search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்குகள்"

    • வார்டு உறுப்பினர் பதவிக்கு வாக்கு எண்ணும் பணிக்கு ஒருவர் மட்டுமே அனுமதி உள்ளது.
    • பேரூர் ெசட்டிப்பாளையத்தில் பதிவான வாக்கு பெட்டிகள் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் வைக்கப்பட்டது.

    கோவை:

    கோவை கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் நெ.10 முத்தூர் ஊராட்சி மன்ற தலைவர். குருநல்லிபாளையம் 4-வது வார்டு, சொக்கனூர் ஊராட்சி 1-வது வார்டு நல் லட்டிபாளையம் ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் ஆகிய இடங்கள் காலியானது.

    இதே போல பொள்ளாச்சி வடக்கு வடக்கிப்பாளையம் ஊராட்சி 2 வார்டு உறுப்பினர், தொண்டாமுத்தூர் பேரூர் செட்டிப்பாளையம் 1 -வது வார்டு உறுப்பினர் பதவிகள் காலியானது. காலியாக உள்ள பதவி இடங்களுக்கு தேர்தல் அறி விக்கப்பட்டது. ஏற்கனவே நல்லட்டிபாளையம், சொக்க னூர் ஆகிய ஊராட்சிகளில் உள்ள வார்டு உறுப்பினருக் கான தேர்தலில் வார்டு உறுப்பினர்கள் 2 பேர் போட்டி யின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    இதனால் நெ.10 முத்தூர் ஊராட்சி தலைவர் மற்றும் குருநல்லிபாளையம், வடக்கிப்பாளையம், பேரூர் செட்டிப்பாளையம் வார்டு உறுப்பினர் ஆகிய பதவிக ளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. வாக்குப் பெட்டிகள் வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    பின்னர் நெ.10 முத்தூர், குருநெல்லிப்பாளையம் பதிவான வாக்கு பெட்டிகள் போலீஸ் பாதுகாப்புடன் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள அறையில் வைக்கப்பட்டு, அறைக்கு சீல் வைக்கப்பட்டது.

    அங்கு போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டு உள்ளது. வடக்கிப்பாளையத்தில் பதிவான வாக்குகள் பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், பேரூர் ெசட்டிப்பாளையத்தில் பதிவான வாக்கு பெட்டிகள் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் வைக்கப்பட்டது.

    வாக்கு எண்ணும் மையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. வாக்கு எண்ணுவதற்கு மேஜைகள் போடப்பட்டு உள்ளது. ஒரு மேஜைக்கு 3 பேர் என 2 மேஜைகளுக்கு 6 பேர் பணிபுரிவார்கள். ஊராட்சி தலைவர் பதவிக்கு வாக்கு எண்ணும் பணியில் வேட்பாளர் மற்றும் அவருடன் ஒரு நபர் என 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

    அதேபோல வார்டு உறுப்பினர் பதவிக்கு வாக்கு எண்ணும் பணிக்கு ஒருவர் மட்டுமே அனுமதி உள்ளது. வாக்கு எண்ணும் பணியை பார்வையிட வரும் போது, செல்போன், பேனா, நோட்டு கொண்டு வர அனுமதி இல்லை. 

    • உள்ளாட்சி ேதர்தலில் போட்டியின்றி 6 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
    • மீதமுள்ள 6 பதவிக்கு 29 பேர் போட்டியிட்டுள்ளனர். இதற்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள சேலம் யூனியன் வார்டு உறுப்பினர் மற்றும் 11 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தெத்திகிரிப்பட்டி, மின்னாம்பள்ளி, பூவனூர், புள்ள கவுண்டம்பட்டி, இலவம்பட்டி, நீர்முள்ளிக்குட்டை பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியின்றி 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    மீதம் உள்ள 6 பதவிகளுக்கு நாளை 9ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. சேலம் யூனியன் வார்டு உறுப்பினர் பதவிக்கு 16 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். தி.மு.க வேட்பாளராக முருகன் போட்டியிடுகிறார்.

    மற்ற அனைவரும் சுயேட்சை வேட்பாளர்கள். வார்டு உறுப்பினர் பதவிகளில் நடுப்பட்டியில் 3 பேர், தேவியாக்குறிச்சியில் 2 பேர், கிழக்கு ராஜபாளையத்தில் 3 பேர், கூணான்டியூரில் 3 பேர், பொட்டனேரியில் 2 பேர் என மொத்தம் 6 பதவிகளுக்கு 29 பேர் போட்டியில் உள்ளனர்.

    இதற்கான பிரசாரம் நேற்று ஓய்ந்த நிலையில் வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகி–றார்கள்.

    சேலம் ஒன்றியம் 8வது வார்டில் 10 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 5 ஊராட்சி மன்ற வார்டுகளுக்கும் வார்டுக்கு ஒரு வாக்குச்சவாடி அமைக்கப்பட்டுள்ளது.

    வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது. இந்த தேர்தலில் 9 ஆயிரத்து 510 வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள். வாக்குப்பதிவிற்கு தேவையான அனைத்து பொருட்களும் இன்று மாலைக்க ள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

    இதற்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 12-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அந்த பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியல் ஈடுபடுகிறார்கள்.

    ×