search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "People’s"

    • மக்கள் நீதி மய்யம் ஆலோசனை கூட்டம் சிவ.இளங்கோ தலைமையில் நடந்தது.
    • 10 நாட்களாக மண்டல ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது.

    மதுரை

    மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் சிவ.இளங்கோ தலைமையில் 10 பேர் அடங்கிய குழுவினர், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். அவர்கள் மதுரை வந்துள்ளனர். இங்கு அவர்கள் 10 நாட்களாக மண்டல அளவில் நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகின்றனர்.

    மதுரை வடமேற்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம், மாநில செயலாளர் சிவ.இளங்கோ தலைமையில் நடந்தது. பொறியாளர் அணி மாநில செயலாளர் வைத்தீசுவரன், கட்டமைப்பு மாநில இணை செயலாளர் ஜெய் கணேஷ், மாநில துணைச் செயலாளர் சண்முகராஜன், மண்டல செயலாளர் அழகர், ஊடக அணி மண்டல அமைப்பாளர் முத்து கிருஷ்ணன், மகளிரணி மண்டல அமைப்பாளர் பத்மா ரவிச்சந்திரன், இளைஞரணி மண்டல அமைப்பாளர் பரணி ராஜன், வக்கீல் அணி மண்டல அமைப்பாளர் கிருஷ்ணகுமார், ஆதி திராவிட நல அணி மண்டல அமைப்பாளர் நாகநாதன், நற்பணி இயக்க அணி மண்டல அமைப்பாளர் சிவபாலகுரு, மாவட்ட செயலாளர் வி.பி.மணி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ஒவ்வொரு மாவட்ட த்திலும் நிர்வாகிகளிடம் வளர்ச்சிப்பணிகள் எவ்வாறு இருக்க வேண்டும்? வருகிற 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்டது. பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, கட்சி தலைவர் கமல்ஹாசனிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.

    மக்கள் நீதி மய்யத்தின் மண்டல வாரியான ஆலோசனைக் கூட்டம், நெல்லையில் தொடங்கியது. இதுவரை 6 மண்டலங்களுக்கு சுற்றுப்பயணம் முடிந்து ள்ளது. 7-வது மண்டலமாக மதுரையில் 10 நாட்களாக மண்டல ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது. இதுவரை 124 சட்டமன்ற தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் முடிந்துள்ளது.

    கடந்த 5-ந் தேதி பழனி, திண்டுக்கல், தேனி, ஆண்டிப்பட்டி, 11-ந் தேதி மதுரை தெற்கு, மத்திய தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இன்று (12-ந் தேதி) மதுரை கிழக்கு, மேலூர் பகுதி நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. நாளை (13-ந் தேதி) மதுரை வடக்கு, சோழவந்தான், 14-ந் தேதி உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

    மக்கள் நீதி மய்யம் துணைத்தலைவர் மவுரியா தலைமையில் பூத் கமிட்டி அமைப்பது, தேர்தல் பணிகளை மேற்கொள்வது தொடர்பான பாராளுமன்ற முன்னெடுப்பு கூட்டமும் நடந்து வருகிறது.

    • சிவகங்கை அருகே 17-ந் தேதி மக்கள் தொடா்பு முகாம் நடைபெற உள்ளது.
    • பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்று கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை அருகே உள்ள கிளாதரி கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற கட்டிடத்தின் அருகில் உள்ள நாடகமேடையில் கலெக்டர் தலைமையில் வருகிற 17-ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணியளவில் மக்கள் தொடா்பு முகாம் நடைபெற உள்ளது.

    இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்று கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • குடிநீர், தார்ரோடு, சாக்கடை போன்ற அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்பட்டு வருகிறோம்.
    • பாறைகுழியை மூடியதற்கு பிறகு குப்பை கழிவுகளை எங்கே கொட்டுவது என்று திண்டாடி வருகிறோம்.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு வட்டம் அங்கேரிப்பாளையம் எம்.எஸ்.எம். மணி நகரில் வசிக்கும் பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-எங்கள் பகுதியில் குடிநீர், தார்ரோடு, சாக்கடை போன்ற அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்பட்டு வருகிறோம்.

    எங்கள் பகுதியில் இருந்த பாறைகுழியை மூடியதற்கு பிறகு குப்பை கழிவுகளை எங்கே கொட்டுவது என்று திண்டாடி வருகிறோம். தெருக்களில் மாநகராட்சி சார்பில் குப்பைத் தொட்டியும் அமைக்கப்படவில்லை. குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படுகிறது. சாலைகள் பள்ளம் மேடாக உள்ளது. வாகனங்களில் செல்ல முடியவில்லை. இப்படியாக கடந்த 15 வருடங்களாக அவதிப்பட்டு வருகிறோம். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிட்ம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஆகவே இந்த பகுதியில் போதிய அடிப்படை வசதிகளை செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • ராஜபாளையம் அருகே மக்கள் சந்திப்பு இயக்க முகாமில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
    • பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காண நடவடிக்கை மேற்கொண்டார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பொதுமக்களை நேரடியாக சந்தித்துவரும் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சி, திருவள்ளுவர் நகரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு "மக்கள் பிரதிநிதிகளின் மக்கள் சந்திப்பு இயக்கம்" என்ற தலைப்பில் தெருத்தெருவாக சென்று பொதுமக்களை நேரடியாக சந்தித்தார். பின்னர் பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காண நடவடிக்கை மேற்கொண்டார். அப்போது எம்.எல்.ஏ. நிதியில் புதிய நியாய விலை கட்டிடம் கட்டப்படும் என்றார்.

    இந்த முகாமில் இலவசமாக ஆதார் அட்டையில் முகவரி மாற்றம், தொலைபேசி எண் இணைத்தல், புதியதாக ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்தல், புதிய ரேசன் கார்டுக்கு விண்ணப்பித்தல் போன்ற சேவைகள் செய்யப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய துணைத்தலைவர் துரை கற்பகராஜ், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, மாவட்ட பிரதிநிதி திருக்குமரன், நகர கவுன்சிலர் அருள் உதயா, ஒன்றிய துணைச்செயலாளர் ஜெயந்தி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மாரிமுத்து, அங்குராஜ், ராமசுப்பு, ராம்நாத், மாரி, ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×