொள்ளுமாறு தெரிவிக்கப் பட்டுள்ளது. கால்நடை களுக்கு நோய்தொற்று ஏற்பட்டால் கால்நடை மருத்துவரை அணுகவும் மற்றும் கால்நடைகள் இறந்தால் அவற்றை உட னடியாக அப்புறப்படுத்தவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மழை வெள்ள பாதிப்பு சேதங்கள் தொடர் பான 24 மணி நேரமும் இயங்கும் மாவட்ட கட்டுப் பாட்டு அறை கட்டணமில்லா தொலைப்பேசி எண் 1077 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம்.

    பருவமழை மற்றும் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் ஆறு மற்றும் கடலோரப் பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கவும், சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை மேற்படி பகுதிகளுக்கு அழைத்துச்செல்லாமல் தற்காத்துக்கொள்ளவும், தன்னார்வலர்கள் தங்கள் பகுதிகளில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் கேட்டுக்கொள் ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பால சுப்பிரமணியம், பத்மநாப புரம் சப்-கலெக்டர் கவுசிக், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், உதவி கலெக்டர் (பயிற்சி) ராஜட் பீட்டன், கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சங்கரநாரா யணன், செயற்பொறியாளர் (நீர்வளத்துறை) ஜோதிபாசு, தோட்டக்லைத்துறை துணை இயக்குநர் ஷீலா ஜாண், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கீதா உட்பட அனைத்துத்துறை சார்ந்த உயர் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. அறிக்கை
    • பாலமோர் சாலைக்காக விட்டு கொடுக்கும் இடத்திற்கு போதுமான இழப்பீட்டினை வழங்குவதற்கு மாநகராட்சியால் இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பாலமோர் ரோட்டில் இரு பக்கமும் 10 அடி அகலப்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மேயர், வணிகர்கள், கடை உரிமையாளர்களை அழைத்து பேசி உள்ளனர். அப்போது சாலையை விரிவுபடுத்துவதற்கு ஏதுவாக 10 அடி அகலத்தில் இடத்தை விட்டு கொடுக்கும்படி கேட்டுள்ளார்கள். மேலும் பாலமோர் சாலைக்காக விட்டு கொடுக்கும் இடத்திற்கு போதுமான இழப்பீட்டினை வழங்குவதற்கு மாநகராட்சியால் இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் சாலையை விரிவுபடுத்த இடம் தரவில்லை என்றால் கட்டிடத்தின் மேல் நகர் ஊரமைப்பு திட்டம் 56, 57-ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு தங்கள் கட்டிட உபயோகம் நிறுத்தப்படும் என்றும் அச்சுறுத்தி வருகின்றனர்.மேலும் இடத்தை விட்டு தர வணிகர்கள் மற்றும் கடை உரிமை யாளர்கள் சம்ம தித்து விட்டதாக உண்மைக்கு மாறாக வெளியிட்டுள்ளார்கள். சாலை விரிவாக்கத்திற்கு இடம் விட்டு தர மாட்டோம் என்று வணிகர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் கூறவில்லை. மேற்கண்ட இடத்திற்கான இட மதிப்பீட்டில் இழப்பீடு வழங்கினால் அவர்கள் தருவதற்கு தயாராக உள்ளார்கள்.

    அரசு இந்த பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதோடு மேற்கண்ட சாலையினை அகலப்படுத்துவதற்கு தேவையான இடத்திற்குரிய இன்றைய மதிப்பீட்டில் இழப்பீட்டு தொகையினை அனுமதித்து வணிகர்கள் மற்றும் கடை உரிமை யாளர்களின் நலனை பாதுகாத்திட வேண்டுமென அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×