என் மலர்
நீங்கள் தேடியது "மீனவர்கள் வேலைநிறுத்தம்"
- ராமேசுவரம் பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் 5 ஆயிரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தால் வருமானத்தை இழந்துள்ளனர்.
- மீன்பிடி சார்ந்த தொழிலில் ஈடுபடும் 15 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மற்றும் பாம்பன் பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். 820 விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படை அத்துமீறி வந்ததாக கைது செய்து வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி 2 படகுகளில் ராமேசுவரத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்து மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மீனவர்கள் சென்ற விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்து வைத்துள்ளது.
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு 6 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றபோது அவர்களையும் இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது. தொடர்ந்து ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்து வருவதால் அச்சத்துடன் மீன்பிடிக்கச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ள 29 விசைப்படகுகள் மீட்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக ராமேசுவரம் மீனவர் சங்கத்தினர் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி இன்று (7-ந்தேதி) முதல் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது என்றும், நாளை (8-ந் தேதி) தங்கச்சிமடத்தில் ஆர்ப்பாட்டம் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இன்று ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரிய விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. சின்ன விசைப்படகுகள் மட்டும் அனுமதி பெற்று மீன்பிடிக்க சென்று வருகின்றன.
ராமேசுவரம் பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் 5 ஆயிரம் மீனவர்கள் இந்த வேலை நிறுத்தத்தால் வருமானத்தை இழந்துள்ளனர். மேலும் மீன்பிடி சார்ந்த தொழிலில் ஈடுபடும் 15 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று வேலை நிறுத்தம் காரணமாக ரூ.6 கோடி வரை மீன் வர்த்தகம் பாதிக்கப்படும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.
இந்த போராட்டம் தொடர்பாக பெரிய விசைப்படகு மீனவர் சங்கத்தினர் கூறும்போது, இலங்கை கடற்படை ஏற்படுத்தும் தடை காரணமாக ஆண்டுக்கு 20 நாட்கள் முதல் 30 நாட்கள் வரையில் தான் மீன்பிடிக்க செல்கின்றோம். இதனால் எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
எனவே எங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையிலும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை பெற்றுத்தரவும் மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- நெல்லை மாவட்டத்தில் மட்டும் சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
- கடந்த 25 வருடங்களாக தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்து வருகிறோம்.
திசையன்விளை:
தமிழகத்தில் பாரம்பரியமாக நாட்டு படகு மூலம் மீன் பிடிக்கும் ஒரே மாவட்டம் நெல்லை மாவட்டம் தான். இங்கு ராதாபுரம் தாலுகாவில் கூட்டப்புளி, பெருமணல், பஞ்சல், இடிந்தகரை, தோமையார்புரம், கூத்தங்குழி, உவரி, கூட்டப்பனை, கூடுதாழை உள்ளிட்ட 10 மீனவ கிராமங்கள் உள்ளன.
இதில் கூட்டப்புளி மற்றும் கூடுதாழை ஆகிய இரு மீனவ கிராமங்களில் தூண்டில் வளைவு கிடையாது. இதனால் கடல் அலை இந்த கிராமங்களை பாதித்து வருகிறது. மீனவர்களும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர் என்று புகார்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக கூடுதாழை மீனவ கிராமத்தில் கடல் அரிப்பின் வேகம் அதிகரித்து கடற்கரை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மீனவர்களின் மீன்பிடி வலைகள், மீன்பிடி உபகரணங்கள், மீன்பிடி என்ஜீன்கள் ஆகியவை கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டன.
இந்த கிராமங்களில் உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் கூடுதாழையில் கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி அப்பகுதி மீனவர்கள் கடந்த 11-ந்தேதியில் இருந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று 10-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் உண்ணாவிரதத்திலும் இருக்க போவதாக அறிவித்துள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த நாட்டு படகு மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் மட்டும் சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தூத்துக்குடி மாவட்டத்திலும் கூடுதாழை மீனவர்களுக்கு ஆதரவாக புன்னக்காயல், ஆலந்தழை, அமலிநகர், பெரியதாழை, குலசேகரபட்டினம், மணப்பாடு பகுதிகளில் வசிக்கும் நாட்டுப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் கூறுகையில், கடந்த 25 வருடங்களாக தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்து வருகிறோம். தற்பொழுது 100 அடி வரை கடல் ஊருக்குள் புகுந்து உள்ளதால் மணல்மேடுகள் மட்டுமே உள்ளது.
இது இன்னும் ஓரிரு நாட்களில் சரிந்து விடும் என்றும் இதனால் பல வீடுகள் கடலில் மூழ்கும் அபாயத்தில் உள்ளது என்றனர்.
- ராமேசுவரம் மீனவர்கள் சவுதி அரேபியா, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்து வருகிறார்கள்.
- ராமேசுவரத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் இன்று நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
ராமேசுவரம்:
ராமேசுவரத்தில் இருந்து 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் வாரத்தில் 3 நாட்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்கிறார்கள். இதேபோல் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்கு சென்று வருகின்றனர்.
இதில் ராமேசுவரம் மீனவர்களுக்கு பல டன் கணக்கில், பல்வேறு வகையான மீன்கள் கிடைக்கின்றன. உள்ளூர் தேவைகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் இங்கிருந்து மீன்கள் பதப்படுத்தி அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் ராமேசுவரம் மீனவர்கள் சவுதி அரேபியா, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்தும் வருகிறார்கள்.
அவ்வாறு மீனவர்களிடம் இருந்து மீன்களை வாங்கி ஏற்றுமதி வணிகம் செய்துவரும் நிறுவனங்கள் போதிய விலை தருவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. அந்த நிறுவனங்கள் தங்களுக்குள் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்திக்கொண்டு விலையை நிர்ணயம் செய்து கொள்கிறது.
இதனால் மீனவர்கள் பெரும் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர். பல்வேறு சிரமங்களுக்கு இடையே மீனவர்கள் பிடித்து வரும் விலை உயர்ந்த ஏற்றுமதி தரம் வாய்ந்த மீன்களுக்கு குறைந்த விலை கிடைப்பதால் வாழ்வாதாரம் நலிவடைந்து விட்டதாகவும், உரிய விலை கிடைக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்தபோதிலும் ஏற்றுமதி நிறுவனங்கள் கண்டுகொள்ளவில்லை என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்தனர்.
இதனை கண்டித்து ராமேசுவரத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் இன்று நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே மீன்பிடி தடைக்காலத்திற்கு பிறகு கடலில் ஏற்பட்ட மாறுபட்ட நீரோட்டத்தால் மீன்கள் வரத்தும் குறைந்துள்ள நிலையில் மீனவர்கள் அறிவித்துள்ள இந்த காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கோவளம் கடற்கரை பகுதியில் மீனவர்கள் பாதுகாப்பாக மீன்பிடி தொழில் செய்ய முடியாத நிலை நீடிக்கிறது.
- மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டத்தினால் கடற்கரையில் உள்ள மீன் சந்தைகளும் மீன் வரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் கடற்கரை கிராமம் அரபிக்கடல் ஓரம் அமைந்து உள்ளது. இங்கு மீனவர்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். இவர்களது முக்கிய தொழில் மீன்பிடித்தொழில் ஆகும்.
இங்கு 1000-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் மற்றும் வள்ளங்களில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த கடற்கரை பகுதியில் அடிக்கடி கடல் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்படுகிறது.
இந்த கடல்சீற்றத்தின் போது ஏற்படும் ராட்சத அலையில் நாட்டுப் படகுகள் மற்றும் வள்ளங்கள் சிக்கி கவிழ்ந்து விடுகின்றன. இதனால் மீனவர்களுக்கு காயம் ஏற்படுவதோடு மட்டுமின்றி உயிர் பலியாகும் ஆபத்தான நிலையும் இருந்து வருகிறது.
இதனால் கோவளம் கடற்கரை பகுதியில் மீனவர்கள் பாதுகாப்பாக மீன்பிடி தொழில் செய்ய முடியாத நிலை நீடிக்கிறது. இந்த சீற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஏற்கனவே போடப்பட்டிருந்த தூண்டில் வளைவு பாலம் ராட்சத அலையினால் உடைந்து சேதம்அடைந்துவிட்டன.
இதனால் சேதம் அடைந்த இந்த தூண்டில்வளைவு பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று இந்த பகுதி மீனவர்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். மீனவர்களின் இந்த கோரிக்கையை ஏற்று தற்போது இந்த தூண்டில் வளைவுப் பாலம் நீட்டிக்கப்பட்டு சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
தூண்டில்வளைவு பாலத்தில் பெரியபெரிய பாறாங்கற்களை போடாமல் சிறிய கற்களை போட்டு தூண்டில் வளைவு பாலத்தை கடலுக்குள் நேராக அமைக்காமல் வளைவாக அமைத்து வருவதால் மீனவர்களுக்கு மீண்டும் பாதுகாப்பாக மீன்பிடி தொழில் செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது.
இதனால் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களின் நாட்டுப் படகுகள் மற்றும் வள்ளங்கள் ராட்சதஅலையில் சிக்கி அடிக்கடிக வீழ்ந்து உயிர்ச்சேதம் ஏற்படும் அபாயமும் இருந்து வருகிறது. இதனால் கோவளம் பகுதி மீனவர்கள் நாடோடி போன்று ஊரு விட்டு ஊரு சென்று கன்னியாகுமரி, சின்னமுட்டம்போன்ற பகுதிகளுக்கு தங்களது நாட்டுப் படகுகள் மற்றும் வள்ளங்களை கொண்டு சென்று மீன்பிடி தொழில் செய்து வரும் அவல நிலை இருந்து வருகிறது. எனவே கோவளம் கடற்கரையில் அமைக்கப்படும் தூண்டி வளைவு பாலத்தை தரமாகவும் நீளமாகவும் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோவளம் பகுதியைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று காலை கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இதனால் இங்கு உள்ள நூற்றுக்கணக்கான நாட்டுப் படகுகள் மற்றும் வள்ளங்கள் கடற்கரையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டத்தினால் கடற்கரையில் உள்ள மீன் சந்தைகளும் மீன் வரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.
- எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்கிறது.
- மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமேஸ்வரம்:
கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை அவ்வப்போது கைது செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது.
அந்த வகையில், நேற்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 8 17 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. மீனவர்களின் விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு இலங்கை கடற்படையினர் அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் உள்ள விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வரும் 17ம் தேதி வரை இந்த வேலை நிறுத்தம் தொடரும் என தெரிவித்தனர்.
- 5 ஆயிரம் மீனவர்கள் உள்ளிட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
- மீனவ கிராமங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து கடந்த புதன்கிழமை மீன் பிடிக்க சென்றபோது 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டது. எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்ட அவர்களை சிங்கள கடற்படையிர் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதேபோல் புதுக்கோட்டை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் இருந்து இரண்டு விசைப்படகுகளில் சென்ற 9 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 17 பேரையும் வருகிற 27-ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து தமிழக மீனவர்கள் இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர்.
தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது, கைது செய்து சிறையில் அடைப்பது, படகுகளை விடுவிக்க மறுப்பது உள்ளிட்ட நடவடிக்கையால் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். வாழ்வாதாரம் இழந்த ஏராளமானோர் மீன்பிடி தொழிலை விட்டு மாற்று வேலைக்கு செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தலைமன்னார், காங்கேசம் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.இதில், 50-க்கும் மேற்பட்ட படகுகள் இயக்கப்படாததாலும், இயற்கை சீற்றங்களினாலும் கடுமையாக சேதமடைந்துள்ளது.
இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்தும், இலங்கையில் உள்ள மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை இன்று துவங்கி உள்ளனர்.
இதனால் ராமேசுவரம் துறைமுகத்தில் 650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. 5 ஆயிரம் மீனவர்கள் உள்ளிட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். அத்துடன் பல கோடி வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடலில் சூறைக்காற்று வீசியதால் கடலுக்கு செல்ல விசைப்படகு மீனவர்களுக்கு தடை, ஏற்றுமதி நிறுவனங்கள் மீன்களுக்கு உரிய விலை தராததை கண்டித்து வேலை நிறுத்தம் உள்ளிட்டவைகளால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
12 நாட்களுக்கு பிறகு ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு சென்ற நிலையில் 8 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டது மீனவ கிராமங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ராமேசுவரம் துறைமுகத்தில் 650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது.
- 5 ஆயிரம் மீனவர்கள் உள்ளிட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த புதன்கிழமை மீன்பிடிக்க சென்றபோது ஒரு படகு, 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதே போன்று புதுக்கோட்டை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 2 விசைப்படகுகள், 9 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களின் 3 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிந்து ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 27-ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில் யாழ்பாணம் சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர்.
தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது, கைது செய்து சிறையில் அடைக்கப்படுவது, படகுகளை விடுவிக்க மறுப்பது உள்ளிட்ட நடவடிக்கையால் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தலைமன்னார், காங்கேசம் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. இதில் 50-க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்துள்ளது.
இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்களை கைது செய்யப்படுவதை கண்டித்தும், இலங்கையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை இன்று தொடங்கி உள்ளனர். இதனால் ராமேசுவரம் துறைமுகத்தில் 650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது. 5 ஆயிரம் மீனவர்கள் உள்ளிட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
வேலைநிறுத்தம் காரணமாக இன்று காலை ராமேசுவரம் துறைமுகம் வெறிச்சோடியது. இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறையில் கடலுக்கு செல்லும்போது இலங்கை கடற்படையினரால் தாக்கி விரட்டியடிப்பது நடந்து வருகிறது. இதனால் மீன்பிடி தொழில் பாதிக்கப்படுகிறது. தற்போது இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ள மீனவர்களை உடனே விடுதலை செய்ய மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிக்கடி நடக்கும் இதுபோன்று நடக்கும் வேலைநிறுத்தத்தால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றனர்.
- கடந்த சனிக்கிழமை மீன்பிடிக்க சென்ற போது 5 விசைப்படகுகளுடன் 27 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றனர்.
- படகுகளும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மீனவர்கள் மீது எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளது. இதில் 3,500 மீனவர்கள் மற்றும் சார்பு தொழிலாளர்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர். முழுமையாக மீன்பிடி தொழிலை நம்பியே இவர்களின் வாழ்வாதாரம் உள்ளது.
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை மீன்பிடிக்க சென்ற போது 5 விசைப்படகுகளுடன் 27 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றனர். அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மீனவர்கள் மீது எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கி இன்றுடன் 5-வது நாளாக நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக ரூ.10 கோடி மதிப்பிலான இறால் மீன்கள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்து பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற 1-ந்தேதி ராமேசுவரத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
- வேலைநிறுத்தம் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலையிழந்தனர்.
- 5 நாள் போராட்டத்திற்கு பின் சிறிய ரக படகுகள் மீன் பிடிக்க செல்ல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையிடம் அனுமதி பெற்று இன்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளது. இதன் மூலம் 3,500 மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். ராமேசுவரத்தில் பெரும்பாலானோர் மீன்பிடி தொழிலை நம்பியே உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 14-ந்தேதி ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற போது கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி வந்ததாக கூறி 5 விசைப் படகுகளுடன் 27 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர். படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கடந்த 16-ந்தேதி முதல் ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டத்தில் பெரிய மற்றும் சிறிய ரக படகுகள் பங்கேற்றன.
இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். வேலைநிறுத்தம் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலையிழந்தனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. பல கோடி ரூபாய் வர்த்தகமும் பாதித்தது.
இந்த நிலையில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சிறிய ரக படகுகள் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்று இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லுவதாக மீனவ சங்க தலைவர் என்.ஜே.போஸ் தெரிவித்தார். மேலும் பெரிய படகுகள் போராட்டம் தொடருவதாக தெரிவித்தார்.
இதனைதொடர்ந்து, 5 நாள் போராட்டத்திற்கு பின் சிறிய ரக படகுகள் மீன் பிடிக்க செல்ல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையிடம் அனுமதி பெற்று இன்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதனால் கடந்த 5 நாட்களாக வெறிச்சோடி கிடந்த ராமேசுரவம் துறைமுகம் இன்று மீண்டும் பரபரப்புடன் காணப்பட்டது.
- தமிழக மீனவர்கள் 64 பேரையும், பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எப்போதும் பரபரப்பாக காணப்படும் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகம் இன்று வேலை நிறுத்தம் காரணமாக வெறிச்சோடி காணப்பட்டது.
ராமேசுவரம், அக்.30-
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், மண்டபம், பாம்பன் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் ஒவ்வொரு முறையும் கடலுக்கு செல் லும்போது அவர்களை இலங்கை கடற்படை தாக்கி விரட்டி அடிப்பதும், எல்லை தாண்டி வந்ததாக கூறி சிறை பிடிப்பதும் தொடர்கதையாகி வருகிறது. அண்மைக்காலமாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறை பிடிப்பது அதிகரித்துள்ளது.
கடந்த 14-ந்தேதி இந்திய கடல் எல்லையையொட்டி உள்ள கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 27 பேரை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது. இதனை கண்டித்தும் மீன வர்களை விடுதலை செய்யக் கோரியும் கடந்த 2 வாரங் களாக ராமேசுவரம் மீனவர் கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் மீனவர்க ளின் வாழ்வாதாரத்தை கருதி வேலை நிறுத்தம் கடந்த சனிக்கிழமை வாபஸ் பெறப்பட்டது. அன்றைய தினமே காலையில் ராமேசு வரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டு சென்ற னர். ஆனால் அவர்களுக்கு கடலுக்கு சென்ற முதல் நாளே அதிர்ச்சி காத்திருந் தது.
ராமேசுவரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி 37 மீனவர்களையும், 5 விசைப்படகுகளையும் சிறை பிடித்துச் சென்றனர். இது ராமேசுவரம் பகுதி மீன வர்களிடையே கடும் அதிர்ச் சியை ஏற்படுத்தியது.
அக்டோபர் மாதத்தில் மட்டும் தமிழக மீனவர்கள் 64 பேர் இலங்கை கடற்படை யால் சிறை பிடிக்கப்பட்டு உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக ராமேசுவரம் துறைமுக கடற்கரையில் நேற்று மீனவர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
தமிழக மீனவர்கள் 64 பேரையும், பறிமுதல் செய் யப்பட்ட விசைப்ப டகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவ டிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி இன்று (திங் கட்கிழமை) முதல் ராமேசு வரத்தில் மீனவர்கள் கால வரையற்ற வேலைநிறுத் தத்தில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
மேலும் வருகிற 3-ந்தேதி மண்டபம் ரெயில் நிலை யத்தில் சென்னை எக்ஸ்பி ரஸ் ரெயிலை மறித்து போராட்டம் நடத்துவது, 6-ந்தேதி தங்கச்சிமடத்தில் குடும்பத்துடன் மீனவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி ராமேசுவரத் தில் இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கியது. இதனால் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ராமேசு வரம் துறைமுகத்தில் நங்கூர மிட்டு நிறுத்தி வைக்கப்பட் டிருந்தன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடு பட்டுள்ளனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் ராமேசுவரம் மீன்பிடி துறை முகம் இன்று வேலை நிறுத் தம் காரணமாக வெறிச் சோடி காணப்பட்டது.
இது குறித்து ராமேசுவரம் மீனவர்கள் கூறுகையில், அண்மைக்காலமாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறை பிடித்து செல்வது அதிகரித் துள்ளது. இதற்கு மத்திய அரசு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி உட னடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர் வேலை நிறுத்தம் காரணமாக எங் கள் வாழ்வாதாரம் பாதிக்கப் படுகிறது என வேதனையுடன் தெரிவித்தனர்.
- ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.
- நாள் ஒன்றுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டு, மீன்பிடி தொழில் முற்றிலுமாக முடங்கியுள்ளது.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் 14-ந்தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற போது 5 விசைப்படகுகளுடன் 27 மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக கூறி சிறைபிடித்து சென்றனர். இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களுக்கு இரண்டு முறை காவல் நீட்டிக்கப்பட்டது.
இதேபோன்று கடந்த வாரம் மீன்பிடிக்க சென்ற போது 5 விசைப்படகுகளுடன் 37 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். 64 மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதே போன்று 10 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை அரசின் இந்த தொடர் நடவடிக்கையை கண்டித்தும், கைது செய்யப்பட்டுள்ள 64 மீனவர்கள் 10 படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரியும் ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த போராட்டம் இன்று மூன்றாவது நாளாக நீடிக்கிறது.
இதனால் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளிட்ட 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து கடுமையான பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
அத்துடன் நாள் ஒன்றுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டு, மீன்பிடி தொழில் முற்றிலுமாக முடங்கியுள்ளது. தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில், நேற்று தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. மற்றும் மீனவ சங்க பிரநிதிகள் வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளிதரனை சந்தித்து மீனவர்களை விடுவிப்பது தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தனர்.
இதற்கிடையே மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி வருகிற 3-ந்தேதி அனைத்து விசைப்படகு மீனவ சங்கம் சார்பில் மண்டபம் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டமும், 6-ந்தேதி முதல் தங்கச்சிமடத்தில் மீனவர்கள் குடும்பத்துடன் தொடர் உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ள உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
- ராமேசுவரத்தில் மீன்பிடிக்க செல்ல தேவையான பணிகளை மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
- மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என மீனவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் மீன்பிடிக்க சென்றபோது 2 கட்டமாக 10 விசைப்படகுகள், 64 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இன்று (வெள்ளிக்கிழமை) மண்டபம் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்திருந்தனர்.
இதனைதொடர்ந்து, நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் மீன்வளத் துறை அதிகாரிகள், மீனவ சங்க தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது வருகிற 8 மற்றும் 9-ந்தேதிகளில் ராமேசுவரம் மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். அப்போது அவர்களை விடுவிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் மீனவர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என அதிகரிகள் கேட்டுக்கொண்டனர்.
இதனை ஏற்று வேலை நிறுத்த போராட்டம் மற்றும் ரெயில் மறியல் போராட்டங்களை மீனவர்கள் வாபஸ் பெற்றனர். இதைத் தொடர்ந்து ராமேசுவரத்தில் மீன்பிடிக்க செல்ல தேவையான பணிகளை மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். நாளை (சனிக்கிழமை) மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என மீனவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.