search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 233943"

    • வீடுகளில் வசிப்பவர்கள் மின்சாரம் இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர்.
    • டிரான்ஸ்பார்மர் பொருத்துவதற்கு தேவையான மின்ஓயர்களும் தயார் நிலையில் ஏற்படுத்தப்பட்டது.

    திருத்தணி:

    திருத்தணி ஒன்றியம் வேலஞ்சேரி ஊராட்சிக்குட்பட்டது கெங்குசாமி நகர். இங்கு 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். இவர்களின் வீடுகளுக்கு மின்வாரியம், விவசாய கிணறுகளுக்கு செல்லும் மின்கம்பத்தில் இருந்து இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் மேற்கண்ட வீடுகளுக்கு குறைந்த அழுத்த மின்சாரம் மற்றும் அடிக்கடி மின்சப்ளை துண்டிக்கப்படுகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் விவசாய கிணறுகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கும் போது ஒரு மணி நேரம் மின்சப்ளை நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால் வீடுகளில் வசிப்பவர்கள் மின்சாரம் இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர்.

    இதையடுத்து அந்த பகுதி மக்களின் கோரிக்கை ஏற்று, திருத்தணி மின்வாரிய செயற்பொறியாளர் பாரிராஜ் கெங்குசாமி நகர் பகுதிக்கு தனியாக டிரான்ஸ்பார்மர் அமைத்து தரப்படும் என உறுதி அளித்தார். அதன்படி இரு மாதங்களுக்கு முன் புதிய டிரான்ஸ்பார்மர் அமைப்பதற்கு மின்கம்பங்கள் நட்டப்பட்டது. டிரான்ஸ்பார்மர் பொருத்துவதற்கு தேவையான மின்ஓயர்களும் தயார் நிலையில் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், டிரான்ஸ்பார்மர் பொருத்தப்படாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. எனவே அதிகாரிகள் டிரான்ஸ்பார்மரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • பட்டணம்காத்தான் துணை மின் நிலையத்தில் அதிக திறன் டிரான்ஸ்பார்மர் அமைக்க சட்டமன்ற பொது நிறுவனக்குழு பரிந்துரைந்துள்ளது.
    • 2021-23ம் ஆண்டிற்கான பொது நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுத் தலைவர் ராஜா தலைமையில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், குழு உறுப்பினர்கள் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. (பூந்தமல்லி), தமிழரசி எம்.எல்.ஏ (மானாமதுரை) நாகைமாலி எம்.எல்.ஏ (கீழ்வேளுர்), பாலாஜி எம்.எல்.ஏ (திருப்போரூர்) ஆகியோர் முன்னிலையில் 2021-23ம் ஆண்டிற்கான பொது நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. பொது நிறுவன குழு தலைவர் ராஜா தலைமை வகித்தார்.

    வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, மூன்று சக்கர நாற்காலி, மடக்கு சக்கர நாற்காலி, திறன்பேசி, மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் என 15 பயனாளிகளுக்கு ரூ.1,70,888 லட்சம் மதிப்பீட்டிலான நிவாரண தொகைக்கான ஆணைகளையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.30,108 மதிப்பீட்டிலான இலவச தையல் எந்திரங்களையும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.28,000 மதிப்பீட்டிலான இலவச தையல் எந்திரங்களையும், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் 5 பயனாளிகளுக்கு இணை மானிய திட்டம் மானியம் ரூ.13,58,589 மதிப்பீட்டிலும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.2,25,000 மதிப்பீட்டிலும், இளைஞர்களுக்கான சுய வேலை வாய்ப்பு திட்டம் மூலம் 3 பயனாளிகளுக்கு என மொத்தம் 35 பயனா ளிகளுக்கு ரூ.19.74 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், மாவட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜக்தீஷ் சுதாகர், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவன குழு இணைச் செயலாளர் பாண்டியன், சார்பு செயலாளர் இந்திரா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சேக் மன்சூர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக வாலாந்த ரவை ஊராட்சியில் கோரமண்டல் மின் ஆலை யினை பார்வையிட்டு உற்பத்தி திறன் மற்றும் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருவதை பொது நிறுவன குழுவினர் பார்வையிட்டனர்.

    அதனைத்தொடர்ந்து களிமண்குண்டு ஊராட்சியில் கடற்கரை ஓரமாக மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்தனர். பின்னர் ராமநாதபுரம் பட்டணம்காத்தான் பகுதி யில் உள்ள மின்வாரிய துணை மின் நிலையத்தை பார்வையிட்டு கூடுதல் கொள்ளளவு திறன் மின்மாற்றிகள் அமைக்க அறிவுறுத்தினர்.

    • புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணியால் இன்று முதல் 3 நாட்கள் மின் சப்ளையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • மின் சப்ளையில் ஏற்படும் சிரமங்களை பொது மக்கள் புரிந்து கூடுதல் திறன் உடைய மின்மாற்றி பொருத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பரமக்குடி

    பரமக்குடி நகர் காட்டு பரமக்குடியில் உள்ள துணை மின் நிலையம் கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இருந்த போதிலும் வளர்ந்து வரும் தொழில் நகரமான பரமக்குடி பகுதிக்கு மின் தட்டுப்பாடு நிலவி வந்தது.

    இதனை கருத்தில் கொண்டு மின்சார துறை சார்பில் 16 எம்.வி.ஏ திறன் கொண்ட பவர் டிரான்ஸ்பார்மர் பொருத்தும் பணியை தற்போது தொடங்கியுள்ளது. இந்த பணி இன்று (19-ந் தேதி) முதல் வருகிற 21-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    இதையொட்டி மின் சப்ளையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் சிட்கோ பீடருக்கு காவனூர் உப மின் நிலையம் வழியாகவும், பெருமாள் கோவில், கமுதக்குடி பகுதிகளுக்கு பார்த்திபனூர் உப மின் நிலையம் வழியாகவும், எமனேஸ்வரம் பகுதிக்கு இளையான்குடி உப மின் நிலையம் வழியாகவும் மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    எனவே தொடர்ந்து 3 நாட்களுக்கு மின் சப்ளையில் ஏற்படும் சிரமங்களை பொது மக்கள் புரிந்து கூடுதல் திறன் உடைய மின்மாற்றி பொருத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×