search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கழுதை"

    • சிறப்பு பூஜைகள் செய்து திருமணம் செய்து வைத்தனர்.
    • பயிரிடப்பட்ட பயிர்கள் தண்ணீர் இன்றி கருகிப்போனது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்க கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்து.

    இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். விஜயவாடா உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்னும் மழை நீர் வடியாமல் உள்ளதால் விவசாய பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கருகி நாசமானது. பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சத்ய சாய் மாவட்டத்தில் போதிய அளவு மழை பெய்யாததால் ஆறுகள், ஏரிகள் வறண்டு காணப்படுகின்றன. காரிப் பருவத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள் தண்ணீர் இன்றி கருகிப்போனது.


    இந்த நிலையில் வருண பகவானை மகிழ்விப்பதற்காக 2 கழுதைகளை குளிப்பாட்டி, மஞ்சள், குங்குமம், மாலை யிட்டு, பட்டாசு வெடித்து ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

    மேலும் கோவில் வளாகத்தில் வைத்து கழுதைகளுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்து திருமணம் செய்து வைத்தனர்.

    இதனால் வருண பகவான் மனம் குளிர்ந்து மழை தருவார் என பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    ×