search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தை திருமணங்கள்"

    • 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் எண்ணிக்கையில் ஏற்பட்ட சரிவுக்கு கொரோனா பரவலும் காரணம்.
    • நடுத்தர வர்க்க பெற்றோர்களிடையே கூட, அவர்களின் குழந்தைகளைப் படிக்க வைப்பதற்கு ஆசை உள்ளது.

    பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையால் வெளியிடப்பட்ட 2022-ம் ஆண்டிற்கான சமீபத்திய தரவுகளின்படி, இஸ்லாமிய பெண்களிடையே ஆரம்பகால குழந்தை பிறப்பது கேரளாவில் 10 வருட காலத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. கேரளாவில் 2022-ல் பதிவு செய்யப்பட்ட பிறப்பு மற்றும் இறப்புகளின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்த புள்ளிவிவரங்கள் உள்ளன.

    15-19 வயதுப் பிரிவினருக்கான புள்ளிவிவரங்களின்படி, 2022ல் இஸ்லாமியரிடையே டீன் ஏஜ் பிரசவங்கள் 7,412 ஆக இருந்தது. இது 2012 க்குப் பிறகு (14066) மிகக் குறைந்த எண்ணிக்கையாகும், இது 47 சதவீத சரிவைக் குறிக்கிறது.

    கடந்த 10 ஆண்டுகளில் கேரளாவில் இஸ்லாமிய பெண்களின் சராசரி டீன் ஏஜ் பிரசவங்கள் 15,000க்கு மேல் இருந்ததை கருத்தில் கொண்டு இந்த சரிவு முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு தசாப்தத்தில் இஸ்லாமியரிடையே அதிக எண்ணிக்கையிலான பதின்ம வயதுப் பிரசவங்கள் 2013-ல் 22,924 ஆகும். 2022-ம் ஆண்டின் எண்ணிக்கையானது தசாப்தத்தின் மிக உயர்ந்த எண்ணிக்கையில் இருந்து 67 சதவிகிதம் குறைந்துள்ளது.

    2019-ம் ஆண்டிலிருந்து இஸ்லாமியரிடையே டீன் ஏஜ் பிரசவங்களின் விகிதம் குறைந்து வருவதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இருப்பினும், 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் எண்ணிக்கையில் ஏற்பட்ட சரிவு கொரோனா பரவலுக்குக் காரணம்.

    இந்துக்கள், இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மத்தியில், ஒரு தசாப்தத்தில் 15-19 வயதுக்குட்பட்ட பிரசவங்களின் எண்ணிக்கையில் மிக அதிகமான சரிவு இஸ்லாமியர்களிடையே பதிவு செய்யப்பட்டுள்ளது- 6,654. இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை முறையே 1749 மற்றும் 2888 ஆக இருந்தது. பதின்ம வயதினரின் குழந்தைப் பிரசவங்களின் சதவீதம் 87 சதவீதம் குறைந்துள்ளது.

    NISA (ஒரு முற்போக்கு முஸ்லீம் பெண்கள் மன்றம்) செயலாளர் வி.பி.சுஹாரா கூறுகையில், டீன் ஏஜ் கர்ப்பத்தின் எண்ணிக்கையில் சரிவு வரவேற்கத்தக்கது. "பருவப் பிரசவங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான முக்கிய காரணியாக இருக்கும் குழந்தைத் திருமணத்திற்கு எதிராக அதிக விழிப்புணர்வு உள்ளது. மேலும் கடந்த காலத்தைப் போலல்லாமல், பெற்றோர் மற்றும் பெண் இருவரும் நல்ல கல்வியைப் பெறுவதில் ஆர்வமாக உள்ளனர்.

    நடுத்தர வர்க்க பெற்றோர்களிடையே கூட, ஒரு ஆசை உள்ளது. அவர்களின் குழந்தைகளைப் படிக்க வைப்பதற்கு இதுவும் பெண்களின் திருமண வயதை அதிகரிக்கக் கோருவதற்கு ஒரு காரணம்" என்றார்.

    • குழந்தைகள் திருமணம் இல்லாத, மாவட்டமாக மாற்ற தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள், பள்ளி இடைநிற்றல் குழந்தைகளை தொடர்ந்து கண்காணித்து கல்விக்கு அடித்தளமிடப்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறை, தோழமை அமைப்பு மற்றும் யுனிசெப் அமைப்புகள் சார்பில், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கருத்தரங்கம் அவிநாசி ரோட்டில் உள்ள ஓட்டல் ஒன்றில் நடந்தது. இதில், சமூக நலத்துறை அலுவலர் ரஞ்சிதா பேசியதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் 111 குழந்தை திருமணங்கள் கண்டறியப்பட்டு, 90 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 6 வழக்குகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் திருமணம் இல்லாத, மாவட்டமாக மாற்ற தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.

    மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ரியாஸ் அகமது பாட்ஷா பேசியதாவது:- புலம்பெயர் தொழிலாளர்கள் நிறைந்துள்ள மாவட்டத்தில் தொடர்ந்து புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து குழந்தைகளின் நலன்களையும் கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி அருகே கடைகளில் போதை பொருட்கள் விற்றால், அவற்றை உணவு பாதுகாப்பு துறையுடன் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள், பள்ளி இடைநிற்றல் குழந்தைகளை தொடர்ந்து கண்காணித்து கல்விக்கு அடித்தளமிடப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

    • திண்டுக்கல்லில் பாலியல் தொல்லையை தடுப்பது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
    • பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் குழந்தை திருமணம் அதிகம் நடப்பதில் திண்டுக்கல் மாவட்டம் முதலிடத்தில் உள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட சமூக நலத்துறை மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் இணைந்து பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுப்பது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் சிறப்பு பயிற்சியாளர் பெலிக்ஸ் ஜெயக்குமார் பேசுகையில், பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் குழந்தை திருமணம் அதிகம் நடப்பதில் திண்டுக்கல் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.

    பாலியல் துன்புறுத்தல் தடை நிவர்த்தி சட்டம் 2013ன்படி அமைக்கப்பட வேண்டிய குழு குறித்து கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்பினர் கலந்து கொண்டனர்.

    அனைத்து ஒன்றியங்க ளிலும் 10 பேருக்கு அதிகமாக பணி செய்யும் இடங்களில் குழுக்களை அமைக்கவும், 10 பேருக்கு குறைவாக பணி செய்யும் இடங்களில் குழு பற்றிய விழிப்புணர்வு அளிக்கவும் பாலியல் ரீதியான புகார்களை பெற்று அதிகாரிகள் மூலம் மாவட்ட உள் குழுவுக்கு அனுப்புவது எனவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டது.

    மேலும் ஊராட்சி ஒன்றியங்களில் இந்த விழிப்புணர்வை தீவிர படுத்தி பெண்களுக்கு எதி ரான பாலியல் தொந்தரவு களை தடுப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    ×