என் மலர்
நீங்கள் தேடியது "கொடி"
- பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் கொடிமரத்தை புனிதம் செய்து கொடி இறக்கப்பட்டது.
- பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி தலைமையில் குடிநீர், பொது சுகாதாரம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவ ட்டம் வேளாங்கண்ணியில் கீழ்த்திசை நாடுகளின் லூர்து நகரம் என போற்றப்படும் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், பெருமைக்கு உரியது.
இதன் ஆண்டு நவநாள் பெருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வந்தது முக்கிய பெருவிழாவான பெரிய சப்பர பவனி நடைபெற்றது
தொடர்ந்து நேற்று புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பேராலய கீழ் கோவிலில் பிறந்தநாள் சிறப்பு திருப்பலி நடைபெற்றது அதனை தொடர்ந்து நேற்று மாலை 6 மணிக்கு பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் கொடிமரத்தை புனிதம் செய்து கொடி இறக்கப்பட்டது ஆலயத்திற்கு உள்ளே எடுத்துச் செல்லப்பட்டது
தொடர்ந்து பேராலய நிர்வாகம் சார்பில் காவல்து றை, தீயணைப்புத் துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட அனைத்து துறைக்கும் நன்றி தெரிவி க்கப்பட்டது.
விழாவில் வேளாங்கண்ணி மாதா பேராலய அதிகாரி இருதயராஜ், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜேசுராஜ் மற்றும் நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவின் பேரில் தஞ்சாவூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கனகராஜ், நாகை சுகாதாரப் பணிகள் உதவி இயக்குனர்விஜய குமார் ஆகியோர் வழிகாட்டு தலின்படி பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி தலைமையில் குடிநீர், பொது சுகாதாரம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லா யிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- 205 அரசு ஊழியர்கள்-45 போலீசாருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது
- மாணவ-மாண விகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் சுதந்திர தினவிழா நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கு வந்த கலெக்டர் அரவிந்த்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் வரவேற்றார். இதை தொடர்ந்து கலெக்டர் அரவிந்த் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.
இதை தொடர்ந்து போலீ சார் அணிவகுப்பு மரியாதை திறந்த ஜீப்பில் சென்று பார்வையிட்டார். மூவர்ண கலரிலான பலூனை பறக்க விட்டார். புறாக்களும் பறக்க விடப்பட்டது. பின்னர் போலீசார், ஊர்க்காவல் படை, என்.சி.சி. மாண வர்களின் மரியாதையை ஏற்று கொண்டார்.
இதை தொடர்ந்து நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 14 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 17,ஆயிரத்து 261 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அரவிந்த் வழங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பாக பணிபுரிந்த 45 போலீ சாருக்கு நற் சான்றிதழ்களை கலெக்டர் அரவிந்த் வழங்கினார்.
10 ஊர்க்காவல் படையினருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நெதர்லாந் தில் நடந்த தடகளப்போட்டி யில் 3 தங்கம், 1 வெள்ளிப் பதக்கம் வென்ற போலீஸ் கிருஷ்ண ரேகாவிற்கும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் அரவிந்த் வழங்க னார்.
ஊராட்சிகளில் சிறப் பாக பணிபுரிந்த ஊராட்சி களுக்கு கேடயங்க ளும் நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. திங்கள் நகர் பேரூராட்சிக்கு கழிவு நீர் மேலாண்மை சிறப்பு செயல்பாட்டிற்காக கேடயம் வழங்கப்பட்டது.
கிள்ளியூர் பேரூராட்சிக்கு மக்கள் இயக்கம் சிறப்பு செயல்பட்டிற்கும், ஆற்றூர் பேரூராட்சிகளில் பிளாஸ்டிக் தடை சிறப்பு செயல்பாட்டிற்கும், கப்பி யறை பேரூராட்சிக்கு திடக் கழிவு செயல்பாட்டிற்கு கேடயங்கள் வழங்கப்பட் டது.
இதைத் தொடர்ந்து தீயணைப்பு துறை, மருத்துவ துறை, மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் துறை பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை, வேளாண்துறை, கல்வித்துறை உட்பட பல்வேறு துறைகளில் சிறப் பாக பணியாற்றிய 205 பேருக்கு சான்றிதழ்களை கலெக்டர் அரவிந்த் வழங்கினார்.
10 ஆண்டுகள் விபத்து இன்றி பணிபுரிந்தவர்க ளுக்கு நற்சான்றிதழ்களும் வழங்கப் பட்டது. இதை தொடர்ந்து மாணவ-மாண விகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. 8 பள்ளிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் விஜய் வசந்த் எம்.பி., மேயர் மகேஷ், மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, சப்-கலெக்டர் அலர்மேல் மங்கை, கலெக்டரின் மனைவி கிருத்திகா, மகன் சிவேஷ், மகள் மசிமா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் மனைவி வைஷாலி, மகள் மிஷ்விக், ஏ.டி.எஸ்.பி. ஈஸ்வரன், டி.எஸ்.பி.க்கள் நவீன்குமார், ராஜா, தாசில்தார் சேகர், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மீனாட்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 75ஆவது சுதந்திர அமுதப் பெருவிழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட தொழிலாளா் நலத்துறை சார்பில் அனைத்து தொழில் நிறுவனங்களும் தேசிய கொடி ஏற்ற வேண்டும்.
- தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தல்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட தொழிலாளா் நலத்துறை உதவி இயக்குநா் எல்.திருநந்தன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நகர மோட்டாா் சக்கர (டயா்) சங்கம், இரு சக்கர வாகனம் பழுது பாா்ப்போா் சங்கம், உணவு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், லாரி பாடி பில்டிங் சங்கம் பிரதிநிதி, லாரி கூண்டு கட்டும் சங்கம் மற்றும் பழுது பாா்ப்போா் சங்கம், பெட்ரோல் பங்க் உரிமையாளா்கள் சங்கம், நகைக் கடை உரிமையாளா்கள் சங்கம் ஆகியவற்றின் நிா்வாகிகளுக்கு 75ஆவது சுதந்திர அமுதப் பெருவிழாவை கொண்டாடுவது தொடா்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. நாளை(13ந்தேதி) முதல் 15ந்தேதி வரை சுதந்திரத் திருநாளை கொண்டாடும் வகையில் அனைத்து நிறுவனங்கள் முன்பாகவும் தேசியக் கொடியினை ஏற்ற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தியா முழுவதும் அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது.
- தேசியக்கொடி மற்றும் தேசியக்கொடியை பராமரிக்கும் துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திட்டச்சேரி பேரூராட்சி பகுதிகளில் வீடு வீடாக தேசியக்கொடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வருகின்ற 13, 14, 15 ஆகிய 3 நாட்கள் இந்தியா முழுவதும் அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வீடுகளு க்கும் தேசியக்கொடிவழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷா சித்திகா தலைமை தாங்கினார்.
பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன் முன்னிலை வகித்தார். இதில் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் 2562 வீடுகளுக்கு சென்று தேசியக்கொடி மற்றும் தேசியக்கொடியை பராமரிக்கும் துண்டு பிரசுர ங்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
- போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு
- பாரதிய ஜனதா கட்சி ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் கொடியை நிர்வாகிகள் எரித்து உள்ளனர்
நாகர்கோவில் :
குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங் தலைமையில் நிர்வாகிகள், நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
குழித்துறை சந்திப்பில் நடந்த பாரதிய ஜனதா கட்சி ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் கொடியை நிர்வாகிகள் எரித்து உள்ளனர். இது மிகவும் கண்டனத்துக்குரியது. காங்கிரஸ் கொடியை எரித்த நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர். நாகர்கோவில் மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார், மாவட்ட துணைத்தலைவர் பால்மணி,ஜோன்ஸ் இம்மானு வேல், நகர தலை வர்கள் ஜெகன், குமார் வக்கீல் பிரிவு தலைவர் ஜெபஸ்டின், வட்டாரத் தலைவர் டென்னிஸ், இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர்திவாகர் மற்றும் நிர்வாகிகள்மனு கொடுக்க வந்திருந்தனர்.