search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ.90 ஆயிரம்"

    • ஈரோடு சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன், ஏட்டுகள் சதீஷ், பிரபாகரன் ஆகியோர் கொண்ட தனிப்படைபோலீசார் ராஜஸ்தானுக்கு விரைந்தனர்.
    • பரத்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து இது குறித்து ஆலோசனை நடத்தினர்.

    ஈரோடு:

    ஈரோட்டை சேர்ந்த ஒருவர் கோவையில் உள்ள தனது வீடு வாடகைக்கு விடப்படும் என்று இணைய தளத்தில் அறிவிப்பு வெளியிட்டார்.

    மேலும் வீட்டிற்கு முன்பணமாக ரூ. 40 ஆயிரமும், மாத வாடகை ரூ.10 ஆயிரம் என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தார். தங்களது தொடர்பு எண்ணையும் அதில் பதிவிட்டு இருந்தார்.

    இந்த அறிவிப்பை பார்த்த ஒரு பெண் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

    அப்போது எனது கணவர் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசில் உயர் அதிகாரியாக பணியாற்றி வருவதாகவும், அவர்கோவைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், எனவே எங்களுக்கு வீடு வாடகைக்கு வேண்டும் என்றும் கேட்டு உள்ளார்.

    மறு நாள் மீண்டும் அந்த பெண் செல்போனில் தொடர்பு கொண்டு வீடு கேட்டு இருக்கிறார். அப்போது எனது கணவர் உங்களிடம் பேச வேண்டும் என்கிறார் என்று கூறி உள்ளார்.

    அப்போது பேசிய அந்த பெண்ணின் கணவர் தனது பெயர் அக்கீத் விஜய் என்று அறிமுகப்படுத்தி கொண்டு தனது அடையாள அட்டையை அனுப்பி வைத்தார்.

    மேலும் தான் கோவைக்கு மாறுதல் செய்யப்பட்டதாக தெரிவித்தார். அேதாடு வீடு வாடகை மற்றும் முன் பணம் ெகாடுக்க எங்களுக்கு சம்மதம் என்று தெரிவித்து உள்ளார்.

    அதை தொடர்ந்து பேசிய அவர் எங்களது வங்கி கணக்கு மத்திய அரசுக்கு சொந்தமானது என்பதால் நேரடியாக நாங்கள் முதலில் உங்களுக்கு பணம் செலுத்த முடியாது.

    எனவே நீங்கள் முதலில் நான் அனுப்பும் க்யூஆர் கோடுக்கு ஸ்கேன் செய்து முதலில் ரூ.1 செலுத்துங்கள் என்று கூறியுள்ளார். அதன்படி வீட்டு உரிமையாளரும் ரூ. 1 அனுப்பி உள்ளார். உடனே அவர்களுக்கு மீண்டும் ரூ. 2 திரும்பி வந்து விட்டது.

    இதையடுத்து வீட்டு உரிமையாளர் மீண்டும் க்யூஆர் கோடு ஸ்கேன் செய்து ரூ. 45 ஆயிரம் அனுப்பினார். ஆனால் மீண்டும் அவருக்கு பணம் திரும்பி வரவில்லை.

    இதையடுத்து பணம் அனுப்ப சொன்னவரிடம் கேட்ட போது நீங்கள் தவறுதலாக ஏதாவது செய்து இருப்பீர்கள எனவே நீங்கள் முன்பு அனுப்பிய 1 ரூபாய் போக மீதியுள்ள 44 ஆயிரத்து 999 செலுத்துங்கள் மொத்தமாக உங்களுக்கு பணம் திரும்பி வந்து விடும் என்று கூறியுள்ளார்.

    இதை உண்மை என நம்பி மீண்டும் ரு. 44 ஆயிரத்து 999-ஐ செலுத்தினர்.

    ஆனால் ரூ.90 ஆயிரமும் மீண்டும் வரவில்லை. மேலும் அவர் போனையும் எடுக்க வில்லை.

    இதையடுத்து தாங்கள் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த வீட்டு உரிமையாளர் இது குறித்து ஈரோடு மாவட்ட ேபாலீஸ் சூப்பிரண்டு சசிமோகனை சந்தித்து புகார் செய்தார்.

    மேலும் இது குறித்து விசாரணை நடத்த அவர் சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    இதையடுத்து போலீசார் விசாரணையை ெதாடங்கினார். அப்போது அக்கீம் விஜய் என்பவர் அனுப்பிய போலீஸ் அதிகாரி என்ற அடையாள அட்டை போலியானது என்று தெரியவந்தது.

    இணையதளத்தில் வேறு ஒரு அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து அதில் படத்தை மாற்றி மோசடி செய்து இருப்பது தெரியவந்தது.

    மேலும் எந்த வங்கி கணக்குக்கு இந்த பணம் அனுப்பபட்டது என்று விசாரணை நடத்திய போது அது கேரள மாநிலம் கொச்சினில் உள்ள ஒரு வங்கி கணக்குக்கு அனுப்ப பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அங்கு விசாரணை நடத்திய போது இந்த வங்கி கணக்கு அரியானா மாநிலத்தில் இருந்து ஆன்லைனின் தொடங்கப்பட்டது தெரியவந்தது.

    பின்னர் மோசடி நபர் தொடர்பு கொண்ட ஆடியோ மற்றும் செல்போன் எண்ணை கண்காணித்த போது அது ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டம் ரஷியா என்ற கிராமத்தில் சிக்னல் காட்டியது.

    இதையடுத்து ஈரோடு சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன், ஏட்டுகள் சதீஷ், பிரபாகரன் ஆகியோர் கொண்ட தனிப்படைபோலீசார் ராஜஸ்தானுக்கு விரைந்தனர்.

    அவர்கள் பரத்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து இது குறித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் உள்ளூர் போலீசார் உதவியுடன் செல்போன் சிக்னல் உதவியுடன் மோசடி நபரின் வீட்டைகண்டு பிடித்தனர்.

    ஆனால் தமிழக போலீசார் வந்ததை தெரிந்து கொண்ட மோசடி நபர் தலைமறைவாகி விட்டார். பின்னர்போலீசார்அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.

    மோசடி நபரின் வீட்டில் அவரது பெற்றோர் மற்றும் மனைவி மட்டுமே இருந்தனர். அவர்களிடம் மோசடி நபர் குறித்து கேட்ட போது அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியாது. அவரது செல்போன் எண்ணும் தெரியாது என்று கூறினர்.

    இதையடுத்து ஈரோடு சைபர்கிரைம் போலீசார் உள்ளூர் போலீஸ் நிலையத்துக்கு வந்து விட்டனர்.

    பின்னர் அந்தபகுதியை சேர்ந்த சிலர் ராஜஸ்தான் போலீசார் முன்னிலையில் தமிழக போலீசாரிடம் நீங்கள் தேடி வந்த நபர் மீது எந்த குற்றமும் இல்லை.

    வேண்டும் என்றால் அந்த பணத்தை திருப்பி கொடுத்து விடுகிறோம் என்று கூறி எப்படி பணத்தை மோசடி செய்தாரோ அதே போல் வீட்டின் உரிமையாளருக்கு அவர்கள் பணத்தை திருப்பி ெசலுத்தினர்.

    ஆனாலும் ஈரோடு சைபர் கிரைம் போலீசார் மோசடி நபர் குறித்த விபரங்களை ராஜஸ்தான் சைபர் கிரைம் போலீசாரிடம் கொடுத்து அவர் பற்றிய விபரங்கள் இருந்தால் தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

    மேலும் அவரை கண்டுபிடித்து கைது செய்யவும் ஈரோடு சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    ராஜஸ்தானில் இருந்த தனிப்படை போலீசாருக்கு ஈரோட்டில் இருந்தபடியே சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ெஜயசுதா, தொழில் நுட்ப பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் செல்வி ஆகியோர் மோசடி நபரின் செல்போன் சிக்னல்களை கண்காணித்து தகவல்களை தெரிவித்தனர்.

    மோசடி நபர் பற்றி எந்த தகவலும் தெரியாமலேேய செல்போன் சிக்னலை வைத்தே ஈரோடு சைபர் கிரைம் போலீசார் ராஜஸ்தான் சென்று மோசடி நபரின் வீட்டை கண்டுபிடித்து பணத்தை மீட்டது குறிப்பிடத்தக்கது.

    தனிப்படை போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

    • சி.சி.டி.வி. காமிராவில் பதிவான 2 கொள்ளையர் உருவம்
    • 3 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை

    நாகர்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர நாராயணன் (வயது 38).

    இவர், நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டரில் மேலாளராக வேலை பார்த்து வரு கிறார். இதையடுத்து சங்கர நாராயணன் குடும்பத்தோடு நாகர்கோவில் சைமன் நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன் தினம் சங்கரநாராயணன் மனைவி பிருந்தா மகள் இருவரும் வில்லுக்குறியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தனர்.

    சங்கர நாராயணன் வேலை பார்த்த நிறுவ னத்தில் தங்கியிருந்தார். நேற்று அதிகாலை 4 மணிக்கு வீட்டுக்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 62¾ பவுன் நகை, ரூ.90 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. இது குறித்து சங்கரநா ராயணன் நேசமணிநகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்த தும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நாகர்கோவில் டி.எஸ்.பி. நவீன்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்த னர். அதில் 2 பேரின் கைரேகைகள் சிக்கி உள்ளது.

    அந்த கைரேகை போலீ சார் கைப்பற்றி விசா ரணை மேற்கொண்டு வரு கிறார்கள். மோப்பநாய் மோப்பம் பிடித்து விட்டு யாரையும் கவ்வி பிடிக்க வில்லை. வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது கொள்ளை யர்கள் 2 பேரின் உருவம் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை போலீ சார் கைப்பற்றி தேடுதல் வேட்டை யில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது. தனிப்படை போலீசார் சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது கொள்ளை யர்கள் நள்ளிரவு 1.36 மணிக்கு வந்துவிட்டு 2.40 மணி வரை கைவரிசையில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. சுமார் ஒரு மணி நேரம் 4 நிமிடம் கொள்ளையர்கள் அங்கேயே இருந்து கைவரி சையில் ஈடுபட்டுள்ளனர்.சங்கர நாராயணன் மற்றும் அவரது மனைவி வீட்டில் இல்லாததை நோட்டமிட்டே இந்த கொள்ளையை அரங்கேற்றி உள்ளனர்.

    போலீசார் சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான உருவத்தை வைத்து தேடுதல் வேட்டையில் ஈடு பட்டு வருகிறார்கள். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், இன்னும் ஓரிரு நாட்களில் கொள்ளையர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

    • காஞ்சிக்கோயில் குப்பை கிடங்கு அருகே தரைப்பாலம் கட்டும் வேலை நடக்கும் இடத்தில் இரும்பு சட்டர்களை யாரோ திருடி சென்று விட்டனர்.
    • இதனையடுத்து ஆறுமுகம் இது தொடர்பாக காஞ்சிகோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி வழக்கு பதிவு செய்து திருடிய நபர்களை தேடி வருகின்றனர்.

    பெருந்துறை:

    பவானி ஊராட்சி கோட்டை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 43). இவர் தனியாருக்கு சொந்தமான கட்டுமான கம்பெனியில் சப்-கான்ட்ராக்டராக வேலை எடுத்து செய்து வருகிறார்.

    கடந்த 3 மாதங்களாக காஞ்சிக்கோயில் முதல் சித்தோடு வரை தார் ரோட்டை அகலப்படுத்தும் பணி செய்து வந்துள்ளார். இவர் பணி செய்து வந்த இடத்தில் அடிக்கடி இரும்பு பொருட்களை யாரோ திருடி சென்று வந்தனர்.

    இந்நிலையில் சம்ப வத்தன்று ஆறுமுகம் காஞ்சிக்கோயில் குப்பை கிடங்கு அருகே தரைப்பாலம் கட்டும் வேலை செய்து வந்தனர். பின்னர் வேலை முடித்து வீட்டிற்கு சென்று விட்டார்.

    மீண்டும் இரவு 9 மணி அளவில் வந்து பார்த்தபோது 5 இரும்பு ஷட்டர்களை யாரோ திருடி சென்று விட்டது தெரிய வந்தது. கடந்த 3 மாத காலத்திற்குள் 90 இரும்பு சட்டர்களை யாரோ திருடி சென்று விட்டனர்.

    இதன் மொத்த மதிப்பு ரூ.90 ஆயிரம் இருக்கும்.

    இதனையடுத்து ஆறுமுகம் இது தொடர்பாக காஞ்சிகோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி வழக்கு பதிவு செய்து திருடிய நபர்களை தேடி வருகின்றனர்.

    ×