search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீல்வைப்பு"

    • ஆலையை பூட்டி வருவாய்த் துறையினர் ‘சீல்’ வைத்தனர்.
    • புகாரின் பேரில் வழக்குப்பதிவு கைது செய்து விசாரணை.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு மாரனேரியில் பெப்சி என்ற பெயரில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் அதிகாரிகள் நடத்திய அதிரடி ஆய்வில் பல்வேறு விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

    இதையடுத்து பட்டாசு ஆலை விதி மீறி இயங்கியதாக கருதி கடந்த மார்ச் 1-ந்தேதி தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்டது. அங்கு வேலை பார்த்த தொழிலாளர்கள் வேறு ஆலைகளுக்கு சென்றுவிட்டனர். ஆனாலும் ஆலை செயல்படுவது போல் தினமும் பலர் அந்த ஆலைக்கு சென்று வந்தனர்.

    இந்நிலையில் இந்த ஆலையில் சட்ட விரோத மாக பட்டாசு உற்பத்தி செய்யப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தாசில் தார் வடிவேல் தலைமையில் அதிகாரிகள் ஆலையில் அதிரடியாக ஆய்வு செய்த னர்.

    இந்த ஆய்வில் 50 தொழி லாளர்களை வைத்து சட்ட விரோதமாக பட்டாசு உற்பத்தி செய்தது கண்டறி யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பட்டாசு ஆலையை பூட்டி வருவாய்த் துறையினர் 'சீல்' வைத்தனர். மேலும் மாரனேரி போலீஸ் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் ஜெயபால் பட்டாசு ஆலை உரிமையாளர் கண்ணன் மீது கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் பட்டாசு ஆலைகளில் உரிய பயிற்சி பெற்ற போர்மேன்களை மட்டுமே பணியில் அமர்த்தி உரிய விதிமுறைகளை பின்பற்றி அவரது மேற்பார்வையில் மருந்து கலவை செய்ய வேண்டும் என்று கலெக்டர் கடுமையாக எச்சரித்துள்ளார்.

    இதில் முரண்பாடு இருந்தால் ஆலை மீதும், அந்த போர்மேன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேற்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் அதனை சற்றும் கண்டு கொள்ளாமல் உரிமம் ரத்து செய்யப்பட்ட ஆலையில் விதிகளை மீறி சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • தமிழகம் முழுவதும் உரிமம் இல்லாமல் செயல்பட்டு வரும் டாஸ்மாக் பார்களைக் கண்டறிந்து அவற்றிற்கு சல் வைக்க நடவடிக்கை எடுக்கு மாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
    • மாநகரில் 13 டாஸ்மாக் பார்கள் உரிய அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    சேலம்:

    தஞ்சையில் டாஸ்மாக் மதுக்கூடத்தில் போலி மது வாங்கி குடித்த 2 பேர் உயிரிழந்த சம்பவத்தை யடுத்து தமிழகம் முழுவதும் உரிமம் இல்லாமல் செயல்பட்டு வரும் டாஸ்மாக் பார்களைக் கண்டறிந்து அவற்றிற்கு சல் வைக்க நடவடிக்கை எடுக்கு மாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் உத்தர வின் பேரில், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் குப்பு சாமி, கலால் உதவி ஆணை யர் மாறன் மற்றும் மது விலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் செல்வி ஆகி யோர் அடங்கிய குழுவினர் கடந்த 2 நாட்களாக மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக் கூடங்களை ஆய்வு செய்தனர்.

    அப்போது சேலம் டவுன் ரெயில் நிலையம் எதிரில், புதிய பேருந்து நிலையம், நெத்திமேடு, கொண்ட லாம்பட்டி, கந்தம்பட்டி உள்ளிட்ட மாநகரில் 13 டாஸ்மாக் பார்கள் உரிய அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது

    இதேபோல ஊரக பகுதி களில் ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், வாழப்பாடி உள்பட புகர் பகுதியில் 14 டாஸ்மாக் மதுக்கூடங்கள் உரிமம் பெறாமல் செயல்பட்டு வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் உரிமம் பெறாமல் செயல்பட்டு வந்த மொத்தம் 27 டாஸ்மாக் பார்களுக்கும் சீல் வைக்கப்பட்டது.

    மேலும் டாஸ்மாக் கடை களில் நிர்ணயம் செய்யப் பட்ட விலையை விட கூடு தல் விலைக்கு மது விற்பனை செய்தால் கடையின் விற்ப னையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

    • நிலுவை தொகை செலுத்தாத டிரஸ்ட் அலுவலகத்துக்கு சீல்வைக்கப்பட்டது.
    • நகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ஏ.கே. டி. டிரஸ்டுக்கு சொந்தமான அலுவலகம் மற்றும் கடைகள் உள்ளன. இதற்கு 2011-12 முதல் 2022-23 வரை சுமார் ரூ.30 லட்சம் நிலுவை தொகை உள்ளது. இந்த டிரஸ்டுக்கும், நகராட்சிக்கும் கோர்ட்டில் வழக்கு நடந்தது.

    இதில் நகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது. அதன் பிறகும் டிரஸ்ட் அலுவலகம் நிலுவை தொகையை செலுத்தவில்லை. நிலுவை தொகையை செலுத்தக்கோரி அலுவலகம் மற்றும் டிரஸ்டுக்கு சொந்தமான கடைகளுக்கு அறிவிப்பு செய்யப்பட்டது. அதன் பிறகும் நிலுவை தொகைகள் நகராட்சிக்கு செலுத்தப்படவில்லை.

    இதையடுத்து ராஜபாளையம் நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி தலைமையில் வருவாய் அலுவலர் முத்துசெல்வம், வருவாய் ஆய்வர்கள் பாண்டி, நாகராஜ், சிவராமன் மற்றும் நகராட்சி வருவாய் உதவியாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள், பணியாளர்களால் டிரஸ்ட் அலுவலகத்தை ஜப்தி செய்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.

    • விழுப்புரத்தில் அதிரடி: குட்கா விற்ற கடைக்கு அதிகாரிகள் சீல்வைத்தனர்.
    • அதிகாரி பாலசுப்பிரமணியன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் முன்னிலையில் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் நகர போலீஸ் நிலையம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் குருசாமி பிள்ளை தெருவில் பங்கடையில் விற்பனைக்காக வைத்திருந்த ஹான்ஸ், ஆர்எம்.பி பாக்கு, விமல் பாக்கு வைத்து வியாபாரம் செய்த விழுப்புரம் ஜி.ஆர்.பி தெருவை சேர்ந்த திவாகர் (வயது 27) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட பங்க் கடையை விழுப்புரம் நகராட்சி அதிகாரி பாலசுப்பிரமணியன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் முன்னிலையில் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

    ×