search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Speed ​​limit"

    • விபத்தை தடுக்கும் நோக்கில், வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
    • வேகத்தடைகளுக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    கோவை,

    கோவை மாநகரில் ரேஸ்கோர்ஸ் முக்கிய பகுதியாகும். இங்கு நடைபயிற்சி மற்றும் ஓட்டப் பயிற்சி, சைக்கிளிங் என உடற்பயிற்சிக்காக தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கிறார்கள். இதன்காரணமாக ரேஸ்கோர்ஸ் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேம்படுத்தப்பட்டு புதுப்பொலிவு பெற்று திகழ்கிறது.

    இங்கு இளைஞர்களுக்கு ஜிம், குழந்தைகளுக்கு விளையாட்டு பூங்கா மற்றும் கண்கவர் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ரேஸ்கோர்ஸ் எப்பொழுதும் பரபரப்பாகவே காணப்படுகிறது.

    ரேஸ்கோர்ஸ் சாலையும் புதுப்பிக்கப்பட்டு வாகனங்கள் தங்கு தடையின்றி செல்ல வழி வகை செய்யப்பட்டுள்ளது. இதனால் இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் சீறிப்பாய்ந்து செல்கின்றன. இவ்வாறு வாகனங்கள் வேகமாக செல்வதால் விபத்துகளும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. சில இடங்களில் பாதசாரிகள் ரோட்டை கடக்க முடியாமல் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.

    ேவகமாக செல்லும் வாகனங்களுக்கு கடிவாளம் போடும் வகையிலும், விபத்துகளை தடுக்கும் வகையிலும் முக்கிய இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் என போலீசாருக்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்த னர். இதையடுத்து போலீசார் வேகத்தடை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்தனர். அதன்படி ரேஸ்கோர்சை சுற்றியுள்ள சாலையில் 5 இடங்களில் நேற்று நெடுஞ்சாலை துறையினர் வேகத்தடை அமைத்தனர்.வேகத்தடைகளுக்கு பொதுமக்களும், நடை பயிற்சி மேற்கொள்பவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது:-

    இந்த சாலையில் காலை முதல் இரவு வரை அதிகமான வாகனங்கள் செல்கின்றன. மேலும் வாகனங்கள் அனைத்தும் அதிவேகமாக செல்வதால் தினமும் விபத்துகள் நடைபெற்று வந்தது.

    வேகத்தடை அமைக்கப்பட்டதால் இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் வேகத்தை குறைத்து செல்கின்றன. மேலும் எண்ணற்ற விபத்துக்கள் தவிர்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்.

    • சமூக ஆர்வலர்கள் வரவேற்பு.
    • வனத்துறையினர் சார்பில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டது.

    ஊட்டி

    மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் வாகனங்கள் மூலம் வன விலங்குகளுக்கு ஏற்படும் விபத்துக்களை தடுக்க 6 இடங்களில் மேட்டுப்பாளையம் வனத்துறையினர் சார்பில் வேகத்தடைகள் அமைக்க ப்பட்டது.

    மலைகளின் அரசியான ஊட்டிக்கு மேட்டுப்பா ளையத்தில் இருந்து குன்னூர், கோத்தகிரி சாலை வழியாக தான் செல்ல வேண்டும். இதனால் இச்சாலைகளில் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.

    தற்போது ஊட்டியில் கடும் குளிர் நிலவி வருவதால் அதனை ரசிப்பதற்காக இளம் தம்பதியினர் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஊட்டிக்கு படையெடுத்து வருகின்றனர்.

    இதனால் குன்னூர் மற்றும் கோத்தகிரி சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரித்து கொண்டே வருகிறது.

    இந்நிலையில் யானை, காட்டெருமை, மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளின் நடமாட்டம் காரணமாக மலை ப்பாதைகளில் கவனத்து டனும், மெது வாக இயக்கும் படியும் வனத்து றையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். அதிவேகமாக இயக்கப்படும் வாகனங்களில் அடிபட்டு மான் உள்ளிட்ட அரியவகை வனவிலங்குகள் அடிபட்டு இறப்பதும், ஊனமாவதும் அடிக்கடி நிகழ்கின்றன.

    இதனை கருத்தில் கொண்டு ஊட்டி சாலையில் வனவிலங்குகள் சாலையை கடக்கும் பகுதிகள் கடந்த 3 மாதங்களாக கண்காணிக்கப்பட்டன. அதேவேளையில் உயிரி ழக்கும் இடங்கள் குறித்தும் தீவிரமாக கண்காணித்ததில் ஊட்டி சாலையில் 6 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த இடங்களில் வேகத்த டைகள் அமைக்க மேட்டு ப்பாளையம் வனச்ச ரகர் ஸ்டாலின், மாவட்ட வன அலுவலர் அசோக்கு மாருக்கு பரிந்துரைத்தார்.

    பின்னர் மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் நெடுஞ்சாலைத்துறை யினருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

    எனினும் நெடுஞ்சா லைத்துறையினர் நடவடிக்கை ஏதும் எடுக்க வில்லை என கூறப்படுகிறது.

    இதுகுறித்து வனவிலங்கு ஆர்வலர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று விசார ணைக்கு வந்த நிலையில் ஊட்டி சாலையில் வேகத்தடைகள் அமைக்க உத்தரவிடப்பட்டது.

    இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் ஐகோர்ட்டு உத்தரவின் படி நேற்று ஊட்டி சாலையில் மொத்தமாக 6 இடங்களில் வேகத்தடைகள் அமைத்தனர்.

    இதனை அனைத்து சமூக ஆர்வலர்கள் வரவேற்று உள்ளனர்.  

    • அடுத்தடுத்து 2 பேர் பலி
    • 8 இடங்களில் வேக தடுப்பான்கள் அமைக்கப்பட உள்ளன.

    கோவை:

    கோவை திருச்சி சாலையில், ராமநாதபுரம் - சுங்கம் இடையே தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.253 கோடி மதிப்பில் 3.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்த மேம்பாலம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திறக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கியது.

    பாலம் திறக்கப்பட்ட சில நாட்களில் மோட்டார்சைக்கிளில் வேகமாக வந்த வாலிபர் ஒருவர் தடுப்புச்சுவரில் மோதி உயிரிழந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மற்றொரு வாலிபர், மோட்டார்சைக்கிளில் வேகமாக வந்து சுங்கம் அருகே ேமம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து பலியானார். பாலம் திறக்கப்பட்ட சில நாட்களில் விபத்தில் சிக்கி 2 வாலிபர்கள் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து மேம்பாலத்தில் விபத்து ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் போக்குவரத்து போலீசாரிடம் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

    இதையடுத்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், போக்குவரத்து துணை கமிஷனர் மதிவாணன் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பாலத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து மேம்பாலத்தில் வாகனங்களின் வேகத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கின.

    முதற்கட்டமாக பாலத்தின் இரண்டு பக்கமும் தலா 2 இடங்களில் வாகனங்கள் வேகத்தை குறைத்து வளைந்து செல்லும் வகையில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன. மேலும் பாலத்தின் பல்வேறு இடங்களில் வேக தடுப்பான்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி மேம்பாலத்தில் 8 இடங்களில் வேகத்தடை அமைக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-ராமநாதபுரம் - சுங்கம் பாலத்தில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே வாகனங்கள் செல்லலாம். ஆனால் சில வாகன டிரைவர்கள் அதிவேகத்தில் செல்கின்றனர்.

    எனவே வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த 8 இடங்களில் வேக தடுப்பான்கள் அமைக்கப்பட உள்ளன.

    நேற்று ராமநாதபுரத்தில் இருந்து சுங்கம் வரும் வழித்தடத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு வேக தடுப்பான்கள் அமைக்கப்பட்டன. இன்று சுங்கத்தில் இருந்து ராமநாதபுரம் செல்லும் வழித்தடத்தில் வேக தடுப்பான் அமைக்கப்படுகிறது. ஒரே இடத்தில் அடுத்தடுத்து 3 முதல் 6 எண்ணிக்கையில் உயரம் குறைவாக இருக்கும் வகையில் இந்த வேக தடுப்பான்கள் அமைக்கப்படுகின்றன.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.  

    ×