search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 232803"

    • அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான மனுக்களை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
    • இத்திட்டத்தின் கீழ் ராணுவத்தில் இணையும் வீரர்கள் 4 ஆண்டு பணியில் இருப்பார்கள்.

    புதுடெல்லி:

    ராணுவத்தில் அக்னிபாத் என்ற புதிய திட்டத்தை கடந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் ராணுவத்தில் இணையும் வீரர்கள் 4 ஆண்டுகள் பணியில் இருப்பார்கள். இந்த திட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் வீரர்கள் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவர்.

    அக்னிபாத் திட்டம் சட்டப்படி செல்லுபடியாகும் என்று டெல்லி ஐகோர்ட் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில், இந்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட், மேல் முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது.

    • கடந்த மாதம் 16-ந் தேதி முதல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • ஆன்லைன் பொதுத்தேர்வு நாடு முழுவதும் 176 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    இந்திய ராணுவத்தில் இளைஞர்களுக்கு குறுகிய கால ஒப்பந்த முறையில் பணி நியமனம் செய்யும் திட்டமாக அக்னிபாத் என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இதையடுத்து அக்னிபாத் திட்டத்தின் கீழ் இளைஞர்களை தேர்வு செய்வதற்கான தேர்வுகளும் நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது அந்த தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுதொடர்பான தகவல்களை தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ராணுவத்தின் சார்பில் விழிப்புணர்வாக எடுத்துக் கூறப்பட்டு வருகிறது. இதன்படி நேற்று திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி. பள்ளி வளாகத்தில் உள்ள அரங்கத்தில் இந்திய ராணுவ ஆட்சேர்ப்பில் மாற்றங்கள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். பள்ளி ஒருங்கிணைப்பாளர் மோகனா வரவேற்றார். இதில் ராணுவத்தின் கோவை ஆட்சேர்ப்பு இயக்குனர் பரத்வாஜ் கலந்து கொண்டு, ராணுவத்தில் ஏன் சேர வேண்டும் என்றும், அதன் மூலமாக ஏற்படும் பயன்கள் குறித்தும் பல்வேறு தலைப்புகளில் பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:- இந்திய ராணுவத்திற்கு ஆட்சேர்ப்புக்கான முறை மாற்றப்பட்டுள்ளது. இதன்படி சி.இ.இ. என்கிற பொது நுழைவுத் தேர்வு அடிப்படையில் முதற்கட்ட தேர்வு நடைபெறும். கடந்த மாதம் 16-ந்தேதி முதல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. வரும் 15-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். சி.இ.இ. என்னும் ஆன்லைன் பொதுத்தேர்வு நாடு முழுவதும் அடுத்த மாதம் 17-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை 176 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு கணினி அடிப்படையிலான தேர்வாக இருக்கும். இந்த தேர்வு தொடர்பான அனைத்து விபரங்களையும் என்ற இணையதளத்தின் மூலமாக அறிந்து கொள்ளலாம். என்றார்.

    இதன் பின்னர் நிருபர்களுக்கு பரத்வாஜ் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:& இந்திய ராணுவப்படையில் சேவையாற்ற வந்துள்ள அனைவரையும் வரவேற்கிறேன். அக்னிபாத் திட்ட தேர்வுகள் முன்பு மருத்துவம், உடற்தகுதி தேர்வுகளின் அடிப்படையில் வைக்கப்படும். ஆனால் தற்போது இணையத்தில் தேர்வு வைக்கப்பட்டு, அதில் தேர்வானவர்களுக்கு அதன்பின்னர் இந்த தேர்வுகள் நடத்தப்படுகிறது.இந்திய ராணுவத்தின் இணையதளத்தில் பதிவு செய்து ரூ. 150 கட்டணம் செலுத்தி தேர்வில் பங்கேற்கலாம். இது தொடர்பான பல்வேறு கையேடுகள் கிடைக்கப்பெறுகிறது. அதேபோல் விண்ணப்பிக்கும் இணையதளத்திலும் பல்வேறு தகவல்கள் உள்ளன. அதனை பங்கேற்பவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். தேசிய மாணவர் படை மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு சலுகைகள் உண்டு. ராணுவத்தில் சேர்த்துவிடுவதாக யாராவது பணம் கேட்டால் அதனை புகாராக தர வேண்டும். அது போன்று ஏதேனும் தகவல் இருந்தால் எங்களுக்கு புகார் அளிக்கலாம்.அவர்கள் உங்களை தவறாக வழிநடத்தக்கூடும். இதை யாரும் நம்ப வேண்டாம். இது முழுக்க முழுக்க உங்கள் திறனுடன் தான் தேர்வு செய்யப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் ராணுவத்தில் சேர்வது மற்றும் அதனால் என்னென்ன பயன்கள் உள்ளன என்பது பற்றி மாணவர்களுக்கு விளக்கப்படம் மூலமாக எடுத்துக் கூறப்பட்டது. இதில் ராணுவ ஆட்சேர்ப்பு துறையை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • விண்ணப்பதாரர்களின் உடல் தகுதித்தேர்வு முதலில் நடத்தப்பட்டது.
    • நாடு முழுவதும் 200 இடங்களில் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும்.

    புதுடெல்லி :

    'அக்னிபாத்' திட்டத்தின் கீழ் ராணுவம் உள்ளிட்ட முப்படைகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இவர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுகின்றனர்.

    இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போருக்கு முதலில் உடல் தகுதித்தேர்வு, பின்னர் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வந்தது. இந்த இரண்டையும் முடித்த பிறகே எழுத்து தேர்வு எனப்படும் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

    ஆனால் இந்த முறைக்கு பதிலாக, இனிமேல் முதலில் எழுத்து தேர்வு நடத்த ராணுவம் முடிவு செய்து உள்ளது. இது தொடர்பாக பல்வேறு செய்தித்தாள்களில் ராணுவம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.

    இது தொடர்பாக ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது:-

    அக்னிவீரர் ஆட்சேர்ப்பு நடைமுறையில் இதுவரை, விண்ணப்பதாரர்களின் உடல் தகுதித்தேர்வு முதலில் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது.

    ஆனால் இனிமேல் பொதுவான ஆன்லைன் பொது நுழைவுத்தேர்வு முதலில் நடத்தப்படும். இதில் வெற்றி பெறுகிறவர்களுக்கு பின்னர் உடல் தகுதித்தேர்வும், மருத்துவ பரிசோதனைகளும் நடக்கும். இது தேர்வு நடைமுறைகளை எளிதாக்க உதவும்.

    மேலும் வீரர்களின் அறிவாற்றல் அம்சத்தில் அதிக கவனம் செலுத்துவதை உறுதி செய்யும். மேலும் ஆட்சேர்ப்பு முகாம்களில் காணப்படும் அதிக கூட்டத்தைக் குறைத்து, எளிதாக கையாளக்கூடியதாகவும் மாற்றும்.

    இவ்வாறு ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

    இந்த முறையில் வருகிற ஏப்ரல் மாதம் நாடு முழுவதும் 200 இடங்களில் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் அவர்கள் கூறினர்.

    இந்த பணியிடங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது.

    • ராணுவத்தில் ஆண்டுக்கு 50 ஆயிரம் அக்னி வீரர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.
    • அக்னிபாத் வீரர்கள் முதல் குழுவினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

    புதுடெல்லி:

    இந்திய ராணுவத்தில் தற்காலிகமாக பணியாற்ற வழிவகை செய்யும் அக்னிபாத் எனும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்தத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்க்கப்படும் இளைஞர்கள் 4 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பி அனுப்பப்படுவார்கள். ராணுவத்தில் இருந்து வெளியேறும்போது ரூ.11 லட்சம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

    ஆண்டுக்கு 50 ஆயிரம் அக்னி வீரர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் சேர்ந்த அக்னிபாத் வீரர்கள் முதல் குழுவினர் பயிற்சியை தொடங்க உள்ளனர்.

    இந்நிலையில், அக்னிபாத் வீரர்கள் முதல் குழுவினர் மத்தியில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.

    அப்போது பிரதமர் மோடி கூறுகையில், நமது ஆயுதப்படையை வலுப்படுத்தவும், அதன் எதிர்காலத்தை தயார் செய்யவும், இந்த முன்னோடி கொள்கை முக்கியத்துவம் பெற்று விளங்கும். இளைய அக்னி வீரர்கள் ஆயுதப்படையை மேலும் இளமையானதாகவும், தொழில்நுட்ப அறிவு சார்ந்ததாகவும் ஆக்குவார்கள் என தெரிவித்தார்.

    • திருச்சியில் அக்னிபாத் திட்டத்தின்கீழ் ராணுவ வீரர்களை தேர்வு செய்யும் வகையில் இளைஞர்களுக்கு நுழைவுத்தேர்வு நடந்தது
    • திருச்சியில் அக்னிபாத் திட்டத்தின்கீழ் ராணுவ வீரர்களை தேர்வு செய்யும் வகையில் இளைஞர்களுக்கு நுழைவுத்தேர்வு நடந்தது


    திருச்சி:

    இந்திய ராணுவத்தின் முப்படைகளில் வீரர்களை தேர்வு செய்ய 'அக்னிபாத்' என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் நபர்கள் 'அக்னி வீரர்கள்' என அழைக்கப்படுவார்கள்.

    இந்த முறையில் தேர்வாகும் வீரர்கள் 4 ஆண்டுகள் ராணுவ பணியில் இருப்பர். இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வீரர்கள் வரை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான வீரர்கள் தேர்வு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது

    தமிழகத்தில் திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை உட்பட 15 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் என 16 மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களை அக்னி வீரர் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்ப்பதற்கான நுழைவுத் தேர்வு இன்று திருச்சி தேசியக்கல்லூரியில் நடைபெற்றது.

    கடந்த ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபரில் உடல் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்றவர்கள் இதில் பங்கேற்றனர்.

    நுழைவுத் தேர்வுக்கு 2,307 இளைஞர்கள் இன்று அதிகாலை 4 மணி முதல் சோதனைக்கு பிறகு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

    இவர்களுக்கான நுழைவுத் தேர்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து இரண்டு மணி வரை சுழற்சி முறையில் நடைபெற்றது.

    இதையொட்டி தேசியக்கல்லூரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் தேர்வில் பங்கேற்றவர்களுக்காக திருச்சி மாநகராட்சி சார்பில் சுகாதாரமான குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டு இருந்தன.




    • அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது.
    • பஞ்சாபில் உள்ள ஆம் ஆத்மி அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை

    புதுடெல்லி :

    முப்படைகளுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை தேர்வு செய்யும் 'அக்னிபாத்' திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. அத்திட்டத்துக்கு பஞ்சாபில் உள்ள ஆம் ஆத்மி அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இந்தநிலையில், இதுகுறித்து டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் நிருபர்களிடம் கூறியதாவது:-

    'அக்னிபாத்' திட்டம் தொடர்பாக மத்திய அரசுடன் எங்களுக்கு கருத்து வேறுபாடு இருந்தது. ஆனால், அந்த திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த தொடங்கி விட்டதால், அதை முழுமையாக ஆதரிக்கிறோம். திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர், பஞ்சாப் மாநில முதல்-மந்திரி பகவந்த் மான் அளித்த பேட்டியில், 'அக்னிபாத்' திட்டத்துக்கு முழு ஆதரவு அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக விளக்கம் அளித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த மாதம் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட உடனேயே பல மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன.
    • 2022-ல் இத்திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகபட்ச வயது வரம்பை 23 ஆண்டுகளாக அரசாங்கம் நீட்டித்தது.

    ஆயுதப் படைகளில் ஆள் சேர்ப்பதற்கான அக்னிபாத் திட்டத்திற்கு தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்ததோடு, அதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது பதில் அளிக்குமாறு மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

    டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தினர். அப்போது, திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது ஒருங்கிணைந்த பதிலை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசை கேட்டுக் கொண்டது.

    ஜூன் 14ஆம் தேதி அறிவிக்கப்பட்ட அக்னிபாத் திட்டம், 17 முதல் 21 வயது வரையிலான பாதுகாப்புப் படைகளில் 25 சதவீதத்தினரை இன்னும் 15 ஆண்டுகளுக்குத் தக்கவைத்துக்கொள்ளும் வகையில் நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே இளைஞர்களைச் சேர்ப்பதற்கு வழங்குகிறது.

    கடந்த மாதம் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட உடனேயே பல மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன. பின்னர், 2022-ல் இத்திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகபட்ச வயது வரம்பை 23 ஆண்டுகளாக அரசாங்கம் நீட்டித்தது.

    • நவம்பர் 15-ந் தேதி தொடங்குகிறது
    • ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

    வேலூர்:

    இந்திய ராணுவத்தில் சேருவதற் கான ஆள் சேர்ப்பு முகாம் வரும் ஆகஸ்ட் 21 ம் தேதி தொடங்கி நவம்பர் 25 ம் தேதி வரை நடக்கிறது.

    தகுதி வாய்ந்தவர்கள் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று வேலூர் கலெக்டர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வேலூர் கலெக்டர் குமார வேல் பாண்டியன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

    அக்னிபாத் திட்டத்தில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் வேலூர், திருப்பூர் மற்றும் நாகர்கோவில் ஆகிய இடங்களில் 21.08.2022 முதல் 25.11.2022 வரை நடைபெற உள்ளது.

    தகுதி வாய்ந்தவர்கள் www. joinindianarmy.nic.in . என்ற இணைய முகவரியில் விண்ணப்பித்து பயனடையலாம்.

    அதன்படி நாகர்கோவில் அறிஞர் அண்ணா ஸ்டேடியத்தில்வரும் 21-ந் தேதி முதல் செப்டம்பர் 1-ந் தேதி வரையும், கோவை அவினாசி டி.இ.ஏ பொதுப் பள்ளி வளாகத்தில் செப்டம்பர் 20-ந் தேதி முதல் அக்டோபர் 1-ந் தேதி வரையும், வேலூர் கோட்டை காவலர் பயிற்சிப்பள்ளி மைதானத்தில் சென்னை தலைமையிடத்து ஆர் ஓ ஏற் பாட்டின் பேரில் நவம்பர் 15-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை நடக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விமானப்படையில் 3 ஆயிரம் பணியிடங்களுக்கு 7.50 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
    • 3 ஆயிரம் கடற்படை பணிக்கு 9.55 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

    புதுடெல்லி:

    அக்னிபாத் திட்டத்தின் கீழ், பதினேழரை வயது முதல் 23 வயது வரை உள்ள இளைஞர்கள் 4 ஆண்டுகள் முப்படைகளில் சேர்ந்து பணியாற்றும் திட்டத்தை கடந்த ஜூன் மாதம் 14 மத்திய அரசு அறிவித்தது.

    வடமாநிலங்களில் போராட்டங்கள் நடந்தபோதிலும், இதை அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இந்திய விமானப்படையில், சுமார் 3 ஆயிரம் பணியிடங்களுக்கு 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    இதற்கிடையே, இந்திய கடற்படை பணிக்கு விண்ணப்பிக்கும் பணி ஜூலை 1-ந் தேதி தொடங்கியது. சமீபத்தில் முடிவடைந்தது.

    இந்நிலையில், கடற்படையில் 3 ஆயிரம் பணியிடங்களுக்கு சுமார் 9 லட்சத்து 55 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். விண்ணப்பித்தவர்களில் 82 ஆயிரத்து 200 பேர் பெண்கள் ஆவர் என கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அரசின் இந்த கொள்கைகள் தங்கள் வாழ்க்கையுடன் விளையாடுவதாக இளைஞர்கள் கருதுகின்றனர்.
    • பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும், சட்டம் ஒழுங்கை பாதிக்கும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

    புதுடெல்லி:

    மக்களவையில் இன்று, அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய், அக்னிபாத் விவகாரத்தை எழுப்பினார். அவர் பேசியதாவது:-

    ஓய்வூதியம், மருத்துவ காப்பீடு போன்ற ஓய்வூதிய பலன்கள் இல்லாமல் அக்னிபாத் திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகளுக்கு மட்டுமே ராணுவ வீரர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். 4 ஆண்டுகளுக்குப் பிறகு 25 சதவீதம் பேர் மட்டுமே நிரந்தரம் செய்யப்படுவார்கள். மற்றவர்கள் விடுவிக்கப்படுவார்கள். அரசின் இந்த கொள்கைகள் தங்கள் வாழ்க்கையுடன் விளையாடுவதாக இளைஞர்கள் கருதுகின்றனர். நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக இருக்கும் நிலையில், 4 வருடங்கள் கழித்து அவர்களின் வாழ்க்கை என்னவாகும் என கேள்வி எழுப்புகின்றனர். அதனால்தான் போராட்டம் நடத்துகின்றனர்.

    ஏராளமான இளைஞர்கள் ஆயுதப் பயிற்சி பெற்று, போதுமான வாழ்வாதாரம் இல்லாமல் தங்கள் கிராமங்களுக்கு திரும்புவதன் மூலம் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும், இது சட்டம் ஒழுங்கிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, நாட்டின் நலன் கருதி அக்னிபாத் திட்டத்தை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக பல மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
    • இந்த திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    அக்னிபாத் திட்டத்தின் கீழ், பதினேழரை வயது முதல் 23 வயது வரை உள்ள இளைஞர்கள் நான்கு ஆண்டுகள் முப்படைகளில் சேர்ந்து பணியாற்றும் திட்டத்தை கடந்த மாதம் 14 மத்திய அரசு அறிவித்தது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல மாநிலங்களில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. இந்த திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    ஆனால் திட்டத்தை திரும்ப மத்திய அரசு மறுத்து விட்டது. இதனிடையே அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணியில் சேரும் நடைமுறையை ராணுவம் மேற்கொண்டுள்ளது. இந்திய கடற்படையில் சேருவதற்கு இதுவரை மொத்தம் 3,03,328 விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

    • பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
    • அக்னிபாத் திட்டத்தை அறிமுகப்படுத்திய பிறகு நடத்தப்பட்ட போராட்டங்களின் விளைவாக ரெயில் சேவைகள் ரத்து.

    முப்படைகளில் 4 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களும், வன்முறையும் வெடித்தன. பீகாரில் இருந்து தெலுங்கானா வரை ரெயில்வே சொத்துக்கள் எரித்து சேதப்படுத்தப்பட்டன.

    இதுதொடர்பாக பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு எழுத்துப்பூர்வமாக ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்தார்.

    அப்போது அவர், "அக்னிபாத் திட்டத்தை அறிமுகப்படுத்திய பிறகு நடத்தப்பட்ட போராட்டங்களின் விளைவாக ரெயில் சேவைகள் ரத்தானதால் பயணிகளுக்கு வழங்கப்பட்ட பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான தனி வரவு பராமரிக்கப்படவில்லை.

    இருப்பினும் 14.6.2022 முதல் 30.6.2022 வரையில், அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களின்போது 2000 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாகவும், ரெயில்வே சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டதாலும் ரெயில்வேக்கு ரூ.259.44 கோடி இழப்பு ஏற்பட்டது. தோராயமாக மொத்தம் 102.96 கோடி ரூபாய் பயணிகளுக்கு திரும்பி அளிக்கப்பட்டது. அக்னிபாத் திட்டத்தின் காரணமாக ரத்து செய்யப்பட்ட அனைத்து ரெயில் சேவைகளும் மீட்டெக்கப்பட்டுள்ளன " என்றார்.

    ×