search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக பொதுக்கூட்டம்"

    • முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டுள்ளார்.
    • பொதுக்கூட்டத்தில் கருணாஸ் உணர்ச்சிப்பூர்வமாக பேசினார்.

    தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டம், காஞ்சிபுரத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    திமுக பவள விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்தார்.

    அங்கு, காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தில் அண்ணா சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பிறகு, " மாநில உரிமைகளை பெற அண்ணா, கலைஞர் வழியில் அயராது உழைப்போம்" என அண்ணா நினைவு இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.

    தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் திமுக பவள விழாவிற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார்.

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டுள்ளார். இதற்கிடையே, பொதுக்கூட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் உணர்ச்சிப்பூர்வமாக பேசினார்.

    மஜக தலைவர் தமிமுன் அன்சாரி, "தேசியக் கட்சிகளுக்கு நிகராக இந்தியாவின் அரசியலை தன்வயப்படுத்தியுள்ள கட்சி என்றால் அது திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும்தான்" என்றார்.

    காஞ்சிபுரத்தில் திமுக பவள விழா பொதுக்கூட்டம் - விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. பங்கேற்று உரையாற்றி வருகிறார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியளவில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வழி காட்டக் கூடிய அரசியல் கட்சி திமுக. தேர்தல் அரசியலை முன்நிறுத்தி அதிகாரத்தை நோக்கி இயங்கும் சராசரி அரசியல் கட்சி அல்ல. அதனால்தான் 75 ஆண்டுகளாக வீரியத்தோடு வெற்றிநடை போடுகிறது.

    திராவிட அரசியலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 3வது குழல். இது தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட அணி அல்ல. இருமொழி கொள்கையில் இன்றும் திமுக திடமாக உள்ளது.

    புதிய கல்வி கொள்கையை ஏற்க மறுத்து முதல்வர் உறுதியுடன் உள்ளார்.

    சமூக நீதிக்கு இந்தியா முழுவதும் வழிகாட்டும் இயக்கம் திமுக. திமுகவில் அடுத்தடுத்து வருவது கருத்தியல் வாரிசு.

    பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வுத் திட்டம்.. இந்தியாவில் யாரும் சிந்திக்காதது.. நான் அடிக்கடி சிலாகித்துப் பேசுகிற திட்டம் சமத்துவபுரம் திட்டம்..

    எந்தவொரு கூட்டணியும் தேர்தலுக்குப் பின் சிதறிப் போகும்.. ஆனால், இன்றும் திமுக கூட்டணி சிதறாமல் இருப்பதற்கு காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இரும்பிலான இமயமலை போல உயர்ந்து நிற்கும், திமுக எனும் அறிவார்ந்த இயக்கத்தின் வயது 75 .
    • தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டு நிலைத்து நிற்கும் எழுச்சிமிக்க கழகத்தின் பவள விழா.

    தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டம், காஞ்சிபுரத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஜாமினில் வெளியே வந்த பிறகு அவர் கலந்துக் கொள்ளும் முதல் நிகழ்ச்சியான திமுக பவள விழா பொதுக்கூட்டம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிவு வெளியிட்டுள்ளார்

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திட வேண்டும், சமூகநீதியும் சமத்துவமும் நிறைந்த தமிழ்நாட்டை படைத்திட வேண்டும் என்ற உன்னத நோக்கில், தந்தை பெரியாரின் வழியில், பேரறிஞர் அண்ணா அவர்கள் துவக்கி, தமிழினத்தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள் கட்டிக்காத்து இன்று தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களின் தலைமையில், இரும்பிலான இமயமலை போல உயர்ந்து நிற்கும், திமுக எனும் அறிவார்ந்த இயக்கத்தின் வயது 75 .

    புரட்சிக்கரமான கொள்கைகளால், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டு நிலைத்து நிற்கும் எழுச்சிமிக்க கழகத்தின் பவள விழா பொதுக்கூட்டத்தில், கழகத்தின் தொண்டனாக கலந்துக்கொள்வதில் பெருமைக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பாராளுமன்ற தொகுதி வாரியாக மொத்தம் 37 கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
    • கன்னியாகுமரி-திண்டுக்கல் லியோனி, மயிலாடுதுறை-சபாபதிமோகன், திருவண்ணாமலை-கோவி.செழியன்.

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு தி.மு.க. தொடர் பொதுக் கூட்டங்களை நடத்துகிறது.

    உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல்-பாசிசம் வீழட்டும். இந்தியா வெல்லட்டும் என்ற தலைப்பில் பாராளுமன்ற தொகுதி வாரியாக மொத்தம் 37 கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.

    இதில் இன்று மட்டும் 11 ஊர்களில் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. அதில் பேசுபவர்கள் விவரம் வருமாறு:-

    ஸ்ரீபெரும்புதூர்-அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சிவகங்கை-ஐ.பெரியசாமி, திருநெல்வேலி-கனிமொழி எம்.பி., விழுப்புரம்-அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தூத்துக்குடி-பொன்முத்துராமலிங்கம், கடலூர்-எஸ்.எஸ்.சிவசங்கர், ஈரோடு-அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாமக்கல்-தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி., கன்னியாகுமரி-திண்டுக்கல் லியோனி, மயிலாடுதுறை-சபாபதிமோகன், திருவண்ணாமலை-கோவி.செழியன்.


    சனிக்கிழமை (17-ந்தேதி) நடைபெறும் பொதுக் கூட்டங்கள் விவரம்:-

    கிருஷ்ணகிரி- அமைச்சர் துரைமுருகன், திருச்சி டி.ஆர்.பாலு எம்.பி., திருப்பூர்- அமைச்சர் கே.என்.நேரு, அரக்கோணம்-முன்னாள் அமைச்சர் பொன்முடி, மதுரை- ஆ.ராசா எம்.பி., விருதுநகர்- கனிமொழி எம்.பி., ராமநாதபுரம்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வேலூர்- அமைச்சர் எ.வ.வேலு, கள்ளக்குறிச்சி- அமைச்சர் மா.சுப்பிரமணியன், கோவை- அன்பில்மகேஸ் பொய்யாமொழி, திண்டுக்கல்- பொன்முத்துராமலிங்கம், சிதம்பரம்- கோவி.செழியன்.

    இதேபோல் 18-ந்தேதி (ஞாயிறு) திருவள்ளூர், தஞ்சாவூர், பெரம்பலூர், கரூர், புதுச்சேரி, பொள்ளாச்சி, காஞ்சிபுரம், தருமபுரி, நாகை, தேனி, நீலகிரி, தென்காசி, சேலம், ஆரணி ஆகிய இடங்களில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை வாலாங்குளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள படகு துறையை திறந்து வைக்கிறார்.
    • பின்னர் ஈச்சனாரி செல்லும் அவர் தனியார் கல்லூரி அருகே உள்ள மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி விழா பேரூரையாற்றுகிறார்.

    பொள்ளாச்சி:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 14-ந்தேதி மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார்.

    அவருக்கு தி.மு.க.வினர் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். இதை தொடர்ந்து கோவை ரெட்பீல்ட்ஸ்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு தங்கி ஓய்வெடுக்கிறார்.

    மறுநாள் காலை 10 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை வாலாங்குளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள படகு துறையை திறந்து வைக்கிறார்.

    பின்னர் ஈச்சனாரி செல்லும் அவர் தனியார் கல்லூரி அருகே உள்ள மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி விழா பேரூரையாற்றுகிறார்.

    அதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொள்ளாச்சிக்கு செல்கிறார். அங்கு மாலை 5 மணியளவில் கோவை தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் ஓர் ஆண்டு சாதனை விளக்க பொது கூட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

    இந்த விழாவின் போது மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கிணத்துக்கடவு, வால்பாறை, பொள்ளாச்சி தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைய உள்ளனர்.

    மேலும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் 50 ஆயிரம் பேர் அமரும் வகையில், பிரமாண்ட பந்தலும் அமைக்கப்பட உள்ளது.

    இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளும் பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட உள்ள ஆச்சிபட்டி தனியார் மைதானத்தில், நேற்று மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து, ஏற்பாடுகள் குறித்து கோவை தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜனிடம் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் பொது மக்களுக்கு பாதுகாப்பு வசதிகள், சுகாதார வசதிகள், வாகன நிறுத்தும் இடங்கள், போக்குவரத்து வசதி, பாதுகாப்பு பணிகளுக்கான ஏற்பாடுகள் உள்ளிட்டவகைள் குறித்து போலீஸ் அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

    பொள்ளாச்சி பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு உடுமலை செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 16-ந் தேதி அமராவதி நகர் சைனிக் பள்ளியில் நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார்.

    ×