என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழங்கல்"

    • இளையான்குடி அருகே ரூ.31 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • முதல்-அமைச்சர் பொதுமக்களின் நலனை கருத்திதல் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள அ.நெடுங்குளத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி கலந்து கொண்டு பல்வேறு துறைகள் சார்பில் ரூ.30.92 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 194 பயனாளிகளுக்கு வழங்கி னார். பின்னர் அவர் பேசிய தாவது:-

    முதல்-அமைச்சர் பொதுமக்களின் நலனை கருத்திதல் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு மாதமும் ஒரு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தினை தேர்ந்தெடுத்து அதில் உள்ள கடைக்கோடி கிராமத்திற்கு சென்று பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்று நலத்திட்ட உதவிகள் வழங்க மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) காமாட்சி, இணை இயக்குநர்கள் தனபாலன் (வேளாண்மைத்துறை), நாகநாதன் (கால்நடைப் பராமரிப்புத்துறை, துணை இயக்குநர் (சுகாதாரம்) விஜய்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு கபிலர்மலை தோட்டக்கலை துறை மூலம் விதைகள் மானியம் மூலம் வழங்கப்படுகிறது.
    • தக்காளி, வெங்காயம்,சுரை,கத்திரி, மிளகாய்,பாகல்,பீர்க்கன்,கொத்தவரை,வெண்டை ஆகிய விதைகள் வழங்கல்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு கபிலர்மலை தோட்டக்கலை துறை மூலம் தக்காளி, வெங்காயம்,சுரை,கத்திரி, மிளகாய்,பாகல்,பீர்க்கன்,கொத்தவரை,வெண்டை ஆகிய விதைகள் மானியம் மூலம் வழங்கப்படுகிறது. எனவே விதைகள் தேவைப்படும் விவசாயிகள் ஆதார் ஜெராக்ஸ் ,ரேசன் ஜெராக்ஸ்,சிட்டா நகல்,அடங்கல்நகல், வங்கிகணக்குபுத்தகம்நகல்,போட்டோ2, ஆகியவற்றை கொண்டு வந்து கபிலர்மலை தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் கொடுத்து விதைகளை பெற்றுக் கொள்ளுமாறு தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
    • உஸ்வத்துல் ஹசனா சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் கிழக்குத் தெரு ஜமாத் நிர்வாகிகள், உறுப்பினர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிழக்கு தெருவில் அமைந்திருக்கும் கிழக்கு நண்பர்கள் தர்ம அறக்கட்டளை கடந்த 2001-ம் ஆண்டு 25 இளைஞர்களால் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு மாணவ-மாணவிகளுக்கு உதவித்தொகை, ஏழைகளுக்கு மருத்துவ உதவி போன்றவற்றை செய்து வருகிறது. மேலும் நோன்பு காலங்களில் வறுமையில் உள்ளவர்களுக்கு "ஜகாத் உதவி",கொரோனா காலத்தில் பல்வேறு உதவிகளையும் இந்த அமைப்பு செய்தது.

    இந்த நிலையில் இந்த அறக்கட்டளை மூலம் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி, கீழக்கரை கைராத்துல் ஜலாலியா தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில் மாணவர்களுக்கான கல்வித்தொகை மற்றும் மருத்துவ நிதி உதவிகள் 50 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உஸ்வத்துல் ஹசனா சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் கிழக்குத் தெரு ஜமாத் நிர்வாகிகள், உறுப்பினர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

    • சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரில் விவசாயிக–ளுக்கான கருத்தரங்கு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • மேலும் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒட்டு ஆமணக்கு விதை உற்பத்தி பயிற்சி மற்றும் பல்வேறு கருத்துக்களை விவசாயிகளுக்கு வழங்கினார்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரில் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு விவசாயிக–ளுக்கான கருத்தரங்கு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    இந்த விழாவில் ஏத்தாப்பூர் மரவள்ளி மற்றும் ஆமணக்கு மையத்தின் தலைவர் மாணிக்கம் வரவேற்றார்.

    சேலம் தோட்டக்கலை துணை இயக்குனர் தமிழ்ச்செல்வி, கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் நீர் நுட்பவியல் இயக்குனர் பழனிவேலன், கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் விதை மைய இயக்குனர் உமாராணி ஆகியோர் விவசாயிகளுக்கான கருத்துரை வழங்கினர்.

    தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்ப–டுத்துதல் திட்டத்தின் கீழ் வேளாண்மை எந்திரங்களை பயனாளிகளுக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி வழங்கினார். மேலும் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒட்டு ஆமணக்கு விதை உற்பத்தி பயிற்சி மற்றும் பல்வேறு கருத்துக்களை விவசாயிகளுக்கு வழங்கினார்.

    இறுதியில் ஏத்தாப்பூர் ஆமணக்கு ஆராய்ச்சி நிலைய மரவியல் மற்றும் பயிர் பெருக்கத் துறை பேராசிரியர் வெங்கடாஜலம் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண்மை தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி இறுதி ஆண்டு மாணவர்கள் முசிறி எம்.ஐ.டி வேளாண்மை கல்லூரி மாணவர்கள் தங்களுடைய புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • சாயல்குடி, கடலாடி பகுதிகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
    • சாயல்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் குலாம் முகைதீன் தலைமை தாங்கினார்.



    சாயல்குடியில் பொங்கல் தொகுப்பினை தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம் முகைதீன் வழங்கினார்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் சாயல்குடி, ஒப்பிலான், மாரியூர், மேலக் கிடாரம், ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    சாயல்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் குலாம் முகைதீன் தலைமை தாங்கினார்.மாவட்ட ஊராட்சிக் குழு துணை தலைவர் வேலுச்சாமி, சாயல்குடி நீர் பாசன சங்கத் தலைவர் ராஜாராம், சாயல்குடி பேரூராட்சி துணை சேர்மன் மணிமேகலை பாக்கியராஜ், நகர் இளைஞரணி செய லாளர் விக்னேஷ் ராம், சாயல்குடி நகர துணை செயலாளர் சுப்பிரமணியன், பேரூராட்சி கவுன்சிலர் காமராஜ், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.

    பொதுமக்களுக்கு தமிழக அரசின் பொங்கல் தொகுப்பினை தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம் முகைதீன் வழங்கினார். இதில் ஒன்றிய கவுன்சிலர் பிச்சை, ஊராட்சித் தலைவர்கள் மங்களசாமி கன்னியம்மாள், சண்முகவேல், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் இளங்கோவன், வகிதா சகுபர், மாவட்ட பிரதிநிதி அமீர்ஹம்சா, முன்னாள் ஒன்றிய பிரதிநிதி நாகேந்திரன், வார்டு செயலாளர் கென்னடி, கிளைச் செயலாளர் மாரியூர் ஜமால், காசி, காவா குளம் முருகேசன், மேலக் கிடாரம் பழனிச்சாமி, ஒப்பிலான் இப்ராகிம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    சாயல்குடி மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் நரிப்பையூர், கன்னிராஜ புரம், செவல்பட்டி, எஸ். தரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நடந்த நிகழ்ச்சியில் பொது மக்களுக்கு பொங்கல் தொகுப்புகளை சாயல்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் வழங்கினார்.

    இதில் ஊராட்சித் தலைவர்கள் செஞ்சடை நாதபுரம் லிங்கராஜ், காணி ஒக்கூர் தென்னரசி செல்ல பாண்டியன், ஏ.புனவாசல் ராஜேந்திரன், டி. கரிசல்குளம் அப்பனசாமி, எஸ். தரைக்குடி முனியசாமி, டி. வேப்பங்குளம் முருகன், எஸ்.வாகைக்குளம் ஜெயலட்சுமி வடமலை, முன்னாள் உச்சநத்தம் ஊராட்சி தலைவர் பால கிருஷ்ணன், சாயல்குடி தி.மு.க. ஒன்றிய பொருளாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    கடலாடி வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ஆப்பனூர், பொதிகுளம், கிடாத்திருக்கை உள்ளிட்ட பகுதிகளில் நடந்த நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆப்பனூர் ஆறுமுகவேல் பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்புகளை வழங்கினார். கடலாடி தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கடலாடி, புனவாசல், ஓரிவயல், கருங்குளம், ஆலங்குளம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்புகளை கடலாடி தெற்கு ஒன்றிய செயலாளர் மாயகிருஷ்ணன் வழங்கினார்.

    • பரமத்திவேலூர் அருகே உள்ள இருக்கூர், செஞ்சு டையாம்பாளையம், ரங்கநாதபுரம், வெள்ளா ளபாளையம் மற்றும் சுண்டப்பனை உள்ளிட்ட பகுதிகளில் ஆடுகள், கன்றுகள், மயில்கள் மற்றும் நாய்களை சிறுத்தைப் புலி தாக்கி கொன்றது.
    • வனத்துறை யினர் சார்பில் கால்நடை களின் உரிமையாளர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. இதன்படி, ஆடுகளுக்கு ரூ.3 ஆயிரம், கன்றுகளுக்கு ரூ.5 ஆயிரத்தை நாமக்கல் மாவட்ட வன சரக அலுவலர் வழங்கினார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள இருக்கூர், செஞ்சு டையாம்பாளையம், ரங்கநாதபுரம், வெள்ளா ளபாளையம் மற்றும் சுண்டப்பனை உள்ளிட்ட பகுதிகளில் ஆடுகள், கன்றுகள், மயில்கள் மற்றும் நாய்களை சிறுத்தைப் புலி தாக்கி கொன்றது.

    இந்த சிறுத்தைப்புலியை பிடிக்க வனத்துறையினர் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு பயிற்சி பெற்ற வனவர்கள், மோப்ப நாய், ட்ரோன் கேமரா, கூண்டுகள், மயக்க மருந்து செலுத்தும் கால்நடை மருத்துவர்களை வரவழைத்து இரவு, பகலாக தீவிர கண்காணிப்பு பணி யில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆனால் இதுவரை சிறுத்தை புலியை கண்டு பிடிக்க முடியாத நிலையில், தற்போது சிறுத்தைப்புலி வந்து செல்லும் வழித்தடம் கண்டறியப்பட்டு 15-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு காமிராக்கள், 3 கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சிறுத்தை புலி தாக்கி பலியான கால்நடைகளுக்கு நிவாரணம் வழங்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தி ருந்தனர். இதையடுத்து, வனத்துறை யினர் சார்பில் கால்நடை களின் உரிமையாளர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. இதன்படி, ஆடுகளுக்கு ரூ.3 ஆயிரம், கன்றுகளுக்கு ரூ.5 ஆயிரத்தை நாமக்கல் மாவட்ட வன சரக அலுவலர் பிரவின்குமார் வழங்கினார்.

    • பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார தோட்டக்கலைத் துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் மானிய விலையில் பழச்செடிகள் வழங்கப்பட்டது.
    • விவசாயிகள் தங்களது சிட்டா, ஆதார் அட்டை நகல், ரேசன் கார்டு நகல், போட்டோ ஆகியவற்றை தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் கொடுத்து பழ செடிகளை பெற்றுக் கொள்ளலாம்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார தோட்டக்கலைத் துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண் வளர்ச்சித்

    திட்டத்தின் கீழ் இருக்கூர்,

    குன்னத்தூர், பிலிக்கல்பா ளையம், ஆனங்கூர், வட

    கரையாத்தூர், சிறு நல்லிக்கோவில், சுள்ளிபா

    ளையம், குப்பிரிக்காபா ளையம் ஆகிய கிராமங்க ளுக்கு பழப்பயிர் பயிரிட விரும்பும் விவசாயிகளுக்கு மா, கொய்யா மற்றும் எலுமிச்சை செடிகள் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

    எனவே தேவைப்படும் விவசாயிகள் தங்களது சிட்டா, ஆதார் அட்டை நகல், ரேசன் கார்டு நகல், போட்டோ ஆகியவற்றை கபிலர்மலை வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் கொடுத்து தோட்டக்கலை துறையின் மூலம் பழ செடிகளை பெற்றுக் கொள்ளலாம் என கபிலர்மலை வட்டார

    தோட்டக்கலை துறை அலுவலர் தெரிவித்துள்ளார். 

    • ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கான சிறப்பு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கும் திட்டத்தினை சென்னையில் நடைபெற்ற “ஏற்றுமிகு ஏழு திட்டங்கள்” நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    • சேலம், அய்யந்திரு மாளிகை, வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள குழந்தைகள் மையத்தில் குழந்தைகளுக்கான சிறப்பு உணவு மற்றும் ஊட்டச்சத்து பெட்டகங்களை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.

    சேலம்:

    தமிழக அரசின் "ஊட்டச்சத்தை உறுதிசெய்" திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கான சிறப்பு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கும் திட்டத்தினை சென்னையில் நடைபெற்ற "ஏற்றுமிகு ஏழு திட்டங்கள்" நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இத்திட்டத்தின் மூலம் 6 மாதம் முதல் 2 வயது வரையுள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் ஆகியோர்களுக்கு 8 வாரங்கள் சிறப்பு உணவாக, உடனடியாக உட்கொள்ளும் சிகிச்சை உணவு அளிக்கவும், முதல் 6 மாதம் வரை கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளின் தாய்மார்களுக்கு அவர்களின் ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்தி குழந்தைகளுக்கு தேவையான தாய்பால் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் 2 ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படுகிறது.

    சேலம் மாவட்டத்தில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 6 மாதம் வரையுள்ள 468 குழந்தைகளின் தாய்மார்களுக்கு 2 ஊட்டச்சத்து பெட்டகமும் தொகுப்பும், மிதமான எடை குறைவுள்ள 616 குழந்தைகளின் தாய்மார்களுக்கு 1 ஊட்டச்சத்து பெட்டக தொகுப்பு வழங்கப்படுகிறது. மேலும், 6 மாதம் முதல் 6 வயது வரையுள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 2,581 குழந்தைகளுக்கு தொகுப்பும் வழங்கப்படுகிறது.

    சேலம், அய்யந்திரு மாளிகை, வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள குழந்தைகள் மையத்தில் குழந்தைகளுக்கான சிறப்பு உணவு மற்றும் ஊட்டச்சத்து பெட்டகங்களை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.

    பின்னர் அவர் கூறுகையில், உடனடியாக உட்கொள்ளும் சிகிச்சை குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்தக்கூடிய உணவு என்பது யுனிசெப் அமைப்பினால் பரிந்துரைக்கப்பட்ட வழுவழுப்பான பசை (paste) போன்று இருக்கும் உணவுப் பொருளாகும். இதில், அரைத்த வேர்க்கடலை, பால் பவுடர், எண்ணெய், சர்க்கரை, வைட்டமின்கள் மற்றும் மினரல் ஆகிய பொருட்கள் அடங்கி இருக்கும்.

    ஊட்டச்சத்து குறைபாடுள்ள தாய்மார்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்டகத்தில், தாய்மார்களுக்கான சிறப்பு ஆரோக்கிய உணவுக் கலவை, இரும்புச் சத்து மருந்து, விதை நீக்கப்பட்ட பேரீச்சம் பழம், குடற்புழு நீக்க மாத்திரை, ஆவின் நெய் மற்றும் பருத்தி துண்டு ஆகியன அடங்கியிருக்கும் என்றார்.

    நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி, மாநகர் நல அலுவலர் யோகானந்த், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குநர் பரிமளாதேவி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • வேளாண்மை-உழவர் நலத்துறையின் மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேட்டாம் பாடி கிராமத்தில் மானிய விலையில் பண்ணைக் கருவிகள் தொகுப்பு, தார்பாய்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது.
    • இரும்புசட்டி, அரிவாள், தார்பாய்கள், மின்கல தெளிப்பான்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கினார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் வட்டார வேளாண்மை-உழவர் நலத்துறையின் மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேட்டாம் பாடி கிராமத்தில் மானிய விலையில் பண்ணைக் கருவிகள் தொகுப்பு, தார்பாய்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா முன்னிலை வகித்து வருகைபுரிந்த விவசாயிகளை வரவேற்று திட்டத்தின் நோக்கம் அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தார்.

    அட்மா குழு தலைவர் பழனிவேல் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து வேளா ண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானிய விலையில் வேளாண்மை கருவிகளான கடப்பாரை, மண்வெட்டி, களைக்கொத்து, இரும்புசட்டி, அரிவாள், தார்பாய்கள், மின்கல தெளிப்பான்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கினார்.

    முகாமினை வேளாண்மை அலுவலர் மோகன், உதவி வேளாண்மை அலுவலர் கோபிநாத், வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ், உதவி தொழில்நுட்ப மேலாளர் கவிசங்கர் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • மானிய விலையில் 16 லிட்டர் கொள்ளளவு கொண்ட பேட்டரி ஸ்பிரேயர் வழங்கப்பட்டு வருகிறது.
    • இன்னும் 25 பேட்டரி ஸ்பிரேயர் இருப்பு உள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார வேளாண்மை துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஆனங்கூர், வடகரையாத்தூர், சிறுநல்லிக்கோவில், சுள்ளிபாளையம், குப்பிரிக்காபாளையம் ஆகிய கிராமங்களுக்கு மானிய விலையில் 16 லிட்டர் கொள்ளளவு கொண்ட பேட்டரி ஸ்பிரேயர் வழங்கப்பட்டு வருகிறது.

    இன்னும் 25 பேட்டரி ஸ்பிரேயர் இருப்பு உள்ளது. எனவே தேவைப்படும் விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை நகல், ரேசன் கார்டு நகல், சிட்டா, போட்டோ-1 ஆகியவற்றை கபிலர் மலை வேளாண்மை துறை அலுவலகத்தில் கொடுத்து வேளாண் துறையின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

    மேலும் கபிலர்மலை வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மாங்கன்றுகள் வழங்கப்பட உள்ளது. தேவையான விவசாயிகள் கபிலர்மலை வட்டார வேளாண்மை அலுவலகத்திற்கு வந்து பெற்று கொள்ளலாம்.

    மாங்கன்றுகள் பெற ஆதார் நகல், ரேசன் நகல், சிட்டா, போட்டோ 2 ஆகியவற்றை வேளாண்மை அலுவலகத்தில் கொண்டு வந்து கொடுத்து மாங்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம் என கபிலர்மலை வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி தெரிவித்துள்ளார்.

    • குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து, தங்களது அமைப்பின் நிதியுதவி மூலம் இலவசமாக வழங்கினர்.
    • மாணவர்களும், ஆசிரியர்களும் வரவேற்று நன்றி தெரிவித்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா சோழசிராமணி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.3,05,998 மதிப்புள்ள கணினிகள், புரொஜெக்டர், புரொஜெக்டர் திரை, மோடம் மற்றும் பிரிண்டர் ஆகியவற்றை, கோவை, குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து, தங்களது அமைப்பின் நிதியுதவி மூலம் இலவசமாக வழங்கினர்.

    இந்த தொழில்நுட்ப சாதனங்களை பள்ளியின் தலைமை ஆசிரியை லட்சுமி, முன்னாள் மாணவர்கள் சங்க உறுப்பினர் தளபதி சுப்பிரமணியன், குப்பிரிக்கா பாளையம் ஊராட்சி தலைவர் அரசு என்கிற பழனிசாமி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

    மேலும் பள்ளி மாணவர்கள் கணினியின் அடிப்படைகளை எளிதில் கற்றுக்கொள்வதற்காக கற்போம் கணினி என்ற புத்தகத்தையும் தமிழில் தொகுத்து வழங்கியுள்ளனர்.

    குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் இந்த முயற்சியை, அப்பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் வரவேற்று நன்றி தெரிவித்தனர்.

    • அனைத்து பகுதிகளுக்கும் காவிரி குடிநீர் வழங்கப்படும்
    • 103 ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் கடலாடி மற்றும் முது குளத்தூர் ஊராட்சிகளுக்கு உட்பட்ட 103 ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

    இதில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பேசியதாவது:-

    பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவையான தண்ணீர் தேவையை நிறை வேற்றுவது ஒவ்வொருவரின் கடமையாகும். அந்த வகையில் ஒவ்வொரு ஊராட்சியிலும் மக்கள் தொகைக்கு ஏற்ப போதிய அளவு தண்ணீர் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து வழங்க இயலாத நிலை உள்ளது. அதை மாற்றி அனைத்து பகுதி களுக்கும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து தண்ணீர் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்த கூட்டத்தின் நோக்கம் ஊராட்சி மன்றத் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்களுடன் கலந்து ஆலோ சித்து காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் அனைத்து பகுதி மக்களுக்கும் முழுமையான அளவு தண்ணீர் கிடைக்க தேவையான திட்டங்களை வடிவமைக்க வேண்டும். தற்பொழுது ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டுள்ளது.

    இதில் 20-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இதற்குண்டான பதில்களை பூர்த்தி செய்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் வழங்க வேண்டும்.

    குறிப்பாக பொது மக்களோடு ஆலோசித்து படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இந்த படிவம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து சென்னையில் உள்ள நீர்வள ஆதார மையத்திற்கு சென்று அங்கிருந்து விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் கொண்ட குழுவினர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து கள ஆய்வு மேற்கொள்வார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் சண்முகநாதன், கடலாடி ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர்.முத்து லட்சுமி, முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் சண்முகபிரியா, சென்னை நீர்வள ஆதாரத்துறை பொறியாளர் சரவணன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் பரமசிவம், கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா, ஆனந்த், முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜானகி, பிரியதர்ஷினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×