என் மலர்
நீங்கள் தேடியது "நீரஜ் சோப்ரா"
- பெங்களூருவில் நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி அடுத்த மாதம் (மே) 24 -ந்தேதி நடக்கிறது.
- இதில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமுக்கு, நீரஜ் சோப்ரா அழைப்பு விடுத்தார்.
லாகூர்:
ஒலிம்பிக்கில் 2 பதக்கங்கள் (தங்கம் மற்றும் வெள்ளி) வென்று சாதனை படைத்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் 'நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி' நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டி பெங்களூருவில் அடுத்த மாதம் (மே) 24 -ந்தேதி நடக்கிறது.
2 முறை உலக சாம்பியனான ஆண்டர்சன் பீட்டர்ஸ் (கிரனடா), 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற தாமஸ்ரோஹ்லர் (ஜெர்மனி), 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற ஜூலியஸ் யெகோ (கென்யா), கர்டிஸ் தாம்சன் (அமெரிக்கா) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்கிறார்கள்.
இதில் பங்கேற்க 2024-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமுக்கு, நீரஜ் சோப்ரா அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில் நீரஜ் சோப்ராவின் இந்த அழைப்பை நதீம் நிராகரித்தார். கொரியாவில் மே 22-ந்தேதி நடைபெறும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ப இருப்பதால் தன்னால் கலந்து கொள்ள இயலாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
- தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் ஒலிம்பிக் தங்கம் பதக்கம் பெற்றுக் கொடுத்தவர்.
- இந்திய வீரர் நீரஜ் சோப்ரா குறித்து 812 கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளது.
தடகளத்தில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் நீரஜ் சோப்ரா. ஜப்பானில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் ஈட்டி எறியும் போட்டியில் தங்கம் வென்று சாதனைப் படைத்தார். அமெரிக்காவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் 2-வது இடம் பிடித்து அசத்தினார். 2003-ம் ஆண்டு நீளம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் வெண்கலம் வென்றார். அதன்பின் தடகளத்தில் பதக்கம் வென்றவர் நீரஜ் சோப்ராதான்.
உலகளாவிய தடகள வீரர்கள் வீராங்கனைகள் குறித்த கட்டுரைகள் எழுதப்படுவது குறித்து நிறுவனம் ஒன்று ஆய்வு நடத்தியதால், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா குறித்து 812 கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளது. இதன்மூலம் 2022-ல் அதிக கட்டுரைகள் எழுதப்பட்ட வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இதற்கு முன் உசைன் போல்ட் தொடர்ந்து முதலிடம் பிடித்து வந்துள்ளார். தற்போது நீர்ஜ் சோப்ரா அவரை பின்னுக்கு தள்ளியுள்ளார்.
2017-ல் ஓய்வு பெற்ற உசைன் போல்ட் குறித்து 574 கட்டுரைகள் வெளியாகியுள்ளன.
ஜமைக்கானவின் தடகள வீராங்கனை எலைன் தாம்சன்-ஹெரா குறித்து 751 கட்டுரைகள் வெளியாகியுள்ளன.
- பெண்கள் ஜூனியர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் கோப்பையை வென்று வரலாறு படைத்தது.
- இந்திய அணியினருக்கு ரூ.5 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
பெண்களுக்கான முதலாவது ஜூனியர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) கடந்த 14-ந்தேதி தென்ஆப்பிரிக்காவில் தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் சூப்பர்சிக்ஸ் சுற்று முடிவில் இந்தியாவும், இங்கிலாந்தும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
இந்த நிலையில் இவ்விரு அணிகளில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிஆட்டம் போட்செப்ஸ்ட்ரூமில் நேற்று நடந்தது. இதில் 'டாஸ்' ஜெயித்த இந்திய கேப்டன் ஷபாலி வர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து வீராங்கனைகள் இந்திய பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தகிடுதத்தம் போட்டனர். 17.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த அந்த அணி 68 ரன்னில் சுருண்டது.
அடுத்து சுலப இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 14 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 69 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று உலகக் கோப்பையை உச்சிமுகர்ந்தது. இந்தியாவின் திதாஸ் சாது ஆட்டநாயகி விருதையும், இங்கிலாந்து கேப்டன் கிரேஸ் ஸ்கிரிவென்ஸ் தொடர்நாயகி விருதையும் பெற்றனர்.
பெண்கள் கிரிக்கெட்டில் இதற்கு முன்பு எந்த வடிவிலான உலகக் கோப்பைபையும் இந்தியா வென்றதில்லை. இந்திய சீனியர் அணி 3 முறை இறுதி ஆட்டத்தில் தோற்று இருக்கிறது. ஆனால் இந்திய இளம் படை, அறிமுக உலகக்கோப்பை தொடரிலேயே பட்டம் வென்று சாதித்துள்ளது. அவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இந்த போட்டியை இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ரா நேரில் சென்று கண்டு களித்தார்.
இந்நிலையில் வரலாற்று சாதனை படைத்த ஜூனியர் மகளிர் அணிக்கு இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ரா தலை வணங்கி வாழ்த்தை தெரிவித்தார். பின்னர் அனைத்து வீராங்கனைகளுக்கு கைகுழுக்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
மேலும் இந்தியா-நியூசிலாந்து இடையிலான கடைசி 20 ஓவர் போட்டியை நேரில் பார்க்க ஷபாலி வர்மா தலைமையிலான இந்திய ஜூனியர் அணிக்கு பிசிசிஐ செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நீரஜ் சோப்ரா 88.67 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து முதல் இடத்தைப் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
- 2022ம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சோப்ரா வெள்ளி வென்றார்.
கத்தாரில் தோஹா டையமண்ட் லீக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார்.
2022ம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சோப்ரா வெள்ளி வென்றார். அதனால், இந்த முறையும் அவர் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் நீரஜ் சோப்ரா 88.67 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து முதல் இடத்தைப் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். செக் குடியரசு வீரர் ஜேக்கப் வேட்லக்(88.63 மீட்டர்) இரண்டாவது இடத்தையும், கிரெனடா வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸ்(85.88 மீட்டர்) மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
- தோஹா டயமண்ட் லீக்கில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.
- நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
கத்தாரில் தோஹா டையமண்ட் லீக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார்.
இதற்கிடையே, நீரஜ் சோப்ரா 88.67 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து முதல் இடத்தைப் பிடித்து தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
இந்நிலையில், தோஹாவில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், ஆண்டின் முதல் நிகழ்வு மற்றும் முதல் இடம். நீரஜ் சோப்ரா 88.67 மீட்டர் எறிந்து தோஹா டயமண்ட் லீக்கில் ஜொலித்தார். அவருக்கு வாழ்த்துகள்! அவரின் முன்னோக்கிய முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்
- ஈட்டி எறிதல் தரவரிசையில் உலகின் முதல் நிலை வீரரானார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா.
- ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு தங்கம் வென்று கொடுத்த முதல் தடகள வீரர் நீரஜ் சோப்ரா.
புதுடெல்லி:
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு தங்கம் வென்று கொடுத்த முதல் தடகள வீரர் நீரஜ் சோப்ரா.
கடந்த 5-ம் தேதி தோஹா டயமண்ட் லீக்கில் தங்கம் வென்றதன் மூலம் தனது 2023 சீசனை வெற்றிகரமாக தொடங்கியுள்ளார். இந்தப் போட்டியில் நீரஜ் சோப்ரா 88.67 மீட்டர் தூரம் எறிந்து சாதனை படைத்தார்.
இந்நிலையில், ஈட்டி எறிதல் வீரர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
நீரஜ் சோப்ரா 1,455 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார். ஆண்டர்சன் பீட்டர்ஸ் என்ற வீரர் ௧,433 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளார்.
இதையடுத்து, உலக தடகள வரிசையில் முதலிடம் பிடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார் நீரஜ் சோப்ரா.
- ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்தவர் நீரஜ் சோப்ரா.
- டைமண்ட் லீக் தடகள போட்டியில் 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் நீரஜ் சோப்ரா.
லாசானே:
டைமண்ட் லீக் தடகள போட்டிகளில் ஒன்று சுவிட்சர்லாந்தின் லாசானே நகரில் இன்று நடந்தது.
இதில் ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்தவரான இந்திய வீரர் நீரஜ் சோப்ரா களம் கண்டார். நீரஜ் சோப்ரா 87.66 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
ஜெர்மனியின் ஜூலியன் வெப்பர் இரண்டாவது இடமும், செக் குடியரசின் ஜாகுப் வாட்லெஜ் மூன்றாமிடமும் பிடித்தார்.
இதன்மூலம் டைமண்ட் லீக் தடகள போட்டியில் நீரஜ் சோப்ரா 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
- நீரஜ் சோப்ரா தலைமையில் 28 பேர் கொண்ட இந்திய அணி இந்த போட்டியில் பங்கேற்கிறது.
- ஆசிய சாதனையாளரான குண்டு எறிதல் வீரர் தஜிந்தர் பால்சிங் தூர் காயத்தில் இருந்து மீளாததால் அணியில் இடம்பெறவில்லை.
புதுடெல்லி:
19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் வருகிற 19-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியை, இந்திய தடகள சம்மேளனம் நேற்று அறிவித்தது. ஒலிம்பிக் சாம்பியனான ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தலைமையில் 28 பேர் கொண்ட இந்திய அணி இந்த போட்டியில் பங்கேற்கிறது.
ஆசிய சாதனையாளரான குண்டு எறிதல் வீரர் தஜிந்தர் பால்சிங் தூர் காயத்தில் இருந்து மீளாததால் அணியில் இடம்பெறவில்லை. தேசிய சாதனை படைத்த நீளம் தாண்டுதல் வீரர் தேஜஸ்வின் சங்கர், 800 மீட்டர் ஓட்டப்பந்தய வீராங்கனை சந்தா, 20 கிலோ மீட்டர் தூர நடைப்பந்தய வீராங்கனை பிரியங்கா கோஸ்வாமி ஆகியோர் ஆசிய விளையாட்டு போட்டியில் (செப்டம்பர் 23-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை) கவனம் செலுத்தும் பொருட்டு இந்த போட்டியில் இருந்து விலகி இருக்கின்றனர். தமிழக வீரர்களான சந்தோஷ்குமார், பிரவீன் சித்ரவேல், ஜெஸ்வின் ஆல்ட்ரின், ராஜேஷ் ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது.
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணி வருமாறு:-
பெண்கள்: ஜோதி யர்ராஜி (100 மீட்டர் தடை ஓட்டம்), பாருல் சவுத்ரி (3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ்), ஷைலி சிங் (நீளம் தாண்டுதல்), அன்னு ராணி (ஈட்டி எறிதல்) பாவ்னா ஜாட் (20 கிலோ மீட்டர் நடைபந்தயம்).
ஆண்கள்: கிரிஷன் குமார் (800 மீட்டர் ஓட்டம்), அஜய்குமார் சரோஜ் (1,500 மீட்டர் ஓட்டம்), சந்தோஷ் குமார் (400 மீட்டர் தடைஓட்டம்), அவினாஷ் சாப்லே (3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ்), சர்வேஷ் அனில் குஷாரே (உயரம் தாண்டுதல்), ஜெஸ்வின் ஆல்ட்ரின் (நீளம் தாண்டுதல்), ஸ்ரீசங்கர் (நீளம் தாண்டுதல்), பிரவீன் சித்ரவேல், அப்துல்லா அபூபக்கர், எல்தோஸ் பால் (மூவரும் டிரிபிள் ஜம்ப்), நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்), டி.பி.மானு (ஈட்டி எறிதல்), கிஷோர் குமார் (ஈட்டி எறிதல்), ஆகாஷ்தீப் சிங், விகாஷ் சிங், பரம்ஜீத் சிங் (மூவரும் 20 கிலோ மீட்டர் நடைபந்தயம்), ராம் பாபூ (35 கிலோ மீட்டர் நடைபந்தயம்), அமோஜ் ஜேக்கப், முகமது அஜ்மல், முகமது அனாஸ், ராஜேஷ், அனில் ராஜலிங்கம், மிஜோ சாக்கோ குரியன் (6 பேரும் 400 மீட்டர் தொடர் ஓட்டம்).
- உலகின் அதிவேக மனிதர் யார்? என்பதை நிர்ணயிக்கும் 100 மீட்டர் ஓட்டம் நாளை இரவு அரங்கேறுகிறது.
- முதல் நாளான இன்று 20 கிலோ மீட்டர் நடைபந்தயம் நடக்கிறது.
புடாபெஸ்ட்:
19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. 27-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் சுமார் 200 நாடுகளைச் சேர்ந்த 2,100-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். தடகளத்தின் உச்சக்கட்ட போட்டி என்பதால் இதில் பதக்கம் வெல்வது அவ்வளவு எளிதல்ல.
40 ஆண்டுகால உலக தடகள சாம்பியன்ஷிப் வரலாற்றில் இந்தியா இதுவரை 2 பதக்கம் மட்டுமே வென்றுள்ளது. 2003-ம் ஆண்டு பாரீஸ் உலக தடகளத்தில் நீளம் தாண்டுதலில் அஞ்சு ஜார்ஜ் வெண்கலமும், கடந்த ஆண்டு போட்டியில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றி இந்தியாவுக்கு பெருமை சேர்த்தனர்.
இந்த முறை இந்திய தரப்பில் 27 வீரர், வீராங்கனைகள் சென்றிருந்தாலும் ஒரே எதிர்பார்ப்பு ஒலிம்பிக் சாம்பியனான ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா மீதே உள்ளது. அவர் தங்கப்பதக்கம் வென்றால் துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ராவுக்கு பிறகு ஒலிம்பிக் மற்றும் உலக போட்டியில் மகுடம் சூடிய 2-வது இந்தியர் என்ற சிறப்பை பெறுவார்.
25 வயதான நீரஜ் சோப்ராவுக்கு செக்குடியரசின் ஜாகுப் வாட்லெஜ், ஜெர்மனியின் ஜூலியன் வெப்பர், நடப்பு சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் ஆகியோர் கடும் சவாலாக இருப்பார்கள்.
கடந்த ஆண்டு உலக தடகளத்தில் 88.13 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, சுவீடனில் நடந்த டைமண்ட் லீக்கில் 89.94 மீட்டர் தூரம் வரை ஈட்டி வீசினார். 90 மீட்டர் இலக்கை அடைய தீவிரம் காட்டுகிறார். அதை அவர் அடைந்தால் நிச்சயம் பதக்கமேடையில் ஏறுவார் என்பதில் சந்தேகமில்லை. '90 மீட்டர் இலக்கை எட்டுவதற்கு எனக்கு அற்புதமான ஒரு நாளுடன் சாதகமான சீதோஷ்ண நிலை அமைந்தால் போதும். நிச்சயம் அதை என்னால் எட்ட முடியும் என்று நம்புகிறேன்' என்று நீரஜ் குறிப்பிட்டார். ஈட்டி எறிதலில் 25-ந்தேதி தகுதி சுற்றும், 27-ந்தேதி இரவு பதக்கத்துக்கான இறுதி சுற்றும் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் மற்றொரு எதிர்பார்ப்பு நிறைந்த பந்தயமான உலகின் அதிவேக மனிதர் யார்? என்பதை நிர்ணயிக்கும் 100 மீட்டர் ஓட்டம் நாளை இரவு அரங்கேறுகிறது. நடப்பு சாம்பியன் பிரெட் கெர்லி (அமெரிக்கா), இங்கிலாந்தின் ஜார்னெல் ஹூயூக்ஸ், கென்யாவின் பெர்டினன்ட் ஒமன்யாலா ஆகியோரில் ஒருவர் பட்டம் வெல்ல வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு உலக தடகளத்தில் 13 தங்கம் உள்பட 33 பதக்கங்களை அள்ளி முதலிடம் பிடித்த அமெரிக்கா இந்த தடவையும் வெகுவாக ஆதிக்கம் செலுத்தும் என்று தெரிகிறது. அமெரிக்கா அதிகபட்சமாக 138 வீரர், வீராங்கனைகளை களம் இறக்குகிறது.
முதல் நாளான இன்று 20 கிலோ மீட்டர் நடைபந்தயம் நடக்கிறது. மற்றபடி நீளம் தாண்டுதல், 1,500 மீட்டர் ஓட்டம், டிரிபிள் ஜம்ப் ஆகியவற்றில் தகுதி சுற்று நடக்கிறது.
இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வருமாறு:-
பெண்கள்: ஜோதி யர்ராஜி (100 மீட்டர் தடை ஓட்டம்), பாருல் சவுத்ரி (3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ்), ஷைலி சிங் (நீளம் தாண்டுதல்), அன்னு ராணி (ஈட்டி எறிதல்).
ஆண்கள்: கிரிஷன் குமார் (800 மீ. ஓட்டம்), அஜய்குமார் சரோஜ் (1,500 மீ. ஓட்டம்), சந்தோஷ் குமார் (400 மீ. தடைஓட்டம்), அவினாஷ் சாப்லே (3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ்), சர்வேஷ் அனில் குஷாரே (உயரம் தாண்டுதல்), ஜெஸ்வின் ஆல்ட்ரின் (நீளம் தாண்டுதல்), ஸ்ரீசங்கர் (நீளம் தாண்டுதல்), பிரவீன் சித்ரவேல், அப்துல்லா அபூபக்கர், எல்தோஸ் பால் (மூவரும் டிரிபிள் ஜம்ப்), நீரஜ் சோப்ரா, டி.பி.மானு, கிஷோர் குமார் (3 பேரும் ஈட்டி எறிதல்), ஆகாஷ்தீப் சிங், விகாஷ் சிங், பரம்ஜீத் சிங் (மூவரும் 20 கிலோ மீட்டர் நடைபந்தயம்), ராம் பாபூ (35 கிலோ மீட்டர் நடைபந்தயம்), அமோஜ் ஜேக்கப், முகமது அஜ்மல், முகமது அனாஸ், ராஜேஷ், அனில் ராஜலிங்கம், மிஜோ சாக்கோ குரியன் ( 6 பேரும் 400 மீட்டர் தொடர் ஓட்டம்).
- அடுத்த ஆண்டு பாரிசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு நீரஜ் சோப்ரா நேரடியாக தகுதி பெற்றார்.
- இந்த ஆண்டு 90 மீட்டர் ஓட்டத்தை எவரும் தாண்டவில்லை.
19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. இன்று ஆடவர் ஈட்டி எறிதல் போட்டி நடைபெற்றது. இதில், இறுதிப்போட்டிக்கு தகுதி பெற 83.00 மீட்டர் வீச வேண்டும்.
ஆனால் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா முதல் முயற்சியிலேயே 88.77மீ. தூரத்தை எட்டி இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளார். இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
இதன் மூலம் அடுத்த ஆண்டு பாரிசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கும் நீரஜ் சோப்ரா தகுதி பெற்றார்.
- நள்ளிரவு வரை தூங்காமல் எனது போட்டியை ஆவலுடன் பார்த்த இந்திய மக்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.
- பாகிஸ்தான் வீரர் அர்ஷாத் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
புடாபெஸ்ட்:
19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அங்கேரி தலைநகர் புடா பெஸ்டில் கடந்த கடந்த 19-ந்தேதி தொடங்கியது. நேற்று கடைசி நாள் போட்டிகள் நடைபெற்றது.
9 தினங்கள் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 200 நாடுகளில் இருந்து 2 ஆயிரத்து மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் 28 பேர் (23 வீரர்கள், 5 வீராங்கனைகள்) 15 பிரிவில் பங்கேற்றனர்.
ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி நேற்று இரவு 11.45 மணிக்கு தொடங்கியது. நீரஜ் சோப்ரா, டி.பி.மானு, கிஷோர் குமார் ஜெனா ஆகிய 3 இந்திய வீரர்கள் தகுதி பெற்றனர். 12 பேர் இதில் பங்கேற்றனர்.
அனைவரும் எதிர்பார்த்தப்படி நீரஜ் சோப்ரா தங்கம் வென்று முத்திரை பதித்தார். அவர் 88.17 மீட்டர் தூரம் எறிந்தார். அவர் தனது 2-வது வாய்ப்பில் இதை எறிந்து முதல் இடத்தை பிடித்து தங்கம் வென்றார்.
25 வயதான நீரஜ் சோப்ராவின் முதல் வாய்ப்பு பவுலாக அமைந்தது. 3-வது வாய்ப்பில் 86.32 மீட்டரும், அதைத்தொடர்ந்து 84.64 மீட்டரும், 87.73 மீட்டரும், 83.98 மீட்டரும் எறிந்தார்.
பாகிஸ்தான் வீரர் அர்ஷாத் நதீம் 87.82 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளி பதக்கமும், செக்குடியரசுவை சேர்ந்த ஜாகுப் வேட்லெஜ் 86.67 மீட்டர் தூரம் எறிந்து வெண்கல பதக்கமும் பெற்றனர்.
உலக தடகள போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் நீரஜ்சோப்ரா புதிய வரலாறு படைத்தார்.
40 ஆண்டுகால வரலாற்றில் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியா இதுவரை தங்கப்பதக்கம் பெற்றது இல்லை. நீரஜ் சோப்ரா தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.
கடந்த ஆண்டு அமெரிக்காவில் உள்ள ஒரேகானில் நடந்த உலக தடகள போட்டியில் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் பெற்றார். தற்போது அதில் இருந்து முன்னேறி புதிய முத்திரை பதித்தார்.
நீரஜ்சோப்ரா ஏற்கனவே டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று வரலாறு படைத்து இருந்தார்.
உலக தடகள போட்டியில் இந்தியா இதுவரை 3 பதக்கத்தை பெற்றுள்ளது. 2003-ம் ஆண்டு பாரீசில் நடந்த போட்டியில் நீளம் தாண்டுதலில் அஞ்சு பாபி ஜார்ஜ் வெண்கல பதக்கம் பெற்று இருந்தார்.
தங்கம் வென்று புதிய வரலாறு படைத்தால் நீரஜ் சோப்ரா மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார். இந்த பதக்கம் இந்திய மக்களுக்கானது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நீரஜ்சோப்ரா கூறியதாவது:-
நள்ளிரவு வரை தூங்காமல் எனது போட்டியை ஆவலுடன் பார்த்த இந்திய மக்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்த தங்கப் பதக்கம் இந்திய மக்களுக்கானது.
நான் ஒலிம்பிக் சாம்பியன். தற்போது உலக சாம்பியன். தொடர்ந்து பல்வேறு துறைகளில் கடினமாக உழைக்க வேண்டும். உலகில் பெயர் எடுக்க வேண்டும்.
போட்டிக்கு முன்பு நான் எனது செல்போனை அதிகமாக பயன்படுத்துவதில்லை. ஆனால் 'நேற்று நான் பார்த்தேன். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் போட்டி என்று தான் முதலில் பார்த்தேன். ஆனால் ஐரோப்பிய வீரர்கள் ஆபத்தானவர்கள். எந்த நேரத்திலும் அவர்கள் மிகப்பெரிய அளவில் ஈட்டி எறிதலை செய்ய முடியும்.அர்ஷத், ஜாகுப் மற்றும் ஜூலியன் வெப்பர் உள்ளனர். எனவே கடைசி எறிதல் வரை நீங்கள் மற்ற வீரர்கள் எறிவதை பற்றி யோசித்து இருக்க வேண்டும்.
ஆனால் வீசயம் என்னவென்றால் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான ஒப்பீடுகள் இருக்கும்.
ஈட்டி எறிதலில் ஐரோப்பிய நாடுகள் தான் ஆதிக்கம் செலுத்தும். தற்போது இந்தியாவும், பாகிஸ்தானும் நல்ல நிலைக்கு வந்துள்ளன.
பாகிஸ்தான் வீரர் அர்ஷாத் நன்றாக வீசியதை உணர்ந்தேன். தற்போது எங்கள் இரு நாடுகளும் எப்படி வளர்ந்து வருகின்றன என்பதை நாங்கள் விவாதித்தோம். அர்ஷாத் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஐரோப்பிய வீரர்கள் முன்பு இதில் இருந்தனர். ஆனால் தற்போது நாங்கள் அவர்களின் நிலையை அடைந்து உள்ளோம்.
இவ்வாறு நீரஜ் சோப்ரா கூறியுள்ளார்.
ஈட்டி எறிதலில் பங்கேற்ற மற்ற இந்திய வீரர்களான கிஷோர் ஜெனா 5-வது இடத்தையும் (84.77 மீட்டர்), டி.பி.மானு 6-வது இடத்தையும் (84.14 மீட்டர்) பிடித்தனர்.
ஆண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி 5-வது இடத்தை பிடித்தது. முகமது அனாஸ், அமோஜ் ஜேக்கப், முகமது அஜ்மல், ராஜேஷ் ரமேஷ் ஆகியோர் அடங்கிய அணி பந்தய தூரத்தை 2 நிமிடம் 59.92 வினாடியில் கடந்தனர். முன்னதாக தகுதி சுற்றில் இந்திய அணி ஆசிய சாதனையை முறியடித்து இருந்தது.
- இந்தியாவுக்கான முதல் தங்கப் பதக்கம் பெற்றுத் தந்திருக்கும் நீரஜ் சோப்ராவுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
- நீரஜ் சோப்ரா தனக்கென தனி முத்திரையை பதித்திருக்கிறார்.
சென்னை:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதல் பிரிவில் வென்று இந்தியாவுக்கான முதல் தங்கப் பதக்கம் பெற்றுத் தந்திருக்கும் நீரஜ் சோப்ராவுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆசிய விளையாட்டு, காமன்வெல்த், ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்று சாதனை படைத்ததோடு உலக அளவிலும் தங்கம் வென்று நீரஜ் சோப்ரா தனக்கென தனி முத்திரையை பதித்திருக்கிறார்.
விரைவில் நடைபெற உள்ள பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றிருக்கும் நீரஜ் சோப்ரா அங்கும் தங்கம் வென்று வரலாறு படைக்கவும் இந்தியாவுக்கு தொடர்ந்து பெருமை சேர்க்கவும் மனமார வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.