என் மலர்
நீங்கள் தேடியது "slug 236657"
- நாட்டின் 75-வது சுதந்திரதின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- மாவட்ட கலெக்டர் கார்மேகம் தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டார்.
சேலம்:
நாட்டின் 75-வது சுதந்திரதின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் காந்தி விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் கார்மேகம் தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டார்.
பின்னர் சேலம் மாவட்டம் மற்றும் மாநகர காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் கார்மேகம் வழங்கினார். மேலும் வருவாய் துறை, ஊரக வளர்ச்சி, வேளாண்துறை உள்பட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நற்சான்றிதழ்களை கலெக்டர் கார்மேகம் வழங்கி பாராட்டினார்.
விழாவில் விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (வளர்ச்சி பிரிவு) சார்பாக கொரோனா நோய் தொற்றால் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதி உதவி, தாட்கோ மூலம் 3 பேருக்கு ரூ.29.84 லட்சம், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 பேருக்கு ரூ.2.10 லட்சம், ஊரக வளர்ச்சி முகமை வளர்ச்சி பிரிவு சார்பில் ரூ.25ஆயிரம் மற்றும் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 26 பயனாளிகளுக்கு நல உதவிகள் என 33 பேருக்கு ரூ.57.19 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
சிறப்பாக பணிபுரிந்தமைக்காக போலீஸ் கமிஷனர் அலுவலக ஊழியர்கள் மற்றும் போலீசார், அதிகாரிகள் 37 பேருக்கும், எஸ்.பி. அலுவலகத்தில் 29 பேருக்கும், அரசுத்துறை அலுவலர்கள் 41 பேருக்கும் முதல்-அமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தில் 3 பேருக்கும், தீயணைப்பு துறையினர் 25 பேருக்கும் நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் 10 பேருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பள்ளி கல்வித்துறை சார்பில் தேசபக்தி மற்றும் இயற்கையை பாதுகாப்போம் உள்பட மைய கருத்துகளை வலியுறுத்தும் வகையில் 1300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளின் வண்ண மிகு கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.
சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களை வருவாய்த்துறை அலுவலர்கள், அவர்களின் வீடுகளுக்கே சென்று கவுரவித்தனர். இதில் மாநகர போலீஸ்கமிஷனர் நஜ்மல்ஹோடா, டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநவ், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., ராஜேந்திரன் எம்.எல்.ஏ. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், வருவாய் அதிகாரி மேனகா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
- 75ஆவது சுதந்திர அமுதப் பெருவிழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட தொழிலாளா் நலத்துறை சார்பில் அனைத்து தொழில் நிறுவனங்களும் தேசிய கொடி ஏற்ற வேண்டும்.
- தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தல்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட தொழிலாளா் நலத்துறை உதவி இயக்குநா் எல்.திருநந்தன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நகர மோட்டாா் சக்கர (டயா்) சங்கம், இரு சக்கர வாகனம் பழுது பாா்ப்போா் சங்கம், உணவு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், லாரி பாடி பில்டிங் சங்கம் பிரதிநிதி, லாரி கூண்டு கட்டும் சங்கம் மற்றும் பழுது பாா்ப்போா் சங்கம், பெட்ரோல் பங்க் உரிமையாளா்கள் சங்கம், நகைக் கடை உரிமையாளா்கள் சங்கம் ஆகியவற்றின் நிா்வாகிகளுக்கு 75ஆவது சுதந்திர அமுதப் பெருவிழாவை கொண்டாடுவது தொடா்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. நாளை(13ந்தேதி) முதல் 15ந்தேதி வரை சுதந்திரத் திருநாளை கொண்டாடும் வகையில் அனைத்து நிறுவனங்கள் முன்பாகவும் தேசியக் கொடியினை ஏற்ற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- காவிரியில் ஏற்பட்டதால் குமாரபாளையத்தில் 150 வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது.
- தேசிய பேரிடர் மீட்பு படையினர் 22 பேர் குமாரபாளையம் வந்தனர்.
குமாரபாளையம்:
காவிரியில் ஏற்பட்டதால் குமாரபாளையத்தில் 150 வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. தொடர்ந்து அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் வெள்ள பாதிப்பில் இருந்து பாதுகாக்க தேசிய பேரிடர் மீட்பு படையினர் 22 பேர் குமாரபாளையம் வந்தனர்.
மணிமேகலை தெரு, கலைமகள் தெரு, அண்ணா நகர், இந்திரா நகர் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளை ஆய்வு செய்த திருச்செங்கோடு வருவாய் பிரிவு அதிகாரி இளவரசி, மீட்பு படையினரிடம் ஆலோசனை வழங்கினார்.
இவர்களுடன் வட்டாட்சியர் தமிழரசி, தி.மு.க. நகர செயலர் செல்வம், வருவாய் ஆய்வாளர் விஜய், கிராம நிர்வாக அலுவலர் முருகன், தியாகராஜன், செந்தில்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலகத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
மாற்றுத்திறனாளிகள் அனைத்து நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு அவசியம் என்பதினால் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் விரைவில் தேசிய அடையாள அட்டைநகல் (நீலநிறம்), ஆதார் நகல், புகைப்படம் -1.
மேலும் மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் எவரேனும் நேரில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலகத்தில் அணுகி பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக் கொண்டுள்ளார்.