என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேண்டும்"

    • விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை
    • தமிழக நாடார் சங்க நிர்வாகிகளுடன் மத்திய விமான போக்கு வரத்துத்துறை செயலாளர் ராஜீவ் பன்சாலை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி நாடாளு மன்ற தொகுதி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் தமிழக நாடார் சங்க நிர்வாகிகளுடன் மத்திய விமான போக்கு வரத்துத்துறை செயலாளர் ராஜீவ் பன்சாலை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலைய கட்டிடத்துக்கு தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் வருகிற 8-ந் தேதி புதிதாக திறக்கப்பட இருக்கும் விமான நிலைய கட்டிடத்தில் 'பெருந்த லைவர் காமராஜர் விமான நிலையம்' என்ற பெயர் பலகை இடம்பெற வேண்டும்.

    மற்ற விமான நிலை யங்களில் தலைவர்களுக்கு சிலை உள்ளது போல் சென்னை உள்நாட்டு விமான நிலைய வளாகத்தில் காமராஜருக்கு முழு உருவ வெண்கல சிலை அமைத்து தரவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    விஜய் வசந்த் எம்.பி.யுடன், தமிழ்நாடு நாடார் சங்கபொதுச் செயலாளர் வி.எல்.சி. ரவி, தலைமை நிலைய செயலாளர் பொன் ராஜ், கொள்கை பரப்பு செயலாளர் சுரேஷ்மாறன், மாநில ஒருங்கிணைப்பாளர் அனந்தகுமார், மராட்டிய மாநில் தலைவர் தெய்வ குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • தலைவர்கள், பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் சிறப்புரையாற்றினர்.
    • மயில், மான், காட்டுப்பன்றிகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    பு.புளியம்பட்டி,

    ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டியில் கொங்கு மண்டல விவசாயிகள் மாநாடு நடைபெற்றது. மாநிலத் தலைவர் வேணு கோபால் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் உதயகுமார் மற்றும் மாநில அமைப்பாளர் ராம்தாஸ் ஆகியோர் முன்னி லை வகித்தனர்.

    முன்னதாக வட்டாரத் தலைவர் சுப்பு வரவேற்றார்.

    கூட்டத்தில் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் மற்றும் அனைத்து மாவட்ட, வட்டார பொறுப்பாளர்கள். முன்னாள் துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளியங்கிரி, தும்பூர் போஜான் மாவட்ட சிறு விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் கிட்டப்பா ரெட்டி, தமிழக நதிகள் இணைப்பு விவசாயி சங்க துணை தலைவர் பழனி ச்சாமி, தாசில்தார் (ஓய்வு) அன்னூர் கோபால்சாமி, சண்முகம், கட்சி சார்பற்ற விவசாய சங்க தலைவர் நடராஜன், புளியம்பட்டி ஆசிரியை ஆனந்தி, துரை சாமி மற்றும் அனைத்து தலைவர்கள், பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் சிறப்புரையாற்றினர்.

    இக்கூட்டத்தில் மயில், மான், காட்டுப்பன்றிகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சனைக்கு முற்று ப்புள்ளி வைக்க வேண்டும். கொங்கு மண்டலத்தில் 20 வருடங்களுக்கு மேலாக இருக்கும் வன விலங்குகள் பிரச்சனைக்கு தீர்வு காணாமல் வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தினை பயன்படுத்துவது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல உள்ளது.

    மேலும் மயில் மற்றும் வனவிலங்குகள் எண்ணி க்கை பெருகி விட்டது. இதனால் விவசாயிகளுக்கு பயிர் சேதம் மட்டுமல்லாமல் உயிர் சேதமும் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க அரசு விரைந்து தீர்வு காண வேண்டும். இதே போல் யானை, காட்டுப்பன்றி, மான், காட்டெருமை போன்ற வனவிலங்குகள் தாக்கி உயிரிழந்த குடும்பத்தில் ஒருவருக்கு கல்வி தகுதி அடிப்படையில் அரசு பணி வழங்கிட வேண்டும்.

    பயிர் சேதம் ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்து விளை விக்கும் வன விலங்குகளால் ஏற்படும் உயிர் சேதத்துக்கும் மற்றும் விளை நிலங்களில் பறவைகள் விலங்குகள் இறந்து கிடந்தாலோ விவசாயிகள் மீது எந்த நட வடிக்கையும் எடுக்கக் கூடாது.

    மேலும் இது குறித்து விவசாயிகள் மீது நட வடிக்கை எடுத்தால் விவ சாயிகளை ஒன்று திரண்டு போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தந்து விவசாயிகள் காப்பாற்றி பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படுத்தும் அரசியல் கட்சிக்கு வருகிற பாராளுமன்ற தேர்தலில் விவசாயிகள் ஆதரவு தரப்படும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

    முடிவில் மாவட்டச் செயலாளர் சுப்பிரமணி நன்றி கூறினார்.

    மரக்கன்றுகள் நடும் முகாமில் அமைச்சர் மனோதங்கராஜ் வேண்டுகோள்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் வகையில் தூத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கடற்கரை பகுதியில் சிறப்பு முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். விஜய் வசந்த் எம்.பி., ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் மனோ தங்கராஜ் முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தூத்தூர் ஊராட்சிக்குட்பட்ட, பூத்துறை காருண்யபுரம் கடற்கரை பகுதியில் 'வனமே நம் வளமே" என்ற தலைப் பில் குமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் சுமார் 12 கி.மீ. அளவில் பனைமர விதைகள் மற்றும் புன்னை, தென்னை, பூவரசு உள்ளிட்ட மரக்கன்றுகள் நடும் முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. முகாமில் மாவட்டம் முழு வதும் ஊராட்சி பகுதியில் மொத்தம் 5100 மரக்கன்றுகள் நடப்படவுள்ளது.

    மேலும் நம்ம ஊரு சூப்பரு பிரசாரம் மூலம், கிராமப்பு றங்களை சுற்றுச்சூழல் தூய்மையான சுற்றுச்சூழல் கொண்ட கிராமங்களாக மாற்றவும், வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும், திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை நடைமுறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிகளை தடை செய்வது குறித்து மக்களுக்கு விழிப் புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் நெகிழி பொருட் களுக்குரிய மாற்றுப் பொருட்களை பயன்படுத்து வதை ஊக்குவித்தல், பாதுகாப்பான குடிநீர், திரவக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் நீர் பாது காப்பு மற்றும் தண்ணீரை மறுபயன்பாடு செய்வது தொடர்பான பணிகளை மேற்கொள்வது இத்திட்டத் தின் குறிக்கோள் ஆகும். முகாம்களில் கலந்து கொண்ட அனைத்து பொது மக்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் குமரி மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்று வதற்கான முன்னெடுப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முகாம்களில் மாவட்ட வன அலுவலர் இளை யராஜா, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (நிலமெடுப்பு) ரேவதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்கு நர் பாபு, உதவி இயக்கு நர் (ஊராட்சிகள்) சாந்தி, தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ், தக்கலை கல்வி மாவட்ட ஒருங்ணைப்பாளர் ஷோபா, கிள்ளியூர் தாசில்தார் அனிதா குமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் டேவிட் ஜெயசிங், கிறிஸ்டோபர் ராஜேஷ், ரெமோன் மனோ தங்கராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கனிமொழி எம்.பி. பேச்சு
    • ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கலைஞர் பிறந்தநாள் நிகழ்வுகளை ஓராண்டுக்கு தி.மு.க. மற்றும் அரசு சார்பில் நடத்த முதல்-அமைச்சர் உத்தரவிட்டி ருக்கிறார். சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் பேசும்போது வரும் நாடாளு மன்ற தேர்தலுக்கு நம்மை ஆயத்தப்படுத்தி கொள்ள வேண்டும் என்று அன்பு கட்டளை விடுத்துள்ளார். யார் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்பதை நாம் புரிந்து கொண்டு செயல்பட வேண்டிய தேர்தல் என்று அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கிறார். மிகப்பெரிய வெற்றியை பெற்று தருவதுதான் கலைஞருக்கு நாம் தரும் நூற்றாண்டு பரிசாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

    சிலர் இந்த பகுதி எல்லாம் வெற்றி பெற்று விடலாம் என கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். அக்கனவு பலிக்காது. இங்கு மீண்டும் தி.மு.க. அல்லது தி.மு.க. கூட்டணி வேட்பாளரை தவிர யாரும் வெற்றி பெற்று விடக்கூடாது என்பதற்காக ஒரு ஆய்வு நடத்தி இருக்கி றோம். தி.மு.க. மகளிர் அணியில் இன்னும் அதிகமான பெண்களை இணைக்க வேண்டும். அவர்களை செயல்பட கூடியவர்களாக மாற்ற வேண்டும். அதற்கான வாய்ப்பை அவர்களுக்கு தர வேண்டும். இளைஞர்கள், மாணவர்கள் தி.மு.க.வில் அரசியலை தொடங்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.

    கலைஞர் கருணாநிதி மற்றும் அண்ணா வழியில் வந்த தி.மு.க. அரசு தமிழ கத்தின் சுயமரியாதையை என்றும் காக்கும். தமிழகத்தின் உரிமை மற்றும் அதன் அடையாளத்தை பாதுகாப்பதில் தி.மு.க. அரசுக்கு நிகர் யாருமில்லை என்பது மக்களுக்கு தெரி யும். தி.மு.க. தமிழ்நாட்டுக்கு என்ன செய்திருக்கிறது என்பதை சொல்ல கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் மூலம் வாய்ப்பு கிடைத்தி ருக்கிறது. எதிர் அணியினர் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பொய் செய்திகளை பரப்பு கிறார்கள். அதை முறிய டிக்கும் வகையில் நாம் நேரடியாக மக்களை சந்தித்து உண்மைகளை எடுத்துக்கூற வேண்டும். கட்சிப்பிரதிநிதிகள், தொண்டர்கள் தேர்த லுக்கான பணிகளை தீவிர படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக தி.மு.க. அலுவலகத்தின் முன்பகுதி யில் உள்ள கலைஞர் சிலைக்கு கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ், மாநக ராட்சி மேயர் மகேஷ், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், மாவட்ட பொருளாளர் கேட்சன், மாநில நிர்வாகிகள் ஜோசப் ஸ்டாலின், நசரேத் பசலி யான், தில்லை செல்வம், பாபு வினி பிரட், தாமரை பாரதி, தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவம், ஆர்.எஸ்.பார்த்தசாரதி, துணை மேயர் மேரி பிரின்சிலதா, ஒன்றிய செயலாளர்கள் பாபு, சுரேந்திர குமார், மாநகராட்சி மண்டல தலைவர்கள் ஜவகர், அகஸ்டினா கோகிலவாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில் வந்த கனிமொழி எம்.பி.க்கு நாகர்கோவில் சுற்றுலா மாளிகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்துள்ளது. பெண்கள் மற்றும் ஏழை களுக்கு தி.மு.க.பாதுகாப்பு அரணாக விளங்கி வருகிறது. இந்தியாவில் உள்ள மாநி லங்களில் தமிழ்நாடு வளர்ச்சி பணியில் ஒரு முன் உதாரணமாக விளங்கி வரு கிறது. தமிழக கவர்னர் தொடர்ந்து அரசியல்வாதி போல் செயல்பட்டு வரு கிறார். தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக அவர் கருத்துக் களை தெரிவித்து வருகிறார். இதனை தமிழக மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுகுறித்து மத்திய அரசிடம் தெரிவித்தும் கவர்னர் மீது எந்த நடவடிக்கை எடுக்கவோ கண்டிக்கவோ இல்லை என்பதுதான் வருத்தம் அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல்வேறு துறை சார்ந்த திட்டங்களில் விவசாயிகள் இணைந்து பயன்பெற உருவாக்கப்பட்டது.
    • உள்ளிட்ட பல துறையின் திட்டங்களில் பயனடைய வாய்ப்பு வழங்கப்படும்.

    ஈரோடு, 

    வேளாண் உதவி இயக்குனர் மா.சாமுவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வேளாண் அடுக்கு திட்டம் தமிழக அரசின் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களில் விவசாயிகள் இணைந்து பயன்பெற உருவாக்கப்பட்டது.

    இத்திட்டத்தில் இணைய கிராம நிர்வாக அலுவலகம், வட்டார வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலகத்தை அணுகி விவசாயிகள் தங்கள் ஆதார் எண், புகைப்படம், வங்கி கணக்கு எண், நில உரிமை ஆவணங்களுடன் சென்ற கிரையன்ஸ் என்ற இணையத்தில் பதிவேற்ற வேண்டும்.

    திட்டத்தில் இணைந்தவர்களுக்கு வேளாண் துறை, கூட்டுறவு, பட்டு வளர்ச்சி உள்ளிட்ட பல துறையின் திட்டங்களில் பயனடைய வாய்ப்பு வழங்கப்படும். நிதி திட்ட பலன்கள் ஆதார் எண் அடிப்படையில் நேரடியாக பண பரிமாற்றம் மூலம் விவசாயி வங்கி கணக்கில் வரவாகும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுகோள்
    • மலைவாழ் கிராமங்களில் உள்ள கட்டிடங்களை உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நாஞ்சில் கூட்டரங்கில், பல்வேறு துறைகள் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து, துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் பேசியதாவது:- குமரி மாவட்டத்தில் பல் வேறு துறைகள் சார்பில் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்தும், முடிவடைந்த பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மேலும், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் முன்வைக்கும் கோரிக்கையினை உடனுக்கு டன் ஆய்வு மேற்கொண்டு, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்போது மழைக்காலம் என்பதால் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பள்ளி கட்டிடங்களின் உறுதி தன்மையினை பொதுப் பணித்துறை, வருவாய் துறை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு பழுதடைந்த கட்டிடங்களை சீரமைத்திட உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    குறிப்பாக மலைவாழ் கிராமங்களில் உள்ள கட்டிடங்களை உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அங்கன்வாடி மையங்களில் மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும் கண்காணிக்க துறை சார்ந்த அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு துறைகளின் சார்பில் நடை பெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் இளைய ராஜா, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், மாவட்ட வழங்கல் அலுவலர் விமலா ராணி, கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் நாகராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினி, மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, உதவி இயக்குநர்கள் விஜயலெட்சுமி (பேரூராட்சிகள்), சாந்தி (கிராம ஊராட்சிகள்) உட்பட அனைத்துத்துறை சார்ந்த உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • இந்தியாவில் தென்கோடி முனையில் அமைந்துள்ள கன்னியாகுமரி உலகப்புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழ்கிறது.
    • மங்களூர் மற்றும் கொங்கன் பகுதியிலிருந்து கன்னியாகுமரிக்கு ஒரு நேரடி ரயில் சேவை கூட இல்லாதது வேதனை அளிக்கிறது.

    கன்னியாகுமரி:

    முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய ரெயில்வே மந்திரி மற்றும் அதிகாரிகளுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

    அதில், இந்தியாவில் தென்கோடி முனையில் அமைந்துள்ள கன்னியாகுமரி உலகப்புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழ்கிறது.ஆனால் மங்களூர் மற்றும் கொங்கன் பகுதியிலிருந்து கன்னியாகுமரிக்கு ஒரு நேரடி ரயில் சேவை கூட இல்லாதது வேதனை அளிக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து பக்தர்கள், பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கர்நாடகா மாநிலத்தில் உள்ள 3 முக்கிய கோவில்களான கொல்லூர் முகாம்பிகை கோவில், சிருங்கேரி சாரதா கோவில் மற்றும் தர்மஸ்தலாவுக்கு சென்று தரிசனம் செய்ய விரும்புகிறார்கள். ஆனால் கன்னியாகுமரியிலிருந்து ரயில் மூலம் செல்ல முடியாத நிலை உள்ளது.

    அதே நேரத்தில் திருவனந்தபுரம்-மங்களூர் இடையே தினசரி 3 இரவு நேர ரயில்கள் (16629/16630, 16603/16604 மற்றும் 16347/16348) இயக்கப்பட்டு வருகிறது. தற்போது கன்னியாகுரி மாவட்ட மக்கள் திருவனந்தபுரம் வரை பஸ்சில் பயணம் செய்து அங்கிருந்து ெரயிலில் பயணம் செய்கின்றனர்.

    இந்த 3 ெரயில்களில் திருவனந்தபுரம் - மங்களூர் விரைவு ரயிலை (16347/ 16348) மட்டும் கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும். இந்த ரயில் இயக்கப்படும் போது, கன்னியாகுமரியிலிருந்து சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு இரவு 7 மணிக்கு புறப்பட்டு செல்லும் வகையிலும் மங்களூரிலிருந்து புறப்பட்டு வருகின்ற ரெயில், சூரிய உதயத்தை காண்பதற்கு ஏதுவாக காலை 6 மணிக்கு முன்பாக கன்னியாகுமரி வந்து சேரும் வகையிலும் இயக்கப்ப டவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகாரிகளுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவுரை
    • ஊராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    கன்னியாகுமரி மாவட்டம், மேல்புரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சித்திட்ட பணிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அனைத்து மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    அதனடிப்படையில், மேல்புறம் ஊராட்சி ஒன்றி யம் முழுக்கோடு ஊராட்சிக்கு ட்பட்ட பகுதியில் ரூ.35 லட்சம் மதிப்பில் புண்ணியம் மாத்தூர்கோணம் சாலை பணிகளும், வெள்ளாங்கோடு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பில் சிதறால் பட்டன்விளை ஆட்டுக்கடவு சாலை பணிகளும், ரூ.35 லட்சம் மதிப்பில் பனிச்சமூடு கிருஷ்ணன்கோவில் சாலை பணிகளும், ரூ.38 லட்சம் மதிப்பில் வெள்ளாங்கோடு, செட்டிவிளை (பள்ளி கோணம் ஆர்.சி.சர்ச் சாலை) சாலை பணிகளும், மாஞ்சாலுமூடு பகுதியில் ரூ.46 லட்சம் மதிப்பில் கைதகம் படப்பச்சை சாலை பணிகளும், மலையடி ஊராட்சிக்குட்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பில் காங்கோடு சாணி சாலை பணிகளும், ரூ.24 லட்சம் மதிப்பில் உத்திரங்கோடு சண்டிப் பாறை சாலை பணிகளும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    அதனைத்தொடர்ந்து மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வன்னியூர் ஊராட்சிக் குட்பட்ட செழுவன்சேரி-மஞ்சவிளை சாலை, துப்பிறமலை சாலை பணிகளும், மருதங்கோடு ஊராட்சிக்குட்பட்ட காணாகும் கொடி யூர்க்கோணம் சாலை பணிகளும், விளவங்கோடு ஊராட்சிக்குட்பட்ட மடிச்சல் சாட்டுமுக்கு சாலைப்ப ணிகளும், முழுக்கோடு, வெள்ளாங்கோடு ஆகிய ஊராட்சிகளில் முதல்-அமைச்சர் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3.6 கோடி மதிப்பிலான சாலை பணிகளும் தொடங்கி வைக்கப் பட்டுள்ளது.

    இப்பணிகள் அனைத்தையும் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சிகளில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. அறிக்கை
    • பாலமோர் சாலைக்காக விட்டு கொடுக்கும் இடத்திற்கு போதுமான இழப்பீட்டினை வழங்குவதற்கு மாநகராட்சியால் இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பாலமோர் ரோட்டில் இரு பக்கமும் 10 அடி அகலப்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மேயர், வணிகர்கள், கடை உரிமையாளர்களை அழைத்து பேசி உள்ளனர். அப்போது சாலையை விரிவுபடுத்துவதற்கு ஏதுவாக 10 அடி அகலத்தில் இடத்தை விட்டு கொடுக்கும்படி கேட்டுள்ளார்கள். மேலும் பாலமோர் சாலைக்காக விட்டு கொடுக்கும் இடத்திற்கு போதுமான இழப்பீட்டினை வழங்குவதற்கு மாநகராட்சியால் இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் சாலையை விரிவுபடுத்த இடம் தரவில்லை என்றால் கட்டிடத்தின் மேல் நகர் ஊரமைப்பு திட்டம் 56, 57-ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு தங்கள் கட்டிட உபயோகம் நிறுத்தப்படும் என்றும் அச்சுறுத்தி வருகின்றனர்.மேலும் இடத்தை விட்டு தர வணிகர்கள் மற்றும் கடை உரிமை யாளர்கள் சம்ம தித்து விட்டதாக உண்மைக்கு மாறாக வெளியிட்டுள்ளார்கள். சாலை விரிவாக்கத்திற்கு இடம் விட்டு தர மாட்டோம் என்று வணிகர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் கூறவில்லை. மேற்கண்ட இடத்திற்கான இட மதிப்பீட்டில் இழப்பீடு வழங்கினால் அவர்கள் தருவதற்கு தயாராக உள்ளார்கள்.

    அரசு இந்த பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதோடு மேற்கண்ட சாலையினை அகலப்படுத்துவதற்கு தேவையான இடத்திற்குரிய இன்றைய மதிப்பீட்டில் இழப்பீட்டு தொகையினை அனுமதித்து வணிகர்கள் மற்றும் கடை உரிமை யாளர்களின் நலனை பாதுகாத்திட வேண்டுமென அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்துதுறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
    • குளக்கரைகளை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், எதிர்வரும் வடகிழக்கு பருவ மழை காலத்தை எதிர் கொள்ள தயார்நிலை யில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி, பேசியதாவது:- குமரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளங்களில் தேவையான தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்கவும், பெருவெள்ள காலங்களில் பாதிப்பு ஏற்படக்கூடிய கால்வாய் மற்றும் குளக்கரைகளை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. கடலோரப்பகுதிகளில் மற்றும் வெள்ள அபாய பகுதிகளில் பாதிக்கப்படும் நபர்களை மீட்க தேவையான மீட்பு உபகரணங்களை தயார்நிலையில் வைக்க மீன்வளத்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு தெரிவிக்கப்பட்டது.

    தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை கண்டறிந்து உடன் நட வடிக்கை எடுக்கவும், மேலும் டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளவும் பொது சுகாதாரத்துறையினருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்களின் உயிருக்கும், உடமைக்கும் ஆபத்தான நெடுஞ்சாலைகள், பள்ளிகள் மற்றும் பிற பகுதிகளில் நிற்கும் மரங்களை சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் அகற்றப்பட்டதை உறுதி செய்ய அனைத்து தாசில் தார்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் பருவமழை காலங்களில் சீரமைப்பு பணிகளுக்கு தேவையான மணல் மூட்டைகள், மரம் அறுக்கும் எந்திரங்கள், ஜே.சி.பி., மின்மோட்டார் போன்றவற்றை போதுமான அளவில் தயார்நிலையில் வைக்கவும், தற்காலிக தங்கும் முகாம்களை உடனடியாக பார்வையிட்டு அவற்றில் போதிய அடிப்படை வசதிகள் உள்ளனவா? என்பதை உறுதி செய்யவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தர விடப்பட்டது. பழுதான நிலையில் உள்ள அபாயகர மான கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்த சம்மந்தப் பட்ட அலுவலருக்கு அறிவு றுத்தப்பட்டது. 15 தினங்களுக்கு ஒருமுறை ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி ஆகிய வற்றில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகளை குளோரினேசன் செய்ய அதிகாரிகளுக்கு அறி வுறுத்தட்டது.

    மரங்கள் மற்றும் மரக்கிளைகள் மின்கம்பிகள் மீது தொட்ட நிலையில் காணப்பட்டால் மின்சார வாரியம் மூலம் மரம் மற்றும் மரக்கிளைகளை வெட்டி அகற்றவும், மின்பழுது தொடர்பான புகார்களை தெரிவிக்க 24 மணி நேரமும் இயங்கும் 9498794987 என்ற தொலைபேசி எண் செயல்பட்டு வருவதை பொதுமக்களுக்கு தெரிவிக்க மின்சாரவாரிய அலுவ லருக்கு அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் வீடு மற்றும் அலுவலகங்களின் மேல் பகுதியில் குப்பைகள் மற்றும் மரத்தின் இலைகள் காணப் பட்டால் அவற்றை அப்புறப் படுத்தி தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு மழைக் காலங்களில் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து பருக வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பிளாஸ்டிக் பாட்டில், டயர்கள், தேங்காய் சிரட்டைகள் இவற்றில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி ஏற்பட்டு டெங்கு போன்ற காய்ச்சல்கள் பரவ வாய்ப்புள்ளதால் அவற்றை அப்புறப்படுத்தி எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காய்ச்சல், சளி இது போன்ற அறிகுறிகள் தென் பட்டால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சென்று பரிசோதனை மேற் கொள்ளுமாறு தெரிவிக்கப் பட்டுள்ளது. கால்நடை களுக்கு நோய்தொற்று ஏற்பட்டால் கால்நடை மருத்துவரை அணுகவும் மற்றும் கால்நடைகள் இறந்தால் அவற்றை உட னடியாக அப்புறப்படுத்தவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மழை வெள்ள பாதிப்பு சேதங்கள் தொடர் பான 24 மணி நேரமும் இயங்கும் மாவட்ட கட்டுப் பாட்டு அறை கட்டணமில்லா தொலைப்பேசி எண் 1077 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம்.

    பருவமழை மற்றும் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் ஆறு மற்றும் கடலோரப் பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கவும், சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை மேற்படி பகுதிகளுக்கு அழைத்துச்செல்லாமல் தற்காத்துக்கொள்ளவும், தன்னார்வலர்கள் தங்கள் பகுதிகளில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் கேட்டுக்கொள் ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பால சுப்பிரமணியம், பத்மநாப புரம் சப்-கலெக்டர் கவுசிக், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், உதவி கலெக்டர் (பயிற்சி) ராஜட் பீட்டன், கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சங்கரநாரா யணன், செயற்பொறியாளர் (நீர்வளத்துறை) ஜோதிபாசு, தோட்டக்லைத்துறை துணை இயக்குநர் ஷீலா ஜாண், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கீதா உட்பட அனைத்துத்துறை சார்ந்த உயர் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • வெளியுறவுத்துறை மந்திரியிடம் விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை
    • அதிர்ஷ்டவசமாக மீனவர்கள் அனைவரும் உயிர்தப்பி கப்பல் மூலம் மாலத்தீவுக்கு சென்றனர்.

    நாகர்கோவில்:

    விஜய்வசந்த் எம்.பி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- குமரி மாவட்டம் இரவிபுத்தன்துறையை சேர்ந்த 7 மீனவர்கள் உள்பட 12 மீனவர்கள் கடந்த 11-ந்தேதியன்று மாலத்தீவு அருகே ஆழ்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது, அந்நாட்டின் இழுவை கப்பல் மீன வர்களின் படகு மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில் படகு மற்றும் அதில் இருந்த விலை உயர்ந்த பொருட்கள் கடலில் முழ்கின. அதிர்ஷ்டவசமாக மீனவர்கள் அனைவரும் உயிர்தப்பி கப்பல் மூலம் மாலத்தீவுக்கு சென்றனர்.

    அந்நாட்டு அரசு அவர்களை கைது செய்தது. பின்னர் அவர்களை விடுவிக்க இந்திய தூதரகத்தை நான் தொடர்பு கொண்டு நடவடிக்கை மேற்கொண்டேன். மீனவர்கள் தாயகம் திரும்பி வரவும் நடவடிக்கை எடுத்தேன். பின்னர் ஊர் திரும்பிய மீனவர்களை சந்தித்து அவர்கள் கோரிகை் கையை கேட்டறிந்தேன். அப்போது சேதம் அடைந்த படகு உள்பட ரூ.1½ கோடி மதிப்பில் நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதனை கப்பல் நிறுவனத்திடம் இருந்து பெற்று தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதைத்தொடர்ந்து நான் நேற்று டெல்லி சென்று வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்தேன். அப்போது மாலத்தீவு கப்பல் மோதி படகு விபத்துக் குள்ளான மீனவர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என மனு அளித்தேன்.

    இதுதொடர்பாக மாலத்தீவு அரசை தொடர்பு கொண்டு நிறுவனத்திடம் இருந்து நஷ்டஈடு பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மந்திரி உறுதியளித்துள்ளார். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    • கலெக்டரிடம் செ.தாமோதரன் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு
    • கீரணத்தம் பகுதியில் வீடு கட்டி தரவும் கலெக்டரிடம் வலியுறுத்தல்

    கோவை,

    கோவை கிணத்துக்கடவு எம்.எல்.ஏ தாமோதரன் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    காயிதேமில்லத் காலனியில் வசிக்கும் அனைவருக்கும் பட்டா வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் இவை அரசு பதிவேட்டில் பதிவாகவில்லை. எனவே அந்த பட்டாக்களை உடனடியாக பதிவேட்டில் இடம்பெற செய்யவேண்டும்.

    ஆத்துப்பாலத்திற்கு கீழ் செல்லும் சாலையில் மழைநீர் வடிகால் வாய்க் கால் அமைக்கப்படுகிறது. அவை ஒரு சில இடங்களில் தாழ்வாகவும், உயரமாகவும் உள்ளது. இதனால் காயிதே மில்லத் காலனியில் உள்ள சுமார் 500 குடும்பங்கள் வெளியில் செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அதனை சரி செய்ய வேண்டும்.

    மேலும் காயிதேமில்லத் காலனிக்குள் செல்வதற்கான சரிவுதளத்தை சரியாக அமைக்க வேண்டும். மேம்பாலத்தில் இருந்து காயிதேமில்லத் காலனிக்கு இறங்குதளம் நேரடியாக வருவதால், அங்கு வசிக்கு மக்கள் அடுத்த சாலைக்கு செல்ல, சுமார் 2 கி.மீ. தூரம் சுற்றிவர வேண்டி உள்ளது.

    இதனால் அவசர காலத்தில் கோவைக்கு செல்ல மிகவும் சிரமம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே இறங்கும் தளத்தில் கீழ்ப்பாதை அமைத்து, அந்த வழியாக ஆம்புலன்ஸ், பள்ளிகுழந் தைகள் அடுத்த சாலைக்கு செல்வதற்கு பாதை அமைத்து கொடுக்க வேண்டும்.

    கோவை மாநகராட்சி 99-வது வார்டு, சித்தன்னபு ரம் பகுதியில் உள்ள வெள்ளலூர் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டபோது அந்தப் பகுதியில் இருந்த வீடுகள் இடிக்கப்ப ட்டன. எனவே அவர்கள் வீடுஇன்றி சிரமப்படுகிறார்கள். இதுகுறித்து ஏற்கெனவே கோரிக்கை மனு தரப்பட்டு உள்ளது. அப்போது கீரணத்தம் பகுதியில் வீடு கட்டி தருவதாக கலெக்டர் கூறியிருந்தார்.

    ஆனால் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அவர்களுக்கு உடனடியாக மாற்றுவீடு ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

    மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் கிராந்திகுமார், உடனடியாக நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.

    அப்போது எச்.எஸ்.ஹீலர், கோவை ஜலீம், எம்.எச்.அப்பாஸ், அக்பர்கான், இப்ராஹிம், குட்டி, கோட்டைசேட், முஹம்மது, காளிமுத்து ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×