என் மலர்
நீங்கள் தேடியது "மழை நீடிப்பு"
- திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
- பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 30 அடியை எட்டியது
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியில் நேற்றும் சாரல் மழை பெய்தது. மழையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
திற்பரப்பு அருவி பகுதியில் சாரல் மழை பெய்து வருவதையடுத்து அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று அருவியில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு வந்து ஆனந்த குளியலிட்டு சென்றனர். தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 36 அடியை எட்டியது. அணைக்கு 627 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 646 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. பெருஞ் சாணி அணையின் நீர்மட்டம் கடந்த 5 நாட்களில் 11 அடி உயர்ந்திருந்த நிலையில் நேற்று மேலும் ஒரு அடி உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 30 அடியை எட்டியது. அணைக்கு 141 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 20 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 11.38 அடியாகவும், சிற்றார்-2 அணை நீர்மட்டம் 11.48 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 12 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 3.28 அடியாகவும் உள்ளது.
நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் நீர்மட்டம் தொடர்ந்து மைனஸ் அடியில் இருந்து வருகிறது. இன்று காலை அணையின் நீர்மட்டம் 1 மைனஸ் 15.10 அடியாக உள்ளது.
- பெருஞ்சாணியில் 14.8 மில்லி மீட்டர் பதிவு
- சிற்றார்-1 அணை 11.38 அடியாகவும், சிற்றாறு-2 அணை 11.48 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 11.60 அடி
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் குறைவான அளவு தண்ணீர் உள்ளது.
மேலும் பாசன குளங்களிலும் தண்ணீர் குறைவாகவே இருந்து வருகிறது. இதனால் விவசாயிகள் பருவமழையை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமாக காணப்பட்டது. ஒரு சில இடங்களில் மழை பெய்தது.
நாகர்கோவில் பகுதியில் இன்று அதிகாலையில் சாரல் மழை பெய்தது. மயிலாடி, கொட்டாரம், பூதப்பாண்டி, சுருளோடு, இரணியல், அடையாமடை, குளச்சல் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.
மழையின் காரணமாக ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கியது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் அங்கு ரம்மியமான சூழல் நிலவி வருகிறது.
பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணை பகுதியிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. பெருஞ்சாணியில் அதிகபட்சமாக 14.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இரவு மற்றும் அதிகாலையில் மழை பெய்தாலும் அதன் பிறகு வெயில் வழக்கம்போல் சுட்டெரித்தது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 32.95 அடியாக உள்ளது. அணைக்கு 363 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 690 கன அடி தண்ணீர் வெளியேற்றப்ப டுகிறது.
பெருஞ்சாணி அணை யின் நீர்மட்டம் 25.65 அடியாக உள்ளது. அணைக்கு 204 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார்-1 அணை நீர்மட்டம் 11.38 அடியாகவும், சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 11.48 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 11.60 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 3.26 அடியாகவும் உள்ளது.
மாவட்டம் முழுவதும் பெய்தமழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை 5.8, பெருச்சாணி 14.8, சிற்றார் 1 -10.2, சிற்றார் 2-8, நாகர்கோவில் 7.4, பூதப் பாண்டி 7.2, சுருளோடு 8.4, கன்னிமார் 3.4, பாலமோர் 11.2, மயிலாடி 3.6, கொட்டாரம் 5.2, இரணியல் 6.2, ஆணைக் கிடங்கு 8.4, குளச்சல் 8, குருந்தன்கோடு 4, முள்ளாங்கினாவிளை 6.2, புத்தன் அணை 12, திற்பரப்பு 8.2.
- திற்பரப்பு அருவியில் தண்ணீர் கொட்டுகிறது
- பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
பூதப்பாண்டி, சுருளோடு, கன்னிமார், ஆரல்வாய்மொழி, ஆணைக்கிடங்கு, கோழி போர்விளை, முள்ளங்கினா விளை, புத்தன்அணை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது. முள்ளங்கினா விளையில் அதிகபட்சமாக 18.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு பெய்து வரும் மழையின் காரணமாக அங்கு குளு குளு சீசன் நிலவுகிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்ப ரித்து கொட்டி வருகிறது.
மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்து இதமான குளிர் காற்று வீசி வருகிறது. நாகர்கோவிலில் இன்று காலையிலும் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமாகவே இருந்தது. காலை 10 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. அரை மணி நேரமாக மழை கொட்டியது.
பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மலையோர பகுதி யான பாலமோர் பகுதியிலும் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காகவும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 31.46 அடியாக உள்ளது. அணைக்கு 435 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யிலிருந்து 684 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 22.40 அடியாக உள்ளது. அணைக்கு 207 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை 12, பெருஞ்சாணி 7.2, சிற்றாறு 1-6.4, மாம்பழத்துறையாறு 8.4, பூதப்பாண்டி 6.2, சுருளோடு 12.6, கன்னிமார் 8.4, பாலமோர் 13.4, மயிலாடி 4.6, கொட்டாரம் 2.6, ஆணைக்கிடங்கு 1.2, அடையாமடை 4.1, கோழி போர்விளை 4.2, முள்ளங்கினா விளை 18, திற்பரப்பு 10.9, நாகர்கோவில் 5.4.
- பேச்சிப்பாறையில் அதிகபட்சமாக 6.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
- பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 37.90 அடியாக உள்ளது
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தின் மலையோர பகுதிகளிலும், அணை பகுதிகளிலும் தொடர்ந்து மழை நீடித்து வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மாம்பழத் துறையாறு, பாலமோர் பகுதிகளில் நேற்றும் மழை பெய்தது. பேச்சிப்பாறையில் அதிகபட்சமாக 6.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
பூதப்பாண்டி, களியல், குழித்துறை, ஆணைக் கிடங்கு, முக்கடல் அணை பகுதிகளிலும் மழை நீடித்தது. நாகர்கோவிலில் இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமாக காணப் பட்டது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது. காலையில் பெய்த மழையின் காரணமாக பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவி கள் குடைபிடித்தவாறு சென்றனர்.
குலசேகரம், தக்கலை, இரணியல், குளச்சல் பகுதிகளிலும் இன்று காலையில் மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கும் மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 18.55 அடி யாக உள்ளது. அணைக்கு 455 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 583 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 37.90 அடியாக உள்ளது. அணைக்கு 197 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.
- பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து 783 கன அடி தண்ணீர் வெளியேற்றம்
- பாலமோர், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியில் மழை பெய்து வருகிறது.
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளு குளு சீசன் நிலவி வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு மழை பெய்தது. நாகர்கோ வில், சுருளோடு, தக்கலை, அடையாமடை, முள்ளங்கினாவிளை கன்னிமார் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
பாலமோரில் அதிகபட்ச மாக 9.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணையில் இருந்து பாசனத்திற்காக 783 கன அடி தண்ணீர் திறக்கப் பட்டுள்ளது. அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் சானல்களில் ஷிப்டு முறையில் விடப் பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் மழை நீடித்து வரும் நிலையில் விவசாயி கள் கும்பப்பூ சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- சுசீந்திரம், சாமிதோப்பு, கொட்டாரம் பகுதிகளிலும் இன்று காலை சாரல் மழை பெய்தது.
- தக்கலையில் அதிகபட்சமாக 4.2 மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நாகர்கோவிலில் இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. திடீரென சாரல் மழையும் பெய்தது. சுசீந்திரம், சாமிதோப்பு, கொட்டாரம் பகுதிகளிலும் இன்று காலை சாரல் மழை பெய்தது. தக்கலை, குலசே கரம், தடிக்காரன்கோணம், அருமனை, குழித்துறை பகுதிகளிலும் மழை பெய்தது. தக்கலையில் அதிகபட்சமாக 4.2 மீட்டர் மழை பதிவாகியுள்ளது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அங்கு ரம்ய மான சூழல் நிலவு கிறது.
அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. விடுமுறை தினமான இன்று அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.அவர்கள் குடும்பத்தோடு அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணை பகுதிகளில் மழை நீடித்து வருகிறது. இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டி ருக்கிறது. அணைகளில் இருந்து 783 கன அடி தண்ணீர் சாகுபடிக்காக திறந்து விடப்பட்டுள்ளது.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 18.36 அடியாக உள்ளது. அணைக்கு 563 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 583 கன அடி தண்ணீர் வெளியேற்றப்ப டுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 37.80 அடியாக உள்ளது. அணைக்கு 213 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
- குளச்சலில் அதிகபட்சமாக 16.8 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது
- பேச்சிப்பாறை அணையில் 17.76 அடியும், பெருஞ்சாணி அணையில் 37.05 அடியும் நீர்மட்டம் உள்ளது.
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. காலையில் ஓரளவு மழை பெய்தாலும் பகல் நேரங்களில் வெப்பத் தின் தாக்கம் நீடித்தே வரு கிறது.
இருப்பினும் மலையோர பகுதிகள் மற்றும் மாவட்டத் தின் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்தே வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை நீடித்தது.குளச்சலில் அதிகபட்சமாக 16.8 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
குளச்சல் 16.8, திற்பரப்பு 8.3, குழித்துறை 8, இரணியல் 7.4, களியல் 7.2, முள்ளங்கினாவிளை 4.6, பெருஞ்சாணி 3.2, பால மோர் 3.2, பேச்சிப்பாறை 3, கன்னிமார் 2.8, முக்கடல் அணை 2.6, புத்தன் அணை 2.6, நாகர்கோவில் 2.2, தக்கலை 2, பூதப்பாண்டி 1.2.
மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு 446 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 581 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.
பெருஞ்சாணி அணைக்கு 103 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்து வந்த போதிலும் முக்கடல் அணை நீர்மட்டம் மைனஸ் அடியிலேயே உள்ளது. பேச்சிப்பாறை அணையில் 17.76 அடியும், பெருஞ்சாணி அணையில் 37.05 அடியும் நீர்மட்டம் உள்ளது.
- திற்பரப்பில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது
- கோழிப்போர்விளையில் 32.2 மில்லி மீட்டர் பதிவு
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக குளுகுளு சீசன் நிலவுகிறது. நேற்று இரவும் விடிய, விடிய மழை பெய்தது. இன்று காலையிலும் மழை நீடித்தது.
நாகர்கோவிலில் இன்று அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை இடைவிடாது மழை பெய்து கொண்டே இருந்தது. அதன்பிறகு வானம் மப்பும் மந்தாரமு மாக காணப்பட்டது. அவ் வப்போது மழை பெய்தது. கோழிப்போர்விளையில் 2 மணி நேரத்துக்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. அங்கு அதிகபட்சமாக 32.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
களியல், தக்கலை, அடையாமடை, கொட்டா ரம், மயிலாடி மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. திற்பரப்பு அருவிப்பகுதியில் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. விடுமுறை தினமான இன்று அருவியில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தி ருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் தொடர்ந்து மழை நீடித்து வருவதால் பேச்சிப்பாறை அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து சற்று அதிகரித்து உள்ளது.
பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 17.56 அடியாக உள்ளது. அணைக்கு 677 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 581 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. பெருஞ் சாணி அணை நீர்மட்டம் 37.50 அடியாக உள்ளது. அணைக்கு 213 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. 200 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படு கிறது. தொடர் மழையின் காரணமாக விளவங்கோடு தாலுகாவில் வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக் கும் காயம் ஏற்பவில்லை. விவசாயிகள் கும்பப்பூ சாகுபடி பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
வி வசாயிகளுக்கு தேவையான விதைகளை வேளாண் துறை அதி காரிகள் தங்கு தடையின்றி வழங்கி வருகிறார்கள்.மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை 7.6, பெருஞ்சாணி 17.2, பூதப்பாண்டி 6.4, களியல் 20.6, குழித்துறை 26.4, கொட்டாரம் 14, மயிலாடி 8.4, நாகர்கோவில் 7.2, சுருளோடு 17, தக்கலை 19, குளச்சல் 6, இரணியல் 8.2, பாலமோர் 19.4, மாம் பழத்துறையாறு 20.6, திற்பரப்பு 16.8, கோழிப் போர்விளை 32.2, அடையாமடை 14.3, குந்தன்கோடு 14.4, ஆணைக்கிடங்கு 8.4, முக்கடல் 9.2.
- களியலில் 76.6 மில்லி மீட்டர் மழை பதிவு
- பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளிலும் பேச்சிபாறை, பெருஞ் சாணி, சிற்றாறு அணை பகுதிகளிலும் தொடர்ந்து மழை கொட்டி தீர்த்து வருகிறது.
களியல், ஆணைக் கிடங்கு, குழித்துறை, பூதப்பாண்டி, அடையா மடை மற்றும் அதன் புற நகர் பகுதிகளிலும் மழை பெய்தது. களியலில் அதிகபட்சமாக 76.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. திற்பரப்பு அருவி பகுதியில் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வரு கிறது.
விடுமுறை தினமான இன்று அருவியில் குளிப்ப தற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை, பெருஞ் சாணி, அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. சிற்றாறு அணைக்கும் கூடுதல் தண்ணீர் வந்து கொண்டி ருப்பதையடுத்து அணையில் இருந்து மீண்டும் பாச னத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
பேச்சிபாறை அணை நீர்மட்டம் இன்று காலை 36.16 அடியாக இருந்தது.
அணைக்கு 1150 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 274 கன அடி தண்ணீர் வெளியேற்றப்ப டுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 64.80 அடியாக உள்ளது. அணைக்கு 584 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. சிற்றாறு- 1 அணை யின் நீர்மட்டம் 15.38 அடியாக உள்ளது. அணைக்கு 269 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்ப டுகிறது. சிற்றாறு 2 அணை நீர்மட்டம் 15.48 அடியாக வும், பொய்கை நீர்மட்டம் 9 அடியாகவும், மாம்பழத் துறையாறு நீர்மட்டம் 37.73 அடியாகவும் உள்ளது.
நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப் படும் முக்கடல் அணை நீர்மட்டம் 16.60 அடியாக உள்ளது. மாவட்டம் முழு வதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிபாறை 59.2, பெருஞ்சாணி 21.2, சிற்றார்-1 24.2, சிற்றார்-2 22.4, பூதப்பாண்டி 1.2, களியல் 76.6, குழித்துறை 17.8, புத்தன் அணை-21.2, சுருளோடு 13.6, தக்கலை 8.2, பாலமோர் 41.6, மாம்பழத்துறையாறு 2.8, திற்பரப்பு 63.7, அடையா மடை 4.2, ஆணைக்கிடங்கு 3.
- திற்பரப்பு அருவியில் 7-வது நாளாக குளிக்க தடை
- கோழிப்போர்விளையில் 92.8 மில்லி மீட்டர் பதிவு
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்து வருவதால் குளுகுளு சீசன் நிலவுகிறது. மலையோர பகுதிகளிலும் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் சென்னை வானிலை மையம் குமரி மாவட்டத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று எச்சரித்து உள்ளது. அதன்படி மாவட் டம் முழுவதும் பரவலாக கன மழை பெய்து வருகிறது. நேற்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கன மழை கொட்டி தீர்த்தது. நாகர்கோவிலில் இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமுமாக காணப் பட்டது.
கோழிப்போர்விளையில் கனமழை கொட்டி தீர்த்தது. அங்கு அதிக பட்சமாக 92.8 மில்லி மீட்டர் மழை பதிவா கியுள்ளது. குருந்தன்கோடு, மயிலாடி, கொட்டாரம், கன்னிமார், தக்கலை, இரணியல், ஆரல்வாய் மொழி மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
மலையோர பகுதியான பாலமோர், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப் பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்துள்ளது.
அணைகளின் நீர்மட் டத்தை பொதுப்பணித் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். சிற்றாறு அணைகளுக்கு வரக்கூடிய நீர் வரத்து குறைய தொடங்கிய தையடுத்து அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரின் அளவு படிப்படியாக குறைக்கப் பட்டு வருகிறது. சிற்றாறு அணைகளிலிருந்து வெளி யேற்றப்பட்ட உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டதை யடுத்து கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சற்று குறைய தொடங்கி யுள்ளது.
இருப்பினும் திற்பரப்பில் மழை பெய்து வருவதால் அருவியில் தண்ணீர் ஆர்ப்ப ரித்து கொட்டி வருகிறது. அருவியில் குளிப்பதற்கு இன்று 7-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை நீடிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 39.23 அடியாக இருந்தது. அணைக்கு 1570 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 226 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படு கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 68.35 அடியாக இருந்தது. அணைக்கு 1116 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்ப டுகிறது.
நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர மட்டம் நேற்று ஒரே நாளில் 1¼ அடி உயர்ந்துள்ளது. அணை நீர்மட்டம் இன்று காலை 20.70 அடியாக இருந்தது. மாம்பழத்துறை யாறு அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 49.70 அடியாக உள்ளது.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- பேச்சிபாறை 53.6, பெருஞ்சாணி 57.4, சிற்றார்1- 18, சிற்றார்-2 25.6, பூதப்பாண்டி 22.4, களியல் 35.8, கன்னிமார் 41.8, கொட்டாரம் 17.4, குழித்துறை 11.6, மயிலாடி16.4, நாகர்கோவில் 19.4, புத்தன்அணை 54.6, சுருளோடு 46.4, தக்கலை 55, குளச்சல் 18.4, இரணியல் 26, பாலமோர் 52.2, மாம்பழத்துறையாறு 41.8, திற்பரப்பு 33.8, ஆரல்வாய்மொழி 7.2, கோழிப்போர்விளை 92.8, அடையாமடை 49.1, குருந்தன்கோடு 26, முள்ளங்கினாவிளை 57.4, ஆணைக்கடங்கு 38.4, முக்கடல் 22.2.
தொடர் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் ஏற்கனவே 75-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இந்த நிலையில் நேற்று மேலும் 5 வீடுகள் இடிந்துள்ளன. கல்குளம் தாலுகாவில் 4 வீடுகளும், விளவங்கோடு தாலுகாவில் ஒரு வீடும் இடிந்துள்ளது. மேற்கு மாவட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை நீடித்து வருவதால் ரப்பர் பால் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
ரப்பர் மரங்களில் உள்ள சிரட்டைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலை யின்றி தவித்து வருகிறார்கள். தோவாளை, செண்பக ராமன் புதூர் பகுதியில் செங்கல் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையின் காரண மாக செங்கல் விலை உயர்ந்துள்ளது.
- கொட்டாரத்தில் 74.6 மில்லி மீட்டர் பதிவு
- மாம்பழத்துறையாறு அணை நிரம்பியது
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்து வரும் க னமழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளு குளு சீசன் நிலவுகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி யுள்ளது.
குறிப்பாக மேற்கு மாவட்ட பகுதியான வைக்கலூர், முஞ்சிறை பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். வீடுகளை சூழ்ந்த வெள்ளம் வடியாத நிலையில் மீண்டும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கொட்டாரம் பகுதியில் நேற்று மாலை இடி-மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையின் காரணமாக அந்த பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
கொட்டாரம், அகஸ்தீஸ்வரம், சந்தையடி பகுதிகளில் ரோடுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய தால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். கொட்டாரத்தில் அதிகபட்ச மாக 74.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நாகர்கோவில் பகுதியில் விட்டுவிட்டு தினமும் மழை பெய்து வருகிறது.
பூதப்பாண்டி, சுருளோடு, தக்கலை, குளச்சல், இரணியல், ஆரல்வாய்மொழி, கோழிப்போர்விளை, அடை யாமடை, குருந்தன்கோடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது. பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைகளின் நீர்மட்டத்தை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.
சிற்றாறு அணைப்பகு தியில் மழை சற்று குறைந்துள்ளது. இதனால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைய தொடங்கி யுள்ளது. அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரின் அளவு குறைக்கப் பட்டுள்ளது. இதனால் கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைய தொடங்கியுள்ளது. திற்ப ரப்பில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. அங்கு மழை விட்டுவிட்டு பெய்து வருவதால் ரம்யமான சூழல் நிலவுகிறது.
9 நாட்களுக்கு பிறகு அருவியில் குளிப்பதற்கு இன்று அனுமதி அளிக்கப பட்டுள்ளது. சுற்றுலா பயணி கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். மாம்பழத்துறையாறு அணை கடந்த 2-ந்தேதி 3.28 அடியாக இருந்தது. அதன்பிறகு கொட்டி தீர்த்த மழையின் காரணமாக அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. 21 நாட்களில் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. முழு கொள்ளள வான 54.12 அடி எட்டி நிரம்பி வழிவதையடுத்து அணைகளுக்கு வரக்கூடிய தண்ணீரை பாசனத்திற்காக திறந்து விட்டுள்ளனர்.
இதேபோல் முக்கடல் அணையும் நிரம்பி வருகிறது. நாளைக்குள் முக்கடல் அணை முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்ப டுகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 40.46 அடியாக உள்ளது. அணைக்கு 704 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணை யில் இருந்து 229 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி நீர்மட்டம் 69.75 அடியாக உள்ளது. அணைக்கு 496 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. முக்கடல் அணை நீர்மட்டம் 23.50 அடியாக உள்ளது. தொடர் மழையின் கார ணமாக மாவட்டம் முழுவதும் ஏற்கனவே 125-க்கு மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளது.
நேற்று அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் மழைக்கு மேலும் ஒரு வீடு இடிந்துள் ளது. பல்வேறு இடங்களில் நடவு செய்யப்பட்ட நெற்ப யிர்களும், அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களும் மூழ்கியுள்ளதால் விவசா யிகள் கவலை அடைந்துள்ள னர்.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பெருஞ்சாணி 2.8, சிற்றார் 1-28.2, சிற்றார் 2-32.6, பூதப்பாண்டி 5.2, களியல் 7.4, கன்னிமார் 5.8, கொட்டாரம் 74.6, மயிலாடி 43.2, நாகர்கோவில் 27.2, தக்கலை 22.4, குளச்சல் 13, இரணியல் 15.6, மாம்பழத்துறையாறு 45, திற்பரப்பு 8.2, ஆரல் வாய்மொழி 35, கோழிபோர்விளை 5.3, அடையாமடை 17.2, குருந் தன்கோடு 35.4, ஆணை கிடங்கு 43.6, முக்கடல் 15.4.
- திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
- பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் தற்போது 70.55 அடியாக உள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிறைந்தன. அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. சிற்றாறு-1, சிற்றாறு-2 மற்றும் மாம் பழத்துறையாறு அணைகள் முழு கொள்ளளவை எட்டியதால், அந்த அணைகளுக்கு வந்த தண்ணீர் அப்படியே திறந்து விடப்பட்டது.
இதனால் திற்பரப்பு அருவி, மாவட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் நகர் பகுதிகளில் மழை சற்று குறைந்தது. ஆனால் மலையோர பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று மாலையும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. அடையாமடையில் 58 மில்லி மீட்டரும், பெருஞ்சாணி அணை பகுதியில் 42.4 மில்லி மீட்டரும், புத்தன் அணை பகுதியில் 42 மில்லி மீட்டரும் பெய்தது.
இந்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 77 அடி கொள்ளளவு கொண்டபெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் தற்போது 70.55 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 581 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 41.10 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 568 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 220 கன அடி தண்ணீர் வெளியேற்றப் பட்டு வருகிறது.
வழக்கமாக பேச்சிப்பாறை அணையில் 42 அடியும், பெருஞ்சாணி அணையில் 72 அடியும் தண்ணீர் எட்டப்பட்டால், வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். தற்போது அந்த அளவை அணைகள் நெருங்கி வருவதால் நீர் மட்டத்தை பொதுப் பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
தொடர்மழையின் கார ணமாக திற்பரப்பு அருவியி லும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அங்கு ஆனந்தமாக நீராட ஏரா ளமானோர் குவிந்துள்ள னர். சனி, ஞாயிறு மற்றும் சரஸ்வதி பூஜை விடுமுறை என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் தமிழகத்தின் பல பகுதிகள் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் சுற்றுலா பயணி கள் வந்துள்ளதால் திற்ப ரப்பு அருவி, தடாகம், பூங்கா போன்றவை களை கட்டி காணப்பட்டது.மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
அடையாமடை 58, பெருஞ்சாணி 42.4, புத்தன்அணை 42, பாலமோர் 41.4, திற்பரப்பு 37.5, சுருளகோடு 36.4, சிற்றாறு 1-35.2, களியல் 29.6, தக்கலை 26.3, கோழிப்போர்விளை 23.4, சிற்றாறு-2 (சிவலோகம்) 22.4, நாகர்கோவில் 21.4, குழித்துறை 18.8, முள்ளங் கினாவிளை 18.6, பூதப் பாண்டி 15.2, மாம்பழத்து றையாறு 12, முக்கடல் அணை 8.6, ஆணைக்கிடங்கு 8.4, கன்னிமார் 6.2, இரணி யல் 6.2, பேச்சிப்பாறை 4, குளச்சல் 3.