என் மலர்
நீங்கள் தேடியது "கழுதை"
- கழுதைகள் சில இடங்களில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
- கழுதைகளால் எழுப்பப்படும் ஒலி தனித்துவம் உடையது.
சாது, சகிப்புத்தன்மை, தாக்குப்பிடிக்கும் திறன்...
இந்த மூன்றுக்கும் அடையாளமாக திகழ்வது பஞ்சகல்யாணி என்று அழைக்கப்ப டும் கழுதைகள்தான். குதிரை இனத்தை சேர்ந்த, பாலூட்டியாக இருந்தாலும் தமிழகத்தை பொறுத்தவரை கேலியாகவே இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.
வரலாற்றை புரட்டிப்பார்த்தால் ரோமானிய பேரரசில் சுமைகள் சுமப்பது முதல் நீண்ட தூர வர்த்தகம் வரை கழுதைகள் பங்கு மிகப் பெரியதாக இருந்தது. அதேபோல் 2 மற்றும் 5-ம் நூற்றாண்டுகளில் ராணுவத்தின் சேவையிலும் கழுதைகள் பயன்பாடு இருந்துள்ளது. தளவாட பொருட்களை சற்றும் தளராமல் முதுகில் சுமந்து சென்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
உலகில் தொழில் புரட்சி ஏற்படும் முன்பு பொதுமக்களின் பயணங்களுக்கு குதிரைகளும், பொதிகளை சுமக்க கழுதைகளும் பயன்படுத்தப்பட்டு வந்தன. தமிழகத்திலும் சுதந்திரம் அடைவதற்கு முன்பு கழுதைகள் முக்கிய பங்காற்றி வந்தன. குறிப்பாக அன்றைய காலகட்டத்தில் சலவை தொழிலாளர்கள் துணிகளை துவைத்து அதனை கொண்டு செல்ல கழுதைகளை அதிக அளவில் பயன்படுத்தினர்.
இதனால் கிராமங்கள் தோறும் அதிக அளவில் கழுதைகள் வளர்க்கப்பட்டு வந்தன. ஆனால் காலப்போக்கில் சலவைத் தொழில் முற்றிலும் மறைந்து போனது. இதன் காரணமாக கழுதைகள் பயன்பாடு வெகுவாக குறைந்தது. இதனால் கழுதைகள் வளர்ப்பில் ஆர்வம் இல்லாமல் பலர் அதனை விற்றுவிட்டனர். தற்போது தமிழகத்தில் கழுதைகள் வெகுவாக குறைந்துவிட்டது.
தாவர உண்ணியான கழுதையின் மூக்கின் அருகே வெண்மையாக இருப்பது இதன் அடையாளங்களில் ஒன்று. தனது தாக்குப்பிடிக்கும் திறனால் கரடுமுரடான பகுதிகளில் மிகுந்த பாரம் தூக்கிச் செல்ல பயன்படுத்தப்படுகின்றன.
பெரும்பாலான காட்டுக் கழுதைகள் 102 முதல் இருந்து 142 செ.மீ. உயரம் வரை இருக்கின்றன. கழுதைகள் மிதமான பாலை நிலங்களில் வாழவல்லவை. இவை குதிரைகளை விட குறைவான உணவே உட்கொள்கின்றன. கழுதைகளால் எழுப்பப்படும் ஒலி தனித்துவம் உடையது.
இத்தகைய கழுதை இனங்கள் தமிழகத்தில் வெகுவாக குறைந்திருப்பது வன ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு நடத்திய கணக்கெடுப்பின்படி 1,983 கழுதைகள் இருந்தது. 2019-ம் ஆண்டு 1,428 கழுதைகள் இருந்ததாக புள்ளி விவரங்கள் கூறுகிறது. அதன் பின் கழுதைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் கழுதைகளின் எண்ணிக்கை 500-க்கும் கீழ் சென்றிருக்கும் என தெரிகிறது.
இன்றைய காலத்தில் கழுதைகள் சில இடங்களில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. கழுதை பால் மருத்துவ குணம் கொண்டதாலும், அழகு சாதன பொருட்கள் தயாரிக்க பயன்படுத்துவதாலும் அதற்கு கடும் கிராக்கி உள்ளது. கழுதை பால் விலை அதிகமாக உள்ளது.
தமிழகத்தை காட்டிலும் மற்ற மாநிலங்களில் கழுதைகள் வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள கழுதைகள் தனித்துவம் தன்மை கொண்டது. அதில் வேறு இனங்களை கலந்து இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. இதனை தடுத்து தமிழகத்தில் கழுதைகளின் இனத்தை அதிகரிக்க மாநில அரசு தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சிறப்பு பூஜைகள் செய்து திருமணம் செய்து வைத்தனர்.
- பயிரிடப்பட்ட பயிர்கள் தண்ணீர் இன்றி கருகிப்போனது.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்க கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்து.
இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். விஜயவாடா உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்னும் மழை நீர் வடியாமல் உள்ளதால் விவசாய பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கருகி நாசமானது. பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் சத்ய சாய் மாவட்டத்தில் போதிய அளவு மழை பெய்யாததால் ஆறுகள், ஏரிகள் வறண்டு காணப்படுகின்றன. காரிப் பருவத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள் தண்ணீர் இன்றி கருகிப்போனது.

இந்த நிலையில் வருண பகவானை மகிழ்விப்பதற்காக 2 கழுதைகளை குளிப்பாட்டி, மஞ்சள், குங்குமம், மாலை யிட்டு, பட்டாசு வெடித்து ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
மேலும் கோவில் வளாகத்தில் வைத்து கழுதைகளுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்து திருமணம் செய்து வைத்தனர்.
இதனால் வருண பகவான் மனம் குளிர்ந்து மழை தருவார் என பகுதி மக்கள் தெரிவித்தனர்.
- விண்ணப்பித்தவர்களுக்கு தனியாக இந்த கும்பல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்படுத்தினர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஈமு கோழி வளர்ப்பு என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி அரங்கேறியது.
இதே போல ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் கழுதை வளர்ப்பு என்ற பெயரில் மக்களை ஏமாற்றி ரூ.100 கோடிக்கு மேல் கும்பல் என்று அசால்டாக கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது சந்தையில் கழுதை பாலுக்கு அதிக தேவை உள்ளது.
ஒரு லிட்டர் கழுதைப்பால் 1600 ரூபாயில் இருந்து 1800 ரூபாய்க்கு வாங்குவதாக விளம்பரம் செய்தனர். யூடியூப் சேனல் வீடியோக்களில் தனக்கு அதிக ஆர்டர்கள் வருகின்றன, ஆனால் தேவைக்கு ஏற்ப சப்ளை செய்ய முடியவில்லை.
கழுதை பால் வியாபாரம் செய்தால் பெரும் லாபம் கிடைக்கும். எங்களிடம் உயர் ரக கழுதைகள் உள்ளன.
இந்த கழுதைகளுக்கான பணத்தை நீங்கள் செலுத்தினால் மட்டும் போதும். நாங்கள் உங்களுக்கு கழுதை பராமரிப்பதற்கான கொட்டகை அமைக்க உதவி செய்கிறோம்.
மேலும் ஒரு லிட்டர் கழுதை பாலை நாங்களே ரூ. 1500 கொடுத்து வாங்கிக் கொள்வோம் கழுதைக்கு நோய் வாய்ப்பட்டால் மருத்துவ செலவையும் நாங்களே ஏற்போம் என தெரிவித்தனர்.
இதனை நம்பி ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மாநிலங்களை சேர்ந்தவர்கள் அந்த கும்பல் தெரிவித்த ஆன்லைன் முகவரியை தேடி விண்ணப்பித்தனர்.
இதில் விண்ணப்பித்தவர்களுக்கு தனியாக இந்த கும்பல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்படுத்தினர். அதில் கழுதை வளர்ப்பு முறைகள் மற்றும் எப்படியெல்லாம் பால் தேவைப்படுகிறது.
அவற்றை நாங்கள் எப்படி சேகரித்து வருகிறோம் என்பது பற்றி விளக்கமாக பல மணி நேரம் பேசி நம்ப வைத்தனர். இதனை நம்பி ஏராளமானோர் கழுதைகளை வாங்க ஆர்வம் காட்டினர். ஒரு கழுதை ரூ.20 ஆயிரம் முதல் 1.50 லட்சம் வரை விற்பனைக்கு உள்ளன என அறிவிப்பு செய்தனர்.
இதனை நம்பிய விவசாயிகள் பலர் கழுதைகளை வாங்க லட்சக்கணக்கில் பணம் அனுப்பினர்.
சதுரங்க வேட்டை சினிமா பாணியில் கழுதை கருத்தரங்குகள் நடத்தி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மாநிலங்களைச் சேர்ந்த பலரையும் சிக்க வைத்தனர்.
இது ஒரு புறம் இருக்க கழுதைப் பாலை வீட்டிலேயே சேமித்து வைக்க தங்களிடம் பிரத்யேகமான எந்திரம் உள்ளது.
இந்த எந்திரம் ரூ.75,000 முதல் விற்பனைக்கு உள்ளது எனவும் தெரிவித்தனர். அதற்கும் பலர் பணம் செலுத்தி முன்பதிவு செய்தனர்.
கழுதைகளுக்கு சிகிச்சை அளிக்க கால்நடை டாக்டரைக் காட்டி உறுப்பினர் கட்டணம் என்ற பெயரில் ஒவ்வொரு உறுப்பினரிடமும் ரூ.25 லட்சம் வசூலித்தனர்.
விவசாயிகளுக்கு கழுதை பராமரிப்புக்கான கொட்டகை அமைக்க ஒவ்வொருவருக்கும் ரூ. 15 லட்சம் முதல் ரூ.70 லட்சம் வரையிலான வங்கி காசோலைகளை கொடுத்தனர். அவற்றை எழுதி வங்கியில் போட்டபோது அவை பணம் இல்லாமல் திரும்பி வந்தன.
மேலும் கடந்த 18 மாதங்களாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் இருந்து பால் பணம், பராமரிப்பு செலவு கொட்டகை கட்டுதல், பணியாளர் சம்பளம், கால்நடை சிகிச்சை செலவுகள் வழங்கப்படவில்லை.
அப்போதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை பணம் கட்டியவர்கள் தெரிந்து கொண்டனர். தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 400-க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் இந்த கும்பல் ரூ. 100 கோடி வரை அசால்டாக கொள்ளையடித்துள்ளனர்.
இது ஒரு பெரிய மோசடி என்னை தெரிந்து கொண்ட விவசாயிகள் இது குறித்து தெலுங்கானா மாநிலத்தில் உள்ள போலீஸ்களில் புகார் அளித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தை சேர்ந்த 2 பேர் பெயரையும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அந்த பெயர்கள் உண்மையானதா? அவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
- கழுதை பாலை விற்பனை செய்தும் வருவாய் ஈட்டி வருகிறார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை.
ஓசூர்:
ஓசூர் அருகே கர்ப்பமான பெண் கழுதையின் தலையை மர்ம நபர்கள் வெட்டி எடுத்து சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கழுதை நரபலி கொடுக்கப்பட்டதா? என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கொத்த கொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் (43). இவர் சலவை தொழில் செய்து வருகிறார்.
கிராமத்தில் உள்ள ஏரிக்கரை ஓரத்தில் ஒரு கொட்டகை அமைத்து அங்கு 20-க்கும் மேற்பட்ட கழுதைகளை வளர்த்து வருகிறார்.
இந்த கழுதைகள் மூலம் கிடைக்கும் கழுதை பாலை அவர் விற்பனை செய்தும் வருவாய் ஈட்டி வருகிறார்.
இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல ஆனந்த் ஏரிக்கரை ஓரத்தில் உள்ள தனது கொட்டகைக்கு சென்றுள்ளார். அங்கு கொட்டகையின் கேட் உடைக்கப்பட்டு இருந்து உள்ளது. அங்கிருந்த அனைத்து கழுதைகள் மீதும் ரத்தம் தெளித்து இருந்துள்ளது.
உடனே அவர் கொட்டாகைக்கு உள்ளே சென்று பார்த்தபோது ஒரு பெண் கழுதையின் கழுத்தை வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளது. அதன் தலையை மர்ம நபர்கள் எடுத்து சென்றுள்ளனர். இதனால் ஆனந்த் அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அவர் ஓசூர் மத்திகிரி போலீஸ் நிலையத்தில் நள்ளிரவு நேரத்தில் கொட்டகைக்கு வந்த மர்ம நபர்கள் பெண் கழுதையின் கால்கள் உள்ளிட்ட இடங்களில் கத்தியால் தாக்கிய மர்ம நபர்கள் பின்னர் கழுதையின் கழுத்தை கத்தியால் அறுத்து தலையை எடுத்து சென்றுள்ளனர்.
நேற்று அமாவாசை என்பதால் மாந்திரீகம் செய்து பலி கொடுப்பதற்காக கழுதையின் தலையை மர்ம நபர்கள் வெட்டி எடுத்து சென்று உள்ளனர் என்ற சந்தேகத்தின் பேரில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து மத்திகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வாயில்லா பிராணியான கழுதையை வாலிபர் ஒருவர் சரமாரியாக தாக்குகிறார்.
- கழுதையும் அடி வாங்கிய படி கத்துகிறது. இருந்தும் அந்த வாலிபர் கழுதையை விடவில்லை. மீண்டும், மீண்டும் அடித்து உதைக்கிறார்.
புதுடெல்லி:
தமிழில் தன்வினை தன்னை சுடும் என ஒரு முதுமொழி உண்டு.
தவறு செய்தால் உடனடி தண்டனை
இதுபோல தவறு செய்தால் தண்டனை உடனே கிடைக்கும் என்பது இப்போது நடைபெறும் பல சம்பவங்கள் மூலம் நிரூபணம் ஆகி வருகிறது.
இதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதில் வாயில்லா பிராணியான கழுதையை வாலிபர் ஒருவர் சரமாரியாக தாக்குகிறார்.
அந்த கழுதையும் அடி வாங்கிய படி கத்துகிறது. இருந்தும் அந்த வாலிபர் கழுதையை விடவில்லை. மீண்டும், மீண்டும் அடித்து உதைக்கிறார்.
அனைத்து அடிகளையும் அழுதபடி வாங்கி கொள்கிறது கழுதை. அதன்பின்பு அந்த வாலிபர், கழுதையின் முதுகில் ஏறுகிறார். அப்போது அந்த கழுதை தனது வேலையை காட்ட தொடங்குகிறது.
தன் மீது ஏறி அமர்ந்த வாலிபரின் காலை திடீரென கவ்வி கொள்கிறது. அதோடு கடித்து குதறி வாலிபரை கீழே தள்ளுகிறது. அதன்பின்பும், அந்த வாலிபரை சுழற்றி, சுழற்றி தாக்குகிறது. ஒரு சில நிமிடங்கள் மட்டுமே ஓடும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால் தன்வினை தன்னை சுடும் என்பதற்கு உதாரணம் என்ற தலைப்புடன் வெளியாகி உள்ள இந்த வீடியோவுக்கு பலரும் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.
- அதிக நன்மைகள் உள்ள கழுதைப்பாலை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம்.
- கழுதைப்பால் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் கனவு.
மங்களூருவை சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ் கவுடா. இவர் ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், ஸ்ரீநிவாஸ் கவுடா கழுதை பண்ணை திறப்பதற்காக தனது ஐடி பணியை ராஜினாமா செய்துள்ளார்.
தற்போது, மங்களூருவில் கழுதை பண்ணை வைத்து கழுதை பால் வியாபாரமும் செய்து வருகிறார் கழுதை பண்ணை உரிமையாளரான ஸ்ரீநிவாஸ் கவுடா.
இதுகுறித்து பண்ணை உரிமையாளர் ஸ்ரீநிவாஸ் கவுடா கூறியதாவது:-
நான் முன்பு 2020-ம் ஆண்டு வரை ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்தேன். இது இந்தியாவிலும் கர்நாடகாவிலும் உள்ள முதல் கழுதை வளர்ப்பு மற்றும் பயிற்சி மையம் ஆகும்.

தற்போது எங்களிடம் 20 கழுதைகள் உள்ளன. நான் சுமார் 42 லட்சம் ரூபாய் மூதலீடு செய்துள்ளேன். அதிக நன்மைகள் உள்ள கழுதைப்பாலை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம்.
கழுதைப்பால் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் கனவு. கழுதைப்பால் பல நன்மைகள் கொண்ட மருந்தாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.