என் மலர்
நீங்கள் தேடியது "மயக்க ஊசி"
- தனக்கு தானே மயக்க ஊசியும் செலுத்திக் கொண்டார்.
- தவறான தையல்களால் ரத்தப்போக்கு நிற்காமல் அதிகமாகியது.
யூடியூப் பார்த்து கர்ப்பிணிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த சம்பவங்கள் அதிகம் நடந்துள்ளது.
அதே வரிசையில் வயிற்று வலியால் துடித்த வாலிபர் ஒருவர் தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்து கொண்ட சம்பவம் ஒன்று உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
ஆக்ராவை அடுத்த மதுராவில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ராஜபாபு (வயது 32). திருமண மண்டபம் நடத்தி வருகிறார். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதற்காக அவருக்கு குடல் வால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் அவருக்கு வயிற்று வலி குணமாகவில்லை.
ஆஸ்பத்திரிக்கு சென்றும் தீர்வு கிடைக்காததால் அவர் தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிவு செய்தார். இதற்காக யூடியூப் மற்றும் ஆன்லைனில் வரும் வயிற்று வலி சம்பந்தமான குறிப்புகளை தேடி கண்டுபிடித்தார்.
அதில் ஆபரேஷன் செய்யும் வீடியோக்களையும் பார்த்துள்ளார். இதையடுத்து அவர் தனக்கு தானே ஆபரேஷன் செய்ய திட்டமிட்டார்.
ஆபரேஷனுக்கு தயாரான அவர் தனது வீட்டில் உள்ள ஒரு அறைக்கு சென்று கதவை பூட்டிக் கொண்டு ஆபரேஷன் செய்ய முயன்றார்.
தனக்கு தானே மயக்க ஊசியும் செலுத்திக் கொண்டார். ஆபரேஷன் செய்யும் கத்தியால் தனது வயிற்றில் வலது புறம் 7 செ.மீ. அளவிற்கு கீறினார்.
ஆனால் அவர் எதிர்பார்த்ததை விட ஆபரேஷன் கத்தி ஆழமாக சென்றது. இதனால் அவருக்கு வலி அதிகமாகி ரத்தம் வர தொடங்கியது.
இதனை சரி செய்ய முயன்ற ராஜபாபு அந்த இடத்தை தானே தைத்தார். 10-12 தையல்களையும் போட்டுள்ளார். தவறான தையல்களால் ரத்தப்போக்கு நிற்காமல் அதிகமாகியது. இதனால் பயந்து போன அவர் கத்தி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் அங்கு ஓடி வந்தனர். ரத்த வெள்ளத்தில் ராஜபாபு சரிந்து கிடப்பதையும் வயிற்றில் கீறல் இருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரை உடனடியாக மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
யூடியூப் பார்த்து தனக்கு தானே வாலிபர் ஆபரேசன் செய்து கொண்ட இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர்.
- வனத்துறையினர் இரவு பகலாக தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு ட்ரோன் மூலம் யானையை கண்காணித்து வந்தனர்.
- யானை பிடிக்கப்பட்டதால் அச்சத்துடன் வாழ்ந்து வந்த மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
தருமபுரி:
ஒற்றை ஆண் யானை ஒன்று, கடந்த 15 நாட்களுக்கு முன்பு கர்நாடகா மாநிலத்தில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வழியாக ஒகேனக்கல் வனப்பகுதியை விட்டு வெளியேறியது. இந்த யானை கிராமப் பகுதிகளில் சுற்றி திரிந்து, கடந்த வாரம் தருமபுரி நகர் பகுதி வரை சென்றது. மேலும் தருமபுரியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்தது.
இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் உடனே தருமபுரிக்கு வந்து அட்டகாசம் செய்து வந்த ஒற்றை யானையை தொப்பூர் வனப் பகுதியில் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த ஒற்றை யானை மீண்டும் பொம்மிடி கிராமப் பகுதியில் நுழைந்தது.
குறிப்பாக முத்தம்பட்டி, கொண்டகரஅள்ளி, காளிக்கரம்பு வழியாக சுற்றிய யானையை கம்பைநல்லூர் வழியாக கொண்டு சென்று பாலக்கோடு வனப்பகுதியில் விட வன துறை தீவிர முயற்சி மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து அந்த யானை சில்லாரஅள்ளியில் இருந்து கொடகாரஅள்ளி பகுதியில் மைலாப்பூர் கிராமத்தில் தஞ்சம் புகுந்தது.
வனத்துறையினர் இரவு பகலாக தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு ட்ரோன் மூலம் யானையை கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், வனச்சரக அலுவலர் ஆனந்தகுமார் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் வத்தல் மலை அடிவாரபகுதியில் நேற்று இரவு நேரத்தில் மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில் இரவு நேரத்தில் காட்டிலிருந்து வெளியேறிய யானை விவசாய தோட்டங்களை சேதப்படுத்தி உணவை உட்கொண்டது. அப்போது யானைக்கு வனத்துறையினர் இரண்டு மயக்க ஊசி செலுத்தினர்.
உடனடியாக கிரேன் மூலம் யானையை மீட்டு ஒகேனக்கல் அருகே உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வனப் பகுதிகளுக்குள் விடுவதற்காக யானையை வாகனம் மூலம் அழைத்துச் சென்றனர்.
கடந்த 3 வாரமாக மக்களை அச்சுறுத்தி வந்த யானை பிடிக்கப்பட்டதால் அச்சத்துடன் வாழ்ந்து வந்த மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
- பாலியல் பலாத்கார காட்சிகள் அனைத்தையும் வீடியோ எடுத்து வைத்துள்ளார்.
- பீகாரில் வேலை பார்த்து வந்த அந்த பெண்ணின் கணவர் கொல்கத்தாவிற்கு வந்துள்ளார்.
கொல்கத்தா:
கொல்கத்தா வடக்கு பர்கானாஸில் உள்ள ஹஸ்னாபாத்தை சேர்ந்த 26 வயது பெண் ஒருவரின் கணவர் பீகாரில் வேலை பார்த்து வருகிறார். இதனால் அவர் மட்டும் தனியாக கொல்கத்தாவில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் பருன்ஹாட்டில் டாக்டர் நூர்ஆலம் சர்தார் (வயது40) என்பவர் நடத்தி வரும் கிளினிக்கிற்கு சிகிச்சைக்காக சென்றார்.
டாக்டர் நூர்ஆலம் சர்தார் அந்த இளம் பெண்ணுக்கு சிகிச்சை அளித்தார். அப்போது அவர் அந்த பெண்ணிற்கு மயக்க ஊசி செலுத்தியுள்ளார். இதனால் அவர் மயங்கி சரிந்தார். அந்த நேரத்தில் ஆஸ்பத்திரியில் வேறு நோயாளிகளோ மருத்துவ பணியாளர்களோ இல்லை.
இதனை பயன்படுத்தி கொண்ட டாக்டர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அவர் பாலியல் பலாத்கார காட்சிகள் அனைத்தையும் வீடியோ எடுத்து வைத்துள்ளார்.
மயக்கம் தெளிந்த அந்த பெண்ணிற்கு தான் கற்பழிக்கப்பட்டது தெரியவந்தது. இதனால் அவர் டாக்டரிடம் நடந்தை கேட்டு வாக்குவாதம் செய்தார். அவர் அந்த இளம்பெண்ணை சமாதானம் செய்தார்.
இதற்கு பின்னர் அந்த பெண்ணை மிரட்டி அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்தநிலையில் தனக்கு ரூ.4 லட்சம் தரவேண்டும். இல்லையென்றால் பாலியல் பலாத்கார வீடியோ காட்சிகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் வீடியோ வெளியே வந்தால் தனக்கு அவமானம் ஏற்படும் என்று பயந்து ரூ.4 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்தும் டாக்டர் அந்த பெண்ணிடம் பணம் கேட்டும் பாலியல் பலாத்காரத்துக்கு அழைத்தும் அச்சுறுத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் பீகாரில் வேலை பார்த்து வந்த அந்த பெண்ணின் கணவர் கொல்கத்தாவிற்கு வந்துள்ளார். அவரிடம் நடந்த சம்பவம் அனைத்தையும் அந்த பெண் கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் மனைவியுடன் சென்று ஹஸ்னாபாத் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதில் அவர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ததும், வீடியோ எடுத்து பணம் பறித்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் டாக்டர் நூர்ஆலம் சர்தாரை கைது செய்தனர். இந்த சம்பவம் மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- காதுகளில் துளையிட வேண்டி டாக்டர்கள், குழந்தைக்கு மயக்க மருந்து கொடுத்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் குண்டலுபேட்டை தாலுகாவில் உள்ள ஹங்கலா கிராமத்தை சேர்ந்த ஆனந்த் - சுபமானசா தம்பதியின் 6 மாத குழந்தை பிரக்யாத். தங்களது குழந்தைக்கு காது குத்துவதற்காக பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டு சென்றனர்.
இதையடுத்து காதுகளில் துளையிட வேண்டி டாக்டர்கள், குழந்தைக்கு மயக்க மருந்து கொடுத்தனர். மயக்க மருந்து கொடுத்த சிறிது நேரத்திலே குழந்தைக்கு வலிப்பு வர தொடங்கியது. இதனால் டாக்டரின் ஆலோசனையின் பேரில் உடனடியாக குழந்தையை குண்டலுபேட்டை தாலுகா அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டு சென்றனர்.
ஆனால் அவர்கள் மருத்துவமனைக்கு சென்றடைவதற்குள் குழந்தை சுய நினைவை இழந்து இறந்துவிட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆசனூர் வனக்கோட்ட துணை இயக்குனர் தேவேந்திர குமார் முன்னிலையில் மயக்க ஊசி செலுத்தப்பட்டு வேறு கூண்டுக்கு மாற்றப்பட்டது. அப்போது அந்த சிறுத்தை எதிர்பாராத விதமாக தப்பி ஓடியது.
- சிறுத்தையை வேனில் ஏற்றி பவானிசாகர் வன சரகத்துக்குட்பட்ட அடர்ந்த வனப்பகுதியான தெங்குமரஹடா மங்கள பட்டி கொண்டு சென்றனர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி, ஆசனூர் மற்றும் சுற்று வட்டார வனப்பகுதிகளில் யானை, கரடி, புலி, சிறுத்தை என ஏராளமான வன விலங்குகள் உள்ளன.
இந்த வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் புலி, சிறுத்தைகள் விவசாய தோட்டத்தில் புகுந்து ஆடு, மாடுகளை வேட்டை யாடி வருகிறது.
மேலும் சிறுத்தைகள் வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராங்களில் புகுந்து கால்நடைகளை அடித்து கொன்று விட்டு அருகே உள்ள கல்கு வாரியில் பதுங்கி கொள்வது தொடர்ந்து நடந்து வருகிறது.
இதையடுத்து தாளவாடி அடுத்த ஓசூர் கிராமத்தின் அருகே உள்ள கல்குவாரில் பதுங்கிய சிறுத்தையை பிடிக்க வனத்துறை கடந்த 10 நாட்களுக்கு முன்பு கூண்டு வைத்தனர். கூண்டில் இறைச்சியை கட்டி வைத்து வந்தனர். ஆனால் சிறுத்தை சிக்காமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் போக்கு காட்டி வந்த அந்த சிறுத்தை கூண்டில் சிக்கிக் கொண்டது. இது குறித்து வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆசனூர் வனக்கோட்ட துணை இயக்குனர் தேவேந்திர குமார் முன்னிலையில் மயக்க ஊசி செலுத்தப்பட்டு வேறு கூண்டுக்கு மாற்றப்பட்டது. அப்போது அந்த சிறுத்தை எதிர்பாராத விதமாக தப்பி ஓடியது.
சிறுத்தை ஓடுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் செய்வது அறியாமல் தலைதெறிக்க ஓடினார்கள்.
தொடர்ந்து வனத்துறையினர் தப்பிய சிறுத்தையை அந்த பகுதியில் உள்ள கல்குவாரியில் தேடினர். அப்போது கல்குவாரி கல்லுக்கு அடியில் சிறுத்தை படுத்து கிடந்தது தெரிய வந்தது.
பின்னர் மயக்க ஊசி செலுத்தி அந்த சிறுத்தையை பிடித்தனர். பின்னர் சிறுத்தையை சாக்கு பையில் மூட்டைகட்டி மீண்டும் கூண்டில் அடைத்தனர்.
இதையடுத்து நேற்று இரவு சிறுத்தையை வேனில் ஏற்றி பவானிசாகர் வன சரகத்துக்குட்பட்ட அடர்ந்த வனப்பகுதியான தெங்குமரஹடா மங்கள பட்டி கொண்டு சென்றனர். அங்கு கூண்டு திறந்து விடப்பட்டது.
இதையடுத்து அந்த சிறுத்தை அடர்ந்த வனப்பகுதிக்கு சென்றது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்.