search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈட்டி எறிதல்"

    • இனிவரும் முயற்சிகளுக்கு வெற்றிபெற வாழ்த்துகள்.
    • இந்தியா இதுவரை 3 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கலம் என 14 பதக்கங்களை வென்றுள்ளது.

    பிரான்ஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

    பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் F64 போட்டியில் 70.59 மீ தூரம் என்ற புதிய உலக சாதனையுடன் இந்தியாவின் சுமித் ஆன்டில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

    சுமித்துக்கு பாராலிம்பிக்கில் தொடர்ந்து 2வது தங்கம்.


    இந்தியா இதுவரை 3 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கலம் என 14 பதக்கங்களை வென்றுள்ளது.

    இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், பாரா ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் எப்64 போட்டியில் தங்கம் வென்றத சுமித்துக்கு வாழ்த்துகள்! சிறப்பான நிலைத்தன்மையையும், சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். சுமித்தின் இனிவரும் முயற்சிகளுக்கு வெற்றிபெற வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.


    • இந்தியா இதுவரை 3 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கலம் என 14 பதக்கங்களை வென்றுள்ளது.
    • புதிய உலக சாதனையுடன் இந்தியாவின் சுமித் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

    பிரான்ஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

    பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் F64 போட்டியில் 70.59 மீ தூரம் என்ற புதிய உலக சாதனையுடன் இந்தியாவின் சுமித் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

    சுமித்துக்கு பாராலிம்பிக்கில் தொடர்ந்து 2வது தங்கம்.

    இந்தியா இதுவரை 3 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கலம் என 14 பதக்கங்களை வென்றுள்ளது.

    • நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம், எங்களுக்கு இந்த வெள்ளி தங்கத்துக்கு நிகரானது
    • எல்லோருக்கும் அவர்களின் நாள் என்பது ஒன்று இருக்கும், இது பாகிஸ்தானின் நாள்

    நிறைவு பெரும் தருவாயில் உள்ள பாரீஸ் ஒலிம்பிக்சில் நேற்று நடந்த ஈட்டியெறிதல் இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரத்திற்கு வீசி சாதனை படைத்ததோடு, தங்கப் பதக்கம் வென்றார். இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.45 தூரத்திற்கு வீசி 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    இந்த வருட ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இதுவரை இந்தியா 4 வெண்கலம் வென்றுள்ள நிலையில், நீரஜ் முதல் வெள்ளியை வென்றுள்ளார். நீரஜ் சோப்ராவின் இந்த வெற்றிக்கு அனைத்து தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

    நீரஜின் தாய் சரோஜா தாய் மகனின் வெற்றி குறித்து பேசுகையில், நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம், எங்களுக்கு இந்த வெள்ளி தங்கத்துக்கு நிகரானது, நீரஜுக்கு காயம் ஏற்பட்டிருந்தது, எனவே இந்த அளவு விளையாடியதே மகிழ்ச்சிதான். [பாகிஸ்தான் வீரர்] நதீம் தங்கம் வென்றதில் எனக்கு மகிழ்ச்சியே. அவரும் மகன் போலத்தான். அனைவரும் [வீரர் வீராங்கனைகளும்] எனது பிள்ளைகள்தான். வீட்டுக்கு வந்ததும், நீரஜூக்கு பிடித்த உணவைச் சமைத்துத் தருவேன் என்று தெரிவித்துள்ளார்.

    நீரஜ் சோப்ராவின் வெற்றி குறித்துப் பேசியுள்ள அவரது தந்தை சதீஷ் குமார், எல்லோருக்கும் அவர்களின் நாள் என்பது ஒன்று இருக்கும், இது பாகிஸ்தானின் நாள், நாம் வெள்ளி வென்றுள்ளோம். அதுவே மிகவும் பெருமைக்குரியது என்று தெரிவித்துள்ளார். அரியானா மாநிலத்தைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடத்த ஒலிம்பிக்சில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. 

    • இறுதிப்போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.45 தூரத்திற்கு வீசி 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
    • நமது தேசிய கீதம் தற்போது இங்கு ஒலிக்காது. ஆனால் வருங்காலத்தில் எங்காவது ஓர் இடத்தில் அது நிச்சயமாக ஒலிக்கும்

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வரும் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நாளை மறுநாள் ஆகஸ்ட் 11 உள்ளது.இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 206 நாடுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் இந்த போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். இதில் இந்தியா இதுவரை 4 வெண்கலம் ஒரு வெள்ளி என 5 பதக்கங்களை வென்றுள்ளது. நேற்று நடந்த ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.45 தூரத்திற்கு வீசி 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரத்திற்கு வீசி சாதனை படைத்ததோடு, தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

    வெள்ளி வென்ற நீரஜ் சோப்ராவுக்கு அனைத்து தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. தனது வெற்றி குறித்து பாரீஸ் ஒலிம்பிக் கிராமத்திலிருந்து செய்தியாளர்களிடம் பேசிய நீரஜ் சோப்ரா, நமது நாட்டுக்காக பதக்கம் கிடைக்கும் போதெல்லாம் நாம் மகிழ்ச்சியாக உணர்கிறோம். இது விளையாட்டை மேம்படுத்துவதற்கான தருணம். அனைவரும் அமர்ந்து விவாதித்து விளையாட்டை மேம்படுத்துவதே தற்போதுள்ள பணி.

    இந்தியா சிறப்பாக விளையாடியுள்ளது [பாரீஸ் ஒலிம்பிக்கில்], இந்த போட்டியும் சிறப்பாக அமைந்தது. ஒவ்வொரு வீரருக்கும் அவருக்கான நாள் என்பது வரும். இது அர்ஷத்தின் [பாகிஸ்தான் வீரர்] நாள். எனது சிறந்ததை[முயற்சியை] நான் வழங்கினேன். ஆனால் இன்னும் சில விஷயங்களை கண்டறிந்து அதில் மேலும் உழைப்பை செலுத்தியாக வேண்டி உள்ளது. நமது தேசிய கீதம் தற்போது இங்கு ஒலிக்காது. ஆனால் வருங்காலத்தில் எங்காவது ஓர் இடத்தில் அது நிச்சயமாக ஒலிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    • இந்தியா 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.
    • மல்யுத்தத்தில் வினேஷ் போகத் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே ஆகியோர் வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.

    இந்நிலையில், ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். அவர் தனது முதல் வீச்சில் 89.34 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்தார். இதன்மூலம் அவர் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றார்.

    மல்யுத்தத்தில் பெண்கள் 50 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் காலிறுதிக்கு முன்னேறினார்.

    • நீரஜ் சோப்ரா 82.27 மீட்டர் தொலைவு ஈட்டி எறிந்து தங்கம் வென்றார்.
    • 3 ஆண்டில் முதன்முறையாக இந்திய மண்ணில் நடந்த போட்டியில் அவர் பதக்கம் வென்றார்.

    புவனேஸ்வர்:

    ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் 2024-ம் ஆண்டுக்கான தேசிய பெடரேசன் சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா 82.27 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து தங்கப்பதக்கம் வென்றார்.

    3 ஆண்டுகளில் முதன்முறையாக இந்திய மண்ணில் நடந்த போட்டியில் அவர் பதக்கம் வென்றுள்ளார்.

    போட்டியின் தொடக்கத்தில் முன்னிலை பெற கடுமையாக போராடினார். 3 சுற்றுகளுக்கு பின் 2-வது இடம் பிடித்த அவர், 4-வது சுற்றில் 82.27 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து முன்னிலை பெற்றார். போட்டியில் மற்றவர்களைவிட தொடர்ந்து முன்னிலை வகித்த நிலையில் இறுதிச்சுற்றில் அவர் விளையாடவில்லை.

    இந்தப் போட்டியில் டி.பி.மானு 82.06 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    • புடாபெஸ்ட் நகர போட்டியில் 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்தார்
    • தற்போது 12-நாள் பயிற்சி முகாமிற்காக சுவிட்சர்லாந்து சென்றுள்ளார்

    ஈட்டி எறிதல் விளையாட்டில், ஒலிம்பிக் போட்டிகள், உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் மற்றும் டயமண்ட் லீக் போட்டிகள் ஆகியவற்றில் முதலிடம் பிடித்து பல கோப்பைகளையும், பதக்கங்களையும் குவித்தவர் இந்தியாவை சேர்ந்த நீரஜ் சோப்ரா.

    சமீபத்தில் ஹங்கேரி நாட்டின் தலைநகரான புடாபெஸ்ட் நகரில் ஈட்டி எறிதல் போட்டியில் 88.17 மீட்டர் தூரம் வரை ஈட்டி எறிந்து சாதனை படைத்தார். அவருக்கு 2022-ம் ஆண்டு, ஐரோப்பாவில் உள்ள முக்கிய சுற்றுலா மையமான சுவிட்சர்லாந்து நாட்டில் அந்நாட்டிற்கான 'நட்பு தூதர்' அந்தஸ்து வழங்கப்பட்டது.

    நட்பு தூதராக, தனது அனுபவங்களை அந்நாட்டின் விளையாட்டு ஆர்வலர்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் அந்நாட்டில் உள்ள தனித்துவம் வாய்ந்த பனிச்சறுக்கு விளையாட்டுகளை உலகிற்கு அறிமுகப்படுத்தி விளையாட்டு சுற்றுலாவிற்கான முக்கிய நாடாக சுவிட்சர்லாந்து நாட்டை விளம்பரப்படுத்தி வருகிறார்.

    தற்போது, சுவிட்சர்லாந்து நாட்டில் 12-நாள் பயிற்சி முகாமிற்காக அங்குள்ள மேக்லிங்கன் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பும், சிறப்பான உபசரிப்பும் வழங்கப்பட்டது.

    இது குறித்து சுவிட்சர்லாந்து நாட்டின் சுற்றுலாத்துறையில் உலகளாவிய கூட்டமைப்பின் தலைவர் பாஸ்கல் ப்ரின்ஸ் கூறும் போது, "இந்திய விளையாட்டு துறையின் சாதனையாளரான நீரஜ் சோப்ராவை எங்கள் நாட்டின் சார்பாக கொண்டாடுவதில் பெருமை அடைகிறோம். நீரஜ் ஒரு தலைமுறையையே ஊக்கப்படுத்தும் சக்தி படைத்தவர். இளம் தலைமுறையினருக்கு அவர் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக திகழ்கிறார். அவரது உலக சாதனைகளுக்காக அவரை பாராட்டுகிறோம். அவரது எதிர்கால முயற்சிகள் வெற்றி பெற எங்கள் வாழ்த்துக்கள்," என்று தெரிவித்தார்.

    சுவிட்சர்லாந்து சென்றுள்ள நீரஜ் சோப்ரா, அங்குள்ள பனி மலைகளில் பல்வேறு விளையாட்டுகளில் ஆர்வமுடன் பங்கேற்று அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதள கணக்குகளில் பதிவிட்டு வருகிறார்.

    • நீரஜ் சோப்ரா 88.67 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து முதல் இடத்தைப் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
    • 2022ம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சோப்ரா வெள்ளி வென்றார்.

    கத்தாரில் தோஹா டையமண்ட் லீக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார்.

    2022ம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சோப்ரா வெள்ளி வென்றார். அதனால், இந்த முறையும் அவர் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில் நீரஜ் சோப்ரா 88.67 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து முதல் இடத்தைப் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். செக் குடியரசு வீரர் ஜேக்கப் வேட்லக்(88.63 மீட்டர்) இரண்டாவது இடத்தையும், கிரெனடா வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸ்(85.88 மீட்டர்) மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

    • ஒடிசா மாநிலம் போலங்கீரில் உள்ள ஆகல்பூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விளையாட்டு போட்டி நடந்து கொண்டு இருந்தது.
    • படுகாயமடைந்த சிறுவனை அங்கு இருந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலம் போலங்கீரில் உள்ள ஆகல்பூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விளையாட்டு போட்டி நடந்து கொண்டு இருந்தது. ஈட்டி எறிதலின்போது 9-ம் வகுப்பு மாணவனின் கழுத்தில் ஈட்டி எதிர்பாராதவிதமாக பாய்ந்தது. படுகாயமடைந்த அவனை அங்கு இருந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    தகவல் அறிந்த அந்த மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக் மாணவனின் நலம் விசாரித்தார். சிகிக்சைக்கான செலவை முதல்-மந்திரி நிவாரண நிதி மூலம் ஏற்கப்படும் என அறிவித்தார்.

    • நீரஜ் சோப்ராவின் முந்தைய சாதனையை தற்போது அவரே முறியடித்துள்ளார்.
    • ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.94 மீட்டர் தூரம் எறிந்து புதிய தேசிய சாதனை படைத்தார்.

    ஸ்டாக்ஹோம்:

    ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற டைமண்ட் லீக் தொடரில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.94 மீட்டர் தூரம் எறிந்து புதிய தேசிய சாதனை படைத்தார். இதன் மூலம் இந்த போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார். கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 90.31 மீட்டர் தூரம் எறிந்து முதல் இடத்தைப் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.

    பின்லாந்தில் நடைபெற்ற பாவோ நூர்மி விளையாட்டுப் போட்டியில் 89.30 மீட்டர் தூரம் எறிந்து தேசிய சாதனை படைத்திருந்தார். நீரஜ் சோப்ராவின் முந்தைய சாதனையை தற்போது அவரே முறியடித்துள்ளார்.

    ×