search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்களுக்கு பாராட்டு விழா"

    • சென்னையில் வரும் 28ம் மற்றும் ஜூலை 3ம் தேதி நடைபெற உள்ளது.
    • பாராட்டு விழாவில் செல்போன் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.

    சென்னையில் வரும் 28ம் மற்றும் ஜூலை 3ம் தேதி நடைபெற உள்ளது.

    பாராட்டு விழாவில் நடிகர் விஜய் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டும் நிலையில் விழாவுக்கான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, பாராட்டு விழாவில் செல்போன் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பேப்பர்,பேனா கொண்டு வரவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    விழாவில் மாணவர்களுடன் பெற்றோர், உடன் பிறந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • அரசு உயர்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவி ஸ்ரீதுர்கா, கலைத்திருவிழாவில் கவிதைப் புனைதல் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்றார்.
    • இதேபோல், மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில் மாணவர் மணிகண்டன் 2-ம் பரிசு பெற்றார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே துக்கியாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவி ஸ்ரீதுர்கா, கலைத்திருவிழாவில் கவிதைப் புனைதல் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்றார். இதேபோல், மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில் மாணவர் மணிகண்டன் 2-ம் பரிசு பெற்றார்.

    தூத்துக்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் 9-ம் வகுப்பு மாணவிகள் தீபிகா, ஜீவிதா ஆகியோர் பங்கேற்றனர். இதுமட்டுமின்றி, பல்வேறு தனித்திறன் மற்றும் அறிவியல் படைப்புத்திறன் போட்டியில் மாவட்ட அளவில் பங்கேற்ற, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நேற்று பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

    இவ்விழாவிற்கு, தலைமை யாசிரியர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். அறிவியல் ஆசிரியர் பெரியசாமி வரவேற்றார். உதவித் தலைமையாசிரியர் ஞானசேகரன், ஆசிரியர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பசுமை அறக்கட்டளை தன்னார்வலர்கள் அப்பு அப்துல்நயீம், சிங்கிபுரம் ராஜா, உதயா பழனிசாமி, குருஜி பாஸ்கர், ராஜ் திலக் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசு, பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர். இதனை யடுத்து, பள்ளி வளாகத்தில் பசுமை அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இறுதியில் ஆசிரியர் உதயசூரியன் நன்றி கூறினார்.

    • தொழிற்சங்க தலைவர் குப்புசாமி, சரவணன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
    • தற்காப்பு கலைகளின் சாகச நிகழ்ச்சிகள் பார்ப்ப வர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

    ஓசூர்,

    சென்னையில் கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதி நடந்த யோகாசன உலக சாதனை நிகழ்ச்சியில் சமகோண ஆசனத்தில் ஒரு மணி நேரம் 27 நிமிடம் எட்டு நொடிகள் அமர்ந்து யோகா உலக சாதனை படைத்த ஓசூரை சேர்ந்த மகா யோகம் ஜென்ஸ்கர் தற்காப்பு கலை மாணவர்களுக்கு பாராட்டு விழா ஓசூரில் நடைபெற்றது.

    ஓசூர் ஆந்திர சமிதி அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஓசூர் ஏ.எஸ்.பி அரவிந்த், அதியமான் பொறியியல் கல்லூரி முதல்வர் ரங்கநாத், டி.வி.எஸ்.மோட்டார்ஸ் தொழிற்சங்க தலைவர் குப்புசாமி, சரவணன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

    இதைத்தொடர்ந்து ஜென்ஸ்கர் மகா யோகம் தற்காப்பு கலை பயிற்சி பள்ளியில், யோகாசனம் பயிற்சி பெறும் மாணவர்கள் நிகழ்த்தி காட்டிய தற்காப்பு கலைகளின் சாகச நிகழ்ச்சிகள் பார்ப்ப வர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

    பின்னர் யோகா உலக சாதனை படைத்த ஓசூரை சேர்ந்த 10 மாணவ, மாணவிகளுக்கு கேடயங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சாதனை நிகழ்த்திய குழந்தைகளின் பெற்றோர் பங்கேற்று உற்சாகப்படுத்தினார்கள்.

    தொடர்ந்து இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த யோகா பயிற்சியாளர் ஜெகதீசன் கூறியதாவது:-

    மகா யோகம் என்று அழைக்கக்கூடிய மிகப்பிரமாண்டமான யோக கலையை கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

    இந்த கலை வாயிலாக உலக மக்களுக்கு தெரிவிப்பது, இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியம் என்பது மிக மிக முக்கியமானது. அதில் மிகவும் முக்கியமாக பங்கு வகிப்பது நமது உடல். உடல் மனம் மற்றும் நமது சுவாசப் பாதையை வலுப்படுத்தக்கூடிய அமைப்பு பற்றிய கலைகள் கற்றுக் கொடுக்கிறோம். ஜென்ஸ்கர் என்று அழைக்கப்படும் குணப்படுத்தக்கூடிய தற்காப்பு கலையில் அனைத்து விதமான கராத்தே, குங்ஃபூ, ஜூடோ, சிலம்பம், தாய்ச்சி உள்ளிட்டவைகளை சேர்த்து அடங்கிய கலைகளை பயிற்றுவித்துக் கொண்டுள்ளோம்.

    இன்றைய சமுதாயத்திற்கு இந்த கலை வாயிலாக மிகவும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு எங்களால் இயன்ற பயிற்சிகளை வழங்குகின்றோம். எங்களால் முடிந்த நன்மைகளையும் இந்த உலகிற்கு வழங்கிக் கொண்டிருக்கிறோம். இந்த தற்காப்பு கலையை பயன்படுத்தி உலக சாதனைகள் படைத்து இருக்கிறோம் என தெரிவித்தார்.

    ×