என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீர்மானம் நிறைவேற்றம்"

    • திமுக ஆட்சியில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்.
    • சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த மத்திய அரசின் அறிவிப்பை வரவேற்பதாக தீர்மானம் நிறைவேற்றம்.

    தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    அதன்படி, மக்களிடம் நாடகமாடும் திமுக அரசுக்கு கண்டனம் என அதிமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    தேர்தலின்போது 525 வாக்குறுதி அளித்துவிட்டு அதனை நிறைவேற்றாமல் தவறான தகவல் பரப்பும் திமுகவுக்கு எதிர்ப்பு என தீர்மானம் நிறைவறே்றம்.

    நீட் விவகாரத்தில் இனியும் ஏமாற்றாமல் திமுக தலைவர் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றம்.

    மக்களின் கோபத்தை மறைக்க கல்விக்கொள்ளை, மொழிக் கொள்கை, கச்சத்தீவு மீட்பு, மாநில சுயாட்சி என்று திமுக நாடகம் என தீர்மானம்.

    நீர் மேலாண்மையை முறையாக பாதுகாக்கத் தவறிய திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக செயற்குழுவில் தீர்மானம்.

    நடந்தாய் வாழி காவிரி திட்டத்திற்கு அனுமதி பெற்றுத்தந்த இபிஎஸ் திட்டத்திற்கு நிதி ஒதுக்கிய பிரதமருக்கு நன்றி கூறி தீர்மானம் நிறைவேற்றம்.

    அதிமுக என்றென்றும் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக திகழும் என உறுதி அளித்து அதிமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்.

    திமுக ஆட்சியில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்.

    நடுத்தர மக்களை பாதிக்கும் வகையில் சொத்து வரி முதல் குப்பை வரி வரை உயர்த்திய திமுக அரசுக்கு கண்டன தீர்மானம் நிறைவேற்றம்.

    பெண்களை ஆபாசமாக பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை மேற்கொண்ட இபிஎஸ்க்கு பாராட்டு என தீர்மானம்.

    சமூக விரோத செயல்கள் மூலம் தமிழ்நாட்டிற்கு கடும் தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனம் என தீர்மானம் நிறைவேற்றம்.

    மக்கள் நலன்களை புறந்தள்ளிவிட்டு சுய விளம்பர ஆட்சி, போட்டோ ஷூட் ஆட்சி நடத்தி வரும் திமுக அரசுக்கு கண்டனம் என தீர்மானம்.

    பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம், பயங்கரவாதத்தை ஒடுக்க மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு அதிமுக துணை நிற்கும் என தீர்மானம்.

    சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த மத்திய அரசின் அறிவிப்பை வரவேற்பதாக அதிமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
    • சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசிப்பதென ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    நீட் விலக்குச் சட்ட மசோதாவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்துள்ளது தொடர்பாக சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக் கட்சி தலைவர்களின் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்மொழிந்தார்:

    மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை முறையில் தமிழ்நாட்டிற்கு "நீட்" தேர்வு முறையிலிருந்து விலக்கு அளிப்பதற்காகத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றிய சட்டமுன்வடிவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தர மறுத்துள்ள நிலையில், இந்த விலக்கைப் பெறுவதற்காகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து சட்டப் போராட்டத்தை நடத்தவேண்டும் என்று இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.

    இந்தவகையில், "நீட்" தேர்வு முறையை எதிர்த்து, கடந்த ஜுலை 2023ஆம் ஆண்டு, தமிழ்நாடு அரசால் மாண்பமை உச்சநீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கினைத் தீவிரமாக முன்னெடுத்துச் செல்வது, நமது சட்டமுன்வடிவிற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் தர மறுத்துள்ளதை எதிர்த்து, தேவைப்படின், புதிய வழக்கு ஒன்றினை மாண்பமை உச்சநீதிமன்றத்தில் தொடுப்பது உள்ளிட்ட அனைத்து சட்டபூர்வ நடவடிக்கைகளையும், சட்டவல்லுநர்களுடன் கலந்தாலோசனை செய்து மேற்கொள்வதென ஒருமனதாகத் தீர்மானிக்கப்படுகிறது.

    இக்கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகளின் பிரதிநிதிகள் மேற்படி தீர்மானத்தை வரவேற்றுப் பேசியதுடன், நீட் தேர்வு முறையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் குளறுபடிகள் குறித்தும் பேசினர்.

    பின்னர், நீட் விலக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்துவிதமான நடவடிக்கைகளுக்கும், சட்டப் போராட்டத்திற்கும் உறுதுணையாக இருப்போம் என்று உறுதி அளித்தனர்.

    அத்துடன், தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் இருந்த சட்டமுன்வடிவுகள் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த சட்டரீதியான நடவடிக்கைகளால், உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசுக்குச் சாதகமாக தீர்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டி, இந்த நீட் விலக்கு தொடர்பான வழக்கிலும் தமிழ்நாடு அரசு வெற்றி பெறும் என்று தங்களது நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.

    பின்னர், துணை முதலமைச்சர்முன்மொழியப்பெற்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    இறுதியாக,மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நன்றியுரை ஆற்றினார்.

    • பாலஸ்தீனத்தை ஐ.நா. பொதுச்சபையில் முழு நேர உறுப்பினராக சேர்ப்பது தொடர்பாக வரைவு தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடந்தது.
    • 9 நாடுகள் எதிராக வாக்களித்தன. 25 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன.

    நியுயார்க்:

    பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேலின் போர் 7 மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது.

    இப்போரை நிறுத்த கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது.

    இந்த நிலையில் ஐ.நா. பொதுச்சபையில் பாலஸ்தீனத்தை முழு நேர உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று அரபு நாடுகள் கூட்டமைப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தன. இதையடுத்து ஐ.நா. பொதுச்சபையின் அவசர கூட்டம் நடந்தது. இதில் பாலஸ்தீனத்தை ஐ.நா. பொதுச்சபையில் முழு நேர உறுப்பினராக சேர்ப்பது தொடர்பாக வரைவு தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடந்தது.

    தீர்மானத்திற்கு இந்தியா உள்பட 143 நாடுகள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தன. அமெரிக்கா, இஸ்ரேல் உள்பட 9 நாடுகள் எதிராக வாக்களித்தன. 25 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன.

    இதற்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஐ.நா.வுக்கான இஸ்ரேல் தூதர் கிலாட் எர்டன் பேசும்போது, இந்த தீர்மானம் ஐ.நா சாசனத்தின் தெளிவான மீறல் என்றார்.மேலும் தீர்மான நகலை கிழித்தார். காகிதங்களை கிழிக்கும் கருவியில் தீர்மான நகலை போட்டார்.

    பாலஸ்தீனத்தை முழு நேர உறுப்பினராக்க ஐ.நா. பொதுச்சபையில் ஆதரவு கிடைத்துள்ள நிலையில் பாதுகாப்பு கவுன்சில் முடிவு எடுக்க உள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு முதல் பாலஸ்தீனம் ஐக்கிய நாடுகள் அவையில் உறுப்பினர் அல்லாத பார்வையாளராக மட்டும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 39 தொகுதிகளை கைப்பற்றியது.
    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 39 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ள நிலையில், 21 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. இந்த எம்.பி.க்களில் 10 பேர் புதுமுகங்கள் ஆவர்.

    பாராளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றி ஆலோசிப்பதற்கு, பாராளுமன்ற குழுவில் இடம் பெறுபவர்களை தேர்வு செய்வதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர். எஸ்.பாரதி உள்ளிட்டோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வெற்றியை வழங்கிய தமிழக மக்களுக்கும், வெற்றிக்கு வழி நடத்தி தி.முக. தலைவர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

    ஜூன் 14ஆம் தேதி கோவையில் கலைஞருக்கு நூற்றாண்டு நிறைவு விழா, 40 தொகுதி வெற்றி விழா, முதல்வருக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அரை மணி நேரம் நடைபெற்ற எம்.பி. கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் நீட் விவகாரத்தை எழுப்ப தீர்மானம் எடுக்கப்பட்டது.

    நீட் தேர்வு விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு உணர்த்துமாறு சந்திரபாபு நாயுடு, நிதீஷ் குமாருக்கு கோரிக்கை விடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற வளாகத்தில் தேச தலைவர்களின் சிலைகளை அதே இடத்தில் வைக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • தொகுதி மறுவரையறையை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
    • தொகுதி மறுசீரமைப்பை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைப்பதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் அறிவிக்க வேண்டும்.

    தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான வரைவு தீர்மானத்தை முன்மொழிந்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை அனைத்துக் கட்சி கூட்டம் ஒருமனதாக எதிர்க்கிறது என்றார்.

    மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

    மக்கள் தொகை கட்டுப்பாட்டை விழிப்பாக செயல்படுத்தியதற்காக நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைப்பதை ஏற்க முடியாது.

    2026 மக்கள் தொகை அடிப்படையில் மேற்கொள்ள உள்ள தொகுதி மறுவரையறையை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

    1971 மக்கள் தொகை அடிப்படையில் வரையறுக்கப்பட்ட தொகுதிகள் மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

    தொகுதி மறுசீரமைப்பை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைப்பதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் அறிவிக்க வேண்டும்.

    தென்மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட கூட்டு நடவடிக்கை குழு அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்

    • மாதாந்திர சாதாரண கூட்டம் நடந்தது
    • பள்ளி மேல் கூரையை இடித்து புதியதாக கட்ட வலியுறுத்தல்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி பகுதியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று மாதாந்திர சாதாரண கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு நாட்டறம்பள்ளி ஒன்றிய குழு தலைவர் வெண்மதி முனுசாமி தலைமை தாங்கினார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரகுகுமார், சித்ராகலா, துணைத் தலைவர் தேவராஜ் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

    சாதாரண கூட்டத்தில் புல்லூர் ஊராட்சியில் காந்தி நகர் மேல் நீர் தேக்க தொட்டி முதல் திருப்பதி வட்டம் வரை புதிய பைப் லைன் அமைத்தல், மேலும் நாட்டறம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட சங்கராபுரம் வடக்குப்பட்டு, தும்பேரி, புல்லூர் தகரகுப்பம் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பழுதடைந்துள்ள பள்ளி கட்டிடம் மற்றும் மேற்கூரை இடித்து புதிதாக கட்டப்படுகிறது உள்ளிட்ட 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் ஒன்றிக்குழு உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் மேலாளர் கருணாநிதி (பொறுப்பு) நன்றி கூறினார்.

    • துறையூர் நகராட்சி கூட்டத்தில் குடிநீர், சாலைப்பணி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வகையில் 69 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
    • 24 வார்டுகளிலும் குடிநீர் அல்லாத பிற பயன்பாட்டுக்கு அமைக்கப்பட்ட குழாய்கள் பழுதடைந்து உள்ளதால் அதனை மாற்றி அமைப்பது தொடர்பாக வார்டு வாரியாக தலா 3 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் கோர முடிவு

    திருச்சி:

    துறையூர் நகராட்சியின் சாதாரண நகர்மன்றக் கூட்டம் தலைவர் செல்வராணி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு நகர செயலாளரும், நகர்மன்றத் துணைத் தலைவருமான மெடிக்கல் முரளி, நகராட்சி ஆணையர் சுரேஷ்குமார், நகராட்சி மேலாளர் முருகராஜ், நகராட்சி பொறியாளர் தாண்டவமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் துறையூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளிலும் குடிநீர் அல்லாத பிற பயன்பாட்டுக்கு அமைக்கப்பட்ட குழாய்கள் பழுதடைந்து உள்ளதால் அதனை மாற்றி அமைப்பது தொடர்பாக வார்டு வாரியாக தலா 3 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் கோருவது,

    நகர்மன்ற தலைவருக்கு புதிய வாகனம் வாங்குவது, நகராட்சிக்கு சொந்தமான பள்ளி கட்டடங்களை சீரமைத்து ஸ்மார்ட் கிளாஸ் அமைப்பது உள்ளிட்ட 69 தீர்மானங்கள் மன்றத்தின் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டது.

    பின்னர் கூட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பான்மையான நகர்மன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இக்கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் சுதாகர், கார்த்திகேயன், சுமதி மதியழகன், பாலமுருகவேல், சரோஜா இளங்கோவன் உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    ×