என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்விரோதம்"

    • இரண்டு தரப்பினரும் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார்
    • போலீசார் 2 தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே உள்ள கையால விளை முதலார், செங்கோடி பகுதியை சேர்ந்தவர் ஜாண்கிறிஸ்டோபர்.

    இவரது மனைவி ஷீபா (வயது 30). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாபு மனைவி ஜெயலலிதாவுக்கும் கடந்த 16 ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்தது.

    நேற்று காலையில் பஞ்சா யத்து குழாயில் தண்ணீர் எடுத்துவரும் போது 2 தரப்பினரும் வாய் தகராறு வந்து மோதிகொண்டார்கள். 2 தரப்பினரும் அரிவா ளால் மாறிமாறி தாக்கி கொண்டார்கள். இதில்இரண்டு தரப்பினரும் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார்காயம் அடைந்த ஜாண் கிறி ஸ்டோபர், அவரது மனைவி ஆகிய 2 பேரும் குலசேகரம் அரசு ஆஸ்பத்திரியிலும் பாபு, அவரது மனைவி ஜெயலலிதா ஆகிய 2 பேரும் தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதன் அடிப்படையில் இரண்டு தரப்பினரும் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் 2 தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • நிலத்தகராறில் முன்விரோதம்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    கலவை அடுத்த கன்னிகாபுரம் கிரா மத்தைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 40). இவருக்கும் பொன்னம்பலம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணா துரை (55). என்பவருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி இரவு அண்ணாதுரை நிலத்திற்கு நீர் பாய்ச்ச சென்றார். அப்போது, அவருக் கும், அண்ணாதுரைக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    அப்போது லோகநாதன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அண்ணாதுரையின் கை மற்றும் கால்களில் வெட்டி உள்ளார்.

    இதில் காயம் அடைந்த அண்ணா துரையை மாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வாழை ப்பந்தல் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ரமேஷ் வழக்குப் பதிவு செய்து தலை மறைவாக இருந்த லோகநாதனை தேடி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மா ம்பாக்கம் பஸ் நிலையம் அருகே நின்றிருந்த லோகநாதனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முன் விரோத தகராறில் பெண்ணை தாக்கிய கணவன்- மனைவி கைது செய்யப்பட்டனர்.
    • சுய உதவி குழுவில் பணம் எடுப்பது தொடர்பாக முன்விரோதம் உள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே அரியந்தக்கா கிராமத்தை சேர்ந்தவர் மணிவேல் மனைவி சிவகாமி(வயது37). இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த தங்கதுரை மனைவி அலமேலு(32) என்பவருக்கும் மகளிர் சுய உதவி குழுவில் பணம் எடுப்பது தொடர்பாக முன்விரோதம் உள்ளது.சம்பவத்தன்று மாலை அலமேலுவும், அவரது கணவரும் சேர்ந்து சிவகாமியை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாாின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அலமேலு, தங்கதுரை ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    • பலத்த காயமடைந்தவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
    • போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே வில்லுக்குறியை அடுத்த கொன்னக்குழிவிளையை சேர்ந்தவர் ஜெரோம்எடிசன் (வயத 38). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த ஞானபிரகாசம் மகன் சிலுவைராஜிக்கும் சொத்து சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.

    சம்பவத்தன்று கொன்ன குழிவிளை ஆலயத்தின் புத்தாண்டு ஆராதனையில் ஜெரோம்எடிசன் கலந்து கொண்டார். அப்போது அங்கு வந்த சிலுவைராஜ், இவரது மகன் ரினோ, பவுல் ஆகியோர் ஜெரோம் எடிசனை அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் பலத்த காயமடைந்த ஜெரோம்எடிசனை உறவினர்கள் மீட்டு ஆசாரிப்பள் ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து ஜெரோம்எடிசன் இரணியல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரு தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
    • சிவகுரு மற்றும் 4 பேர் மூதாட்டியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கடலூர் புருக்கீஸ் பேட்டை சேர்ந்தவர் ரேவை (வயது 70). இவரிடம் அதே பகுதியை சேர்ந்த சிவகுரு மற்றும் சிலர் பணம் கடனாக வாங்கினர். இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று சிவகுரு மற்றும் 4 பேர் மூதாட்டியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது.

    இதில் மூதாட்டி ரேவை மற்றும் விஜயலட்சுமி ஆகிய 2 பேருக்கு காயம் ஏற்பட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் மூதாட்டி ரேவை கொடுத்த புகாரின் பேரில் சிவகுரு மற்றும் 4 பேர் மீதும், ராஜலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் மூதாட்டி ரேவை மற்றும் 6 பேர் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சத்யா என்பவர் மனோஜ்குமார் வீட்டின் அருகே குப்பைகளை கொட்டினார்.
    • 2 பேர் சேர்ந்து மனோஜ்குமாரின் மனைவி நந்தினியை திட்டி தாக்கிடினர்.

     கடலூர்:

    கடலூர் அருகே உள்ள கே.என். பேட்டையை சேர்ந்தவர் மனோஜ்குமார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மணிகண்டன். இவர்கள் இடையே முன்விரோதம் உள்ளது. சம்பவத்தன்று மணிகண்டன் மனைவி சத்யா என்பவர் மனோஜ்குமார் வீட்டின் அருகே குப்பைகளை கொட்டினார். இதனால் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சத்யா மற்றும் 2 பேர் சேர்ந்து மனோஜ்குமாரின் மனைவி நந்தினியை திட்டி தாக்கிடினர். இதனை விலக்க சென்ற அதே பகுதியை சேர்ந்த குமுதா, சோனியா, மனோஜ்குமார் ஆகியோரும் தாக்க ப்பட்டனர். இதுகுறித்து திருப்பாதி ரிபுலியூர் போலீசார் 3 பேர் மீது வழக்குபதிந்து உள்ளனர். 

    • முத்து மாரியம்மன் கோவில் நிர்வாகம் செய்வதிலும், ஊராட்சி மன்ற தேர்தலிலும் முன்விரோத தகராறு இருந்து வந்தது.
    • கும்பல் மதியழகனை கத்தியால் குத்தியும், இரும்பு கம்பியால் அடித்து கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    கடலூர்:  

    கடலூர் அடுத்த தூக்கணாம்பாக்கம் பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன் (வயது 40). தி.மு.க. பிரமுகர். அதே பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி. இவரது கணவர் ராமச்சந்திரன் அ.தி.மு.க.பிரமுகர். இவர்களுக்குள் அதே பகுதியில் உள்ள இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் நிர்வாகம் செய்வதிலும், ஊராட்சி மன்ற தேர்தலிலும் முன்விரோத தகராறு இருந்து வந்தது.இதன் காரணமாக இருத்தரப்பினருக்கும் அடிக்கடி வாய் தகராறு மற்றும் பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தது . இது தொடர்பாக தூக்கணாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வழக்கு மற்றும் ஆர்.டி.ஓ தலைமையில் சமாதான பேச்சுவார்த்தைக்கு போலீசார் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு தி.மு.க. பிரமுகர் மதியழகன் தனது வீட்டில் இருந்து வந்தார்.

    அப்போது ஒரு கும்பல் வீட்டின் கதவை தட்டியதால் மதியழகன் கதவை திறந்தார். இதில் ஒரு நபர் திடீரென்று முகத்தில் துணி கொண்டு மூடினார். பின்னர் அந்த கும்பல் மதியழகனை கத்தியால் குத்தியும், இரும்பு கம்பியால் அடித்து கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மதியழகன் கதறி துடித்தார். இதனை தொடர்ந்து குடும்பத்தினர் மற்றும் அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து மதியழகனை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த தகவல் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியதால் ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் திரண்டனர். போலீசார் பள்ளிப்பட்டு பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது குறித்து மதியழகன் கொடுத்த புகாரின் பேரில் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி கணவர் புதுச்சேரியை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 67), விஷ்ணு மூர்த்தி (வயது 57), பள்ளிப்பட்டை சேர்ந்த சீத்தா (வயது 58), பார்த்திபன் (வயது 42), அன்பழகன் (வயது 43), தினகரன் (வயது 48) ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அனைவரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த சம்பவத்தில் புதுச்சேரி ரவுடிகள் ஈடுபட்டு உள்ளார்களா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மறுநாள் மாலை காயங்களுடன் அவர் வீட்டுக்கு வந்துள்ளார்.
    • முன்விரோதம் காரணமாக சந்தோஷ் தனது நண்பருடன் சேர்ந்து தாக்கியது தெரிய வந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாதாக்கோட்டை சாலை வங்கி ஊழியர் காலனியை சேர்ந்தவர் உல. பாலசுப்பிரமணியன் (வயது 47). இவர் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அகராதியல் துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இவருடைய மனைவி வளர்மதி.கடந்த 14-ந்தேதி பாலசுப்பிரமணியன் தனது காரில் வழக்கம் போல் பணிக்கு சென்றார். மாலை அவர் வீட்டுக்கு வரவில்லை. மறுநாள் 15-ந் தேதி மாலை காயங்களுடன் பாலசுப்பிரமணியன் வீட்டுக்கு வந்துள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த வளர்மதி அவரிடம் என்ன நடந்தது என்று கேட்டுள்ளார். அதற்கு கல்லூரி முடிந்து வீட்டுக்கு திரும்பும்போது யாரோ கடத்திச் சென்று தன்னை தாக்கியதாக தெரிவித்து விட்டு பாலசுப்பிரமணியன் மயங்கி விழுந்துள்ளார்.

    தொடர்ந்து வளர்மதி தனது கணவரை தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். 17-ந் தேதி கண்விழித்த பாலசுப்பிரமணியனிடம் நடந்தது குறித்து விசாரித்துள்ளார்.

    பின்னர் இதுகுறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசில் வளர்மதி புகார் செய்தார். அதில் தனது கணவரை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவரின் மகன் சந்தோஷ் (25) கடத்திச் சென்று தாக்கி உள்ளார் என்று தெரிவித்து இருந்தார்.

    புகாரின் பேரில் தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் முன்விரோதம் காரணமாக சந்தோஷ் தனது நண்பர் பார்த்தி (24) என்பவருடன் சேர்ந்து பாலசுப்பிரமணியனை தாக்கியது தெரியவந்தது.

    இதையடுத்து சந்தோஷ் மற்றும் பார்த்தி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பிரதீப் பலியானார்.
    • முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கரந்தை குதிரைக்கட்டி தெருவை சேர்ந்தவர் பிரதீப் (வயது23). இவர் நேற்று இரவு வீட்டில் இருந்தார்.

    அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் சிலர், பிரதீப் வீட்டில் இருந்து வெளியே வரவழைத்தனர்.

    அப்போது மர்மநபர்கள் தாங்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாள் மற்றும் ஆயுதங்களால் திடீரென பிரதீப்பை சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பிரதீப் பலியானார்.

    இருந்தாலும் ஆத்திரம் அடங்காத மர்மநபர்கள் தாங்கள் வைத்து இருந்த ஆயுதங்களால் அவருடைய முகத்தை சிதைத்தனர். இதனால் உருவமே தெரியாத அளவுக்கு அவரது முகம் சிதைந்துவிட்டது. பின்னர் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

    இது குறித்த புகாரின் பேரில் தஞ்சை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதீப்பை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தார்கள்? முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது
    • புகாரில் தன்னை சிறை வைத்து தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்

    நாகர்கோவில் :

    கடியப்பட்டினத்தைச் சேர்ந்தவர் ஜெயபால் (வயது 55).

    இவர், நாகர்கோவில் அருகே இறச்சகுளத்தில் உணவுப்பொருள் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். தனது நிறுவனத்தின் மூலம் வெளிநாடுகளுக்கு காய்கறி மீன் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்து வருகிறார். இவருக்கும் மதுரை மேலூரைச் சேர்ந்த சக்திவேல் (52) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. ஜெயபால் பணம் கொடுக்காததையடுத்து சக்திவேல் தனது நண்பர்களுடன் மதுரையிலிருந்து நாகர்கோவிலுக்கு வந்தார்.

    நாகர்கோவிலில் தனது நண்பர்கள் உதவியுடன் ஜெயபாலை தேடினார். அப்போது ஜெயபால் நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள லாட்ஜுல் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சக்திவேல் தனது நண்பர்களுடன் அந்த லாட்ஜுக்கு சென்றார். அங்கு அறையில் இருந்த ஜெயபாலுக்கும் சக்திவேலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதுகுறித்து வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜெயபால், சக்திவேல் மற்றும் அவருடன் வந்த வர்களை பிடித்தனர். பிடிபட்ட அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப் போது சக்திவேல் தனக்கு ஜெயபால் பணம் தர வேண்டும் என்றும் அவர் நீண்ட நாட்களாக பணம் கொடுக்காமல் ஏமாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் இரு தரப்பினரையும் வட சேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் ஜெயபால் வடசேரி போலீசில் புகார் செய்தார். புகாரில் தன்னை சிறை வைத்து தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.

    ஜெயபால் கொடுத்த புகாரின் பேரில் சக்திவேல் மற்றும் மதுரை மேலூரை சேர்ந்த சுரேஷ் (33), ஜாபர் அலி (35), ஆசாரிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த விவேக் (26), பள்ளி விளையைச் சேர்ந்த ஜான் (26), மதுரை மேலூரைச் சேர்ந்த கார்த்திக் (38), நாகர்கோவில் புது குடியிருப்பைச் சேர்ந்த அனீஸ் (28), ராணித் தோட்டம் வடக்கு தெருவை சேர்ந்த பிரபாகர் (33) கார்த்திக் (29) ஆகிய 9 பேர் மீதும் போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட 9 பேரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    • இருவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது.
    • காயம் அடைந்த இளையராஜாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே உள்ள வெண்டையம்பட்டியை சேர்ந்தவர் இளையராஜா (வயது34) விவசாயி.

    அதே பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி ராஜா (26).

    இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது.

    சம்பவத்தன்று புதுக்குடியில் நடைபெற்ற திருமணத்திற்கு இளையராஜா, ராஜா ஆகிய இருவரும் வந்துள்ளனர்.

    அப்போது திருமண மண்டபத்தின் அருகே இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் ராஜா ஆத்திரம் அடைந்து இளையராஜாவை கீழே தள்ளி விட்டு கத்தியால் குத்தி உள்ளார்.

    இதில் காயம் அடைந்த இளையராஜாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்து வக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர். 

    • தமிழரசன்(26) இவர் வன்னியர்தெரு விநாயகர் கோவில் அருகில் நின்றுகொண்டிருந்த போது முன்விரோதம் காரணமாக, அதேபகுதியிலுள்ள 3பேரும் அவரை அசிங்கமாக பேசினர்.
    • தொடர்ந்து, அவர் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றதாக தெரிகிறது.

    கடலுார்:

    வடலூர் கோட்டக்கரையை சேர்ந்தவர் தமிழரசன்(26) இவர் அதே பகுதியில் வன்னியர்தெரு விநாயகர் கோவில் அருகில் நின்றுகொண்டிருந்த போது முன்விரோதம் காரணமாக , பார்வதிபுரத்தை சேர்ந்த கலையரசன்(31) பரஞ்ஜோதி (22) ஜெயபிரகாஷ் (27) ஆகிய 3 பேர்களும் தமிழரசனை அசிங்கமாகபேசி, அவர் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றதாக தெரிகிறது, இதுகுறித்து வடலூர் போலீசில்புகார் செய்யப்பட்டது. இைத தொடர்ந்து கலையரசன், பரஞ்ஜோதி, ஜெயப்பிரகாஷ் ஆகிய 3 பேர்களையும்வடலூர் புதுநகர் அரசு பள்ளி அருகில் ரோந்து சென்ற ேபாலீசார் கைது செய்தனர்.

    ×