என் மலர்
நீங்கள் தேடியது "தொடக்க விழா"
- தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தகவல்
- நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள ஓய்.ஆர் மஹாலில் மாலை 5 மணிக்கு நடக்கிறது
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 51-வது ஆண்டு தொடக்க விழா மற்றும் முன்னாள் அமைச்சரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான நாஞ்சில் வின்சென்ட்டு-க்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் விருது வழங்கும் விழா நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள ஓய்.ஆர் மஹாலில் நாளை(1-ந்தேதி) மாலை 5 மணிக்கு நடக்கிறது.
விழாவிற்கு குமரி கிழக்கு மாவட்ட கழக அவைத்தலைவர் சேவியர்ம னோகரன் தலைமை தாங்குகிறார்.
மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் சுகுமாரன் வரவேற்று பேசுகிறார். மாவட்ட கழக இணைச் செயலாளர் சாந்தினிபகவதியப்பன், மாவட்ட கழக துணைச் செயலாளர் பார்வதி, மாவட்ட கழகப் பொருளா ளர் திலக், கிழக்கு பகுதி கழகச் செயலாளர் ஜெய கோபால், தெற்கு பகுதி கழகச் செயலாளர் முரு கேஷ்வரன், மேற்கு பகுதி கழகச் செயலாளர் ஜெவின் விசு, மாமன்ற உறுப்பினர் கோபால சுப்பிரமணியம்,
சேகர், ஸ்ரீலிஜா, அனிலாசுகுமாரன், கிழக்கு மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். கழக அமைப்புச் செயலாளரும்,
முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் சிறப்புரையாற்றுகிறார்.
அமைப்புச் செய லாளர்கள் சின்னத்துரை, சுதா பரமசிவன், தலைமைக் கழகப் பேச்சாளர் சுப்பையா பாண்டியன், கழக எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் கிருஷ்ணதாஸ், கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச் செயலாளர் சிவசெல்வராஜன், கழக வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளரும்,
மாவட்ட கவுன்சிலருமான பரமேஸ்வரன், குமரி மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் ஜாண்தங்கம், குமரி மேற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் சிவ.குற்றாலம் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.
விழாவில் முன்னாள் அமைச்சரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான நாஞ்சில் வின்சென்டுக்கு எம்.ஜி.ஆர் விருதினை தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வழங்குகிறார்.
இதனைத் தொடர்ந்து நாஞ்சில் எம்.வின்சென்ட் ஏற்புரையாற்றுகிறார். மாமன்ற உறுப்பினர் அக்சயா கண்ணன் நன்றி கூறுகிறார்.
இவ்விழாவில் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, கிளைக் கழக நிர்வாகிகள், கழக செயல் வீரர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் கேட்டு கொண்டுள்ளார்.
- மாவட்ட கவுன்சிலர் சாமிநாதன் முன்னிலை வகிக்கிறார். ேக.என். விஜயகுமார் எம்.எல்.ஏ., தொடங்கி வைக்கிறார்.
- நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வீதிக்காடு பாலாமணி செல்வராஜ் செய்துள்ளார்.
பெருமாநல்லூர்:
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் ஸ்ரீ செல்வ விநாயகர் வள்ளி கும்மியாட்ட குழுவின் சார்பில் கும்மியாட்ட பயிற்சி தொடக்க விழா பெருமாநல்லூர் வீதிக்காடு விநாயகர் கோவிலில் இன்று மாலை தொடங்குகிறது. விழாவிற்கு ஈட்டி வீரம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ராதாமணி சிவசாமி தலைமை தாங்குகிறார். மாவட்ட கவுன்சிலர் சாமிநாதன் முன்னிலை வகிக்கிறார். ேக.என். விஜயகுமார் எம்.எல்.ஏ., தொடங்கி வைக்கிறார்.
இப்பயிற்சியானது இன்று முதல் தொடர்ந்து 30 நாட்கள் மாலை 7 மணி முதல்இரவு 9 மணி வரை நடைபெறும். இப்பயிற்சியானது பெண்களுக்கு நல்ல உடற்பயிற்சியாகும். பயிற்சியில் ஆர்வம் உள்ள பெண்கள் கலந்து கொள்ளலாம். இதற்கான பயிற்சியை திருப்பூர் நாடகம் மற்றும் நாட்டுப்புற நல சங்க தலைவர் பூளவாடி எம். ராமசாமி மற்றும் ஆசிரியர் விருது பெற்ற ராசு ஆகியோர் வழங்குகிறார்கள்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வீதிக்காடு பாலாமணி செல்வராஜ் செய்துள்ளார்.
- 1000 குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்ட தொடக்க விழாவை மாவட்ட செயலாளர் மணிமாறன் தொடங்கி வைத்தார்.
- பகுதி செயலாளர் கிருஷ்ண பாண்டியன், வட்ட செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
திருப்பரங்குன்றம்
மதுரை தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அஞ்சலக செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் 1000 குழந்தைகளுக்கு புதிய கணக்கு தொடக்க விழா திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு இளைஞரணி துணை அமைப்பாளர் விமல் தலைமை வகித்தார். மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல், இளைஞரணி அமைப்பாளர் மதன்குமார், துணை அமைப்பாளர் தென்பழஞ்சி சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குழந்தை களுக்கு சேமிப்பு கணக்கை தொடங்கி வைத்து பேசியதாவது:-
பெண்களுக்கு சம உரிமை, சொத்தில் சம உரிமை ஆகிய முக்கியத்துவத்தை அளித்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அதேபோல அஞ்சல்துறை சார்பில் செல்வமகள் சேமிப்பு திட்டம் பெண் குழந்தைகளின எதிர்கால நலன் கருதி கொண்டு வரப்பட்டது.
தற்போது முதல்கட்டமாக திருப்பரங்குன்றம் தொகுதி யில் 1000 குழந்தைகளுக்கு சேமிப்பு கணக்கு ெதாடங்கப்பட்டுள்ளது. உங்களால் முடிந்த தொகையை குழந்தைகளுக்கு சேமியுங்கள். அது அவர்களின் எதிர்கால தேவையை பூர்த்தி செய்யும். முடியாதவர்களுக்கு நாங்கள் பணம் செலுத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறி னார்.
பகுதி செயலாளர் கிருஷ்ண பாண்டியன், வட்ட செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் வாழ்த்தி ேபசினர். இதில் இளைஞரணி பெருங்குடி வசந்த், தனக்கன்குளம் அஜித்குமார், மாவட்ட குழு உறுப்பினர் புவனேஸ்வரி ராஜசேகர், கிருத்திகா தங்கபாண்டி, திருமங்கலம் உபகோட்ட அஞ்சல் ஆய்வாளர் ஜாய்ஸ், அஞ்சலக அதிகாரி முனிகணேஷ், காஞ்சனா உள்ளிட்ட பலர் கலந்து ெகாண்டனர்.
- கலசலிங்கம் பார்மசி கல்லூரியில் முதலாண்டு வகுப்புகள் தொடக்க விழா நடந்தது.
- இந்த நிகழ்ச்சியில் புதிதாக சேர்ந்த மாணவர்கள், பெற்றோர்களுடன் கலந்துகொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் மருந்தாக்கியல் கல்லூரியில் 35 வது பேட்ச் டி.பார்ம், 31-வது பேட்ச் பி.பார்ம், 7- வது பேட்ச் பார்ம் டி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா, கல்லூரி செயலாளர் எஸ்.சசி ஆனந்த் தலைமையில் நடந்தது. முதல்வர் வெங்கடேசன் வரவேற்றார். வத்திராயிருப்பு அரசு மருத்துமனை தலைமை மருத்துவர் பாலகிருஷ்ணன், சிவகாசி இ.எஸ்.ஐ. மருத்துவமனை மயக்கவியல் நிபுணர் ஜெகநாத் பிரபு ஆகியோர் தலைமை விருந்தினர்களாக கலந்து கொண்டு மருந்தியல் துறையின் எதிர்காலம் குறித்து பேசினர்.
அரவிந்த் ஹெர்பல் லேப் நிர்வாக இயக்குநர் பரத்ராஜ், மெட் பிளஸின் சீனியர் மேனேஜர் வெங்கட் ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கலசலிங்கம் பல்கலைக்கழக பதிவாளர் வாசுதேவன், கலசலிங்கம் மருத்துவமனை டீன் சேவியர் செல்வா சுரேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கலசலிங்கம் மருந்தாக்கியல் கல்லூரிக்கும் ,மெட் பிளஸ், அரவிந்த் ஹெர்பல் நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிகழ்ச்சியில் புதிதாக சேர்ந்த மாணவர்கள், பெற்றோர்களுடன் கலந்துகொண்டனர்.
- கல்லூரியில் தமிழ் மன்ற தொடக்க விழா நடைபெற்றது.
- தமிழ்த்துறை பேராசிரியர் அசோகன் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
மொரப்பூர்,
மொரப்பூர் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் மன்ற தொடக்க விழா நடைபெற்றது.கொங்கு கல்வி அறக்கட்டளை தலைவர் மோகன்ராசு. தலைமை வகித்து குத்து விளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்தார்.
கொங்கு கல்வி அறக்கட்டளை செயலாளர் பிரபாகரன்,பொருளாளர் சாமிக்கண்ணு,கல்லூரி தாளாளர் பொன் வரதராஜன்,மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் சி.பி.எஸ்.இ.பள்ளி தாளாளர் சந்திரசேகர்.ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கல்லூரி முதல்வர் குணசேகரன வரவேற்று பேசினார்.
கொங்கு கல்வி அறக்கட்டளை இயக்குனர்கள் நாகராஜ், தமிழரசு, குணசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். தமிழ்த்துறை பேராசிரியர் அசோகன் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
இவ்விழாவில் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் அம்பேத்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிரிப்பும், சிந்தனையும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
கல்லூரி இயக்குநர்கள், மாணவ,மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். முடிவில் தமிழ்த்துறை தலைவர் விஜயகுமார் நன்றி கூறினார்.
- கரூர் மாவட்டம் க.பரமத்தியில் நடைபெற்றது
- நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. இளங்கோ தலைமை வகித்தார்.
கரூர்:
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, தொட்டியப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நம்ம ஸ்கூல் திட்டம் தொடக்க விழா நடந்தது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. இளங்கோ தலைமை வகித்தார். இதில், அரசு பள்ளிகளின் கட்டமைப்பு, கற்றல் வளத்தை மேம்படுத்த தனியாரின் பங்களிப்பாக பள்ளிக்கு, தாராளமாக நிதி வழங்க வேண்டும் என, அழைப்பு விடுக்கப்பட்டது.அதன்படி, பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சார்பில், 2.25 லட்சம் ரூபாய் மதிப்பில், உட்கட்டமைப்பை மேம்படுத்தும் விதமாக டேபிள், சேர், சீருடை உட்பட பல்வேறு பொருட்கள், வழங்கப்பட்டன. மேலும், பள்ளிக்கு தேவைப்படும் பொருட்களை, தங்கள் பங்களிப்பாக பெற்றோர் வழங்கினர். இந்நிகழ்ச்சியில், வட்டார கல்வி அலுவலர் சித்ரா, பள்ளி தலைமையாசிரியர் மூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
- பாலமுருகன்,துணை முதல்வர் ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
- விழா நிறைவாக துணை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் மகாலட்சுமி நன்றி கூறினார்.
பல்லடம்:
பல்லடம் மங்கலம் ரோட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நாட்டு நலப்பணித் திட்ட குழு துவக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் முனியன் தலைமை வகித்தார். பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப் பணித்திட்ட அதிகாரிகள் அண்ணாதுரை, பாலமுருகன்,துணை முதல்வர் ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்ட அலுவலர் பேராசிரியர் பாலமுருகன் வரவேற்றார்.
இதில் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன் குமார் பேசுகையில், தமிழகத்தில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இதில் நீங்களும் இணைவது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. சிக்கண்ணா கல்லூரி இன்று பசுமையாய் காட்சியளிப்பதற்கு முழு காரணம் நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்களே. நாட்டு நலப் பணித்திட்டத்தில் இணைந்த நீங்கள் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து, சமுதாயத்தில் முன்மாதிரியாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழா நிறைவாக துணை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் மகாலட்சுமி நன்றி கூறினார்.
- பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது
- ரூ.3.40 கோடியில் கட்டுமானம்
பெரம்பலூர்,
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிதாக கட்டிடம் கட்ட தமிழக அரசு அனுமதி வழங்கி 3 கோடியே 40 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. இக்கட்டிடத்திற்கு கடந்த நவ.29-ம்தேதி அரியலூரில் நடந்த அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து பழைய கட்டிடம் முழுமையாக இடித்து அகற்றப்பட்டது. அங்கு புதிய கட்டிடம் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நடந்தது. பெரம்பலூர் எம்.எல்.ஏ., பிரபாகரன், மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் பூமி பூஜையில் கலந்து கொண்டு கட்டுமான பணியை தொடங்கி வைத்தனர்.விழாவில் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- புத்தகக் கண்காட்சி தருமபுரியில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் ஒரு மாதம் நடைபெற உள்ளது.
- மாவட்ட மைய நூலக முதல் நிலை நூலகர் மாதேஸ்வரன் நன்றி கூறினார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட மைய நூலகம், வாசகர் வட்டம் மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து நடத்தும் புத்தகக் கண்காட்சி தருமபுரியில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் ஒரு மாதம் நடைபெற உள்ளது.
இந்த புத்தக கண்காட்சி தொடக்க விழா மற்றும் நூலக நண்பர்கள் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தலைமை தாங்கினார்.
மாவட்ட நூலக அலுவலர் தனலட்சுமி வரவேற்று பேசினார். தகடூர் புத்தகப் பேரவை தலைவர் டாக்டர் செந்தில், செயலாளர் சிசுபாலன், நெடுஞ்சாலைத்துறை தனி தாசில்தார் அதியமான், வாசகர் வட்ட தலைவர் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நூலகங்களில் தன்னார்வலர்களாக இணையும் நூலக நண்பர்கள் திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் புத்தக கண்காட்சியில் இடம்பெற்றுள்ள அரங்குகளை பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் பழனி, தகவல் புத்தக பேரவை ஒருங்கிணைப்பாளர் தங்கமணி, அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியர் சிவப்பிரகாசம், நூலக ஆய்வாளர் மாதேஸ்வரி, இருப்பு சரிபார்ப்பு அலுவலர் மாதேஸ்வரன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மண்டல மேலாளர் ரங்கராஜன், மேலாளர் சத்தியசீலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட மைய நூலக முதல் நிலை நூலகர் மாதேஸ்வரன் நன்றி கூறினார்.
- ஜெய பாரத் ஹோம்ஸ் சார்பில் டைட்டன் சிட்டி தொடக்க விழாவில் நடிகை ஆண்ட்ரியாவின் இசை நிகழ்ச்சி மதுரையில் இன்று மாலை நடக்கிறது
- தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் என்.ஜெகதீசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
மதுரை
ஜெயபாரத் ஹோம்ஸ் நிறுவனத்தின் சார்பில் மதுரை சூர்யா நகரில் டைட்டன் சிட்டி வீடு கட்டும் திட்டத்திற்கான தொடக்க விழா இன்று (5-ந் தேதி) மாலை நடக்கிறது. இதில் நடிகை ஆண்ட்ரியா பங்கேற்கிறார்.
இதுகுறித்து ஜெயபாரத் ஹோம்ஸ் நிர்வாக இயக்குநர் ஜெயக்குமார் கூறியதாவது:-
கட்டுமானத்துறையில் 27 வருடங்களாக உள்ளோம். 3-வது தலைமுறையாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். மதுரை சூர்யா நகர் பகுதியில் 11.5 ஏக்கரில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்ட உள்ளது.
இதற்கான தொடக்க விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. ஜெயபாரத் ஹோம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் பி.ஜெயகுமார் தலைமை தாங்குகிறார். நிர்வாகி ஜெ.நிர்மலாதேவி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியாவின் இசை நிகழ்ச்சி நடக்கிறது.
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் என்.ஜெகதீசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மதுரை சூர்யா நகர் அருகே ஜெய பாரத் ஹோம்சின் டைட்டன் சிட்டி தொடக்க விழா நடந்தது.
- இந்த விழாவில் நடிகை ஆண்ட்ரியாவின் இசை நிகழ்ச்சியும் நடந்தது
மதுரை
மதுரையை அடுத்துள்ள சூர்யா நகரில் ஜெயபாரத் ஹோம்ஸ் நிறுவனத்தின் சார்பில் மதுரை சூர்யாநகரில் டைட்டன் சிட்டி என்ற பெயரில் 300 வீடுகள் கட்டப்படுகிறது. இந்த திட்டத்திற்கான தொடக்க விழா நடந்தது.
ஜெயபாரத் ஹோம்ஸ் நிர்வாக இயக்குநர் பி.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். இதில் நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா பங்கேற்றார். ஜெயபாரத் ஹோம்ஸ் இயக்குநர் நிர்மலாதேவி ஜெயக்குமார் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் என்.ஜெகதீசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். ஜெயபாரத் ஹோம்ஸ் நிர்வாக இயக்குநர் ஜெயக்குமார், சகோதரர்கள் அழகர், முருகன், செந்தில், சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.
நிர்வாக இயக்குநர் ஜெயக்குமார் பேசுகையில், கட்டுமானத்துறையில் 27 வருடங்களாக உள்ளோம். 3-வது தலைமுறையாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறோம்.
மதுரை மற்றும் கோவையில் எங்களது நிறுவனம் சார்பில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளோம். ஒவ்வொரு வாடிக்கையாளரும் எங்கள் மீது நம்பிக்கை கொண்டு வீடுகளை கட்டி தர சொல்கிறார்கள். நாங்களும் தரமான வீடுகளை கட்டித்தந்து கட்டுமானத்துறையில் அனைவரும் பாராட்டும் வகையில் வீடுகளை கட்டித் தருகிறோம்.
மதுரை சூர்யா நகர் பகுதியில் 11.5 ஏக்கரில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளை மிகுந்த தரத்துடன் கட்ட உள்ளோம். இதற்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டுகிறேன். டைட்டன் சிட்டி வீடு கட்டும் திட்டத்தில் ரூ.59 லட்சம் முதல் பல்வேறு தரமான வசதிகளுடன் வீடுகள் கட்ட உள்ளோம் என்றார்.
அதனைத் தொடர்ந்து நடிகை ஆண்ட்ரியாவின் இசைநிகழ்ச்சி நடந்தது. இதனை ஆயிரக்
கணக்கானோர் கேட்டு ரசித்தனர்.
- அறக்கட்டளை தலைவர் செந்தில்குமார், மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பர்வீன் பானு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
- பாலசுப்பிரமணியம், மற்றும் பேராசிரியர்கள் மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பல்லடம்:
பல்லடம் அரசு கலைக் கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மன்றம் துவக்க விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனியன் தலைமை தாங்கினார். பல்லடம் தமிழ் சங்கத்தலைவர் ராம். கண்ணையன், அறம் அறக்கட்டளை தலைவர் செந்தில்குமார், மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பர்வீன் பானு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி துணை முதல்வர் ஜெயச்சந்திரன் வரவேற்றார். போதை ஒழிப்பு மன்றத்தை துவக்கி வைத்து பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் பேசுகையில்:-
தமிழ்நாட்டில் போதைப்பொருள் தடுப்பு குறித்து அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.வரும் காலத்தில் போதைப் பொருள் இல்லா தமிழகமாக மாற்ற தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. போதைப் பொருட்களுக்கு அடிமையாகாமல் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க இன்றைய மாணவர்கள் எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும். இந்த போதைப்பொருள் தடுப்பு குறித்து காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனை அனைவரும் கடைப்பிடித்து போதைப் பொருள் இல்லா தமிழகமாக உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் அண்ணா துரை, பாலசுப்பிரமணியம், தமிழ்ச்சங்க செயலாளர் கருப்புசாமி, மற்றும் சுரேஷ், கல்லூரி பேராசிரியர் பாலசுப்பிரமணியம், மற்றும் பேராசிரியர்கள் மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.