என் மலர்
நீங்கள் தேடியது "முதியவர் பிணம்"
- புதிய பஸ் நிலைய பகுதியில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார்.
- இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற பள்ளப்பட்டி போலீசார் முதியவரின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையின் பிரேத பரிசோதனை கூட்டத்திற்கு அனுப்பி வைத்தனர்.
சேலம்:
சேலம் புதிய பஸ் நிலைய பகுதியில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற பள்ளப்பட்டி போலீசார் முதியவரின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையின் பிரேத பரிசோதனை கூட்டத்திற்கு அனுப்பி வைத்தனர். இறந்த முதியவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் பிணம்
- போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்
கடலூர்:
பண்ருட்டி அருகே கொக்குபாளையத்தில் ஜெயபால் தென்னந்தோப்பு அருகே கெடிலம் ஆற்றுக்குசெல்லும் வழியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம்தெரியாதஆண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது பற்றி தகவல் கிடைத்ததும்புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி பண்ருட்டி அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர். இவர் யார்?எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக இங்கு வந்தார் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நெல்லிக்குப்பம் செல்லும் சாலை ஓரமாக 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார்.
- குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்து கிடந்த முதியவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் செம்மண்டலத்தில் உள்ள நெல்லிக்குப்பம் செல்லும் சாலை ஓரமாக 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து கடலூர் புதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்து கிடந்த முதியவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தனியாக வசித்து வந்த இவர் குடிப்பழக்கம் உடையவர். கடந்த 17-ந் தேதி அருகில் உள்ள ஆற்றில் குளிக்க சென்ற பரமேசுவரன் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
- புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவருடைய உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
கன்னியாகுமரி :
சுசீந்திரம்அருகே உள்ள சங்கரன்புதூர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பரமேஷ்வரன் (வயது 64). தனியாக வசித்து வந்த இவர் குடிப்பழக்கம் உடையவர். கடந்த 17-ந் தேதி அருகில் உள்ள ஆற்றில் குளிக்க சென்ற பரமேசுவரன் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. காலையில் ஆற்றில் குளிக்க சென்றவர்கள், அங்கு அவர் பிணமாக கிடப்பதை பார்த்து மகன் ரமேசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அவர் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவருடைய உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தேனி புதிய பஸ்நிலையம் பகுதியில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க நபர் பிணமாக கிடந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த முதியவர் யார் என்று விசாரித்து வருகின்றனர்.
தேனி:
தேனி புதிய பஸ்நிலையம் மூணாறு செல்லும் பஸ்கள் நிற்கும் பகுதியில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க நபர் பிணமாக கிடந்தார்.
அவர் நீலம் மற்றும் வெள்ளை கட்டம் போட்ட சட்டை மற்றும் கைலி அணிந்திருந்தார். இது குறித்து தேனி வி.ஏ.ஓ. கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் தேனி போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த முதியவர் யார்?
எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.