search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 237503"

    • தனியாக தங்கியிருந்து அதே பகுதியில் இட்லி கடை நடத்தி வந்தார்.
    • தனது வீட்டில் சேலையால் தூக்கு மாட்டி கொண்டார்.

    சென்னிமலை,

    சென்னிமலை அருகே ஊத்துக்குளி ரோடு மேலப்பாளை யத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் ஏற்கனவே இறந்துவிட்டார்.

    இவரது மனைவி செல்வி (55). இவர்களுடைய மகன் சுரேஷ் (34). இவர் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் வசித்து வருகிறார்.

    செல்வி, மேலப்பாளையத்தில் தனியாக தங்கியிருந்து அதே பகுதியில் இட்லி கடை நடத்தி வந்தார்.

    நோயால் பாதிக்கப்பட்ட செல்வி மனம் உடைந்து தனது வீட்டில் சேலையால் தூக்கு மாட்டி கொண்டார். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் செல்வியை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே செல்வி இறந்து விட்டார்.

    • முருகாத்தாள் கணவரிடம் மது அருந்தி வந்ததற்காக சத்தம் போட்டார்.
    • முருகாத்தாள் வீட்டுக்கு வந்து கதவை தட்டியுள்ளார்.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் அடுத்த அரக்கன் கோட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரங்கசாமி (33). கட்டிட கூலித் தொழிலாளி. இவரது மனைவி முருகாத்தாள் (27). இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகன் உள்ளார். ரங்கசாமிக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.

    இந்நிலையில் ஊரில் கோவில் திருவிழாவை ஒட்டி நேற்று முருகாத்தாள் அம்மாவும், அவரது தம்பியும் முருகாத்தாள் வீட்டுக்கு வந்துள்ளனர்.

    அப்போது அரங்கசாமி மது அருந்து வீட்டுக்கு வந்து வாந்தி எடுத்துள்ளார். இதனால் முருகாத்தாள் கணவரிடம் மது அருந்தி வந்ததற்காக சத்தம் போட்டார்.

    பின்னர் ஒரு குடம் தண்ணீரை எடுத்து ஒரு ரங்கசாமி மீது ஊற்றினார். இதனால் ஆத்திரமடைந்த ரங்கசாமி தான் எங்கேயாவது போய் விடுகிறேன் என்று கூறியுள்ளார். பின்னர் முருகாத்தாள் அவரது தாய் மற்றும் தம்பி கோவில் திருவிழாவுக்கு சென்று விட்டனர்.

    வீட்டில் ரங்கசாமி இருந்துள்ளார். பின்னர் முருகாத்தாள் வீட்டுக்கு வந்து கதவை தட்டியுள்ளார். ஆனால் பதில் ஏதும் வரவில்லை. கதவு உள் தாழ்பால் போடப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக பார்த்தபோது ரங்கசாமி வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அக்கம், பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர் . அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே ரங்கசாமி இறந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பவித்ரா, இருவரையும் தங்களது வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார்.
    • இருவருக்கும் திருமணமாகி 3 ஆண்டுகளேயாவதால் ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார்.

    பெருந்துறை:

    திருப்பூர் வீரபாண்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (26). இவரது மனைவி கவுதமி (22). இருவரும் திருப்பூரில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தபோது காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணம் குறித்து மணி கண்டன் தனது பெற்றோ ருக்கு தெரிவிக்கவில்லை யாம்.

    தற்போது இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

    இந்த நிலையில், தங்களது திருமணம் குறித்து மணி கண்டனின் பெற்றோரிடம் தெரிவிக்குமாறு கெளதமி கூறியுள்ளார்.

    இதையடுத்து மணி கண்டன், முதற்கட்டமாக, ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் வசித்து வரும் தனது சகோதரி பவித்ராவிடம் தங்களது திருமணம் குறித்து தெரி வித்துள்ளார்.

    இதையடுத்து பவித்ரா, இருவரையும் தங்களது வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார்.

    அதன்பேரில், மணி கண்டனும் கவுதமியும், பெருந்துறையில் உள்ள பவித்ராவின் வீட்டுக்கு நேற்று வந்துள்ளனர். அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது, தங்களுக்கு தெரியாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டது குறித்து பவித்ரா கேட்டதாக தெரிகிறது.

    இதனால் மனமுடைந்த கவுதமி பவித்ராவின் வீட்டில் உள்ள குளியல் அறைக்குள் சென்று துப்பட்டாவால் தூக்குப் போட்டுக் கொண்டுள்ளார்.

    வெகு நேரமாகியும் கவுதமி வெளியில் வராத தால் குளியல் அறை கதவை உடைத்து பார்த்தனர்.

    அங்கு தூக்கில் தொங்கிய கவுதமியை மீட்டு பெருந்துறை அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், கவுதமி ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தார்.

    இதுகுறித்து, கவுதமியின் சகோதரர் செல்லதுரை அளித்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மேலும், இருவருக்கும் திருமணமாகி 3 ஆண்டுகளேயாவதால் ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார். 

    • முரளி தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்
    • அவரை பரிசோதித்த டாக்டர்கள் முரளி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்

    ஈரோடு மாணிக்க ம்பாளையம், ஆண்டிகாடு பகுதியைச் சேர்ந்தவர் முரளி (43). இவரது மனைவி சவிதா. வீட்டின் கீழ் பகுதியில் சொந்தமாக தறிப்பட்டறை வைத்து நடத்தி வந்துள்ளார். மேல் பகுதியில் அவரது வீடு உள்ளது.

    இந்நிலையில் சம்பவ த்தன்று முரளியின் மகன் கீழ் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார். சவிதா தறிப்பட்டறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். மேல் வீட்டில் முரளி மட்டும் இருந்துள்ளார். முரளியின் இளைய மகன் தண்ணீர் குடிப்பதற்காக மேல் வீட்டுக்கு சென்றார். அப்போது கதவு தாழிடப்ப ட்டிருந்தது. கதவை திறந்து பார்த்தபோது தந்தை முரளி தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக அவர் இது குறித்து தனது தாய் மற்றும் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் முரளியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் முரளி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ராமு அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்.
    • அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் தவிட்டுப்பாளை யம் பகுதியைச் சேர்ந்தவர் ராமு (52). கூலித் தொழி லாளி. இவருக்கு திருமணம் ஆகி மகேஸ்வரி என்ற மனைவியும், 2 மகள்கள் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது.

    ராமுவுக்கு மது பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படு கிறது. ராமுவின் அண்ணன் மகன் குணசேகரன் (37)என்பவர் அந்தியூர் அருகே அரசு பணிமனை அருகே குடியிருந்து வருகின்றார்.

    குணசேகரனுக்கு ராமு போன் செய்து நான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளப் போகி றேன். நான் இறந்த பிறகு எனக்கு நீ, தான் காரியம் செய்ய வேண்டும் என்று பேசி விட்டு போனை வைத்து விட்டார்.

    இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த குணசேகரன் ராமுவின் வீட்டுக்கு சென்று கதவை தட்டினார். அப்போது கதவு உள் பக்க மாக மூடப்பட்டு இருந்தது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது ராமு அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். ெபாதுமக்கள் அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கன வே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தற்கொலை செய்து கொண்ட ராமு இதே போன்று பலமுறை விளை யாட்டாக போன் செய்து தற்கொலை செய்து கொள்வதாக கூறி வந்ததாக கூறப்படுகிறது.

    அதே போல் விளை யாட்டாக அவர் பேசி வரு கிறார் என அவரது குடும்பத்தினர் நினைத்துக் கொண்டார்கள். ஆனால் தற்போது விளையாட்டு வினையாக முடிந்து விட்டது.

    இது குறித்து அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • மோகன்குமார் மின் விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தொங்கி கொண்டு இருந்தார்
    • இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர் பகுதியை சேர்ந்தவர் பால முருகன். இவரது மகன் மோகன் என்ற மோகன் குமார் (வயது 22).

    அவர் வீட்டு மாடியில் பனியன் கம்பெனி வைத்து நடத்தி வந்தார். இவருக்கு குடி பழக்கம் இருந்து வந்த தாக கூறப்படுகிறது. மோகன்குமார் வேலை முடிந்து இரவு நஞ்ச கவுண்டன் பாளையத்தில் உள்ள வீட்டில் தங்கி வந்தார்.

    இந்த நிலையில் மோகன் குமார் நஞ்சகவுண்டன் பாளையத்தில் உள்ள வீட்டில் இரவு தூங்க சென்றார். காலை நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது உறவி னர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் வீட்டு கதவை உடைத்து சென்று பார்த்தனர்.

    அப்போது மோகன்குமார் மின் விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தொங்கி கொண்டு இருந்தார்.இதை கண்ட அவரது உறவினர்கள் அவரை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர்.

    அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • மனம் உடைந்து காணப்பட்ட சங்கர் கம்பெனி குடோனில் நைலான் கயிற்றால் தூக்குபோட்டு கொண்டார்.
    • இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    சேலம் மாவட்டம் வீரக னூர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் சங்கர் (வயது 25). இவருக்கு இன்னும் திருமணமாக வில்லை.

    இவர் டிப்ளமோ படித்து விட்டு கோபிசெட்டிபாளை யம் அருகே உள்ள கொளப்பலூர் பகுதயில் ஒரு கம்பெனி வைத்து நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு இவர் மோட்டார் சைக்கிளில் சென்ற போது விபத்து ஏற்பட்டது. அதன் பிறகு சிகிச்சை பெற்று வீடு திரும் பினார்.

    ஆனால் அப்போது இருந்தே சரியாக வேலை செய்ய முடியாமல் அவதிப் பட்டு வந்ததாக கூறப்படு கிறது. இதனால் அவர் மன வேதனையில் இருந்து வந்தாராம்.

    இந்த நிலையில் மனம் உடைந்து காணப்பட்ட சங்கர் நேற்று கம்பெனி குேடானில் திடீரென நைலான் கயிற்றால் தூக்கு போட்டு கொண்டார்.

    இதை கண்ட அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவரை மீட்டு கோபிசெட்டி பாளையம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.

    இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடந்த ஒரு வாரமாக சுந்தர கிருஷ்ணன் மனகஷ்டத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு வெட்டுக்காட்டுவலசு அடுத்த சைவ மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரகிருஷ்ணன்(43). இவரது மனைவி வசந்தி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சுந்தரகிருஷ்ணன் தனது தம்பியுடன் சேர்ந்து தறிப்பட்டறை நடத்தி வந்தார்.

    இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக சுந்தர கிருஷ்ணன் மனகஷ்டத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வீட்டில் அனைவரும் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று விட்டனர்.

    சுந்தரகிருஷ்ணன் தறி பட்டறைக்கு சென்று விட்டு பின்னர் விசேஷத்திற்கு வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் விசேஷத்திற்கு வராததால் அவரது தம்பி தறிப்பட்டறைக்கு சென்று பார்த்தார்.

    அப்போது சுந்தரகிருஷ்ணன் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர்.

    ஆனால் வரும் வழியிலேயே சுந்தரகிருஷ்ணன் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • குடிபோதையில் வீட்டுக்கு வந்த முருகன், செல்வராணியிடம் தகராறு செய்தார்.
    • இதையடுத்து விரக்தியில் முருகன் திடீரென தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் ஜாகீர் அம்மாபாளையம் அருகே உள்ள எட்டிகுட்டை தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 32).

    இவருக்கு செல்வராணி (27) என்ற மனைவி உள்ளார்.கடந்த 19-ம் தேதி குடிபோதையில் வீட்டுக்கு வந்த முருகன், செல்வராணியிடம் தகராறு செய்தார். இதையடுத்து விரக்தியில் முருகன் திடீரென தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    இதை கண்ட அவரது மனைவி மற்றும் உறவி–னர்கள் முருகனை மீட்டு சென்னை சேலம் -தேசிய நெடுஞ்சாலையில் திருவாரூர் பைபாஸ் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • குடும்ப தகராறு காரணமாக வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து தகவல் அறிந்த பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை கருமாண்டி செல்லிபாளையம் பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் பாலச்சந்தர் (34). இவர் வாடகை கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மருதவல்லி. இவர்களுக்கு ஜெகதீஸ்வரன் என்ற ஆண் குழந்தையும், சன்மதி என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.

    பாலச்சந்தர் மது பழக்கத்திற்கு அடிமையாகி இருந்து உள்ளார். அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்தார். இதனால் பாலசந்தரின் மனைவி மருதவல்லி மற்றும் தந்தை பழனி ஆகியோர் கண்டித்து உள்ளனர். ஆனாலும் பாலச்சந்தர் தொடர்ந்து மது குடித்து விட்டு வந்து குடும்பத்தின–ருடன் தகராறு செய்து வந்து உள்ளார்.

    இதனால் மருதவல்லி கோபித்துக் கொண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு கோபி அருகே உள்ள கோட்டு புள்ளம் பாளையத்தில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதன் காரணமாக மன உளைச்ச–லில் காணப்பட்ட பாலச்சந்தர் சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்க சென்று உள்ளார்.

    மறுநாள் காலை வெகு நேரம் ஆகியும் வீட்டின் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அவரது தந்தை வீட்டின் கதவை திறந்து பார்த்து உள்ளார். அப்போது பாலச்சந்தர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்து உள்ளார். உடனடியாக அவரது குடும்பத்தினர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து தகவல் அறிந்த பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மொட்டை போடுவது தொடர்பாக கணவன் - மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
    • மனம் உடைந்த நந்தினி இன்று அதிகாலை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்தவர் தனபால்,தனியார் துணி உற்பத்தி நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி நந்தினி (வயது 31). இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமண நடந்தது. தற்போது ஸ்ரீ சுதர்சன் என்ற 2 வயது மகன் உள்ளான்.

    இந்த நிலையில் சுதர்ச–னுக்கு மொட்டை போடுவது தொடர்பாக கணவன் - மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது .ஆடி மாதம் முடிந்ததும் மொட்டை போடலாம் என தனபால் கூறியுள்ளார். ஆனால் நந்தினி தற்போது மொட்டை போட வேண்டும் என கூறியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கி–டையே தகராறு ஏற்பட்டது.

    இதில் மனம் உடைந்த நந்தினி இன்று அதிகாலை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். பின்னர் சம்பவம் குறித்து அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடந்த 10 ஆண்டுகளாக லெட்சுமணன் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார்.
    • மருந்து, மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டு வந்தார்.

    வெள்ளகோவில் :

    முத்தூர் அருகே உள்ள முத்துக்கமங்கலத்தில் வசிப்பவர் லெட்சுமணன் வயது (38,)இவர் கடந்த 10 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு முத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்து மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டு வந்த நிலையில் நேற்று பகல் 1 மணி அளவில் வீட்டில் யாரும் இல்லாத போது லட்சுமணன் வீட்டின் விட்டத்தில் கயிறு மூலம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்து போன லெட்சுமணனுக்கு புதன்செல்வி (33) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

    ×